"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, July 31, 2020

வளங்களை அள்ளித் தருகின்றாள் வனபத்ர காளி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

பொதுவாக ஆடி மாதம் என்றாலே  களை கட்டும் திருவிழாக்கள் தான்.இந்த மாதம் முழுதும் நமக்கு கொண்டாட்டம் தான்.பின்னே ..தினமும் நாம் சக்தியின் அழகில்,அருளில் நனையலாம் அன்றோ ? எத்தனை எத்தனை ரூபங்கள். காமாட்சி,மீனாட்சி,விசாலாட்சி,ஈஸ்வரி,கருமாரி,காளி,சூலினி ,பத்ர காளி,சாமுண்டீஸ்வரி,மூகாம்பிகை,சங்கரி,பர்வதவர்த்தினி,அகிலாண்டேஸ்வரி,பகவதி,மகாகாளி, அபிராமி,மஹாலட்சுமி,பைரவி,பராசக்தி,திரிபுரசுந்தரி என்று. ஆனால் தற்போதுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொள்ளும் போது இந்த ஆண்டு ஆடி மாத விழாக்களை நாம் கொண்டாடவில்லை. மாறாக தொற்றுக்கிருமி தாக்கத்தில் திண்டாடி வருகின்றோம்.

2017 ஆம் ஆண்டில் ஆடி மாதம் தொடங்கும் முன்பே நாம் நேற்று சக்தியின்  தரிசனம் கண்டோம்.இது சிவத்தின் அருளாலே கிடைத்தது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள்.இது நூற்றுக்கு நூறு உண்மை. நாம் அவருடைய கையில் வெறும் பொம்மை தானே.ஆட்டுவிப்பர் அவரன்றோ.? நாம் தரிசித்த ஆலய தரிசனத்தை இங்கே யாம் பெற்ற இன்பம்,பெறுக இவ்வையகம் என்பது போல்,இந்த பதிவில் பகிர இருக்கின்றோம். முன்னரே அறிவித்தபடி, நம் அன்பர்கள் தங்களது இருப்பிடத்தில் உள்ள கோவில்களின் விழா நிகழ்வுகளை ஓரிரு வார்த்தைகளில் நமக்கு அறிவித்தால், அதனை இங்கே எதிர்வரும் பதிவுகளில் வெளியிட தயாராக உள்ளோம்.

கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள சக்தியின் தரிசனத்தை இனி வரும் நாட்களில் காணலாம்.சரி !
இன்றைய பதிவிற்கு செல்வோமோ?





கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் உள்ள இத்திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.மேட்டுபாளையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து போக்குவரத்து உள்ளதால்,கோவிலுக்கு எளிதில் செல்லலாம். தோரண வாயில் நம்மை வரவேற்றது,உள்ளே சென்றவுடன் மிகவும் பெரிய சிலைகள் தென்பட்டன. நமக்கு பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.


விசாரித்துப் பார்த்தோம்.சரியான தகவல் கிடைக்கவில்லை.ஆனால் மக்கள் இவர்களை சுற்றி வந்து வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.நாமும் வணங்கி விட்டு, அந்த சூலம் உள்ள பகுதியைக் கண்டோம்.இங்கே அம்மனுக்கு நேர்த்திக் கடனாக அசைவம் படையல் செய்கின்றார்கள்.அந்த இடம் தான் நீங்கள் பார்க்கின்ற சூலம் உள்ள பகுதி.அதன் அருகில் ஆட்டுக்கிடா வை சாமி வர வைத்து, படையல் செய்கின்றார்கள்.




சைவம்,அசைவம் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்.அதை பற்றி இங்கே யாம் பேச/விவாதிக்க விரும்பவில்லை. நம்முடைய நோக்கம் சக்தியின் தரிசனம் மட்டுமே. அதனைக் கடந்து சென்றால் உப்பு,கற்பூரம் வாங்கி ஒரு மேடு போல் பிரார்த்தனையை செலுத்துகிறார்கள்.






இவற்றுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால் இது பற்றியும் தெரியவில்லை.இந்த பதிவை படிக்கும் அன்பர்கள்,தங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.அனைவருக்கும் பயன்படும்.அப்படியே நேராக சென்றால், சக்தியின் பீடம் தான்.நாங்கள் அசைவ படையல் செய்ய வேண்டி இருந்ததால் அப்படியே சமைக்கும் இடத்திற்கு சென்றோம்.அங்கே தான் பவனி வருகின்றாள் இயற்கை அன்னை பவானி. ஆனால் நாம் கண்டா சூழ்நிலையில் மனம் கொதித்தது. ஆற்றின் ஓரங்களில் நெகிழிக் குப்பைகள். பாவம் ! அவள் என்ன செய்வாள் ?

இங்கே குளிக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால் பல இடங்களில் சூழல் அதிகம் என்பதால் பார்த்து,கவனமாக குளிக்க வேண்டும்.இது போன்ற தரிசனம் செய்யும் போது,நீர்நிலைகளில் கவனம் தேவை.







சரியாக சுமார் 11 மணி அளவில் அம்மனை தரிசிக்க சென்றோம். கூட்டம் கட்டுக்குள் இருந்தது. மாலை,அர்ச்சனை செட் வாங்கி விட்டு,வரிசையில் நின்றோம்.ஒரு மூன்றடுக்கு வரிசை இருந்தது.மனதுள் அம்மனை வேண்டிக் கொண்டே இருந்தோம். தெரிந்த சக்தியின் பெயர்களை மனம் உச்சரித்துக் கொண்டே இருந்தது.அன்னையை ! எப்படி அழைத்தால் என்ன ! அழைக்க வேண்டும் ! அவளது அன்பில் திளைக்க வேண்டும் ! இதுவே முக்கியம்.

அம்மன் சன்னதி செல்லும் முன்பாக இருந்த தீப மேடை மற்றும் சிங்க தரிசனம் தங்களின் பார்வைக்கு.





சிவத்திற்கு நந்தி வாகனம் என்றால்,சக்திக்கு சிங்கமே.அவள் கொடிய அரக்கர்களை அழித்து இருப்பாள்.அதற்கு சிங்கம் தான் தேவை.வரிசையில் முன்னேறிக் கொண்டே இருந்தோம்.அம்மன் சன்னதியை நெருங்கும் முன், மனதில், இங்கே தாயானவள் மிக உயரமாக இருப்பாள் என்று மனதுள் தோன்றியது. அன்னையின் சன்னதியை சரியாக அடையும் இடத்தில், வலப்புறமாக நம் முருகப் பெருமான்.அளவற்ற,மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். வேலும்,மயிலும்,சேவலும் துணை என்று மனதுள் சொல்லிவிட்டு உள்ளே சென்றோம் 


(கந்தர் அலங்காரம் தங்களின் கண்களுக்கு )

அம்மனை நெருங்கியதும்,தாயே.கருமாரி,பத்ரகாளி என்று அடுக்கடுக்காய் கூறி வணங்கினோம்.இந்த ஜகத்தை ஆட்டுவிக்கும் ஜனனி நீயன்றோ. இச்சா சக்தியும் நீயே ! கிரியா சத்தியம் நீயே !! மன்னிக்கவும். தாயை கண்களில் மட்டுமே பிடித்தோம்.மலர்கள் கொண்ட பூஞ்சோலையில், மணமணக்கும் வாசத்தில் வளங்களை அள்ளித் தந்து கொண்டிருக்கின்றாள் நம் அன்னை வன பத்ரகாளி.


(சிவ சக்தி சொரூபமாய் )

சன்னதியின் வெளியே வந்ததும், சிவத்தைக் காணாமல் போய்விட்டோமே என்று உள்ளம் ஏங்க இருந்த போது, மனம் ஆனந்தக் கூத்தாடியது. பின்னே இருக்காதா? சிவ சக்தி தரிசனம் ஒருங்கே கண்டோம்.கண்ணில் ஒற்றிக் கொண்டோம்.இங்கே தல விருட்சமாய் தொரத்தி மரம் உள்ளது.



கோவிலை விட்டு வெளியே வந்ததும்,அப்படியே ஒரு நோட்டம் விட்டோம். ஆம் ! அன்னை இங்கே ! வனத்தில் ! பத்ரகாளி இங்கே ! வனபத்ர காளியாக !!



தரிசனம் முடித்து நாகர் சன்னதி சென்றோம். சக்தி என்றாலே, நாகர் இல்லாமலா? மேலும் மஞ்சளின் மகத்துவமும் இருக்க வேண்டும் அன்றோ ?






பின்பு அப்படியே மத்திய உணவிற்கு சென்றோம். சைவ சாப்பாடு தான். ரசமும்,மோரும் ஊற்றி ஒரு பிடி பிடித்தோம்.சற்று ஓய்வெடுக்க மீண்டும் ஆற்றோரம் சென்றோம். அப்போது தான் ஆலமர விநாயகர் சன்னதி அங்கே இருப்பது தெரிந்தது. அலைபேசியில் கண்ணை மூடிக்கொண்டது.இது போன்ற தல தரிசனம் செல்லும் போது, அலைபேசியின் பேட்டரி முக்கியம் என்று தெரிந்தது.

ஆலமரத்தடியில்,பவானி ஆற்றின் கரையில்  அழகிய தொந்தி கணபதி, அருமையான தரிசனம்,அங்கே இளைப்பாற இடமும் இருந்தது.காற்றின் சலசலப்பில், மனதில் இருந்த துயரங்கள் மாயமாகிக் கொண்டே இருந்தது.மாலை 3 மணி அளவில் மீண்டும் கோவை நோக்கி புறப்பட்டோம்.அம்மனை மனதுள் மீண்டும் ஒருமுறை வணங்கி விட்டு கிளம்பினோம்.


மூலவர் - வனபத்ர காளியம்மன்
தல விருட்சம் - தொரத்திமரம்
தீர்த்தம் - பவானி தீர்த்தம்
பழமை - 500-1000 வருடங்களுக்கு முன்பு
மாவட்டம் - கோயம்புத்தூர்

தல  வரலாறு:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலம் இதுவாகும்.


அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. கோவிலையொட்டி மேல்புறத்தில் பவானி ஆறு ஓடுகிறது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பானதாகும்.

தாங்கள் எண்ணிய காரியம் நிறைவேற அம்மனை வேண்டி விரதம் இருந்து பக்தர்கள் பூக்குண்டம் இறங்குவார்கள். ஆடிப்பெருக்கன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் அருகேயுள்ள பவானி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பனம் செய்வார்கள்.

7 கல் எடுத்து அவற்றுக்கு விபூதி பூசுவார்கள். பின்னர் சந்தனம், குங்கும் வைத்து படையலிட்டு வழிபடுவார்கள். புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம்.

சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து,ஏதாவது  ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு. அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது, குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பு.

ஆடி அமாவாசை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெறும். அன்னையை அமாவாசை தோறும் வழிபடுவோர் பில்லி, சூனியம் போன்ற இடர்பாடுகளில் இருந்து விலகி இன்சுகம் பெறுவதாக ஐதீகம். எனவே ஆடி அமாவாசை இந்த கோவிலின் விசேசமான நாளாகும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு டவுன் பஸ் வசதி உள்ளது.

நடைதிறந்திருக்கும் நேரம்...
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.

- அம்மன் புகழ் ஓங்குக!

முந்தைய பதிவிற்கு :-

வரம் பல அருளும் வரலட்சுமி நோன்பு இருக்கலாமே - 31.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/31072020.html


நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

Thursday, July 30, 2020

வரம் பல அருளும் வரலட்சுமி நோன்பு இருக்கலாமே - 31.07.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் வரலட்சுமி நோன்பு பற்றி காண இருக்கின்றோம். இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு நாளை கொண்டாடப் பட உள்ளது. நாளை நாம் அனைவரும் வரலட்சுமி நோன்பு இருந்து வரங்களை நம் அன்னையிடம் பெறலாமா? இதோ..இன்றைய பதிவில் வரலட்சுமி நோன்பு பற்றியும், விரதம் இருக்கும் முறை என சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.




லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.




விரத முறை:

இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.



விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

3. மங்கல வாழ்வு அமையும்.

4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.

5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ

வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்

ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது

தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே

(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மகாலட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணு பத்னீ ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

அர்ச்சனை நாமாக்கள் :

ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :

ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:

ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :

ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :

ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :

ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :

ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :

ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :

ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :

ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :

ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :

ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :

ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :

ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :



மன சுத்தியுடன் செய்யப்படும் இந்த பூஜையானது தேவியை மகிழச் செய்து, நம் இல்லத்தைத் திருமகள் குடியிருக்கும் கோவிலாக மாற்றும்.

இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் பிழையில்லை. மனதை நல்லெண்ணங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்கள் சூழ வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அது தான் இறைவன் குடியிருக்கும் இடம்.

சக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும். வரங்கள் அனைத்தையும் அருளும் ஸ்ரீ மகாலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்றுப் போற்றி வழிபடுவோம்... அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று இன்பமாகவும், வளமாகவும் வாழ்வோம்...

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_28.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

Tuesday, July 28, 2020

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆடி மாத அமாவாசை  மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய நட்சத்திர ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, ஆடி மாத சேவைகள் அனைத்தும் குருவருளால் நம் தளம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இக்கட்டான சூழலிலும் பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி இன்றையப் பதிவை தொடர்கின்றோம்.


ஆனி மாத வழிபாடுகளில் ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பற்றி பார்த்தோம். எம் தமிழ்மொழியோடு  தற்போது செய்துவரும் பயணத்தில் தான் நமக்கு கிடைத்தற்கரிய முத்துக்கள் கிடைத்து வருகின்றது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நமக்கு கொண்டாட்டமாக இருக்கின்றது. இல்லத்தில் தான் இருக்கின்றோம். ஆனால் இதயத்தில் எம் பெருமான் இருக்கின்றார் அல்லவா? எத்தனை அருளாளர்கள் நமக்கு கிடைத்துளார்கள். நமக்கு வழிகாட்டியும் வருகின்றார்கள்.

இந்த பாரத நாடு, பழம் பெரு நாடு என்பது மட்டுமன்றி பல அருளாளர்களை தன்னகத்தே கொண்ட நாடு, ஆன்மிகத்தையும், ஆரோக்கியத்தையும் பாருக்கே சொன்ன நாடு. எண்ணிக்கையில் அடங்கா அருளாளர்களைக் கொண்ட நாடு. "நான் யார் ?" என்று உலகிற்கே போதித்த ரமண மகரிஷி, வடக்கே கங்கை ஆற்றின் பக்கத்தில் பிறந்து, தென்னகத்தில் வந்து ஞானம் பெற்ற "யோகிராம் சூரத் குமார்" , சைவத்தில் நால்வர்கள் மட்டுமின்றி, அறுபத்து மூன்று நாயன்மார்கள், வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள், கௌமாரத்தில் அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வாரியார் சுவாமிகள், நவகோடி சித்தர் பெருமக்கள், ரிஷிகள். முனிவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். எம் பெருமான் தன் அறுபது நான்கு  திருவிளையாடல்  நடத்தி காட்டிய ஊர் என்று ஒன்றா, இரண்டா அற்புதஙகள். எண்ணிலடங்கா அற்புதங்கள் கொண்ட நாடு நம் பாரத நாடு.

இந்த பாரத நாட்டில் அவதரித்த மகான்கள், அருளாளர்களை கொண்டாட வேண்டியது நம் கடமை அல்லவா? எனவே தான் அருளார்களின்  குரு பூசை தகவல்களை கூடுமானவரை நம் தலத்தில் தொகுத்து தருகின்றோம். அருளார்களின் கால் பட்ட இடத்தில நம் மனம் பட வேண்டும். உதாரணமாக வடலூர் சென்றால் நாம் வள்ளலாரின் புனிதம் அறிய முடிகின்றது. அந்த மண்ணை மிதிக்கும் போது நம்மிலும் ஜீவ காருண்யம் கொஞ்சமாவது பெறுவதை நாம் உணர முடிகின்றது. இது போன்ற தலங்களுக்கு நாம் சென்று அருளாளர்களின் அருளை நாம் பெற முடியும் அல்லவா?

இந்த வரிசையில் ஆடி சுவாதி குருபூஜையாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பற்றி இன்று காண இருக்கின்றோம்.

அந்தணர் குலத்திலே தோன்றி, அரச வாழ்விலே வளர்ந்து - ஒருமணத்தை சிதைவு செய்து ஆட்கொண்ட உவனைக் கொண்டே இருமணத்தை கொண்டருளிப் பணி செய்த வல்லாளன் 

 பதினெட்டு வயதில் பாடுகின்றார் - "வேறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டு ஒழிந்தேன்.

 மனைவி மக்கள் சச்சரவா? சொத்து பிரச்னையா? நோய்த் தொல்லையா? 

இதை எல்லாம் சிவனே அவருக்கு உடனிருந்து தீர்த்து வைத்தானே.

 பின் ஏன் வெறுப்பு? வாழ்வு ஆவது மாயம் இது மண்ணாவது திண்ணம்
என உணர்ந்தமையால்

மண்ணிலே பிறந்து இறந்து மண்ணாவற்கு
 ஒருப்படாமையால்

இதனாலே நொடித்தான் மலை உத்தமன் - வான் எனை வந்து எதிர் கொள்ள மத்தயானை அருள் புரிந்து  ஊன் உயிர் வேறு செய்தான்

சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார்.பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். [திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.



இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.  இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றார்களான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 என கையாண்டார்.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை. 

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர்.  இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். 

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார்.

இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.

இப்படி  பாடிய வாறே கயிலை சென்ற நாள் இன்றைய ஆடி சுவாதி நன்னாள் - கி.பி.825இல் என்பர். அதன்படி நேற்றைக்கு  1195 வது குருபூசை.

இனி குருபூஜை தரிசனம் காண இருக்கின்றோம்.

நேற்று சைதை நடராஜர் சபை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழா

                                                                                                                                                                                                  

                                                                                                                                                                                                    

                                                                                                                                                                                                     












அடுத்து நாம் ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்கு சென்று நால்வர் தரிசனம் பெற்றோம். நேற்று அங்கே சுந்தரர் குருபூஜை வழிபாடு நடைபெற்றது. சில நொடிகள் அங்கே இருந்த தருணத்தை இங்கே பதிவு செய்கின்றோம்.















இளநீர் அபிஷேகமும், விபூதி அபிஷேகமும் நாம் கண்டோம். அபிஷேகத்தில் ஒவ்வொரு அடியார்களும் பதிகம் பாடி நம்மை மெய் சிலிர்க்க வைத்தனர். சில பணிகள் காரணமாக நாம் அங்கிருந்து பாதியிலேயே விடை பெற்றோம். மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. நால்வரின் அலங்கார தரிசனம் பெற முடியவில்லையே என. என்ன ஒரு ஆச்சர்யம். இன்று அந்த தரிசனத்தை பெற்றோம். இதோ..நீங்களும் பெற இங்கே பகிர்கின்றோம்.

 




அட..இப்படியொரு தரிசனம் நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது என்றால் அது ஈசனின் கருணையால் அன்றோ !

நேற்று காலை சுமார் 9 மணி அளவில் சுந்தர் குரு பூஜை குன்றத்தூர் ஸ்ரீ கந்தழீஸ்வரர் திருக்கோயிலில் நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு சார்பில் நடைபெற்றது. நேற்று காலை குருக்கள் நமக்கு அலைபேசியில் அழைத்து சங்கல்ப விபரங்களை கேட்க, நாம் வழக்கமாக உலக நன்மைக்கு சங்கல்பம் செய்ய வேண்டினோம். இந்த அசாதாரண சூழலிலும் நமக்கு இருந்த இடத்தில் இருந்து நால்வரின் தரிசனம் பெற்றுள்ளோம். அதுவும் சுந்தரரின் குருபூஜை அன்று பெற்றுள்ளோம் என்பது பெறற்கரிய பேறு தான். குன்றத்தூரில் இருந்து சுந்தரர் குருபூஜை அருள்நிலைகளை பகிர்கின்றோம்.





மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html