"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, July 8, 2020

நாம் காணும் பிள்ளையார் - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக நிறைவு பணியில் இருப்பதால் மீண்டும் பொருளுதவி கேட்டு இன்றைய பதிவில் தொடர்கின்றோம். இந்தப் பதிவில் நாம் இரண்டு வித உதவிகளை கேட்கின்றோம். ஒன்று பொருளுதவியாக வேண்டுகின்றோம். பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் தாராளமாக பொருளுதவி செய்து எம் பெருமான் அருள் பெற வேண்டுகின்றோம்.  இரண்டாவது உங்களிடம் அருளுதவி எதிர்பார்க்கின்றோம். இதனை நீங்கள் உங்கள் உடல் உழைப்பால் செய்யலாம். இதனை அன்பர்கள் கூட்டுப் பிரார்த்தனையாக செய்திட உங்களிடம் வேண்டுகோள் வைக்கின்றோம்.

முதலில் கூட்டுப்பிரார்த்தனை பற்றிய செய்தியை தங்களிடம் பகிர விரும்புகின்றோம்.
                          


சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஷேத்ரம் நம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

பொருள் கேட்போருக்கு  பொருளும் ,

அருள் கேட்போருக்கு அருளும்,

பிள்ளை கேட்போருக்கு பிள்ளையும்,

தொழில்  கேட்போருக்கு தொழிலும்,

பணம் கேட்போருக்கு பணமும்,

முக்தி கேட்போருக்கு முக்தியும்,

என அவரவர் விருப்பம் போல்  நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் படி அளப்பார்.

இந்த ஆலயப்பணியில் இணைந்து திருப்பணி செய்யும் மக்களுக்கு, ஆதிரை மண்டலத்தில்(ஒரு நட்சத்திர தொகுதி) அவர்கள் பெயரை பதிய வைப்பார் ஈசன்.

அடுத்த ஜென்மத்தில் பிறப்பில்லா நிலை அடைவர்.

ஆலயத் திருப்பணி முன்நின்று செய்யும் மக்களுக்கு ஈசனின் ஆசி பரிபூரணமாக உண்டு.

குடமுழுக்கு சிறப்பாக நடைபெற, தடைகள் விலக குழுவினர்கள் இணைந்து, அவரவர் இல்லத்திலே அமர்ந்து, விநாயகரை பிராத்தனை செய்து, வாரந்தோறும் 
 வியாழக்கிழமை விநாயகர் அகவலை ஓத வேண்டும்.




குடமுழுக்கு நாள் வரை அடியார்கள் ஒன்றிணைந்து, குருவாரம் தோறும் 
 விநாயகர் அகவலை ஓதி வர வேண்டும்.

இவ்வாறு முருகப்பெருமான் ஜீவநாடியில் உரைத்துள்ளார்.

ஆலய குடமுழுக்கு சிறப்பாக நடைபெற, நம் குழுவில் உள்ள அடியார்கள் ஒன்றிணைந்து,  வாரந்தோறும் வியாழக்கிழமை விநாயகர் அகவலை ஓத ஓத, விநாயகப் பெருமானே முன்னின்று ஆலய குடமுழுக்கை நடத்தி வைப்பார்

விநாயகர் அகவலை ஓத அடியார்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!

அடுத்து நாம் காணும் விநாயகர் பற்றி சிறிது சிந்திப்போம்.

நாம் பிள்ளையார் கோயிலுக்கு . அங்கே வினை தீர்க்கும் விநாயகரை பார்க்கின்றோம். அவர் திருவுருவம் உட்கார்ந்த நிலையில் உள்ளது. இன்னுமொரு விநாயகர் கோயிலுக்கு செல்கின்றோம். அங்கே விநாயகர் நின்று கொண்டிருக்கின்றார்.இன்னுமொரு கோயிலில் நடனமாடிக் கொண்டிருக்கின்றார். சில கோயில்களில் விநாயகருக்கு 8 கைகள் உண்டு. 

இதற்கு காரணம் என்ன?

கடவுளை வழிபடுவார்கள் உள்ளம் அவர்கள் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுபடுகின்றது. பக்குவத்துக்கு ஏற்ப மாறுபடுகின்றது. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இதனை அனைவரும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு திருஉருவ அமைப்பில் ஈடுபடும் உள்ளம் இருக்கும். அந்த திருவுருவங்கள் அவரவரின் உள்ளதை ஒன்ற செய்யும்.ஒன்றிய உள்ளம் தியானிக்கும். தியானித்த உள்ளம் இறையை சிக்கென பிடிக்கும்.

இவ்வாறாக 32 திருவுருவங்களில் விநாயகர் அருள் தருகின்றார்.

1.பால கணபதி
2. தருண கணபதி
3. ஸ்ரீ பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சக்தி  கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிஷ்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. மஹா கணபதி
13. விஜய கணபதி
14. நிருத்த கணபதி
15. ஊர்த்துவ கணபதி
16. ஏகாட்சர கணபதி
17. வர கணபதி
18. திரயாஷுர கணபதி
19. க்ஷிப்ரபிரசாதர் 
20. ஹரித்திரா கணபதி
21. ஏகதந்தர்
22. சிருஷ்டி கணபதி
23. உத்தண்ட கணபதி
24. ரணமோசனர் 
25. துண்டி கணபதி
26. துவிமுக கணபதி
27. மும்முகப் பிள்ளையார் 
28. சிங்க கணபதி
29. யோக கணபதி
30. துர்க்கா கணபதி
31.சங்கடஹரர் 
32. சித்தி புத்தி விநாயகர்

இது போன்ற அருள்நிலை விநாயகருக்கு மட்டுமே உண்டு. வேறு தெய்வங்களையும் சேர்த்து பார்த்தால் விநாயரின் அருள் நிலையே அதிகம். நாம் ஏற்கனவே சொன்னது போல் இத்தனை அருள் நிலைகள் நம்மை மேம்படுத்தவே. இந்த எண்ணத்தில் தான் நாம் இறையை வழிபட வேண்டும். சரி. அடுத்து விநாயகர் அகவலுக்கு வருவோம்.

விநாயகர் வினை தீர்ப்பவர் என்றால் இன்னும் அவரை துதித்து பாடி வேண்டுவது இன்னும் நம் வினைகளை நீக்கும் என்பது கண்கூடு. சரி..அகவல் என்றால் என்ன ? அழைத்தல் என்று பொருள் கொள்ளலாம். அகவல் என்று நாம் ஒளவைப் பாட்டி நமக்கு அருளிய விநாயகர் அகவல் மற்றும் வள்ளலார் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் என இரண்டு நூற்கள் மட்டுமே அகவல் என்ற பெயர் தாங்கி உள்ளது. இங்கே நாம் விநாயகரை அழைக்க இருக்கின்றோம். எனவே இது விநாயகர் அகவல் என்று பொருள் பெறுகின்றது.




இதோ. கற்பக விநாயகர் திருக்கோயில் தரிசனம் பிள்ளையார் பட்டியில் இருந்து. அப்படியே ஒரு மூன்று முறை விநாயகர் அகவல் பாராயணம் செய்ய அனைவரும் தயாரா?

விநாயகர் அகவல் பாடல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

 

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

 

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

 

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

 

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

 

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

 

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

 

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!


இனி, நாம் பொருளுதவி வேண்டி விண்ணப்பம் வைக்கின்றோம்.

iசென்னை - திருநின்றவூர், நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் முடிக்கப்பட வேண்டிய எஞ்சிய உள்ள மிக முக்கிய பணிகளின் அடிப்படையில் ஒவ்வொன்றாக  பின்வருமாறு :

1. முதல் முக்கிய பணி :

ஆலயத்தின் பிரதான மண்டபத்திற்குள்  ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் மூலவர் சந்நிதி, 
ஸ்ரீ சொர்ணாம்பிகை அம்பாள் சந்நிதி, நடராஜர் சந்நிதி என அமைக்கப்படுள்ளது.

மண்டபத்தில் உள்ள சந்நிதிகளின் பாதுகாப்பிற்கு சுற்றிலும் நான்கு புறம் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

எழுப்பியுள்ள சுவற்றில் இருந்து மேல்தளம்(Ceiling) வரை மூன்று அடிக்கு இரும்பு அல்லது ஸ்டீல் மூலம் கிரில் கம்பிகள் அமைக்கும் பணிகள் நான்குபுற சுவர்களிலும் முடிக்கப்பட வேண்டி இருக்கிறது.

இதனுடன் மண்டபத்தின் முக்கிய பாதுகாப்பிற்கு இரும்பு அல்லது ஸ்டீலால் ஆன இரண்டு பெரிய பாதுகாப்பு கதவு (Gate) செய்யப்பட வேண்டும்.

மற்ற சந்நிதிகளுக்கும் பாதுகாப்பு கதவு (Gate) என மாெத்தம் ஐந்து கதவுகள்(Gate) இரும்பு அல்லது ஸ்டீலால் செய்யப்பட வேண்டும்.

2. இரண்டாவது முக்கிய பணி :

ஐம்பொன்  அல்லது பஞ்சலோகம்  சிலை செய்தல் :

05 ஐம்பொன்  (பஞ்சலோகம் ) சிலைகளை நாம் செய்யவிருக்கிறாேம்.

1. நடராஜர் சிலை

2. சிவகாமி அம்பாள் சிலை

3. விநாயகர் சிலை

4. முருகர் சிலை.

5. மாணிக்கவாசகர் சிலை

இந்த ஐந்து சிலைகளை உருவாக்குவதற்கு நமக்கு

1. தங்கம்,
2. வெள்ளி,
3. செம்பு(காப்பர்),

போன்ற பொருட்கள்  தேவைப்படுகிறது.

சிலைகள் செய்ய செம்பு என்கிற காப்பர் அதிகம் தேவைப்படுகிறது.ஆடலரசன் நடராஜர் பெருமானின் அருளைப் பெற, அடியார்கள் தங்களால் முடிந்ததை பொருளாகவோ, பணமாகவோஅளிக்கலாம்.

05 சிலைகள்(நடராஜர், சிவகாமி அம்பாள், விநாயகர், முருகர், மாணிக்கவாசகர்) செய்வதற்குண்டான ஆட்கள் கூலி பணமாக தேவைப்படுகிறது.

ஒவ்வாெரு சிலைக்கும் ஒரு அடியார் வீதம், விருப்பம் உள்ள அடியார்கள் யாராவது வந்து சிலைகள் செய்வதற்கு உண்டான செலவை ஏற்றுக் கொள்ளலாம் 
அந்த தெய்வத்தின் பரிபூரண அருளைப்பெற ஒரு பெரும் பாக்கியம் இது.

3. மூன்றாவது முக்கிய பணி :

ஆலய பிரதான மண்டபத்திற்கு கிரானைட் கற்கள் பதித்தல் :

தேவைப்படுவது :

1. சிமெண்ட் 20 மூட்டைகள்.

2. மணல் 03 யூனிட்

3.  மண்டபத்தின் தரையில் 1000 சதுர அடிக்குண்டான கிரானைட் பதிக்க ஆட்களுக்குண்டான கூலி

மண்டபத்திற்கு உள்சுவர், வெளிசுவர் பூசுவேலை செய்ய 15 மூட்டை சிமெண்ட், கோபுரத்தில் 11 பொம்மைகள் அமைக்க 05 மூட்டை சிமெண்ட் என எல்லா பணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக  50 சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படுகிறது.

4. நான்காவது முக்கிய பணி :

அகத்தியர் சந்நிதிக்கு எதிர்புறத்தில் 15 அடி நீளம், 40 அடி அகலம் காெண்ட ஷீட்டுகள் காெண்ட பந்தல் அமைக்கும் பணி.

அடியார்கள் தங்களால் முடிந்ததை  பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து சேவை புரியலாம்.

ஆலயத்தில் நடைபெற்று வரும் சில பணிகளை இங்கே  தங்கள் அனைவரின் பார்வைக்கு தந்துள்ளோம்.
















ஆலயத் திருப்பணிக்கு நன்கொடை வழங்குவதற்கான  வங்கி கணக்கு விபரங்கள் :

பெயர் : ஸ்ரீஅகத்தீஸ்வரர் அறக்கட்டளை (Sri Agatheeshwarar Trust),

வங்கி : கனரா வங்கி (Canara Bank),

A/C No : 6161101002984

IFSC Code : CNRB0006161

MICR: 600015165

கிளை : திருநின்றவூர் கிளை (Thirunindravur Branch),

என்றும் இறைபணியில் :

திரு. கஜேந்திரன் அவர்கள்,

+919789053053(Whatsapp)
+919080590956





ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய சேவையில் பங்கு கொண்டு அனைவரும் இறையருள் பரிபூரணமாக பெறுவாவோமாக!

திருச்சிற்றம்பலம்!

மீள்பதிவாக:-

வினை தீர்க்கும் விநாயகர் அகவல் - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_3.html

கணபதியே வருவாய் அருள்வாய் ! - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment