"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, October 31, 2019

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)

 முருகன் அருள் முன்னிற்க !

 இந்த பதிவில் நாம் தரிசனம் செய்த அழகனின் அருள் நிலைகளை காட்சிகளாக இங்கே அறியத் தருகின்றோம். கந்தன் அருள் அனைவரும் பெறுவோம். இது ஒரு மீள்பதிவாகும்.

சென்னையில் உள்ள முருகன் கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பிரசித்தி பெற்றது. பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி, குன்றத்தூர் முருகன், வல்லக்கோட்டை முருகன்,திருப்போரூர் முருகன், அறுபடை முருகன் கோயில் என அனைத்து தலங்களிலும் முருகன் அருள் நம்மை திக்குமுக்காட வைக்கும். இதில் குன்றத்தூர் முருகன் தரிசனம் பெற உள்ளோம்.

சனிக்கிழமை காலை குன்றத்தூர் சென்றோம். அங்கே அருள்பாலிக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்று, கருணைக் கடலாம் கந்தனை வழிபட்டோம்.கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கு முருகப் பெருமான் வள்ளி,தெய்வானையுடன் வடக்கு நோக்கி இருக்கின்றார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கே அதிகம் வேண்டிக் கொள்கின்றார்கள் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாம்.













குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.ஹ்ம்ம்..குன்றத்தூரிலும் குமரனுக்கு கொண்டாட்டம் என்று நமக்கு தோன்றியது. கந்த ஷஷ்டி திருவிழாவினை ஒட்டி, இலட்சார்ச்சினை நடந்து கொண்டிருந்தது. உற்சவரை தரிசனம் செய்த காட்சிகள் தான் மேலே நீங்கள் பார்ப்பது.அழகன் அழகன் தான்.












குன்றத்தூர் முருகன் சேக்கிழார் குரு பூஜையின் போது, மலையில் இருந்து இறங்கி வந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி தரும் வைபவம் இன்றளவும் நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு சேக்கிழார் குருபூஜை நிறைவு பெற்று விட்டது என்று நாம் நினைக்கின்றோம். முருகன் அருள் முன்னிற்க அடுத்த ஆண்டு சேக்கிழார் குரு பூஜை காண வேண்டுகின்றோம்.

பொதுவாக குன்றத்தூர் ஒரு புனித பூமி. குன்றத்தூர் முருகன் கோயில், சேக்கிழார் பிறந்த ஊர். கந்தலீஸ்வரர் திருக்கோயில்,திருஊரகப் பெருமாள் கோயில் ,திருமுறை விநாயகர் கோயில் என்று திரும்பும் இடமெல்லாம் திருக்கோயில்கள் தான்.











கருணைக்கடலாம் கந்தனை நன்கு தரிசனம் செய்யுங்கள். உள்ளே மூலவரை பார்க்க சென்றோம். நாம் அப்படியே வெளியே வரும் சமயம், குருக்கள் தீபாராதனை காட்டினார். அப்படியே முருகனின் அழகில்,அருளில்,தமிழில்,அன்பில், கருணையில், ஆற்றலில் உறைந்து நின்றோம்.அடுத்து கந்த சஷ்டி திருவிழாவில் சிறப்பு சேர்க்கும் விதமாக, மாலையில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றது. நாம் சென்ற பதிவில் கந்த புராணச் சொற்பொழிவு கூடுவாஞ்சேரியில் உள்ள நந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறுவது பற்றிய அழைப்பிதழை இணைத்து இருந்தோம். அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காண்போம்.

மீள்பதிவாக:-

 கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_73.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

No comments:

Post a Comment