"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 16, 2026

சித்தன் அருள் - 2145 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 9

                     இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 9 - நிறைவு பகுதி 

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
=========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

================================================
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று   நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 9   - நிறைவு பகுதி  )
================================================

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 19   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

( திருவாசகம் சிவபுராணம் )

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

===============================================
# இடைவிடாமல் புண்ணியங்கள் செய்தால் எப்படி வாக்குகள் வரும் என்று பின் வரும் வாக்குகளை படித்து அறிந்து , அனைவரும் அனுதினமும் புண்ணியங்கள் செய்யுங்கள்.  
===============================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட உன்னிடத்திலிருந்தே கேட்கின்றேன். வரட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேள்விகள் உங்களிடத்திலிருந்தே கேட்கின்றேன். வரட்டும். 

===============================
# செய்யும் புண்ணியங்கள் உங்களை பாதுகாக்கும் 
===============================

அடியவர் 19   :-  ஐயா, அன்னதானம் 12 வருஷமா பண்ணிட்டு இருக்கோம். ஐயா, வாரத்துல ஒரு நாள் டெய்லி பண்றோம். ஆனா ஜனங்க வந்து நிறைய பேர் கேட்டுட்டே இருக்காங்க. ஒரு நாள் வாரத்துக்கு 250 பேர் செய்ய முடியாது. இனிமேல் பண்ண முடியல. ஐயா, அதான் ஐயாவுடைய ஆசியும் …..

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அவையே உன்னை பாதுகாக்கும் என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( செய்யும் அன்னதானம் புண்ணியங்கள் ) அதுவே பாதுகாக்கும். 

குருநாதர் :-  அப்பனே, வள்ளல் சோதிக்கின்றான். கவலைவிடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  வள்ளல் பெருமான் என்ன பண்றாரு? இவன் என்ன பண்றான்? பாருன்னு சோதிக்கிறாரு. நீ கவலை விடு என்று சொல்லிவிட்டார். அடுத்து நெக்ஸ்ட், 

=====================================
# புண்ணியம் செய்திருக்கிறாய். அப்புண்ணியமே வழிநடத்தும். கவலையில்லை.
==================================== 

அடியவர் 19   :-  ( குடும்ப ஆரோக்கியம் குறித்த கேள்வி )

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அப்பனே புண்ணியம் செய்திருக்கிறாய். அப்பனே, அப்புண்ணியமே வழிநடத்தும். கவலையில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியம் இருக்குது. அந்த புண்ணியமே என்ன பண்ணும்? இதுக்காக தேவையானதெல்லாம் உங்களுக்கு வந்து தேவையான இடத்துல எப்ப வேணாலும் வரும்ன்றாரு. அடுத்து, 

அடியவர் 19   :-   ( ஐயா, ………………) 

குருநாதர் :-  தாயே  சொல்லிவிட்டேன். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த புண்ணியம் நீங்க செஞ்சிருக்கீங்க பாருங்க. அந்த புண்ணியம் என்ன பண்ணும்? ஏதோ ரூபத்துல உங்களுக்கு அது சொல்லுது. கவலைப்படாதீங்க. மறைமுகமா சொன்னாரு. அந்த புண்ணியம் வந்து அந்த அப்படியே தேங்கி நிக்குது. அது என்ன பண்ணும்? ஒரு நாள் வந்து அதே வந்து உங்களுக்கு வந்து செயல்படும். என்ன தேவையோ, அது கொடுக்கும். அது உங்களுக்கு 

அடியவர் 19   :-   (.........................)

குருநாதர் :-  நிச்சயம், எவை என்று கூட கவலை விடு. தாயே , நிச்சயம், தன்னில் உள்ள புண்ணியங்கள் பின் பாதுகாக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, ஏதோ ஒன்னு விஷயத்துல வந்து உங்களை பாதுகாத்துரும். கவலைப்படாதீங்க. அம்மா, சரிங்களா? 

======================================
# தினமும் அன்னதானம் செய்ய ஆசி கேட்ட போது 
======================================

அடியவர் 19   :-  ஐயா, இப்போ நான் டெய்லி வேலைக்கு போறேன். தினமும் அன்னதானம் செய்யணும்னு ஆசை இருக்கு. 

குருநாதர் :-  அப்பனே , நிச்சயம், தன்னில் கூட அப்பனே, பின் அதாவது சிறுக சிறுக பெருகும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அது வாய்ப்பு அமையும்ன்றாரு. வாய்ப்பு அமையும், அமையும்  அம்மா. 

=================================
# யானே மருத்துவனாகவும் வந்து உங்களை காக்கின்றேன். 
=================================

அடியவர் 19   :-   (.........................)

குருநாதர் :-  எவை என்று புரிய, கவலை விடு, தாயே  எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிந்து கூட, நிச்சயம்.  பின் ஏன், எதற்கு என்று, பின் ஒருவன் எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், தன்னில் கூட இவ்வாறாக மருத்துவனாகவும் யான் வந்து, பின் உங்களை காக்கின்றேன். 

குருநாதர் :-  கவலைகள் வேண்டாம். எம்முடைய ஆசிகளோடு தான்.

================================
# பிறந்த தேதி தெரியவில்லை , ஜாதகம் கணிக்க…. 
# செய்யும் புண்ணியங்கள் உங்களை வழிநடத்தும் …ஜாதகம் தேவை இல்லை.
================================ 

அடியவர் 19   :-   ஐயா, இவங்களுடைய பிறந்தது வந்து, டேட் இது எதுவும் எழுதி வைக்கல. இது அது மேல, 

குருநாதர் :-  தாயே , பின் தேவையில்லை. அவையெல்லாம் தூரம் எடுத்து போடுங்கள். 

====================================
# நிச்சயம் புண்ணியம் செய்து கொண்டே இரு
====================================

அடியவர் 19   :-  அம்மாவுடைய ஆரோக்கியம். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட பின் புண்ணியம் செய்து கொண்டே இரு. அப்பனே, இது உனக்கு பின் சொல்கின்றேன். அப்பனே, நல்ல முறையாக. அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க எல்லாமே செஞ்சுட்டே இருங்க. அந்த புண்ணியம் தவறாம செய்யுங்கன்றாரு. வந்து மீதி எல்லாம் நான் பார்த்துக்கிறேன். ஐயா, 

அடியவர் 19   :-   ( ….. ….. ….. …… ) 

குருநாதர் :-  எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட போதும். பரிகாரங்கள் எவை என்று அறிய 

=========================
# ராகு கேது - விளக்கங்கள் 
=========================

குருநாதர் :-  சொல்லி இருந்தேனே முன்பே நிச்சயம். பின் எவை என்று கூற  அனைவரும் அப்பனே, பின் ராகு கேதுவுகள் தான் பிணைந்து இருக்கின்றார்கள். அவையெல்லாம் யானே எடுத்து விடுவேன். கவலை வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ( "ராகு கேது தோஷத்தால தான் கல்யாணம் தள்ளிப் போகுதுன்னு எல்லாரும் சொல்றாங்க, ஆனா அதையே காரணமா சொல்லிட்டு இருந்தா எப்படி? இப்போ வயசாகிடுச்சு, அவருக்கும் அதே தோஷம் தான் இருக்குன்னா, வெறும் பரிகாரம் மட்டும் பண்ணா போதுமா, அது பலிக்குமான்னு ஒரு கேள்வி வருதுல்ல? அங்க தான் அகத்தியர் வர்றாரு. ராகு கேது விஷயத்தை எல்லாம் அவர் தான் சரி பண்ணி, இந்த ……………….. தடையை உடைச்சு வழியைக் காட்டுவாரு. அதனால கவலைப்படாம இருங்க, அந்த அகத்தியரே முன்னாடி நின்னு எல்லாத்தையும் கூட்டி முடிச்சு வைப்பாரு; கண்டிப்பா சீக்கிரமே ……………….. நடக்கும், பாருங்க!" ) 

=====================================
# புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் , அனைத்தும் உண்டு.
=====================================

அடியவர் 19   :-  ஐயா, வேலை 

குருநாதர் :-  அனைத்தும் உண்டு. உனக்கு 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே உண்டுங்க. ஐயா, தேடுங்க. ஐயா, எல்லாம் உண்டுங்க. ஐயா, 

அடியவர் 19   :-  சரிங்க. 

குருநாதர் :-  அப்பனே, ஆசிகள். நிச்சயம், தன்னில் கூட. 

=========================================
# ராகு கேது பஞ்சாயத்துகள் - கருணை கடல் தான் சரி செய்வார்கள் 
=========================================

குருநாதர் :-  அப்பனே, பின் குடும்பத்தில் எது என்று அறிய அப்பனே, பின் ராகு கேதுக்களின் தாக்கம் அதிகம் என்பேன் அப்பனே. அதை யானே சீர் செய்வேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, இன்னும் பரிகாரங்கள் சொல்லிக் கொண்டே இருந்தால், அப்பனே, செப்பிக்கொண்டே இருக்க வேண்டும். 

குருநாதர் :-  ஆசிகள், ஆசிகள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, ஆசிகள். அடுத்துங்க, ஐயா. 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 20   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!! 

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

குருநாதர் :-  எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட பின் கேட்டதை நிச்சயம் நிறைவேறும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க என்ன கேட்க போறீங்களோ, அது நிறைவேறும். ஐயா, சொல்லிட்டேன். 

அடியவர் 20   :-  ரொம்ப நன்றி. 

=========================================
# விதியில் பல போராட்டங்கள் இருப்பவர்களை குருநாதர் அவர்களிடம் அழைத்து அனைத்தும் நீக்குவார்கள்.
=========================================

அடியவர் 20   :-  ( …………………. ) 

குருநாதர் :-  அப்பனே, கவலை விடு. நிச்சயம், தன்னில் கூட அப்பனே, விதியில் பல போராட்டங்களை அப்பனே, பின் இருப்பவர்களை யானே, நிச்சயம், தன்னில் என்னிடத்தில் அழைத்து, அப்பனே, அனைத்தும் நீக்குவேன். 

குருநாதர் :- அதுபோலத்தான் நீங்கள் கவலை விடு. என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கின்றேன். 

அடியவர் 20   :-  ( …………………. ) 

குருநாதர் :-  அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, அனைத்தும் செய்கின்றேன். நலம். 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 21   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

நால்வர் துதி :- 

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!


குருநாதர் :-  அம்மையே, இவருடைய ஆசிகள் பலமாக. கவலைகள் வேண்டாம். நிச்சயம், தன்னில் கூட 

அடியவர் 21   :-  ( ………………. ) 

குருநாதர் :-   ( ………………. ) 


===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 22   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

==========================================================
( இவ் அடியவருக்கு இல்லத்தில் 60 ஆம் ஆண்டு சஷ்டியப்த பூர்த்தி (அறுபதாம் கல்யாணம்)  குருநாதர் அருளால் நிறைவாக நடந்தது. இவ் அடியவர் , குருநாதர் உரைத்த பல , பல , பல ஆலயங்களுக்கும் கடந்த 1 வருடமாக சென்று வழிபாடு வருகின்றார். குருநாதர், சித்தர்கள்  உரைத்த அனைத்து வழிபாடுகளையும் ஒன்று விடாமல் நடத்தி வந்துள்ளார்கள். இவ் அடியவரை குருநாதர் அழைத்து வாக்குகள் அருளினார்கள்.  ) 
==========================================================

குருநாதர் :-  அப்பனே, நலமாக, நிச்சயம், யானே வந்து நடத்தி தந்தேன் அப்பனே. யானும் லோபாமுத்திரையும் உன் அருகில்தான் உட்கார்ந்திருந்தோம் அப்பனே.  போதும், நிச்சயம்.  சுகனும் ( சுகர் பிரம ரிஷி )  வந்திருந்தானப்பா. நலங்களாக போகனும் வந்திருந்தானப்பா. நிச்சயம், நாராயணன் வந்திருந்தானப்பா. காமாட்சியும், கவலை இல்லை. அப்பனே, நிச்சயம், பின் முடியும் வரை யானே அங்கு இருந்தேன் அப்பனே. நலங்கள். அப்பனே, பின் உண்ண உணவும் அருமையாக கொடுத்தாய்!!!  ஆசிகள், ஆசிகள்.

அடியவர்கள் :- ( அங்கு  பலத்த கை தட்டல்கள் , அங்கு சந்தோசங்கள் அனைவருக்கும் )

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 22   :-  ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

அடியவர் :- பாடல் படிச்சிட்டீங்களா? 

குருநாதர் :-  அப்பனே, எம்முடைய ஆசிகள் அப்பனே, நலங்களாகவே, நிச்சயம், தன்னில் கூட. 

குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, அஷ்டமி, அதாவது தேய்பிறை, வளர்பிறை  அஷ்டமி, தன்னில் கூட. அப்பனே, நலமாக. அப்பனே, பூசணி , தன்னில் கூட அப்பனே, தீபம் ஏற்றிக் கொண்டே வா. அப்பனே, அனைத்தும், அப்பனே, வேண்டுதல் நிறைவேறும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( தொடர்ந்து இடைவிடாமல் செய்து கொண்டே வரவேண்டும் )

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 23   :-  ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

( மந்த்ராலய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் புகழ்பெற்ற தியான ஸ்லோகம்)

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச |
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் நல்ல ஆசிகள் என்பேன். அப்பனே, குருவோன் அப்பனே, பின் நிச்சயம். அப்பனே, வழி நடத்துவான் என்பேன் அப்பனே. கவலை விடு. அப்பனே, அனைத்தும் அவனே கதி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு குருவானவர் வழிநடத்தினே இருப்பார். எல்லாமே அவரே கதி. 

குருநாதர் :-  அப்பனே, இப்போது சொன்னாயே, அவனும் துணை என்பேன் அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஸ்ரீ ராகவேந்திர சுவாமி.  பரிபூரணமா உங்களுக்கு துணை ஆசி இருக்குது. )

குருநாதர் :-  அப்பனே, எம்முடைய ஆசிகளிலும் கூட கவலை இல்லை என்பேன் அப்பனே. 

====================================
# ஈரேழு பதினான்கு உலகங்களின் கருணைக்கடல் அளிக்கும் மதிப்பு
====================================

குருநாதர் :- பல வழியிலும் கூட. அப்பனே, நீ, அப்பனே, பின் நீ என்னென்ன செய்தாயே  என்பதெல்லாம் நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. அதற்கு நிச்சயம் மதிப்பு உனக்கு என்ன வேண்டுமோ அதை யான் தருவேன். கவலை விடு. 

====================================
# பல பிறவிகளில் செய்த புண்ணியங்கள் ரகசியங்கள் 
====================================

குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது பார்த்ததில்லை. பல பிறப்புகளை உன்னை பார்த்திருக்கின்றேன் அப்பனே, நிச்சயம். பல மனிதருக்கு, அப்பனே, பின் எவ்வாறு உதவிகள் செய்துள்ளாய் என்பதெல்லாம்  அப்பனே.  புண்ணியம் தேங்கி கிடைக்கின்றது அப்பா, கவலை விடு. 

===================================
# இல்லத்தில் இருந்து சூரியனை பார்த்து திருவலஞ்சுழி விநாயகப் பெருமானை வழிபட அருள் ஆசிகள் 
===================================  

குருநாதர் :-  அப்பனே, நல் விதமாக. அப்பனே, இதனால். அப்பனே, நல்ல முறையாக. அப்பனே, எதை என்று அறிய அப்பனே. 

குருநாதர் :-  இதனால் அப்பனே, ஒரு முறை. அப்பனே, பின் அதாவது பின் வலஞ்சுழி . அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் முறையாக, அப்பனே, அதாவது பின் இல்லத்திலே. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் கும்பகோணத்தில். அப்பனே, இருக்கும் தலத்தில். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது அங்கு இருக்கும் என்று எண்ணி, அப்பனே, அதிகாலையில். அப்பனே, பின் சூரியனை பார்த்து வணங்கிக் கொண்டே வா அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :-  ( கும்பகோணம் திருவலஞ்சுழி கோயிலுக்கு நீங்க நேர்ல போகணும்னு அவசியம் இல்லைங்க. வீட்ல இருந்தே அந்தத் திருவலஞ்சுழித் தலத்தை மனசுல நினைச்சுக்கிட்டு, அங்க இருக்கிற சுவாமியை அங்கேயே பார்க்கிற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க. தினமும் அதிகாலையில சூரியனைப் பார்த்து வணங்கும்போது, அந்தத் தெய்வத்தையே நினைச்சு மனமுருகி கும்பிட்டு வாங்கன்னு அகத்தியர் சொல்றாரு. இப்படித் தொடர்ச்சியா செஞ்சுட்டு வந்தாலே போதும், ) 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட காலங்கள் காலங்களாக சேவைக்காக பிறந்தவன் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே, கவலை விடு. யான் பார்த்துக் கொள்கின்றேன் அனைத்தும். 

குருநாதர் :-  அப்பனே, வழியும் நடத்துவேன் அப்பனே. 

குருநாதர் :-  முன்னோர்கள் ஆசியும் குலதெய்வத்தின் அனுக்கிரகமும். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, 

குருநாதர் :-  இதனால் வந்த வேலை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கின்றாய் அப்பா. பின் எவை என்று அறிய. கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( நீங்க எதற்காக இந்த உலகத்துக்கு வந்தீங்களோ, அந்த வேலையை இப்போ சரியா செஞ்சுகிட்டு இருக்கீங்கன்னு அவர் சொல்றாரு. பொதுவா ஒருத்தர் செய்ற வேலையை மத்தவங்க அவ்வளவு சீக்கிரம் பாராட்டிச் சொல்ல மாட்டாங்க, ஆனா இவர் நீங்க வந்த நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு கச்சிதமா செஞ்சிருக்கீங்கன்னு மெச்சுகிறார். நாம எதைச் செஞ்சாலும் அதுல இறைவனோட அருள் கலந்திருக்கணும்; அந்தப் புண்ணியம் இருந்தா மட்டும்தான் நாம செய்ய வந்த வேலை நமக்கே சரியா பிடிபடும். நீங்க வந்த வேலையைச் சிறப்பா செஞ்சதுதான் உங்க பிறப்போட ரகசியமேன்னு அவர் ரொம்ப தெளிவா சொல்லிட்டாரு." )

குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் தெரிந்து கொள்வாய். பின் அனுக்கிரகங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தெய்வத்தை பற்றி அனைத்தும் தெரிந்துவிடும். 

குருநாதர் :-  அப்பனே, ஞானம் வந்துவிடும் அப்பா.  அவ்வளவுதான் வாழ்க்கை. 

குருநாதர் :-  அப்பனே, கவலைகள் வேண்டாம் என்பேன். போகனும் துணை இருக்கின்றான். பின் நலங்களாக சித்தர்கள். அப்பனே, நாங்கள் வழி நடத்துகின்றோம் கவலை விடு. அப்பனே. 

==================================
# யானும் லோபாமுத்திரையும்  அடிக்கடி உன் இல்லத்திற்கு வருவோம். ஆசிகள். 
=================================

குருநாதர் :-  அப்பனே, எங்களுடைய ஆசிகள் பரிபூரணம். கடை நாளும்  உண்டு. கவலை விடு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.  

குருநாதர் :-  யானும் லோபாமுத்திரையும்  அடிக்கடி உன் இல்லத்திற்கு வருவோம். ஆசிகள், 

சுவடி ஓதும் மைந்தன்  :- ("அகத்தியரும் லோபாமுத்திரை தாயாரும் அடிக்கடி வர்றாங்கன்னா அது சாதாரண விஷயம் இல்ல, ரொம்பப் பெரிய பாக்கியம்! அவங்க வர்றப்போ நாம எதையும் கேட்டுட்டு இருக்கக் கூடாது, அவங்க வந்தாலே எல்லாத்தையும் அவங்களே பார்த்துப்பாங்க. இப்போ இவருக்குத் தன்னோட பாதை எதுன்னு தெளிவா தெரிஞ்சு போச்சு, சரியான வழியிலயும் பயணிக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த வழியில போனா அறிவும் ஞானமும் தானா வந்து சேரும், அதன் மூலமா இறைவனை முழுசா உணர முடியும். கடைசியில அகத்தியரே 'நானே வந்துட்டேன்'னு சொல்லிட்ட பிறகு, அவருக்கு என்ன தேவையோ அதை அவரே முன்னின்று நடத்தி வைப்பாரு; அதனால இனி கவலைப்பட எதுவுமே இல்லை!" )

அடியவர் 23   :-  (தந்தை முக்தி குறித்து கேட்டபோது) 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் என்னிடத்தில் தான் இருக்கின்றான். கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அகத்தியர் கூட தான் இருக்கிறார். 

குருநாதர் :-  அப்பனே, அதுவும் நீ செய்த புண்ணியங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அதுவும் நீங்க ஏதோ புண்ணியம் செஞ்சுக்கிறீங்க. அதனால என் கையில வந்து பத்திரமாதான் இருக்கிறார். போக பண்ணிட்டாரு. 

அடியவர் 23   :-  வருத்தத்தோடு போனார். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அதனால்தான் அப்பன் நிச்சயம் எதை செய்து பின் அனுப்ப வேண்டும் என்பதை எல்லாம் யாம் அறிவோம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அவருக்கு என்ன செய்து மரியாதை என்ன? அந்த ஆன்மாக்கு இது பண்ணனுமோ நான் செஞ்சுறேன். கவலைப்படாதீங்க. ஐயா, 

அடியவர் 23   :-  நன்றி. நன்றி. ஐயா, நன்றி. 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 24   :-  ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

அருள் ஞான ஜோதியே அகத்தின் ஜோதி
தனிப்பெருங் கடவுளே அகத்தீசர் ஆவார். 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உன்னிடத்திலே இருக்கின்றேன். அப்பனே, உன்னை இயக்குவேன் அவ்வளவுதான் ஆசிகள். 

===============================================
# அடுத்த அடியவர்  வாக்கு 
===============================================

அடியவர்   :-  ( ……… ) 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதைப் பற்றியும் கேட்டு விடாதே. யான் வந்துவிட்டேன். அவ்வளவுதான் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அடியவர்   :-  தெய்வமே குருநாதர் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  நீ எதைப் பற்றியும் கேட்கக்கூடாதுப்பா. நாங்க வந்துட்டோம். அவ்வளவுதான். 

அடியவர்   :- அடிக்கடி வாங்க. ஐயா ( பாசத்துடன் தந்தையை அழைத்தார்கள் ) 

======================================
# பல கர்ம வினைகள் நீக்கி, புண்ணியத்தை வாரி வழங்குவேன்.
======================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் வருவேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலை விடு. அனைத்துக்கும் அப்பனே நல்லது செய்து. அப்பனே, பின் பல கர்ம வினைகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் நீக்கி, அப்பனே, புண்ணியத்தை வாரி வழங்குவேன். கவலை இல்லை அப்பனே, 

குருநாதர் :-  அப்புண்ணியத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு. அப்பனே, பல மக்களுக்கு அனைவரும் பின் சேவை செய்க. அப்பனே ஆசிகள். 

==========================================
#  அனைவரும் ஒன்று கூடி நல்லது செய்து நினைக்கின்றார்களோ அவர்களுக்கு யானே  பின் நன்மை செய்வேன். அனைத்து தோஷங்களையும் கழிப்பேன் 
==========================================

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கு அப்பனே, பின் அனைவரும் ஒன்று கூடி அப்பனே, நல்லது செய்து நினைக்கின்றார்களோ அவர்களுக்கு யானே  பின் நன்மை செய்வேன்  அப்பனே.  அனைத்து தோஷங்களையும் கழிப்பேன் அப்பனே. 

குருநாதர் :-  ஆனால் தெரியாமல் அதை வேண்டும், இதை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தேவையில்லை என்னிடத்தில் அப்பனே. அனைவரையும் பின் உணர்ந்தவன் யான். 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 25   :-  ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

குருநாதர் :- அப்பனே, நலங்களாக கவலை விடு. அப்பனே, சில மாற்றத்தை நிச்சயம் தன்னில் கூட அனுதினமும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அமைதியாக. அப்பனே, பின் அதிகாலையிலே. அப்பனே, ஓடு. 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 26   :-  ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குருநாதர் :-  ( ***** விதி ரகசியங்கள் **** ) 

==============================
# அனைவருக்கும் பொது வாக்கு  - ராகு கேது
==============================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கவலை வேண்டாம் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. அப்பனே, இதனால். அப்பனே, ஏன் எதற்கு அப்பனே, பின் குழந்தை பிறப்பு , திருமணங்கள் தாமதம் ஆகின்றது என்றால் அப்பனே, அனைத்தும் ராகு கேதுக்களால் தான் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  அவை எளிதில் நீக்க முடியாதப்பா. இதனால். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் சரியாகவே. அப்பனே, பின் அதாவது இதை நீக்க. அப்பனே, பின் அதாவது பின் அரச மரத்தில் இருக்கும் பிள்ளையோனை அப்பனே, சுற்றி சுற்றி வருதலே சிறப்பு. இதனால் அப்பனே, சொல்லிவிட்டேன். அனைவருக்குமே. 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 27   :-  ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

நமசிவாய  வாழ்க நாதன் தாள் வாழ்க. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வளவு வாழ்க என்று சொன்னாலும் முதலிலே சொல்லிவிட்டேன் அப்பனே. இப்பொழுது இல்லை என்பேன் அப்பனே. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

அடியவர் :-  (இவ் சத் சங்கத்திற்கு வராதவர்களுக்கு ஆசிகள் கேட்ட பொது வாக்கு )

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அடுத்தடுத்து சொல்கின்றேன். பொறுத்திரு, நிச்சயம் வருவேன் என்று சொல்லிவிட்டேன். 

அடியவர் :- அடிக்கடி வரணும். ஐயா, அடிக்கடி வாங்க. ஐயா, 

குருநாதர் :-  என்னை தேடி அலைந்தவர்கள் தான் வருவேன். கவலையும் இல்லை. 

========================
# சத்சங்க நிறைவு வாக்கு 
========================

குருநாதர் :-  அம்மையே, பின் அன்னையே, அனைவருக்குமே உங்களுடைய ஆசிகள் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை. அனைவருமே, நிச்சயம் எதை செய்து தருகின்றேனோ, நிச்சயம் அதை பின் நிச்சயம் யான் செய்து தருவேன். 

குருநாதர் :-  அதாவது உங்கள் மனதில் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் யான் அறிந்தேன். 

குருநாதர் :-  ஆனாலும், நிச்சயம் அதை சொன்னாலும் யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொன்னாலும் மீண்டும் பின் உங்கள் மனது பின் எதையோ கேட்டுக்கொண்டே தான். ஏனென்றால் இவையெல்லாம் நிச்சயம் ஊறிவிட்டது உடம்பில். 

குருநாதர் :-  அதனால் இதைத்தான் பின் கேட்பீர்கள். அதனால் யானும் வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன் எதை என்று புரிய, பின் இத்தனை நிச்சயம் நேரங்கள். ஆனால் கவலை இல்லை. 

குருநாதர் :-  அனைவருக்குமே யான் பின் என்ன செய்ய வேண்டுமோ நியாயமான கோரிக்கைகள். ஆனாலும் புண்ணியம் எவை என்று நிச்சயம் தன்னில் கூட அனைவரிடத்திலுமே. இதனால் யானே செய்கின்றேன். யானே செய்கின்றேன். அடுத்த முறை சொல்கின்றேன். ஆசிகள், ஆசிகள். 

=========================================
# அடியவர்கள் குருநாதருக்கு பாடல்கள் பாடினார்கள் 
=========================================

சித்தர் நாயகன் ;  தமிழ் பித்தர் சேவகன்
சக்தி தாயவள் ; ப்ரிய பக்த பாலகன்

அத்தி மா முகன் ; வினை தீர்த்தமானவன்
தீர்த்த மாமலை ; திவ்ய ஆர்த்தி மங்களன்

குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று  நடந்த சத்சங்க  வாக்குகள் நிறைவு அடைந்தது )


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Tuesday, September 15, 2026

பயனற்ற ஆன்மீக செயல்கள் - ஆன்மீகத்தில் நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்ன?

                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...   











அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் - 2144 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 8

                           இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 2144 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 8


வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
=========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

================================================
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று   நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 8  )
================================================

குருநாதர் :- தாயே, இதனாலதான் நிச்சயம் தன்னில் கூட பின் கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   அதனால ஏதோ ஒரு விதத்துல நான் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். அப்புறம்.. 

அடியவர் 13   :-  ( சரிங்க ஐயா, எங்க குடும்பத்தில் மூத்த தலைவரா  இருந்து குருநாதரே வழிநடத்த வேண்டும் . நான்  குருநாதரே  கதி என்று இருக்கேன் ……. ) 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட கவலை விடு. நிச்சயம் தன்னில் கூட எதை செய்ய வேண்டுமோ அதை செய்கின்றேன் நிச்சயம். 


==============================================
# மறைந்து நின்று தாக்கும் குல தோஷங்கள், முன்னோர்களுடைய  சாபங்கள்
=============================================

குருநாதர் :- பின் சில விஷயங்களை மனிதனுக்கு சொன்னால் புரியாது. பின் நிச்சயம் அவையெல்லாம் ஏன், எதற்கென்று சொன்னாலும் பல வழிகளில் கூட பின் வருத்தங்கள். 


குருநாதர் :- அதனால் நிச்சயம் தன்னில் கூட, குடும்பத்திலே பல பல தோஷங்கள். முன்னோர்களுடைய பின் எவை என்று கூற  சாபங்கள். அவை மட்டுமில்லாமல் குடும்பத்தில் எதை என்று அறிய அறிய  குல தோஷங்கள் எதை என்று அறிய  உரிய காலம் கடந்து வந்து கொண்டே. 

குருநாதர் :-  ஆனாலும் வந்துவிட்டாய் தப்பி எவை என்று கூட என்னிடத்தில். 

குருநாதர் :-  அதனால் அவையெல்லாம் உன்னால் பின் அதிவிரைவில் நீக்க முடியாது. யானே ஒவ்வொன்றாக நீக்கிவிட்டு செய்து கொண்டே தான் இருக்கின்றேன். கவலை விடு.

அடியவர் 13   :-  ஐயா. குலதெய்வம் ஆசீர்வாதம் இருக்குதா? 

குருநாதர் :- தாயே, நிச்சயம் பின் மற்றவர்களுக்கு நிச்சயம் எவை என்று புரிய, யான் சொல்லியதை பின் செய்துட்டு வா. சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- சொல்லிட்டாரு. அடுத்துமா? 


===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 14   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )

===================================================
திருச்சேறை திருமுறை பதிகம் 02
இறைவர் திருப்பெயர் : செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஞானவல்லி
திருமுறை : நான்காம் திருமுறை 73 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பாடல் எண் : 07
===================================================
 

விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கங்கை

தரித்ததோர் கோல கால
பயிரவ னாகி வேழம்

உரித்துமை யஞ்சக் கண்டு
வொண்டிரு மணிவாய் விள்ளச

சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.


குருநாதர் :- அப்பனே, நன்றாக பின் என்ன வேண்டும்? நீயே கேள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- என்ன வேணுமோ நீயே கேள். 

=======================================================
# எந்த  முயற்சிகள் எடுத்தாலும் , தடைபட்டால்  நிச்சயம்  முதலில்  குலதெய்வத்தின் சாபமே என்று எண்ணிக்கொள்ள வேண்டும் அனைவருமே. 
=======================================================

அடியவர் 14   :-  எந்த முயற்சி எடுத்தாலும் தடைபட்டிருக்கிறது. 

குருநாதர் :- அப்பனே, இதற்கு எது என்று புரியும்? அப்பனே, முயற்சிகள். அப்பனே, தடைபட்டால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய முதலில் குலதெய்வத்தின் சாபமே என்று எண்ணிக்கொள்ள வேண்டும் அனைவருமே. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "ஐயா, எந்த முயற்சி எடுத்தாலும் அது கைகூடல, ஒரு காரியமும் நடக்க மாட்டேங்குதுன்னா என்ன பண்றதுன்னு கேக்குறாரு. 'குலதெய்வம் சாபம்' இருக்கிறதா என்று ,  எல்லாரும் சொல்றாங்கன்னு இவரு பொதுவா ஒரு கேள்வியை முன்வைக்கிறாரு. கவனிங்க... ஆமா, இதையெல்லாம் நல்லா கேட்டுக்கோங்க. எல்லாருக்கும் பொதுவா அகத்தியர் சொல்றாரு. அதாவது, குலதெய்வத்தோட சாபம் இருக்குது ." ) 

============================================
# உங்கள் தடைகளை தவிடு பொடியாக்கும் - குலதெய்வ வழிபாடு ரகசியங்கள்.
============================================
# அனைத்து அடியவர்களும் உடும்பு பிடியாக , கெட்டியாக இந்த வாக்கை பிடித்து கொள்ளுங்கள் 
============================================ 

குருநாதர் :- இவை போக்க நிச்சயம் தன்னில் கூட பின் குலதெய்வத்தின் அருகே சென்று நிச்சயம் தன்னில் கூட. அங்கே பின் அதாவது பின் சமைத்து நிச்சயம், பல மனிதர்களுக்கும் கூட, பின் அதாவது நல்விதமாக பின் எதை என்று அறிய அறிய, பின் கொடுத்து, பின் அங்கிருந்து நிச்சயம் சில பிரசாதங்களையும் பின் அதாவது இல்லத்தில் எடுத்து வந்து, நிச்சயம் அவ் பிரசாதங்களுக்கு நிச்சயம் அனுதினமும் நிச்சயம் பூஜை செய்ய, செய்ய குலதெய்வத்தின் அருளாசிகளும் கிட்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "ஐயா அங்க பின்னாடி கேட்டாங்களே, அவங்களுக்காகவும் சேர்த்துதான் இதைச் சொல்றாரு. எல்லாருக்குமே ஒரு நாள் குலதெய்வக் கோயிலுக்குப் போய் அங்க நல்லா வணங்கிட்டு வரணும். முயற்சி எது எடுத்தாலும் தடைபடுதுன்னா, அதுக்கு என்ன பண்ணனும்னா, கோயிலுக்குப் போய் அங்கேயே சமைச்சு, எல்லாருக்கும் சோறு போட்டு அன்னதானம் பண்ணணும். அப்புறம் அங்க இருக்கிற மண்ணையும் பிரசாதத்தையும், ( குல தெய்வ ஆலய மண் , விபூதி , குங்குமம் , சந்தானம் …. )  எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரணும். அதை வீட்ல கொண்டு வந்து வச்சுட்டு, சும்மா விடாம தினமும் அதுக்கு பூஜை பண்ணணும்னு ஒரு தீர்வா சொல்றாரு.")

குருநாதர் :- நிச்சயம் இவை தன் பின் ஐந்து மாதத்துக்கு மேலே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒரு அஞ்சு மாசத்துக்கு இது மாதிரி பண்ணனும் தொடர்ந்து. 

அடியவர் :- சரி, அது பெண் வீட்டார் ரெண்டு பேரு….. ( அதாவது இல்லத்தரசிகளுக்கு 2 குலதெய்வங்கள் ) 

குருநாதர் :- எதை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட பின் அனைவருக்குமே பொருந்தும். 

சுவடி ஓதும் மைந்தன்  :- எல்லாருக்கும் பொருந்தும். 

குருநாதர் :- நிச்சயம் இவ்வாறாக பின் அவை மட்டுமில்லாமல் நிச்சயம் எவை என்று அறிய நிச்சயம் (................. *** தனி  வாக்கு ***** ...................) ஒன்றை பின் நிச்சயம் உன்னிடத்தில் வாங்கிக் கொள்வான் முருகன். 

===========================================
# அடிக்கடி திருச்செந்தூர் தரிசனங்கள் -  உங்களுக்கு வெற்றி நிச்சயம்
===========================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் திருச்செந்தூரை நிச்சயம் பின் எவை என்று அறிய பின் போய்க்கொண்டே இரு. போய்க்கொண்டே இரு. வெற்றி நிச்சயம் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  திருச்செந்தூர். அங்க அடிக்கடிக்கு நீங்க போய்க்கொண்டே இரு என்றார் வந்து, வெற்றி நிச்சயம் என்றார். 

===============================================
# “யான் சொல்லியதை செய் , நிச்சயம்  வெற்றிகள் உண்டு.”
===============================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட இதனால் அப்பனே பின் அறிந்தும் எவை என்று அறிய நிச்சயம் வெற்றிகள் உண்டு. பின் நிச்சயம் தன்னில் கூட கவலை இல்லை. யான் சொல்வதை பின் செய். 

========================================
# பின் வரும் வாக்கு அனைவருக்கும் பொதுவான வாக்கு. 
# இவ் வாக்கை உங்களுக்கு உரைத்த வாக்காக எடுத்து செயல்படுத்தவும்.
========================================

குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட தாயே, நீயும் கூட. அதாவது பெண்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் முயற்சிகள், பின் தோல்வி நிச்சயம் தன்னில் கூட. மனக்குழப்பங்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் இவ்வாறெல்லாம். 

குருநாதர் :-  அனைவருக்குமே சொல்லுகின்றேன். 

==============================================
"விதியே கதி" என்று முடங்கி விடாமல், இந்த முறையான வழிபாட்டை அனைவரும் பின்பற்றினால்,  வாழ்வில் அனைத்து நலன்களும், தடையில்லா வெற்றியும் நிச்சயம் உண்டாகும்.
================================================

குருநாதர் :- நிச்சயம் அனுதினமும் பின் அதாவது பின் அதாவது அரச பின் இலையை தன்னில் கூட நன்றாக, நிச்சயம் தன்னில் கூட 108 பின் தீபங்களை ( அரச இலை மேல் தீபங்கள் )    பின் அதிகாலையில் ஏற்றி, நிச்சயம் தன்னில் கூட நன்முறைகளாக அதில் தன் பின் அதாவது உள்ளங்கையில் பின் பச்சை கற்பூரத்தையும் நிச்சயம் தன்னில் கூட நல்விதமாக. பின் நாயுருவி  வேரையும் நிச்சயம் தன்னில் கூட. பின் எதை என்று அறிய என்ன வேண்டுமோ, அதை தன் உள்ளங்கையில் வைத்து வேண்டிக்கொண்டு, நன்றாக நிச்சயம் தன்னில் கூட, பின் ராம ஜெபத்தை பின் எழுதி, பின் 108 அல்லது 1008 முறை பின் எழுதி. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் நல்விதமாகவே எதை என்று அறிய ஒரு கையில் நிச்சயம் தன்னில் கூட பின் அவை தன் பிடித்துக் கொள்ள வேண்டும். மறுமுனை  எழுதிக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இவ்வாறே செய்து செய்து வந்தாலே வெற்றி நிச்சயம். பின்பு ராமேஸ்வரத்தில் நிச்சயம் தன்னில் கூட எழுதியதை பின் சமர்ப்பித்து வந்தால் அனைத்து நலனும் உண்டு. இதை அனைவரும் பின்பற்றினால் ஆனால் விதி நிச்சயம் கதி. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் உரையின் சுருக்கம்   :- ( அனைத்துத் தடைகளும் நீங்கி வெற்றி பெற, அதிகாலையில் 108 அரச இலைகளின் மீது 108 தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். ஒரு கையில் அரச இலை, பச்சை கற்பூரம் மற்றும் நாயுருவி வேர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, நிறைவேற வேண்டிய காரியத்தை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். அந்தப் பொருட்களை ஒரு  கையில் பிடித்துக் கொண்டே, மறு கையால் "ஸ்ரீ ராம ஜெயம்" நாமத்தை 108 அல்லது 1008 முறை எழுத வேண்டும். அதாவது தீபம் எரியும் போதே.  இவ்வாறு எழுதி முடித்த “ஸ்ரீ ராம ஜெயம்” ஏடுகளைப் பின்னர் ராமேஸ்வரத்தில் கொண்டு போய் சமர்ப்பித்தால், விதியையும் மதியால் வென்று அனைத்து நலன்களையும் பெறலாம். ) 

குருநாதர் :- அப்பனே, நலங்களாகவே வெற்றியாகும் என்பேன். அப்பனே. ( ……………… **** தனி வாக்குகள் **** ……………..) அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, தருவான் அனைத்தும். 

அடியவர் 14   :-  ஆக்சுவலா காலையில எந்திரிக்கும் போது முருகன் நாமத்தை சொன்னாவே. அன்னைக்கு ஃபுல்லாவே பாசிட்டிவா போகுதுங்க. 

அடியவர் 14   :-  ( ……………… ) 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட யான் சொல்றதையும் செய். 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 15   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் - திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம்  (பழநி))

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்

ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்

ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே

நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்

சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா . 


குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட கவலை விடு. சித்தர்கள் யாங்கள் பார்த்துத்தான் உனக்கு பின் என்ன கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்கின்றோம். பின் இப்பொழுது எதையும் கேட்டு விடாதே. 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 16   :-  ( பின் வரும் அபிராமி அந்தாதியின் 50-வது பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

===========================================
# பாலாம்பிகை தேவியின் மந்திர ரகசியங்கள் 
# பாலாம்பிகை தேவியின் மந்திரம் - “ஓம் ஐம் கிலீம் சௌம்”
===========================================

குருநாதர் :- நல்விதமாக எம்முடைய ஆசிகள் கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுதும் பின் அமைதியாக இருந்து பின் பாலாம்பிகை தேவியின் பின் மந்திரத்தை நிச்சயம் தன்னில் சொல்லிக்கொண்டே வா. எதை என்று புரிய இதனால் பல விஷயங்கள் உனக்கு தெரியவரும். 

குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் பின் தெரிந்ததை நிச்சயம் பின் வெளியில் சொல்லாமல் அமைதியாக நிச்சயம் தன்னில் கூட இருந்தாலே பல வழிகள் பின் பிறக்கும். நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நன்விதமாகவே பல வழிகள் பிறந்து எதை என்று புரிய. 

குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை எதை என்று நீ சொல்கின்றாயோ எவை என்று புரியாமலும் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட பின் சொன்னாலே நிச்சயம் அவ்வார்த்தைக்கு மதிப்பில்லாமல் போய்விடும். 

குருநாதர் :- அதனால் நிச்சயம் தன்னில் கூட மனதிலே நிச்சயம் பாலாம்பிகையின் பின் மந்திரத்தை பின் ஜெபிக்கொண்டிருந்தாலே நிச்சயம் வலுவுகள் ஏறும். நிச்சயம் தன்னில் கூட பின் பின்பு சாதித்துக் கொள்ளலாம். அனைத்து விஷயங்களையும் கூட சொல்லிவிட்டேன். நல்விதமாகவே. 

============================================
# பாலாம்பிகை  அன்னை ஆலயத்தில் தயிர் அண்ணெயத்தை அனைவருக்கும் கொடு.  சில விஷயங்கள் பின் மாறும். 
============================================

குருநாதர் :-  அதனால் எதை என்று புரிய அறிந்தும் கூட எவை என்று அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் பாலாம்பிகை பின் பின் தேவிற்கு மனமுவந்து நிச்சயம் தன்னில் கூட பின் அங்கு சென்று நிச்சயம் எவை என்று புரிய பின் சரியாகவே நிச்சயம் பின் தயிர் அண்ணெயத்தை பின் அனைவருக்கும் கொடு. நிச்சயம் எவை என்று புரிய சில விஷயங்கள் பின் மாறும். 

சுவடி ஓதும் மைந்தன் :- பாலாம்பிகை கோயில் கீழ வந்து அங்க போயிட்டு தயிர் சாதம் கொடுக்கணும். எங்காவது கோயில் இருந்தா தயிர் சாதம் வந்து கொடுக்கணும்ன்றாங்க. 

குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் எவை என்று அறிய பின் அறிந்தும் கூட பின் அதாவது சரியாகவே பின் ( *********************** ) சமர்ப்பணம் செய். நிச்சயம் எதை என்று புரிய.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு கோயிலுக்கு ( *********************** )  வந்து சமர்ப்பணம் செய்யணும். ஏதோ ஒரு அம்பாள் கோயிலுக்கு வந்து நீங்க வந்து  ( *********************** ) வாங்கி கொடுக்கணும். 


================================================
# திருமூர்த்தி மலை  சென்று பின் வாருங்கள். நிச்சயம் சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. 
================================================

குருநாதர் :-  நிச்சயம் பின் எவை என்று அறிய இதனால் பின் எதை என்று அறிந்தும் கூட நல்விதமாகவே புரிந்தும் புரிந்தும் கூட பின் எதை என்று அறிய என்ன தேவை என்பதை உணர்ந்து நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்து கூட பின் அதாவது பின் திருமூர்த்தி மலை எனும் திருத்தலத்திற்கு சென்று பின் வாருங்கள். நிச்சயம் தன்னில் கூட சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. 

===========================================================
திருமூர்த்தி மலை குறித்த முந்தைய வாக்கு :- 
https://siththanarul.blogspot.com/2025/11/1977.html
சித்தன் அருள் - 1977 - அன்புடன் அகத்தியர் - நரசிபுரா வாக்கு!
============================================================

சுவடி ஓதும் மைந்தன் :-   திருமூர்த்தி மலைன்னு ஒன்னு இருக்குது. அங்க போனா வந்து சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி என்றார். 

=================================================
# உங்கள் மனதில் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறவும், ஒரு விஷயத்தை வெற்றிகரமாக உருவாக்கவும் உதவும் எளிய வெற்றிலை தீப வழிபாடு
=================================================

குருநாதர் :-  நன்முறைகளாகவே எதை என்று கூற எதை நினைத்து பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட எவை வேண்டுமோ அவை தன் பின் உருவாக்க நிச்சயம், அனுதினமும் பின் நல்விதமாகவே பின் வெற்றிலை தன்னில் கூட நல்விதமாகவே பின் மண் அதாவது இட்டு, மண் தீபத்தை எவை என்று ஏற்றிக்கொண்டே வந்தாலே, பின் எவ் காரியம் பின் நினைத்து பின் நிச்சயம் பின் காலையிலும் மாலையிலும் நிச்சயம் ஏற்றிக் கொண்டு வந்தாலே சிறப்பு தரும். அவ் விசயம் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஐயா, ஒரு காரியம் நடக்கணும்னா எதை நினைச்சு என்ன பண்ணணும்னு தெளிவா சொல்றாரு பாருங்க. நம்ம மனசுல என்ன நினைச்சு ஒரு விஷயத்தை உருவாக்குறோமோ, அது நல்விதமா நடக்கணும்னா தினமும் ஒரு முறையைச் சொல்லித்தர்றாரு. வெற்றிலை மேல கொஞ்சூண்டு மண்ணை வச்சு, அதுல மண் தீபத்தை ஏத்தி வழிபாடு செய்யணும். காலையிலும் மாலையிலும் விடாம அந்தத் தீபத்தை ஏத்திக்கிட்டே வந்தா, நீங்க எந்தக் காரியத்தை நினைச்சு அதைச் செய்றீங்களோ, அந்த விஷயம் நிச்சயம் நடக்கும், அது நல்ல சிறப்பைக் கொடுக்கும்னு உறுதியா சொல்றாரு." ) 

====================================================
# உங்கள் எண்ணங்களை வெற்றி ஆக்கி  தரும் வழிபாட்டு ரகசியங்கள் 
# வெற்றிலை மேல் மண் அகல் தீபம் + சிவபுராணம் + அபிராமி அந்தாதி ஓதுதல்
====================================================

குருநாதர் :-  நல்விதமாக பின் அவ்வாறாக நிச்சயம் தன் நிச்சயம் தன்னில் கூட பின் அப்பொழுது பின் எவை என்று அறிய நிச்சயம் அதாவது திருவாசகத்தை நிச்சயம் பாடிக்கொண்டு நிச்சயம் அதாவது சிவபுராணத்தை அழகாக, பின்பு இவை தன் முடித்து, பின் அபிராமி அந்தாதியும் ஓதிக்கொண்டு வந்தாலே வெற்றி தரும் ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி விளக்கு ஏற்றி வச்சிட்டு, சிவபுராணம் பாடிக்கிட்டு அடுத்து என்ன பண்ணனும்? அபிராமி அந்தாதியை நீங்க படிக்கணும். அப்படி படிச்சிட்டே வந்தீங்கன்னா கொஞ்சம் என்ன பண்ணனும்? நீங்க நினைச்சு பாருங்கள் என்னவோ அது வெற்றி தந்துரும்ன்றார். 

=====================
# திருமாள்பூர் ஆலயம் 
=====================

குருநாதர் :-  நலங்கள் ஆசிகள் கவலை வேண்டாம். நான் சொல்லியதை நிச்சயம் ஏற்று நடங்கள். பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று அறிய பின் எவை என்று புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது திருமாள்பூர் எனும் இடத்திற்கு பின் ஏறி இறங்க. 

குருநாதர் :-  எதை என்று நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் யான் சொல்லியதை ஏற்று பின் ஏதாவது எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட (.............) பின் சித்திரையில் நீங்க நீங்கள் எதை என்று புரிய பின் நல் பின் அம்பாளுக்கு நிச்சயம் பின் எவை என்று கொடுத்து விடுங்கள். பின்பு யான் உரைப்பேன் சில ரகசியங்களும் கூட. 

==================================================
# எந்த ஒரு ஆலயம் செல்வதாக இருந்தாலும் , அவ் ஆலயத்தை நிச்சயம் நினைத்து உருகி உருகி பின் பாடல்களை பாடிக்கொண்டே வரவேண்டும்.
=================================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் நல்முறையாகவே பின் எவ்வாறாக திருத்தலத்திற்கு நிச்சயம் தன்னில் கொடுக்கின்றீர்களோ? நிச்சயம் தன்னில் கூட அனுதினமும் நிச்சயம் பின் எவை என்று ஒரு திருத்தலத்தை நினைத்து நிச்சயம் உருகி உருகி பின் பாடல்களை பின் பாடிட்டே 

சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல நீங்க ஒரு கோயிலை  செலக்ட் பண்ணிடனும். மனசுல டெய்லி நினைச்சு கும்பிட்டு பாடி பாடிக்கிட்டே எதுவும் நினைக்காம வரணும். புரியுதுங்களா? 

==============================================
# யான் சொல்வதை ஏற்று நடங்கள். நல்முறையாக மாற்றங்களே உண்டு.
==============================================

குருநாதர் :-  நிச்சயம் எவை என்று புரிய பின் எவை என்று அறிந்து இதனால் கவலைகள் இல்லை. நல்முறையாக மாற்றங்களே உண்டு. பின் யான் சொல்வதை ஏற்று நடங்கள். 

குருநாதர் :-  ஆசிகள், ஆசிகள் மீண்டும் இதை பின் நிச்சயம் பின் கொடுத்து மீண்டும் கேளுங்கள். பின்பு உரைப்பேன். 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 17   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.

======================================
# அபிராமி அந்தாதி -  என்னென்ன தேவையோ, அவையெல்லாம், வாழ்க்கையில் அனைத்தும் கிட்டும்
======================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், அப்பனே, அவளே  அனைத்தும் பார்த்துக் கொள்வாள் என்பேன் அப்பனே. நலன்களாக அப்பனே அபிராமி என்ற அப்பனே, பாடலை பாடிக் கொண்டே இரு. அனைத்தும் நடக்கும். அப்பனே, ஒரு தீபத்தை ஏற்றி, அப்பனே, நிச்சயம், பாடிக்கொண்டே இரு. அப்பனே, வாழ்க்கையில் அனைத்தும் கிட்டும். அப்பா. என்னென்ன தேவையோ, அவையெல்லாம்.

ஒரு அடியவர் :- ஒவ்வொரு ஆண்டும் வரும் வெயில் காலத்துல வந்து நீர் மோர் தானம் செய்யணும்னு நினைப்பேன். ஆனா அதை செய்யறதுக்கு தைரியம் வரல. 

குருநாதர் :-  அப்பனே, கவலை விடு. நிச்சயம், தன்னில் வேண்டிக்கொள். அப்பனே, நிச்சயம், அனைவரும் செய்ய வேண்டும் என்று, அப்பனே, தானாக வந்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இது எல்லாரும் வந்து செய்யணும்பா. இந்த உலகத்துல இப்படி இருக்குது, அப்படி இருக்குதுன்னு சொல்லிட்டு நீங்க நினைச்சுக்கிட்டீங்கன்னா, உங்களுக்கும் தானா வந்துரும்னு சொல்றாரு. அதை நீங்களும் பண்ணுவீங்க, பண்ணுவீங்கன்னு பிள்ளைக்கு, 


குருநாதர் :-  ( *.*.*.*.*.*.*  தனி வாக்குகள்  *.*.*.*.*.*.*)

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 18   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 

( இவ் அடியவர் அருமையாக இவ்வாறு ஆரம்பித்தார். )

இறைவா, நீயே அனைத்தும்.  இறைவா, நீ நன்றாக இருக்க வேண்டும். 

திருப்புகழ் - திருச்செந்தூர்
இராகம்: கௌளை
தாளம்: கண்ட நடை (தத்தத் தந்தன தந்தன...)

பாடல் வரிகள்:
இரட்டி தர்மம் பிரபாவம் உடைய
பயாற்றி யோடிகள் கூட்டிக்கொள் - வஞ்சன்
பொன் வந்திட ராவணன் உபந்தன்
திக்வரி தேகரி வஞ்சன் பொன் - வஞ்சரி

யாமென வெகு சேரி வந்தம்பும்
பொங்கிய தாகவே திக்கும் தன் - சம்பிரதாயம்
வந்தம்பும் பொம்பள பேசியும் வெகு
ரேகை வெஞ்சன் பின் சன்ரைசை - போதுக

ரங்கந்து சூரணம் போலவே குன்றும்
குன்றும் தர தார்வரம் மகம் வீசி
வெண்டல்லு கண்களினாலது கர்த்தங்கன்
கந்தர மார்போடு வெஞ்சந்து - சிந்தனி

சரசரன் வகை சேர உஞ்சன் என்று
திரிசி நாட்டி விழுந்தங்கும் - சென்றே
மதுக்கள் நொந்தும் என்றிட வேதசை
நிலம் போலே விண்டுங்கும் - துஞ்சில

கோடிகள் தின்னின்று நெருங்குறி
போடுவேன் அத்தம்பும் கொண்டுவேன் - மாதவன்
வருவோனே தஞ்சம் தன் சந்திர என்பதி
கொஞ்சம் கோன் சந்திர ஏயது - தண்டின்றி

பண்பு வீடது தருவாய் சங்கங்கன்
சங்கையில் சூழ்கட மெங்கைக்கும் - பொங்க
முகாவளி தந்தங்கும் செந்தில்
வாழ்வியல் பெருமாளே.

( கருணைக்கடல் இவ் அடியவருக்கு அற்புதமாக வாக்குகள் அருளினார்கள் ) 

===============================================
# வாழ்வில் ஏற்படும் முட்டுக்கட்டைகளுக்கும் வருத்தங்களுக்கும் காரணம், முந்தைய பிறவிகளில் முன்னோர்கள் செய்த சில வினைகள் அல்லது குடும்ப தோஷங்கள் இவ் அடியவர் தலைமேல் விழுந்திருப்பதுதான்
===============================================

குருநாதர் :-  ( ********** தனி வாக்கு ……………………… ******  ) 

 …………………………………
…………………………………
…………………………………

குருநாதர் :-  நிச்சயம், தன்னில் கூட அனுபவித்தே தீர்க்க வேண்டும். ஆனாலும் கவலைகள் வேண்டாம். 

குருநாதர் :-  ஆனாலும் இறைபலங்கள் அதிகம் என்பேன். 

குருநாதர் :-  அதனால் தப்பித்துக் கொள்ளலாம். எளிதில் கூட கவலைகள் இல்லை. சில நிச்சயம், நிச்சயம், தன்னில் கூட பின் சில காரியங்கள் தடைபடும். ஆனாலும் வெற்றி உண்டு. 

…………………………………
…………………………………
…………………………………

குருநாதர் :-  ( **** ஒரு  அம்பாள் ஆலயம் செல்ல வாக்கு , மற்றும் குரு போல ஒரு ஞானி உதவுவர் என்றும் வாக்கு **** ) 

குருநாதர் :- அப்பனே, இதனாலதான் அப்பனே, நிச்சயம் தன்னுடைய கவலைகள். நிச்சயம் எவை என்று புரிய. அப்பனே, அவையெல்லாம் யானே நீக்குகின்றேன் உங்களுக்கு தெரியாமலே. 

…………………………………
…………………………………
…………………………………

குருநாதர் :-  அப்பனே, எப்பொழுதும் எதை என்று அறிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட ஆசிகள் எப்பொழுதும் உண்டு. அப்பனே, கவலை வேண்டாம். நல்ல விதமாக. அப்பனே, இதனால்தான். அப்பனே, என் பிரச்சனைகள் ஏது எங்கு பின் செப்பிட வேண்டும் என்பதை எல்லாம் யான் அறிவேன் என்பேன். அப்பனே, 

==========================
# தேதியை வைத்து வாக்கு 
==========================

குருநாதர் :-  அப்பனே, பின் இன்றைய தேதி நீயே கூறு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்றைய தேதி நீயே கூறுன்றாரு. 

அடியவர் 18   :-   மார்ச் ஒன்றாம் தேதி. ( 01/03/2026 )

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சூரியன் எவை என்று அறிய. அப்பனே, பின் நிச்சயம் பித்ரு காரகன். அப்பனே, பின் எவை என்று கூட தெரிந்துகொள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சூரியன் யாரு? பித்ரு காரகன். அதனால வந்து என்ன பண்றாரு? வந்து சில விஷயங்களை வந்து இது பண்ணி, அவரே உங்களை கூட்டிட்டு போயிட்டு, அங்கங்க ஆசிகள் கொடுத்து, அது முடிக்கிறார். 

==========================
# நேரத்தை வைத்து வாக்கு 
==========================

குருநாதர் :-  அப்பனே, நேரத்தை பார். நேரத்தை பார். 

அடியவர் 18   :-   8:21 ஐயா. ( 8 மணி : 21 நிமிடம் )

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், சனீஸ்வரன் கூட அனுபவத்தை பின் பெற்று தந்து கொண்டே இருக்கின்றான். அப்பனே, நிச்சயம்.  அதனால், அப்பனே, பின் ஞானி என்று சொன்னேனே. அப்பனே, மூன்று தெரிந்து கொண்டாயா? அப்பனே, 

=============================================
# வரும் காலத்தில், அப்பனே, சரி, இளைஞருக்கெல்லாம் இப்படி சொன்னால்தான் வாக்குகள் புரியும்
=============================================

குருநாதர் :-  ஏனென்றால், பின் வரும் காலத்தில், அப்பனே, சரி, இளைஞருக்கெல்லாம் இப்படி நிச்சயம் சொன்னால்தான் புரியும். அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஐயா, இப்ப எல்லாரும் 'சயின்ஸ், சயின்ஸ்'னு சொல்றாங்களே, அங்க சனீஸ்வரன் ஒரு இடத்துல என்ன பண்ணாருன்னு பாருங்க. நீங்க என்னென்ன நினைக்கிறீங்களோ, அதுக்கெல்லாம் குறுக்கே வந்து அடிக்கடி முட்டுக்கட்டை போட்டுக்கிட்டே (முட்டி போட்டு) இருந்தாரு. ஆனா அப்பத்தான் ஒரு ஞானி ஒரு விஷயத்தைச் சொன்னாரு—அதாவது 'மூணு' என்ற எண் யாருன்னா, அது குரு பகவான். அந்த குருவானவர் என்ன பண்றாருன்னா, சனீஸ்வரன் எந்தத் தடையைக் கொடுத்தாலும், இவரு டக்குனு ஒரு வழியைக் காட்டி வழிநடத்துறாரு. சனீஸ்வரன் எதைச் செய்தாலும், பின்னாடியே ஒரு குருவோட 'ஆக்டிவேஷன்' இருந்துகிட்டே இருக்கு. அதனால, உங்களுக்குக் கிடைக்க வேண்டியதை அந்தக் குரு நிச்சயம் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துருவாருன்னு ஒரு நம்பிக்கையைச் சொல்றாரு." ) 

========================================
# அனைத்தும் நேரத்தையும் கூட்டி வாக்கு 
========================================

குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் கூட்டு விடை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அனைத்தும் கூட்டு ஒரு விடை சொல்லுன்றாரு. 

அடியவர் 18   :-  அனைத்தையும் 

8 மணி : 21 நிமிடம்

8 + 2 + 1 = 11

11 = 1 + 1 = 2 

2 = சந்திரன்

ஐயா, ரெண்டு வருது. சந்திரன், சந்திரன். 

குருநாதர் :-  எவை என்று புரிய பின் அம்பாளை, பின் நிச்சயம், தன்னில் கூட எவை என்று அறிய சொன்னேன் அல்லவா?  நிச்சயம் எவை என்று கூற  புரிகின்றதா? 

===================================
# ஜோதிட கால புருஷ தத்துவத்தின் படி வாக்கு 
# ( 8 மணி : 21 நிமிடம் ) = 2 ( 2 ஆம் ராசி ) 
===================================

குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம், தன்னில் கூட கால, பின் தத்துவத்தின்படி, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் மேஷம் ஒன்று. அப்பனே, இரண்டாவதாக, பின் ரிஷபத்தை எடுத்துக்கொண்டு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அப்பனே. 

======================================
# ஜோதிட கால புருஷ தத்துவத்தின் படி - ரிஷப ராசி 2 ஆம் வீடு.
======================================

சுவடி ஓதும் மைந்தன் :- கால விதிப்படி, மேஷம் ஒன்னு. இந்த இரண்டு என்ன? ரிஷப ராசி. இப்ப ரிஷப ராசி. ஓகேங்களா? 

அடியவர் 18   :-  சரிங்க. 

==================================================
# ரிஷப ராசி 2 ஆம் வீடு  ( 2 ) - இதனை இப்போது ஆதாரமாக எடுத்து கொண்டு 
#  8 (மணி)  - ரிஷப ராசி யில் இருந்து 8 ஆம் ராசி  தனுசு ராசி ( குரு வீடு )
==================================================

குருநாதர் :-  அப்பனே, பின் இவ் ராசியிலிருந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் எட்டாம் இடத்தை பார். 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ராசியிலிருந்து, ரிஷப ராசியிலிருந்து, எட்டாம் இடத்தை பார். தெரியுமா உங்களுக்கு? 

அடியவர் 18   :-   தனுசு ராசி. 

குருநாதர் :-  அப்பனே, புரிகின்றதா? அப்பனே, குரு என்று சொல்லிவிட்டேன். 

அடியவர் 18   :-  குரு வீடு 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிவிட்டேன். புரியுதா? 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய? அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எவை என்று கூட ஒன்பதாம் இடத்தை பார். 

அடியவர் 18   :-  சனி, சனீஸ்வர பகவான். 

குருநாதர் :-  அப்பனே, நீதான் சொன்னாய். 

குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூற  புரிகின்றதா? எட்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யார்? அவர்தான் உங்களுக்கு வந்து ஒன்பதாம் இடம் யாரு? ஒன்பதாம் இடம் சனீஸ்வர பகவான். மகரம், மகரம் வருது. அப்ப யார்? அவர் வந்து ஆலயத்திற்கும் குருநேயத்தும் உபதேசம் பெறுதல் யார் கொடுப்பாரு? ஐயா, புரியுதா? மேட்ச் பண்ணிட்டாரு. 

குருநாதர் :-  அப்பனே, இதுபோலத்தான் சிலருக்கு சொல்ல வேண்டும் என்பேன். அப்பனே, அப்பொழுதுதான் புரிந்து கொள்வார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சில பேருக்கு இப்படித்தான் சொன்னாலும், அப்பதான் புரிந்து கொள்வார்கள். 

======================================
# நேரத்தை வைத்தே ஜோதிடம் சொல்லும் முறை 
======================================

குருநாதர் :-  அப்ப, நிச்சயம், தன்னில் இப்பொழுது நேரத்தை பார். 

அடியவர் 18   :- 8:23. ஐயா,  ( 8 மணி : 23 நிமிடம் ) 

குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் கூட்டு 

அடியவர் 18   :- 13 ன்னு வருதுங்க. ஐயா, நாலு. ராகு.  ( 8 + 2 + 3 = 13. 1+3 = 4 )

குருநாதர் :- அப்பனே,  திடீர் என்று அனைத்தும் நடக்கும். அப்பா, போதுமா? 

அடியவர் 18   :-  நன்றி, நன்றிங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ராகு என்ன பண்ணுவாரு? ஐயா, ராகு வந்து முன்னோர்கள் வந்து இதுக்கெல்லாம் செய்து இருந்தா என்ன பண்ணுவாரு? ஐயா, ராகு என்ன பண்ணுவாரு? திடீர்னு உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவார். 

குருநாதர் :-  அப்பனே, முடிந்துவிட்டது. நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் உரைப்பேன். அப்பனே, எவை என்று கூட. அப்பனே, நிச்சயம், பின் இன்னும் வாக்குகள் உண்டு. 

அடியவர் 18   :-  ஐயா, ஒரே ஒரு விஷயம். ராமேஸ்வரத்துல முன்னோர்கள் வழிபாடு செஞ்சோம். அகத்தியர் சொன்ன எல்லா விஷயத்தையுமே செஞ்சோம். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட ராகு எதற்கு? அப்பனே, பின் குறிக்கின்றார். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ராகு எதனவா குறிக்கின்றாரு?  அதனாலதான் இப்ப ராகு எல்லாம் செஞ்சுட்டு. ஓகே, ஓகே. ஐயா, புரிஞ்சுக்கோங்க. சூப்பரா. உங்க அழகா நீங்க கேட்டீங்கன்னாவே தெரியும். உங்களுக்கு பதில் வந்து ஆன்சர் இதுலயே வந்துரும். 

அடியவர் 18   :-  நன்றிங்க. 

அடியவர் 18   :-  ( ………………. )

குருநாதர் :-  அப்பனே, பின் எவை என்று கூட பின் அனைத்தும் இப்பொழுது சொல்லியது. 

அடியவர் 18   :-  ( ………………. )

சுவடி ஓதும் மைந்தன் : ஐயா, சூப்பரா சொல்லி இருக்காரு. உங்களுக்கு எல்லாருக்கும் குடும்பத்துக்கும் தான் அது உண்டு. ஓகேங்களா? 


குருநாதர் :-  எதை என்று கூட கவலைப்பட தேவையில்லை. நிச்சயம், தன்னில் கூட நல்முறையாகவே அறிந்து கூட தியானம். அதாவது மூச்சு பயிற்சி செய்ய சொல். 

குருநாதர் :-  என்று புரிய. நிச்சயம், அப்பனே, பின் புரிந்து கொண்டு பின்பு கேள். 

===================================================
# கருணைக்கடல் வந்திருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள் 
===================================================

குருநாதர் :-  அப்பனே, அனைத்திற்கும் பின் எவை என்று அறிய அனைவருக்கும் வாய்ப்பு. 

அடியவர் 18   :-  நன்றி , நன்றி அய்யா. அகத்திய பெருமானுக்கு நன்றி.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Monday, September 14, 2026

சித்தன் அருள் - 1030 - அன்புடன் அகத்தியர் - சிவன் கோயில், பாக்கம் - பொதுவாக்கு!

                            இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 1030 - அன்புடன் அகத்தியர் - சிவன் கோயில், பாக்கம் - பொதுவாக்கு!











குருநாதர் அகத்தியர் பாக்கம் சிவன் கோயில் பற்றிய பொது வாக்கு.

வாக்குரைத்த இடம். பாக்கம் பாளையம். சிவன் கோயில், அணைகட்டு தாலுகா. வேலூர் மாவட்டம்.

உலகத்தின் முதல் சித்தனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்

அப்பனே நல்அருள்கள் இருக்க அனைத்தும் நிறைவேறும் என்பேன் அதி விரைவிலே.

அப்பனே சொல்லியவாறே நிச்சயம் நிறைவேறும் என்பேன் என்பேன் காகபுஜண்டர் முனியும் நல் முறைகள் ஆகவே தங்கி நிற்க அனைத்தும் நிறைவேறும் என்பேன் நிறைவேறும் என்பேன் பின் ஈசனே அனைத்தும் நல் முறையாக அவனே செய்து கொள்வான் என்பேன் இதனால்தான் பின் சொல்லிக்கொண்டே போகலாம் என்பேன். மனிதர்களை இனி ஈசன் நம்ப போவதுமில்லை என்பேன் ஏனென்றால் திருடர்களே அதிகம் என்பேன்

எவை என்று கூற அவன் ஸ்தலத்தை அவனே தேர்ந்தெடுத்து எதன் மூலம் பின் எவற்றின் மூலம் பின் நன்றாக மனிதர்களை தேர்ந்தெடுத்தால் அனைத்தும் நலம் ஆகும் என்று ஈசனுக்கே தெரியும்

அதனால் அவனே தேர்ந்தெடுத்துக் கொள்வான் என்பேன் நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே பின்னாளில் யோக காலங்கள் என்றாலும் எதனையும் தீர ஆராய்ந்து ஈசனும் எவ்வாறு நின்று பார்க்கும் பொழுது ஒடுக்கத்தூர் சுவாமிகள்(சித்தர்) என்கின்றார்களே அவரிடம் நிலையானதாக அனைத்தையும் முடித்துவிட்டு வா என்று உத்தரவு விட்டுவிட்டான்.

இதனால் நிச்சயம் இப்பொழுதுகூட இங்கேய தான் அமர்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன்.

அதனால் தோல்விகள் இல்லை என்பேன் வெற்றிகளே பின் நினைத்த மாதிரியே உறுதி செய்யப்படும் பொழுது ஈசனே நல் முறையாய் மனதை வைத்து கும்பாபிஷேகம் என்கிறார்களே அதையும் குடமுழுக்கும் என்கின்றார்களே இதையும் மாறுபட்டு இருக்கின்றது இவ் விஷயத்திலும் இரண்டு இரண்டு இதனையும் கழித்தால் ஒன்றுமில்லை வாழ்க்கையில் இதிலும் அர்த்தம் உள்ளது போல் நின்றிருந்தால் ஈசன் நிச்சயம் வருவான் என்பேன் அதே முறையில் நல் முறைகளாக வைத்துக் கொள்க.

நல் முறைகள் ஆகவே அதன் முன்னே ஈசனும் பலமாக மனிதன் மனதில் நுழைந்து பின் பலமாக பலமாகவே அனைத்தும் நிறைவேற வைப்பான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே எதை எதை என்று கூற எதனையும் முன் படுத்தும் பொழுது பின் நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதையும் கூறும் பொழுது கூறி விளக்கும் அளவிற்கு பல கோடி சித்தர்கள் எவ்வாறு நின்ற போதும் கூட தெரிவிக்கும் அளவிற்கு கூட பல புண்ணியங்கள் பல புண்ணியங்கள் நின்ற அதனாலே எவ்வாறு முன் நின்று பார்க்கும் பொழுது ஒன்றுமில்லை அப்பா உலகில்.

வாழ்வே இவ்வாறு என்பதற்கு இணங்க முன்னொரு காலத்திலே இவன்(சிவன்) தன் நல் முறைகள் ஆகவே இங்கு இருக்க

பின் எவை எவை என்று கூற பின் மனிதர்கள் பொருளுக்கும் செல்வங்களுக்கும் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு இவ் ஈசனை மறைத்து வைத்து விட்டனர் என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே இங்கு இருக்கும் நல் முறைகளாக அருள்பாலித்து வந்திருந்தான் ஈசன் ஆனாலும் சில சில மனிதர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை பின் நாங்கள் தான் வாழ்வோம் பின் சிலசில மனிதர்களை வாழ வைக்காமல் வாழ வைத்து விடக்கூடாது என்பதற்கு இணங்க சிவனை அடியோடு எவ்வாறு என்பதையும் கூட பெயர்த்து விட்டார்கள் பின்பு நீரினால் சிறிது அழிந்தது.

ஆனாலும் ஈசன் நின்றான் அதனையும் விட்டு வைக்க கூடாது என்று பின் மனிதர்கள் கம்பிகளால் இடித்து இங்கே புதைத்துவிட்டனர் இப்பொழுதும் கூட அந்தத் தழும்புகள் தெரிகின்றது என்பேன்.

ஆனாலும் இன்றைய அளவில் அக்கிரமங்கள் அநியாயங்கள் இவ்வட்டாரத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது உலகத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது உண்மை.

இதனால் ஈசன் அங்கங்கு எழுவான் யார் மூலம் எவர் மூலம் எதன் மூலம் தேர்ந்தெடுத்தால் நல்லது என்று நினைத்து தேர்ந்தெடுத்து விட்டான். இதனால் கவலைப்பட தேவையில்லை.

ஈசனே இத்தலத்தை மீண்டும் உருவாக்குவான் என்பதே மெய்.

நல் முறைகளாக மனிதர்கள் எத்தனை எத்தனையோ நினைத்து குழம்பிக் கொண்டு அவர்கள் அவ் மனிதர்கள் இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள் எப்படி இது நடக்கும் என்று எண்ணியபடியே இருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு உண்மையான பொருள் எது என்பது தெரியவில்லை அப்பனே சக்திகள் எதன் இடத்தில் இருந்து வருகின்றது என்பது தெரியாமல் போய்விட்டது முட்டாள் மனிதர்களுக்கு.

ஆனாலும் இதனைப் பற்றியும் கவலை கொள்ளாத இருங்கள் நல்ல முறையாக இங்கு வருபவர்களுக்கு ஒரு சூட்சுமத்தை உரைக்கின்றேன்.விரிவாக விவரிக்கின்றேன்.

அனைத்தும் நல்கும் என்பேன்

அனைத்தும் கொடுக்கும் ஈசன். அப்பனே இதனால் முன் ஜென்மதிலே வாழ்ந்த மனிதர்கள் இதனை அழித்துவிட வேண்டுமென்றே இதனையும் அழித்து விட்டார்கள் .

ஆனால் மீண்டும் எழுந்தான்.

தேர்ந்தெடுப்பவன் மிகப்பெரியவன் என்பேன் ஆனால் கீழ்தரமானவர்கள் மனிதர்கள்.

அப்பனே நல் முறையாக இன்பம் துன்பம் எதன் இடத்தில் இருந்து வருகின்றது என்று பார்த்தால் அனைத்தும் மனிதர்கள் இடத்தில் இருந்துதான் வருகின்றது என்பதை யான் சொல்வேன்.

இன்பம் வரும் பொழுது ஆடி விட்டு துன்பம் வரும் பொழுது துன்பம் வரும் பொழுது தான் இறைவனிடத்தில் நாடிச் செல்கின்றார்கள் அதனால்தான் முதலில் இன்பம் கொடுப்பான் இறைவன் அப்பொழுது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பேன்.

அத் இன்பத்திலும்தாழ்வான மனது இல்லாமல் நல்ல எண்ணங்களுடன் புண்ணியங்களை செய்தால் துன்ப காலத்தில் இன்பமாகவே மாறிவிடும் என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே ஒன்றை உரைக்கின்றேன்

இங்கு நல் முறையாகக் கட்டி முடித்து கட்டிடங்கள் எழுந்து நினைத்த நாளில்  நடைபெறும் மாணிக்கவாசகனும் இங்கு தங்கிச் செல்வான் மனிதர்களைப் போலவே சுற்றித் திரிவான்.

நல் முறைகள் ஆகவே எவை எவை வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவற்றை நிச்சயம் நிறைவேற்றித் தருவான் இவ் ஈசன்.

அப்பனே அம்மையே யான் அனுப்புகின்றேன் மனிதர்களை நல் முறையாக நல் முறைகள் ஆகவே இனிமேலும் புண்ணியங்கள் செய்தால்தான் மனிதனால் பிழைக்க முடியும் என்பேன்.

அதனை விட்டு எதனை எதனையோ நாடிச் சென்றால் அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பேன்

ஒன்றை கூறுகின்றேன் குறிப்பாக குறிப்பாக மனிதர்கள் கர்மத்தை தேடிக் கொள்வதில் வல்லவர்கள் என்பேன் ஏனென்றால் கர்மா அதிவிரைவில் அழைத்து  சென்றுவிடும் ஆனாலும் புண்ணியங்கள் செய்வதற்கும் மனம் வராது என்பேன்.

இறைவனும் நல் முறையாக மனிதனை படைக்கின்றான் இப்புவி உலகத்திற்கும் அனுப்புகின்றான் ஆனாலும் மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டு எதனையோ எதனையோ நினைத்துக்கொண்டு வருந்திக் கொண்டு பின் கர்மாக்களை எதன் மூலம் தேர்ந்தெடுக்கிறான் என்றால் கர்மாக்களை உருவாக்குபவன் மனிதன் தான் என்பேன்.

அப்போது இறைவன் மீது எவ்வாறு குற்றம் சொல்ல இயலும்?

ஏன் இறைவன் மீது நீங்கள் குற்றம் சொல்லலாம்

ஆனாலும் யான் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்

மனிதர்கள் தங்கள் மனதை தொட்டு மனசாட்சிக்கு விரோதமாக இல்லாமல் இறைவா எந்தனக்கு ஏன் கொடுக்கவில்லை?? என்று கேளுங்கள்.

இந்த நிலைமையிலேயே இருந்தால் பின் கஷ்டங்கள் சோதனைகள் சோதனைகளும் மனிதர்களால் உருவாகின்றது என்பேன்.

சோதனை சோதனை என்று மனிதன் திரிந்து கொண்டே இருக்கின்றான் ஆனால் முட்டாள் மனிதன் சோதனை எதிலிருந்து வந்தது என்பதை உணர வில்லையே

 அதனால்தான் சிவவாக்கியன்  பாடிவிட்டு சென்றான் கோடி கோடி மனிதர் பிறந்தும் ஒன்றுமில்லாமல் போய் விட்டார்கள் இறைவனையும் அறியாமல் போய் விட்டார்களே ஆனாலும் கலியுகத்தில் தெரிந்துகொள்ளுங்கள் என்பேன்.

சிவ வாக்கியனும் நல் முறைகளாக பின் பல உயரத்திலும் எண்ணத்திலும் வித்தைகளை செய்வான் அதனால் வாக்கியனின் வாக்கியபடியே இங்கு பல உண்மைகள் பொதிந்து இருக்கின்றன என்பேன் அப்பனே அம்மையே நல் முறைகளாக கவலைப்பட தேவையில்லை என்பேன்.

ஈசனே நாடகத்தை நடத்துவான் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள்.

உண்மை நிலை என்னவென்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை என்பேன் அன்பே கடவுள் கடவுள் மீது அன்பை வைத்து விட்டால் இறைவனும் அதைவிட பன்மடங்கு திரும்ப அன்பு செலுத்துவான் என்பேன் என்பேன் ஆனால் இதனையும் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை.

மாயை மாயையே கண்ணை அடைத்து விடுகின்றது பின் கர்மாக்கள் இன்னும் ஒரு முறை உரைக்கின்றேன் இதைப்பற்றி. யோசியுங்கள் பலமாக கர்மம் யார்? உருவாக்குகின்றான்? என்று.
 
நிச்சயமாய் சொல்வேன் மனிதனே. மனிதர்கள் மாறாதவரை இந்த உலகம் மாறுவதாக இல்லை

அப்பனே நல் முறைகள் ஆகவே யானும் இத்தலத்தில் தங்கி சென்று கொண்டுதான் இருக்கின்றேன் நிச்சயமாய் நடத்தி வைப்பேன் யானும்.

நல் முறைகள் ஆகவே ஆனாலும் மனிதர்கள் ஏமாற்றுவார்கள் எதை எதையோ எண்ணிக் கொண்டு.

ஈசனை மட்டும் நம்புங்கள்.

இவ்வுலகத்தில் ஈசனை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என்பேன்.

அனைத்திற்கும் காரணமானவன் ஈசன் இருக்கும்பொழுது ஆனாலும் மனிதர்கள் எதையோ எண்ணிக் கொண்டு அதைச் செய்தால் இது நடக்கும் எதைச் செய்தால் அது நடக்கும் என்று எண்ணிக் கொண்டு அலைந்து அலைந்து திரிந்துகொண்டு பொய்யான உலகத்தில் மெய்ப்பொருள் என்ன என்பதுகூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர் ஆனாலும் அனைத்தும் வீணே.

ஈசனை விட சக்திகள் இவ்வுலகத்தில் ஏதும் இல்லை என்பேன்.

நம்பினால் நம்பி பாருங்கள் தெரியும் சக்திகள் எதில் இருந்து வருகின்றது என்பது.

அதனால்தான் நாங்கள் நம்பிக்கை நம்பிக்கை என்று எடுத்து சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

எதன் மீது நம்பிக்கை வைத்தாலும் அது வீணாக போய்விடும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் எப்போதும் வீணாகாது என்பேன்.

சோதனைகள் சோதனைகள் தந்து தான் மீட்டு  கொள்வான் ஈசன்.

நிச்சயம் இவ்வாலயத்தில் திருநாள் நடக்கும் என்பேன் ஈசனும் கலந்து கொள்வான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே சந்தோசம் நிச்சயம் அவன் கொடுப்பான் என்பேன் ஆனால் அதை பெற்றுக் கொள்ள தகுதியானவன் மனிதன் இல்லையேப்பா.

ஈசனும் நல் முறைகள் ஆகவே இங்கு வந்து வந்து தான் செல்கின்றான். அதனால் அம்மையே அப்பனே ஏது குறை?

ஈசனே என் கதி என்று நினைத்துக் கொண்டு வாழுங்கள் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு அனைத்தும் செய்வான் என்பேன்.

அப்பனே வாழ்க்கையே பொய்யடா இதில் மெய்யானது நிலையானது என்று எண்ணிக்கொண்டு மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அப்பனே மெய் என்பது என்னவென்றால் இறைவனே மெய் அவ் மெய்யை  பிடித்து விட்டால் பின் அனைத்தும் நலமே. ஆனால் அப்பனே முட்டாள் மனிதன் இதை உணர்வதும்  இல்லை அப்பனே.

மனக்குழப்பம் கொள்ளாதீர்கள் அப்பனே மனக்குழப்பம் கொண்டால் அப்பனே மனிதனின் நோய்க்கு மூலாதாரமே மனக்குழப்பம் தான் நல் முறையாக இறை பக்தியை பின் கடைப்பிடித்து நல்ல கதி அடையலாம் என்பேன்.

இத்தலத்திற்கு நல் மனிதர்கள் வந்து புண்ணியம் சேர்த்துக் கொள்வார்கள் இங்கு.

அப்பனே கலியுகத்தில் மனிதர்கள் ஏமாற்றுவார்கள் ஏமாற்றி தான் பிழைப்பார்கள் என்பேன்.

அம்மையே நல் முறையாக ஒடுக்கத்தூர் சுவாமிகள் இங்குதான் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே என்னுடைய( அகத்தியர்)  பக்தர்கள் அனைத்தும் செய்விப்பார்கள் .

யானே நல் முறையாக அவர்கள் மனதை மாற்றுவேன் அப்பனே கவலை இல்லை உண்மையான சிவனடியார்களும் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள்.

அவர்களும் வருவார்கள் நாடிவந்து நல் முறைகள் ஆகவே வரங்களைப் பெற்று செல்வார்கள் என்பேன்.

ஒரு ஈசனின் தளம் அமைப்பது சாதாரண காரியமல்ல பல புண்ணியங்கள் பெற்று இருந்தால் மட்டுமே நல் முறையாக அமைக்க முடியும் அப்பனே அம்மையே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்.

அப்பனே நடக்க வேண்டியது சரியான நேரத்தில் நடக்கும் கவலை விடுங்கள்.

நல் முறைகள் ஆகவே பல உலக அதிசயங்கள் இவ்வுலகில் நடக்கப் போகின்றது கலியுகத்தில் முறையாகவே ஆங்காங்கே இன்னும் சிவ ஸ்தலங்கள் எழும் என்பேன்.

ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன் பல தேவர்களும் நல் மனிதர்களும் இனிமேலும் நடமாடுவார்கள் என்பேன் நாட்டிலே. ஆனாலும் யாங்களும் சித்தர்களும் மனிதர்களை நம்பி நம்பி ஏமாந்து கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம் . பின் இவன் பக்தியாக இருந்து நல்லது செய்வான் என்று எண்ணினால் ஆனால் அவனோ பணத்திற்கு ஆசைப்பட்டு ஏதேதோ தொழிலில் இறங்கி அவன் கர்மத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்.

ஆனாலும் தேவர்களும் ஞானிகளும் நல் மனிதர்களை ஆங்காங்கே தேர்ந்தெடுத்து பல திருத்தலங்களை திரும்பவும் அமைப்பார்கள் என்பேன்.

கலியுகத்தில் கெட்டது நடந்தாலும் இருக்கின்றார்கள் சித்தர்கள்.

நல் முறைகளாக யாங்களும் பல பல ஞானியர் களும் பலப்பல விளையாட்டுகள் விளையாடி பின் நல் முறையாக நல் முறையாகவே இவ் உலகத்தை திருத்துவோம்.

அப்பனே கவலை வேண்டாம் அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

இத்தலத்திற்கு ஓர் சிறப்பு

அப்பனே நினைத்ததை நினைத்த முறையே கொடுக்கும் திறன் இவ்வாலயத்திற்கு உண்டு என்பேன் இது சத்தியம்.

அப்பனே அம்மையே நல் முறைகளாக அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு இத்தலத்தின் சிறப்பை பற்றி இன்னும் விரிவாக விவரிக்கின்றேன் கும்பாபிஷேகம் முடிந்த பின்.

அனைத்து சித்தர்களும் வருவார்கள் இங்கே நல் முறையாக வந்து செல்வார்கள்  நல் முறையாக வந்து செல்வார்கள்.

நல் முறையாக ஒடுக்கத்தூர் சுவாமிகள் நட்டு வழிபட்ட ஈசன் இவன்.
இடையில் மனிதர்கள் செய்த தீவினைகள் பின் ஈசன் மீண்டும் இயல ஒடுக்கத்தூர் சுவாமிகள் இங்கு முன்னிருந்து அனைத்தும் செய்விப்பான் ஈசனின் கட்டளைப்படியே. நல் முறையாக அவனும் இங்கேயேதான் அமர்ந்து கொண்டு இருக்கின்றான்.

அப்பனே இத்தலம் ரம்பையும் ஊர்வசியும் சாபம் பெற்றபோதுஇங்கே வந்து சென்ற  சென்ற ஸ்தலம் இது அப்பனே.

இந்தக் கோயிலின் அடியிலேயே பல கோடி சித்தர்கள் தியானத்தில் இருக்கின்றனர் நல் முறையாக யான் இப்பொழுது உரைப்பதையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்தலத்தின் அடியிலேயே ஜீவ சமாதியும் உள்ளது அப்பனே அவன் பெயர் ராமலிங்கன் சாமிகள் என்று நல் முறையாகவே இதனை முன் நின்று பார்க்கும் பொழுது திவ்ய முனி என்பவனும் இங்கே அமர்ந்து இருக்கின்றான். நல் முறைகள் ஆகவே இவ்வாறு என்பதை கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்குக்கூட பின் பின்

தோன்றாமைக்கு காரணம் கூட இன்னும் உண்டு என்பேன் பல சித்தர்கள் இங்கு உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன்.

அதனால் அப்பனே நல் முறைகள் ஆகவே அவர்களே உருவாக்குவார்கள் இத்தலத்தை.

இத்தலத்தை நல் மனிதர்கள் தேடிவந்த வரம் பெற்று செல்வார்கள் என்பேன் வரும் காலங்களில்.

அப்பனே  நல் முறைகளாக நாம் என்று சொன்னால் தான் அனைத்தும் நடக்கும் என்பேன்.

நான் என்ற வார்த்தைகள் ஈசன் அடியில் இருக்கக் கூடாது என்பேன்.

நல் முறைகளாக ஈசனை வணங்குபவர்கள் நான் என்னுடையது நான்தான் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பேன்.

அப்பனே ஈசன் மனிதர்களுக்கு ஓர் அறிவு அதிகமாக படைத்துவிட்டான் ஆனால் அந்த அறிவை இதுவரை மனிதர்கள் பயன்படுத்தியதாக சரித்திரமே இல்லை என்பேன்.

ஆனாலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டால் பின் இறைவனையே காணலாம் என்பேன்.

அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் அப்பனே ஒன்றென்று இருங்கள் தெய்வம் நன்றென்று இருங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் மீண்டுமொரு திருத்தலத்தில் வாக்குகள் உரைக்கின்றேன் இன்னும் பலமாக.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!



அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.