"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, June 28, 2024

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய மருதமலை வாக்கு!

                                                                இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது.  பயன்கருதாது செய்யும் போது மட்டுமே தான, தர்மத்தின் பலன் கிடைக்கும். தான தர்மம் செய்துவிட்டு நாம் மறந்து விட வேண்டும். ஆனால் நாம் அப்படி இருப்பதில்லை. ஒரு மின்விளக்கு வாங்கி கொடுத்துவிட்டு, உபயம் என்று எழுதிவிடுகின்றோம் அல்லவா? இப்படி இருந்தால் எப்படி தான தர்மத்தின் பலன் நமக்கு கிடைக்கும். தர்மம் செய்வதன் மூலம் கர்மத்தை அல்லவா சேர்த்து வருகின்றோம். இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வாருங்கள்.  இன்றைய பதிவில் குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய மருதமலை வாக்கு! பற்றி காண உள்ளோம்.

இந்த பதிவு நமக்கு மிக மிக நெருக்கமான ஒன்று. ஏனெனில் குருநாதர் வாக்கு உரைத்த இடத்தில் இருந்து , இன்றைய பதிவு பகிரப்படுகின்றது. நம் ஏற்கனவே கூறியபடி, ஒவ்வொரு பதிவும் குருவருளால் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதனை தான் , இப்படித் தான் என்று நாம் எதுவும் தீர்மானம் செய்வதும் இல்லை. இனி குருநாதரின் அருள் வாக்கு தொடர உள்ளது.





நம் குருநாதர் அகத்தியர் பெருமான் கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்தில் முல்லை நகரில் அமைந்துள்ள ஸ்ரீலோப முத்ரா தேவி தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயிலில் உரைத்த பொது வாக்கு!!!!!

13/4/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு

 வாக்குரைத்த ஸ்தலம் : அகத்தியர் திருக்கோயில் மருதமலை அடிவாரம். 

அனைத்தும் அணுவே!!!! 

ஆனைமுகன் அறுமுகன் போற்றியே பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே மாய உலகம் என்பேன் அப்பனே!!! உண்மை நிலை அப்பனே ஒன்றும் தெரியாமல் மனிதன் அங்கும் இங்கும் அலைவான் என்பேன் வரும் காலங்களில் அப்பனே!!!

ஏன் எதனால் என்பதையும் கூட யான் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!!!

இறைவனிடத்தில் இவ் ஆன்மா சரணடைய காரணம் கூட பல காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

அதனை தெளிவுபடுத்த அப்பனே ஆனாலும் மானிடர்கள் அப்பனே எதை எதையோ என்று கூட நம்பி நம்பி!!!!

ஆனாலும் அப்பனே ஆன்மா என்பது ஒன்றுமில்லையப்பா!!!!

அப்பனே அவ் அணுவானது எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு கூட பின் உடம்பிலிருந்து பிரிந்து விட்டால் அப்பனே நிச்சயம் இறைவன் காந்தகம்( காந்தம் MAGNET) என்று வைத்துக் கொள்ளுங்கள்!!!!அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே!!!!

இதனால் அவ் அணுவானது அப்பனே அதாவது பல  புண்ணியங்கள் செய்திருந்தாலும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே இங்கு ஆன்மா அணு என்பவை எல்லாம் அப்பனே ஒன்றே!!!!! 




இதனை சமநிலைப்படுத்த பின் எதை எதை என்று அறிய அறிய இறைவன் காந்தகம் அப்பனே இவை ஒன்று புரிந்து ( செயல் பட்டு) அப்பனே அவ்அணுவானது வெளிவரும் என்பேன்
உடம்பிலிருந்து !!!!அப்பனே!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும்  அவ் அணு எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு பல புண்ணியங்கள் செய்திருந்தால் மட்டுமே அவ் காந்தகத்தை அடைய முடியும் !!!! காந்தகமும் ஈர்க்கும்!!!

ஆனால் அப்பனே எதை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே அவ் அணுவானது நிச்சயம் அப்பனே...அவ் காந்தகத்தின் அருகிலேயே செல்ல முடியாது அப்பனே!!! புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்று புரியாத அளவிற்கும் கூட மனிதர்களை இவ்வாறு சொல்லிச் சொல்லி ஏமாற்றி விட்டார்கள் என்பேன் அப்பனே!!!!

அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய பல அறிவியல் வழிகளை கூட யான் கண்டு அப்பனே எதை என்று எவை என்று தீர்க்கமாக முடிவெடுத்து பல உண்மைகளை சொல்லி வைத்து விட்டேன் அப்பனே!!!

ஆனாலும் அதையும் கூட மாற்றி அமைத்து விட்டார்கள் அப்பனே யான் (அகத்தியர்) தான் அனைத்தும் கற்று உணர்ந்து இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தது என்பதை எல்லாம் மனிதன் பொய்யாக்கி விட்டான் அப்பனே!!!!

ஏனென்றால் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே தெரியாமலே எவை எவை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்பனே மனிதனை பின் நாங்கள் பித்தலாட்டக்காரர்கள் பொய்யானவர்கள் என்பதை எல்லாம் திட்டி தீர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!! 

யாரோ எதை என்று அறிய அறிய அசைக்க முடியாத நம்பிக்கை அப்பனே யாரோ ஒருவன்  செயல்படுத்துகின்றான் இங்கு பின் ஆட்டங்கள் ஆடுகின்றனர் அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே காந்தகம் எதை என்று அறிய அறிய எவை என்று உணர்ந்து உணர்ந்து அங்கே!!!!! (மேலே) அப்பனே!!

அவ்வாறு அவ் காந்தகம் அப்பனே நிச்சயம் மேலிருந்து புவி தன்னை அப்பனே வந்தடையும் பொழுது நிச்சயம் நீங்கள் புண்ணியம் செய்திருந்தீர்களானால் அப்பனே அவ் காந்தகம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் தகுந்தாற்போல் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் ஆடி அசையும் என்பேன் அப்பனே!!!!!

பின் புண்ணியங்கள் இல்லையென்றால் அப்பனே அப்பனே அப்படியே நிற்கும் என்பேன் அப்பனே இதனால் இதனையும் கூட சமநிலை ப்படுத்தி அப்பனே அணுவானது நிச்சயமாய் அப்பனே காந்தகம் எதை என்று அறிய அறிய பின் புவிக்கு வருகின்ற பொழுது அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே தானாகவே ஈர்த்துக் கொள்ளும் என்பேன் அவ் அணுவை எதையென்று உணர்ந்து உணர்ந்து!!!

இதுதானப்பா அணுவானது இங்கே ஆன்மாவாகவும் வைத்துக் கொள்ளலாம் அப்பனே காந்தகத்தை கூட இறைவனாக வைத்துக் கொள்ளலாம்!!!!! இறைவனாகவே.......




அப்பனே இவையெல்லாம் யான் நிச்சயம் விளக்கப் போகின்றேன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று உரைத்து உரைத்து அப்பனே இதன் தன்மையையும் இப்பொழுது உரைக்கின்றேன் அப்பனே!!!

கிரகங்கள் மாறுகின்றதாம்!!!!!! அப்பனே.....ஏன் எதை என்று கூட மாதமும் பிறக்கின்றது அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!!




"""""சனி!!!!!! எவை எவை என்று அறிய அறிய!!!!

அவ் கிரகமானது அப்பனே எவை என்று அறியும் பொழுது கூட அப்பனே புவி தன்னில் அதாவது அப்பனே புவியை இடிக்கின்றது என்பேன் அப்பனே......

ஏன் எதனால் என்பதையும் கூட இதனையும் கூட வலுவாகவே யான் தெரிவிப்பேன் அப்பனே என் பக்தர்களுக்கு!!!!!
இவ்வாறு இடிக்கும் பொழுது அப்பனே ஏன் எதை என்று அறிய அறிய உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!!! சனியவன் நீதிமான்!!!!! தர்மவான்!!!!!! அதாவது புண்ணியங்கள் மிகுந்த மிகுந்த சிலருக்கே கொடுப்பது என்பதை கூட

அதனால் அப்பனே அவ் கிரகம்அப்பனே இப்பொழுது புவி தன்னிற்கு அருகிலே தான் இருக்கின்றது!!!அப்பனே அவ்வாறு இருக்கும் பொழுது எப்படியப்பா!!!!! நல்லது நடக்கும்??????????????????

ஏனென்றால் மனிதன் பொய் பித்தலாட்டம் ஏமாற்றுவது இதில் இறங்கி விட்டான் எதை என்று அறிய அறிய!!!!!!

ஏற்கனவே மூன்று ஆண்டுகள் முதல் அப்பனே அவன் எதை என்று அறிய அறிய தன் சொந்த இல்லத்திலே இருப்பான் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

இவை கூட்ட அப்பனே பின் இரண்டரை + இரண்டரை (2.1/2+2.1/2=5) ஐந்து ஆனால் அப்பனே பின் அவன் வீட்டில் அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து தங்கும்பொழுது மட்டும் அப்பனே 6 ஆண்டுகள்!!!!!

அப்பனே இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே நிச்சயம் உலகத்திற்கே கேடு!!!!அப்பா!!!

ஆனால் அப்பனே அவ் நிலைமையை அறியாமல் பின் இங்கு செல்கின்றது கிரகம் அங்கு செல்கின்றது இவை நடக்கும் அவை நடக்கும் அனைத்தும் நடக்கும் என்பதை எல்லாம் அப்பனே வீணான பேச்சுக்கள்!!!!!

எல்லாவற்றிற்கும் கூட மேலாக அப்பனே புகழ் சேர்க்க வேண்டும் பணத்தை ஈட்ட வேண்டும் அப்பனே இவ்வாறு தான் மனிதன் குறிக்கோளாக உள்ளது அப்பனே

அவ்வாறு குறிக்கோள் உள்ளவனை நிச்சயமாய் இச்சனிக்கிரகம் நிச்சயமாய் தாக்கும் என்பேன் அப்பனே

ஏன் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அணுக்கள் பல எதை என்று உணர்ந்து உணர்ந்து உடம்பிலே உள்ளதப்பா!!!!

ஆனாலும் பின் எதை என்று அறிய அறிய ஏன் எதற்கு என்றால் அப்பனே பின் சனியவன் எவை என்று கூட அப்பனே கிரகங்களில் மிகப் பெரியவன் என்பேன் அப்பனே!!!!

எதனால் என்பதை கூட அப்பனே ஒவ்வொருவருக்கும் எதை எதை என்று அறிய அறிய சனியின் ஆதிக்கம் எவை என்று அறிய அறிய!!!!.......

ஏன் ஈசனையும் கூட மிஞ்சி எவை என்று அறிய அறிய ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதை கூட அனைவரும் உணர்ந்ததே அப்பனே

ஆனால் சனி கிரகத்தின் அப்பனே எவை என்று கூட ஒரு துகள் (மூலக்கூறு) அப்பனே நம் உடம்பில் உள்ளதப்பா!!!!!

இதுதானப்பா எவையென்று அறிய அறிய அதனால் சனி ஆட்டுவித்தால் ஆடாதவர் எவர்???????

அப்பனே ஏனென்றால் எவரும் தப்பிக்க முடியாது என்பேன் அப்பனே.....

அத் துகள் எதை என்று அறிய அறிய அப்பனே சனி கிரகத்திற்கும் அப்பனே உன் உடம்பில் எவை என்று கூட ஒரு துகள் தங்கி உள்ளதப்பா அதனால் எவரும் தப்பிக்க இயலாது சொல்லிவிட்டேன் அப்பனே!!! சனியில் இருந்து அப்பனே!!!

அதனால் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது!!! இன்னும் மூன்று வருடங்கள் தன் சொந்த வீட்டில் மன்னனாக இருந்து கொண்டு யார் யார் எதை என்று கூட பக்தியின் மூலம் பின் எவை என்று அறிய அறிய பொய் பேசுபவர்களையும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது சரியாக அத் சிறிய துகள் உடம்பில் இருந்து அப்பனே எவை என்று எதிரொலிக்கும் பொழுது அது சனி கிரகத்தை போய் வந்தடையும் பொழுது அப்பனே நிச்சயமாய் கஷ்டம் தான் அப்பா!!!

இதுதான் அறிவியல் ரீதியான உண்மை!!!!!

ஆனால் அப்பனே இன்றைய காலம் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் மக்களுக்கு எதை என்று அறிய அறிய பின் எதை என்று புரியாமலே அப்பனே சொல்லிக் கொண்டு இருந்தாலும் அப்பனே விளக்கங்கள் இன்னும்!!! இதை செய் அதை செய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே பின் இவ்வளவு தான் வாழ்க்கையா இப்படித்தான் சித்தர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பதை எல்லாம் அப்பனே ஆனால் யான் விடப்போவதில்லை அப்பனே!!!!

நிச்சயம் பின் அறிவியலும் இறைவனும் பின் சமமாகவே யான் எடுத்துரைப்பேன் அப்பனே என் மக்களுக்கு அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

என் மக்களை யான் காப்பாற்ற வேண்டும்..... அகத்தியன் அகத்தியன் என்று உயிரைக் கூட எதை என்று அறியாமலே பின் விடுபவர்களும் உண்டு இவ்வுலகத்தில் அப்பனே

அதனால் நிச்சயம் அப்பனே யான் திருத்துவேன் அப்பனே கவலைகள் இல்லை!!!!

என் மக்களுக்கு அப்பனே அறிவியல் வழியாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

பல பல கண்டுபிடிப்புகளும் அப்பனே ஏற்கனவே யான் நூல்களில் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே!!!!! அதை புதிதாக படித்துக் கொண்டு திரும்பவும் எவை என்று கூட அனைத்தையும் கண்டுபிடித்து விட்டனர் அப்பனே!!!!!

ஆனால் அகத்தியன் இங்கு பொய்யாகி விட்டான் அப்பனே ஆனால் கலியுகம் அப்பனே நிச்சயம் என் மக்களை விட மாட்டேன்!!!! அப்பனே!!!!

எனக்கு மிஞ்சிய எவை என்று அறிய அறிய விஞ்ஞானம் இல்லையப்பா!!!

அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து கிரகங்கள் அப்பனே இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே மின்சாரம் பாய்கின்றது அப்பனே!!!!

ஆனாலும் பாய்கின்ற பொழுது அப்பனே எங்கே ஒரு எதை என்று அறிய அறிய எரிகின்றது (மின் விளக்கு  BULB) அப்பனே!!!
எரிகின்றது என்பதை கூட நீங்கள் சுலபமாகவே தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!

ஏன் எரிகின்றது????????

யாராவது யோசித்தீர்களா??? அப்பனே!!எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று ஒரு அப்பனே பின் (பொத்தான்  SWITCH BOARD) அழுத்தினால் எரியும் என்பது தான் உங்களுக்கு தெரியும்....... ஆனால் அப்பனே அதில் அலை அலைகளாக (NUTRITION PORTION RAYS) எதை என்று கூட யாருக்காவது தெரிகின்றதா என்பதை கூட அப்பனே யாரும் உணர்வதில்லை என்பேன் அப்பனே!!!!!

இப்பொழுது எதை என்று கூட மனிதனும் கூட அப்படித்தான் அப்பனே...எரி ( மனிதனும் மின் விளக்கு போல எரிந்து கொண்டு). 

எவை எவை என்று அறிய அறிய அப்பனே அதனால் தாக்குகின்ற கிரகங்கள் அப்பனே அப்படியே தன் உடம்பில் படுகின்றபொழுது அப்பனே மனிதன் பின் எவ்வாறெல்லாம் எதை என்று அறிய அறிய பின் செயல்படுகின்றான் அப்பனே!!!! இதுதான் உண்மை!!!!

அதனால் யான் ஒரு வார்த்தை சொல்லிவிடுவேன் அப்பனே இப்பொழுது கூட மனிதனின் வாழ்க்கை கிரகங்களின் கைகளிலும் என்பதை கூட தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிந்து புரிந்து அப்பனே பின் எரிவதற்கும் அப்பனே எவை என்று கூட அழுத்தினால் மட்டுமே இங்கு எரியும்!!!

இது போலத்தான் அப்பனே எவை எவை என்று அறிய அறிய பின் எரிகின்ற பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய தானாகவே பின் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே அணைத்து விட்டால் அப்பனே அமைதியாகி போய்விடும் ஆனால் இது போலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய எங்களுக்கு மட்டுமே தெரியும் கிரகங்களை எப்படி அணைப்பது?? என்பதை கூட!!!! அப்பனே!!!

ஆனால் மனிதனுக்கு தெரியாதப்பா!!!!அதனால்தான் கிரகங்கள் மனிதர்களுக்கு எவை என்று படுகின்ற பொழுது அப்பனே எரிந்து கொண்டு அவந்தனுக்கு என்ன செய்வது என்று கூட தெரியாமலே வாழ்ந்து வருகின்றான் அப்பனே

ஆனால் அணைப்பதற்கு எங்களுக்கு மட்டுமே தெரியும் என்பேன் அப்பனே!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய அப்பனே ஒன்றை எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை எவை என்று அறிய அறிய கழற்றி வைத்து விட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய தானாக அனைத்தும் அப்பனே அப்படியே அமிழ்ந்து விடும் அணைந்தும் விடும்!!!!

அப்பனே இது போலத்தான் அப்பனே ஒன்றை எவை என்று கூட இப்பொழுது அப்பனே எரியூட்டப்பட்டதை நிறுத்த வேண்டும்!!!!

அதற்கு முதல் வகையானது புண்ணியங்கள்!!!! தான் அப்பனே!!!!

அப்பனே எவை என்று அறிய அறிய ஏன்? புண்ணியங்கள் எதனால் செய்ய வேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதன் தன்மையையும் கூட இங்கு அதாவது உலகத்தில் உள்ளோர் அப்பனே பின் ஒவ்வொரு கஷ்டத்திலும் கூட அப்பனே தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே

இயலாதவர் இருக்கின்றவர் அப்பனே அனைவரும் கஷ்டம் தான் படுகின்றனர் என்பேன் அப்பனே!!!

இதனால் எதை என்று அறிகின்ற பொழுதும் கூட அறியாத அளவிற்கும் கூட அதுவும் கூட இயலாதவர்கள் இடத்தில் தான் அணுக்கள் அதிக அளவு படிந்துள்ளது பதிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!

இருக்கும்( இருப்பவர்) இடத்தில் அப்பனே பதிவதில்லை என்பேன் அப்பனே!!!!

ஏற்கனவே எதை எதை என்று அறிய அறிய சூடேறிக் கொண்டிருக்கும் பொழுது அப்பனே எப்படி அப்பா எதை எதை என்று அறிய அறிய அதனால் இயலாதவர்கள் இடத்தில்தான் அவ் அணுக்கள் பதிந்துள்ளது என்பேன்!!!!

அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதை என்றும் நினைக்காத அளவிற்கும் கூட அப்பனே பின் ஒவ்வொன்றாக நிச்சயம் அப்பனே இவ்வாறு புண்ணியங்கள் அதாவது!!!!

அப்பனே யான் சொன்னேன் அப்பனே பின் நீரை இடுங்கள்!!!! (வழங்குங்கள்)

(இயலாதவர்களுக்கு அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் மோர் மூலிகை குடிநீர் அன்னதானம்)

அப்பனே பின் குளிர்ந்த எவை என்று அறிய அறிய அனைத்தும் இடுங்கள் என்று கூட... இவ்வாறு எதை என்று இடும் பொழுது( வழங்கும் பொழுது) பின் இயலாதவர் அதை உட் கொண்டால் அப்பனே அவ் அணு அப்பனே எதை என்று அறிய அறிய மாற்றும் என்பேன் அப்பனே!!!!

இவ்வாறு பின் அவந்தன் உடம்பில் உள்ள எதை என்று அறிய அறிய அவந்தன் சந்தோசங்கள் படும் பொழுது ஒவ்வொரு அணுவாக அப்பனே பின் எதை என்று அறிய அறிய இறைவனை நோக்கிச் செல்லும் என்பேன் மேலே எதை என்று அறிய அறிய

அப்பொழுது அவ் காந்தகமானதும் கூட அப்பனே மேலே சிறிது சிறிதாக மேலே சென்று விடும் என்பேன் அப்பனே இதனால் எதை என்று கூட அணுவும் அதை பிடிக்க முயற்சி செய்யும் என்பேன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து

இதனால் அப்பனே அவ் காந்தகமானது அதாவது இறைவனானது பின் மேலே செல்ல செல்ல அப்பனே இங்கு வருத்தங்கள் குறையும் அப்பா!!!!!

முட்டாள் மனிதர்களே தெளிவுகள் பெறுங்கள்!!!!

அப்பனே இவை என்று அறிய அறிய இப்படி தெரியாத மனிதனுக்கு கஷ்டம் கஷ்டம் என்பதெல்லாம் அப்பனே பின் எவை என்று கூட இதுவே பழகிப் போய்விட்டது என்பேன் அப்பனே!!!

ஆனால் அவ் கஷ்டத்திற்கு என்ன வழி என்று கூட அப்பனே மக்களிடத்தில் செல்லும் பொழுது அப்பனே அவந்தன்( போலி சாமியார் போலி சோதிடர்) ருத்ராட்சம் இன்னும் பட்டைகள்(திருநீறு) எவை என்று எதை எதையோ தீர்த்துக் கொண்டு யான் செய்கின்றேன் நலமாக உந்தனுக்கு!!!!

பணத்தை தா!!!!!!! என்று பிடுங்கிக் கொண்டு அப்பனே ஏமாற்றி விடுகின்றான் அப்பனே

அதனால் ஒன்றும் லாபம் இல்லை !!!!

பின்பு இறைவனை குறை கூறுவதாம்!!!!!!!!!!! 

அப்பனே இதில் எதை என்று கூட யான்  மனிதனை தான் குறை கூறுவேன்!!!!! மனிதனுக்குத்தான் வாழத் தெரியவில்லை என்பேன். அப்பனே

வாழத் தெரியாதவனுக்கு எவ்வளவு உண்மைகளை சொன்னாலும் புரியாதப்பா!!!

ஏனோதானோ என்று சொல்லிவிடுவான்!!!! சென்று விடுவான் அப்பனே
அகத்தியன் இவ்வளவுதான் என்று கூட!!!!!

அப்பனே அகத்தியனை பற்றி அதாவது எதை என்று அறிய அறிய என்னைப் பற்றி யாருக்கப்பா!!!! தெரியும்???????????????

அப்பனே தெரிந்து கொள்!!!!!

 ஏதோ? அகத்தியனை வணங்கினால்!!!!!!! அனைத்தும் கொடுப்பானாம்!!!!!!!!!!!!! என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!!! எதை என்று அறிய அறிய!!!

கொடுப்பதற்கு அப்பனே நீங்களும் கூட சிறிது கொடுத்திருந்தால் தான் அப்பனே யானும் கொடுக்க முடியும்!!!!!!

எதை என்று அறிய அறிய பின் கொடுக்க வேண்டும் என்று எதை என்று அறிய எந்தனக்கு கொடுக்கத் தேவையில்லையப்பா!!!!!!!

நீ மனிதர்களுக்கு ஈய்!!!! அப்பா!!!!  இயலாதவர்களுக்கு ஈய் !!!அப்பா!!! (கொடு) 

எதை என்று அறிய அறிய அது உந்தனுக்கே நீ செய்யும் பாக்கியமப்பா!!!!! என்றுதான் யான் கேட்கின்றேனே தவிர அதுவும் உன்னை வாழ வைக்கத்தான் நீயே எதை என்று கூட அப்பனே பின் கொடுக்கின்றாயே தவிர மற்றவரை வாழ வைக்க அல்ல!!!!!!!!அப்பனே இவ்வாறு எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து செய்!!!

பின் தெரியாவிடில் அமைதியாக இரு!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய இறைவனை மட்டும் பின் எவை என்று அறிந்து அறிந்து அப்பனே பொய் சொல்லி அப்பனே ஏமாற்றி பின் பக்தி என்பதை பொய்யாக்கி விடாதே அப்பனே!!!!!

இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!!! ஏற்கனவே!!

இதனால்தான் அப்பனே பல அவதாரங்கள் எடுத்து விட்டனர் அப்பனே( கடவுள்/ மகான்கள்) ஒவ்வொன்றாக உரைத்தும் விட்டனர் அப்பனே...... அப்பொழுதும் கூட மனிதன் திருந்தவில்லை அப்பனே!!!!!

அப்பனே இறைவனே வந்து அவதாரம் எடுத்தான் அப்பொழுது திருந்தாத ஜென்மங்கள் இக்கலியுகத்தில் திருந்தவா போகின்றது???????????

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இறைவன் ஆட்சி வேறு!!!!! மனிதன் ஆட்சி வேறு!!!!!

இறைவன் ஆட்சி செய்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் ஆட்சி செய்யும் பொழுது இவ்வாறு தான் நடக்கும் என்பது விதியப்பா!!!!

இதை யாராலும் தடுக்க முடியாது என்பேன். அப்பனே!!!!

ஆனால் எங்களால் தடுக்க முடியும் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய பின் யார் யார் மூலம் எதை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே யாங்கள் தேடிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே நல்லோர்களை!!!!

ஆனால் இல்லையப்பா!!!!!

அனைவரும் ஆசை தான் படுகின்றனர் அப்பனே!!!!

ஏதாவது அகத்தியனுக்கு திருத்தலம் அமைத்து காசுகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதைக் கூட!!!!!

அன்பாக வடிவமைப்பது வேறப்பா!!!!! அப்பனே நீ அன்பாக வடிவமைப்பது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் இப்பொழுதும் கூட உன்னிடத்தில் வந்து யான் உரைத்துக் கொண்டிருக்கின்றேன். அப்பனே கவலையை விடு!! உன் இஷ்டத்திற்கு நட யான் பார்த்துக் கொள்கின்றேன்!!!

(மருதமலை அடிவாரத்தில் முல்லை நகர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீலோப முத்ரா தேவி சமேத அகத்தியர் திருக்கோயில் அமைத்து சேவை செய்து வரும் அகத்திய  பக்தருக்கு)

அப்பனே நலமாகவே நலமாகவே அப்பனே பின் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்துகின்றேன் அப்பனே!!!!!!( போலிகளை)

ஒருவன் சொல்கின்றான் அகத்தியனே உந்தனுக்கு அனைத்தும் செய்தேனே என்ன பிரயோஜனம் ??என்று !!!!

எதை எதை என்று அறிய அறிய யான்(அகத்தியர்) என்ன கேட்டேனா ?????முட்டாளே!!!!!!

இன்னொருவள் சொல்கின்றாள்!!!!! உந்தனை வணங்குகின்றேனே எந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என்று!!!!!!

எதை என்று நீ யோசித்துப் பார்!!! நீ என்னென்ன? செய்தாய்!!! என்று கூட!!!

எவை என்று கூட பின் தீங்குகள் விளைவிப்பது எதை என்று அறிய அறிய மற்றவர்களை!!!!!....................

ஒன்றைச் சொல்கின்றேன் இதை செவி சாய்த்து கேட்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எப்பொழுது ?? மற்றவரை குறை கூறுகின்றாயோ அப்பொழுது அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

எப்பொழுது பொறாமைகள் படுகின்றாயோ அப்பொழுது அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

எதை என்று அறிய அறிய எப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு தீயவை நினைக்கின்றாயோ அப்பொழுதெல்லாம் அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

இவ்வாறு அதிகரித்து அதிகரித்து செல்லுமானால் நிச்சயம் உன் உடம்பே பாழாகிவிடும்!!!!! 

நோய்கள் வந்துவிடுமடா!!!!

அணுக்கள் அதிகரிக்க அதிகரிக்க தெரிந்து கொள்ளுங்களடா!!!!!!

முட்டாள்களே பைத்தியக்காரனே எதை என்று அறிய அறிய யான் பாசத்தோடு தான் பேசுகின்றேன் எதை என்று கூட திருந்தாத ஜென்மங்களே.... எதை என்று அறிய அறிய பின் என்னால் முடியாது என்பதை கூட நீங்கள் பார்த்துக் கொண்டு எவை என்று அறிய அறிய!!!!

ஒருவன் சொல்கின்றான் நிச்சயமாய்( பரிகாரமாய் மற்றவருக்கு) திருத்தலத்திற்கு சென்று அங்கு தீபம் ஏற்றுங்கள் என்று!!!!

ஆனால் ஏற்றி விட்டான் ஏற்றிவிட்டு வந்தும் விட்டான் ஒன்றும் நடக்கவில்லை!!!!!

அகத்தியன் பொய் என்று சொல்லிவிட்டான்!!!!!

எதை என்று அறிய அறிய அப்பொழுது யார்??? அகத்தியனை பொய் ஆக்குவது??? என்பது மனித முட்டாளே பைத்தியக்காரனே நீதானடா!!!!!!!

எவை என்று அறிய அறிய அப்பனே அன்பால் என்னை நாடுங்கள் அப்பனே யானே அங்கு வருவேன் அப்பனே!!!!

அன்பால்தான் வந்திருக்கின்றேன் அப்பனே இங்கு எதை என்று அறிய அறிய!!!

எவை எவை என்று அறிந்து அறிந்து அதனால் அப்பனே யார் யாருக்கு வாக்குகளை செப்ப வேண்டுமோ!!!!! அவந்தன் எதை எதை என்று அறிய அறிய உண்மை நிலைகளை பின்பற்ற வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் உண்மையானவை எடுத்துரைத்து நிச்சயம் விதியைக் கூட எங்களால் மாற்ற முடியும் அப்பனே!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் கர்மா விட்டுவிடுமா??? என்ன அப்பனே

எதை எதை என்று அறிய அறிய!!!!

அப்பனே இவை என்று அறியும் பொழுது யான் சொன்னேன் அப்பனே ஒருவன் இறக்கும் பொழுது அப்பனே ஒரு அணுவானது அப்பனே பின் அவ் காந்தகத்தைச் சென்று பின் அடைய வேண்டும்!!!!

ஆனால் அடைவதில்லை என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்ய செய்ய அப்பனே எவை என்று அறிந்து அறிந்து அப்பனே  அவ் அணுவானது  அவ் காந்தகத்தை( இறைவனை) அடைந்து விடும் அவ்வளவுதான்!!!எவை என்று கூட மறுபிறவி கிடையாது அப்பா!!!!!

ஆனால் இவ்வாறு அடைவதே இல்லை என்பேன் அப்பனே!!!!

அவ் அணுவானது சுற்றி திரிந்து அப்பனே திரும்பவும் எவை என்று கூட பின் எவை என்று அறிய குழந்தை ரூபத்தில் எவை என்று உருவாக்கி அதில் நுழைந்து விடுகின்றது என்பேன் அப்பனே.......... மறுபிறப்பாம்!!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! தெரியாது எவை என்று அறிய அறிய தெரியாது எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே தெரியாது என்றாலும் கூட அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

நிச்சயமாய் சொல்கின்றேன் அப்பனே!!!! எதை என்று அறிய அறிய பின் அனைவருமே தெரிந்து கொள்வதில்லை  அப்பனே!!!

பின் சொன்னால்தான் புரியும் என்பேன் அப்பனே ஆனாலும் கலியுகத்தில் உண்மை நிலைகளை சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அப்பனே!!!!

பொய் என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே!!! சுலபமாக ஏனென்றால் அப்பனே காசுகள் முக்கியமப்பா!!!!!

அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து காசுகளுக்காக எதை என்று அறிந்து அறிந்து யாங்கள் வந்ததில்லை அப்பனே!!!!!

ஏனென்றால் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே யாங்கள் வாக்குகள் செப்புகின்றோம்!!!!

எங்களுக்கு என்ன வேலையா???? எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒருவன் சொல்கின்றான் அப்பனே.... அவை நடக்கும் இவை நடக்கும் என்பதைக் கூட!!!!

என்னதான் நடக்கும் என்பதை யான் சொல்லிவிடுவேன்!!!!!! அப்பனே!!!!

அடுத்த மூன்று மாதங்களுக்கு என்ன நடக்கும் என்பதை கூட யான்  தெளிவாக சொல்லி விடுவேன்!!!!

ஆனால் சொல்லிவிட்டாலும் அப்பனே பின் அகத்தியன் வாயால் அது வரக்கூடாது என்பேன் அப்பனே!!!!!

யான் காக்க வேண்டும் மனிதர்களை!!!!!

ஆனால் மனிதன் சொல்கின்றான் அப்பனே எவை என்று கூட அதாவது துர்நாற்றம் பிடித்த வாயால்!!!!!!!!

நடக்குமா? என்ன????????

நிச்சயம் நடக்காது!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய !!!!

அப்பனே மனிதனுக்கு அறிவுகள் அதிகம் என்பேன்!!!

அதைவிட வாய் அதிகம் என்பேன் அப்பனே!!!!

ஆனால் அப்பனே இவையெல்லாம் சிறுதளவிற்கே அப்பனே!!! ஆனால் பின் அணுவானது அழிந்து கொண்டே வந்தால் அறிவும் இல்லை!!!! பின் வாயும் இல்லை!!!!!அமைதியாக இருப்பான் அப்பனே!!!!!  அவ் அறிவு வாய் இருக்கும் பொழுதே உண்மையை பேசுங்கள் அப்பனே!!!! உண்மை நிலைகளை எடுத்துரையுங்கள் அப்பனே அவ்வளவுதான் யாங்கள் கேட்கின்றோம் அப்பனே!!!!

உங்களுக்காகத்தான் வந்து இங்கு எதை என்று கூட இவ்வளவு நேரங்கள் எதை என்று அறிய அறிய பல மக்களுக்கும் தெளிவு படுத்துகின்றோம் அப்பனே!!! 

ஏனென்றால் நிச்சயம் அப்பனே ஒன்றைச் சொல்கின்றோம் எதை என்று அறிந்து அறிந்து இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல இப்படியே விட்டிருந்தால் அகத்தியனே இல்லை அகத்தியன் என்ன சொன்னாலும் பலிப்பதில்லை என்பதை சொல்லிவிடுவார்கள் அப்பனே!!!!!

அகத்தியன் ஒன்றை விட்டு விட்டால் அச் சொல்லிற்கு மதிப்பு நிச்சயம் பலிக்கும் என்பேன் அப்பனே!!!

அவ்வாறு பலிக்காவிடில் அவந்தன் பொய் பொய்யே!!!!!!!!! ( அகத்தியன் வந்து வாக்குரைக்கின்றார் என்று கூறுபவர்கள்)

எதை எதை என்று அறிய அறிய அகத்தியனை பற்றி என்ன தெரியும்??? எவை என்று கூட எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று!!!!

""""""" முருகனுக்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

"""""ஈசனுக்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

""""""" எதை என்று அறிந்து அறிந்து விஷ்ணுவிற்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

""""எதை என்று அறிந்து அறிந்து பிரம்மாவிற்கே!!! பாடம் கற்பித்தவன் யான்!!!!

மனிதர்கள் நீங்கள் எல்லாம் ஒரு சிறு தூசி என்பேன் அப்பனே!!!!!

அடித்தால் தாங்க மாட்டார்கள்!!!!

ஆனாலும் அப்பனே என்னை வைத்து பிழைப்பு நடத்துகின்றார்கள் அப்பனே நீங்கள் உண்மையில் புத்திசாலிகள் தான்!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புதிய இறைவனிடத்தில் விளையாட்டாம்!!!!!!!!!!!!!!!!

ஆனால் விளையாட்டு வினையாக போகும் என்பதை கூட அறிந்ததே நீங்கள்!!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உங்களிடத்திலே அனைத்தையும் சாதிக்கும் திறன் உள்ளதப்பா!!!! இதை யான் தெரிந்து தெரிந்து பல சித்தர்களும் கூட செப்பிக்கொண்டே  இருக்கின்றார்கள் அப்பனே!!!!! அதை வெளிக்கொண்டு வந்தால் அப்பனே நீ சாதித்து விடலாம் அப்பனே!!!!!!

"""""" என்னையும் பார்த்து விடலாம்!!!!! பல சித்தர்களையும் பார்த்துவிடலாம் அப்பனே!!!

அதுதான் மாயை எதை என்று அறிய அறிய உங்களை மறைத்துக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே எவை என்று கூட உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!!!!

பிறக்கும்போதும் இல்லையப்பா ஏதும்!!!! எதை எதை என்று அறிய அறிய

இறக்கும் போதும் இல்லையப்பா ஏதும்!!!!! இதை ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன்!!!!

நடுவில் தானப்பா வந்தது அனைத்தும் கூட அப்பனே!!!!!

எவை எவை என்று அறிய அறிய அப்பனே பிறக்கும் பொழுதும் நான்கு கால்கள் இறக்கும் போதும் நான்கு கால்கள் அப்பனே இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?? அப்பனே!!!

தெரிந்து கொண்டீர்களா?? அப்பனே!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே அணுவானதை கட்டுப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே எவை எவை என்று அறிய அறிய இன்னும் இன்னும் வாக்குகள் செப்ப !! தான் போகின்றேன் அப்பனே!!!!

அதனால்தான் எதை என்று உணர்ந்த உணர்ந்து அப்பனே வரும் எதை எதை என்று அறிய அறிய திங்களும்( சித்தர்களின் மாதமான சித்திரை திங்கள்) பிறக்கின்றது என்பேன் அப்பனே!!!!

இதனால் சனி எவை என்று கூட தன் ஆட்சி பலத்தில் அதாவது தன் சொந்த இல்லத்திலே. ....... எவை என்று இதுபோலத்தான் சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே!!!!! இருக்கின்ற பொழுது ஒன்றும் அதாவது பக்திமான்களுக்கு ஒன்றும் நடக்காதப்பா!!!!!

சொல்லிவிட்டேன் ஏன் நடக்காது ஏமாற்றுக்காரர்கள் அதனால் தான் சனி பகவான் விட்டு விடுவானா?????? என்ன!!?!!

அப்பனே நிச்சயம் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் அப்பனே நீங்கள் என்னென்ன தவறுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூட!!!

அதனால் பின் சனியவன் இங்கு வந்தால் நல்லதை செய்வான் அங்கு இருந்தால் நல்லதை செய்வான் என்றெல்லாம் அப்பனே!!!!

நீங்கள் என்ன????? நல்லதை செய்தீர்கள்?????????? அப்பனே!!!!!!!!

சிறிதளவாவது யோசித்தீர்களா?? அப்பனே!!!

நீங்கள் நல்லதை செய்திருந்தால் தான் அப்பனே சனியவனும் உங்களுக்கு கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!

அப்படி இல்லை என்றால் குரு பகவானும் அப்பனே வந்து விட்டு சென்று கொண்டே தான் இருப்பான் வந்து சென்று கொண்டே தான் இருப்பான் ராகு கேதுவும் வந்து சென்று கொண்டே தான் இருப்பார்கள் நீங்கள் தான் அப்பனே அப்படியே இருக்க வேண்டும்!!!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய கிரகங்கள் தன் கையில் கூட இருந்து விட்டால் அப்பனே அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்பேன். அப்பனே!!!!!!

தன் கையில் அப்பனே பல மனிதர்களை எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களும் ஒன்றும் செய்வதில்லையப்பா!!!!!

ஏனென்றால் அவர்கள் எதை என்று அறிய அறிய அதனைப் பற்றியும் விவரமாகவே குறிப்பிடுகின்றேன் அப்பனே என் வழிகளில் வந்தவர்களுக்கு அப்பனே!!!!!

முதலில் கிரகத்தை எதை என்று அறிய அறிய அப்பனே ஏற்கனவே சொல்லிட்டேன் அப்பனே நல் முறைகள் ஆகவே!!!!அதனால் அப்பனே எவை என்று உணர்ந்த( சித்திரை) திங்களும் பிறக்கின்றது அப்பனே நிச்சயம் புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய வறட்சியான காலங்கள் என்பேன் எதை என்று அறிந்து அறிந்து........

 ஆனாலும் அப்பனே யாங்கள் மாற்றி அமைப்போம் என்பேன் அப்பனே!!!!!

எவை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே இன்னும் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் சனியவன் எவ்வாறு என்பதையும் கூட அதனால் தான் புண்ணியம் செய்தால்  அப்பனே நிச்சயம் என்ன தேவையோ அதனை கொடுப்பான்!!!!!!

இல்லையென்றால் அழிவுகள் தான் மிஞ்சும் என்பதை கூட பின் கண்கூடான உண்மையப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் கொடுத்தாலும் அப்பனே கஷ்டங்கள் அப்பனே கொடுத்தாலும் எதை எதை என்று அறிய அறிய சந்தோசங்கள் அப்பனே!!!!

அதனால் """""மற்றவர்களை சந்தோஷப்படுத்தி!!!!!!!!! நீங்களும் சந்தோஷம் அடைந்தால்  மட்டுமே சனியவனுக்கு வேலை!!!!

இல்லையென்றால் அப்பனே தூக்கி வீசிவிட்டு சென்று கொண்டே இருப்பான்!!!!!!! சனியவன் அப்பனே!!!!!!

ஏனென்றால்  சனியவன் நியாயாதிபதி!!!!!!!!!

எதை எதை என்று அறிய அறிய ஆறு வருடங்கள் அப்பனே நியாயாதிபதியாகவே திகழ்கின்றான் அப்பனே!!!

(தற்போது)

மூன்று வருடங்கள் முடிவுற்றது !!!!இன்னும் மூன்று வருடங்கள் அப்பனே நியாயமாக செயல்பட்டுக் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது!!!!

இல்லையென்றால் அழிவுகள் தான்!!!!!

அப்பனே உண்மை நிலைகளை புரிந்து கொள்ளுங்கள் அப்பனே புரிந்து கொண்டே வாருங்கள்!!!

இன்னும் என்னென்ன விளக்கங்கள் தர வேண்டுமோ? அவையெல்லாம் தந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே !!!!

ஏற்கனவே எவை என்று அறிய அறிய மனிதரிடத்தில் போராடி போராடி ஜெயித்தது போதும் என்பது எவை என்று அறிய அறிய அப்பனே

இவ்வுலகம் எதை என்று கூட பாதி அழிந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!!!............

ஆனால் ஏதோ எதை என்று அறிய அறிய வாழட்டும் என்று மனிதனை கட்டுப்படுத்தி எவை எவை என்று அறிய அறிய அப்பனே மனதையும் மாற்றி விட்டோம் மனிதன் பாவம் என்பதை கூட அப்பனே!!!!!

அதனால் மனிதன் கண்டுபிடிப்புகள் எல்லாம் அப்பனே அழிப்பதற்கே தான் சமம் என்பேன் அப்பனே!!!!!

சொல்லிவிட்டேன்!!!!

அதனால் அப்பனே எவை எவை என்று கூட அறிய அறிய எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கிருந்தே அழிவுகள் ஆரம்பம் என்பேன் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பொழுது தெரிந்து கொள்ளாவிடிலும் கூட அப்பனே நிச்சயம்...யான் வாக்குகளில் எடுத்துரைத்துக் கொண்டே இருப்பேன் அப்பனே எவை என்று கூட!!!!!

இறைவன்!!!!

இறைவனை வணங்கினானாம் ஒருவன் இறைவனை எதை எதை என்று அறிய அறிய அனுதினமும் வணங்கினானாம் ஒருவன் தீபத்தை ஏற்றினானாம் ஒருவன்...... ஆனால் எதை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய புரியா து. மனதில் உண்மையான பக்தி இல்லாமல் ஏதோ பின் இவை நடந்து விட்டால் என்று கூட!!!!!!

அப்பனே ஆனாலும் பொய்களப்பா உண்மையான பக்திகள் அன்பு இருந்தால் அப்பனே அவ் அணுவானது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே சாதாரணமாக திருத்தலங்கள் யாங்கள் எவை என்று கூட உருவாக்கவில்லை அப்பா!!!

நிச்சயம் எவை என்று கூட ஒவ்வொரு திருத்தலங்களின் அடியிலும் கூட அப்பனே எவை என்று கூட காந்தகங்கள்!!! எவை என்று உணர உணர அப்பனே மக்களை ஈர்க்க வேண்டும் என்பதைக் கூட.........

அதனால் அப்பனே நிச்சயம் அவ் அணுவானது எதை என்று அறிய அறிய நெருங்கும் பொழுது அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து இறைவனிடத்தில் அதாவது காந்தகம் ஈர்க்கும் என்பேன் அப்பனே!!!!

அவ்வாறு ஈர்க்கும் பொழுது எதை என்று அறிய அறிய
தானாகவே கர்மங்கள் விலகி சென்றடையும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே எவை என்று கூட முன்பெல்லாம் கஷ்டங்கள் படும் பொழுது திருத்தலத்தில் அமர்ந்து எவை என்று அறியாமலே உறங்குவார்கள் அப்பனே!!!!

ஆனாலும் இன்றைய நிலை அப்படியில்லையப்பா!!!!! 

ஏனென்றால் திருத்தலத்திலே மனிதன் திருடுகின்றான் அப்பனே  எவை என்று அறிய அறிய அப்பனே!!!!! அப்பொழுது எதை என்று கூட அதுவும் பக்தர்களே!!! திருடுகின்றார்கள்!!! அப்பனே!!!!

இதுதான் தோஷமப்பா!!!!

அப்பனே இவ்வாறு இருக்க எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனுக்கு தெரியும்.... அனைத்தும் கூட எவை என்று அறிய இன்னும் அறிய சில கேள்விகள் மனிதர்களிடத்திலே தங்கியும் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

அவற்றுக்கெல்லாம் விடைகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

நீங்கள் எதை எதை என்று அறிய அறிய ஒரு சிறு துரும்பே!!!!!!!

நீங்கள் என்ன எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களோ அதை யான் அறிவேன் அப்பனே!!!

அதற்கு தகுந்தார் போல அனைவருக்கும் பதில் வரும் அப்பனே!!!!! நீங்கள் எவை எவை என்று அறிய அறிய தேடிச் செல்ல தேவையில்லை யானே உரைத்து விடுகின்றேன் அனைத்தும்!!!!!!அப்பனே திருந்துங்கள் எதை என்று அறிய அறிய சித்தர்கள் எவை என்று கூட மனித குலத்திற்காகவே பின் எவை எவை என்று அறிய அறிய வந்தோமப்பா!!! உதவிகள் செய்ய!!!!!

ஆனாலும் எங்களை எதை என்று கூட ஏற்றி (ஏய்த்து) அப்பனே பிழைத்துக் கொண்டு சித்தர்களை எவை என்று அறிய அறிய அப்பனே வேண்டாம் அப்பா!!!!!!

வீணானது!!! எதை என்று அறிய அறிய அப்பனே....ஏனப்பா?? எவை என்று அறிய அறிய அப்பனே பொய் சொல்லி பொய் சொல்லி அப்பனே ஏமாற்றியது போதும் அப்பனே எதை என்று கூட நீ ஏமாற்றினால் அப்பனே உன் பிள்ளைகளுக்கும் வந்து சேரும் உங்கள் மனைவிகளுக்கும் வந்து சேரும்!!!!! இப்பொழுது ஏமாற்றலாம் அப்பனே!!! சிறிது காலம் தான் அப்பனே!!!!!

ஆனால் அடி விழுந்தால் அப்பனே எவராலும் காப்பாற்ற முடியாதப்பா!!!!!

பல யுகங்களில் யான் பார்த்து விட்டேன் அப்பனே இனி மேலும் பார்க்கத் தேவையா????????? அப்பா!!!!!

வேண்டாம்!!!! எதை என்று அறிய அறிய வேண்டாம்!!! வேண்டாம் !!!!!அப்பனே!!!!

திருந்திக்கொள்ளுங்கள் உணர்ந்து உங்கள் மனசாட்சி படி நடந்து கொண்டாலே போதுமானது அப்பனே அனைத்தும் வருமப்பா!!!!

யானே!!!!! வருவேனப்பா!!!!

எதை என்று அறிய அறிய ஏன் அப்பனே உன்னிடத்தில் வரவேண்டும்??? இங்கு ஏன் யான் ஓத வேண்டும்?? அப்பனே!!!!!( மருதமலை அடிவாரம் அகத்தியர் கோயில்)

நீ செலுத்தும் அன்பு தானப்பா!!!!!!!!! (  திருக்கோயில் அகத்திய அடியவருக்கு)

அதுவே எந்தனுக்கு போதுமானதப்பா!!!!!!!! 

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அதனால் அன்பை செலுத்துங்கள் அப்பனே!!!


 யானே வருவேன்!!!!! உன்னிடத்தில் வந்து வாக்குகள் உந்தனுக்கு அருள்வேன் அப்பனே!!! 

என்னை தேடி வர தேவையே இல்லை அப்பனே!!!!

இறைவனை தேடி அலையாதீர்கள்!!!!

 இறைவன் தான் உங்களை தேடி அலைய வேண்டும்!!!!

அப்பொழுது எதை எதை என்று அறிய அறிய அவ்வளவு பின் உண்மையாக இருங்கள் புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் என்பேன் அப்பனே!!!

புண்ணியம் என்பது வேறு ஒன்றும் இல்லை அப்பா சக்தி தான் அப்பா!!!!

அவ் சக்தியை பற்றியும் கூட விவரமாக விளக்குகின்றேன் அப்பனே!!!!

நன்முறையாக ஆசிகள்!!! ஆசிகள்!!! லோபா முத்திரையோடு அப்பனே!!!!




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

Friday, June 21, 2024

திருப்புகழைக் கேளீர் தினம் - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 22.06.2024

                                                                இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள்,மகான்கள், அருளாளர்கள் குரு பூஜை கண்டு வருகின்றோம். அதில்  ஸ்ரீமத் அருணகிரிநாதர் குரு பூஜை நமக்கு மிக மிக நெருக்கமான ஒன்று. 

இந்த கலி காலத்தில் நாம் அனைவரும் போராடித்தான் ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றோம். இந்த சூழலில் நாம் ஒவ்வொருவரும் அறம் சார்ந்து இறை பக்தி கொண்டு வாழ வேண்டும். நமக்கு ஏன் இப்படி ஒரு கஷ்ட காலம் என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு வீட்டில் உள்ள பிரச்சினைக்கு வீட்டில் உள்ளவர்களின் எண்ணங்களே காரணம் ஆகும். உண்ணும் உணவு உடல் முழுதும் பாயும் என்றால் எண்ணும் எண்ணம் எங்கும் பாயும். எங்கும் பாய்கின்ற எண்ணங்களின் தொகுப்பு காலத்திற்கேற்ப விளைவிற்கு தற்போது வந்துள்ளது. எனவே எண்ணும் எண்ணத்தை இனியாவது சரி செய்து சீர் தூக்கி வாழ்வோம். நாம் மட்டுமா? பல அருளாளர்களும் இந்த நிலை தாண்டி வந்துள்ளாரகள். அப்படிப்பட்ட ஒரு அருளாளர் இறையுடன் கலந்த தினம்  இன்று. 

வேதம் வேண்டாம், சகல வித்தை வேண்டாம்,கீத 
நாதம் வேண்டாம், ஞான நூல் வேண்டாம் , ஆதி 
குரு புகழை மேவுகின்ற கொற்றவன்தாள் 
போற்றும் திருப்புகழைக் கேளீர் தினம் 

என்று சொன்னாலே நமக்கு புரிந்து விடும்.ஆம்.வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் நம் வாழ்க்கைக்கு திருப்புகழ் தந்த ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா நாளை  கொண்டாடப்பட 
உள்ளது .இன்றைய பதிவில் ஸ்ரீமத் அருணகிரிநாதர் சுவாமிகள் பற்றி கொஞ்சம் சிந்திக்க உள்ளோம்.

                                             



திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.

என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

 திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.




பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??





கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.

 அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய "சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.

அருணகிரிநாதர் சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு கீழே.

கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
கந்தரனுபூதி (52 பாடல்கள்)
திருப்புகழ் (1307 பாடல்கள்)
திருவகுப்பு (25 பாடல்கள்)
சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
மயில் விருத்தம் (11 பாடல்கள்)
வேல் விருத்தம் (11 பாடல்கள்)
திருவெழுகூற்றிருக்கை

திருப்புகழ் இன்றி பதிவை நிறைவு செய்ய மனம் மறுக்கின்றது, அனைவரும் கீழ்கண்ட திருப்புகழை ஓதுங்கள். திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும். இதோ..இந்த அற்புத திருநாளில் நம் வாழ்க்கை மணக்க அருளாளர் அருணகிரிநாதர் அருள் புரியட்டும்.


விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)

        தத்தன தனதன தத்தன தனதன
        தத்தன தனதன ...... தனதான

        கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
        கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

        கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
        கற்பகம் எனவினை ...... கடிதேகும்

        மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
        மற்பொரு திரள்புய ...... மதயானை

        மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
        மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

        முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
        முற்பட எழுதிய ...... முதல்வோனே

        முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
        அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

        அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
        அப்புன மதனிடை ...... இபமாகி

        அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
        அக்கண மணமருள் ...... பெருமாளே.


திருப்புகழ் 218 செகமாயை உற்று  (சுவாமிமலை)

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி ...... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி ...... தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க ...... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
     மொழியேயு ரைத்த ...... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் ...... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.

திருப்புகழ் 62 தண்டை அணி  (திருச்செந்தூர்)

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.


"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் "


        "முத்தைத்தரு"


        இராகம்: கௌளை
        தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன
        தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான


        முத்தைத்தரு பத்தித் திருநகை
        அத்திக்கிறை சத்திச் சரவண
        முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

        முக்கட்பர மற்குச் சுருதியின்
        முற்பட்டது கற்பித் திருவரும்
        முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

        பத்துத்தலை தத்தக் கணைதொடு
        ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
        பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

        பத்தற்கிர தத்தைக் கடவிய
        பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
        பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

        தித்தித்தெய ஒத்தப் பரிபுர
        நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
        திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

        திக்குப்பரி அட்டப் பயிரவர்
        தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
        சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

        கொத்துப்பறை கொட்டக் களமிசை
        குக்குக்குகு குக்குக் குகுகுகு
        குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

        கொட்புற்றெழ நட்புற் றவுணரை
        வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
        குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.



        இருமல் உரோகம் முயலகன் வாதம்

                எரிகுண நாசி விடமே நீர்

        இழிவு விடாத தலைவலி சோகை

                எழுகள மாலை இவையோடே


        பெருவயிறு ஈளை எரிகுலை சூலை

                பெருவலி வேறும் உளநோய்கள்

        பிறவிகள் தோறும் எனை நலியாத

                படிஉன் தாள்கள் அருள்வாயே


        வரும் ஒரு கோடி அசுரர் பதாதி

                மடிய அநேக இசைபாடி

        வரும் ஒரு கால வயிரவர் ஆட

                வடிசுடர் வேலை விடுவோனே


        தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

                தரு திரு மாதின் மணவாளா

        ஜலமிடை பூவின் நடுவினில் வீறு

                தணிமலை மேவு பெருமாளே

"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"




ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி

அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்

மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் 

பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் 

ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்!!!


திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி

விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்

பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று

கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்

திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

திருத்தணிகை முருகனுக்கு அரோகரா!!
முருகா! முருகா!! முருகா !!!







- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதுதல் (ஞான வேள்வி) - 30.06.2024 - https://tut-temples.blogspot.com/2024/06/3000-30062024.html

திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_12.html

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_15.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 24.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/24062021.html

அருணகிரிநாதர் குரு பூஜை - பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம் - 04.07 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/0407-2020.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_4.html

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_4.html

வைகாசி விசாகத்தை வரவேற்போம் - 04.06.2020  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html