"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, November 30, 2021

பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி விழா - 01.12.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக அனைவரும் கொண்டாடி இருப்பீர்கள் என்று விரும்புகின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொண்டாட்டங்கள் அவ்வப்போது மாறி வருகின்றது. இருப்பினும் நம் வழக்கமான சேவை எந்த தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றது. இப்போது தான் 2021 ஆண்டில் காலடி எடுத்து வைத்து இருப்பது போன்று இருந்தது. அதற்கும் வருட இறுதிக்குள் வந்து விட்டோம். 

ஒவ்வொரு நாள் நாட்காட்டி தேதி பார்க்கும் போது நாம் இன்னும் செய்ய வேண்டிய சேவைகள் அதிகமாக உள்ளது. நம் குழுவை மருத்துவ சேவையில் ஈடுபடும்படி நம் குருநாதர் 2019 ஆண்டில் கூறினார்கள். இந்த ஆண்டில் மருத்துவ சேவையாக மூலிகை கசாயம் கொடுக்கும் சேவை கூடுவாஞ்சேரியில் தொடர்ந்து வருகின்றது. இன்னும் தொற்றுக்கிருமி காரணத்தால் நாம் உழவாரப்பணி, ஆலய தரிசனம் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தவில்லை. ஆனால் பிற சேவைகளான அன்னசேவை, தீப வழிபாடு , ஆயில்ய ஆராதனை, ஆலயங்களுக்கு தீப எண்ணெய் வழங்குதல்,மருத்துவ உதவி, தினசரி கூட்டுப் பிரார்த்தனை என அனைத்தும்  உங்கள் அனைவரின் பொருளுதவியால் நடைபெற்று வருகின்றது. 


அதே போல் சென்ற ஆண்டு நம் தளத்தின் தரிசனப் பதிவுகள் என பல பதிவுகள் இன்னும் நம் கையில் உள்ளது. நம் கையில் உள்ள பதிவுகளை உங்கள் இதயத்தில் இடம்பெற விரைவில் முயற்சி செய்கின்றோம்.

இன்றைய சிறப்பு நாளில் பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்சுவாமிகளின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று குருவைப் போற்றுவோம்.

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா!






 திருவண்ணாமலை, அற்புதமான புண்ணிய பூமி. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்... என மகான்களின் திருப்பாதம்பட்ட மண். காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகள், வாரணாசிக்கு அருகில் உள்ள நாராதாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-ம் ஆண்டில் ராம்தத் குவார் - குசும்தேவி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார்.இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் என இரு சகோதரர்கள். குழந்தைப் பருவத்திலேயே யோகிகளையும் துறவிகளையும் சந்திப்பதில் ஆர்வத்துடன் இருந்தார். கங்கை ஆற்றாங்கரையில் உலவுவது, துறவிகளுடன் உறவாடுவது என இருந்தார்.

 ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்தவருக்கு ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. `இவரே... இவரே... இவரே என் குரு’ என்றவருக்கு, மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கிப் பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார். அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அந்தச் சமயத்தில் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் சித்தி அடைந்தார்  என்பது தெரியவர, இடிந்துபோனார்.

 மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த பப்பா ராமதாஸை நோக்கி பயணத்தைத் தொடங்கினார் ராம்சுரத். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமத்தை உபதேசித்தார். ''இடையறாது ராம நாமம் சொல்'' என்றார். ராம்சுரத்குமார் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி  பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.

 உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை `பித்து’ என்று வர்ணிக்கப்படும். `பைத்தியக்காரன்’ என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குமாருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால் ராம்சுரத்குமார், ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.
உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்குப் போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.

 உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் தொடர்பான விஷயம்தான். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த 'தான்' என்பதை அனுபவிக்கிறபோது, வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தைவிட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.

 திருவண்ணாமலைக்கு வந்தவர், ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து இடையறாது ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.கங்கை நதி மீது அவருக்கு இருந்த பக்தி, காசியில் தகனம் செய்யப்படும் உடலைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஞானத்தேடல், புத்தரின் நினைவாக தனது மகளுக்கு `யசோதரா’ என்று பெயர் சூட்டியது, பகவான் ரமணரைச் சந்தித்தது, அரவிந்தரைச் சந்தித்தது... இப்படி யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கையே ஆன்மிகத் தேடலாக இருந்துவிட்டது.

 ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி ராமதாஸரிடமிருந்து பக்திநெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு ராமதாஸரிடமிருந்து, 'ஓம் ஶ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்' எனும் மந்திர தீட்சை பெற்றார்.யோகி ராம்சுரத்குமார் சித்தியடையும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தார். தமிழ் மண்ணில் பிறக்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஒரு மகான் வடக்கில் பிறந்து, தெற்கில் நம் மண்ணில் வந்து சித்தி அடைவதென்றால் ஏன்?  நமக்காக தானே. நாம் உண்மை நிலை உணர தானே. யோகியின் வழியில் நாமும் மந்திர ஜெபத்தை பிடிப்போம்.








இங்கு பதிவேற்றம் செய்து  உள்ள காட்சிகள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாம் கண்டது. நம்  அன்பர் திரு.ஹரிஹரன் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக நம்மை கூடுவாஞ்சேரியில் யோகியாரின் ஆசிரமம் உள்ளது,சென்று தரிசியுங்கள் என்றார். நாமும் எங்கெங்கோ தேடி கடைசியில் கண்டோம், அருள் பெற்றோம்.




யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா!

- குருமார்களின் அருள் தொடரும்...


மீள்பதிவாக:-

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

 யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 116 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2021/09/116.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html


கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html


நலம் தரும் பதிகங்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் நலம் தரும் பதிகங்கள் பற்றி சிறிது காண இருக்கின்றறோம். பொதுவாக பதிகங்கள் அனைத்தும் நலம் தருபவையே ஆகும். இங்கு நாம் நலம் தரும் பதிகங்கள் என்று சொல்ல காரணம் தற்போது நிலவி வரும் கால சூழலே ஆகும். ஆம். இன்று தொற்றுக்கிருமி உருமாற்றம் பெற்று பரவி வருவதாக செய்தி கேட்டோம். இதன் பொருட்டு நம் "தேடல் உள்ள தேனீக்களாய்-TUT" குழுவின் மூலம் தினமும் மாலை ஜூம் செயலி மூலம் பதிகங்கள் படித்து பிரார்த்தனை செய்து வருகின்றோம். பிரார்த்தனை ஒன்றே இறையை சரணடையும் வழி என்பதை நாம் உணர்ந்தோம். இந்த பிரார்த்தனைக்கு உறுதுணையாக இந்த பதிகங்கள் அமைந்து வருகின்றது.


எனவே தான் இந்த நலம் தரும் பதிகங்கள் என்று இன்று காண்கின்றோம். நம் குழுவின் சேவையாக இந்த அச்சு நூல் 100 பிரதிகள் வாங்கி அன்பர்களுக்கு அனுப்பு வைத்தோம். சரி..இந்த நூலில் உள்ள பதிகங்கள் என்ன? என்பதை இன்று காண்போம்.

நலம் தரும் பதிகங்கள்

1. திருநீலகண்டப் பதிகம் - செய்வினையும், தீவினையும் குளிர்காய்ச்சலும் நீங்க 

2. திருநீற்றுப் பதிகம் - தீராத நோய்கள் தீர 

3. திருத்தணி திருப்புகழ் 

இனி ஒவ்வொரு பதிகத்தின் சிறப்பு பற்றி அறிவோமா?

1. திருநீலகண்டப் பதிகம் - செய்வினையும், தீவினையும் குளிர்காய்ச்சலும் நீங்க 


கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கொடிய நோய்களை தீர்க்கக் கூடிய திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம் பாடி நோயிலிருந்து விடுபடுவோம். 

திருச்செங்கோடு எனும் கொடிமாடச் செங்குன்றூர் ( திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலை சேர்ந்த ஐந்து துணை சிவாலயங்கள் உள்ளன.) தலத்தில் திருஞானசம்பந்தர் தன் அடியார்களுடன் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். 

அப்போது அந்த பகுதியில் ஒரு விஷக் காய்ச்சல் வேகமாக பரவி மக்களை மிகவும் வருத்தியது. அப்போது மக்களை காக்கும் பொருட்டு காழிப்பிள்ளையார் திருநீலகண்டப் பதிகம் பாடி, அந்த கொடிய விரட்டியதாக வரலாறு கூறுகிறது.இந்த பதிகம் விஷக் காய்ச்சல் மட்டுமல்ல எல்லா விதமான கொடிய நோய்களை போக்கும் வல்லமை மிக்கது. அதோடு ஊழ்வினையையும், செய்வினை, தீவினையிலிருந்து நம்மை காக்கும் சக்தி வாய்ந்தது.




தற்போது உலகெங்கும் பரவி மக்களை துன்பத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும் ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பிலிருந்து மீள, இந்த பதிகத்தை சிவ பெருமான் மீது காதலாகிக் கசிந்து உருகி கண்ணீர் மல்கி அவ்வப்போது பாடி வர, நம்மை இந்த கொடிய உயிர்கொல்லியிலிருந்து ஈசன் காத்தருளுவார்.

இன்னும் சற்று விளக்கமாக காண்போம்.

தனது ஐந்தாவது தலயாத்திரையில் தனது வாழ்க்கையில் முதன் முறையாக கொங்கு நாட்டுத் தலங்களுக்கு சென்ற திருஞானசம்பந்தர், முதலில் கொடிமாடச் செங்குன்றூர் தலத்திற்கு சென்று, வெந்த வெண்ணீறு என்று தொடங்கும் பதிகத்தினை (1.107) பாடி மாதொருபாகனைப் போற்றி வணங்கிய பின்னர், திருநணா (தற்போதைய பெயர் பவானி) தலம் சென்று பதிகம் பாடி இறைவனை வணங்குகின்றார். மாதொரு பாகனின் திருக்கோலம் அவரது மனதினை விட்டு நீங்காது இடம் பெற்றிருந்த தன்மையை, திருநணா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.72) ஐந்து பாடல்களில் மாதொருபாகனின் தன்மையை குறிப்பிட்டு இருந்தமையிலிருந்து நாம் உணரலாம். இவ்வாறு மீண்டும் மீண்டும் அந்த கோலத்தை தனது திருநணா பதிகத்தில் குறிப்பிட்ட போதிலும் அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை போலும். மீண்டும் கொடிமாடச் செங்குன்றூர் சென்று பெருமானின் மாதொருபாகன் திருக்கோலத்தை காண வேண்டும் என்று விரும்பியவராக அவர், பவானியிலிருந்து கொடிமாடச் செங்குன்றூர் செல்கின்றார். இதனிடையில் மழைக்காலம் முடிவுறவே முன்பனிக்காலம் வந்தது. பனியினை வெறுக்கும் வண்டினங்கள் வெளியே வருவதை தவிர்க்க, தாமரை மலர்கள் போதிய வெப்பம் இல்லாமையால் கருக, மரகத மணியினை கோத்தது போன்று மெல்லிய அருகம்புல்லின் முனையில் பனித் துளிகள் படிய பனிக்காலம் இருந்தது என்று சேக்கிழார் விவரிக்கின்றார். அனைத்து வகையான உயிரினங்களும் தத்தம் துணையோடு தங்களது இருப்பிடங்களில் ஒடுங்கி இருக்கும் வண்ணம் பனி கடுமையாக இருந்தது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும், பல மக்கள் மஞ்சளும் குங்குமமும் சேர்த்து அரைத்து, நெருப்பிட்டு அதனில் அகில் பொடிகளைத் தூவி நறுமணம் மிகுந்த புகை எழுப்பி, குளிர் காய்ந்தனர். இத்தகைய சூழ்நிலையில் பல நாட்களாக இந்த தலத்தினில் ஞானசம்பந்தரும் அவருடன் சென்ற அடியார்களும் தங்கியிருந்ததால், அடியார்கள் பலருக்கு மலைநாட்டினில் ஏற்படும் குளிர்சுரம் பாதித்து அவர்களை நடுங்க வைத்தது. அடியார்கள் ஞானசம்பந்தரிடம் சென்று தங்களது துன்பத்தை தெரிவிக்க, ஞானசம்பந்தர் குளிரும் குளிர்சுரமும் மலை நாட்டின் இயல்பு என்று குறிப்பிட்டு எனினும் அந்த இயல்பினால் விளையும் கொடுமைகள் பெருமானின் அடியார்களை சாராமல் இருக்கவேண்டும் என்ற கருத்துடன் இறைவனை வேண்டி, இந்த பதிகம் பாடினார்.


அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எலாம்

முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே

இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறா என்று

சென்னிமதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்


அந்த பதிகம் தான் அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் இந்த பதிகம். இறைவனார் உட்கொண்ட நஞ்சினைத் தடுத்து வானவர்க்கும் உலகத்தவர்க்கும் எங்கும் பொங்கிப் பரவிய ஆலகால விடத்தினால் எந்தவிதமான தீங்கும் நேரிடாமல் பாதுகாத்தது நீல நிறமாக மாறிய கழுத்து என்றும், அந்த நீலகண்டம் அடியார்களுக்கு துன்பம் வாராமல் பாதுகாக்கும் என்ற பொருள் பட இந்த பதிகம் பாடியதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். மேலும் நீலகண்டத்தின் சிறப்பு கருதி, திரு என்ற அடைமொழியை சேர்த்து திருநீலகண்டம் என்று அழைத்து ஆணையிடுவதாக இந்த பதிகம் அமைந்துள்ளது என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களும் அடியார்கள் தீவினை தீண்டப்பெறாது திருநீலகண்டம் பாதுகாக்கும் என்று முடிகின்றன.


அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த

வெவ்விடம் முன் தடுத்து எம்மிடர் நீக்கிய வெற்றியினால்

எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே

செய்வினை தீண்டா திருநீலகண்டம் எனச் செப்பினார்


ஞானசம்பந்தர் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்று உணர்த்தி பாடிய இந்த திருப்பதிகம், நமக்கு திருநீலகண்டத்தின் மீது ஆணை என்று தனது மனைவி ஆணையிட்டதைக் கேட்ட திருநீலகண்டக் குயவனாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பரத்தையின் அழகில் மயங்கிய தனது கணவர், நீலகண்டக் குயவனரின் மீது கோபம் கொண்ட அவரது மனைவி, அவருடன் பிணக்கு கொண்டு அவருடன் பேசுவதையும் தவிர்க்கின்றார். மனைவி தன் பால் கொண்ட கோபத்தை குறைக்க குயவனார் முயற்சி செய்கின்றார். பலவிதமாக இறைஞ்சி பேசிய போதும் மாணவி இணங்காததைக் கண்ட, குயவனார், தனது மனைவியை தொடுவதற்கு முயல, அவரது மனைவியார் திருநீலகண்டத்தின் மீது ஆணை வைத்து நீர் எம்மை தீண்டாதீர் என்று கூறுகின்றார். கணவரும் அதற்கு உடன்படவே ஒருவரை ஒருவர் தொடாமலே பல வருடங்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் அவ்வாறு இருந்ததை அயலவர்கள் எவரும் அறியாத வண்ணம் அவர்கள் வாழ்ந்தனர் என்பதையும், அவர்களின் தன்மையை உலகுக்கு உணர்த்த பெருமான் நடத்திய திருவிளையாடலையும் பெரிய புராணம் எடுத்துரைக்கின்றது. திருநீலகண்டத்தின் மீது ஆணை என்ற சொற்கள் எவ்வளவு உயர்வாக அந்நாளில் மதிக்கப் பட்டன என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றது.


விஷஜுரம், குளிர்க்காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து விடுபடவும், தொண்டை நோய் குணமடைந்து குரல் வளம் பெறவும், செய்வினைகளால் வரும் துயரங்கள் நீங்கவும் ஓத வேண்டிய பதிகம் என்று, திருநீலகண்டப் பதிகத்தினை முன்னோர்கள் கூறுவார்கள். சிறந்த பலன்களைத் தரும் பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்றாக கருதப் படுகின்றது. 


2. திருநீற்றுப் பதிகம் - தீராத நோய்கள் தீர 

திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.

இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது.


பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் கூன் பாண்டியன். சமண மதத்தை சேர்ந்தவன். அவனது மனைவி மங்கையர்க்கரசி சிறந்த சிவபக்தி கொண்டவள். அதே நேரம் கணவனின் மனம் கோணக்கூடாது என்று எண்ணி திருநீற்றை நெற்றியில் அல்லாமல் மார்பில் பூசி வந்தவள்.
 
திருஞான சம்பந்தர் பாண்டிய நாடு அடைந்து ஒரு சத்திரத்தில் தங்கினார். அவரது வருகையை அறிந்த சமணர்கள் பாண்டியனிடம் பலவிதமாக எடுத்துக்கூறி அவர் தங்கியிருந்த சத்திரத்திற்கு தீ மூட்டினர். திருஞானசம்பந்தரோ சென்று பாண்டியனை பிடி என்னும் பொருள்படும்படி ஒரு பாடலை பாடினார். அவ்வாறு  சென்று பிடி என்று பாடியதால் அந்த வெப்பம் பாண்டியனை வெக்கை நோயாக சென்று பீடித்தது.
 
பாண்டியனுடைய மனைவியான மங்கையர்கரசியூம் தவசீலரும் சிறந்த சிவபக்தி கொண்டவருமான அமைச்சர் குலச்சிறையாரும் ஞானசம்பந்தப் பெருமானை சென்று சந்தித்தனர். திருஞான சம்பந்தரும் பாண்டியனின் வியாதியை குணப்படுத்த சம்மதித்தார். பின்னர் அவர்கள் பலவாறாக பாண்டியனிடம் பேசினார். முதலில் மறுத்த பாண்டியன் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டான். இதற்கிடையில் சமணர்களும் பலவாறாக பாண்டியனிடம் பேசினர். முடிவில் மன்னனும் இரு மதத்தில் எந்த மதத்தால் தன்னுடைய வியாதி குணமாகிறதோ அந்த மதத்தை இறுதிவரை தழுவி வாழ்வது என்கிற உறுதிமொழி ஏற்றுக்கொண்டான்.
 
குறிப்பிட்ட நாளில் சமணர்கள் பலவித மந்திரங்களை பிரயோகித்தார்கள் என்றபோதிலும் குணம் கூடவில்லை. திருஞானசம்பந்தரோ கையில் வெறும் விபூதி மட்டும் வைத்துக்கொண்டு  ‘‘மந்திரமாவது நீறு வானவர் மேலதும் நீறு’’ என தொடங்கும் திருநீற்றுப்பதிகம் பாடி உடலின் ஒவ்வொரு பாகமாக திருநீறு பூசினார். முடிவில் பாண்டியனின் வெக்கை நோயூம் மறைந்தது. இவ்வாறாக பாண்டியனும் சைவ மதத்தை தழுவினான்.


உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்பநோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும்.

முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லிவந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும். பிணியால் பாதிக்கப் பட்டவருக்காக அவரது உறவினர்களும் சொல்லலாம். சிறிது விபூதியை சுவாமி முன் வைத்து, இந்தப் பதிகத்தை ஓதியபின் அந்த விபூதியை, பாதிக்கப்பட்டவர்க்குப் பூசிவிடுவதாலும் பலன் கிடைக்கும்.


இந்த இரு பதிகங்களும் இன்றைய கால சூழ்நிலையில் தினமும் படிக்க வேண்டிய பதிகம். அடுத்து திருத்தணி திருப்புகழ் வருகின்றது.

3. திருத்தணி திருப்புகழ்  - இருமலு ரோக

இத்திருப்புகழ் பரம குருநாதராகிய அருணகிரிப் பெருமான் உலகில் உள்ள மக்களின் மீதுள்ள அளவற்ற கருணையால் திருத்தணி முருகன் மீது பாடியருளியது. இந்தத் திருப்புகழ் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்பதிகம்.

இத்திருப்புகழை, அன்பர்கள் நாள்தோறும், ஒருமைப் பட்ட உள்ளத்துடன் உருகிய சிந்தையுடன் ஓதினால், நோய்கள் விலகப் பெறுவார்கள். அன்றியும் நோய் தீண்டப் பெறார்கள். நோயின்றி வாழ்ந்தும் வளம் பெறுதற் பொருட்டு அடிகளார் இத்திருப்புகழை இனிது பாடிக் கொடுத்தருளினார்.






ஒவ்வொரு பதிகமாக இனிவரும் பதிவுகளில் தொடர்வோம்.

இந்தத் தருணத்தில், இந்தப் பதிவை படித்து நமது பிரார்த்தனைகளை குமரக் கடவுளிடம் சேர்த்து, நமக்கும் நம்மைச் சார்ந்தவர்க்கும், மற்றும் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தருமாறு வேண்டிக் கொள்வோம் !!

தினமும் திருமுறை ஓதுவோம்.



தென்னாடுடைய சிவனே போற்றி!

      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
 
       அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.
 
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
 
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
 
சீரார் திருவையாறா போற்றி
 
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
 
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
 
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
 
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
 
குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க
 
காவாய் கனகத் திரளே போற்றி
 
கயிலை மலையானே போற்றி போற்றி


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html 

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/7-1.html

தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post.html

பன்னிரு திருமுறை இசை விழா - திருமுறை வெள்ளத்தில் மூழ்க வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_9.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_7.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_24.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_22.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_58.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_17.html

Sunday, November 28, 2021

குருவே சரணம் - 7ம் ஆண்டில் ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அகத்தியம் என்ற ஒற்றை வார்த்தைக்கு தான் சக்தி அதிகம். அன்பின் ஆழம் உணர்த்தும் சொல், அகத்திய சொந்தங்களை சேர்க்கும் சொல். பக்தியை உயர்த்தும் சொல். தமிழை வளர்க்கும் சொல். அகத்தியம் என்ற வார்த்தை சொல்லாது ஒரு நாளும் நாம் கடத்துவது இல்லை. அனைத்தும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியருக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.சித்தர் வழிபாடு என்பது சாதாரண வழிபாடு அன்று. பார்க்க எளிமையாய் தோன்றும். ஆனால் பின்பற்றுவது கடினம், பயமுறுத்துவது நம் நோக்கம் அல்ல. பயத்தை உங்களிடம் இருந்து விளக்குவதே நோக்கமாகும். இந்த வழிபாட்டில் நமக்கு பல அகத்திய குருமார்கள் கிடைத்து உள்ளார்கள். நமக்கும் நம் தளத்திற்கும் தற்போது வரை வழிகாட்டியும் வருகின்றார்கள். 


தஞ்சாவூர்  சித்தர் அருட்குடில், சின்னாள பட்டி அகத்தியர் ஞானக் குடில், பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம், காரைக்குடி ஸ்ரீ அகத்தியர் அதிர்ஷ்ட தீபக்குழு, மதுரை இறையருள் மன்றம், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் அன்பின் ஆழத்தை சித்தர் வழியில், நெறியில், மரபில் உணர்த்தி வருகின்றது. நம்மை வழி நடத்தும் அகத்திய குருமார்களின் சேவைகளை பற்றி ஒவ்வொரு பதிவாக அறிய தருகின்றோம்.

நம் தளத்தில் பொதிகை வேந்தே ! வருக !! என்றும், பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க!
என்றும் இரு பதிவுகள் கொடுத்துள்ளோம். 2019 ஆம் ஆண்டில் ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனம் பெற்று  நாம் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்துள்ளோம்.இதே போன்று நம் குழு அன்பர் வீட்டில் மகளுக்கும்  திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதே அன்பர் இல்லத்தில் மகனிற்கும்  2020 ம் ஆண்டு திருமணம் நடைபெற்று  உள்ளது. இதெல்லாம் எப்படி? நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளால் தான் என்பதில் எள்ளளவும் நமக்கு ஐயமில்லை.

இன்று 7ம் ஆண்டில் ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் அடியெடுத்து வைக்கின்றது. நம்மை வழிநடத்தும் 7ம்  ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி இன்றைய பதிவை சமர்ப்பிக்கின்றோம்.


பதிவின் உள்ளே செல்லும் முன்னர் கடந்த இரண்டாடுகளாக நடைபெற்ற வழிபாட்டின் அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.















காணி நிலம் வேண்டும்
பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்...
எம் அய்யன் அம்மை அருளால் பாரதீயின் கனவு மெய் பட்ட நாள் 








ஆம். 2015 ஆம் ஆண்டு நவம்பர் 29 ம் நாள் தான் (29.11.2015 ) ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் உருவானது. இன்று 7 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தை வாழ்த்துவோம் .




இந்த 6 ஆண்டுகளில் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் அகத்தியதை அன்பெனும் தேனில் ஊற்றி அனைவருக்கும் கொடுத்து வருகின்றது. மாதந்தோறும் அகத்தியரின் ஆயில்ய பூசை சிறப்பாக நடைபெறுகின்றது.தற்போது மாதம்தோறும் ஸ்ரீ மஹா பெரியவா  அனுஷ பூஜையும் நடைபெற்று வருகின்றது. இங்கே நடைபெறும் ஆயில்ய பூசையின் சிறப்பஜ் இவர்களின் பிரார்த்தனை தான். பிரார்த்தனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று நமக்கு சொல்லிக்கொடுத்ததும் இவர்கள் தான். இது மட்டுமின்றி வெளியே யாருக்கும் தெரியா வண்ணம் பல சேவைகளும் ரீ அகத்தியர் ஞானம் இல்லம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


































ஒவ்வொரு அபிஷேகம் கண்டு மனம் மகிழ்வு பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் அகத்தியர் உறையும்  உன்னத இடம். நாம் இதனை இரண்டு மூன்று முறை உணர்ந்து இருக்கின்றோம். உணர்ந்ததை நம்மால் வார்த்தையில் சொல்ல இயலாது. அனுபவிக்க மட்டும் தான் முடியும். இங்கு ஒவ்வொரு தமிழ் மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று அகத்தியர் வழிபாடு வெகு  விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதோ.இனி அலங்காரம் நடைபெறுகின்றது.







நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற  சித்தன் தன்னை
வெஞ்சாபமும்  இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை
அகத்துள் வைப்போம்

என்னும் அகத்தியர் துதியுடன் அகத்தியர் ஆயில்ய ஆராதனையில் அலங்காரம் காண இருக்கின்றோம்.















அகத்தியத்தை நமக்கு ஊட்டி வரும் அகத்திய தம்பதிகளின் பாதம் பணிகின்றோம். ஒவ்வொரு மாத பூசையிலும் பொறுமையாக பூசித்து, அபிஷேக அலங்காரம் செய்து, யாரெல்லாம் பிரார்த்தனைக்கு கோரிக்கை வைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பிரார்த்தனை செய்து, பிரார்த்தனை பூர்த்தியாயின் நன்றி சொல்ல வராதவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லியும் வரும் இவர்களின் பரிவும் பாசமும் போதும். 

மீண்டும் ஒருமுறை பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தை வாழ்த்துவோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html

குருவே சரணம் - பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தை வாழ்த்துவோம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_30.html

பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_96.html