"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, September 13, 2026

சித்தன் அருள் - 2142 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 6

 இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 2142 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 6

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

=========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
=========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

================================================
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று   நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 6  )
================================================


குருநாதர் :-  தாயே , நீ பாடலை பாடவில்லை. ஆனால் சொல்லிவிட்டேன். நிச்சயம் பாடு. 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 11   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )

உருவாய் அருவாய், உளதாயே  இலதாயே 
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


குருநாதர் :-  அப்பனே, கவலை விடு. இழுத்து வந்து விடுகின்றேன். 

=============================================
# பக்தி - எதில் இருந்து  தொடங்க வேண்டும்?
=============================================
# காலையிலும் மாலையிலும் அவசியம் இல்லங்களில் தீபம் ஏற்றுங்கள் 
=============================================

குருநாதர் :-  தீபமாவது ஏற்ற சொல். காலையிலும் மாலையிலும்.

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் இதிலிருந்து தான் தொடங்க வேண்டும் பக்தி 

குருநாதர் :-  எதை என்று மீண்டும் சொல். அனைவருக்கும், 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அனைவரிடத்திலும் மீண்டும் அந்த பாடல் சொல்ல சொல்றார். 

அடியவர் 11   :-   ( மீண்டும்  பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )

உருவாய் அருவாய், உளதாயே  இலதாயே 
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

குருநாதர் :-   ( **** தனி வகுக்கள் ****  )


அடியவர் 10   :-  மழை வாழ்த்து படிக்கணும்னு ஆசைப்படுறேன். மழை வாழ்த்துன்னு ஒரு பாடல் இருக்குங்க.  ஏரி, குளம், கிணறு, ஆறு எல்லாம் நினைவு வழியான்னு ஒரு பாடல் இருக்கு. 

அடியவர்  :-  அந்த பாடலை வந்து கூட்டு பிரார்த்தனை சேர்க்கணும்னு சொல்லி என்னோட அந்த பாடலை கூட்டு பிரார்த்தனை சேர்க்கணும்னு ஆசைப்படுறாருங்க. 

குருநாதர் :-  அப்பனே , நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது விட்டுவிடு. பின்பு ஒரு மாதம் கழித்து எனை கேள். சொல்கின்றேன். 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 12   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

குருநாதர் :-  தாயே, பின் அழகாக வழிநடத்து விடுகின்றேன். கவலை பின் வேண்டாம். என்ன தேவையோ அதை கொடுத்து உனக்கு யான் வழி நடத்துகின்றேன். போதுமா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இன்னும் என்ன வேண்டுமா? 

==============================================
# நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கருணை 
==============================================

அடியவர் 12   :-  ஐயா, எனக்கு ஒன்று தான். திருவண்ணாமலை கிரிவலம் பண்ண முடியாத அளவுக்கு என்னுடைய வலது முழங்கால் முட்டி தேஞ்சு போய் நடக்க முடியாமல் இருக்கேன். என்னுடைய வாழ்க்கை, 

குருநாதர் :-  தாயே , எது என்று அறிய நிச்சயம் பின் நினைத்தாலே முக்தி தரும் என்பவையெல்லாம் அனைவருக்கும் நிச்சயம் தன்னில் கூட. இதனால் பின் எவை என்று அறிய அறிய வாகனத்தில், அதாவது நிச்சயம் செல், தாயே . 

அடியவர் 12   :-   எனக்கு ஏதாவது கிரிவலம்….. 

சுவடி ஓதும் மைந்தன்  :-   அம்மா, இருங்க, இருங்க, இருங்க. வண்டியில போவோமான்னுட்டாரு.

அடியவர் :-  ஆட்டோல ..

அடியவர் 12   :-    எனக்கு நடந்து தான், சார், நான் போகணும். எனக்கு வந்து, 

குருநாதர் :-  தாயே , இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. பின் இப்பொழுது பின் தேவையில்லாதவை இவை. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (இப்போது என்ன பண்ண சொல்றாரு? நீங்க ஆட்டோல கிரிவலம்  போகலாம் ) 

குருநாதர் :-  தாயே , 16 வயது போல் பேசுகின்றாய். நியாயமா? 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

============================================
# இறைவனின் பெருங்கருணை மனிதனுக்கு புரிவதே இல்லை 
============================================

குருநாதர் :-  தாயே , கவலைகள் வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் ஈசன் அருகிலே இருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( அம்மா , ஈசன் உங்க பக்கத்துலயே இருக்கிறார். பக்கத்துலயே இருக்கிறார். )

குருநாதர் :-  இவை எது என்று புரிய. அப்பொழுது உன்னை வரவேற்பானா? என்ன? 

சுவடி ஓதும் மைந்தன்  :- ( உங்க பக்கத்துலயே ஈசன் இருக்கும் போது,  இறைவன் உங்களை திருவண்ணாமலை கிரிவலம் வர,  உங்களை அங்கு வரவேற்பாரா என்ன? இல்ல) 

அடியவர் 12   :-   ( ……………… )  

குருநாதர் :-  தாயே , கவலை விடு. அதனால்தான் சொல்லிவிட்டேன் முதலிலே.

=====================================
# குருநாதர் :-  அனைவரும் கேளுங்கள்.
=====================================
# உடல் என்பது ஒரு எந்திரம் - போக போக என்ன ஆகும் ?
====================================== 

குருநாதர் :-  தாயே , நிச்சயம் தன்னில் கூட மீண்டும் சொல்கின்றேன். அனைவரும் கேளுங்கள். புதிதாக வாகனத்தை நிச்சயம் வாங்குகின்றீர்கள். போக போக என்ன ஆகின்றது? இதுதான் உடம்பு கூட. உடம்பு இயந்திரம். தாயே , 


சுவடி ஓதும் மைந்தன்  :- ("எல்லார்கிட்டயும் அவர் இது தான் சொல்றாரு. நாம ஆசையா ஒரு புது வண்டி வாங்குறோம்; ஆனா ஒரு பத்து வருஷம் ஓடுனதும் அது பழைய வண்டி ஆகிடுது இல்ல? அப்பறம் என்ன... ஒன்னொன்னா ரிப்பேர் ஆகும், எல்லாத்தையும் மாத்திதான் ஆகணும். நம்ம உடம்பும் அந்த மெஷின் மாதிரிதான். ஓட ஓட ஒவ்வொன்னா தேயும், கழண்டு வரும், கடைசியில வண்டி ஓடாதப்ப எப்படி அத ஓரமா தூக்கி போடுறோமோ, அதே மாதிரிதான் இந்த உடம்பும். ஒரு கட்டத்துல இதையும் தூக்கி போட்டுட்டு போக வேண்டியதுதான். இதுதான்மா உலக விதி, இத யாராலயும் மாத்த முடியாது!" )

குருநாதர் :-  இதனை யாராலும் தடுக்க முடியாது. தாயே, சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதை வந்து இதுதான் உலக நியாயம். இதை வந்து என்ன பண்றது? மாத்த முடியாது. மாத்த முடியாது. 

================================================
# ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?
================================================

குருநாதர் :-  நிச்சயம் அனைத்தும் இறைவன் தான். பின் மனது இளமையாக எவை என்று அறிய நன் மனது வைத்துக் கொண்டால், நிச்சயம் இவையெல்லாம் கலந்து ஓடாது. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ("நாம எப்பவுமே என்ன பண்ணணும்னா, மனசை ரொம்ப இளமையாவும் நல்ல எண்ணங்களோடும் வச்சுக்கணும். அதுக்கு அடிக்கடி உடற்பயிற்சி, யோகான்னு எதாவது ஒன்னு பண்ணிக்கிட்டே இருக்கணும். அப்படி முறையா உடம்பையும் மனசையும் கவனிச்சுக்கிட்டா, அந்த வண்டி (உடம்பு) சீக்கிரத்துல தேஞ்சு போய் பாகம் பாகமா (Parts) கழண்டு ஓடாது; இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லாவே உழைக்கும்!" )
=======================================
# குருநாதர் “யான் பார்த்துக் கொள்கின்றேன்” - என்றால் அதன் அர்த்தம் 
=======================================

குருநாதர் :-  கவலை வேண்டாம், தாயே . பார்த்துக் கொள்கின்றேன். 

அடியவர் 12   :-   ( ……………… )  

குருநாதர் :-  தாயே நிச்சயம் தன்னில் கூட விதியில் ( ****  **** **** பிரம்ம தேவர் எழுதிய , கடுமையான விதியின்  ரகசியங்கள் **** **** **** **** **** **** **** **** ) என்று விதி, தாயே . பின் சொல்லவும் எவை என்று உண்மை சொல்லிவிட்டாலும் மனது சங்கடங்கள். 

குருநாதர் :-  தாயே , எதை என்று அறிய நிச்சயம் ( ****** மருத்துவர்களால் கண்டுபிடிக்க , சரி செய்ய இல்லாத அதி மருத்து மூல ரகசியங்களை  எடுத்து உரைத்தார்கள் **** )  

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( ***** ரகசிய விளக்கங்கள் ***** )

குருநாதர் :-  நிச்சயம் மருத்துவன் அதை கை வைத்தால், அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( **** மிக மிக  மிக  நீண்ட விளக்கங்கள் *** )

அடியவர் 12   :-   ( ……………… )  

குருநாதர் :-  தாயே , எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அனுதினமும் நிச்சயம் யான் சொல்வேன். அதை …………. என்றால் நிச்சயம் இல்லை. விதிதான் ஜெயிக்கும். அதனால் நிச்சயம் தன்னில் கூட கடல் . அதாவது கடல் , அதாவது நீர் நீராடினாலே போதுமானது. 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சபரிமலை திருவாபரணப் பெட்டியின் பின்னால் ஒளிந்துள்ள சிலிர்க்க வைக்கும் உண்மைகள்: ஒரு ஆன்மீகத் தேடல்

                    இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...   

சபரிமலை திருவாபரணப் பெட்டியின் பின்னால் ஒளிந்துள்ள சிலிர்க்க வைக்கும் உண்மைகள்: ஒரு ஆன்மீகத் தேடல்

சபரிமலை யாத்திரை என்பது வெறும் காடுகளையும் மேடுகளையும் கடந்து செல்லும் உடல் சார்ந்த பயணம் மட்டுமல்ல; அது ஆன்மாவைச் சுத்திகரிக்கும் ஒரு உன்னதப் பயணம். ஒவ்வொரு ஆண்டும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் விண்ணைப் பிளக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து மலை ஏறுகிறார்கள். ஆனால், நாம் செய்யும் இந்தப் பக்தி வெறும் சடங்குதானா? அல்லது அதையும் தாண்டிய ஒரு தேடலா? "நிஜமான பக்திக்கு சோதனைகள் ஏன் வருகின்றன?" என்ற கேள்வி பல பக்தர்களின் மனதில் ஒரு தழும்பைப் போலத் தங்கிவிடுகிறது. பக்தி என்பது ஒரு பரீட்சை என்றால், அந்தப் பரீட்சையில் தேறுவது எப்படி? இதற்கான விடையை, சபரிமலையின் ஆபரணப் பெட்டியின் பின்னால் மறைந்துள்ள ஒரு மெய்சிலிர்க்கும் வரலாற்றின் மூலமும், அகத்தியப் பெருமானின் வாக்குகள் மூலமும் தேடுவோம்.



பக்தி என்பதன் உண்மையான இலக்கணம்

இன்றைய இயந்திரத்தனமான உலகில், குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்குச் செல்வதும், இயந்திரம் போலச் சில மந்திரங்களை முணுமுணுப்பதும் தான் பக்தி என்று நாம் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், பக்தி என்பதற்கு அகத்தியப் பெருமான் அளிக்கும் விளக்கம் மிகவும் நுணுக்கமானது. பக்தி என்பது நாம் செய்யும் ஒரு 'செயல்' அல்ல; அது நாம் இருக்கும் ஒரு 'நிலை'.

"எங்கிருந்தாலும், எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருப்பதே, பக்தி என்பேன்!!!!"

இந்த ஒரு வரி, நாம் கடைபிடிக்கும் வழக்கமான வழிபாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. ஒருவன் அலுவலகத்தில் இருந்தாலும், காட்டிலிருந்தாலும் அல்லது தன் அன்றாடப் பணிகளில் மூழ்கி இருந்தாலும், அவனது ஆழ்மனம் இறைவனைச் சுற்றியே இருக்க வேண்டும். எப்போது நினைத்தாலும் இறைவனின் நினைவு வந்து நிற்பதே உண்மையான பக்தி. இந்த நிலையை ஒரு பக்தன் எட்டிவிட்டானா என்று சோதிக்கவே, இறைவன் சில நேரங்களில் கசப்பான அனுபவங்களையும், அக்னிப் பரீட்சைகளையும் வழங்குகிறான்.

பக்தியின் அக்னிப் பரீட்சை: ஒரு பெண் பக்தையின் கதை

சபரிமலை திருவாபரணப் பெட்டியின் வரலாற்றில் ரத்தமும் கண்ணீரும் கலந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் உண்டு. ஐயப்பனின் திருவாபரணப் பெட்டியை ஒருமுறையாவது தொட்டு வணங்க வேண்டும் என்ற தீராத ஆவல் கொண்ட ஒரு பெண்மணி இருந்தாள். கார்த்திகை மாதத்தின் ஒரு நாள், யாருக்கும் தெரியாமல் மறைவாகச் சென்று, அந்தப் புனிதமான ஆபரணப் பெட்டியைக் கெட்டியாகப் பிடித்துத் தொட்டு வணங்கினாள். "ஐயனே! உன்னைத் தொட்டுவிட்டேன்" என்ற பேரானந்தத்தில் அவள் திளைத்தாள்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அங்கிருந்த ஒரு காவலாளியின் மனதில் வஞ்சகம் குடிபுகுந்தது. அந்தப் பெண்மணி பெட்டியைத் தொட்டதைப் பயன்படுத்திக் கொண்டு, அவனது இல்லத்தில் ஆபரணத் திருட்டை நிகழ்த்தினான். திருடிய நகைகளைத் தன் வீட்டில் மறைத்து வைத்துவிட்டு, "நகைகளை இந்தப் பெண்மணிதான் திருடிக்கொண்டு ஓடிவிட்டாள்" என்று பொய்ப் பழி சுமத்தினான்.

அரச சபையில் அந்தப் பெண் நிறுத்தப்பட்டாள். "பெட்டியைத் தொட்டாயா?" என்ற கேள்விக்கு, "தொட்டேன்" என்று உண்மையை உரைத்தாள். ஆனால், "நகைகளைத் திருடினாயா?" என்ற கேள்விக்கு, "இல்லை" என்று கதறினாள். காவலாளியோ, அவள் திருடுவதைத் தான் நேரில் பார்த்ததாகச் சாட்சியம் கூறினான். அமைச்சர்கள் அவளை மிரட்டினார்கள், "நகைகளைக் கொடுத்துவிடு, இல்லையென்றால் உனக்கு மரண தண்டனை உறுதி" என்று அச்சுறுத்தினார்கள்.

ஒரு கட்டத்தில், அந்தப் பெண்மணி பலமாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு, தன் மீது சுமத்தப்பட்ட அநீதியான குற்றச்சாட்டின் மீதான ஏளனம் மட்டுமல்ல, ஐயன் மேல் அவள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு. அவளைக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தினர். ஒரு பெரிய கம்பால் அவளது முதுகில் அடித்தனர். பேசக் கூட முடியாத நிலையில் ரத்தக் காயங்களுடன் அவள் சித்திரவதை செய்யப்பட்டாள். சிறையில் அடைக்கப்பட்ட அவள், "ஐயனே! அனாதையான எனக்குச் சாட்சி சொல்ல யாருமில்லையே! இத்தனை ஆண்டுகள் உனக்குச் சேவை செய்தும் எனக்கு இதுதான் தண்டனையா?" என்று மனமுடைந்து வினவினாள். அவள் சைகை மூலம் ஒரு நிபந்தனை விதித்தாள்: "நகைகளை நான் காட்டுகிறேன், ஆனால் அதற்கு முன் அந்தச் சபரிமலை ஐயனை எனக்குக் காண்பிக்க வேண்டும்." இது நகைகளைத் தருவதற்காகச் சொல்லப்பட்ட பொய் அல்ல, மரணத்திற்கு முன்பாவது தன் ஐயனைக் கண்டுவிட வேண்டும் என்ற அந்தப் பக்தையின் சாதுர்யமான ஏக்கம்.






சுவாமி ஐயப்பனின் கண்ணீர்

தன் பக்தை அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டுத் துடிப்பதைக் கண்டு ஐயப்பன் கல்லாய் அமர்ந்திருக்கவில்லை. அண்ட சராசரங்களையும் ஆளும் அந்த இறைவன், தன் பக்தையின் துயரம் கண்டு உருகினான்.

"ஐயனின், பின், கண்களில், நீர் பெருக்கெடுத்து அறிந்தும், புரிந்தும் கூட."

இறைவன் கல்லல்ல; அவன் தன் அடியார்களின் ஒவ்வொரு துளியையும் உணர்கிறான். "எனக்குச் சாட்சி சொல்ல யாரும் இல்லையே" என்று அந்தப் பெண் துடித்தபோது, அவளுக்காகச் சாட்சி சொல்ல ஐயன் தானே துடித்தான். அந்தப் பெண்மணியின் உறுதிதான் உண்மையான பக்திக்குக் கிடைத்த வெற்றி. இறைவன் சோதிப்பது நம்மை வீழ்த்த அல்ல, நம்மிடமுள்ள பொய் வேஷத்தைக் களைந்து, நம்மைத் தரம் உயர்த்துவதற்கே என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.



மறைக்கப்பட்ட ரகசியம்: மூன்று புனிதப் பெட்டிகள்

பந்தள அரண்மனையிலிருந்து சபரிமலைக்கு மகர விளக்கு காலத்தில் மூன்று விதமான புனிதப் பெட்டிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்தப் பெட்டிகளைச் சுமந்து செல்வதற்கென்றே பாரம்பரியமாகச் சில குடும்பங்கள் இன்றும் பணி செய்கின்றன.

  1. திருவாபரணப் பெட்டி: இது நேரடியாக ஐயப்பன் சந்நிதானத்தை அடைகிறது. இதில் திருமுகம் (சாஸ்தாவின் முகக் கவசம்), ப்ரபா மண்டலம், வலிய சுரிகை (பெரிய கத்தி), செறிய சுரிகை (சிறிய கத்தி), யானை மற்றும் புலி விக்ரகங்கள், வெள்ளி கட்டிய வலம்புரிச் சங்கு, பூர்ணா புஷ்கலா தேவியர் உருவம், பூத்தட்டம் (தங்கத் தட்டு), நவரத்தின மோதிரம், சரப்பொளி மாலை, தங்க இதழ்களால் ஆன வில்வ மாலை, மணி மாலை மற்றும் தங்க எருக்கம் பூ மாலை ஆகியவை உள்ளன.
  2. வெள்ளிப் பெட்டி: இது மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் செல்லும். இதில் தங்கக்குடம் மற்றும் சுவாமிக்கு நெய்யபிஷேகம் செய்யத் தேவையான பூஜை பாத்திரங்கள் இருக்கும்.
  3. கொடிப்பெட்டி: இதுவும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் செல்லும். இதில் யானைக்கான நெற்றிப்பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைகளுக்கான கொடிகள், குடை ஆகியவை இருக்கும். இந்தச் சாமான்களைக் கொண்டு மறுநாள் மணிமண்டபம் முதல் சரம்குத்தி வரை யானை ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெறும்.




வானில் நிகழும் அதிசயம்: கிருஷ்ணப் பருந்து காட்டும் வழி

பந்தள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் கிளம்பும் போது ஒரு அதிசயம் நிகழ்கிறது. வானில் 'கிருஷ்ணப் பருந்து' (கருடன்) வட்டமிட்டு உத்தரவு கொடுத்த பின்னரே யாத்திரை தொடங்குகிறது. இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; பந்தளத்திலிருந்து சந்நிதானம் வரை சுமார் 80 கி.மீ தூரம் அடர்ந்த காட்டுப் பாதையிலும் இந்தக் கருடன் ஆபரணப் பெட்டியைப் பின்தொடர்ந்து பாதுகாப்பாக வருவது பக்தர்களுக்குப் பெரும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. பெட்டி சந்நிதானத்தை அடைந்ததும், கருடன் சந்நிதானத்தை மூன்று முறை வலம் வந்து பின் மறைந்துவிடும். இது இன்றும் நடக்கும் ஒரு பெரும் அதிசயம்.

முடிவுரை: உண்மையை அறிந்து வணங்குதலே பக்குவம்

அகத்தியப் பெருமானின் அறிவுரைப்படி, ஆன்மீகம் என்பது வெறும் சடங்கு அல்ல. அதன் பின்னணியில் உள்ள வரலாறுகளையும், இறைவனின் லீலைகளையும் அறிந்து வணங்குவதே முழுமையான பக்குவமாகும். எதையும் தெரியாமல் வணங்குவதை விட, அதன் உண்மை நிலையை உணர்ந்து வணங்கும்போது, இறைவன் உடனடியாக வரங்களை வாரி வழங்குகிறான்.

சிந்தனைக்கு: "கடவுள் நமக்குத் தரும் சோதனைகள் நம்மை வீழ்த்துவதற்கா அல்லது நம் பக்தியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கா?" நம் வாழ்வில் வரும் தடைகள் அனைத்தும் நம்மைத் தரம் உயர்த்தவே வருகின்றன. அந்தப் பெண்மணியைப் போல எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் "என் ஐயன் வருவான்" என்ற நம்பிக்கையோடு இருப்பதே உண்மையான சரணாகதி.

சுவாமியே சரணம் ஐயப்பா!







அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Saturday, September 12, 2026

சித்தன் அருள் - 2141 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 5

                          இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 2141 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 5


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 5

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

அடியவர் 7  :-

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.

குருநாதர் :-  ( தனி வாக்குகள் ) 

==============================================
# முன்னோர்களும் , தனது சந்ததிகளுக்கு சில உதவிகள் செய்வார்கள் 
============================================

அடியவர் 8  :- (பாடல் பாட ஆரம்பித்தார்கள்)

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே
                ஸ்ரீ வேலும் மயலும் துணை. 

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய, இப்படி  எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கவலை எவை எவை என்று அறிய. எவ்வளவு கவலைகள் வந்தாலும், நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. பின் அதாவது வேலுண்டு என்று நீ பாடிவிட்டாய் அல்லவா? நிச்சயம் வேலே, பின் உன்னை காக்கும். பின் கவலைகள் இல்லை. நிச்சயம் தன்னில் கூட சில சில கர்மாக்கள், நிச்சயம் தன்னில் கூட  ( *** விதி ரகசியங்கள் ***** ) இதனால் நிச்சயம் அனைத்தும் அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பது விதி. நிச்சயம் பின் முக்கால் பங்கு அனுபவித்து விட்டாய். கால் பங்குதான். நிச்சயம் இறைவன் பலங்கள் பின் வழிகள் நடத்தும். கவலைகள் இல்லை. 

குருநாதர் :-  ( ***** முற்றுப்பெற்ற ஆன்மாக்களால் (முன்னோர்களால்) மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று  விரிவான தனி  வாக்குகள்  *****  ) 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 9  :-

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! 

=====================================================
# இறைவனை வாழ்த்தினால் ,  நிச்சயம் உன்னை வாழ வைத்து விடுவான். 
=====================================================

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய? அப்பனே, இவ்வாறாக பாடிக்கொண்டே இரு. அப்பனே, வாழ்த்து இறைவனை. அப்பனே, நிச்சயம் உன்னை வாழ வைத்து விடுவான். 

குருநாதர் :- ( *** தனி வாக்குகள் ***  )

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 10   :-  ( சுவாமி ஐயப்பன் பாடல் )

குருநாதர் :- அப்பனே, ஆசைகள், கவலைகள் வேண்டாம். அனைத்தும் அப்பனே, வழி நடத்துகின்றேன். வழியும் செய்வேன். அப்பனே, எதையும் கேட்டு விடாதே. 

அடியவர்கள் :- (சிரிப்பு)

குருநாதர் :-  ( ****** பிறவி  / விதி ரகசியங்கள், தனி வாக்குகள்  ***** )

குருநாதர் :-  அப்பனே, கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு வேலை. அப்பனே, பின் இருக்கின்றது. அவ்வேலை என்னவென்று எனக்கு இப்பொழுது வயதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒரு வேலைக்காக வந்திருக்கின்றாய். அந்த வேலை நோக்கம் இப்ப நான் சொல்ல மாட்டேன். 

குருநாதர் :-  அப்பனே, இதனால் அனைத்தும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து. 

அடியவர் 10   :-  ( தனி கேள்வி ) 

==========================================
# இறைவனை நோக்கி சென்றால் , இறைவன் அனைத்தும் பார்த்துக் கொள்வார்.
==========================================

குருநாதர் :-  அப்பனே,  நிச்சயம் நீ எவை என்று அறிய  இறைவனை நோக்கி சென்றால், இறைவன் பார்த்துக் கொள்வான் அனைத்தும்.

குருநாதர் :-  ( ****** பிறவி  / விதி ரகசியங்கள், தனி வாக்குகள்  ***** )

====================================
# உங்களை நீங்கள் வெல்லும் உபாயம் 
====================================

குருநாதர் :-  அதனால்தான் அப்பனே, முதலிலே அனைத்தும் உண்மைகளை உங்களுக்கு தெரிந்து, அப்பனே, பின் அதாவது தெளிவுபடுத்தி விட்டால், அப்பனே, சுலபமாக இருக்கும் என்பேன். அப்பனே, நிச்சயம் உங்களை நீங்கள் வெல்ல. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "அகத்தியர் ஏன் எல்லாத்தையும் முன்கூட்டியே சொல்ல மாட்டேங்கிறாருன்னா, ஆரம்பத்துலேயே எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரிஞ்சிருச்சுன்னு வைங்க, 'நமக்குத்தான் எல்லாம் தெரியுமே'ங்கிற மிதப்புல நீங்க நடந்துக்கிற விதமே மாறிடும். அப்படி நீங்க மாறுறதுனால, தானாவே உங்க விதியும் மாறிப்போயிடும். அதனாலதான் ஐயா என்ன பண்றாருன்னா, எடுத்தவுடனே உண்மையை உடைக்காம, வர்ற கஷ்டங்கள் மூலமா உங்களுக்கு ஒரு தெளிவை உண்டாக்குறாரு. அந்தத் தெளிவு கிடைச்சாதான் நீங்க பக்குவப்பட முடியும்ங்கிறதுக்காகவே அவர் சில விஷயங்களை ரகசியமா வச்சிருக்காரு." ) 

====================================
# அகத்திய மாமுனிவர் பெயரை வைத்து விளையாடும் மனிதர்கள் 
====================================

குருநாதர் :-  ஆனால் அதற்குள்ளே அகத்தியன் அதை கொடுப்பான், இதை கொடுப்பான் என்று மனிதன் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய.

குருநாதர் :-  அப்பனே இதில் கூட என்னை வைத்து. 

குருநாதர் :- அப்பனே, ஏதாவது கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே, சித்தர் வாழ்க்கை, அப்பனே, பின் மாறுபட்டது என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே சொல்வேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, ஆசிகள் , ஆசிகள். 

=======================================
# சித்தர்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்?
=======================================

குருநாதர் :-  அப்பனே, எவர் ஒன்றை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் யாங்கள் தேர்ந்தெடுப்போம் என்றால், அப்பனே , நிச்சயம் ராகு கேதுக்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பாம்பின் இடையில் பின் சிக்கிக் கொள்வதில் மட்டுமே தேர்ந்தெடுப்போம். 

அடியவர் :- ( ஏற்கனவே ராகு கேதுக்குள் சிக்கிக்கொண்ட அடியவர்கள் குறித்து வாக்கு உரைத்ததை எடுத்து உரைத்தார் )

குருநாதர் :-  ஏனென்றால் அவர்களுக்குத்தான் அனுபவம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஏன்னா ராகு கேது பிடிச்சிக்கிச்சுன்னா என்ன பண்ணிருங்க, ஐயா, ஒன்னும் பண்ண முடியாது, மீற முடியாது. கஷ்டத்துல இருந்து.  

====================================
# ராகு கேது பிடியில் சிக்கியவர்கள் 
====================================

குருநாதர் :-  யாங்கள் தான் அப் பாம்பை கையால் பின் நிச்சயம் இழுத்து 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "இந்த ராகுவும் கேது பிடிக்குள்  இருக்காங்களே, அவங்கதான் தேர்ந்தெடுத்துப் பிடிப்பாங்களாம். ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாம்பு பிடிச்சிருச்சுன்னா, அவங்க சரியான கஷ்டத்தைச் சந்திப்பாங்க. அந்த நேரத்துல இறைவன் என்ன பண்ணுவாருன்னா, அவர்தான் நேரா வந்து தேர்ந்தெடுத்துக் காப்பாத்துவாரு. அந்தப் பாம்பை அப்படியே இழு, இழுன்னு இழுத்து, அந்தப் பிடியிலிருந்து உங்களை உருவி அப்படியே வெளியே கொண்டு வந்து விட்டுடுவாரு." )

குருநாதர் :- அதற்கும் நேரங்கள் காத்திருக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   அதற்கும் என்ன பண்ணனும்? உடனே இழுத்து தந்துட மாட்டாரு. 

குருநாதர் :-  நிச்சயம் அப்பனே, பின் பாம்பை பின் அப்பனே, நிச்சயம் அப்பனே, கையை வைத்தால் என்ன ஆகும்? உங்களுக்கு தெரியும் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன்  :- பாம்பு மேல உடனே வச்சா என்ன? கையை வச்சா என்ன ஆகும்? 

===========================================
# இறை பக்தி மனிதனுக்கு புரியவில்லையப்பா
===========================================

குருநாதர் :-  அப்பனே, மனிதனுக்கு புரியவில்லையப்பா. இறை பக்தியை அதனால்தான் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. 

குருநாதர் :- அப்பனே, இறைவனை வணங்கினால் அனைத்தும் கொடுத்து விடுவான் என்றுதான் எண்ணம். அனைவருக்குமே 

குருநாதர் :- நிச்சயம் தலைகீழாக பின் நடந்தாலும் இறைவன் கொடுக்கப் போவதில்லை. 

குருநாதர் :-  அப்பனே, அவையெல்லாம் எடுத்துச் சொல்வேன் வருங்காலத்தில். 

========================================
# நிச்சயம் தர்மத்திற்காக உழை போதுமானது. அனைத்தும் நடக்கும்.
========================================

குருநாதர் :-  அப்ப, நிச்சயம் தர்மத்திற்காக உழை போதுமானது. அனைத்தும் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  தர்மத்துக்காக உழை எல்லாம் நடக்கும். 

==================================================
# பணத்தை வங்கியில் சேர்த்துக்கொண்டே போகாதே 
==================================================

குருநாதர் :-  அப்பனே, காசை பதித்துக் கொண்டிருக்காதே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  காசை பதுக்கிட்டு கொண்டிருக்காதே. பேங்க்ல சேவ் பண்ணி வைக்காதப்பான்னு சொல்லறாரு. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

குருநாதர் :- அப்பனே, எதற்காக வந்தாய் என்பதை எல்லாம் அடுத்தடுத்த வாக்கில் குறிப்பிடுகின்றேன் அப்பனே. ஆசிகள்.

======================================================
# அப்பனே அடிக்கடி வருவேன். நீயும் வரவேண்டும் நிச்சயம். ஆசிகள்.
======================================================

அடியவர் 10   :-  (அகத்தியர் ) ஐயா, (இங்க) வந்தது ( அதுக்கு ) ரொம்ப நன்றி. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வந்துவிட்டேன் என்று அப்பனே. பின் அடிக்கடி வருவேன். நீயும் வரவேண்டும் நிச்சயம் தன்னில். எனக்கு அந்த வேலை, இந்த வேலை என்று சொல்லி சொல்லிக்கொண்டு ஏமாற்றக்கூடாது. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஆசிகள். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தர் வழி - ஒரு எச்சரிக்கை வழிகாட்டி - போகர் சித்தர் உரைத்த வாக்கு

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...    

 












அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


Friday, September 11, 2026

ஆன்மீக ஆன்டி வைரஸ் கையேடு - உங்கள் ஆன்மாவை பாதுகாக்க இப்போதே இன்ஸ்டால் செய்யவும்

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...   
















அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் - 2140 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 4

                          இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 2140 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 4


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று  நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 4

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அடியவர் 5:- ( திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 38 பாடல் பாடினார்கள் )

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


குருநாதர் :-   அப்பனே, இதற்கு அர்த்தங்கள். பின் நிச்சயம் செப்புவது யார்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதுக்கு அர்த்தங்கள் ஒருத்தர் சொல்லணும். 

அடியவர்கள் :- ( விளக்கம் அளித்தார்கள். இவ் பாடலின் முழுமையான விளக்கம் … )
 
(நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய யமனால்தான் என்ன செய்ய முடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிரு தோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.)

குருநாதர் :-   தாயே, நிச்சயம் இதுதான் (.......தனி வாக்குகள் ..........)

குருநாதர் :-  தாயே, கேள். 

( பல தனி வாக்குகள் , உரையாடல்கள் )

======================================
# கலியுகத்தின் கட்டாயம்  - நிச்சயம் முதலில் பணத்தை ஏமாற்றுவதே 
# அடியவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் 
======================================

அடியவர் 5:-  ( தனி கேள்வி ) 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் , அதாவது கலியுகத்தின் கட்டாயம் எவை என்று புரிய பின் ஏமாற்றுவதே என்பேன் அப்பனே, அதுவும் தாயே, நிச்சயம் முதலில் பணத்தை ஏமாற்றுவதே என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கலியுகத்தில் என்ன ஃபர்ஸ்ட் ஏமாத்துறது? பணம் தான் ஏமாத்துவாங்க. அதுலதான் உஷாரா இருக்கணும். அடுத்து எல்லாம்.

குருநாதர் :-  தாயே, ஒரு மனிதனுக்கு உண்மை நிலை எப்பொழுது புரிகின்றது? சொல், 
அனைத்தும் இழந்துதான் பின் உண்மை நிலை தெரிகின்றது. அதனால்தான் உண்மை நிலை முதலிலேயே பின் எடுத்து உரைத்துவிட்டால், அது மனிதனுக்கு தெரியாது. தாயே, 

குருநாதர் :-  ஆனால் சொல்வதற்கு ஆள் இல்லை. அதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்திருக்கின்றோம். 

அடியவர் 5:-  ( தனி கேள்வி ) 

குருநாதர் :- தாயே, பின் நிச்சயம் எவை என்று புரிய அனைவருமே இங்கு இருப்பவர்கள், அனைவருமே ஏமாற்றப்பட்டவர்கள் தான். ஒரு வகையில் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இங்கு இருப்பவர்கள் எல்லாமே ஒரு வகையில ஏமாந்து தான் நிக்கிறாங்கமா? 

=====================================================
# சித்தர்களுக்கு  ஏன் பாதிக்கப்பட்டவர்களே தேவை ?
=====================================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் எமக்கு யார் தேவை என்றால், நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களே என்றால், அவருக்குத்தான் அனுபவம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :-  ( அகத்தியர் சொல்வது என்னவென்றால்: “ஏமாந்தவர்கள், துன்பப்பட்டவர்கள், மனத்தில் காயம் பெற்றவர்கள் — இவர்கள் தான் எங்களுக்கு தேவை.” ஏமாந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்; அவர்களுடைய அந்த வேதனையை நீக்கி, அவர்களை நல்வழிப்படுத்தி, பிறருக்கும் உதவக்கூடியவர்களாக மாற்றுவதே நோக்கம். இதைச் செய்தால் மனத்தில் பக்குவமும் தெளிவும் வரும்; அப்போதுதான் இறைவனைப் பற்றிய உணர்வு ஆழமாகும். இப்படியாக நம்முள் மாற்றம் வந்த பிறகு, எங்களுக்கு தேவையான பணிகளைச் செய்ய அவ் அடியவர்களை சித்தர்கள்  தேர்ந்தெடுப்பார்கள். )

====================================
# ஆன்மா - துகள் விருப்பம்  என்ன ?
====================================

குருநாதர் :-  அதன் மூலம் பாவத்தையும் தொலைத்து இறைவனையும் காட்டுவோம். அவ்வளவுதான். ஏனென்றால் பின் நிச்சயம் எவை என்று ஒரு துகள் நிச்சயம் எங்கு சென்றடைய வேண்டுமோ, அங்கு பின் சென்றடையும். ஆனாலும் நிச்சயம் தன்னில் உள்ள துகளுக்கு எவை என்று விருப்பம் இறைவனை காணவே ஆனாலும் காண்பதில்லையே. 

குருநாதர் :-  நிச்சயம் இறைவனை காண்பித்துவிட்டால், அனைத்தும் நீங்களே செய்து கொண்டு விடுவீர்கள். 

குருநாதர் :-  அதற்கு ஏமாந்தவர்கள் தான் யான் தேர்ந்தெடுப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப அகத்தியர் என்ன பண்றாரு? ஏமாந்தவங்க, ஏமாற்றப்பட்டவர்கள், துன்பப்பட்டவர்கள் எல்லாம் வந்து என்ன பண்ணுவாரு? தேர்ந்தெடுப்பாரு. ஜாலியா இருக்கிறவங்களை வந்து தேர்ந்தெடுக்க மாட்டாரு. தேர்ந்தெடுக்க மாட்டாரு. 

========================================
# இறைவனுக்கு சொந்தம் அன்பு மட்டுமே
========================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின். அதனாலதான் இறைவனுக்கு சொந்தம் அன்பு மட்டுமே. நிச்சயம் தன்னில் கூட இவ்வன்பு மற்றவரிடம் செலுத்தினால், இறைவன் நிச்சயம் தன்னில் கூட பின் . அன்புக்குரிய பின் மதிப்பு கொடுத்து விடுவான். 

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய? ஏதாவது அனைவருக்கும் பின் எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் உலகத்தில் பல பல வழிகளில் கூட அனைத்தும், அனைத்தும் கொடுத்துவிட்டால், இறைவனுக்கு எது மதிப்பு?. 

குருநாதர் :-  கலியுகத்தில் நிச்சயம் கட்டாயம் பின் கஷ்டத்தோடு பின்னிப் பிணைந்து வாழ வேண்டும் என்பதுதான் விதி. கவலை வேண்டாம். 

================================
# நாம் வாழும் நிலம் யாருடையது?
================================

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். முதலில் பின் , அதாவது இவ்நிலத்து பின் யாருடையது? சொல்? 

சுவடி ஓதும் மைந்தன்  :- முதல்ல யாருடையது? இந்த நிலம் கடவுளுக்கு உடையதுதான். 

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். அனைத்தும் இவ்வுலகமே இறைவனுக்கு சொந்தம். ஆனாலும் மனிதன் என்னவோ எனக்கு சொந்தம், எனக்கு சொந்தம் என்று பின் போட்டி, பின் பொறாமைகள் நிச்சயம் தன்னில் கூட அழிந்து விடுகின்றான் கடைசியில். ஆனால் நிச்சயம் அந்நிலம் தான் ஜெயிக்கின்றது. 

குருநாதர் :-  தாயே, பின் ஒன்றுமே சொந்தமில்லை. எது உந்தனுக்கு சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒன்றுமே சொந்தமில்லை. 

குருநாதர் :-  இதனால் யாருக்கு யாருக்கு பின் எதை என்று கூட சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :- யாருக்கு யாருக்கு சொந்தம்? அதுவும் யாரும் சொந்தமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :- இங்க வந்து யாருக்கு யாருக்கு சொந்தம்னு கேக்குறாரு. 

குருநாதர் :-  ஆனால் மனிதனோ என் பிள்ளை எவை என்று கூற. அப்படியெல்லாம். ஆனால் இறைவனோ சிரிப்பான். நிச்சயம் பின் அடடா என்று 

குருநாதர் :-  தாயே, இதை உணரத்தான் கஷ்டம். 

சுவடி ஓதும் மைந்தன்  :- புரியுதுங்களா? இதை நீங்க உணர்ந்து கொண்டீங்கன்னா அப்ப சொந்தம் இல்லை. 

================================================
# ஏன்  சில ஆலயங்களுக்கு சென்றால் கஷ்டங்கள் வந்துவிடும் ?
# கர்மா கரையும் ரகசியங்கள் 
===============================================

அடியவர் 5:-  ( திருவண்ணாமலை குறித்த கேள்வி ) 

குருநாதர் :-  தாயே, எதனால் பயம்? இவை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் எவை என்று அறிய. அதாவது உப்பு மூட்டையை பின் சுமந்து கொண்டு சென்றால் இப்படித்தான். 
சுவடி ஓதும் மைந்தன்  :-  ( உப்பு மூட்டை சுமந்து கொண்டு சென்றால் மழை பெய்து உப்பு கரையும் போல, நாமும் வாழ்க்கையில் சுமந்து செல்லும் கர்மா மெதுவாக கரைந்து கொண்டே இருக்கும். மூட்டை முழுவதும் சுமந்துகொண்டே போகிறோம் என்று தோன்றினாலும், ஒவ்வொரு தடவையும் கொஞ்சம் கொஞ்சமாக அது குறைந்து கொண்டே வருகிறது. ஒரு மூட்டை இருந்தது என்றால், மழை பெய்து அரை மூட்டை ஆகிறது; மறுபடியும் போகும்போது அது இன்னும் குறைகிறது. இப்படியாக நம்முடைய கர்மா மெதுவாக கரைந்து, சுமை குறைந்து கொண்டே வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். )
அடியவர் 5:-  ……….

குருநாதர் :-  தாயே, நிச்சயம் அதாவது எவை என்று அறிய. எதை என்று கூட ஈசன் நிச்சயம் அனைவருக்குமே எவை என்று கூட தந்தை. 

குருநாதர் :-  இதனால் கவலைகள் வேண்டாம். நிச்சயம் இவ்வாறு பின் துன்பப்பட்டால் மட்டுமே இறைவனை பின் நிச்சயம் அதாவது இறைவன் அருகில் இருக்க முடியும். இப்பொழுது சொல், மனிதன் அருகில் இருக்க வேண்டுமா? இறைவன் அருகில் இருக்க வேண்டுமா? 

அடியவர் 5:-  கண்டிப்பா கடவுள் அருகில் இருக்க வேண்டும். 

குருநாதர் :-  இதனால் நிச்சயம் அனைத்தையும் சகித்துக் கொள்ளாத சகித்துக் கொண்டாய் அல்லவா? இறைவன் அருகிலே இருக்கின்றான். இறைவனுக்கு சேவை செய். நிச்சயம் தன்னில் கூட பல ஆலயங்களுக்கு செல். நிச்சயம் எவை என்று கூட வழிகாட்டு. நிச்சயம் பின் திருத்தங்களுக்கு சுத்தங்களை செய். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து…. 

அடியவர் 5:-  ( …… ) 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் இன்னும் உருவாக்குகின்றேன். மனிதர்களை அதற்கும் நீங்கள் பின் தயாராக இருங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   நான் இன்னும் நிறைய விஷயம் பண்றதுக்காக இருக்கிறேன். நீங்க தயாராக இருங்கள். 

குருநாதர் :-  இப்பொழுது புரிகின்றதா? இறைவன் ஏன் கஷ்டத்தை வைத்திருக்கின்றான் என்று உனக்கு கஷ்டம் பின் எவை என்று வைத்தால்தான் மற்றவர்கள் பற்றி சிந்திப்பார்கள். மனிதர்கள் 

============================================
# அகத்திய மாமுனிவரிடம் தேர்ச்சி பெற …..
============================================


குருநாதர் :-  நிச்சயம் என்னிடத்தில் நிச்சயம் பின் அதாவது தேர்ச்சி பெற வேண்டுமென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏமாந்து இருக்க வேண்டும். உணவுக்கு கஷ்டப்பட்டு இருக்க வேண்டும். தோல்வி அடைந்திருக்க வேண்டும். நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு தான். ஆனால் மனிதன் என்னவோ பின் அதாவது பின் இவ்வாறு மந்திரத்தை சொன்னால் யாங்கள் கொடுத்து விடுவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றான். மனிதன் முட்டாள் 

குருநாதர் :-  ( ………………..) 

குருநாதர் :-  இதனால் தாயே, புண்ணியங்கள் நிச்சயம் தன்னில் கூட பெற்று தந்து விடுகின்றேன். 

========================================
# மந்திரம் செப்பினால் சித்தர்கள் அனைத்தும் கொடுத்து விடுவார்களா?
========================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அதனால் பின் எதை என்று கூற பின் அதாவது அம்மந்திரம் செப்பினால், இம்மந்திரம் செப்பினால் சித்தர்கள் வந்து விடுவார்கள். நிச்சயம் அனைத்தும் பின் கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் நிச்சயம் இல்லை. 
……….

குருநாதர் :-  அப்பனே, சித்தனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதனால் சொல்வேன், வருங்காலத்தில் 

சுவடி ஓதும் மைந்தன்  :-   சித்தரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்றேன் என்றார். 

குருநாதர் :-  ஆசிகள், தாயே, கேள். இன்னும் 

============================================
# சித்தர்கள் யாரை தேர்ந்து எடுக்க உள்ளார்கள் ?
============================================

அடியவர் 5:-  எப்படி ஒரு நாடி வாசிக்கிறதுக்கு? ஐயா, வந்து தம்பியை வந்து நீங்க செலக்ட் பண்ணீங்களோ, அதே மாதிரி இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் நல்ல தலைவர்களை செலக்ட் பண்ணினா, இவ்வளவு கஷ்டப்பட மாட்டோம் இல்லையா? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் எவை என்று ஒரு நாடு அழிந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான், தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் உங்களைப் போன்று எவை என்று அறிய பின் கஷ்டப்பட்டு இருப்பவர்கள் மட்டும் சேர்த்து, அவர் மூலம் நிச்சயம் ஒருவனை தேர்ந்தெடுத்து நல்லதே செய்வோம். கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து….

=========================
# ஒரு பொது வேண்டுதல் 
=========================

அடியவர் 5:-  அடுத்து அம்மா, எல்லாருக்கும் உங்க ஆசிகள் கிடைச்சா போதும். இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளும்…. 

குருநாதர் :-  தாயே கவலை இல்லை. அதனாலதான் நிச்சயம் தன்னில் கூட எல்லாமே கிடைக்காது. எவை என்று கூட பின் சித்தர்கள் பின் நாங்கள் வந்து நிச்சயம் தன்னில் கூட. அதனால் பல வழியில் கூட நிச்சயம் சித்தன் எங்கு இருக்கின்றான்? இன்னும் சித்தன் பொய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் எப்படியோ பின் உண்மையை நிரூபிக்க பல வழியிலும் கூட பல கோணங்களில் கூட நாங்கள் செய்வோம். பின் கவலைகள் வேண்டாம், தாயே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அம்மா, வேற எதாவது? 

குருநாதர் :-  தாயே, இன்னும் கூட சொல்கின்றேன். இப்பொழுது போதுமா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இன்னொன்னு நான் சொல்லணும். இப்பொழுது போதுமா?  

அடியவர் 5:-  இவ்வளவு பேர் இருக்காங்க. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அடுத்த முறை பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்த முறை நான் சொல்றேன். ஓகே, வாழ்த்துக்கள். அம்மா.

========================
# அடுத்து அடியவர்  ……
=======================

அடியவர் 6:- ( பாடல் பாட ஆரம்பித்தார் ) 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.


குருநாதர் :-  தாயே, ஈசன் தான் நிழல். அவ்வளவுதான். நிச்சயம் உன் வாழ்க்கை சொல்லிவிட்டேன். 

குருநாதர் :-  அதனால்தான் நிச்சயம் தன்னில் ஈசன் இப்பொழுது குடை பிடித்துக்கொண்டு பின் குடை வழி நடத்துகின்றான். நிச்சயம் தன்னில் கூட முடியட்டும். பின் எப்பொழுது அக்குடையை பின் மடக்குகின்றானோ, அப்பொழுது நான் சொல்வேன். 

……

குருநாதர் :-  தாயே, நிச்சயம் சொல்வேன். நிச்சயம் கேட்டுவிட்டாய் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கண்டிப்பா சொல்லுவேன். ஆனா இப்ப ஈசன் வந்து குடையின் பாதுகாப்போட தான் உனக்கு வரணும்ன்றாருமா? அதை கேளுமா? 

அடியவர் 6:- வேற எதுவும் கேட்கல. 

குருநாதர் :-  எவை என்று புரிய? நிச்சயம் தன்னில் கவலைகள் விடு, தாயே. நிச்சயம் உன்னுடைய ஆசிகளும் அருளும் கூட கவலை வேண்டாம். (***** பிறவி ரகசியங்கள் ******  ) அதனால்தான் இறைவன் இப்பிறப்பில் உனக்கு குடை பிடித்துக் கொண்டே இருக்கின்றான். கவலை விடு. 

அடியவர் 6:-  இந்த பிறவியிலே கடைசி பிறவியா - இந்த பிறவி இருக்கா? 

குருநாதர் :-  தாயே, அதாவது குடை பின், அதாவது பின் எவை என்று கூட பின், அதாவது பின் மடிக்கட்டும் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   குடை இப்படி மடிக்கட்டும் . அப்புறம் நான் சொல்றேன். 

அடியவர் 6:- ( அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.