"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, June 8, 2019

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில்

 குன்றத்தூர்

குமரன் இருக்கும் இடம். சைவம், வைணவம் என பக்திக்கு பஞ்சம் இல்லாத ஊர். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பிறந்த ஊர். இன்னும் என்னென்ன சிறப்புகள் இந்த குன்றத்தூருக்கு உண்டோ யாம் அறியோம் பராபரமே என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. நம் TUT தளத்திற்கும் குன்றத்தூருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

சரியாக ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களின் பிறந்த நாளில் ,சென்ற ஆண்டு அருள்மிகு நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் உழவாரப் பணி செய்தோம். இது நாம் திட்டமிட்டு செய்யவில்லை. இறையருளாலே நடைபெற்றது,

பணி நிறைவில் குன்றத்தூர் முருகன் தரிசனம், கந்தழீஸ்வரர் தரிசனம், சேக்கிழார் பெருமான் தரிசனம் என்று நமக்கு காண கிடைத்தது என்றால் அதுவும் அவன் அருளால் தானே.

இது மட்டுமா? சென்ற ஆண்டு கார்த்திகை தீப திருநாளை இங்கே சென்று கொண்டாடினோம். இன்னும் நெஞ்சுள் அந்த நினைவுகள் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. நம் தளம் சார்பாக இலுப்பை எண்ணெய் தீபமேற்ற அன்று வாங்கி கொடுத்துள்ளோம். இது போல் பல சேவைகள் நாம் வெளியே சொல்லாமல் செய்து வருகின்றோம். அனைத்தும் அவர் அறிவார் அன்றோ. மீண்டும் இந்த பதிவில் கந்தழீஸ்வரர் பற்றி கூறுகின்றோம்.

சேக்கிழார் பெருமான் வைகை நதிக்கரைத் தெய்வங்கள்,காவிரிக்கரை கடவுளர்கள் என தரிசித்து விட்டு, தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தார். இப்போதைய குன்றத்தூரில் உள்ள இறைவனை தரிசித்து விட்டு, அங்கேயே தங்கினார். தன்னை இழந்தார். சிவத்திடம் சரணாகதி அடைந்தார். சிவ பெருமான் ஒரு நாள் , அவருக்கு அற்புத தரிசனம் அளித்ததோடு, அவரிடம் இருந்த கர்வம்,செருக்கு போன்றவற்றை அழித்தார். கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம். புகழ் ,பெயர் என பற்றிக் கொண்டிருந்த தனது பற்றுக்களை நீக்கியதால், இத்தல இறைவனுக்கு கந்தழீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. இதுவே இத்தலத்தின் புராதனம் ஆகும்.

அம்பாள் பெயர் இங்கே நகைமுகைவல்லி. சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்க திருமேனியராக சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. சோழர் கால கோவில் இது. இந்தக் கோவிலுக்கு சற்று அருகில் தான் சேக்கிழாரின் அவதாரத் தலம் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் தமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கி.பி. 1241 ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.

பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, ரிஷபாரூடர்  போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது. மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

தினமும் சேக்கிழார் வந்து வழிபட்டுள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் ஆலய தரிசனம் செய்து வருகின்றோம், எத்தனையோ ஆலயங்கள் சென்று வந்தாலும், நம் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் என்றால் நாம் சும்மா இருப்போமா? தினமும் சென்று தரிசனம் பெறுவோம் அல்லவா?  நாமும் ஆலய தரிசனத்தில் கூடுவாஞ்சேரியில் உள்ள வேலி அம்மன் தரிசனமும், மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர்,முருகர்,அகத்தியர் தரிசனமும் பெற்று வருகின்றோம்,  வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயம் இங்கு வந்து அருள் பெறுகின்றோம். அது போல் தான் கந்தழீஸ்வரர் ஆலயம்  சேக்கிழார்க்கு. அனு தினமும் அவர் வழிபட்ட ஆலயம். இதுவே இத்திருத்தலத்தின் சிறப்பு.











சென்ற ஆண்டு இந்த கோயில் நாம் கொண்டாடிய தீபத்திருநாள் வழிபாடு பற்றி காண்போம்.

தீபத் திருநாளில் கனவு நனவானது.



கோயிலை அடைந்ததும், திரு விஜயகுமார் அவர்களிடம் பேசி, தீபம் ஏற்ற ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டோம். ஈசனார் தரிசனம் பெற்ற பின்பு, அப்படியே கோயிலின் வெளியே வந்து, விளக்கு எடுத்து வைத்தல்,திரி போடுதல் போன்ற வேலை ஆரம்பமானது.











நேரம் ஆக, ஆக துள்ளாத மனமும் துள்ளியது. பின்னே..முதன் முதலாய் கார்த்திகை தீபம் கோயிலில் வந்து கொண்டாட இருக்கின்றோம், மேலும் நம்முடன் TUT குழுவும் உள்ளது என்னும் போது , மனம் துள்ளுவதில் சந்தேகம் இல்லையே. இதோ அடியார் ஒருவர் கோலம் இட்ட காட்சி. நம்மை வரவேற்கும் அழகுக் கோலம் 







கோயிலின் வெளியே ஒரு கல்வெட்டு இருந்தது. அதனை அங்கிருந்த மூதாட்டி தொட்டு வணங்கினார்கள். நாம் சென்று கேட்டபோது, விளக்கம் சொல்லவில்லை, மாறாக அனைத்தும் இதில் அடக்கம் என்றார்கள், நாமும் சென்ற முறை வந்த உழவாரப் பணியின் போது, இதனை கவனிக்க வில்லை, இதோ இன்று கவனித்துப் பார்த்தோம், கல்வெட்டு எழுத்துக்கள் நமக்குப் புரியவில்லை
சொக்கப் பனை ஏற்ற தயார் 
தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. அந்த வரிசையில் இங்கு நாம் சிவனுக்கு ஏற்றப் படும் தீபம் பார்க்க வந்திருக்க நாம் நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு, அறுமுகனுக்கு ஏற்றப்படும் தீப தரிசனமும் நாம் பெற்றோம்.


                                                  இலுப்பை எண்ணெய் சேர்க்கப்பட்டது

                                            
                                    தீபம் ஏற்ற அகல் விளக்குகள் தயார் செய்த காட்சி




                                     சேக்கிழார் பெருமானுக்கு அகல் வைத்த காட்சி





                          நவகிரக சன்னதியில் தீபம் ஏற்ற ஆயத்தப் பணிகள் ஆரம்பம்



கோயிலின் மேலே தீபம் ஏற்ற தயார் செய்த காட்சி 
 


சைதாப்பேட்டை பகுதியில் இருந்து வரும் அடியார் இவர், ஒவ்வொரும் நாயன்மாரின் பிறந்த நட்சத்திரத்தில் இங்கு வந்து, அன்றைய தினம் அடியார்களை தொழுது, தூப தீபம் காட்டி வழிபடுவது இவரது வழக்கம். இதனை நாம் கேட்ட போது மெய் சிலிர்த்தது. அடுத்த சந்திப்பில் இவரிடம் நிறைய விசயங்கள் கேட்க வேண்டும் என்று மனதில் விரும்பினோம். நேரம் மாலை 5:50 மணியை நெருங்கி விட்டது.  நாம் கொடுத்த இலுப்பை எண்ணையை அகலில் ஊற்றிவிட்டு, மீதம் எண்ணையை முருகன் கோவிலில் சேர்ப்பிக்க உத்தரவானது. சரி ! என்று கூறிவிட்டு, நாம் குன்றத்தூர் முருகன் கோவில் நோக்கி புறப்பட்டோம். வெளியே வந்து பார்த்தால், குன்றத்தூர் முழுதும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது.





 ஒரே பதிவாக , கார்த்திகை தீப அனுபவத்தை தர விரும்பி தொடங்கினோம். ஆனால் பதிவின் நீளம் கருதி குன்றத்தூர் முருகன் கோயில் அடிவாரத்தில் நாம் இந்த பதிவை நிறைவு செய்கின்றோம். அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம். என்னவென்று தெரியவில்லை, குன்றத்தூர் பதிவு என்றாலே தொடர்பதிவு தான் போலிருக்கின்றது.


மீள்பதிவாக:-

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html



ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html


எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html






 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html


 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

No comments:

Post a Comment