"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, September 30, 2019

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம்  தளத்தின் சேவை 28.09.2019 & 29.09.2019 ஆகிய இரு நாட்களிலும் சிறப்பாக நடைபெற்றது. 28.09.2019 அன்று நடைபெற்ற மோட்ச தீபம் குருவருளால் சிறப்பிலும் சிறப்பாக நடைபெற்றது. அன்று நாம் வழக்கமாக செய்யும் அன்னதானத்தை விட அதிகமாக தான் ஏற்பாடு செய்தோம்,இருப்பினும் நம்மால் சமாளிக்க முடியவில்லை. ஒரு திருவிழா போல் இருந்தது. அடுத்து 29.09.2019 அன்று நம் தளம் சார்பில் நடைபெற்ற உழவாரப்பணியும்  ஒரு நாள் யாத்திரையும் இன்னும் சிறப்பாக இருந்தது. இதற்கும் சுமார் 25 அன்பர்களுக்கு மேலாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு நிகழ்வைப் பற்றியும் தனித்தனியாக பதிவு தரலாம். அவ்வளவும் குருவருளால் தான் எனும் போது மகிழ்வாக இருக்கின்றது. நேற்று நடைபெற்ற ஆலய தரிசனத்தில் நவராத்திரி கொலு தரிசனமும் கண்டோம். அடடா.. நாம் தான் நேற்று பாட்டு பாடி நவராத்திரி முதல் நாளை வரவேற்றோம். அதுவும் எங்கே? திருக்கச்சூர் கோயிலில் நமக்கு வாய்ப்பு கிடைத்தது. இது மட்டுமா? மேலும் ஸ்ரீ சக்கரம் தரிசனமும் இந்த நவராத்திரி காலத்தில் கிடைத்ததும் என்பது நம் குழு செய்ய பாக்கியமே. சரி..நவராத்திரி தரிசனம் காண்போமா?

உழவாரம் முடித்து திருக்கச்சூர் சென்றதும் நன்றாக வெடி எல்லாம் போட்டு அமர்க்களமாக மருந்தீஸ்வரர் கோயில் இருந்தது. உடனே அங்கிருந்த அறிவிப்பு பதாகை கண்டோம். அட..நவராத்திரி விழா பற்றி இருந்தது.


அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டி,...அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.


சுமார் 3:30 மணி அளவில் அங்கிருந்தோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. நேரம் அதிகமாக இருந்ததால் குழந்தைவேலு சுவாமிகள் சித்தர் கோயிலுக்கு சென்றோம். இந்த ஆண்டு முதல் கொலு தரிசனம் இங்கே தான் நமக்கு கிடைத்தது. அது மட்டுமா அங்கு 1சுமார்  மணி நேரம் இருந்தோம். சித்தர்களின் அருள் அங்கே பரிபூரணமாக இருந்தது. மௌனத்தில் மௌனித்தோம். ஒரு சத்சங்கம் நமக்கு கிடைத்தது.




அடுத்து திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் தரிசிக்க சென்றோம். இங்கு நாம் இரண்டாவது கொலு கண்டோம். அங்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் உழவார செய்து வருகின்றோம் என்று சொன்னது தான் தாமதம் நம்மை உபசரித்த விதமே வேறு...கொலு தரிசனம் காண நம் இரு கண்கள் போதவில்லை. நீங்களே பாருங்கள்.









நேரம் அதிகமாக இருந்ததினால் அங்கிருந்த குருக்கள் நம்மை அமர வைத்து அம்மன் பாடல்கள் பாட சொன்னார்கள்.




நம் குழுவின் அன்பர் திரு செல்லப்பன் அவர்கள் முதலில் ஒரு திருப்புகழ் பாடல் பாடினார். அடுத்து செல்வி சாருமதி அவர்களின் தாயார் கைத்தல நிறைகணி , வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள் என்று பாடினார்.




புதிதாக சேவையில் இணைந்த கார்த்திகை பிரபா அவர்கள் சாய்ராம் பற்றிய பாடல் பாடினார்கள்.மீண்டும் கற்பக வள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன் என்று மற்றொரு பாடல் பாடினோம்.

அடுத்து நாம் அடுத்த கோயிலுக்கு செல்ல தயாரானோம்.அப்போது தான் குருக்கள் வேகமாக ஓடி வந்து நமக்கு இனிப்பு வழங்கினார். அடடா..மனது குளிர்ந்தது. யாத்திரையில் தேநீர் சாப்பிட எங்காவது இறங்கலாம் என்று நினைத்தோம். அருமையான உணவு, தேநீர், வடை, இனிப்பு என அனைத்தும் நமக்கு திருக்கச்சூர் கோயிலில் கிடைத்தது என்றால் இது இறையின் பிரசாதம் தானே!




அடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள ஸ்ரீ காளத்தீஸ்வரர் தரிசனம் பெற்றோம். 


மூன்றாவது கொலு தரிசனம் நமக்கு இங்கே கிடைத்தது.





நவராத்திரிக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்பது சால பொருந்தும் தானே! ஒரு நாள் யாத்திரையில் நவராத்திரி கொலு தரிசனம் மிக சிறப்பாக இருந்தது.

 நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.

துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.

 நமக்கு அருள் பாலிக்கும் அம்மன்  அலங்காரங்களை தங்கள் தரிசனித்திற்காக இப்பதிவில் அளிக்கின்றோம்.

மதுரை மீனாட்சி அம்மன் - நவராத்திரி மஹோத்சவம் 2017 - முதல் நாள் - ராஜராஜேஸ்வரி அலங்காரம்







அன்னை மீனாட்சி நவராத்திரி இராஜராஜேஸ்வரி அலங்காரம், 2ம் நாள் இன்று 22.09.17 ஊஞ்சல் சேவை




மாமரத்து விநாயகர் கோயில் - தன லட்சுமி அலங்காரம் 



வேலி அம்மன் ஆலயம் 


                           
                                                       அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம்


அம்மையப்பனாய் கண்ட தரிசனம் ..கண்ணுள் இன்னும் நிறைந்து உள்ளது. கண்களில் மட்டும் அல்ல..மனதிலும் தான். அடுத்தபதிவில் மூன்றாம் நாள் அலங்காரம் காண்போம்.

முந்தைய பதிவுகளுக்கு:- 

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html
கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

அர்த்தமுள்ள இந்து மதம்


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

 அர்த்தமுள்ள இந்து மதம். ஆன்மிகத்தின் சூத்திரங்களை வாழ்வியலோடு பேசும் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். தற்போது நடைபெற்ற சென்னை புத்தகத் திருவிழாவில் நாம் விரும்பிய நூலில் இது மிக முக்கியமான ஒன்று. காலம். கடந்து பேசும் காவியத்தைப் பற்றிய கருத்துகள் நம் தளத்தில் இனி பதிவாக பவனி அவர் இருக்கின்றது.

 வள்ளலார் வாழும் போது அவர்மீது வழக்கிட்டவர் உண்டு.சாய்பாபா போன்ற பல மகான்கள் வாழும் போது அவரை உணராமல் உதாசீனம் செய்தவர் பலர் உண்டு.பாரதியார் அற்புத கவிதைகள் ஆயிரம் படைத்தும் அவர் மகத்துவம் உணராமல் இருந்தனர் மக்கள். அவர் மறைந்து வாந்ததும் உண்டு.

கண்ணதாசன் ஆயிரமாயிரம் ஞானத்தை போதித்த போதிலும் மக்களின் மனதில் இன்றும் நிற்பது ஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என்துணையிருப்பு என்ற தன் சுய வாழ்வு பாடல் மட்டுமே. இதை மனதில் வைத்து கொண்டு அற்புத ஆன்மீகத்தை அர்த்தமுள்ள இந்துமதம் என்று அத்தனை படைத்த பின்பும் அவரை ஞானி என்று ஏற்க மனமில்லாமல் பெண்பித்தன் குடிகாரன் என்றே அடையாளப்படுத்தி கொண்டுள்ளது நம் இனம்.

இன்றளவும் இருக்கும் போது மதிக்கும் ஞானமில்லை என்று சொல்வதைவிட இருக்கும் போதே அவர்களை போன்றவர்களை போற்றி வணங்கி புண்ணியம் கூட்டிக்கொள்ளும் பாக்கியமில்லாதவர்களாகவே நாம் வாழ்கிறோம்.வெறும் ஜீபூம்பாக்களை நம்பியும் பிரமாண்ட மேடையையும் கூட்டத்தையும் கண்டு அவதார புருஷர்களாக அடையாளம் காண்கிறோம்.

நவ கோடி சித்தர்கள் அவதரித்த பூமி இது ஆர்பாட்டங்களை நம்பியதில்லை.ஆனால் அற்ப மானிடர் ஞானத்தையே ஆடம்பரத்தை கொண்டே அளக்கின்றார்.இந்த மாயையிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.அல்லதை விடுத்து, நல்லதைச் செய்து, உள்ளதை உணர வேண்டும். அதுவே இந்த பதிவின் நோக்கமாகும்.இனி நம்மிடம் அர்த்தமுள்ள இந்து மதம் பேசப் போகின்றது.

எந்த நிலையிலும் தனக்கு மரணமில்லாத கவிஞர் கண்ணதாசனின் அற்புதப் படைப்புகளில் ஒன்று, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’. ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கையில் தொடராக வந்த இந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியாகி, பல்லாயிரக்கணக்கான ஆன்மிக வாசகர்களைத் தன்வசம் ஈர்த்தது. அமரத்துவம் பெற்ற அந்தப் படைப்பு, எந்த காலத்துக்கும், எந்த யுகத்துக்கும் பொருந்தக்கூடிய யதார்த்தம் கொண்டது. மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுகிற, ஒரு பொக்கிஷமாக வைத்துக் கொள்ள விரும்புகிற ஆன்மிகக் களஞ்சியம் என்றே சொல்லலாம். தன் வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவ பாடங்களாகக் கவிஞர் வர்ணித்திருக்கும் பாங்கு, படிப்போர் ஒவ்வொருவரையும் தன்னை அவற்றுடன் ஒப்பிட்டு அடையாளப்படுத்திக்கொள்ள வைக்கும். இந்து மதம் என்றால் என்ன என்று விளக்க முனைவதல்ல அவரது நோக்கம்.



மாறாக, அந்த மதத்தோடு தன்னையும், நம்மையும் ஐக்கியப்படுத்திக்கொள்ள முயல்வதே ஆகும். இந்த ஐக்கியப்பாட்டால் ‘இறை’ என்பதன் கருணையை, பேரழகை, அருளை நாம் புரிந்துகொள்ள முயன்றால், அதுவே கவிஞரின் இந்தப் படைப்புக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். இந்த இதழ் முதல் இந்து மதத்தை நமக்கு அர்த்தமுள்ளதாக்குகிறார், கவிஞர் அவர்கள். இனி கவிஞர் நம்முடன் தொடர்ந்து உரையாடுவார்: என் இனிய நண்பர்களே, இந்து மதத்திற்குப் புதிய பிரசாரங்கள் தேவையில்லை. ஏற்கெனவே உள்ள பிரசாரகர்கள், உபன்யாசகர்கள் யாரும் சக்தி குறைந்தவர்களல்லர். சொல்லப் போனால், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களையே, நான் இப்போது எழுதப் போகிறேன். ஆகவே, ‘புதிய பிரசாரகன் கிளம்பி இருக்கிறான்’ என்ற முறையில், இந்த தொடர் கட்டுரையை யாரும் அணுகத் தேவையில்லை.

நான் நாத்திகனாக இருந்தது, இரண்டு மூன்று ஆண்டுகளே! அதுவும், நாத்திகத்திற்கு ஒரு போலித்தனமான மரியாதை கிடைக்கத் தொடங்கிய இடைக்காலத்திலேயே! நான் எப்படி ஆத்திகனானேன்? கடவுளையும், புராணங்களையும் கேலி செய்வதற்காகக் கந்தபுராணம், பெரியபுராணம், கம்பனின் ராமகாதை, திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, அதை உள்ளிட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தம், வில்லிபாரதம் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன். அறிஞர் அண்ணா அவர்கள், கம்பனை விமர்சித்து, ‘கம்பரசம்’ எழுதியதற்குப் பின் அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றிற்று. படித்தேன்; பல பாடல்களை மனனம் செய்தேன். விளைவு? கம்பனைப் படிக்கப் படிக்க நான் கம்பனுக்கு அடிமையானேன். புராணங்களிலுள்ள தத்துவங்களைப் படிக்கப் படிக்க நான் கடவுளுக்கு அடிமையானேன்.

நாத்திகவாதம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும், உள் மனத்தின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதையும் உணர்ந்தேன். மேலும் மேலும் கம்பனைப் படித்தேன்; கடவுளைப் படித்தேன்! என் சிறகுகள் விரிந்தன; சொற்கள் எழுந்தன; பொருள்கள் மலர்ந்தன; காண்கின்ற காட்சிகளெல்லாம் கவிதையிலேயே தோன்றின. புரட்சி என்கிற பேரில் குருட்டுத்தனமான நாத்திக மனப்போக்குத் தொடர்ந்திருந்தால், எனது எழுத்துகள் சுருங்கி, கருத்துகள் சுருங்கி, என் பெயரும் சுருங்கியிருக்கும். ரஷ்ய மக்களுக்கு நாத்திகவாதம் பொருத்தமாக இருக்கலாம். அவர்களது மூதாதையர்கள் ஆக்கி வைத்த மதங்களில், இந்து மதத்தில் உள்ளது போல் இவ்வளவு ஆழ்ந்த தத்துவங்கள் இல்லை. அருமையான கவிதை கலைகளில்லை. ‘வாழ்க்கையில் நீ எந்தச் சாலையில் போனாலும் சரி, எதிர்ப்படும் மகிழ்ச்சியிலோ, துன்பத்திலோ நீ இறைவனின் எதிரொலியைக் கேட்கிறாய்.

அந்த எதிரொலியில் இந்து மதத்தின் சாரத்தைக் காண்கிறாய்!’ ஒருவன் சராசரி மனிதனாயினும் சரி, தலைமை வகிக்கும் மனிதனாயினும் சரி, ஒரு கட்டத்தில் உள்ளூர இறைவனை நம்பத் தொடங்குகிறான். அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக, ஏதாவதொரு, இந்துமதக் கதை அவன் நினைவுக்கு வருகிறது. ‘அன்றைக்குச் சொன்னது சரியாகப் போய்விட்டது’ என்று மனத்திற்குள்ளேயே கூறிக் கொள்கிறான். நாத்திக வாதத்தில் பணம் கிடைப்பதால், ஒரு சிலர் மட்டுமே, தங்களை ‘இங்கர்சாலின் மாப்பிள்ளை’களாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமுதாயத்தை ஏமாற்றாத எந்தச் சராசரி மனிதனும், இந்துமதத் தத்துவத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது. அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவன் போகும் சாலை, இந்து மதம் போட்ட சாலையாகத்தான் இருக்கும்.

‘தெய்வ தண்டனை’ என்று இந்து மதம் சொல்கிறதே, அதை நானே பலமுறை கண்ணெதிரில் கண்டிருக்கிறேன். சிறுவயதில் நான் வேலையில்லாமல் அலைந்த போது, ஒருவர் ஒரு மோசமான வேலையைச் சொல்லி, கேலியாக, ‘‘அந்த வேலைக்குப் போகிறாயா?’’ என்று கேட்டார். ‘அதற்குத்தானா நாம் லாய்க்கு’ என்றெண்ணிய நான் அழுதுவிட்டேன். என்ன ஆச்சர்யம்! சில ஆண்டுகளில், அதே வேலைக்கு அவருடைய மகன் போய்ச் சேர்ந்தான்! நான் இதோ உங்கள் மத்தியில் நிற்கிறேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஓர் அதிகாரியின் மனைவியோடு கள்ள நட்பு வைத்திருந்தார். தன் மனைவியைப் பற்றி மட்டும் அவர் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார். ஆனால், அவருடைய நல்ல மனைவிகூடச் சில ஆண்டுகளில் வேறு ஒருவரோடு கள்ள நட்புக் கொண்டார். அந்த மனிதர் நிம்மதியின்றி அழுதார், அலைந்தார்.

அவரை நான் சந்தித்தபோது, என் நினைவுக்கு வந்தது இந்து மதம்! நான் படமெடுத்தபோது, என் பங்காளி ஒருவருக்குக் கையெழுத்துப் போடும் உரிமை கொடுத்திருந்தேன். அவர், தமக்கு வேண்டிய ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, என் கம்பெனி லெட்டர் பேப்பரில், வெறும் பேப்பரில், கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டார். அவர், அதை அறுபதாயிரம் ரூபாய்க்குப் பூர்த்தி செய்து கொண்டு என்னை மிரட்டினார். இரண்டு வருட காலங்கள் நான் நிம்மதியில்லாமல் இருந்தேன். இரவில் திடீர் திடீரென்று விழிப்பு வரும். ‘கண்ணா கண்ணா!’ என்று அழுவேன். அந்தப் ‘பினாமி’ நபர், ஒரு கம்பெனி ஆரம்பித்தார். அந்தக் கம்பெனியின் உபயோகத்திற்காக, அவரசமாக ஒரு வெறும் பேப்பரில் கையெழுத்துப் போட்டு, கம்பெனி மானேஜரிடம் கொடுத்து விட்டுப் போனார்.

அந்த மானேஜருக்கும் அவருக்கும் ஒரு நாள் சண்டை வந்தது. அந்த மானேஜருக்கு, நான் ஏமாற்றப்பட்ட விதம் தெரியும். ஆகவே, ஒரு நாள் அதிகாலையில் அந்தப் பேப்பரைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். நான் அதிலே எழுபத்தையாயிரத்துக்குப் பூர்த்தி செய்து அவரைக் கூப்பிட்டுக் காட்டினேன். பினாமி நபர் என் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். பிறகு இரண்டு பேருமே இரண்டு பேப்பர்களையும் கிழித்துப் போட்டு விட்டோம். அப்போது என் நினைவுக்கு வந்தது இந்துமதம்! என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு எதிரொலியிலும், நான் அடிக்கடி சொல்வது ‘நம் மூதாதையர்கள் முட்டாள்களல்ல’ என்பதே. ஆலமரம் போல் தழைத்துக் குலுங்கி நிற்கும் இந்து மதம், உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும், ஒவ்வொரு விநாடியையும் அளந்து கொடுக்கிறது.

இந்தியாவின் வடஎல்லையில் தோன்றி, இந்தியா முழுமையிலும் ஓடி, சீனா முழுவதையும் கவர்ந்து ஆசியாக் கண்டத்தையே அடிமை கொண்ட பெளத்த மதம், இந்து மதத் தத்துவங்களாலே சீரணிக்கப்பட்டு, இந்தியாவில் இல்லாமல் ஆகிவிட்டது. தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவக சிந்தாமணி நான்கும், சமண, பெளத்த மரபுகளைக் காட்டுவதை நாம் எண்ணிப் பார்த்தால், சமண, பெளத்தத்தின் செல்வாக்கு தென்குமரிவரை எப்படியிருந்தது என்பதை அறிய முடியும். ஜைன - பெளத்த மதங்கள் பெற்றிருந்த செல்வாக்கை நமது வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அவை எங்கே? இந்து மதத்தின் தத்துவங்களுக்குள் அவை அடங்கி விட்டன. அந்த நதிகள் இந்துமாக்கடலில் சங்கமமாகி விட்டன. வள்ளுவன் குறிப்பிடும் ‘ஆதிபகவன், உலகியற்றியான்’ அனைத்தும், புத்தனை அல்லது ஜைன சமயக் கடவுளையே!

இப்படி நான் சொல்வதற்குக் காரணம், வள்ளுவனுக்குப் பின்வந்த ஐம்பெரும் இலக்கியங்களில் சமண, பெளத்த மரபு கலந்திருப்பதுதான். ராமானுஜர் காலத்திலிருந்து இந்துமதம் உத்வேகத்தோடு எழுந்திருக்கிறது. அமைதியான முறையிலேயே அத்தனை மதங்களையும் ஆட்கொண்டிருக்கிறது. காரணம், அதன் ஆழ்ந்த தத்துவங்களே! சிலப்பதிகாரத்திலும் துர்க்கை கோயில் வருகின்றதென்பதிலிருந்து இந்து மதம் முன்பும் செழிப்பாகவே இருந்தது என்றாகிறது. ஆனால், பல பூர்வீக மதங்களையும், தன்னுடைய கிளை அலுவலகமாக ஆக்கிக் கொண்டு, தானே தலைமை தாங்கத் தொடங்கிய காலம் ராமானுஜர் காலமே! அத்தகைய இந்து மதத்தைப்பற்றி என்னுடைய குறைவான அறிவில் தோன்றிய குறைபாடான கருத்துகளைத் தொடர்ந்து எழுதப் போகிறேன். இந்தத் தொடர் கட்டுரையில் நான் இந்து மத வரலாற்றை ஆராயப் போவதில்லை. அதன் தத்துவங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு பயன்படுகின்றன என்பதை மட்டும் எழுதுவேன்.

- அன்பன் கண்ணதாசன்


“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்கும்”

ஆனால், செய்த வினையும் செய்கின்ற் தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்தபின்னால்தான் அந்த நிலத்தில் வேறுபயிர்களைப் பயிரிட முடியும்.

கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோயிலுக்குக் கூட வரமாட்டான்.

இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.

என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான கணக்குக்காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.

வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.

அவர் ஏற்கெனவே ஒரு பணக்கார செட்டியாரையும் ஆச்சாள்புரத்துக்கார்ர் ஒருவரையும் ஏமாற்றியவர்.

அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.

ஏமாற்றி என்ன பயன்?

அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய், அன்றாடச் சோற்றுக்கே இன்று அலை மோதுகிறார்.

அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.

உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக்கொண்டு, அந்தப் ‘பாபாத்மா’ தினமும் கோயிலுக்கு வருகிறது.

நெற்றியில் கட்டுக்கட்டடாக விபூதி; இரண்டு காதிலும் கதம்ப பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.

அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.

முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.

ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.

ராஜாங்கம் கட்டி ஆண்டவனுங்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.

இறைவனில் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.

குளத்திலே ஒருரூபாயைத்தவறிப் போட்டு விட்டால், குளம் வற்றியதும் அது உன் கைக்கே கிடைக்கிறது- அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.

ஒரு நடைபாதையில் நீ கண்ணாடித் துண்டைப்போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.

குளிக்கும் அறையில் நான் எச்சிலைத் துப்பி விட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளே போன போது, அது என் காலையே வழுக்கி விட்டது.

விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.

ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு  செல்வந்தர். ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!

பக்தி செய்யும் எல்லாருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.

அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

‘உண்மையே தெய்வம்’ ‘ அன்பே  தெய்வம்’ என்று இந்து மதம் சொன்னது அதனால்தான்.

‘நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” உண்மைதான். ‘கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.

அதுவும் உண்மைதான்.

காலங்களை நிர்ணயிக்கின்றவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
நதியின்  ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.

ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாபங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!

அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.

அறிந்து செய்யும் தவறு தவறல்ல: அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!

ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல்தவறு செய்திருப்பதாக வழக்குக்கதைகள் உண்டு.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச்சென்றார்.

அவரது அம்பாறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.

‘ஒற்றை அம்பை ஊன்றி வை என்பது வழக்கு. அம்பை ஊன்றிய ராம்பிரான், கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறினார்.

ஊன்றிய அம்பை எடுத்தார்.

அதிலொரு தேரைக்குஞ்சு குத்தப்பட்டிருந்தது.

பூமிக்குள்ளிருந்த தேரைக்குஞ்சை  அவர் அறியாமல் குத்திவிட்டார்.

தேரைக்குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.

ராம்பிரான் கண்கள்  கலங்கிவிட்டன்.

“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவிலை?” என்றார்.

அதற்குத் தேரை சொன்னது;

“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும்போதெல்லாம் நான் ‘ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”

ராம்பிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இதுநான் அறியாமல் செய்த பிழை.”

தேரை சொன்னது:

“பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”

தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாபக்கணக்கில் சேர்க்காதே.

சிறு வயதில் கடன் தொல்லை தாங்காமல் நான் ‘திருடியிருக்கிறேன்’ - என் தாயின் பணத்தைத்தான்.

திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன். கடவுளை வேண்டியிருக்கிறேன் - “இறைவா மன்னி” என்று.

அந்தத்தவற்றைக்கடவுள் மன்னிக்கவில்லை  என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?

என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.

ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.

எழுத்தின்மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.

சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.

இவ்வளவு அறியாமைக்கிடையிலேயும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாறுகிறது.

ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?

‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.

செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் தலையைக்காக்கிறது.

ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.

புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!

பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.

கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைத்திருக்க செய்திருக்கிறேன்.

அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.

ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத்தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

நான தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.

இந்துமத்த்தின் ஒவ்வொரு அணுவையும் நான் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.

சாதாரணம் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன


என்ன அன்பர்களே, ஒரே பதிவில் பல தத்துவங்களை..இல்லை இல்லை அனுபவ புதையலை கண்டோம் அல்லவா? பதிவை மீண்டும் மீண்டும் படித்து, இணையப் பதிவை உங்கள் இதயப் பதிவாக மாற்றுங்கள்.

- அர்த்தமுள்ள இந்து மதம் தொடரும் ...

முந்தைய பதிவுகளுக்கு:-


 TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

 கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

Sunday, September 29, 2019

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள்

அன்பர்களே,

அனைவருக்கும் TUT குழுமத்தின் சார்பாக நவராத்திரி நல்வாழ்த்துக்கள். இந்த பதிவில் நவராத்திரி பற்றியும்,அதனை ஒட்டிய நிகழ்வுகளின் சிறப்பு பற்றியும் அறிய உள்ளோம்.கூடுவாஞ்சேரி ! சென்னையின் புற நகரில் உள்ள ஊர் என்றாலும், நம் அகத்தினை ஒளி பெற செய்து கொண்டு உள்ளது.முதலில் என் குரு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறந்து,வாழ்ந்த ஊர் என்பதே பெருமை. TUT ஆலய தரிசனம் பற்றிய செய்திகளுக்காக தேடிய போது, தற்போது வரை மூன்று கோயில்கள் நம்மை ஈர்த்து உள்ளது. முதலில் நந்தீஸ்வரர் கோயில்,
வேலி அம்மன் திருக்கோயில்,அடுத்து மாமரத்து விநாயகர் கோயில்.

இந்த ஆலயங்களில் நடைபெற்று வரவும் நவராத்திரி நிகழ்வுகளை இங்கே தொடர் பதிவாக தினமும் அளிக்க விரும்புகின்றோம்.இறையருளும்,குருவருளும் துணை நிற்க வேண்டுகின்றோம்.
அதற்கு முன்பாக நவராத்திரி பற்றிய சில செய்திகள் அறிவோம்.






நவராத்திரி கொண்டாடப்படுவதற்கு முன்னதாக நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதையை தெரிந்து கொள்ளலாம்.


காட்டில் கணவர் மனைவி வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் வறுமையில் இருக்கும் அவர்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறார்கள் கணவருக்கு தீர முடியாத நோய் வேறு. அடுத்து என்ன செய்யப்போகிறோம்? உணவைத் தேடி செல்வதா? கணவருக்கான மருந்துகளை தேடுவதா? உணவா? பொருளா? மருந்தா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது.

உதவி கேட்டு மகரிஷி ஒருவர் வந்திருந்தார். அழுது வீங்கிய கண்களுடன் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே, மகரிஷி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல இருக்கிறது. என்ன ஆயிற்று? ஏன் இங்கே வந்திருக்கிறாய் ? என்று கேட்டார்.


'எங்களுடைய தயாதிகள் எங்கள் மீது பொறாமைபட்டு எங்களுடன் போர்புரிந்து எங்களை தோற்கடித்துவிட்டார்கள்' என்று வருத்தப்பட்டிருக்கிறாள். உண்மையை அறிந்த முனிவர் ஆறுதல் அளித்ததோடு, அருகில் இருக்கும் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை பூஜை செய்தால் இழந்த ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் அதோடு வம்சத்தை விரித்தி செய்ய புத்திரனும் பிறப்பான் என்கிறார்.


அதைக் கேட்டு மகிழ்ந்த அந்தப் பெண்மணி தன் கணவருடன் பஞ்சவடிக்கு செல்கிறாள். இவரின் வீட்டிற்கு வந்த அங்கிரஸ முனிவர் அங்கே இருந்தார். அவர் முன்னின்று நடத்திய நவராத்திரி பூஜையை செய்து வைத்தார்.


பூஜையை முறைப்படி முடித்த பின்னர் அங்கிரஸர் முனிவருடன் அவரின் ஆசிரமத்திற்கே சென்றனர். அங்கே அரசர் நோயிலிருந்து மீண்டார். அரசிக்கு சூரியப் பிரதாபன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
அங்கிரஸ முனிவரை குருவாக ஏற்ற சூரியப் பிரதமன் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். தன் பெற்றோர் ஏமாற்றப்பட்ட கதையை கேட்டு , பகைவர்களுடன் போரிட்டு தங்களின் நாட்டை மீட்டு வருகிறான்.இதன் பொருட்டே நவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக ஐதீகம்.
 நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.

சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர். அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.

பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும், மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும், கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும், சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள். இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர் இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர்.

அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரி எனப்படுகிறது.
அடுத்த பதிவில் கொலு படி தத்துவம் பற்றி காண்போம்.இனி கொலுப்படிகள் மற்றும் அனைத்து நவராத்திரி நிகழ்வின்  துளிகள் தங்களின் பார்வைக்கு.பார்த்து அம்மன் அருள் பெறுங்கள்.







                                             நன்றி திரு.சுவாமிநாதன் கோபாலன்










                                                   நன்றி திரு.சுரேஷ் பிரியன்




பதிவின் நீளம் கருதி, அடுத்த பதிவில் கூடுவாஞ்சேரி கோயில்களில் இருந்த நிகழ்வுகளை பதிவிடுகின்றோம்.


கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நவராத்திரி ஸ்பெஷல் பதிவு என்று இந்த பதிவைச் சொல்லலாம். நம்முடைய நண்பர் சந்தித்து ஆறு மாதங்கள் ஆயிற்று. நால்வரின் பாதையில்  என்றொரு குழுமத்தின் மூலம் பல்வேறு சைவத் தொண்டுகள் ஆற்றி வருகின்றார். திருத்தல யாத்திரை மேற்கொள்வது இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும். நம்மையும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுப்பார். நம்முடைய சூழலில், கலந்து கொள்ள இயலாத சூழலே நிலவியது.இருப்பினும் அவரை சந்திக்க வேண்டியும் விரும்பினோம்.அப்போது தான் இந்த நவராத்திரிக்காக கொலு பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.


அழைப்பிதழைக் கண்டதும் மனம் ஆனந்த கூத்தாடியது. நம்மை முதன் முதலாக கொலு பார்க்க அழைத்தவரும் இவரே.சிறு வயதில் சுண்டல் சாப்பிட,கொலு பார்க்க சென்றதாய் நினைவு .சற்று மலரும் நினைவாக மட்டுமே. உடனே சுரேஷ் பிரியன் ஐயாவை தொடர்பு கொண்டு, நாம் பகல் நேரத்தில் கொலு பார்க்க வருவதாக சொன்னோம்.அவரும் கட்டாயம் வாருங்கள் என்று சொன்னார்.மாலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள கோயில் கொலு தரிசனம் பெற்றுக் கொண்டிருப்பதால், இதனை தவறவிடக் கூடாது என்று தோன்றியது.

நம் எண்ணத்தின்படியே சென்ற வாரம் சனிக்கிழமை சுமார் 5 மணி அளவில் சுரேஷ் பிரியன் ஐயாவின் வீட்டிற்கு சென்றோம். வீட்டினுள் நுழைந்த உடனே, நம்மை அவர் வீட்டு கொலு வரவேற்றன என்றே சொல்லலாம். அப்படியே அவர்களின் தாயார்,தந்தையார் அறிமுகம் நடந்தது.வேறொருவர் வீட்டில் இருப்பது போன்ற உணர்வே இல்லை.

நாம் இதுவரை பார்த்த கொலுக்களில்,இது தான் பிரம்மாண்டத்தின் உச்சம். இரண்டு அடுக்காக வைத்து இருந்தார்.சுமார் 28 ஆண்டுகளாக கொலு வைத்து வருவதாகச் சொன்னார்கள்.நமக்கு சற்று மலைப்பு தோன்றியது. ஒவ்வொரு கொலுவையும் அணு அணுவாக கண்டு ரசித்தோம்.அனைத்து கொலுக்களையும் ஒவ்வொன்றாக விளக்கி கூறிய விதம் - வெகுவாக ரசித்தோம்.

அவரது இல்லம் - கொலுக்களின் அணிவகுப்பில் திருமகளின் இல்லமாக திகழ்ந்தது.முதலில் இரண்டு மூன்று காட்சிகளை எடுத்தோம்.பின்பு அவரோடு பேசினோம். மீண்டும் கொலு  பார்த்தோம். கண்களை கவர்ந்து கொண்டிருந்தது. சிவ பக்தர் வீட்டில் கொலு..ஆரம்பமே அட்டகாசம். திருமுறை வழிபாட்டோடு கொலுவைத் தொடங்கி இருந்தார்கள்.




ஆடல் வல்லான், ஆடலரசன் அருளோடு திருமுறை கண்டு , மனம் களிப்புற்றோம். நால்வர் பெருமக்கள் ஆசி பெற்றோம்.நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.










அப்படியே ஒரு விசிட் அடித்தோம். நம்மோடு வாழ்கின்ற பொது மக்களை பிரதிபலிக்கும் கொலு பார்த்தோம்.



நடந்தாய் வாழி காவேரி ...அகத்தியர் பெருமானால் உருவான காவேரி பற்றிய கொலு.அற்புதம்.இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்த இது போன்ற கொலுவும் ஒரு வாய்ப்பு என்று தோன்றுகின்றது.நம்முடைய பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும், அடுத்தடுத்த தலைமுறையினர் மறந்துவிடாமல் இருப்பதற்கும், அவற்றை நம் குழந்தைகளுக்கு புரியவைப்பதற்காகவே கொலு வைக்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. உபதேசங்களாக இல்லாமல் பொம்மைகளாக வைக்கப்படும்போது குழந்தைகளுக்கு அதில் ஆர்வம் உண்டாகும். நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தெய்வங்களையும் பொம்மைகளாக பார்க்கும்போது அவர்களுக்கு அது பற்றிய அறிவு பெருகும்!...இந்த காவேரி பற்றிய கொலுவை பார்க்கும் போது நமக்கு மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது அல்லவா?





                               ராம..ராம..ராம என்று உள்ளம் உருகிய பொழுது




இது போல் நம்முடைய பண்பாட்டை,கலாச்சாரத்தை அறிய தூண்டச்  செய்வதே கொலு வைப்பதின் தாத்பரியம்.

பல வண்ணங்களில் கொலு. கண்ணை மட்டும் கவரவில்லை. நம் கருத்தையும் சேர்த்து கவர்ந்து கொண்டு உள்ளன என்பதே உண்மை. நம்மைப் பொறுத்தவரை இங்கே கொலு நிகழ்வு,நம்மை கொண்டாட்டம்,கோலாகலம் மன நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது.கொலு வைப்பது எப்படி என்று சுரேஷ் ஐயாவிடம் கேட்கலாம் போன்று அவ்வளவு நேர்த்தி.அலங்காரம் ...














நாம் சொல்வது உங்களுக்கு புரிந்து இருக்கும். நீங்களே உணர்ந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.




ஓம் ..தாயே போற்றி 


அடடே...கல்யாண விருந்தா! சூப்பர். நல்ல வேளை நாற்காலியில் உட்கார்ந்து ஸெல்ப் சர்வீஸ் செய்யாம இருக்குறத பார்க்கும் போது, சூப்பரா இருக்கு. தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவது நம் ஆரோக்கியம் சார்ந்த விஷயம். தண்ணீர் வைத்து இருப்பது கூட ரொம்ப சூப்பர்.


                                 இதோ..நம் பாரம்பரிய கல்யாண கொலு.

சரி.வாங்க அடுத்த கொலு பார்க்க போலாம்.












மேலே உள்ள காட்சிகளில் சித்தர்களின் பெயர் இருக்கின்றது. சித்தர்களின் தரிசனம் இங்கே பெற்றோம்.நல்ல வேளை ..நாமும் சற்று சுதாரித்து,சித்தர்களை தனித்தனியாக வேண்டி அருள் பெற்றோம்.



நமக்கு இருக்கும் ஒரு சந்தேகம்.இவற்றை எல்லாம் எப்படி பாதுகாக்கிறார்கள் என்பது தான். வீட்டில் உள்ள புத்தகங்களை அப்படியே விட்டு விட்டால்..அதோ கதி தான்.சுரேஷ் பிரியன் ஐயாவிடம் கேட்டோம்.

கொலு வைப்பது சாதாரண விஷயம் அன்று. நம் வைத்து வரும் 28 வருட அனுபவத்தில் , தாம் கற்றுக் கொண்ட விஷயம் வேறு என்றார். முதல் எந்த அளவில் கொலு வைக்கின்றோம் என்று தீர்மானிக்க வேண்டும்.அதற்கேற்றாற் போல்,கொலு படிகள் தயார் செய்ய வேண்டும்.அப்புறம் விரிப்பு மற்றும் அலங்காரம் பற்றியும் குறித்து நடைமுறை படுத்த வேண்டும் என்றார்.இது போன்ற கொலு வைக்கும் போது ,சுமார் 3 நாட்களுக்கு முன்,கொலு பொம்மைகளை எடுத்து துடைத்து,மற்ற ஆயத்த பணிகளை தொடங்க வேண்டும். இதே போன்று கொலு முடிந்த பிறகும் மூன்று நாள் பணிகள் இருக்கு..பொம்மைகளை துடைத்து மீண்டும் சில ரசாயன பூச்சு அடித்து கவனமாக பேக் செய்து வைக்க வேண்டும்.சில பொம்மைகள் வைக்கும் போதே உடைந்து விட வாய்ப்புண்டு.எனவே கவனமாக கையாள வேண்டும் என்றார். அனைத்து கொலு பொம்மைகளையும் அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்து,படிகள் பிரித்து என நினைக்கும் போதே இது 3 நாள்களுக்கு மேலான  வேலை என்று தான் தோன்றியது.

இவை அனைத்தும் தேநீர் குடித்துக் கொண்டு நம்மிடம் பகிர்ந்த செய்திகள். நமக்கு முழு கொலு படிகளையும் காட்சியாக பதிய வேண்டும் என்றோம். வீட்டு வாசலில் இருந்து முயற்சி செய்யுங்கள் என்றார்.இதோ..தங்களின் பார்வைக்கு.










ஏதோ.நம்மால் முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தோம் என்று தான் சொல்ல முடியும். சித்தர்கள் கொலுவை ஒவ்வொன்றாக எடுத்தோம். அருமையாக சித்தர்கள் தரிசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.



                                        சிவ வாக்கியர் முதல் குதம்பை சித்தர் வரை


                      பாம்பாட்டி சித்தர் முதல் போகர் வரை தரிசனம் பெறுங்களேன்











காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர், சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி, நந்திதேவர்
கோப்பான கோரக்கர், பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் , சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி,கமலமுனி காப்புதானே என்ற சித்தர் காப்பினை மனதுள் துதித்தோம். சித்தர்கள் தரிசனம் இங்கே நாம் பெற்றது மட்டற்ற மகிழ்வே.















இதோ..மேலும் சில கொலு தங்களின் பார்வைக்காக மேலே. மெதுவாக ஒவ்வொரு கொலுவாக பாருங்கள்.அருமையாய் இருக்கும். கண்களுக்கு விருந்தாய் இருக்கும்.












அப்படியே சில மணித்துளிகள் கழித்து, நால்வரின் பாதையில் யாத்திரை பற்றி பேச ஆரம்பித்தோம். ஏகப்பட்ட விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். information is wealth என்பதை நம் TUT தளம் மூலம் அறிந்து வருவதாக ஐயா கூறினார். பேச்சினூடே, இனிப்பு,காரம் என்று உபசரிப்பாக வயிற்றுக்கு உணவு..பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அதற்குள் அன்றைய தினம் பூஜை முடித்து, சுண்டல் நைவேத்தியமாக கொடுத்தார்கள். நாம் பார்சல் செய்து கொண்டோம்.

மீண்டும் கொலு பக்கம் திரும்பினோம்.குருவருள் பெற கீழே உள்ள காட்சியை பார்க்கவும்.









கொலு முழுதும் கண்டீர்களா? நல்லதோர் அனுபவம் கிடைத்திருக்கின்றது அல்லவா?













அவரிடம் விடை பெற்றுக் கொண்டு,கூடுவாஞ்சேரி வந்து, தாயார் இருவரையும் சந்தித்து தரிசனம் பெற்றோம்.வீட்டிற்கு சென்று, சுரேஷ் பிரியன் ஐயா கொடுத்த பார்சல் பிரித்து சாப்பிட்டோம்.அடடே..என்ன சுவை. சுண்டல், எலுமிச்சை சாதம் சொல்லவா வேண்டும் ? நல்ல காம்பினேஷன்.சூப்பர் டேஸ்ட். மனதார நன்றி சொன்னோம். இது போல் அழகிய நிகழ்வில் நம்மை அழைத்து,சிறப்பாக உபசரித்து, நவராத்திரி சிறப்பு பற்றி எடுத்துரைத்த சுரேஷ் பிரியன் ஐயா மற்றும் அவர் தம் அன்பு குடும்பத்தார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
நன்றி.திரு.சுரேஷ் பிரியன் ஐயா 

தள வாசகர்கள் அனைவரது இல்லத்திலும் சுபிக்ஷமும் லக்ஷ்மி கடாக்ஷமும் தழைத்தோங்க அம்பாளை பிரார்த்திக்கிறோம்.