"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, May 30, 2020

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

சென்ற பதிவில் யார் உண்மையான பக்தன் என்று அறிந்தோம். இருந்தாலும் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. எப்படி செல்ல வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்கோவில் தரிசனம் முறைகள் உண்டு. இவற்றை நாம் கடைபிடிக்கின்றோமா என்பது நமக்குத் தெரியாது. சும்மா பத்தோடு பதினொன்று..அத்தோடு இது ஒண்ணு என்று தான் நாம் கோவிலுக்கு செல்கின்றோம். பண்டைய காலத்தில் கோவில்கள் கலை,உணவு,மருத்துவம்,ஆரோக்கியம் என அனைத்தும் வழங்கும் இறையின் மகத்துவம் மிக்க இயற்கையின் இன்பம் தருவிக்கும் இடங்களாக இருந்தன. ஆனால் இன்று மிகப் பெரும் கேள்விக்குறி தான் நம்முன் நிற்கின்றது.

கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? எப்படி வழிபட வேண்டும் என்பது போன்ற செய்திகளை இங்கே தொகுத்து தருகின்றோம்.




1. பிரகாரம் வலம் வரும் போது வேகமாக நடக்கக் கூடாது.

ஆனால் எங்கு சென்றாலும் நிதானமாக இருக்கும் நாம், கோவிலுக்கு சென்றால் மட்டுமே மிக மிக விரைவாக தரிசனம் பெற நினைக்கின்றோம். அதுவும் வரிசையில் நின்று தரிசனம் பெறுவது என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு சோம்பேறித்தனம், நேரமின்மை என அடுக்கடுக்காக காரணங்கள். நேரமின்மை என்று காட்டி குறுக்கு வழி தரிசனம் வேறு. கோவிலுக்கு செல்வதே நாம் ஒழுக்கத்தை கடைபிடிக்கவே. மற்றவர்கள் செய்கின்றார்கள் என்று நீங்களும் செய்யாதீர்கள்.

2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது.

இதுவும் மிக சரளமாக நடைபெறும் ஒன்று. கோவிலுக்கு சென்ற பின்பு தான் ஏகப்பட்ட பேச்சுக்கள். அலைபேசி எடுத்து பேசுதல் என தொடர்கிறது. இறைவனுடன் தொடர்பு கொள்ள செல்லும் போது, அலைபேசி போன்ற தொல்லை தரும் தொடர்புகள் எதற்கும்? அணைத்து விட்டு செல்லுங்கள். மனதை தூய்மைப் படுத்தி செல்லுங்கள்.

3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலைவிரித்து போட்டுக் கொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல், பாக்கு போடுதல்,பொடி போடுதல் போன்ற செய்கைகள் கூடவே கூடாது.

4. பிறப்பு,இறப்பு தீட்டுக்களுடன் செல்லக் கூடாது.

5. தலையில் தொப்பி, முண்டாசு அணியக் கூடாது. இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டுகின்றோம்.

6. கொடி மரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்க கூடாது.

7. கவர்ச்சியான ஆடைகள் அணியக் கூடாது. கண்ணை உறுத்தும் ஆடைகள், மேலை நாடு உடைகள் போன்றவற்றை அணிவதை தவிர்க்கவும்.

8. நந்தி தேவருக்கும், சிவலிங்கத்திற்கு இடையில் போகக் கூடாது.

9. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும். இதனை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சபரிமலை யாத்திரையில்  மாளிகை புரத்து அம்மனை தரிசனம் செய்து விட்டு, இதே போல் தான் பின்னாலேயே படி வரை வருவார்கள்.

10. ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது.








11. நீராடாமல் கை கால்களைச்  சுத்தம் செய்யாமல் செல்லக்கூடாது.

12. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்.

13. விளக்கேற்றும் போதும், விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது.

14. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக்கூடாது.

15. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடாது.

16. இறைவனின் மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனை செய்யக்கூடாது.

17. மணமில்லாத மலர்களை சமர்ப்பிக்க கூடாது.

18. கோவிலுள் குப்பை கொட்ட கூடாது.

19. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.

20. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லக் கூடாது.






21. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக்கூடாது.

22. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தக் கூடாது. இறைவன் பிரசாதத்தை பிறர் கால்களில் படுமாறு கீழே போடுவது நல்லதல்ல.

23. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு ஏற்றக் கூடாது.

24. ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது.

25. மேலே துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.

26. கைலியுடன் தரிசனம் செய்யக் கூடாது. படிகளில் தீபம் ஏற்றக் கூடாது. அப்படி ஏற்றுவதாக இருந்தால் முறையாக குருக்களிடம் அனுமதி பெற்று ஏற்றவும்.

27. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

28. பலிபீடத்திற்கு உள்ளே உள்ள சன்னதியில் யாரையும் வணங்கக் கூடாது.

29. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது. குறிப்பாக சொல்லப் போனால், ஆலயத்தினுள் மின்சாரம் செல்ல அனுமதிக்க கூடாது. ஆனால் இன்றைய காலத்தில் மின்சாரம் இன்றி என்ன செய்வது? அந்த காலத்தில் தீப ஒளி வெள்ளத்தில், கருவறையின் கதகத்தில் பெரும் தரிசனத்திற்கு இன்று நாம் பெரும் தரிசனம் ஈடாகுமா? நாமும் இந்த தவற்றை பல முறை செய்து இருக்கின்றோம். பின்னர் குருக்களிடம் கேட்டு அனுமதி வாங்கி தான் புகைப்படம் எடுத்து வருகின்றோம். ஆரம்ப கால பதிவுகளில் கோவில் கருவறை படங்கள் இருக்கும். நமக்கு இந்த செய்தி உணர்த்தப்பட்டதும் தல வரலாற்று புத்தகம் வாங்கி, அதனை தான் தற்போது வெளியீடு செய்து வருகின்றோம்.ஏற்கனவே சொன்னது போல், அலைபேசியை அணைத்து விட்டு, இறையோடு பேசுங்கள்.










30. அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, சோமவாரம்,பிரதோஷம்,சதுர்த்தி போன்ற தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. அவ்வாறு தேவைப்பட்டால் அந்த நாளுக்கு முந்தைய தினம் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.






அட.!.30 குறிப்புகள் வந்து விட்டது. மீண்டும் அடுத்த பதிவில் கோவில் வழிபாடு முறைகள் பற்றி உணர்வோம்.

மீள்பதிவாக:-

யார் உண்மையான பக்தன் ? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_30.html

பாடல் பெற்ற தலங்கள் (12) - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/04/12.html
பாடல் பெற்ற தலங்கள் (11) - திருநணா சங்கமேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/03/11.html

பாடல் பெற்ற தலங்கள் (10) - வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temples.blogspot.com/2020/02/10_13.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & 
ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html

பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html

தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & 
பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html

ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

யார் உண்மையான பக்தன் ?

அனைவருக்கும்  அன்பு  வணக்கம்.

இன்றைய பதிவில் ஒரு குட்டிக் கதை ஒன்றைப்  பார்க்கலாம். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்று எல்லாரும் சொல்வார்கள். அது போல் தான் இந்தக் கதையும். சிறிய கதை தான், தெரிந்த கதையாகவும் இருக்கலாம். ஆனால் கதையின் நீதி அளப்பரியது.

சரி. கதைக்குள் செல்வோம் வாருங்கள்.

வழக்கமாக சொல்ற மாதிரி..ஒரு ஊர்ல...இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டும் போது "இறைவா. உன்னை அனுதினமும் வணங்குகின்றேன்" என்று சொல்கின்றனர்.இதில் உண்மையான பக்தன் யார் எனபதே சந்தேகம். அவர்கள் இருவரும் நேராக கடவுளிடம் சென்று இந்த சந்தேகத்தை கேட்டனர்.

அப்போது இறைவன் "தேவதைகளே..! இந்த ஊரில் நீங்களே நேரில் சென்று அனைவரையும் விசாரித்து வந்து எனது உண்மையான பக்தன் யார் என்று நீங்களே சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார்.  உடனே அந்த இரு தேவதைகளும் புறப்பட்டு, அந்த ஊருக்கு சென்று ஒவ்வொருவராக விசாரிக்க தொடங்கினர்.

ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான்.

அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவிலுக்கு  போவேன்," என்றான்.

மற்றவன், "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றான்.

இன்னொருவன், "எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றான்.

இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, "அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.


தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

"தேவனே  ... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று  தேவதைகள் கேட்டன.

"கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.

"யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதைகள்.

கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.

உண்மை புரிந்தது தேவதைகளுக்கு. தேவதைகளுக்கு மட்டுமா புரிந்தது? நமக்கும் புரிந்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். ஏற்கனவே சொல்லியபடி சின்ன கதை தான். ஆனால் கதையின் நீதி பெரிது. நீங்கள் நினைப்பது போல, தினமும் கோயிலுக்கு சென்று வணங்கும் ஒவ்வொருவரும் உண்மையான பக்தர்கள் கிடையாது. இறைவனிடம் எந்த எதிர்பார்ப்புமின்றி, தன் கடமை செய்து, பிறருக்கு உதவும் நல்ல உள்ளமும், எண்ணமும் உடையவர்களே உண்மையான பக்தர்கள்.

பக்தர்கள் எனும் நிலையிலிருந்து நாமும் உண்மையான பக்தர்களாக மாறலாமே ?

 வாழ்க்கை படகில் ஓடிக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று ஆண்டுக்கு முன்பு அகத்தியர் வனம் அறிமுகம் கிடைத்தது. பல்வேறாய் தொண்டு செய்பவர்களுடன் அறிமுகம் கிடைத்தது. அன்ன தர்மம் செய்வது பற்றி நினைத்தேன். அகத்தியர் வனம் மலேசியா குழு அன்னதானம் செய்வதை பார்த்தேன். 

ஜீவ அமிர்தம், rightmantra சுந்தர் என நட்பு வட்டத்தின் அனுபவம் உதவியுடன் என் அலுவலக நண்பர்கள் உதவியுடன் (தமிழ்மணி, அரவிந்த், மணிகண்டன் & மனோ) 2016 ஆம் ஆண்டு  ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 10 உணவு பொட்டலங்கள் தயார் செய்து கூடுவாஞ்சேரி சுற்றி உள்ள பகுதிகளில் கொடுத்தோம். 

நமது முதல் அன்னதானம்  2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ம் தேதி (14.02.2016)  நடைபெற்றது. மார்ச் மாதம் மேலும் சில நண்பர்கள் கை கோர்த்தனர். அன்பு தொண்டு இல்லம், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் என  மாதம்தோறும் குருவருளால்  தொண்டு செய்தோம்.அப்போது நாம் வேறெதுவும் நினைக்கவில்லை. பின்னர் நண்பர்களின் துணையுடன் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT என்ற பெயரில் நம் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த பணி கோவில் சுத்தம் செய்தல், ஆசிரமத்திற்கு உதவுதல் என நீண்டது. நம் குழு சார்பில்  மரம் நடு விழா, மோட்ச தீபம், ஆலயங்களுக்கு தீப  எண்ணெய் வழங்குதல், உழவாரப்பணி, அன்னதானம், மாதந்தோறும் சித்தர்கள் வழிபாடாக ஆயில்ய ஆராதனை, மலை யாத்திரை என தொடர்ந்து வருகின்றோம். தற்போது 100 உறுப்பினர்களுடன் "தேடல் உள்ள தேனீக்களாய்" என்ற பெயருடன் இயங்கி வருகின்றோம்.

எப்படி ஆரம்பித்தோம் என்று இப்போது நினைத்து பார்த்தாலும் பிரமிப்பாய் உள்ளது. அனைத்திற்கும் காரணம் தேட நாம் தான் முயலுவோம். ஆனால் அந்த பரம்பொருள் நம்மை வழிநடத்தி வருவதை பார்க்கும் போது நாம் இன்னும் ஆன்மிகத்தில் இப்போது தான் காலடி எடுத்து  வைத்துள்ளதாக உணர்கின்றோம். நம் கையில் ஒன்றுமே இல்லை. அனைத்தும் குருமார்களின் ஆசியோடு தான் நடைபெற்று வருகின்றது.


TUT அன்னசேவை பற்றி இன்னும் பேசுவோம். இந்தப் பதிவுகளை பார்க்கும் போது நாம் இங்கே அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டும், கடந்து வந்த பாதை என்ற நிலையிலும் பார்க்க விரும்புகின்றோம். முதன் முதலாக கூடுவாஞ்சேரியில் சுமார் 10 உணவு பொட்டலங்கள் கொடுத்தோம். 

அடுத்து நம் அலுவலக நண்பர் திரு, சிவகுமார் அவர்களின் துணையுடன் வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்ன சேவை செய்து உள்ளோம். சுமார் 100 நபர்களுக்கு உணவு கொடுக்கும் பொருட்டு இந்த சேவை வேளச்சேரியில் தொடங்கி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வரை தொடரும். இது போல் சில மாதங்கள் அன்னசேவை தொடர்ந்துள்ளோம். இதற்கு நம்முடன் கரம் கோர்த்த அன்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நம்முடன் இணைந்த மலேஷியா அகத்திய அடியார் பெருமக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

அடுத்து நம்மால் கூடுவாஞ்சேரியில் இருந்து வேளச்சேரி வரை சென்று வர முடியவில்லை. கூடுவாஞ்சேரி வந்து ஓராண்டு கழித்து நமக்கு வள்ளலார் கோயில் பற்றி தெரிந்தது. பின்னர் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதியம் அன்னசேவை செய்து வந்தோம். இந்த சேவை மேலும் தொடர வேண்டும் இனி மாதம் தோறும் அமாவாசை அன்னதானம் என்று செய்து வந்தோம். அமாவாசை அன்னதானம் இன்று வரை நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது. அடுத்து அமாவாசை அன்னதானம் மற்றொரு வழியில் தன்னை பெருக்கி கொண்டது. ஆம். நம் தளத்தின் மூலம் நடைபெற்று வரும் மோட்ச தீப வழிபாடு  மூலம் அன்று சுமார் 100 பேருக்கு உணவு வழங்கி வருகின்றோம். நமக்கே இது ஆச்சர்யமாக உள்ளது? இந்த அமாவாசை மோட்ச தீப அன்னசேவைக்கு சுமார் ரூ.3000 ஆகும். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தொண்டு நடைபெற்று வருகின்றது.

இப்படியே தொடர்ந்த அன்னதானம் மேலும் பல தன்னலமற்ற சேவை அமைப்புகளோடு இணைந்து நடந்து வருகின்றது. கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில், மதுரை ஸ்ரீ அகத்தியர் இறையருள் மன்றம், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என தொடர்ந்து வருகின்றது. இங்கு சிலவற்றை தான் குறிப்பிட்டு கூறியுள்ளோம். இந்த 2020 ஆம் ஆண்டு அன்னசேவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செய்தோம். நம் தளத்தின் ஆணிவேராக அன்னசேவை தான் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இது தவிர சில நாட்களில் சிறப்பு அன்னதான சேவையும் நம் தளம் சார்பில் நடைபெறும்.குறிப்பாக ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் இது போன்ற சேவை தொடரும்.

ஆங்..சொல்ல மறந்து விட்டோம். சென்ற 2019 ஆண்டில் புரட்டாசி அமாவாசை ஒட்டி நம் தளம் சார்பில் மகாளயபட்ச நாட்கள் முழுதும் இது போன்ற சேவை செய்தோம். 








இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு அன்னசேவையின் போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.

எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.

வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,

அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 

நன்றி 

மீண்டும் ஒரு முறை  வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html


சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

Thursday, May 28, 2020

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

 தேவாரம் - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

பொதுவாக நாம் தற்போது அதிகமாக வாழ்த்துச் செய்தி கூறும் போது வாழ்க வளமுடன்! என்று கூறி வாழ்த்தி வருகின்றோம். அதனையும் தாண்டி சைவத்தில் கற்றுக் கொண்டு வரும் போது "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் "என்ற பதிகம் கண்டோம். இப்படியொரு உயர்ந்த வாழ்த்துச் செய்தி நம் தமிழ் மொழியின் மேன்மையையும், சைவத்தின் மகத்துவத்தையும் உணர்த்தி வருகின்றது. ஒரு முறை நாம் இப்படி வாழ்த்திய போது,  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் " என்றால் என்ன? என்று நம்மிடம் சிலர் வினா எழுப்பினர். முடிந்த வரை குருவருளால் இந்தப் பதிவில் விடை காண முயற்சி செய்கின்றோம்.

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் "



பொதுவாக இந்த உலகத்தை மண்ணுலகம் என்று கூறுகின்றோம். நிலமகள் மண்ணால் ஆனவள். மண்ணால் ஆன இந்த உலகத்தை மண்ணுலகம் என்கின்றோம், பூமி என்று கூறுவதால் பூவுலகம் என்றும் கூறலாம். நாம் வாழ இந்த மண் அவசியம். நாம் நமக்கென்று ஒரு வீடு கட்டி இந்த மண்ணில் வாழுகின்றோம். அது மட்டுமா? மண்ணில் இருந்து தான் விவசாயத்தின் மூலம் உணவு பெறுகின்றோம். நாம் உண்ணும் உணவில் மண் அடக்கம். இந்த மண்ணின் மகத்துவம் தான் என்னே? மண்ணிற்கு ஆக்க சக்தியும் உண்டு, அழிக்கும் சக்தியும் உண்டு. அனைத்தையும் அழித்து மக்கச் செய்யும் மண் விதையை மட்டும் அழிப்பதில்லை; மாறாக அவற்றை வளர்க்கின்றது. ஆறறிவு கொண்ட மனிதன் மட்டுமல்ல; ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் மண்ணில் தான் வாழ்கின்றன. இந்த பூமியை விட்டால் நாம் வேறெங்கும் சென்று வாழ முடியாது..இது தான் மண் தத்துவம். மண்ணில் ..இந்த பூமியில்..இந்த பூவுலகில்..உயிர் உலகில்...மெய் உலகில்...இயற்கை உலகில் ...அனைத்தும் சங்கமம்.

அடுத்து வாழலாம் என்ற சொல்லிற்கான விளக்கம்.

நாம் அனைவரும் இந்த மண்ணில் என்ன செய்கின்றோம்? வாழ்ந்து வருகின்றோம். எது வரை நாம் வாழலாம்? நம் மூச்சு நிற்கும் வரை, அதாவது இறக்கும் வரை, பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட கால நம் இருப்பே வாழ்தல் என்று கொள்ள முடியும்.ஆனால் நாம் எப்படி நம் இருப்பை இங்கே விட்டு செல்ல இருக்கின்றோம். பாரதியின் வரியில் "தேடிச் சோறு நிதந் தின்று" வாழ்வதல்ல. வேடிக்கை மனிதர் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வாழ்வது தான் வாழ்க்கை. வெந்ததை தின்று விதி வந்து சாவது அல்ல வாழ்கை. இது ஒரு பிழைப்பு. நாம் அனைவரும் வாழ்வதாக நினைத்தால் அது ஆகப் பெருந்தவறு. நாம் பிழைத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். நம் தாத்தன், பாட்டன், முப்பாட்டன் போன்றோர்களே இங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பது கண்கூடு. புரியும்படி சொல்வதானால் நம் வாழ்வின் நோக்கம்  மருத்துவமனை செல்லாது செத்துப் போகாமல் இருப்பது. முடியுமா நம்மால் ? வார்த்தையை நன்கு கவனியுங்கள்..செத்து போதல் வேறு; மரணித்தல்,இயற்கை எய்துதல், உயிர் நீத்தல், இறைவனடி சேர்தல் இவை ஒவ்வொன்றும் வேறு ; வேறு ;அப்படியானால் நாம் பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி நகர வேண்டும். வாழ்தல் எப்படி இருக்க வேண்டும்? அஞ்சாது இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; உற்றார் உறவினர், நட்போடு இணைந்து இருக்க வேண்டும்  இறையோடு இணைய வேண்டும். இது தான்..வாழலாம் என்ற சொல் கூறும் விளக்கம். இன்னும் ஆழ்ந்து பார்த்தோமானால்,




அதிவீரராம பாண்டியர் என்ற புலவர் எழுதிய நூல்களுள் ஒன்று காசி காண்டம் என்பதாகும். இதனுள் மக்களின் கடமைகளை, நெறிகளை அவர் தொகுத்து தந்துள்ளார்.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒன்பது சக மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும்; ஒன்பது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் காசி காண்டத்தில் குறிப்பிடுகின்றார்.

ஆசிரியர், தாய். தந்தை, மனைவி, குழந்தைகள், விருந்தினர்கள், காலையும் மாலையும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், புதியவர்கள், ஆகியோர்களையும் ஒளியையும் பாதுகாப்பவனே மனிதர்களில் பயன் மிக்கவன். இவ்வொன்பதையும் பாதுகாக்காதவன் மக்களுள் பயன் இல்லாதவன் என்று காசிக்காண்டம் குறிப்பிடுகின்றது.

குரவனைத் தாயைத் தந்தையை மனைவியை
குற்றமில் புதல்வனை விருந்தை
இரவு நண்பகலும் வழிபடுவோனை
அதிதியை எரியினை ஈங்குக்
கருதும்ஒன் பதின்மர் தம்மையும் நாளும்
கருணைகூர்ந்து இனிது அளித்திடாது
மருவும்இல் வாழ்க்கை பூண்டுளோன் தன்னை
மக்களுள் பதடிஎன்று உரைப்பர்

என்பது காசி காண்டத்தில் இடம்பெறும் பாடலாகும். இல்வாழ்க்கை மேற்கொள்பவர்களின் கடமை என்பது காசி காண்டம் காட்டும் ஒன்பதையும் பாதுகாத்து வாழும் வாழ்க்கை ஆகும். இந்தப் பாடலில் குரவர் என்ற நிலையில் ஆசிரியர்  ஒன்பது பேருள் முதல்வராக வைத்துப் போற்றப்படுகிறார். சமுதாயத்தில் ஆசிரியர் என்பவருக்குத் தரப்பட்டுள்ள இடம் எத்தகைய பெருமை வாய்ந்தது என்பது புலனாகும். பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் பாதுகாப்பது என்பது அடுத்து இடம்பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி, மக்கள், விருந்து என்று தொடரும் இந்தப் பட்டியலில் உள்ளவர்களை நாளும் கருணை கூர்ந்துப் பொருள்கள் அளித்து மகிழ்வுடன் பாதுகாத்து வந்தால், அதுவே மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்ததற்கான அடையாளம் ஆகும். இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றுவதே வாழலாம் என்பதன் கருத்தும் ஆகும்.

இதுபோன்று இல்வாழ்க்கை வாழுகின்ற மனிதனுக்குத் தேவையான ஒன்பது குணங்களையும் காசிகாண்டம் எடுத்துரைக்கிறது.

மெய்ம்மை, நற்பொறை, வெங்கொலை செய்யாது ஒழுகல்
மேவும் எக்கரணமும் அடக்கல்
செம்மைசேர் தூய்மை வரைவுறாது அளித்தல்
சீற்றம் நீங்குதல் களவின்மை
அம்மவென்று எவரும் அரற்றுதல் பரியா
அருள் செயல் ஆய ஒன்பானும்
வம்மென அமரர் எதிர் புகுந்து அழைப்ப
வானிடை விடுத்த தூது ஆமால்

என்பது இல்லறத்தாருக்கு வேண்டிய ஒன்பது குணங்களையும் எடுத்துரைக்கும் பாடலாகும்.


மனிதனாக வாழ்கின்றவனுக்குத் தேவையான குணங்கள் ஒன்பது என்பது அதிவீரராம பாண்டியரின் தெளிந்த கருத்தாகும். உண்மையைப் பேசுதல், பொறுமை, கொல்லாமை, புலன்அடக்கம், தூய்மை, மற்றவர்களுக்கு மனம் கோணாமல் பொருள்களை அளித்தல், கோபத்தை அடக்குதல், மனத்தால் கூட பிறர் பொருளை அடைய எண்ணாமை, மற்றவர்களின் துயரைக் கண்டு அதனைத் துடைத்தல் என்ற ஒன்பது குணங்களை உடையவனே மனிதன் எனப்படுவான். மனம் இருப்பவன் அனைவரும் மனிதன் அல்ல; மனத்தோடு வாழ்பவனே மனிதன் ஆவான். அடேங்கப்பா..வாழ்தலில் இவ்வளவு இருக்கா?என்று மூக்கின் மேல் விரல் வைப்பது நமக்குத் தெரிகின்றது, இந்த ஒன்பதும் வேண்டாம்.இன்னும் சுருக்கமாக கூறுங்கள் என்பது நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது.

ஒருவன் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிர் உணர்ச்சிக்கோ துன்பம் தராத செயல்களும்,துன்பத்தைப் போக்கும் செயல்களும் கொண்டு இருந்தால் அவன் வாழ்வான் என்று பொருள் கொள்க.

மாறாக துன்பம் தரும் செயல்களை செய்து வந்தால் அவன் இங்கு பிழைத்துக் கொண்டிருக்கின்றான் என்று பொருள் கொள்க!

அடுத்து நாம் பார்க்க இருப்பது "நல்ல வண்ணம்"

இது வாழ்தலை இன்னும் சிறப்பாக வாழ வேண்டும் என்று உயர்வாக வாழ வேண்டும் என்ற நோக்கில் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பூமியில் நாம் நல்லபடியாக சிறப்பாக வாழலாம் என்று "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் " எடுத்துரைக்கின்றது. சரி...இந்த பதிகம் எப்போது, எங்கே, யாரால் பாடப்பட்டது போன்ற தகவல்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே



 திருச்சிற்றம்பலம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-


கணபதியே வருவாய் அருள்வாய் ! - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Wednesday, May 27, 2020

கணபதியே வருவாய் அருள்வாய் ! - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக நிறைவு பணியில் இருப்பதால் மீண்டும் பொருளுதவி கேட்டு இன்றைய பதிவில் தொடர்கின்றோம். இந்தப் பதிவில் நாம் இரண்டு வித உதவிகளை கேட்கின்றோம். ஒன்று பொருளுதவியாக வேண்டுகின்றோம். பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் தாராளமாக பொருளதவி செய்து எம் பெருமான் அருள் பெற வேண்டுகின்றோம்.  இரண்டாவது உங்களிடம் அருளுதவி எதிர்பார்க்கின்றோம். இதனை நீங்கள் உங்கள் உடல் உழைப்பால் செய்யலாம். இதனை அன்பர்கள் கூட்டுப் பிரார்த்தனையாக செய்திட உங்களிடம் வேண்டுகோள் வைக்கின்றோம்.

முதலில் கூட்டுப்பிரார்தனை பற்றிய செய்தியை தங்களிடம் பகிர விரும்புகின்றோம்.
                           

சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் :



இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில், மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் திருக்கோவில். திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்கக்கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய்  இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டப்படுகின்ற ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. தற்போது திருப்பணிக்கு நிதி தேவைப்படுகிறது.

சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 17/05/2019(வெள்ளி)

ஈரோடு - அந்தியூர் முருகப்பெருமான் ஜீவநாடியில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமான் உரைத்த ஸ்தல புராணம் :

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம். பதினெண் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும். அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம். பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம். சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப்பட்ட திருத்தலம். உன்னத சக்திகள் நிரம்பப்பெற்ற  தலம். பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும், அது தக்க காலத்தில் வெளிப்படும். இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும். குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன், ஆடலரசன், ரிஷிகள், நவகோடி சித்தர்கள், லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். திருப்பணியில் பங்கு கொள்ளும் லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மீகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும். போகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில். தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில் " என்று  ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி ஜீவநாடியில் முருகப் பெருமான் உரைத்தார்.










மேலே நீங்கள் காண்பது சோம வார பிரதோஷ தரிசனம் ஆகும். 


முருகப்பெருமான் ஜீவநாடி வாக்கு :

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஷேத்ரம் நம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

பொருள் கேட்போருக்கு  பொருளும் ,

அருள் கேட்போருக்கு அருளும்,

பிள்ளை கேட்போருக்கு பிள்ளையும்,

தொழில்  கேட்போருக்கு தொழிலும்,

பணம் கேட்போருக்கு பணமும்,

முக்தி கேட்போருக்கு முக்தியும்,

என அவரவர் விருப்பம் போல்  நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் படி அளப்பார்.

இந்த ஆலயப்பணியில் இணைந்து திருப்பணி செய்யும் மக்களுக்கு, ஆதிரை மண்டலத்தில்(ஒரு நட்சத்திர தொகுதி) அவர்கள் பெயரை பதிய வைப்பார் ஈசன்.

அடுத்த ஜென்மத்தில் பிறப்பில்லா நிலை அடைவர்.

ஆலயத் திருப்பணி முன்நின்று செய்யும் மக்களுக்கு ஈசனின் ஆசி பரிபூரணமாக உண்டு.

குடமுழுக்கு சிறப்பாக நடைபெற, தடைகள் விலக குழுவினர்கள் இணைந்து, அவரவர் இல்லத்திலே அமர்ந்து, விநாயகரை பிராத்தனை செய்து, வாரந்தோறும் 
 வியாழக்கிழமை விநாயகர் அகவலை ஓத வேண்டும்.

குடமுழுக்கு நாள் வரை அடியார்கள் ஒன்றிணைந்து, குருவாரம் தோறும் 
 விநாயகர் அகவலை ஓதி வர வேண்டும்.

இவ்வாறு முருகப்பெருமான் ஜீவநாடியில் உரைத்துள்ளார்.

ஆலய குடமுழுக்கு சிறப்பாக நடைபெற, நம் குழுவில் உள்ள அடியார்கள் ஒன்றிணைந்து,  வாரந்தோறும் வியாழக்கிழமை விநாயகர் அகவலை ஓத ஓத, விநாயகப் பெருமானே முன்னின்று ஆலய குடமுழுக்கை நடத்தி வைப்பார்

விநாயகர் அகவலை ஓத அடியார்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!

பிராத்தனையாக!

"ஓம் கம் கணபதியே நம"!

"விநாயகப்பெருமானே! ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலய திருக்குடமுழுக்கிற்கு இருக்கும் தடைகளை வினைகளை விலக்கி, திருக்குடமுழுக்கு சிறப்பாக நடைபெற  அருள்புரிந்து, விநாயகப் பெருமானே தாங்களே முன்னின்று திருக்குடமுழுக்கை நடத்தி வைப்பீர்களாக!" என்று திடமான பிராத்தனை செய்துவிட்டு,

பின், விநாயகர் அகவலை ஓத வேண்டும்!

விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும் வழிபாடு ஆகும். இதில் பல சூட்சும செய்திகள் அடங்கியுள்ளதாக நாம் நினைக்கின்றோம். மீண்டும் ஒரு அற்புதமான வாக்கு ஒன்றையும் பகிர்கின்றோம்.


சில வருடங்களுக்கு முன்பு குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் விநாயகர் சதுர்த்தி நன்னாள் அன்று மூத்தோன் குறித்து உரைத்த அற்புதமான வாக்கு.

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமாய் இஃதொப்ப எமது வாக்கை கேட்க வேண்டும் என்று எண்ணி, அஃதும், முன்னர் கூறிய வாக்கினை மீண்டும் கேட்க வேண்டும் என எண்ணி, அதனை பலருக்கும் பகிர வேண்டும் என எண்ணி, இன்னவன் இதழ் ஓதுபவன் இஃதொப்ப ஓலை தன்னை எடுத்திட்டாலும் இஃதொப்ப செயல் சிறப்பு என்று கூறுவதற்கு இல்லை. இல்லையப்பா, ஒரு முறை கூறிய வாக்கை அதைப்போல மீண்டும் கூற ஜீவ அருள் ஓலையில் விதி. என்றாலும் சில சமயம் கூறுகிறோம், சில காரணங்களுக்காக.

இருப்பினும் அதனையே வலிமையாய் பிடித்துக் கொண்டு அடிக்கடி எமை நாடுவது சிறப்பல்ல. என்றாலும் இதன் மேலும் பிரம்ம முகூர்த்த நாழிகை பூர்த்திக்கு பிறகும் கேட்பது சிறப்பல்ல என்றாலும் இஃதொப்ப ஆர்வம் கொண்ட சேய்கள் அஃதொப்ப சேய்கள் தன் மன வருத்தம் கொண்டிடாமல் இருக்க இஃதொப்ப நல்விதமாய் இன்று மட்டும் இஃதொப்ப சில்வாக்கை கூறுகிறோம், இறையருளால்.

இறையருளால் இத்தருணம் இதனை கூறுவதால் இதனையே அன்றாடம் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வது சிறப்பல்ல என்பதை புரிந்து கொள்வது எம் சேய்களுக்கு அவசியம் ஆகும். ஆகுமப்பா, இஃதொப்ப நல்விதமாய் பரிபூரண சரணாகதி இறை வழிபாடும். தன்னலம் கருதா தொண்டும், சாத்வீக எண்ணமும், வாழ்வும் அவசியம். இஃதொப்ப வழியில் எமை நாடும் சேய்கள் நாளும் செல்ல இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். 

இயம்புகிறோம், சில்வாறாய் முன்னர் கூறிய மூத்தோன் குறித்த வாக்கு தன்னை, ஆனாலும், சற்றே இத்தருண கிரக நிலைக்கு ஏற்ப மாற்றித்தான், மாற்றித்தான் கூறுவதால் அஃதொப்ப வாக்கு வேறு, இஃதொப்ப வாக்கு வேறு என எண்ணாமல் அனைத்தும் இறையருள் என்று எண்ணுவதே சிறப்பு அப்பா. இஃதொப்ப நன்றாய் எமது வாக்கை புரிந்துகொண்டு இறை வழியில் வர நல்லாசிகள். எம் சேய்கள் அனைவருக்கும்.

மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
இம்மண்ணின் மூத்தோனை வணங்கு. 
மூத்தோன் என்றால் வேழ முகத்தோன் என்ற பொருள் கொண்ட அஃதொப்ப மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.  
எதற்கும் முன்பாக, எச்செயலுக்கும் முன்பாக மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப தடைகள் வாராது செயல் நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, 
என்றென்றும், எதற்கும் முன்மாதிரியாக மூத்தோனை வணங்கு. நல்விதமாய் செயல் நடக்க மூத்தோனை வணங்கு.
நற்காரியம் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு. 
நலம்தான் தொடர என்றென்றும் மூத்தோனை வணங்கு. 
நன்மைகள் நாளும் பெருக நாள்நாளும் மூத்தோனை வணங்கு. 
நாள் நாளும் பாவ வினைகள் குறைய நன்றாய் மூத்தோனை வணங்கு. 

நவில்கின்றோம், விருக்ஷத்தின் அடியில், வன்னி விருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருக்கும் மூத்தோனை வணங்கு. தேக நலம் பெருகும். 
நவில்கின்றோம் நன்றாய், விருக்ஷத்தின் அடியில், அரச விருக்ஷத்தின் அடியில் உள்ள மூத்தோனை வணங்கு. அஃதும் தேக நலத்தோடு வம்ச விருத்தியையும் நல்கும். 
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நன்றாய் இஃதொப்ப கிழக்கு திசை பார்த்த மூத்தோனை வணங்கு. நல்விதமாய் இஃதொப்ப லோகாய வெற்றிகள் கிட்ட வாய்ப்பை நல்கும்.
நவில்கின்றோம், மேல் திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்து கொள்ள, எதனையும் நன்றாய் புரிந்துகொள்ள அஃது உதவுவதோடு தேகத்தையும் காக்கும். 
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நன்றாய், தென் திசை பார்க்க உள்ள மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்துகொள்ளலாம். இஃதொப்ப அச்சங்கள் குறைய, எஃது குறித்தும் அச்சங்கள் குறைய இஃதொப்ப வழிபாடு உதவும். 
நவில்கின்றோம், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வட திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. இஃதொப்ப நன்றாய், வட திசை நோக்கிய மூத்தோனை வணங்க நாள் நாளும் செல்வம் பெருகுவதோடு நன்றில்லா ருண குழப்பம் தீருமப்பா.

இஃதொப்ப கூறுகிறோம் மீண்டும், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நாள் நாளும் காரியங்கள் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
எஃதொப்ப செயல் துவங்கும் முன்னர் மூத்தோனை வணங்கு. எச்செயல் ஆனாலும் அதற்கு முன் மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப நன்றாய் பயணத்தின் முன் மூத்தோனை வணங்கு. இயம்புகிறோம், சுப மங்கள நிகழ்வுக்கு முன்னால் மூத்தோனை வணங்கு. 
இயம்புகிறோம் மேலும் நன்றாய், காரிய தடை கண்டு கலங்காமல் இருக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
மூத்தோன் என்னும் வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு.

கூறுகிறோம் நன்றாய், வாசியோகம் சித்திக்க மூத்தோனை வணங்கு. 
நல்விதமாய் வாழ்வு நிலை சித்திக்க மூத்தோனை வணங்கு. நவில்கின்றோம் நன்றாக காரியங்கள் யாவும் வசப்பட்டு நிச்சயமாய் அனைத்தும் கிட்ட மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப கூறுகிறோம், உள்ளிருக்கும் ஆத்ம ஒளியை தரிசிக்க மூத்தோனை வணங்கு. 
உள்ளே இருக்கும் அஃதொப்ப ஒளி தன்னை உணர மூத்தோனை வணங்கு. 
கூறுகிறோம், அனைத்து கிரக தோஷம் குறைய மூத்தோனை வணங்கு. 
குறிப்பாக, சிகியின் தாக்கம் குறைய மூத்தோனை வணங்கு. கூறுகிறோம் மேலும், சர்ப்ப தாக்கம் குறைய, முழுமையாய் சர்ப்ப தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. 
கூறுகிறோம், மங்கல தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
நன்றாய், குண்டலினி சக்தியை உணர்ந்து, உணர்ந்து மேலேற்ற மூத்தோனை வணங்கு. 
நவில்கின்றோம் இஃதொப்ப லோகாயம் தாண்டி மேலேற, மேலேற, ஆத்ம வழியில் மேலேற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப மூச்சடக்கி இஃதொப்ப முக்காலம் தவத்தில் இருக்கும் அஃதொப்ப பயிற்சி சித்திக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப கிரகங்கள் மாறும் காலம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 

அன்றாட வாழ்வில் எதிர்படும் அனைத்து சிக்கலையும் குறைக்க அஃதொப்ப கர்ம வினை தடுத்து, தடுத்து வாட்டும் நிலை மாற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. ஆசிகள்.


ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ அருள்நாடி வாக்குகளை படித்து,பொருள் உணர்ந்து அதன் படி நடந்து அனைவரும் பயன் பெறுங்கள்.

தஞ்சை ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருள் நாடியில் படிக்கப்பட்ட வாக்குகள்.

இனி, நாம் பொருளுதவி வேண்டி விண்ணப்பம் வைக்கின்றோம்.

iசென்னை - திருநின்றவூர், நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் முடிக்கப்பட வேண்டிய எஞ்சிய உள்ள மிக முக்கிய பணிகளின் அடிப்படையில் ஒவ்வொன்றாக  பின்வருமாறு :

1. முதல் முக்கிய பணி :

ஆலயத்தின் பிரதான மண்டபத்திற்குள்  ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் மூலவர் சந்நிதி, 
ஸ்ரீ சொர்ணாம்பிகை அம்பாள் சந்நிதி, நடராஜர் சந்நிதி என அமைக்கப்படுள்ளது.

மண்டபத்தில் உள்ள சந்நிதிகளின் பாதுகாப்பிற்கு சுற்றிலும் நான்கு புறம் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

எழுப்பியுள்ள சுவற்றில் இருந்து மேல்தளம்(Ceiling) வரை மூன்று அடிக்கு இரும்பு அல்லது ஸ்டீல் மூலம் கிரில் கம்பிகள் அமைக்கும் பணிகள் நான்குபுற சுவர்களிலும் முடிக்கப்பட வேண்டி இருக்கிறது.

இதனுடன் மண்டபத்தின் முக்கிய பாதுகாப்பிற்கு இரும்பு அல்லது ஸ்டீலால் ஆன இரண்டு பெரிய பாதுகாப்பு கதவு (Gate) செய்யப்பட வேண்டும்.

மற்ற சந்நிதிகளுக்கும் பாதுகாப்பு கதவு (Gate) என மாெத்தம் ஐந்து கதவுகள்(Gate) இரும்பு அல்லது ஸ்டீலால் செய்யப்பட வேண்டும்.

2. இரண்டாவது முக்கிய பணி :

ஐம்பொன்  அல்லது பஞ்சலோகம்  சிலை செய்தல் :

05 ஐம்பொன்  (பஞ்சலோகம் ) சிலைகளை நாம் செய்யவிருக்கிறாேம்.

1. நடராஜர் சிலை

2. சிவகாமி அம்பாள் சிலை

3. விநாயகர் சிலை

4. முருகர் சிலை.

5. மாணிக்கவாசகர் சிலை

இந்த ஐந்து சிலைகளை உருவாக்குவதற்கு நமக்கு

1. தங்கம்,
2. வெள்ளி,
3. செம்பு(காப்பர்),

போன்ற பொருட்கள்  தேவைப்படுகிறது.

சிலைகள் செய்ய செம்பு என்கிற காப்பர் அதிகம் தேவைப்படுகிறது.ஆடலரசன் நடராஜர் பெருமானின் அருளைப் பெற, அடியார்கள் தங்களால் முடிந்ததை பொருளாகவோ, பணமாகவோஅளிக்கலாம்.

05 சிலைகள்(நடராஜர், சிவகாமி அம்பாள், விநாயகர், முருகர், மாணிக்கவாசகர்) செய்வதற்குண்டான ஆட்கள் கூலி பணமாக தேவைப்படுகிறது.

ஒவ்வாெரு சிலைக்கும் ஒரு அடியார் வீதம், விருப்பம் உள்ள அடியார்கள் யாராவது வந்து சிலைகள் செய்வதற்கு உண்டான செலவை ஏற்றுக் கொள்ளலாம் 
அந்த தெய்வத்தின் பரிபூரண அருளைப்பெற ஒரு பெரும் பாக்கியம் இது.

3. மூன்றாவது முக்கிய பணி :

ஆலய பிரதான மண்டபத்திற்கு கிரானைட் கற்கள் பதித்தல் :

தேவைப்படுவது :

1. சிமெண்ட் 20 மூட்டைகள்.

2. மணல் 03 யூனிட்

3.  மண்டபத்தின் தரையில் 1000 சதுர அடிக்குண்டான கிரானைட் பதிக்க ஆட்களுக்குண்டான கூலி

மண்டபத்திற்கு உள்சுவர், வெளிசுவர் பூசுவேலை செய்ய 15 மூட்டை சிமெண்ட், கோபுரத்தில் 11 பொம்மைகள் அமைக்க 05 மூட்டை சிமெண்ட் என எல்லா பணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக  50 சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படுகிறது.

4. நான்காவது முக்கிய பணி :

அகத்தியர் சந்நிதிக்கு எதிர்புறத்தில் 15 அடி நீளம், 40 அடி அகலம் காெண்ட ஷீட்டுகள் காெண்ட பந்தல் அமைக்கும் பணி.

அடியார்கள் தங்களால் முடிந்ததை  பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து சேவை புரியலாம்.

ஆலயத்தில் நடைபெற்று வரும் சில பணிகளை இங்கே  தங்கள் அனைவரின் பார்வைக்கு தந்துள்ளோம்.
















ஆலயத் திருப்பணிக்கு நன்கொடை வழங்குவதற்கான  வங்கி கணக்கு விபரங்கள் :

பெயர் : ஸ்ரீஅகத்தீஸ்வரர் அறக்கட்டளை (Sri Agatheeshwarar Trust),

வங்கி : கனரா வங்கி (Canara Bank),

A/C No : 6161101002984

IFSC Code : CNRB0006161

MICR: 600015165

கிளை : திருநின்றவூர் கிளை (Thirunindravur Branch),

என்றும் இறைபணியில் :

திரு. கஜேந்திரன் அவர்கள்,

+919789053053(Whatsapp)
+919080590956





ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய சேவையில் பங்கு கொண்டு அனைவரும் இறையருள் பரிபூரணமாக பெறுவாவோமாக!

திருச்சிற்றம்பலம்!

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html