"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, June 25, 2022

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 54ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 28.06.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022,  குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை,  ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 , அருள்மிகு  ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா  குரு பூஜை அழைப்பிதழ்,  மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை - 01.04.2022  அழைப்பிதழ்,  சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 ,  ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022, எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 93ஆவது மஹா குருபூஜை ,  ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழா - 28.05.2022  என சித்தர்களின் தரிசனம்,  திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீ மூட்டைச் சுவாமிகள் 72 ஆம் ஆண்டு குருபூஜை விழா - 31.05.2022,  குட்லாடம்பட்டி ஸ்ரீ ரமணகிரி சுவாமிகள் 67 ஆவது குருபூஜை - 01.06.2022  என நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள  அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 54ஆம் ஆண்டு குருபூசை விழா பற்றி அறிய உள்ளோம்.

முதலில் அழைப்பிதழை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.


 தற்போது நம் தளம் சார்பில் நடைபெற்ற மதுரை யாத்திரையில்  அருள்மிகு சோமப்பா சுவாமிகள் தரிசனம் பெற்றோம். மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் போதெல்லாம் நாம்  அருள்மிகு சோமப்பா சுவாமிகள் தரிசனம் பெறுவது வழக்கம். இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் நாம் பெற்ற தரிசனத்தை இங்கே பகிர விரும்புகின்றோம்.

 அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகமாய் விளங்கும் எல்லாம்வல்ல பரம்பொருள் நம்மிடம் கொண்ட தனிப்பெருங்கருணையின் காரணமாக தன் அலகிலாத  திருவிளையாடல்களை நடத்தி நம் பிணிகளைத் தீர்க்க தெய்வத்தின் தெய்வமாய் ஞானிக்கும் ஞானியாய் சித்தருக்கெல்லாம் சித்தராய் "சோமப்பா" எனும் திருநாமம் ஏற்று எழுந்தருளிய திருத்தலம் , திருப்பரங்குன்றத்தில் உள்ள திருக்கூடல்மலை.கூடல் மலை , தேவரும் மூவரும் , சித்தரும் முக்தரும் கூடும் மலை.

 

மலையின் சிறப்பு:  திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஈசான்யத்தில் அமைந்த இக் கூடல்மலை பல தேவதை களையும் சித்தர்களையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மை பெற்றது.
சித்தர்கள் பரிபூரண விருப்பத்துடன் உலவுகின்ற இம்மலையில் உள்ள ஒவ்வொரு துகளும் அவர்களின் திருப்பாதம் பட்டு புனிதமடைந்தவை யாகும். நம் சிரசின் மேல் தாங்கிக் கொண்டாடத்தக்கவை. இங்குள்ள கல்லும் மண்ணும் கூட உயிர்த்தன்மை கொண்டவை. நம்மிடம் பேசும் தன்மை கொண்டவை. உணர்ந்தவர் அறிவர்.


 சித்தருக்குள் சிவனாய் விளங்கும் ஐயா சோமப்பா சுவாமிகள் தாமே விரும்பி இந்த மலைக்கு வந்து நடமாடி அமர்ந்து நிலை கொண்டுள்ளாரெனின் இம்மலையின் பெருமையை அளவிட யாரால் இயலும் ?




ஐயா சோமப்பாவின் உயிர்த்துடிப்பால் இம்மலையே தங்கமலையாய்த் தெரிகிறதென்று ஞானிகள் சொல்கிறார்கள்.  எண்ணற்ற ரகசியங்களைக் கொண்டது.  இம்மலையில் வாழும் விஷஜந்துக்களும்கூட ஒருதீங்கும் செய்வதில்லை.  பொதுவாக சித்தர்களின் இருப்பிடம், மலைகளாயிருக்கின்றன. ஏனெனில் அங்குள்ள மரம்செடி கொடிகள், அவர்களின் தவத்திற்கும் பிணி போக்கும் தொண்டிற்கும் துணை செய்கின்றன, ஆனால் இங்கு இம்மலையே அனைத்து பிணி அகற்றும் ஆலயமாய் விளங்குகிறது.

பலப்பல ஜென்மங்களாய் செய்த புண்ணிய பலனே  ஒருவரை இம்மலைக்குக் கொண்டு சேர்க்கிறது. வந்தவர் யாவரும் தங்கள் உடல்பிணி, மனப்பிணி , வறுமை இவைநீங்குவதை சந்தேகமின்றி உணர்ந்து போற்றி மீண்டும்மீண்டும் வருகின்றனர் அனைத்தும் ஐயா சோமப்பாவின்,  தாயினும் மேலான அருளும் கருணையும்,கொண்ட அன்பாகும்.

 அதுமட்டுமல்லாது இக்கூடல்மலை, புராணத்தின்படி,காகபுசுண்டர்மலை எனப்படுகிறது.
காக புசுண்டர் எனும் மகரிஷி, பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் பிறந்த மகனாவார்.பல யூகங்கள் கொண்ட பிரம்மாவின் ஆயுள் முடிந்தாலும் காகபுசுண்டர் சிரஞ்சீவியாக காக உருவம் எடுத்து தவம் செய்து கொண்டு இருப்பார்.  இத்திருக்கூடல் மலையிலும் வந்து தவம் செய்தார்.

 திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் பொலிவின்முன் பெரிதாய் விளக்கமுறாத கூடல்மலை யின் பெருமை தன்னை மக்கள் சிறிதே அறிந்திட்டாலும் ஞானிகள் பெரிதென உணர்ந்தனர்.






ஞானியும் சித்தருமாகிய தவத்திரு மாயாண்டி சுவாமிகள் இம்மலையைத் தன் இருப்பிடமாகக்கொண்டு அருட்பணியாற்றினார். 

 நாம் அனைவரும் முற்பிறவிகளில் செய்த அருந்தவத்தால் சித்தருக்கெலாம் சித்தர் ஐயா சோமப்பா சுவாமிகள் 1920களில் இக்கூடல் மலை அடிவாரத்தில் தம் திருப்பொற் பாதம் பதித்தார்.

 சித்தமெலாம் சிவமான ஐயா அவர்கள் கூடல்மலையில் குடிகொள்ளத் திருவுள்ளம் கொண்டதை , தன் ஞானத்தால் தெளிவாக உணர்ந்த மாயாண்டி சுவாமிகள்,  திரு. இருளப்பக்கோனார் அவர்களிடம்_ "அப்பு...திருக்கூடல் மலைக்குள் ஒரு  சிவக்கனி வந்தாச்சு.உடனே போய்அதை பததிரமாய் அழைச்சிட்டு வா"  என உத்தரவிட்டார். 

மணல்மேட்டில் தாடி மீசையுடனும் ஒழுங்கில்லாத தலைமுடியுடனும்  சித்தபிரமை பிடித்தவர்போல் ஏகாந்தமாய் அமர்ந்திருந்த பகவான்சோமப்பா சுவாமிகளிடம் இருளப்பக்கோனார் அவர்கள்" ஐயா" என்று பணிவுடன் மெல்ல அழைத்தார்.  உடனே எழுந்தபகவான் சோமப்பாஐயா அவர்கள் " இனி சோமப்பா இங்குதான் இருக்கப் போகுது. " என்று அவரிடம் சொல்லிவிட்டு ஆனந்தத்துடன் ஓடிவிட்டார்.

 ஒருமுறை ஓர் உயர்ந்த இடத்தில் மாயாண்டி சுவாமிகள் வீற்றிருந்து தன் அன்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் பகவான் சோமப்பா சுவாமிகள் அங்கு வந்து தரையில் அமர்ந்தார். இதைக்கண்ட மாயாண்டி சுவாமிகள் உடனே தானும் தரையில் அமர்ந்தார். அனைவரும் வியப்புடன் நோக்க , மாயாண்டிசுவாமிகள் அவர்களிடம் பகவான்சோமப்பாசுவாமிகள்" என்னை விட, என் குருநாதரை விட என் குருநாதரின்  குருநாதரையும் விட மிகவும் உயர்ந்தவர்" என்றுரைத்தார்.

"பகவான் சோமப்பாஐயா அவர்களுக்கு திரு இருளப்பக்கோனார் அவர்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டுசென்று தருவர்.எப்போதாவது மண்சட்டியில் உள்ள தன் உணவில் சிறிதளவே எடுத்து உண்பார்.சிலநேரங்களில் பக்தர்கள் வற்புறுத்திய போதும் உண்ணமாட்டார்.மாயாண்டிசுவாமிகள் இது கண்டு " அவரை உண்ணும்படி தொந்தரவு செய்யவேண்டாம். அவர் எந்நேரமும் ஞானப்பாலாகிய அமிர்தத்தை அருந்திக்கொண்டிருக்கிறார். இந்தஉணவு தேவையில்லை." என்பார்.




பகவான் சோமப்பசுவாமிகள் கூடல் மலையில் எந்நேரத்தில் எங்கேயிருப்பார் என்று யாருக்கும் அறிய இயலாது.ஐயா அவர்கள் அளவிலாத துடிப்பும் விரைவான நடையும் கொண்டவர்.மலையில் விரைந்து ஓடுவார். சில சமயங்களில் பெரிய பாறைகளிலோ மரத்தடிகளிலோ கால் நீட்டிப் படுத்திருப்பார்.எப்போதும் இப்பிரபஞ்சத்தையே கவனிப்பது போல தீர்க்கமான மேல்நோக்கிய பார்வை கொண்டிருப்பார்.தனக்குத்தானே பேசிக்கொண்டும் இருப்பார்.

சமயத்தில் ஒரு பாயை விரித்து அதில் கால் நீட்டிப் படுத்திருப்பார். எறும்போ கரையானோ சுற்றி மொய்த்திருந்தாலும் அவர் இருக்கும் பாய் அருகே வரவே வராது.அரிய சில நேரங்களில் "ஸ்ரீ கண்ட யோகத்தில்"இருப்பார். அதாவது தன் தலை, கைகள், கால்கள் , வெவ்வேறாகத் துண்டித்துக் கிடப்பது போல் காட்சிதருவார்.சில நிமிடங்களில் மீண்டும் ஓர் உருவாகத் தென்படுவார்.  இந்த யோகம் மிகவும் பழுத்துக் கனிந்த சிவ யோகிகளுக்கே சாத்தியப்படும்.

 யோகிகள் சகல உயிர்களிடத்திலும் இறைவனையே காண்பார்கள்.இறைவனாகவே வந்து நிலைகொண்ட  ஐயா சோமப்பாசுவாமிகள் எல்லா உயிர்களையும் தன் குழந்தைகளாகக் கொண்டு கருணை மழை பொழிவார்.தன் தலைமுடிகளில் வசிக்கும் பேன்களையும் கூட தனது குழந்தைகள் என்றுகூறி அவற்றை அகற்ற மறுத்துவிடுவார்.




ஒருசமயம் ஐயாவின் காலில் ஒரு  கட்டுவிரியன்பாம்பு தீண்டியது. ஆனால் தீண்டியவுடன் பாம்பு இறந்தது.இதைக்கண்ட ஐயா அவர்கள் " களவாணிப்பய,கடிச்சான், செத்தான்" என்று கூறி , மூன்றுநாட்களுக்குப் பிறகு கடிபட்ட காலில் சிறிது மண்ணைத்தூவினார். உடனடியாகக் கடிபட்ட இடத்திலிருந்து பாம்பின் விஷம் முழுதும் வெளியேறியது. இதுவும்ஓர் அதிசயமே.

பல சமயங்களில் அவரைத்தேடி வரும் அன்பர்களின் முன் , வரமாட்டார். காலையில் வந்தவர்களை மாலைவரை கூடக் காத்திருக்கும்படி செய்து விடுவார்.பகவான் சோமப்பா சுவாமிகள் விளையாட்டாக ஒருநேரம் மூன்று சிறு கற்களை வைத்து ," ஒரு திருடன் ,இரண்டு போலீஸ் " என்று விளையாடினார் . அப்போது அவரை மூன்று பேர் காண வந்தனர். அவர்களில் இருவர் நல்லவராகவும் மற்றவர் தீயவராகவும் இருந்தது தெரியவந்தது.


 ஒருமுறை திருப்பரங்குன்றம் பகுதியில் பகவான் சோமப்பா சுவாமிகள்  சாலையைக் கடந்த போது ஒரு போலீஸ்காரர்  அவரை அடிக்கும்நோக்கில் கையை ஓங்கினார்.உடனே போலீஸ்காரரின் கை ஓங்கிய நிலையிலேயே செயலற்றுப் போனது. போலீஸ் காரர் பயந்து சுவாமிகளின் காலில் விழுந்து மன்றாடினார். பகவான் சோமப்பா சுவாமிகள் பெரும்கருணையுடன் அவரை மன்னித்தருள, போலீஸ்காரரின் கை சாதாரண நிலைக்குத் திரும்பியது.





ஒருமுறை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் சோமப்பாசுவாமிகளுக்கு  தன் கார் ஓட்டுநர் மூலம் சட்டை கொடுத்தனுப்பினார்.வந்தவரிடம் " சோமப்பா ஜெயிலுக்குப் போகுது " என்றார்.ஓரிரு நாட்களில் தேவர்அவர்கள் சிறை சென்றார்.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் மதுரை திருநகரில் தங்கியிருக்கும் போதெல்லாம் பகவான் சோமப்பா சுவாமிகளிடம் வருவது வழக்கம்.அப்படி வரும்போது சோமப்பாசுவாமிகள் தேவர்அவர்களிடம்" வாடா, உட்கார்," என்பார் .

தேவர்அவர்களும் அமர்ந்து தியானத்தில் இருப்பார். குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் , சோமப்பா சுவாமிகள்" போதும், கிளம்பு" என்றவுடன் தேவர்அவர்கள் , சோமப்பாசுவாமிகளின் திருவடிகளில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி,பின்னர் கிளம்பிச் செல்வார்.பகவான் சோமப்பா சுவாமிகள் பொதுவாக அனைத்து மக்களையும் "சோமப்பா"என்று அழைப்பார்.அதுமட்டுமன்றி கல்,மண்,மரம்செடி கொடிகள் , இதர ஜீவ ராசிகள் அனைத்தையும் கூட "சோமப்பா" என்றே அழைப்பது வழக்கம்.








பகவான் சோமப்பா சுவாமிகள் , இந்த அண்ட சராசரங்களையும் தன்,கைகளுக்குள் அடக்கியதன் அடையாளமாக இரு கைவிரல்களையும இறுகக் கோர்த்த நிலையில் அமர்ந்ததிருப்பார்.அவருடைய பார்வையும் ,இந்தப் பிரபஞ்சத்தையே உற்று நோக்குவதைப்போல மேல்நோக்கியேஇருக்கும்.பகவான் சோமப்பா சுவாமிகள் கடித்துத் தின்ற கொய்யாக்காயின் மீதத்தை எடுத்துக் கொள்ள,பலர் காத்திருப்பார்கள்.அவர் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த எச்சில் இலையைப் பெற ஒரு கூட்டமே காத்திருக்கும்.பகவான் சோமப்பா சுவாமிகள்கொண்டு,  வழக்கமாக ஒருபாயை எடுத்துக் கொண்டு சென்று விரித்துப் படுத்துக் கொள்வார்.அந்நேரத்தில் பெரும் மழை பெய்தாலும் அவர்மேல் ஒரு சிறுநீர்த்துளியும் படாது.

ஒரு சமயம் ஒருவர் , பலசரக்குக்கடைக்கு விநியோகம் செய்யவேண்டி வாளியில் நிலக்கடலை  கொண்டு சென்றபோது சோமப்பா சுவாமிகளை வழியில் தரிசித்தார்.அப்போது பகவான் சோமப்பா சுவாமிகள் அவரது வாளியிலிருந்து கைநிறைய கடலையை அள்ளித் தன் மடியில் போட்டுக் கொண்டார்.அந்த நபர் பலசரக்குக் கடையில் சென்று வாளியைத் திறந்து பார்த்த போது வாளி முழுக்க கடலை நிரம்பியிருந்தது கண்டு அதிசயித்தார்.

ஒருமுறை சோமப்பா சுவாமிகள் மதுரையில் ஓர் அன்பரின் வீட்டிற்கு ச்சென்றிருந்த போது அவ்வீட்டில் உள்ளோர் காது செவிடான  எட்டு வயதுள்ள தன்மகனை அவரிடம் காட்டி அக்குறையைத் தீர்க்க வேண்டுமெனக்கூறினர்.பகவான் சோமப்பா சுவாமிகள் கெட்ட வார்த்தைகளால் திட்டி அப்பையனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.உடனே அவனுக்கு காது தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது .





பகவான் சோமப்பா சுவாமிகள் ஒருவரை லேசாக முதுகில் தட்டினால் அவருடைய நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும்.சிறிது ஓங்கி தட்டினாலோ இறுதி நெருங்கிவிட்டது என்று அர்த்தம் .

பகவான்சோமப்பா சுவாமிகளின் ஜீவசமாதித் திருக்கோவில் திருப்பரங்குன்றத்தில் தியாகராஜர் பொறியியற் கல்லூரி செல்லும் வழியில் திருக்கூடல் மலையடிவாரத்தில் சுமார் முந்நாறு அடிக்கு மேலே அமைந்துள்ளது.பகவான் சோமப்பா சுவாமிகளை தரிசனம் செய்ய வருபவர்கள் , கீழே படிக்கட்டில் ஏறத் துவங்கி சோமப்பா சுவாமிகளை தரிசித்து , பின் கீழே இறங்கி முடிக்கும் வரை யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பவர்க்கு சோமப்பா சுவாமிகள் அனைத்து வரங்களையும் அருளுகிறார்.சிறிதளவு ஆணவத்துடனும் அங்கே வந்தால் கூட  அவர்களை மங்கச்செய்து விடுகிறார்.பகவான் சோமப்பா சுவாமிகள் நின்றருளிய கோயிலுக்கு வருபவர்கள், யாரிடமும் வீணான வேறு விவகாரங்களைப் பேசாமலிருப்பது நல்லது.அமைதியாக அமர்ந்து தமக்கு உள்ள குறைகளைத் தீர்த்தருளுமாறு வேண்டி தியானம் செய்வது நல்லது.

குரோதமான எண்ணம் , சூது கொண்ட  சிந்தனை, தீய நடத்தை, ஒழுக்கக்கேடு, போன்ற எதிர் மறைச் செயல்கள் , பகவான் சோமப்பா சுவாமிகளைக் கோபப்படுத்துபவையாகும் எதிர்மறைஎண்ணம் கொண்டோர் தண்டனைக்குள்ளாவார்கள்.



பகவான் சோமப்பா சுவாமிகள் அஷ்ட மா சித்திகளையும் பெற்றவர்.எனவே அனைத்தும் அறிவார்.
தான் முக்தியடைந்தபோதும் தன் சூக்சும உடம்புடன் இன்றும் எல்லா இடங்களிலும் உலவுகிறார்.
இதை , உண்மையாக அவரிடம் முழுக்க சரணாகதி அடைந்தவர்கள் உணர்வார்கள்.

பகவான் சோமப்பா சுவாமிகள் எங்கிருந்து புறப்பட்டு திருக்கூடல் மலைக்கு வந்தார் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. நதி மூலம் , ரிஷிமூலம் பார்க்கலாகாது. அதுபோல் பகவான் சோமப்பா சுவாமிகள் எங்கு , எப்போது பிறந்தார்?, அவரது வயது என்ன ? என்ற கேள்விகளுக்கும் இது வரை பதில் தெரியாது.  தவத்திரு மாயாண்டி சுவாமிகள்"காலங்காலமாக காடுமேடெல்லாம் கடந்து நடந்து உருண்டு திரண்டு பழுத்து பக்குவப்பட்ட சிவக்கனி. "_ என்று பகவான் சோமப்பா சுவாமிகளைப் புகழ்வார்.  பகவான் சோமப்பா சுவாமிகள் திருக்கூடல் மலைக்கு வந்த போது சுமார் இருபத்தேழு வயதுள்ளவராகத் தெரிந்தார். அதிலிருந்து, அவர் முக்தியடையும் வரை எந்த மாற்றமுமில்லாமல் சுமார் ஐம்பது வருடகாலம் அதே  இளமைத்தோற்றத்துடன்  இருந்தார்.





மாயாண்டி சுவாமிகள் சமாதி ஆகிவிட்டதை (1930-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி) அறிந்து எங்கிருந்தோ வந்து சேர்ந்தார்.  சோமப்பா.  மாயாண்டி சுவாமிகளின் திருமுகத்தை திருச்சமாதி வைப்பதற்கு முன் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்  என்கிற ஆவலில்,  எத்தனையோ பக்தர்கள் எங்கெங்கிருந்தோ வந்து குவிந்திருந்தனர். சமாதி நிலையை எய்துவிட்ட சுவாமிகளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் வெகு நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் சோமப்பா.  முகம் இறுகிப் போயிருந்த சோமப்பா, திடீரென மலர்ந்தார்.  மாயாண்டி சுவாமிகள் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியதை அப்போது சோமப்பா கவனித்துதான் இதற்குக் காரணம்.  இதை அடுத்து, அங்கு நிலவிய நிசப்தத்தைக் கலைக்கும் வகையில், சோமப்பா சாகவில்லை. சோமப்பா சாக மாட்டான் என்று பெருங்குரல் எடுத்துக் கத்திக்கொண்டே மலைக்கு ஓடி விட்டார்.







அதாவது. என் உடல் என்னை விட்டுப் பிரிந்தாலும், நான் என்றென்றும் உன்னுடனும் என் பக்தர்களுடன் இருந்து அருள் பாலிப்பேன்  என்கிற செய்தியை சோமப்பா வாயிலாக நமக்கெல்லாம் உணர்த்தி இருக்கிறார் மாயாண்டி சுவாமிகள்.  சமாதி ஆன பிறகும், மாயாண்டி சுவாமிகள் அருளிய புன்னகை இதைத்தான் நமக்குச் சொல்கிறது.  மாயாண்டி சுவாமிகளைப் போலவே, தான் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் சோமப்பா சுவாமிகளும் சமாதி ஆனார்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்து.  இவரது திருச்சமாதி நிகழ்வு நடந்தது.

தூய உள்ளமும் நற்சிந்தனைகளும் இருப்பவர்களைத்தான் இன்றைக்கு சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார்.  சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருச்சமாதி இது!

இத்தகு அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 54 ம் ஆண்டு குருபூசை வருகின்ற திங்கள் & செவ்வாய்க்கிழமை  27,28.06.2022  அன்று நடைபெற உள்ளது. முன்கூட்டியே இங்கு தகவல் தெரிவிக்க குருவின் ஆணை. ஏற்கனவே அழைப்பிதழ் பதிவின் ஆரம்பத்தில் இணைத்துள்ளோம்.


வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்தது கொண்டு குருவருளையும் திருவருளையும் அள்ளிக் கொள்ளும் படி நம் தளம் சார்பில் வேண்டுகின்றோம். இணைப்பில் உள்ள படங்கள் அண்மையில் நாம் தரிசித்த போது எடுக்கப்பட்டவை.விரைவில் நம் தரிசன அனுபவத்தை தனிப் பதிவாக தர குருவருள் புரிய வேண்டுகின்றோம்.
ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குட்லாடம்பட்டி ஸ்ரீ ரமணகிரி சுவாமிகள் 67 ஆவது குருபூஜை - 01.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/05/67-01062022.html

திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீ மூட்டைச் சுவாமிகள் 72 ஆம் ஆண்டு குருபூஜை விழா - 31.05.2022 - https://tut-temples.blogspot.com/2022/05/72-31052022.html

 ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழா - 28.05.2022 - https://tut-temples.blogspot.com/2022/05/28052022.html

எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 93ஆவது மஹா குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/05/93.html

ஓம் ஸ்ரீ பேப்பர் சுவாமிகள் 66 ஆவது குரு பூஜை - 05.05.2022 - https://tut-temples.blogspot.com/2022/05/66-05052022.html

ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/60-14042022.html

 சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/16-10042022.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022  - https://tut-temples.blogspot.com/2022/03/104-27032022.html

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

 ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/05/184.html

 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை 13 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் - 28.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/13-28022021.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html

சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_23.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html 

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_28.html

ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_90.html

இன்றைய சித்திரை திருவாதிரையில்... விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_78.html


வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

Wednesday, June 22, 2022

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - அகத்தியரின் அருள் பொழியும் இடம். ஈர்த்தெம்மை ஆட்கொண்ட இடம். நம் சிந்தையை மாற்றும் இடம். தாமிரபரணி தாயின் அருள் நிறைந்த இடம் என கூறலாம். நாம் முதன் முதலில் வெளியூருக்கு சென்று பூசை பார்த்த இடம். அகத்தியம் படிக்க உகந்த இடம். அகத்திய அடியார்களை ஒன்று சேர்க்கும் இடம். வருடத்திற்கு ஒரு முறை எனும் நாம் தாமிரபரணி தாயை வணங்குவதை வழியாக வைத்துள்ளோம். முதன் முதலாக சுமார் 7 பேர் சந்தித்தோம். சென்ற ஆண்டு நம் TUT நண்பர்களோடு சென்று தரிசித்தோம். இம்முறை அகத்தியரின் அருள் பெற காத்திருக்கின்றோம்.

ஓம்  அகத்தீசப்  பெருமானே  போற்றி 
ஓம்  அகிலம் போற்றும்  அறிவுக்கடலே போற்றி
ஓம்  அட்டமா  சித்துகள்  பெற்றவரே  போற்றி 
ஓம்  அகத்தியர்  மலை மீது  அமர்ந்தவரே  போற்றி 

என்றும் நம் குருநாதரை போற்றிக் கொண்டே இருக்கலாம். ஏனென்றால் போற்றினால் நமது வினை அகலுமப்பா! 



இன்றைய பதிவிற்கு உள்ளே செல்லும் முன்னர் நாளை 23.06.2022 நடைபெற உள்ள பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழை பகிர விரும்புகின்றோம்.


திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையிலுள்ள கொட்டந்தளம் எனும் இடத்தில் இருக்கிறது, கல்யாண தீர்த்தம்! இதைப் பார்த்தாலே திருமணம் நடந்து விடும் என்பது, தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.சிவன் - பார்வதி திருமணத்திற்கு, உலகிலுள்ள அனைவரும் இமயமலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு திசை உயர்ந்தது. இதைச் சமன்படுத்த, அகத்தியரை, தெற்கிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்பினார், சிவன்.

தன் மனைவி, லோபமுத்திரையால் அவ்வளவு துாரம் நடக்க முடியாதே என கரிசனப்பட்டு, அவளை தண்ணீராக மாற்றி, கமண்டலத்தில் அடைத்து, அதை துாக்கியபடி, பொதிகை மலைக்கு புறப்பட்டார், அகத்தியர். தெய்வ சங்கல்பமும் அவ்வாறே இருந்தது; லோபமுத்திரையின் மூலம் உலகுக்கே நலம் வழங்க, முடிவு செய்திருந்தார், விநாயகப் பெருமான்.

வரும் வழியில், குடகு மலை உச்சியில் கமண்டலத்தை வைத்து, சிவ பூஜையில் ஆழ்ந்தார், அகத்தியர். அப்போது, காகம் ஒன்று, கமண்டலத்தை தட்டி விட, தண்ணீர் கொட்டி, ஆறாகப் பெருகியது. சத்தம் கேட்டு கண் விழித்த அகத்தியர், தன் மனைவியை காப்பாற்றியாக வேண்டுமே என்ற வேகத்துடன் கமண்டலத்தை நிமிர்த்தி வைத்தார். பாதி நீர் கொட்டிவிட, ஒரு பகுதியே மிஞ்சியது.

அச்சமயம், காகம் உருவில் இருந்த விநாயகர் அவருக்கு காட்சியளித்து, 'அகத்தியரே... ஒற்றுமையாக வாழ்ந்து வரும் உங்கள் இருவரின் புகழ், உலகில் என்றென்றும் நிலைக்கவே, இவ்வாறு செய்தேன்; இனி, இவள், 'காவிரி' எனும் பெயரில் உலகம் உள்ளளவும், நதியாக ஓடுவாள்; இதிலுள்ள மீதி தீர்த்தத்தை தெற்கிலுள்ள பொதிகையில் விடு...' என, அருள்பாலித்தார்.

அதன்படியே, பொதிகை மலை உச்சியில் தீர்த்தத்தை விட்டார், அகத்தியர். அது, தாமிரபரணி எனும் பெயரில், நதியாக ஓடியது. மலை உச்சியில் இருந்து புறப்பட்ட அந்த நதி, ஓரிடத்தில் அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல, சீறிப் பாய்ந்து, அருவியாகக் கொட்டியது. அது, 'பாண தீர்த்தம்' என, பெயர் பெற்றது. மற்றுமொரு இடத்தில் பேரிரைச்சலுடன் அருவியாகக் கொட்டியது. அந்த இடத்தில், அகத்தியருக்கும், நதியாக ஓடிய லோபமுத்திரைக்கும் திருமண காட்சி தந்தனர், சிவனும் - பார்வதியும்! இதனால் அத்தீர்த்தம், 'கல்யாண தீர்த்தம்' என, பெயர் பெற்றது.

கல்யாணப்பெண்ணை, 'கல்யாணி' என்பர்; அம்பாளுக்கு கல்யாணி என்ற பெயர் உண்டு. இதனால், 'கல்யாணி தீர்த்தம்' என, பெயர் மருவியது.

கல்யாணி தீர்த்த அருவியில் குளிக்கும் வசதி கிடையாது; அதனால், கருணையுடன் தன் குள்ள உருவத்துக்கு தகுந்தாற் போல, சிறிய அருவியாக மாறி, விழச்செய்தார், அகத்தியர். அதுவே, அகத்தியர் அருவி. இதில், பக்தர்கள் நீராடி, அருகிலுள்ள நுாறு படிக்கட்டுகளில் ஏறினால், தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் அகத்தியரையும், லோபமுத்திரையையும் தரிசிக்கலாம்.

அகத்தியர் அருவி கரையில் அகத்தியர் கோவில் உள்ளது. இங்கு, அவருக்கு காட்சியளித்துள்ளார், முருகப்பெருமான்.ஜாதக ரீதியாகவோ, பிற காரணங்களாலோ திருமணத்தடை உள்ளோர், கல்யாணி தீர்த்த அருவியைப் பார்த்தாலே போதும்; திருமணம் கைக்கூடும். இந்த அருவி விழும் தடாகம் மிகவும் ஆழமானது; இதில், இறங்க முயற்சிக்கக் கூடாது. மங்கள நிகழ்ச்சி நடக்க, இங்கே ஒருமுறை போய் வாருங்கள்.

2016 ஆண்டில் நமக்கு கிடைத்த அகத்தியர் தரிசனத்தை இங்கே தொகுத்து தர விரும்புகின்றோம். 2016 ஆண்டில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கு விதை போடப்பட்டது. அப்போது நம்முடன் சில அகத்திய சொந்தங்கள் ஒன்றிணைந்தார்கள். இன்று வரை அந்த உறவு தொடர்ந்து கொண்டு வருகின்றது. 2016 ஆண்டில் தமிழக முழுதும் உள்ள அகத்திய அடியார்களை ஒன்றிணைக்க விரும்பி திட்டம் தீட்டினோம். ஆனால் இறையின் திட்டம் வேறாக இருந்தது. அந்த திட்டத்திற்காக சில அகத்திய சொந்தங்களுடன் நாம் பேசி வந்தோம். சரி. நாம் கட்டாயம் அத்திரி,கல்யாண தீர்த்தம், பாபநாசம் சென்று வரலாம் என விரும்பினோம். பெரம்பலூர் சதீஸ் ஐயா , திருச்சி செல்லப்பன் அண்ணா  , சென்னை விஜயலட்சுமி அம்மா என ஒன்றிணைந்து நாம் மேற்கொண்ட யாத்திரை இது.

அன்றைய தினம் நாம் பெற்ற தரிசனம் இங்கே காண உள்ளோம்.


முதலில் நாம் நம்  குருநாதரை வணங்கினோம். அடுத்து அபிஷேக காட்சிகள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.










                                                    அடுத்து பால் அபிஷேகம் செய்தோம்.




















அடுத்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தோம்.






அடுத்து விபூதி அபிஷேகம் செய்ய்யப்பட்டது.


அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்கார தரிசனம் பெற  இருக்கின்றோம்.ஒவ்வொரு விதமாக பல அருள்நிலைகளை இங்கே  தருகின்றோம்.கண்ணில் ஒற்றி, மனதில் இருத்திக் கொள்வோம்.




























 புற வழிபாட்டின் புனிதம் உணர்த்தப்பட்டோம். அட..என்ன ஒரு ஆனந்தம். பரவசம். இன்னும் அந்த பேரானந்த உணர்வு நம்மை உயிர்ப்பிக்க செய்கின்றது.

ஓம்  தமிழ்  முனியே  போற்றி 
ஓம்  இறைவனிடம்  தமிழ்  கற்றவரே  போற்றி 
ஓம்  தமிழின்  முதல் தொண்டரே  போற்றி 
ஓம்  தமிழின் முதல்  முனைவரே  போற்றி  
ஓம்  பொதிகைமலை  மாமுனியே  போற்றி 
ஓம்  தவ சீலரே  போற்றி 
ஓம்  சிவ சீடரே  போற்றி 
ஓம்  கும்ப சம்பவரே  போற்றி 
ஓம்  நந்தீஸ்வரரின் சீடரே போற்றி 
ஓம்  தன்வந்திரியிடம்  மருத்துவம்  பயின்றவரே  போற்றி 
ஓம்  தேரையருக்கு  மருத்துவம்  பயிற்றுவித்தவரே  போற்றி
ஓம் காமேஸ்வரி  மந்திர  உபதேசம்  பெற்றவரே  போற்றி 
ஓம்  வயதில் எல்லையில்லா  சித்தரே போற்றி 
ஓம் குருவுக்கெல்லாம்  மகா குருவே  போற்றி 
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே  போற்றி 
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 
ஓம் அகத்தியம்  தந்த  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்தியர்  காவியம்  தந்தவரே  போற்றி
ஓம்  அகத்தியர்  வெண்பா அருளியவரே  போற்றி 
ஓம் அகத்திய  நாடி அருளியவரே  போற்றி   
ஓம் அகத்திய சம்ஹிதை  அருளியவரே  போற்றி 
ஓம் ஐந்து சாஸ்திரம்  தந்தவரே  போற்றி 
ஓம் கிரியை யோகம்  படைத்தவரே போற்றி 
ஓம்  ஆறெழுத்து  அந்தாதி  அருளியவரே  போற்றி                       
ஓம்  வாகட  வெண்பா  அருளியவரே  போற்றி 
ஓம்  சிவா சாலம்  தந்தவரே போற்றி 
ஓம்  சக்தி  சாலம்  தந்தவரே  போற்றி 
ஓம்  சண்முக சாலம்  தந்தவரே  போற்றி        
ஓம் சமரசநிலை  ஞானம்  போதிதவரே  போற்றி 
ஓம்  சக்தி  சூத்திரம்  சமைத்தவரே  போற்றி 
ஓம்  இராமனுக்கு சிவகீதை  அருளியவரே  போற்றி 
ஓம்  ஆதித்ய ஹிருதயம் அருளியவரே  போற்றி                   
ஓம்  வாதாபியை  வதம்  செய்தவரே  போற்றி
ஓம்   சுவேதனின்   சாபம்  தீர்த்தவரே  போற்றி 
ஓம்  இடும்பனை  காவடி  எடுக்க  வைத்தவரே  போற்றி 
ஓம்  தொல் காப்பியரின்  குருவே  போற்றி
ஓம் கடல் நீரைக் குடித்து  வற்றச் செய்தவரே போற்றி 
ஓம் நீரின் மேலே  தவமிருந்தவரே  போற்றி 
ஓம் விந்திய மலையின்  அகந்தையடக்கியவரே போற்றி 
ஓம்  அசுராசுரர்களை  அழித்தவரே போற்றி                                        
ஓம்  காவிரியைப்  பெருக்கியவரே  போற்றி 
ஓம்  தாமிரபரணியை  உருவாக்கியவரே  போற்றி 
ஓம்  ராவணனை  இசையால்  வென்றவரே  போற்றி 
ஓம் அகஸ்தீஸ்வரம்  அமைத்தவரே  போற்றி 
ஓம்  தேவாதி தேவர்களை  காத்தவரே  போற்றி 
ஓம்  சிவசக்தி  திருமண  தரிசனம்  கண்டவரே போற்றி 
ஓம்  சித்த வைத்திய  சிகரமே  போற்றி 
ஓம் அகத்திய  பூஜாவிதி  தொகுத்தவரே போற்றி                     
ஓம்  நான்கு யுகங்களையும்  கடந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழால்  உலகை  ஆண்டவரே  போற்றி 
ஓம்  தமிழ்ச்  சங்கங்களின்   தலைவனே  போற்றி 
ஓம்  சிவசூரிய  வழிபாட்டைத்  துவக்கியவரே  போற்றி
ஓம்  கும்பத்தி லுதித்த  குறுமுனியே  போற்றி 
ஓம்  வடதென் திசையை  சமப்படுத்தியவரே  போற்றி 
ஓம்  உலோபமுத்திரையின்  மணாளா  போற்றி 
ஓம்  அம்பையில்  கோயில்  கொண்டவரே  போற்றி               
ஓம்  அரும் மருந்துகள்  அறிந்தவரே  போற்றி 
ஓம் அனைத்தும் கற்றுத்  தெளிந்தவரே  போற்றி 
ஓம்  முக்காலமும்  உணர்ந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழும்  வளர்த்தவரே  போற்றி                                         
ஓம்  ஆஷா சுவாஸினி மைந்தரே  போற்றி 
ஓம்  நெல்மணிகளின்  தலைவனே  போற்றி 
ஓம்  சிவன்  அம்சமே  போற்றி 
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி       
ஓம்  சர்வ  சக்திகளும்  தருபவரே  போற்றி 
ஓம் சகல கலைகளும்  சித்தியாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பிறவா வரம்  தரும்   பெருமானே  போற்றி 
ஓம்  தேவி  உபாசகரே  போற்றி                                                              
ஓம்  இசையிலும்  கவிதையிலும் மேன்மை தருபவரே  போற்றி 
ஓம்  கல்வித் தடை  நீக்குபவரே  போற்றி 
ஓம்  புத பகவானின்  தோஷம்  நீக்குபவரே  போற்றி 
ஓம்  முன் தீவினைப்  பாவங்கள்  தீர்ப்பவரே  போற்றி           
ஓம்  பேரும் புகழும் மதிப்பும் உண்டாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பூர்விக சொத்துக்கள் கிடைக்க  அருள்பவரே  போற்றி 
ஓம்  சகலவித  நோய்களையும்   தீர்ப்பவரே  போற்றி 
ஓம்  குடும்பத்தில்  ஒற்றுமை  நிலவச்  செய்பவரே  போற்றி 
ஓம்  பித்ரு சாபம்  நீக்கி    ஆசி பெற  அருள்பவரே  போற்றி 
ஓம்  சத்ருக்களின்  மனம்  மாற்றி  அன்புரச் செய்பவரே  போற்றி 
ஓம்  சித்திகள்  பெற்று  உயரச்  செய்பவரே  போற்றி 
ஓம்  நல் குருவாகி  மனதார  வாழ்த்து பவரே   போற்றி          
ஓம்  அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால்  போற்றி 
ஓம்  அகண்டம் பரி பூரணத்தின் அருளே   போற்றி 
ஓம்  மண்டலஞ் சூழ்  இரவிமதி  சுடரே  போற்றி 
ஓம்  மதுரத்   தமிழோதும்   அகத்தீசரே  போற்றி                        
ஓம்  எண்திசையும்  புகழும்  என் குருவே  போற்றி
ஓம் இடைகலையின்  சுழுமுனையின்  கமலம்  போற்றி 
ஓம்  குண்டலியில்  அமர்ந்தருளும்  குகனே  போற்றி 
ஓம்  மேன்மை கொள் சைவநீதி  விளங்க  செய்பவரே  போற்றி
ஓம்  கும்பேஸ்வரன் கோயில் முக்தி  அடைந்தவரே  போற்றி 
ஓம்  குருவாய்  நின்று  இன்றும்  ஆசிகள்  அளிப்பவரே  போற்றி 
ஓம்  குருமுனியின்  திருவடிகள்  எப்போதும்  போற்றி 
ஓம் இன்னல்கள்  நீக்கி இன்பம்  தரும்  அகத்தீசப்  பெருமானே 
உமது  திருவடிகள்  சரணம்  போற்றி.... போற்றியே .....    

        
அடுத்து சிவபுராணம் போன்ற பதிகம் பாடி, தீப ஆராத்தி செய்து வழிபாடு நடந்தது. பின்னர் அனைவரும் தனித்தனியாக தரிசித்தோம்.அடுத்து குழுவாக தருணத்தை காட்சிப்படமாக மாற்றினோம். பிரசாதம் விநியோகித்து அகத்தியரிடம் நன்றி கூறி மகிழ்ந்தோம்.




இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம். இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு மட்டுமின்றி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ஒரு பெரிய சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும்.இதற்கு புராணம் சொல்லும் காரணம், சிவபெருமானின் திருமணத்தை காண வந்த எண்ணிலடங்கா கூட்டத்தினால் ஏற்பட போகும் அசம்பாவிதத்தை தடுக்க, பூமியை சமநிலைப்படுத்த அகஸ்தியர் செய்த அமைப்பு இதுவென்று.             


திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது, பாபநாசம். இங்கிருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள அகத்தியர் அருவிக்கு ஆட்டோ, கார்களில் சென்று, படிக்கட்டுகளில் ஏறினால், கல்யாணி தீர்த்தத்தை தரிசிக்கலாம். காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு; வெள்ள காலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html


அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html