"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, June 29, 2019

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு

 அன்பின் நெஞ்சங்களே...

சென்ற மாதப் பதிவுகளில் மோட்ச தீப வழிபாடு பற்றி ஆரம்பித்து இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு என்பது மிக மிக உயர்ந்த வழிபாடு ஆகும். விளக்கேற்றி வழிபாடு செய்தால்

நினைத்த காரியம் நடக்கும்
குடும்ப ஒற்றுமை ஓங்கும்
புத்திரதோஷம் நீங்கும்
சகல நன்மைகளும்,ஐஸ்வர்யமும் பெருகும்.

அதே போல், விளக்கேற்றும் திசை, எண்ணையின் பலன்கள் என்று பல செய்திகள் உண்டு, சாதாரண தீபம் தானே என்று எண்ணாதீர்கள். தீபங்கள் ஏற்றும் போது, அந்த இடத்தில உள்ள இருள் நீங்கி, ஒளி பரவுகின்றது. அதே போல் தீபம் ஏற்ற ஏற்ற நம் அக இருள் நீங்கி , அக ஒளி பெருகும். நம்மைப் பொறுத்த வரையில் முதலில் அகத்தியர் ஆயில்ய வழிபாட்டில் அபிஷேகத்தில் மட்டும் கவனம் செலுத்தினோம். பின்னர் குருவின் வழிகாட்டல் படி, தற்போது ஆயில்ய பூசை ஆரம்பிக்கும் முன்னர், அஷ்ட திக்கு விளக்குகள் ஏற்றி தான் வழிபாட்டை ஆரம்பிக்கின்றோம்.மேலும் தீப வழிபாடு என்பது "பஞ்ச பூத" வழிபாட்டின் தத்துவமாகும். தீப வழிபாட்டில் நாம் நமக்காக வேண்டுவதை விட, மற்றவர்களுக்காக வேண்டுவது சால சிறந்தது. அதுவும் மோட்ச தீப வழிபாடு இன்னும் பிரசித்தம் பெற்றது.

உடல் அற்ற உயிர்களுக்காக, நம் முன்னோர்களுக்காக, அவர்கள் அடுத்த நிலையில் முன்னேறும் பொருட்டு வேண்டுவதே இந்த வழிபாட்டின் சூட்சுமம் ஆகும். யோசித்துப் பாருங்கள், நாம் எப்படி இங்கே பிறந்தோம், நம் பெற்றோரால் தானே. அவர்கள்...நம் தாத்தா,பாட்டி போன்ற முன்னோர்களால் தான். இப்போது அவர்கள் இங்கே நம்முடன் இல்லை. ஆனால் அவர்களின் ஆன்மா இந்த நிலவுலகில் இருக்கலாம், அல்லது வேறேனும் உலகில் இருக்கலாம். இது போன்ற உடலேனும் சட்டை இல்லாத உயிர்களுக்கு உணவிட்டு, அவர்களை திருப்தி படுத்தினால் தான் நம் வாழ்க்கை மேன்மையுறும். இதற்காகத் தான் தர்ப்பணம், தானம்,திலா ஹோமம் என உண்டு. அதிலும் குறிப்பாக கருப்பு எள்ளை பயன்படுத்துவோம். இந்த கருப்பு எள் தான் முன்னோர்களுக்கு உணவாக கொடுக்கப்படும் என்பது ஐதீகம். அதனால் தான் மோட்ச தீபத்திலும் கருப்பு எள் சேர்க்கின்றோம்.

சென்ற பதிவில் 21 தீபத் திரிகள் தயார் செய்வது வரை நாம் கண்டோம்.மீண்டும் அங்கிருந்து தொடர்கின்றோம்.




தீபத் திரிகள் தயார் செய்யப்பட்டதும், கோயிலின் ஒரு ஓரத்தில் இரண்டு மரப் பலகைகள் வைக்கப்பட்டது. நாமும் அங்கே சென்றோம். ஒரு ஓரத்தில் 21 மண் சட்டிகள் இருந்தது. நாம் காலையில் தேநீர் அருந்தும் தட்டும்,கோப்பையும் போன்ற வடிவில் இந்த மண் அகல் இருந்தது.






பலகையின் மீது மஞ்சள் தெளித்தார்கள். 
அங்கிருந்த அம்மையாரை அழைத்து கோலம் போடப் பணித்தார்கள். அந்த கோலத்தின் மீது ஒரு பெரிய தழை வாழை இலை வைத்தார்கள்.






வாழை இலையின் மேல் பச்சரிசி தூவி நன்கு பரப்பினார்கள்.





 பின்னர் நவ தானியங்களும் பரப்பினார்கள்.



அதன் பின்னர் ஒவ்வொரு தட்டாக எடுத்து வைத்தார்கள்.








அடுத்து மோட்ச தீபமேற்ற நெய் கொண்டு வரப்பட்டது.சுமார் 10 லி நெய் தேவைப்படும் என்று பார்க்கும் போது தெரிகின்றது.
கருப்பு எள் வைத்து சங்கல்பம் செய்த காட்சி 

எள்ளை அப்படியே எடுத்து தட்டில் நிரப்பினார்கள் .








மூன்று வரிசைகளில் 7 தீபமாக மொத்தம் 21 தீபம் வைத்து, அதற்கான தட்டில் கருப்பு எள் கொண்டு நிரப்பப்பட்ட காட்சி. பார்க்கவே நமக்கு ஒரு சொல்ல இயலாத உணர்வாய் இருந்தது.


அனைத்து தட்டிலும் எள் நிரப்பிய பின்னர்,கோப்பை வடிவான அகல் மேலே வைக்கப்பட்டது.


அனைத்து பணிகளையும் அங்கிருந்த அகத்திய அடியார் குழு சிறப்பொடு செய்து கொண்டிருந்தார்கள். திரு.சூரிய நாராயணன் ஐயா நமக்கு அனைத்தும் விவரித்து கொண்டே ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தார். இப்போது திரியை மட்டும் அகல் விளக்கில் வைக்க வேண்டும். இதோ..நீங்களே பாருங்கள்.


ஒவ்வொரு திரியாக எடுத்து , நெய்யில் அமிழ்த்தி அகல் விளக்கில் வைத்தார்கள்.





தீபம் ஏற்ற வசதியாக  கற்பூரம் திரியின் நுனியில் வைத்தார்கள்.


அடடா..காணக் கண்கொள்ளா காட்சி..வித்தியாசமான அகல் விளக்குகள் நம் கண் முன்னே. உயர்ந்த திரி..அகண்ட அகல்... நமக்கு மோட்சம் தரப் போகும் தீபங்களின் அணிவகுப்பு. நம் மனம் ஒடுங்கியது.சுமார் 5 மணி அளவில் இந்த தயாரிப்பு வேலைகள் தொடங்கியது. நேரம் 6 தொட்டுக் கொண்டிருந்தது. அடியார் பெருமக்களும் வந்து கொண்டிருந்தார்கள்.









சுமார் 100 பேருக்கு  மேல் அடியார் பெருமக்கள் புடை சூழ, அந்த இடமே ..அகத்தின் வசத்தில்...அகத்தின் ஈசன் வசம் ஆனது.


ஏற்கனவே சென்ற பதிவில் இந்த மோட்ச தீப வழிபாடு எங்கே நடைபெறுகின்றது என அடுத்த பதிவில் தெரிவிப்பதாக சொன்னோம். நீங்களும் ஆர்வமாக இருப்பபீர்கள். அந்த ஆர்வத்துடன் அடுத்த பதிவு வரை காத்திருங்கள். அனைத்தும் தயார். தீபம் ஏற்ற வேண்டியது தான். இந்த வழிபாடு எப்படி சென்றது. என்னென்னெ வழிபாட்டில் சேர்த்தார்கள் என்பது போன்ற செய்திகளுக்கு அடுத்த பதிவில் விடை காண்போம். இன்னும் முன்னோர்களை உங்கள் மனதில் முன்னிறுத்துங்கள்.


மீள்பதிவாக:-

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/06/21.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

சென்னையில் நெரூர் - அனைவரும் வருக! வருக!! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_28.html

  இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

Friday, June 28, 2019

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம்

 அன்பின் நெஞ்சங்களே.

அண்மையில் நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால் நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.


 உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில் இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின் ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும் உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும் வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த  மோட்ச தீபம்  வழிபாடு ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும் இல்லையே....




இந்த மோட்ச தீப பூஜைக்கு என்று பச்சரிசி, பருத்திக்கொட்டை, நவ தானியங்கள்,பச்சைக் கற்பூரம்,கல் உப்பு, மிளகு, வெண்கடுகு எண்டு சுமார் 15 பொருட்களுக்கு மேல் தேவைப்படும். இவற்றை நன்கு நீரில் கழுவி, சூரிய ஒளியில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.




இந்த அளவுகோல் எதற்கு என்கின்றீர்களா? மோட்ச தீபத்திற்கு திரி தயார் செய்ய, காடாத்துணியை சரியாக அளவிடவே. நாம் இந்த தயார் நிலைகளை பார்த்துக் கொண்டு இருந்தோம். இந்த வழிபாட்டிற்கு கூடவே உதவி செய்ய ஐந்தாறு நபர்கள் தேவை. அப்பொழுது தான் இந்த படிநிலைகளை நாம் செய்ய முடியும். ஒவ்வொரு வழிபாட்டிற்கும் அப்படித் தான். நாம் வேண்டுவதெல்லாம், இது போன்ற எந்த பூசை என்று கேள்விப்பட்டாலும் முடிந்தால் பொருளுதவி செய்யுங்கள். இல்லையென்றால் உடலுதவி செய்யுங்கள்.






தீபத்திற்கு திரி தாயாராகி விட்டது.இனி தீபத்திரிக்கு உள் பொருட்களை இட்டு, ,முடிச்சு உண்டாக்க வேண்டியது தான்.





இந்த வழிபாட்டிற்கென 21 தீபங்கள் ஏற்ற வேண்டும். 21 தீபங்கள் என்பது நம்முடைய 21 தலைமுறையைக் குறிப்பதாகும்.  திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. 11 நாட்கள் எரியும் இந்த தீபத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். அந்த அளவிற்கு சிறப்பும் மகத்துவமும் வாய்ந்தது திருவண்ணாமலை திருக் கார்த்திகைதீப திருவிழா. திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களது 21 தலைமுறை பிறவா வரம் பெறும் என்கிறது புராணம். ஜோதிப் பிழம்பாக ஓங்கி ஒளிரும் அண்ணாமலையார் தீபத்தை வணங்குபவர்களுக்கு இம்மை நீங்கி மறுப்பிறப்பு என்பதே இருக்காது.
மேலும் இந்த வழிபாட்டில் நாம் நம் முன்னோர்கள் ( ஆறறிவு ) மட்டுமின்றி, ஏனைய உயிர்களுக்கும், உதாரணமாக ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையும் நாம் வழிபாடு செய்கின்றோம். 


இதோ, 21 தீபத் திரிகள் தயார் செய்யப்பட்டுவிட்டது. நன்கு இறுக்கி, நூலில் கட்டி, திரியைத் தயாரிக்க வேண்டும். நாம் பூசை முடியும் வரை தீபம் எரிய வேண்டும். திரி நன்கு நேராக இருக்க வேண்டும். கோணல் மாணலாக இருக்கவே கூடாது. தீபத்திரி பார்ப்பதற்கு லிங்கத் திருமேனியின் மேற்புறம் போல் இருக்க வேண்டும். சரி..இந்த வழிபாடு எங்கு செய்யப்படுகின்றது? 21 தீபத்திரிகளில் உங்கள் மனம் செலுத்தி ,உங்கள் முன்னோர்களை நினைத்து வையுங்கள். அடுத்த பதிவில் மோட்ச தீபம் ஏற்றுவோம். 
- எதிர்வரும் பதிவுகளில் மோட்ச தீபம் ஏற்றுவோம். 

 மீள்பதிவாக:-
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

சென்னையில் நெரூர் - அனைவரும் வருக! வருக!! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_28.html

  இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html




 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html