"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 24, 2025

கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - சுவாமிமலை நவரத்ன மாலை

                                                        இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தீபாவளி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, கந்த சஷ்டி வழிபாட்டில்  அனைவரும் இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!என்று வேண்டுவது ஒன்று தான் நம் கையில் இருக்கின்றது.


இன்றைய கந்த சஷ்டி பதிவாக சுவாமிமலை நவரத்ன மாலை பற்றி இங்கே அறிய உள்ளோம் . 

சுவாமிமலை நவரத்ன மாலை

சூரனை சம்ஹாரம் செய்யவேண்டும்; அதற்கு குமார சம்பவம் நிகழ வேண்டும். தேவர்களின் தூண்டுதலால் மன்மதன் தன் புஷ்பபாணங்களை ஈசனின் மீது எய்ய தவம் கலைந்த ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றி சரவணப் பொய்கையில் விழுந்தன. அவை ஆறு குழந்தைகளாய் மாறி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு பின் பார்வதி தேவியின் அணைப்பில் ஷண்முகராக மாறி திருவருள் புரிந்தது. 




அறுபடை வீடுகளில் ஆறுமுகனான முருகப்பெருமான் திருவருட்பாலித்து வருகிறார். திருக்கார்த்திகை நன்நாளில் கடுக்கண்  தியாகராஜ தேசிகர் எனும் பக்தரால் 350 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட, கீழ்க்காணும் சுவாமிமலை எனும் திருவேரக நவரத்ன மாலையை பாராயணம் செய்து முருகப்பெருமானின் திருவருளையும் வள்ளி, தெய்வானையின் பேரருளையும் இந்த கந்த சஷ்டி விரத நேரத்தில் பெறுவோம். 


பொன்னரங்கு ஆகவுறை மார்பன் சகோதரா

புரந்தரா துரந்தரா உமை

பூமி புகழ் வாமி அபிராமி சிவகாமியருள்

புதல்வ! குருபர சுவாமி! நின்

சந்நதியடைந்தவர்க்கு எந்நிதியமும் உதவும்

தயாநிதி! கிருபாநிதிபதி!

சடாட்சர சுபாகர கடாட்சமது செய்ய இது

சமயம் நல்லசமயம் ஐயா!


உன்னுருவம் உலகுயிர்கள் யாவும் என்றால்,

எந்தன் உள் மெலிவை நீ அறியையோ?

ஓம் நமோ சரவணோற்பவ குமர! முருகா என்

உறுதி நிறைவேற்றி வைத்தாள்

மன்னும் உரு சொன்ன மொழி கன்னலெழில்

மின்னரசி வள்ளி மணவாள சரணம்

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.


நின்பக்கல் அன்பில்லாப் பாவியர் படுந்துயரம்

நின்னடியர் தாமுறுவதும்,

நின்னை என்றும் மறவாத புண்ணியர் பெருஞ் செல்வம் நிர்மூடர் தான் பெறுவதும்,

அன்புடன் நல்லறம் செய் தருமசாலிகள்

அல்லலால் மனநோவதும்,


அறந்தனை மறந்திடும் அசத்தியப் பேயர்கள்

அகமகிழ்ந்தே வாழ்வதும்,

உன் மகிமையோ அல்லது கலியுகப்  பெருமையோ?

உனையன்றி அணு அசையுமோ?

உலகினிற் கண்கண்ட மெய்யான தெய்வமே.

உயர் பரங்குன்றில் உறைவாய்!


வன் பகைச் சூர்வேர் களைந்ததுபோல் என்

பகையை மாற்றிடும் வடிவேலவா!!

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.


ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர்

உளதினில் நினைத்த எல்லாம்

உடனே கைகூடுமென வேதங்கள் மொழியுதே;

உண்மை அறிவான பொருளே!

பார்வாகவே அநந்தந் தரம் சரவண

பவாவென்று நான் சொல்லியும்,

பாங்குமிகு காங்கேயா! அடியனேன்

எண்ணியது பலியாதிருப்பது ஏனோ?

குருபரா! முருகையா! கந்தா! கடம்பா!


சொல் குமரா! குகா! ஷண்முகா!

கோலாகலா! வெற்றிவேலா! எனக்கருள்

கொடுத்தாள்வை முத்தையனே!

மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி

மணவாளனே! என் துணைவனே!

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.


கந்தா! குழந்தை! வடிவேலா! குகா!

ஷண்முகா! பரமகுரு தேசிகா!

கனம் பெற உனக்கே ஜெயம் தரவும்; நீ உன்

கருத்திற் பயப்படேல் என்று

எந்தாய வேளையிலும், அசரீரி மொழியாலும்

எண்ணில் சகுனங்களாலும்

இயம்புமுன் உத்தரவு பொய்க்குமோ?

உனை நம்பி என்மனம் மயங்கலாமோ?

சிந்தா குலந்தவிர்த்து இந்தா எனக்கருணை


செய்து என் அபீஷ்டம் யாவும்

சித்திக்கவே அருள் செய்; பக்தர்க்கு இரங்கும்

என் தெய்வமே உனை நம்பினேன்.

மந்தாகினிக்கு இனிய மைந்தா! முகுந்தற்கு

மருகா! சிறந்த முருகா!

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.


நெஞ்சினிற் கவலையும், சஞ்சல கிலேசமும்

நீ என்ன அறியாததோ?

நீரினில் தன்மைபோல், உயிரினுக்கு

உயிராகி நிறைகின்ற பரிபூரணா!

தஞ்சம் புகுந்தவன், கொத்தடிமை என்று

எனைத்தற்காக்கவேணும், அல்லால்

தள்ளிவிடல் நீதியோ? சமயமிது அல்லவோ?

சரணம் புகுந்த பின்னர்,


அஞ்சலெனஆதரவு செய்வது போல்

செய்து ஒன்னலாரிடம் விடுக்கலாமோ?

ஐயனே உனது திருவிளையாடலோ? உன்

அடைக்கலம் அடைக்கலம் காண்.

மஞ்சுஒதிமத் தேவகுஞ்சரிமனோகரா!

வள்ளி நாயக தெய்வமே!

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.


ஆறுதலையர் அருள்செய் ஆறுதலையாய்!

எனக்கு ஆறுதலை யார்? உனை அலால்!

ஐயனே! ஈராறு கையனே! மெய்யனே!

அனைத்திலும் நீ ஒருவனே

தேறுபொருள் என வேத வேதாந்த

மதனிலும், தீர்க்கமா வாக்கியம் எலாம்

திவ்ய தேஜோமயா நந்த பரிபூரணத்


தேவசிவ குருவே! உனை

வீறுள்ள தேவென்று கூறுவதலால், எங்கும்

வேறு மொரு தெய்வம் உளதோ?

விண்ணவர்கள் சிறைமீள,

ஆயிரங்கண்ணுளான்

மேலுலகு தன்னை யாள,

மாறிட்ட சூரனைக் கூறிட்டவேலால்


மனத்துயர் ஒழித்தருள் செய்வாய்!

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.


உண்டு என்னிடத்திற் பலகுற்றம்;

ஆகிலும் உனையடைந்தேன்! ஆதலால்,

உவந்தே பொறுத்திடுதல்

உன் கடமையல்லவோ;

உண்மையாய் ஒரு விண்ணப்பம்;

பண்டு உதிரம் அதுசிதற வில்லால்

அடித்திட்ட பார்த்தனைக் கோபியாமல்


பாசுபதம் அருள் செய்த சிவகுமரா! நிற்

பயந்தவர் செய் பாங்கு போலும்,

திண்டு முண்டு உரை செய்த நக்கீரனைக்

காத்த செய்கைபோல், உன் கிருபையால்

சிறியன் மீதே பூரண கருணா கடாட்சமது


செயவேணும், இது சமயமே!

வண்டுகுடி கொண்டகுழல் கெண்டைவிழி,

கண்டுமொழி, வள்ளி மணவாளா சரணம்!

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.


கொஞ்ச நெஞ்சம் பயமின்றி, அற மதனைக்

குலைத்திடல், சிவத்துரோகம்,

குருநிந்தையோடு சகோதரத் துரோகம்,

அன்னம் கொடுத்தவர்க்குத் துரோகம்,

வஞ்சகம், பொய், சூது, அசத்தியம், ஈரஷை,

 மாச்சரியம், மிக்க நன்றி

மறத்தல், புறங்கூறல், இன்னம் இப்படி


வெகு மாபாவஞ் செய்த கொடிய

பஞ்சமா பாவிகள் எண்ணமோ முடியும்?

இப் பார்மீதில் உனை நம்பிவாழ்

பக்தர்கள் நினைப்பு ஒன்று முற்றாது

இருக்குமோ? பரம குருநாத சுவாமி!

வஞ்சகச் சூரரெனும் மாசினை அகற்றியே


வானுலகு வாழ வைத்தோய்

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.


மைந்தர் மேல் மோடியது, தந்தை தாய்

செய்வது என்ன மாயமோ? இது ஞாயமோ?

பாலசுப்பிரமணியன் என்ற பேர் நிஜமென

வகுத்தது உன் வேடிக்கையோ?


எந்தனுடல், உயிர், பொருள், யாவுமே

“நீ’’ யென இருப்போர்க்கும் இரங்காவிடில்,

என்னையும் நகைத்து ஐயா! உன்னையும்

நகைப்பதற்கு இடம் அல்லவோ! கருணையாய்ச்

சுந்தர மிகுந்திலகு ஷண்முகமும், ஈராறு

தோளும், கடம்பும், எங்கள்


தொகை தெய்வானை, குற மங்கையோடு,

தோகைமேல் தொண்டனேன் கண்டுமகிழ,

வந்து எழுந்தருளி, எனை ஆண்டு கொள்வாய்!

உன் மலர் பதம் சரணம் ஐயா!

வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்

பதியில் வளர் சாமிநாத குருவே.




கந்தபுராணம் கூறும் ஸ்கந்தஷஷ்டி - விரதமுறை

ஸ்ரீ முருகப்பெருமானின் முக்கிய விரதங்களில் ஓன்று ஸ்கந்த_ஷஷ்டி விரதம்.இந்த விரதத்தை எவ்வாறு அனுசரிக்கவேண்டும் என்ற முறையினை 
ஸ்ரீ கச்சியப்பசிவாச்சாரியர் கந்தபுராணத்தில் பாடியுள்ளார்..

1) ஷஷ்டி விரதம் எப்பொழுது மேற்கொள்ளவேண்டும்.. ?

"வெற்பொடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேல்  செங்கை
அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாரும் 
சொற்படு துலையின் திங்கள் சுக்கில பக்கம்  தன்னில்
முற்பகல் ஆதி யாக மூவிரு வைகல் நோற்றார். "           

கிரவுஞ்சமலையுடன் தாரகனை அழித்து ஒப்பற்ற வேலினை தம் திருகரத்தில் கொண்டுள்ள முருகனை வேண்டி விரதமிருந்து திருவருட்பலனை உடனே பெற்றிட, ஐப்பசிமாதம் வளற்பிறையில் பிரதமை முதல் ஷஷ்டி வரை உள்ள ஆறுநாட்கள் விரதம் மேற்க்கொள்ளவேண்டும்..        

2) ஷஷ்டி விரதம் எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும்? 

  "முந்திய வைகல் ஆதி மூவிரு நாளும் காலை ,
அந்தமில் புனலின் மூழ்கி ஆடை ஓர் இரண்டும் தாங்கி,
 சந்தியில் கடன்கள் செய்து தம்ப பிம்ப  கும்பத்தில் ,
கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குல் போதில்."        

விரதத்துக்குரிய ஆறுநாட்களும் காலை மாலை குளிர்ந்த நீரில் நீராடி இரண்டு ஆடைகளை உடுத்திக்கொண்டு ( ஒற்றை துணி கூடாது) ,,அன்றாடம் செய்துவரும் அனுஷ்டானம் ஜெப தபங்களை முடித்துக்கொண்டு, 
முருகனை  விசேஷமாக கும்பத்தில் / அக்னியில் / உருவத்தில் ( சிலை அல்லது படம்) ஆவாஹனம் செய்து முறையாக பூஜித்து ஆறுநாட்களும் வழிபட்டு கடைப்பிடித்து வரவேண்டும்.. 

 (தம்பம் - அக்னி / கும்பம் - கலசம் / பிம்பம் - உருவச்சிலை அல்லது வேல் அல்லது முருகனது படம் ) 

3 ) விரத நாட்களில் கந்தனை எவ்வாறு வழிபடவேண்டும் ?

  " நிறைதரு கட்டி கூட்டி நெய்யினால் சமைக்கப்பட்ட 
குறைதவிர் மோதகத்தைக் #குமரநாயகர்க்கு  அருத்திப்
பிறவுள விதியும்  செய்து பிரான் திருப்புகழ்  வினாவி,
உறுபுனல் சிறிது மாந்தி உபவசித்து இருந்தார் மாதோ"

ஷஷ்டி விரதம் ஆறுநாட்களிலும் இனிப்போடு கூடிய மோதகம் (தேன் திணை / சக்கரைப்பொங்கல் )  போன்ற இனிப்பு பலகாரங்களை நிவேதனம் செய்து, மற்றுமுள்ள வழிபாட்டு முறைகளை ( குரு வாக்கியப்படி )  கடைப்பிடித்து ,

முருகனது புகழினை பாடும் கந்தபுராணம் / திருப்புகழ் / கந்தர்கலிவெண்பா / கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி ,சஷ்டி கவசம் போன்ற பாடல்களை பரராயணம் செய்தும் கந்தபுராணத்தை பாராயணம் செய்தும் கேட்டும், சிறிதளவு நீரைப் பருகி உபவாசம் இருக்கவேண்டும்.

(உபவாசம் - உணவின்றி பட்டினியாக விரதம் இருத்தல்.  இது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப கடைப்பிடிக்கவேண்டும்) சரீர தர்மம் முக்கியம் ...

4) ஷஷ்டி விரத்தால் ஏற்படும் பலன் யாது? 

"ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றை வைகல்
சீரணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை ஆற்றிப்
பாரணம் விதியில்  செய்தார் பயிற்றும் இவ் விரதம்  தன்னால்
தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார்."

இவ்வாறு இந்த ஸ்கந்த ஷஷ்டி விரதத்தை ,வேதங்களை கற்ற முனிவர், தேவர்கள் என அனைவரும் ஆறுநாட்களும் ஷஷ்டி விரதம் இருந்து, 

      ஏழாம் நாள் ஸப்தமி அன்று முருகனுக்கு விசேஷபூஜை செய்து, அதன்பின் உணவு உட்கொண்டனர். இவ்வாறு ஷஷ்டி விரதம் கொண்டதால் ,அசுரர்கள் கவர்ந்துகொண்ட தம்தம் உலகபதவிகளை தலைமையை மீண்டும் பெற்றனர்.

#பாரணம் - விரதம் பூர்த்தி செய்தபின் உண்ணுதல். 

(ஷஷ்டி விரத பலனால் குழந்தை பேறும் / வெற்றியும் / மேலான பதவியும் கிட்டும் என்பதாம்) 

5) ஷஷ்டி விதர பலனை பெற்றவர்கள் யாவர்?

ஸ்ரீ முசுகுந்தமன்னன் இவ்விரதம் மேற்கொண்டு பலன் பெற்றார்.

6) முசுகுந்த மன்னனுக்கு முருகப்பெருமான்  எத்தகைய பலனை அருளினார்? 

" என்ற காலையில் முசுமுகம் உடையவன் எந்தாய்,
நன்று பாரெலாம் எனது செங்கோலிடை நடப்பான்... "

என்றபடி இவ்வுலகத்தையே ஆளும் வரத்தை முருகப்பெருமான் அளித்தார். அதோடு தமது இலட்சத்து ஒன்பது வீரர்களையும் முசுகுந்த மன்னனுக்கு படைத்துணையாக தந்தருளினார்.

எனவே ஷஷ்டி விரதம் மேலான பதவி / வேண்டிய பலன்களை தருவதோடு தக்க நேரத்தில் தகுந்தவர் துணையையும் தந்து வேலும் மயிலும் நம்மை காத்தருளும் என்பதாம்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
   கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்!

என்று கந்தப் பெருமானிடம் வேண்டி,நம்மை வழிநடத்தும் அனைத்து குருமார்களுக்கும் நன்றி கூறி பதிவை முழுமை செய்வோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கந்த சஷ்டி வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

வாழ்த்து: 

"ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்."

சர்வம் குஹார்ப்பணம்.


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியர் மாமுனிவர் வாக்கு - விதியை மாற்றக் கூடிய மகத்தான பாடல்..! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_29.html

 TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/10/2019.html

 சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_24.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

அகத்தியர் பதிகமும், கூடுவாஞ்சேரி அகத்தியர் ஐப்பசி ஆயில்ய ஆராதனை அழைப்பும்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_5.html

கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

 ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html

மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

No comments:

Post a Comment