"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, February 3, 2022

திருவாசகத் தேன் - 01- சிவபுராணம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் திருவாசகம் பற்றி தொட்டு காட்ட உள்ளோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஜீவ வாக்கில் திருவாசகத்தின் சிறப்பை கூறி உள்ளார். அதனையும் இங்கே தந்துள்ளோம். குருநாதரின் அருளால் TUT கூட்டுப் பிரார்த்தனையில் தினமும் திருவாசகம் படித்து வருகின்றோம்.திருவாசகம் வேறு,சிவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றாக கொண்டு அடியார்கள் பூசை செய்வது வழக்கம். அன்பர்கள் அனைவரும் தத்தம் இல்லத்தில் திருவாசகம் வைத்திருப்பது நன்று. 

இனி குருநாதர் வாக்கினையும், திருவசாகத்தை அதன் பொருள் விளக்கத்தோடு எளிய முறையில் காண இருக்கின்றோம்.



அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


கலி / கலி புருஷன் நம் கண்ணுக்கு தெரியா நிரந்தர (Covid) கொரோனா. நமக்கு தெரியாமலேயே பாதிப்புக்கள் அதிகம்.

அதை அழிக்க ஒரே வழி திருவாசகம் ஒவ்வொரு இல்லத்திலும் ஓதுதல் அவசியம். ஒவ்வொரு இல்லத்திலும் மன நிறைவு, மகிழ்ச்சி எப்போதும் நிலைக்க திருவாசகம் ஒதுதல் அதி மிக அவசியம். உங்கள் இல்லத்தில் சிவன் அடியவர்களை அழைத்து அவர்களை கொரவித்து , ஈசனாக பாவித்து அன்னம் அளித்து வர, இறைவன் அருளால் மிக்க நலம் விழையும்.

இது தொடர்பாக இறை , குரு நாதர் நாடி வாக்குகள் நமது ஆழ் சிந்தனைக்கு இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நன்றி: - சித்தன் அருள் வலைதளம் , நாடி அருளாளர்  திரு.ஜானகிராமன் அய்யா  அவர்கள்.

=========================================================


20/10/21  பௌர்ணமி அன்று  ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரை காசி.

யானே என்பதற்கிணங்க யான் எழுதிய சிவ புராணத்தையும் ஓதுக.ஓதுக! ஓதுக! ஓதிக்கொண்டே இருக.

=========================================================

11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.

என் தந்தை ஈசனே திருவாசகத்தை எழுதினான் எழுதினான் என்பதற்கிணங்க அனைத்து விஷயங்களும் அதிலேயே அடங்கி உள்ளது.அது ( திருவாசகம் )  பெரும் பொக்கிஷம் ஆனாலும் அதனை கூட உணராமல் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

=========================================================

14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும். இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது. இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

- அகத்திய மஹரிஷி

=========================================================





திருச்சிற்றம்பலம்

ஆதி கணபதி பாதம் காப்பு
ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு.
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு
குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு"
சிறப்புப் பாயிரம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
01 திருவாசகம்-சிவபுராணம்பதவுரைபொருளுரை
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்கநாதன் = ஒலிக்கு மூலமாக விளங்கும் தலைவன்

தாள் = சிவபெருமான் திருவடிகள்
நமச்சிவாய என்னும் திரு ஐந்து எழுத்து என்றும் வாழ்க வாழ்க வாழ்க.
எம்பெருமான் சிவபெருமான் திருவடிகள் (தாள் ) வாழ்க வாழ்க வாழ்க.

இங்கு வாஅழ்க என்ற வாசகத்தில் அ கரம் இருப்பது முன்தர முந்தும் என்பதற்கு இணங்க இங்கு அளபெடை என்பது.சாதாரண வாழ்க என்பதில் இருந்து உயர்த்தி சொல்வது வா + அ = 2 1/2 மாத்திரை அளவு.

நமச்சிவாய என்ற அந்த ஒலியின் (நாதன் )தலைவன் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்கநீங்காதான் = நீங்காத என் இறைவன்கண்னை விழி மூடி திறக்கும் நுண்ணிய கால அளவினும் என் மனதில் இருந்து நீங்காத என் இறைவன் திருவடி வாழ்க வாழ்க வாழ்க.
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
கோகழி - திருவாவடுதுறை (கோமுத்தீஸ்வரர் (மூலவர்), கோகழிநாதர்(உற்சவர்))
கோ - பசு , கழி - கழிதல் பசுத்துவம் கலைய ஆட்கொண்ட


குருமணி = மேம்பட்ட ஆசிரியன், நிறமுடன் ஒளிபொருந்திய மணி,
குற்றமற்ற மணி ( திருவாவடுதுறை மாசிலாமணீசுவரர்)
திருவாவடுதுறை (கோகழிநாதர்) என்னும் திருத்தலத்தினை அரசாட்சி செய்துவரும் மாசிலாமணீசுவரர் இறைவன் திருவடிகள் வாழ்க வாழ்க வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஆகமம் = இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் , ஞானத்தின் நுண் பொருள்
அண்ணிப்பான் = அணுகி வருவோன் , இனிமை செய்வோன்
இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூலாகி ஞானத்தின் நுண் பொருள் ஆகி நின்று உயிர்களை இனிமையான அன்பால் ஆட்கொண்டு அருளும் இறைவன் திருவடிகள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 5ஏகன் = ஒன்றாக உள்ளவன்

அனேகன் = பலவாக உள்ளவன்
ஒருவர் ஆனவரும் ஒன்றுஅல்லாத பல உருவனும் ஆகிய எங்கும் நிறைந்த இறைவன் திருவடிகள் வாழ்க வாழ்க வாழ்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்கவேகம் = ஆணவ மலம் , பிறவி வெப்பம் , மனஓட்டம் , பிறவியின் கொடுமை

கெடுத்து = அழித்து

எனது இப்பிறவியின் கொடுமையை , மனஓட்டத்தை அழித்து என்னை ஆட்கொண்ட என் இறைவன் திருவடிகள் வெல்க வெல்க வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்கபிஞ்ஞகன் = கங்கையை தரித்த சடை முடியாகிய தலைக்கோலம் அணிந்தவன்.

பெய் = பொழி ( மழை பெய்கிறது)

கழல் = வீரக்கழல்; சிலம்பு; கால்மோதிரம்; செருப்பு; பாதம்;

பெய்கழல் = இறைவனின் திருவருள் பெய்யப்பெற்ற வீரக்கழல் ( கால் சிலம்பு ) உடைய திருவடி
இவ்வுலக மாய பிறப்பு மறுமுறை எடுக்காமல் நீக்கும் ( அறுக்கும்) கங்கையை தரித்த சடை முடியாகிய தலைக்கோலம் அணிந்த இறைவனின் திருவருள் பெய்யப்பெற்ற வீரக்கழல் ( கால் சிலம்பு ) உடைய திருவடிகள் வெல்க வெல்க வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்கபுறத்தார் = அன்பிற்கும் புறம்பாக உள்ளவர்கள் ( இறைவன் இடத்தில் அன்பு கொள்ளாமல் புறப்பொருள் மீது ஆசை கொண்டவர்கள்)

சேயோன் = எட்டாமல் இருப்பவன்

பூங்கழல்கள் = பொலிவு பெற்ற திருவடிகள்
இறைவன் இடத்தில் அன்பு கொள்ளாமல் புறப்பொருள் மீது ஆசை கொண்டவர்களுக்கு (அன்பிற்கும் புறம்பாக உள்ளவர்களுக்கு) எட்டாமல் இருப்பவனது பொலிவு பெற்ற திருவடிகள் வெல்க வெல்க வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்ககரம் குவிவார் = இரு கரம் கூப்பி இறைவனை உள்ளன்போடு வணங்குபவர்கள்

உள்மகிழுங் = உள்ளம் மகிழும்

கோன் = அரசன்
இரு கரம் கூப்பி இறைவனை உள்ளன்போடு உள்ளம் மகிழ்ந்து வாங்குபவர்களின் அரசன் திருவடிகள் வெல்க வெல்க வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10சிரம் = தலை
குவித்தல் = ஒடுங்குதல்
சிரங்குவிவார் = இறைவன் திருவடிகளில் சிரசு / தலை வைத்து வணங்குதல்

ஓங்குவிக்கும்= உயர்வடைய செய்தல்
சீர் = மிக்க புகழ் , அழகு , செல்வம் முதலிய பொருட்கள்
சீரோன் = மிக்க புகழ் , அழகு , செல்வம் முதலிய பொருட்கள் உடையவன்
இறைவன் திருவடிகளில் சிரசு / தலை வைத்து வணங்கும் சிவன் அடியவர்களை உயர்வடைய செய்யும் மிக்க புகழ் , அழகு , செல்வம் முதலிய பொருட்கள் உடையவன் இறைவன் திருவடிகள் வெல்க வெல்க வெல்க
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றிஈசன் = எப்பொருளையும் உடையவன். அனைத்து ஐஸ்வரியங்களும் உடையவன்இறைவன் அனைத்து ஐஸ்வரியங்களும் உடையவன் திருவடிக்கு வணக்கம். எனது தந்தை இறைவன் திருவடிக்கு வணக்கம்.
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றிதேசன் = ஒளிக்கு மூலமாக உள்ளவன்

சேவடி = சிவந்த திருவடி
ஒளிக்கு மூலமாக உள்ள இறைவன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி.
என் இறைவன் சிவன் சிவந்த திருவடிகள் போற்றி போற்றி போற்றி.
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றிநேயம் = அன்பு, பக்தி

நிமலன் = அழுக்கற்றவன்
அடியவர்கள் அன்பில் நிலைத்து நின்ற அப்பழுக்கற்ற இறைவன் திருவடி போற்றி போற்றி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றிமாயப் பிறப்பு = வஞ்சகமான இந்த பிறவிவஞ்சகமான இந்த பிறவியை அறுக்கும் என் அரசன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

( நிலையற்ற பொருட்களை நிலையானதாகவும் , நிலையானவற்றை நிலையற்றவனாவாகவும் ஆணவத்தை உடைய இந்த மக்களின் பிறவியை வேரோடு அறுக்கும் அரசனது திருவடிக்கு வணக்கம்)
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15சீரார் பெருந்துறை = திருப்பெரும்துறை (ஆவுடையார்கோயில்) திருத்தலம்திருப்பெரும்துறையில் எழுந்து அருளிய நமது இறைவன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றிஆர்தல் = நுகர்தல்
ஆராத = நுகர்ந்து அறியாத
நுகர்ந்து அருந்த இன்பம் - சிற்றின்பம்
நுகர்ந்து அறியாத இன்பம் - பேரின்பம்

ஆராத இன்பம் = நுகர்ந்து அறியாத இன்பம் - பேரின்பம்
இதுவரை என்னால் நுகர்ந்து அறியாத இன்பம் ஆகிய பேரின்பம் அளிக்கும் மலைபோன்ற என் இறைவன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்என் இறைவன் சிவபெருமான் எனது சிந்தனையின் நிலைத்து நின்ற காரணத்தினால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்தாள் = பாதம்என் இறைவன் அவன் திருவருளாலே அவன் திருவடியை நான் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னைஎனது சிந்தனை மகிழ சிவ புராணம் என்ற இந்த பாடலை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20முந்தை வினை = முற்பிறவியில் செய்த வினைகள்

ஓய = ஒழிய

உரைப்பன் = ஓதுவேன் / உரைப்பேன்

யான் = நான்
முற்பிறவியில் செய்த வினைகள் முழுவதும் ஒழிய ஓதுவேன் நான்
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்திகண்ணுதலான் = நெற்றிக்கண் உடைய சிவபெருமான்
நெற்றிக்கண் உடைய சிவபெருமான் என்னிடத்தில் வந்து தனது கருணையை காட்ட
எண்ணுதற்க்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சிஎண்ணுதற்க்கு எட்டா = சொல்வதற்கும் , காண்பதற்கும் , வணங்குவதற்கும் எட்டாத

எழில் = அழகு

ஆர் = பொருந்திய

கழல் = திருவடி

இறைஞ்சி = தாழ்ந்து
சொல்வதற்கும் , காண்பதற்கும் , வணங்குவதற்கும், நினைப்பதற்கும் எட்டாத அழகு பொருந்திய திருவடியை பணிந்து வணங்கி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்விண்ணிறைந்து = விண்ணுலகம் முழுவதும்

மண்ணிறைந்து = மண்ணுலகம் முழுவதும்

மிக்காய் = நிறைந்து

விளங்கொளியாய் = ஒளி வடிவாக விளங்குகின்ற இறைவன்


விண்ணுலகம் முழுவதும் மண்ணுலகம் முழுவதும் ஒளி வடிவாக நிறைந்து விளங்குகின்ற இறைவன்
எண் இறந்து எல்லை இல்லாதானே நின் பெரும் சீர்எண் இறந்து = கணித எண்கள் தொகையை கடந்துகணித எண்கள் தொகையை கடந்து எல்லை இல்லாமல் விரிந்த இறைவா உனது பெரும் மகிமை மிகுந்த புகழினை
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் 25பொல்லா வினையேன் = தீய வினைகளை உடைய நான்தீய வினைகளை உடைய நான் உனது அருள் இல்லாமல் உன்னை புகழும் முறையை அறியாதவன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், - பூத கணங்களாகியும்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆகி தேவராய்ச்வலிய அசுரராகியும், முனிவராகியும், தேவராகியும்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் 30செல்லாஅ = இயங்காமல் நிற்கும் பொருள்

சங்கமம் = இயங்கும் / அசைகின்ற பொருள்

இயங்காமல் நிற்கும் பொருள் மற்றும் இயங்கும் / அசைகின்ற பொருள் என்ற இரு\வகை பொருட்களின் உள்ளே உள்ள இந்த உலகத்தில்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்இளைத்தேன் = இறப்பது
எல்லா பிறவிகளிலும் அடியேன் பிறந்து இறந்தேன் எனது சிவ பெருமானே
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்வீடு = மோட்சம் என்னும் சிவபுரம்
உண்மையாகவே , உனது பொன் திரு அடிகள் கட்சி அடியேன் காணப்பெற்று இன்று மோட்சம் என்னும் வீடாகிய சிவபுரம் அடைந்தேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றஉய்ய = உய்யச் செய்வது என்பது அரிய பெரிய அடைவு (சாதனை) ஆகும்.

ஓங்காரமாய் = ஓம் எனும் பிரணவ ஒலியாகி
அடியேன் உயர்வடைய , பெரிய சாதனை அடையும் வகையில் ஓம் எனும் பிரணவ ஒலியாகி என் உள்ளத்துள் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்மெய்யா = உண்மையானவனே

விமலா = தூயவனே

விடைப்பாகா = ரிஷப காளையை வாகனமாக உடையவனே
உண்மையானவனே, தூயவனே , ரிஷப காளையை வாகனமாக உடையவனே , வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35ஐயனே என்று உன்னை துதிக்க வேதங்களாலேயே உயர்ந்து அளவிட முடியாத ஆழமாகவும், வேதங்கள் மூலம் அளவிட இயலாத அகலமாகவும், வேதங்களுக்கு அப்பாற்பட்டு நுண்ணிய சிறிய பொருளாகவும் இருப்பவனே
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலாவெய்யாய் = வெப்பம் உடையவனே ( சூரியன் போன்ற வெப்பத்தையும் )

தணியாய் = குளுமை உடையவனே ( சந்திரன் போன்ற குளிர்ச்சியையும் )

இயமானனாம் = வேள்வியின் தலைவன் , மனம் முதலிய கருவிகள் கொண்டு யாகம் செய்ப்பிப்பவன்

விமலா = தூயவன்
வெப்பம் உடையவனே ( சூரியன் போன்ற வெப்பத்தையும் ), குளுமை உடையவனே ( சந்திரன் போன்ற குளிர்ச்சியையும் ) ,வேள்வியின் தலைவன் , மனம் முதலிய கருவிகள் கொண்டு யாகம் செய்பவனே
, தூயவனே
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளிபொய் ஆனா மாயை எல்லாம் என்னிடம் இருந்து விலகிப்போக என் அருகில் வந்து அருள் செய்து
மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரேஉண்மை அறிவு ஆகி விளங்குகின்ற உண்மையான ஒளி விளக்கே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானேஎஞ்ஞானம் இல்லாதேன் = எந்த விதமான அறிவும் ,ஞானமும் இல்லாத என்னக்குஎந்த விதமான அறிவும் ,ஞானமும் இல்லாத என்னக்கு இன்பத்தை அருளும் என் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40அஞ்ஞானம் = அறியாமை

அகல்விக்கும் = விலக்கும் / நீக்கும்
அறியாமை என்ற அஞ்ஞானத்தை நீக்கும் நல்ல அறிவான என் சிவபெருமானே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்ஆக்கம் = தோற்றம்

அளவு = நிலைத்த நிகழ்காலம்

இறுதி = முடிவு

இல்லாய் = இல்லாதவனே

தோன்றுதல் , நிலைத்தல், முடிவுமாகுதல் என்ற மூன்று நிலைகளும் இல்லாதவனே , அனைத்து உலகங்களையும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்ஆக்குவாய் = படைப்பாய்

காப்பாய் = காத்து அருள்வாய்

அழிப்பாய் = அழிப்பாய்

அருள்தருவாய் = பிறவி எடுக்காமல் இருக்க அருள் தருவாய்


நீயே படைப்பாய் , நீயே காத்து அருள்வாய் , நீயே அழிப்பாய், நீயே பிறவி எடுக்காமல் இருக்க அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்போக்குவாய் = பலவகை பிறவிகளில் செலுத்தி போகங்களில் மூழ்கவைத்து

நின்தொழும்பின் = உனது திருவடி வணங்கும் சேவை தொண்டு
பலவகை பிறவிகளில் செலுத்தி என்னை போகங்களில் மூழ்கவைத்து பின்னர் அந்த போகங்களில் இருந்து என்னை உனது திருவடி வணங்கும் சேவை தொண்டுகளில் என்னை உள் புக செய்வாய்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானேநாற்றத்தின் நேரியாய் = பூவின் மனம்போல நுண்ணியனே

சேயாய் = அன்பர் அல்லாதவருக்கு தூரத்தில் உள்ளவனே

நணியானே =அன்பாக இருபவர்க்கு அருகில் உள்ளவனே
பூவின் மனம்போல நுண்ணியனே , உன்னிடம் அன்பு இல்லாதவருக்கு
வெகு தூரத்தில் உள்ளவனே , அன்பாக இருபவர்க்கு மிக அருகில் உள்ளவனே
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே 45மாற்றம் = சொல்

கழிய = கடந்து

மறையோனே = மறை பொருளாகிய இறைவனே

சொல் , மனம் இவைகள் எல்லாம் கடந்து நின்ற மறை பொருளாகிய வேதப் பொருளாய் உள்ள இறைவனே
கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்கறந்தபால் = பசுவில் கறந்த புதிய பால்

கன்னல் = கரும்பு சர்க்கரை ( இனிப்பு)
அடியவர்களின் சிந்தனையில் பசுவில் கறந்த புதிய பாலில் சர்க்கரையும் , நெய்யும் கலந்தது போல
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்றுதேன் ஊறி நின்று = தேன் போல ஊறி நிலைபெற்றுசிறந்த சிவன் அடியவர்களின் சிந்தனை உள்ளே தேன் போல ஊறி நிலைபெற்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்எடுத்த பிறவியை அடியோடு நீக்கும் எங்கள் பெருமானே
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்தநிறங்கள் ஓர் ஐந்து உடையாய் = பஞ்ச பூதங்களின் நிறம் ஐந்தும் (பொன்மை, வெண்மை ,செம்மை ,கருமை ,கருமை புகைமை) உடையவனே

விண்ணோர்கள் ஏத்த = வின்னோர்கள் துதிக்க
பஞ்ச பூதங்களின் நிறம் ஐந்தும் (பொன்மை, வெண்மை ,செம்மை ,கருமை ,கருமை புகைமை) உடையவனே, விண்ணோர்கள் உன்னை துதிக்க
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50வல்வினையேன் = வலிய வினை உடைய என்னை(தேவர்கள் உன்னை துதிக்கும் பொழுது அவர்களுக்கு காட்சி தராமல் நீ உன்னையே ) மறைந்திருந்தாய் எம்பெருமான் , வலிய வினை உடைய என்னை
மறைந்திட மூடிய மாய இருளைமாய = அறியாமை

இருளை = ஆணவம்
கடுமையான முன் ஜென்ம வினைகளில் சிக்கியிருக்கும் எனது அறியாமை, ஆணவம் ஆகிய மாய இருளை மூடி மறைத்து
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்அறம் = புண்ணியம்

பாவம் = பாவங்கள்

அருங்கயிறு = விதி

புண்ணியம் , பாவங்கள் என்னும் விதி என்ற அரும் கயிற்றால் என்னை நன்றா கட்டி
புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடிபுறந்தோல்போர்த்தி = வெளியே தோலை போர்வையாக போர்த்தி
புழு அழுக்குகளும் நிறைந்த எனது இந்த உடலின் வெளியே தோலை போர்வையாக போர்த்தி
மலம் சோறும் ஒன்பது வாயிற் குடிலைகுடில் = உடல்

ஒன்பது வாயில் = உடம்பில் உள்ள ஒன்பது துவாரங்கள் என்ற வாசல்

மலம் சோறும் நிறைந்த இந்த உடம்பில் ஒன்பது துவாரங்கள் என்ற வாசலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 55மலங்க = குலையம்படி

புலன் ஐந்தும் = ஐந்து புலன்கள்


குலையம்படி செய்து , புலன்கள் ஐந்தும் எனக்கு வஞ்சனையை செய்கின்றது
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்விலங்கு மனத்தால் = இறைவனை விட்டு விலகி செல்லும் மனம் ( இடையே நின்று தடுக்கும் மனதை உடையமையால் )

விமலா = தூய்மையானவனே


இறைவனை துதிக்கும் வழிபாடுகளில் இருந்து அடிக்கடி விட்டு விலகி செல்லும் எனது மனதால் , தூய்மையானவனே என் இறைவனே உன்
கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும்கலந்த அன்பு ஆகி = உள்ளத்துள் கலந்த அன்பு உடையவன் ஆகி

கசிந்து உள் உருகும் = நெகிழ்ந்து மனம் உருகி
உள்ளத்துள் கலந்த அன்பு உடையவன் ஆகி ,நெகிழ்ந்து மனம் உருகி
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கிநலந்தான் இலாத = உன்னிடத்தில் அன்பாக உள் உருகும் தன்மை இல்லாத

சிறியேற்கு = இச்சிறியவனுக்கு

நல்கி = அனைத்தும் கொடுத்து அருளி
உன்னிடத்தில் அன்பாக உள் உருகும் தன்மை இல்லாத இச்சிறியவனுக்கு அனைத்தும் கொடுத்து அருளி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டிநிலந்தன்மேல் வந்தருளி = இவ்நிலவுலகினிலே வந்து எனக்கு அருள் செய்து

நீள்கழல்கள் காட்டி = உனது நீண்ட கழல் அணிந்த திருவடிகள் காட்டி

இவ்நிலவுலகினிலே வந்து எனக்கு அருள் செய்து , உனது நீண்ட கழல் அணிந்த திருவடிகள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60நாயிற் கடையாய்க் கிடந்த = நாயை விட இழிந்தவனாக கீழ் நிலையில் கிடந்த

அடியேற்குத் = எனக்கு

நாயை விட இழிந்தவனாக கீழ் நிலையில் கிடந்த எனக்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனேதாயிற் சிறந்த = தாயினும் சிறந்த

தயாவான =அருள் வடிவான

தத்துவனே = உண்மையானவனே

தாயினும் சிறந்த அருள் வடிவான உண்மையானவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரேமாசற்ற சோதி = குறைபாடுஇல்லாத தூய்மையான

மலர்ந்த மலர்ச்சுடரே = ஒளி விரையப்பெற்ற பூ போன்ற ஒளி உருவம் கொண்டவனே
குறைபாடுஇல்லாத தூய்மையான ஒளி நிறைந்த பூ போன்ற ஒளி உருவம் கொண்டவனே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனேதேசனே = பல ஆலயங்களில் எழுந்து அருளிய இறைவனே

தேனா ரமுதே = தேன் போன்ற இனிமை நிறைந்த இப்பிறவி நீக்கும் மருந்து ஆனவனே

பல ஆலயங்களில் எழுந்து அருளிய இறைவனே ,தேன் போன்ற இனிமை நிறைந்த இப்பிறவி நீக்கும் மருந்து ஆனவனே , சிவபுர அரசனே , திருக்கயிலை அரசனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனேபாசமாம் = ஆணவம்,கன்மம் , மாயை என்ற மூன்று மலங்கள் என்ற

பற்றறுத்துப் = பற்றை நீக்கி

பாரிக்கும் = காப்பவனே ( காப்பாற்றும், தாங்கும்)

ஆரியனே = மேலான ஆசிரியனே

ஆணவம்,கன்மம் , மாயை என்ற மூன்று மலங்கள் என்ற பற்றை நீக்கி காப்பவனே , எனது மேலான ஆசிரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65நேச = அன்பு

நேச அருள்புரிந்து = உன் மீது அன்பு செய்வதற்கு ஏதுவாகி எனக்கு அருள் செய்து ,

நெஞ்சில்வஞ் சங்கெடப்= என் மனதில் உள்ள பொய் ஆகிய குற்றம் கெட

உன் மீது அன்பு செய்வதற்கு ஏதுவாகி எனக்கு அருள் செய்து , என் மனதில் உள்ள பொய் ஆகிய குற்றம் கெட
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறேபேராது = என் நாளும் வெள்ளம் போல் வற்றாமல்என் நாளும் வெள்ளம் போல் வற்றாமல் நின்ற பெரும் கருணை ஆன பெரிய ஆறு போல் ஆகிய சிவபெருமானே
ஆரா அமுதே அளவு இலாப் பெம்மானேஆரா அமுதே = தெவிட்டாத அமிர்தம் போன்றவனே

அளவிலாப் பெம்மானே = இயல்புகள் அளவு ஏதும் இல்லாத சிவபுரனே
தெவிட்டாத அமிர்தம் போன்றவனே , இயல்புகள் அளவு ஏதும் இல்லாத சிவபுரனே
ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானேஓராதார் = ஆணவத்தால் சிவன் பற்றிய அறிவுஇல்லாதவர்

உள்ளத்துள் = உள்ளத்தில்

ஒளியானே = ஒளியாக உள்ளவனே

ஆணவத்தால் சிவன் பற்றிய அறிவுஇல்லாதவர் உள்ளத்தில் ஒளிக்கும் ஒளியாக உள்ளவனே ( அதாவது ஆணவம் கொண்டவர்களால் சிவனை உள்ளத்தில் காண இயலாது )
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானேநீராய் உருக்கி = கல் போன்ற என்னை நீர் போல உருக்கி

என் ஆருயிராய் நின்றானே = எனது அருமை உயிர் போல நின்றவனே என் இறைவனே
கல் போன்ற என்னை நீர் போல உருக்கி எனது அருமை உயிர் போல நின்றவனே என் இறைவனே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70உள்ளானே = உடையவனேஇன்ப துன்பங்கள் இல்லாதவனே , அவற்றை உடையவனே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்யாவையுமாய் = எல்லா பொருள்களுமாகி

அல்லையுமாய் = அவனைத்து பொருள் அல்லாதவனாகி
அன்பர்களுக்கு அன்பு செய்பவனே , எல்லா பொருள்களுமாகி உள்ளவனே , அவனைத்து பொருள் அல்லாதவனாகி உள்ளவனே என் இறைவனே
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனேசோதியனே = ஒளி வடிவு ஆனவனே ,

துன்இருளே = செறிந்த இருள் வடிவு உடையவனே

தோன்றாப் பெருமையனே = இவ்வுலகத்தில் தோன்றாத பெருமை உடையவனே
ஒளி வடிவு ஆனவனே , செறிந்த இருள் வடிவு உடையவனே, இவ்வுலகத்தில் தோன்றாத பெருமை உடையவனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானேஆதியனே = மூல காரணமானவனே

அந்தம் = முடிவானவனே

நடுவாகி = நடுவுமாகியவனே

அல்லானே = இம்மூன்றும் இல்லாதவனே
மூல காரணமானவனே , முடிவானவனே , நடுவுமாகியவனே , இம்மூன்றும் ( ஆதி , அந்தம், நடு) இல்லாதவனே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானேஈர்த்து = கவர்ந்து இழுத்துஎன்னை உன் அருகில் கவர்ந்து இழுத்து என்னை முழுவதுமாக ஆட்கொண்ட என் தந்தை ஆகிய பெருமானே
கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தங்கருத்தின் 75கூர்த்த = கூறிய
கூறிய மெய்ஞ் ஞானத்தால் ஆராய்ந்து பார்த்து உணர்பவர்களின் உள்கருதில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வேநோக்கரிய நோக்கே = பார்ப்பதற்கு அரிதான காட்சி உடையவனே

நுணுக்கரிய நுண்ணுணர்வே = நுணுகி அறிதற்கு உடைய நுண்ணிய உணர்வுடையவனே
பார்ப்பதற்கு அரிதான காட்சி உடையவனே, நுணுகி அறிதற்கு உடைய நுண்ணிய உணர்வுடையவனே
போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனேபோக்கும் = இறத்தலும்

வரவும் = பிறத்தலும்

புணர்வும் = பொருந்தியிருத்தலும் ( சேர்த்தல் )

இறத்தலும் , பிறத்தலும் , புணர்தல் இல்லாத பெரும் புண்ணிய இறைவனே
காக்கும் எங் காவலனே காண்பரிய பேரொளியேகாண்பரிய = காண்பதற்கு அரிதானஎல்லாவற்றையும் காக்கும் எங்கள் அரசனே , காண்பதற்கு அரிதான பெரும் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்றஆற்று இன்ப வெள்ளமே = ஆற்று நீர் போல பெருகும் இன்ப வெள்ளம் போன்றவனே

அத்தா = அப்பனே

மிக்காய் = யாவற்றிலும் மேலானவனே
ஆற்று நீர் போல பெருகும் இன்ப வெள்ளம் போன்றவனே , என் அப்பனே , யாவற்றிலும் மேலானவனே உள்ளவனே
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80தோற்றச் சுடரொளியாய்ச் = நிலை பெற்ற தோற்றத்தை உடைய சுடர்விடும் பேரொளி ஆனவனே

சொல்லாத நுண்ணுணர்வாய் = சொல்லுதற்கு முடியாத நுண்ணிய உணர்வுடையவனே
நிலை பெற்ற தோற்றத்தை உடைய சுடர்விடும் பேரொளி ஆனவனே , சொல்லுதற்கு முடியாத நுண்ணிய உணர்வுடையவனே
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்த அறிவாம்மாற்றமாம் = மாறுபடும் இயல்பு

வையகத்தின் = இவ்வுலகத்தின்

அறிவாம் = அறிவாக விளங்கும்
மாறுபடும் இயல்பு உடைய இவ்வுலகத்தின் வேறு வேறு ஆக காணப்பட்டு வந்த அறிவாக விளங்கும்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்தேற்றனே = தெளிவானவனே
தேற்றத் தெளிவே = தெளிவின் தெளிவே

தெளிவானவனே , தெளிவின் தெளிவே , என் சிந்தனையுள்
ஊற்று ஆன , உண் ஆர் அமுதே ! உடையானேஊற்று ஆன = ஊற்று போல் சுரக்கின்ற ,

உண் ஆர் அமுதே = உண்ணப்படுகின்ற நிறைந்த அமுதமே

உடையானே = எல்லா பொருள்களும் உடையவனே

ஊற்று போல் சுரக்கின்ற , உண்ணப்படுகின்ற நிறைந்த அமுதமே , எல்லா பொருள்களும் உடையவனே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
விடக்கு = ஊன் / குறைபாடுகள்

வெவ்வேறு மாறுபாடுகள் உடைய குறைபாடுகள் உள்ள இந்த உடம்பின் உள்ளே அடியேன் கிடைக்க
ஆற்றேன், எம் ஐயா அரனே ஓ என்று என்று 85ஆற்றேன் = பொறுக்கமாட்டேன்

அரனே = சிவபெருமானே
பொறுக்கமாட்டேன் , எனது ஐயனே , சிவபெருமானே , ஓ என்று அழுது
போற்றிப் புகழ்ந்து இருந்து, பொய் கெட்டு மெய் ஆனார்பொய் கெட்டு = பொய் ஆகிய நினைவு செயல்கள் எல்லாம் கெட்டுவணங்கி புகழ்ந்திருந்து, பொய் ஆகிய நினைவு செயல்கள் எல்லாம் கெட்டு , மெய் ஆகிய நினைவு செயல்கள் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமேசாராமே = அடையாமல்திரும்பவும் இந்த நிலவுலகில் வந்து இரு வினை பிறவி அடையாமல்
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானேபுலக்குரம்பை = சிறு குடில் எனும் உடல்


வஞ்சகத்தை உடைய புலன்களின் வழி செல்லும் இந்த மாய உடலை அதன் பந்தத்தை அழிக்க வல்லவனே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனேநட்டம் = நடனம்நடு இரவினில் நடனம் (திரு கூத்தினை) பல காலம் ஆடும் தலைவனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90கூத்தனே = கூத்து இயற்றுபவனேதில்லையின் உள்ளே கூத்து இயற்றுபவனே , தெற்கே உள்ள பாண்டி நாட்டை உடையவனே
அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்றுஅல்லற் பிறவி = துன்பமான பிறவிதுன்பமான பிறவி அழிப்பவனே , ஓ வென்று அலறி
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்சொல்லற்கு = சொல்லி பாராட்டுவதற்குசொல்லி பாராட்டுவதற்கு அரியவனை இயன்ற மட்டும் புகழ்ந்து சொல்லி
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்பாடிய பாட்டின் பொருளையறிந்து பாடுபவர்கள்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்சிவபுரம் = சிவபெருமான் வசிக்கும் இருப்பிடம்செல்லுவார்கள் , சிவபுரத்தின் சிவபெருமான் திருவடியின் கீழ் சென்று நிலைத்த தன்மை அடைவர்
பல்லோரும் ஏத்தப் பணிந்து 95பல்லோரும் = அனைவரும் / சிவகணங்கள்

ஏத்தப் பணிந்து = புகழப்படும் , வணங்கப்படும்
சிவகணங்கள் வணங்கி துதிக்க
திருச்சிற்றம்பலம்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.


சைவ மகுடம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
இன்பமே சூழ்க!
எல்லோரும் வாழ்க!!
திருச்சிற்றம்பலம்
பதிப்பு உரிமை :- இந்த பதிப்பு / பதிவு சிவன் சொத்து.

No comments:

Post a Comment