"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 11, 2026

ஆன்மீக ஆன்டி வைரஸ் கையேடு - உங்கள் ஆன்மாவை பாதுகாக்க இப்போதே இன்ஸ்டால் செய்யவும்

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...   
















அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் - 2140 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 4

                          இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 2140 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 4


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று  நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 4

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அடியவர் 5:- ( திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 38 பாடல் பாடினார்கள் )

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


குருநாதர் :-   அப்பனே, இதற்கு அர்த்தங்கள். பின் நிச்சயம் செப்புவது யார்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதுக்கு அர்த்தங்கள் ஒருத்தர் சொல்லணும். 

அடியவர்கள் :- ( விளக்கம் அளித்தார்கள். இவ் பாடலின் முழுமையான விளக்கம் … )
 
(நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய யமனால்தான் என்ன செய்ய முடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிரு தோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.)

குருநாதர் :-   தாயே, நிச்சயம் இதுதான் (.......தனி வாக்குகள் ..........)

குருநாதர் :-  தாயே, கேள். 

( பல தனி வாக்குகள் , உரையாடல்கள் )

======================================
# கலியுகத்தின் கட்டாயம்  - நிச்சயம் முதலில் பணத்தை ஏமாற்றுவதே 
# அடியவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் 
======================================

அடியவர் 5:-  ( தனி கேள்வி ) 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் , அதாவது கலியுகத்தின் கட்டாயம் எவை என்று புரிய பின் ஏமாற்றுவதே என்பேன் அப்பனே, அதுவும் தாயே, நிச்சயம் முதலில் பணத்தை ஏமாற்றுவதே என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கலியுகத்தில் என்ன ஃபர்ஸ்ட் ஏமாத்துறது? பணம் தான் ஏமாத்துவாங்க. அதுலதான் உஷாரா இருக்கணும். அடுத்து எல்லாம்.

குருநாதர் :-  தாயே, ஒரு மனிதனுக்கு உண்மை நிலை எப்பொழுது புரிகின்றது? சொல், 
அனைத்தும் இழந்துதான் பின் உண்மை நிலை தெரிகின்றது. அதனால்தான் உண்மை நிலை முதலிலேயே பின் எடுத்து உரைத்துவிட்டால், அது மனிதனுக்கு தெரியாது. தாயே, 

குருநாதர் :-  ஆனால் சொல்வதற்கு ஆள் இல்லை. அதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்திருக்கின்றோம். 

அடியவர் 5:-  ( தனி கேள்வி ) 

குருநாதர் :- தாயே, பின் நிச்சயம் எவை என்று புரிய அனைவருமே இங்கு இருப்பவர்கள், அனைவருமே ஏமாற்றப்பட்டவர்கள் தான். ஒரு வகையில் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இங்கு இருப்பவர்கள் எல்லாமே ஒரு வகையில ஏமாந்து தான் நிக்கிறாங்கமா? 

=====================================================
# சித்தர்களுக்கு  ஏன் பாதிக்கப்பட்டவர்களே தேவை ?
=====================================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் எமக்கு யார் தேவை என்றால், நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களே என்றால், அவருக்குத்தான் அனுபவம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :-  ( அகத்தியர் சொல்வது என்னவென்றால்: “ஏமாந்தவர்கள், துன்பப்பட்டவர்கள், மனத்தில் காயம் பெற்றவர்கள் — இவர்கள் தான் எங்களுக்கு தேவை.” ஏமாந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்; அவர்களுடைய அந்த வேதனையை நீக்கி, அவர்களை நல்வழிப்படுத்தி, பிறருக்கும் உதவக்கூடியவர்களாக மாற்றுவதே நோக்கம். இதைச் செய்தால் மனத்தில் பக்குவமும் தெளிவும் வரும்; அப்போதுதான் இறைவனைப் பற்றிய உணர்வு ஆழமாகும். இப்படியாக நம்முள் மாற்றம் வந்த பிறகு, எங்களுக்கு தேவையான பணிகளைச் செய்ய அவ் அடியவர்களை சித்தர்கள்  தேர்ந்தெடுப்பார்கள். )

====================================
# ஆன்மா - துகள் விருப்பம்  என்ன ?
====================================

குருநாதர் :-  அதன் மூலம் பாவத்தையும் தொலைத்து இறைவனையும் காட்டுவோம். அவ்வளவுதான். ஏனென்றால் பின் நிச்சயம் எவை என்று ஒரு துகள் நிச்சயம் எங்கு சென்றடைய வேண்டுமோ, அங்கு பின் சென்றடையும். ஆனாலும் நிச்சயம் தன்னில் உள்ள துகளுக்கு எவை என்று விருப்பம் இறைவனை காணவே ஆனாலும் காண்பதில்லையே. 

குருநாதர் :-  நிச்சயம் இறைவனை காண்பித்துவிட்டால், அனைத்தும் நீங்களே செய்து கொண்டு விடுவீர்கள். 

குருநாதர் :-  அதற்கு ஏமாந்தவர்கள் தான் யான் தேர்ந்தெடுப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப அகத்தியர் என்ன பண்றாரு? ஏமாந்தவங்க, ஏமாற்றப்பட்டவர்கள், துன்பப்பட்டவர்கள் எல்லாம் வந்து என்ன பண்ணுவாரு? தேர்ந்தெடுப்பாரு. ஜாலியா இருக்கிறவங்களை வந்து தேர்ந்தெடுக்க மாட்டாரு. தேர்ந்தெடுக்க மாட்டாரு. 

========================================
# இறைவனுக்கு சொந்தம் அன்பு மட்டுமே
========================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின். அதனாலதான் இறைவனுக்கு சொந்தம் அன்பு மட்டுமே. நிச்சயம் தன்னில் கூட இவ்வன்பு மற்றவரிடம் செலுத்தினால், இறைவன் நிச்சயம் தன்னில் கூட பின் . அன்புக்குரிய பின் மதிப்பு கொடுத்து விடுவான். 

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய? ஏதாவது அனைவருக்கும் பின் எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் உலகத்தில் பல பல வழிகளில் கூட அனைத்தும், அனைத்தும் கொடுத்துவிட்டால், இறைவனுக்கு எது மதிப்பு?. 

குருநாதர் :-  கலியுகத்தில் நிச்சயம் கட்டாயம் பின் கஷ்டத்தோடு பின்னிப் பிணைந்து வாழ வேண்டும் என்பதுதான் விதி. கவலை வேண்டாம். 

================================
# நாம் வாழும் நிலம் யாருடையது?
================================

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். முதலில் பின் , அதாவது இவ்நிலத்து பின் யாருடையது? சொல்? 

சுவடி ஓதும் மைந்தன்  :- முதல்ல யாருடையது? இந்த நிலம் கடவுளுக்கு உடையதுதான். 

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். அனைத்தும் இவ்வுலகமே இறைவனுக்கு சொந்தம். ஆனாலும் மனிதன் என்னவோ எனக்கு சொந்தம், எனக்கு சொந்தம் என்று பின் போட்டி, பின் பொறாமைகள் நிச்சயம் தன்னில் கூட அழிந்து விடுகின்றான் கடைசியில். ஆனால் நிச்சயம் அந்நிலம் தான் ஜெயிக்கின்றது. 

குருநாதர் :-  தாயே, பின் ஒன்றுமே சொந்தமில்லை. எது உந்தனுக்கு சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒன்றுமே சொந்தமில்லை. 

குருநாதர் :-  இதனால் யாருக்கு யாருக்கு பின் எதை என்று கூட சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :- யாருக்கு யாருக்கு சொந்தம்? அதுவும் யாரும் சொந்தமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :- இங்க வந்து யாருக்கு யாருக்கு சொந்தம்னு கேக்குறாரு. 

குருநாதர் :-  ஆனால் மனிதனோ என் பிள்ளை எவை என்று கூற. அப்படியெல்லாம். ஆனால் இறைவனோ சிரிப்பான். நிச்சயம் பின் அடடா என்று 

குருநாதர் :-  தாயே, இதை உணரத்தான் கஷ்டம். 

சுவடி ஓதும் மைந்தன்  :- புரியுதுங்களா? இதை நீங்க உணர்ந்து கொண்டீங்கன்னா அப்ப சொந்தம் இல்லை. 

================================================
# ஏன்  சில ஆலயங்களுக்கு சென்றால் கஷ்டங்கள் வந்துவிடும் ?
# கர்மா கரையும் ரகசியங்கள் 
===============================================

அடியவர் 5:-  ( திருவண்ணாமலை குறித்த கேள்வி ) 

குருநாதர் :-  தாயே, எதனால் பயம்? இவை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் எவை என்று அறிய. அதாவது உப்பு மூட்டையை பின் சுமந்து கொண்டு சென்றால் இப்படித்தான். 
சுவடி ஓதும் மைந்தன்  :-  ( உப்பு மூட்டை சுமந்து கொண்டு சென்றால் மழை பெய்து உப்பு கரையும் போல, நாமும் வாழ்க்கையில் சுமந்து செல்லும் கர்மா மெதுவாக கரைந்து கொண்டே இருக்கும். மூட்டை முழுவதும் சுமந்துகொண்டே போகிறோம் என்று தோன்றினாலும், ஒவ்வொரு தடவையும் கொஞ்சம் கொஞ்சமாக அது குறைந்து கொண்டே வருகிறது. ஒரு மூட்டை இருந்தது என்றால், மழை பெய்து அரை மூட்டை ஆகிறது; மறுபடியும் போகும்போது அது இன்னும் குறைகிறது. இப்படியாக நம்முடைய கர்மா மெதுவாக கரைந்து, சுமை குறைந்து கொண்டே வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். )
அடியவர் 5:-  ……….

குருநாதர் :-  தாயே, நிச்சயம் அதாவது எவை என்று அறிய. எதை என்று கூட ஈசன் நிச்சயம் அனைவருக்குமே எவை என்று கூட தந்தை. 

குருநாதர் :-  இதனால் கவலைகள் வேண்டாம். நிச்சயம் இவ்வாறு பின் துன்பப்பட்டால் மட்டுமே இறைவனை பின் நிச்சயம் அதாவது இறைவன் அருகில் இருக்க முடியும். இப்பொழுது சொல், மனிதன் அருகில் இருக்க வேண்டுமா? இறைவன் அருகில் இருக்க வேண்டுமா? 

அடியவர் 5:-  கண்டிப்பா கடவுள் அருகில் இருக்க வேண்டும். 

குருநாதர் :-  இதனால் நிச்சயம் அனைத்தையும் சகித்துக் கொள்ளாத சகித்துக் கொண்டாய் அல்லவா? இறைவன் அருகிலே இருக்கின்றான். இறைவனுக்கு சேவை செய். நிச்சயம் தன்னில் கூட பல ஆலயங்களுக்கு செல். நிச்சயம் எவை என்று கூட வழிகாட்டு. நிச்சயம் பின் திருத்தங்களுக்கு சுத்தங்களை செய். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து…. 

அடியவர் 5:-  ( …… ) 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் இன்னும் உருவாக்குகின்றேன். மனிதர்களை அதற்கும் நீங்கள் பின் தயாராக இருங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   நான் இன்னும் நிறைய விஷயம் பண்றதுக்காக இருக்கிறேன். நீங்க தயாராக இருங்கள். 

குருநாதர் :-  இப்பொழுது புரிகின்றதா? இறைவன் ஏன் கஷ்டத்தை வைத்திருக்கின்றான் என்று உனக்கு கஷ்டம் பின் எவை என்று வைத்தால்தான் மற்றவர்கள் பற்றி சிந்திப்பார்கள். மனிதர்கள் 

============================================
# அகத்திய மாமுனிவரிடம் தேர்ச்சி பெற …..
============================================


குருநாதர் :-  நிச்சயம் என்னிடத்தில் நிச்சயம் பின் அதாவது தேர்ச்சி பெற வேண்டுமென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏமாந்து இருக்க வேண்டும். உணவுக்கு கஷ்டப்பட்டு இருக்க வேண்டும். தோல்வி அடைந்திருக்க வேண்டும். நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு தான். ஆனால் மனிதன் என்னவோ பின் அதாவது பின் இவ்வாறு மந்திரத்தை சொன்னால் யாங்கள் கொடுத்து விடுவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றான். மனிதன் முட்டாள் 

குருநாதர் :-  ( ………………..) 

குருநாதர் :-  இதனால் தாயே, புண்ணியங்கள் நிச்சயம் தன்னில் கூட பெற்று தந்து விடுகின்றேன். 

========================================
# மந்திரம் செப்பினால் சித்தர்கள் அனைத்தும் கொடுத்து விடுவார்களா?
========================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அதனால் பின் எதை என்று கூற பின் அதாவது அம்மந்திரம் செப்பினால், இம்மந்திரம் செப்பினால் சித்தர்கள் வந்து விடுவார்கள். நிச்சயம் அனைத்தும் பின் கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் நிச்சயம் இல்லை. 
……….

குருநாதர் :-  அப்பனே, சித்தனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதனால் சொல்வேன், வருங்காலத்தில் 

சுவடி ஓதும் மைந்தன்  :-   சித்தரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்றேன் என்றார். 

குருநாதர் :-  ஆசிகள், தாயே, கேள். இன்னும் 

============================================
# சித்தர்கள் யாரை தேர்ந்து எடுக்க உள்ளார்கள் ?
============================================

அடியவர் 5:-  எப்படி ஒரு நாடி வாசிக்கிறதுக்கு? ஐயா, வந்து தம்பியை வந்து நீங்க செலக்ட் பண்ணீங்களோ, அதே மாதிரி இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் நல்ல தலைவர்களை செலக்ட் பண்ணினா, இவ்வளவு கஷ்டப்பட மாட்டோம் இல்லையா? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் எவை என்று ஒரு நாடு அழிந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான், தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் உங்களைப் போன்று எவை என்று அறிய பின் கஷ்டப்பட்டு இருப்பவர்கள் மட்டும் சேர்த்து, அவர் மூலம் நிச்சயம் ஒருவனை தேர்ந்தெடுத்து நல்லதே செய்வோம். கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து….

=========================
# ஒரு பொது வேண்டுதல் 
=========================

அடியவர் 5:-  அடுத்து அம்மா, எல்லாருக்கும் உங்க ஆசிகள் கிடைச்சா போதும். இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளும்…. 

குருநாதர் :-  தாயே கவலை இல்லை. அதனாலதான் நிச்சயம் தன்னில் கூட எல்லாமே கிடைக்காது. எவை என்று கூட பின் சித்தர்கள் பின் நாங்கள் வந்து நிச்சயம் தன்னில் கூட. அதனால் பல வழியில் கூட நிச்சயம் சித்தன் எங்கு இருக்கின்றான்? இன்னும் சித்தன் பொய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் எப்படியோ பின் உண்மையை நிரூபிக்க பல வழியிலும் கூட பல கோணங்களில் கூட நாங்கள் செய்வோம். பின் கவலைகள் வேண்டாம், தாயே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அம்மா, வேற எதாவது? 

குருநாதர் :-  தாயே, இன்னும் கூட சொல்கின்றேன். இப்பொழுது போதுமா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இன்னொன்னு நான் சொல்லணும். இப்பொழுது போதுமா?  

அடியவர் 5:-  இவ்வளவு பேர் இருக்காங்க. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அடுத்த முறை பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்த முறை நான் சொல்றேன். ஓகே, வாழ்த்துக்கள். அம்மா.

========================
# அடுத்து அடியவர்  ……
=======================

அடியவர் 6:- ( பாடல் பாட ஆரம்பித்தார் ) 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.


குருநாதர் :-  தாயே, ஈசன் தான் நிழல். அவ்வளவுதான். நிச்சயம் உன் வாழ்க்கை சொல்லிவிட்டேன். 

குருநாதர் :-  அதனால்தான் நிச்சயம் தன்னில் ஈசன் இப்பொழுது குடை பிடித்துக்கொண்டு பின் குடை வழி நடத்துகின்றான். நிச்சயம் தன்னில் கூட முடியட்டும். பின் எப்பொழுது அக்குடையை பின் மடக்குகின்றானோ, அப்பொழுது நான் சொல்வேன். 

……

குருநாதர் :-  தாயே, நிச்சயம் சொல்வேன். நிச்சயம் கேட்டுவிட்டாய் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கண்டிப்பா சொல்லுவேன். ஆனா இப்ப ஈசன் வந்து குடையின் பாதுகாப்போட தான் உனக்கு வரணும்ன்றாருமா? அதை கேளுமா? 

அடியவர் 6:- வேற எதுவும் கேட்கல. 

குருநாதர் :-  எவை என்று புரிய? நிச்சயம் தன்னில் கவலைகள் விடு, தாயே. நிச்சயம் உன்னுடைய ஆசிகளும் அருளும் கூட கவலை வேண்டாம். (***** பிறவி ரகசியங்கள் ******  ) அதனால்தான் இறைவன் இப்பிறப்பில் உனக்கு குடை பிடித்துக் கொண்டே இருக்கின்றான். கவலை விடு. 

அடியவர் 6:-  இந்த பிறவியிலே கடைசி பிறவியா - இந்த பிறவி இருக்கா? 

குருநாதர் :-  தாயே, அதாவது குடை பின், அதாவது பின் எவை என்று கூட பின், அதாவது பின் மடிக்கட்டும் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   குடை இப்படி மடிக்கட்டும் . அப்புறம் நான் சொல்றேன். 

அடியவர் 6:- ( அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

எலுமிச்சைச் சாற்றின் ரகசிய ஆற்றல்: அகத்திய மாமுனிவர் காட்டும் எளிய வாழ்வியல் வழிமுறை

இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்....இறைவா..அனைத்தும் நீயே..

                                     சர்வம் சிவார்ப்பணம்... 

எலுமிச்சைச் சாற்றின் ரகசிய ஆற்றல்: அகத்திய மாமுனிவர் காட்டும் எளிய வாழ்வியல் வழிமுறை

ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தேடி இன்று நாம் பல இடங்களுக்கு அலைகிறோம். நவீன உலகம் தரும் சிக்கல்களுக்குப் தீர்வாக ஏதேனும் கடினமான வழிகள் இருக்குமோ என்று தேடும் நமக்கு, "அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு" ஒரு மிக எளிய ரகசியத்தைத் திறக்கின்றது. மிகச் சிறந்த தீர்வுகள் எப்போதும் எளிமையானவை என்பதற்குச் சித்தர்களின் வழிகாட்டுதலே சாட்சி. நம்மைச் சுற்றியுள்ள இயற்கையிலேயே பிரபஞ்ச சக்தியை அடக்கியுள்ள ரகசியங்களை அகத்தியர் போன்ற மாமுனிகள் நமக்கு அன்புடன் போதிக்கிறார்கள்.



வாரத்திற்கு இருமுறை: ஒரு எளிய பழக்கம்

பெரிய மாற்றங்களுக்குப் பெரிய முயற்சிகள் தேவை என்பதில்லை அப்பனே. ஒரு எளிய பழக்கம் உன் வாழ்வையே மாற்றும் வல்லமை கொண்டது.

வாரத்திற்கு இரண்டு முறை. ஆம், அவ்வளவுதான்.

அகத்திய மாமுனிவர் பரிந்துரைக்கும் இந்த முறை "குறைந்தபட்ச முயற்சி, அதிகபட்ச பலன்" எனும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. இதை ஒரு மருந்தாக எண்ணாமல், ஒரு வாழ்வியல் ஒழுக்கமாக நீ கடைபிடித்தாலே போதும்.

"வாரத்திற்கு இருமுறையாவது அப்பனே எலுமிச்சை சாற்றினை பருகி வந்தாலே போதுமானதப்பா" - அகத்திய மாமுனிவர்.

இதனைத் தினமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இதைச் செய்வது உன் உடலைத் தூய்மைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை ஏற்கத் தயார்படுத்தவும் போதுமானது.



கிரகங்களின் சக்தியும் எலுமிச்சையும்

எலுமிச்சை என்பது வெறும் புளிப்புச் சுவை கொண்ட கனி மட்டுமல்ல அப்பனே. அது ஒரு பிரபஞ்சக் கலன். விண்ணில் சுழலும் கிரகங்களின் நுட்பமான கதிர்வீச்சுகளைத் தன்னுள் ஈர்த்துச் சேமித்து வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தர்களின் பார்வையில், எலுமிச்சையில் கிரகங்களில் இருக்கும் சக்தி அதிகமாக உள்ளது. நாம் எலுமிச்சைச் சாற்றினைப் பருகும்போது, அந்தப் பிரபஞ்ச ஆற்றலை நம் உடல் நேரடியாக உள்வாங்கிக் கொள்கிறது.

ஆனால், இதில் மிக முக்கியமான ஒரு ரகசியம் உள்ளது. இது வெறும் பானம் என்று மட்டும் நினைக்காதே. இதில் கிரகங்களின் ஆற்றல் பொதிந்துள்ளது என்பதை "நிச்சயம் அறிந்து" பருக வேண்டும். அந்த ஆழ்ந்த அறிவும் நம்பிக்கையும் உன்னுள் இருக்கும்போதுதான், அந்தச் சாறு முழுமையான பிரபஞ்ச சக்தியாக உன்னுள் வேலை செய்யும். அந்த உண்மையை நீ உணர்ந்து பருகுவதே முழுமையான பலனைத் தரும்.

நல் யோகங்களை ஈர்க்கும் வழி

உடலில் கிரகங்களின் சக்தி சீராகும்போது என்ன நடக்கும்? அகத்தியர் கூறுகிறார்: "நல் யோகங்கள் அப்பனே பெரும்பப்பா!"

'யோகம்' என்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல; அது காலம், உடல் மற்றும் பிரபஞ்ச ஆற்றல் மூன்றும் சரியான புள்ளியில் இணைவதாகும். எலுமிச்சைச் சாறு உன் உடலைத் தூய்மைப்படுத்தி, கிரக சக்திகளுடன் உன்னை இணக்கமாக்கும்போது, உன் வாழ்வில் தடைபட்டுக் கிடந்த நல்வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

உடல் தூய்மையும், பிரபஞ்ச ஆற்றலின் ஆசீர்வாதமும் இணையும்போது, ஒரு மனிதன் மேன்மையான யோகங்களைப் பெறுவதற்குத் தகுதியானவன் ஆகிறான். இந்த எளிய இயற்கை முறை, உன்னை ஆன்மீக ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் ஒரு திறவுகோல்.






முடிவுரை

"இறைவா நீயே அனைத்தும்" என்ற முழுமையான சரணாகதியுடன், இயற்கையின் இந்தப் பெரும் கொடையைப் பயன்படுத்துங்கள். அகத்திய மாமுனிவர் காட்டிய இந்த வழிமுறை, நம்மைப் படைத்த இறைவனையும் நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தையும் இணைக்கும் ஒரு எளிய பாலம்.

சித்தர்களின் அருள் நிறைந்த இந்த 'வாரத்திற்கு இருமுறை' எனும் எளிய வாழ்வியல் சடங்கைத் தொடங்கி, பிரபஞ்சத்தின் ரகசிய ஆற்றலையும் நல் யோகங்களையும் பெற நீங்கள் தயாரா அப்பனே?


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே...!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அகத்தியப் பெருமான் பகிர்ந்த வாழ்வியல் ரகசியங்கள்: நம்மை வியப்பில் ஆழ்த்தும் 5 முக்கிய உண்மைகள்!

இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்....இறைவா..அனைத்தும் நீயே..

                                     சர்வம் சிவார்ப்பணம்... 

அகத்தியப் பெருமான் பகிர்ந்த வாழ்வியல் ரகசியங்கள்: நம்மை வியப்பில் ஆழ்த்தும் 5 முக்கிய உண்மைகள்!

1. முன்னுரை

பரபரப்பான நவீன உலகின் சுழற்சியில், வசதிகள் பெருகிய அளவிற்கு மனித மனங்களில் அமைதி அருகிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது. மனமெனும் மாயச் சுழலில் சிக்கித் தவிக்கும் மானுடனுக்கு, வாழ்வின் சிக்கல்களை மிக எளிமையாக அவிழ்க்கும் ஞானத்தைத் தருபவர்கள் சித்தர்கள். அத்தகு மகத்தான வழிகாட்டியான அகத்தியப் பெருமான், அண்மையில் நாடி வாசிப்பின் மூலம் நமக்காகச் சில சூட்சுமமான வாழ்வியல் உண்மைகளை அருளியுள்ளார். நம் அகத்தின் தேடலுக்கு விடை தரும் அந்த ரகசியங்களைத் தேடி இப்பயணத்தைத் தொடங்குவோம்.



2. வெற்றிலை: பிணிகளை வெல்லும் ஒரு தெய்வீகக் கவசம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிகச் சாதாரணமான வெற்றிலையில் எத்தகு மாபெரும் ரகசியம் ஒளிந்துள்ளது என்பதை அகத்தியர் சுட்டிக்காட்டுகிறார். சித்தர்கள் ஒரு பொருளுக்குப் பெயரிடும் போதே, அதன் மருத்துவ குணத்தையும் தாத்பரியத்தையும் அந்தப் பெயரிலேயே பொதிந்து வைத்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று.

"எல்லா நோயையும் வெற்றி கொண்டு உடம்பை காப்பதினால்தான் 'வெற்றிலை' என பெயர் வந்தது!"

வெற்றிலை என்பது வெறும் தாம்பூலப் பொருள் அல்ல; அது நோய்களை 'வெற்றி' கண்டு உடலைக் காக்கும் ஒரு கவசம் (வெற்றி + இலை). பழங்காலத்து மருத்துவ உண்மைகளைச் சாமானியர்களும் எளிதாக நினைவில் கொள்ளும் பொருட்டு, ஞானிகள் அதன் பெயரிலேயே மருத்துவச் சாற்றைப் பிழிந்து வைத்துள்ள சூட்சுமம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

3. அரச மரம்: உங்கள் சங்கல்பங்களைப் பிரதிபலிக்கும் ஆடி

இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தனித்துவமான ஆற்றல் உண்டு. அரச மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல, அது நம் எண்ணங்களை உள்வாங்கித் திருப்பித் தரும் ஒரு சக்திவாய்ந்த பிரதிபலிப்பான் (Reflector) என்று அகத்தியர் விளக்குகிறார். ஒரு மனிதனின் ஆழ்மன விருப்பங்களை ஈர்க்கும் காந்தமாக அரச மரம் திகழ்கிறது.

இதனைச் செயல்படுத்தும் முறையாக அவர் கூறுவது: அரச மரத்தைச் சுற்றி வந்து, அதன் இலையைச் சிறிதளவு உட்கொள்ள வேண்டும். நாம் எதை மனதார வேண்டுகிறோமோ, அதை அந்த மரம் அப்படியே பிரபஞ்சத்திடம் பிரதிபலிக்கும். ஒரு தாவரத்திற்கும் மனித எண்ணங்களுக்கும் இடையிலான இந்தத் தொடர்பு, நம் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான ஒரு தெய்வீக வினையூக்கியாக (Catalyst) அமைகிறது.

4. கவலை: மனித இயல்பும் அதற்கான தெய்வீக மருந்தும்

மானுடப் பிறவி எடுத்த எவரும் கவலையிலிருந்து தப்பியதில்லை. அகத்தியப் பெருமான் ஒரு படி மேலே சென்று, 'கவலை' என்பது மனிதனுக்கு இருக்கும் மற்றொரு பெயரே என்கிறார். ஆனால், இந்தக் கவலையை ஒரு சுமையாகப் பார்க்காமல், ஒரு பாடமாக மாற்றும் சூட்சுமத்தை அவர் இங்கே உணர்த்துகிறார்.

"மனிதனுக்கு மற்றொரு பெயர் 'கவலை'. அது விலக, வேண்டுதலுடன் வேல்மாறலை தினமும் கூறி வாருங்கள்!"

கவலைகள் பிறப்பது மனித இயல்பு என்றாலும், 'அனுபவமே பாடம்' என்பதை நாம் உணர வேண்டும். கவலைகள் நம்மை ஆட்கொள்ளும் போது, அதிலிருந்து மீள அகத்தியர் பரிந்துரைக்கும் அருமருந்து 'வேல்மாறல்' பாராயணம். அனுபவங்கள் தரும் பாடங்களைக் கற்றுக்கொண்டு, வேண்டுதலோடு வேல்மாறலைத் துதிக்கும் போது, மனக்கவலைகள் நீங்கித் தெளிவு பிறக்கும்.

5. விதியின் போராட்டமும் அகத்தியனின் தேர்வும்

பொதுவாக மக்கள் கஷ்டங்கள் வரும்போதுதான் இறைவனைத் தேடுவார்கள். ஆனால், அகத்தியர் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது ஒரு சுவாரசியமான உண்மை. விதியுடன் கடுமையாகப் போராடுபவர்களைத்தான் அகத்தியன் தானாக முன்வந்து தேர்ந்தெடுக்கிறார். ஒருவரது வாழ்வில் ஏற்படும் போராட்டங்களே அவர் அகத்தியனின் அருளைப் பெறுவதற்கான தகுதியாக மாறுகிறது.

அகத்தியனிடம் சரணடைந்துவிட்டால், அவர் நமது விதியை ஆராய்ந்து தீர்வு தருவார். ஆனால் அதற்கு 'பொறுமை' மிக அவசியம். பரிகாரங்களைச் செய்து தன் கடமையைச் செய்யும் அடியவனுக்கு, உரிய காலத்தில் பலனை வழங்குவது அகத்தியனின் பொறுப்பு. சித்தர்களின் விளையாட்டுக்கள் (Play) சில நேரங்களில் நமக்குச் சோதனையாகத் தோன்றினாலும், அவை உண்மையில் நம் வினைகளை நீக்கி ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவே செய்யப்படுகின்றன.

6. வாழ்க்கைப் பயணம்: ஒரு மிட்டாய் காட்டும் கருணை வழி

இறைவன் நம்மை வழிநடத்தும் கருணைமிக்க முறையை ஒரு அழகான உவமையின் மூலம் அகத்தியர் விளக்குகிறார். ஒரு தந்தை தன் குழந்தையை 'பவக்கடல்' எனும் வாழ்வெனும் ஆற்றைக் கடக்கச் செய்ய, அதற்குப் பிடித்தமான மிட்டாய்களைக் கொடுத்து ஆசை காட்டி அழைத்துச் செல்வார்.

அதேபோலவே, இறைவன் நமக்குச் சிறு சிறு உலகியல் இன்பங்களை (மிட்டாய்) ஆங்காங்கே வழங்கி, நம்மை அறியாமலேயே ஆன்மீகப் பாதையில் உயர்த்திச் செல்கிறார். இது இறைவனின் அளப்பற்ற கருணையைக் காட்டுகிறது. நம்மை உயர்ந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல, நம்முடைய உலக ஆசைகளையே அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது ஒரு அற்புதமான தெய்வீகத் தந்திரமாகும்.

7. முடிவுரை

வாழ்க்கை என்பது நாம் ஈட்டிய 'புண்ணியங்களின்' அடிப்படையில் இயங்கும் ஒரு சக்கரம். "தானாகத் தட்டில் சோறு வராது" என்ற அகத்தியரின் வாக்கு, முயற்சியும் புண்ணியமும் சேரும்போதுதான் வாழ்வு செம்மையாகும் என்பதை உணர்த்துகிறது. புண்ணியங்கள் அதிகமாக இருக்கும் போதே சித்தர்களின் வாக்குகள் நம் காதுகளில் விழும்.

வாழ்க்கையை அதன் ஆழமான பொருளில் சரியாகப் புரிந்துகொள்வதே 'மோட்சம்' எனும் உயரிய நிலை. நம் சந்ததிகள் வளம் பெறவும், நாம் மேன்மை அடையவும் புண்ணியங்களைச் சேர்ப்பதே தாரக மந்திரம். இந்த ஆன்மீக உண்மைகளை உணர்ந்து, விதியின் போராட்டங்களைக் கடந்து தெளிவடைவோம்.

நம் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ள நாம் இன்று எடுக்கும் முதல் முயற்சி எதுவாக இருக்கும்?



அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Thursday, September 10, 2026

தேடுவதை நிறுத்துங்கள்.! கடவுளைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம்...அகத்தியர் ஜீவநாடியில் முருகப்பெருமான் உரைத்த மாபெரும் ரகசியம்

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...   
















அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

சித்தன் அருள் - 2139 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 3

                           இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 2139 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 3



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 3

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

===============================================
# இவ் சத் சங்கம் குறித்த ஒரு விளக்க பதிவு குறிப்பு.
===============================================

( குறிப்பு :- இந்த சத்சங்கத்தில் பங்கேற்ற அடியவர்கள், கடந்த ஆண்டு பெங்களூர் சத்சங்கத்திலிருந்து தொடங்கி கந்தர் அனுபூதியை படித்தும் பாராயணம் செய்தும், அதை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றும் வந்தவர்கள். 

மேலும், குருநாதர் கூறியபடி நவதானிய தீபங்களை முறையாக ஏற்றி வழிபாடு செய்தும், அறுபடை வீடுகள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களின் யாத்திரையையும் நிறைவேற்றியும் உள்ளனர். அதுமட்டுமல்லாது, குருநாதர் அருளிய நவ கைலாயம், நவ திருப்பதி போன்ற புனித யாத்திரைகளையும் செவ்வன செய்து முடித்துள்ளனர்.

அதன் பின், ராமேஸ்வரத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தல், கடலில் பால், புனித நீர், தீபம் விடுதல், பித்துருக்களுக்கான தர்ப்பணங்கள் போன்ற அனைத்தையும் முறையாக செய்து முடித்தனர். 

கூட்டுப் பிரார்த்தனையில் சித்தர்கள் கூறும் அனைத்து பரிகாரங்களையும் வழிமுறைகளையும் முறையாக செய்து கொண்டே வருகின்றவர்கள்…

இவ்வாறு குருநாதர் கூறிய உத்தரவுகளை முழுமையாக அனுசரித்து வந்த இந்த அடியவர்களை, குருநாதர் தனிப்பட்ட முறையில் அழைத்து, ஒவ்வொருவருக்கும் வாக்குகளையும் நல்லாசிகளையும் வழங்கினார்.

குருநாதர் ஏற்கனவே கூறியிருந்தார்:
“யார் ஒருவர் சித்தர்களைப் பேச்சு நடக்கின்றார்களோ, அப்படியே பின்பற்றி வருகின்றார்களோ, அவர்களுக்கு எங்களுடைய வாக்குகளும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.”

குருநாதருடைய வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, குருநாதருக்கு நல்லோர், தீயோர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் குருநாதருடைய பிள்ளைகளே. ஆனால் குருநாதருடைய வாக்குகளை யார் பின்பற்றி கேட்டு வருகின்றார்களோ, அவர்களுக்கு வாக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். இதை அடியவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். குருநாதருக்குரிய விஷயங்களை அப்படியே செய்து வரவேண்டும். அப்படி செய்து வந்தால்தான் குருநாதருடைய வாக்குகள் கிட்டும்.

அந்த உத்தரவின்படி நடந்த இந்த சத்சங்கத்தில் ,  அடியவர்களுக்கு, குருநாதர் நேற்று வாக்குகளையும் அருளாசிகளையும் வழங்கினார். அந்த வாக்குகளில் உள்ள பொதுவான உபதேசங்களை இப்பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறோம்.) 

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

================================================
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று 
நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 3)
================================================

=================================================
# ஏறத்தாழ 100+ நாட்களுக்கு மேல் நவகிரக தீபம்  ஏற்றியவர் இவ் அடியவர் (#2) - என்ற தகவலை அடியவர்கள் அறிய தருகின்றோம். இவ் சத்சங்கத்தில் வாக்கு வந்த அனைவரும், குருநாதர் சொல்லியவாறு அப்படியே பல வழிபாடுகளை செய்து வந்துள்ளனர். அதனால் இவர்களுக்கு மட்டும் இவ் சத்சங்கம் நடந்தது.
=================================================


குருநாதர் :-  எதை இதனால் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பல ஆலயங்கள் இருக்கின்றது. எவை என்று கூற பின் இன்னும் பின் சிவாலயங்கள். அதற்கெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய வருங்காலத்தில் பின் சென்று நிச்சயம் தரிசித்து வா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் பல ஆலயங்கள், சிவாலயங்கள் எல்லாம் இருக்குது. இது தான் உன்னுடைய வேலை. அப்பதான் உண்மை நிலை தெரியும்.

குருநாதர் :-   தாயே, நிச்சயம் கேள் இன்னும் . 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் கேட்கலாம். கேளுங்க, கேளுங்க. 

அடியவர் 2:-  ( *** சில கேள்விகள் ***  ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( விளக்கம் அளித்தார்கள். இறைவன் எதற்காக இவ் அடியவரை அனுப்பினர்களையோ , அதற்கு தகுந்தாற்போல் ஒரு வேலை அமைந்ததை அப்போதுதான் அங்கு அனைவரும் உணர்ந்தார்கள் )

அடியவர் 2:-  ( ………… )

குருநாதர் :-   தாயே, பின் உன்னை பற்றி, உன்னை பற்றி நீ கவலைப்படு. நிச்சயம் பின் உன் பாதை பின் எவை என்று கூற பின் போய்க்கொண்டே இருக்கும். தானாகவே பின் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால உன்னை பற்றி நீ கவலைப்பட்டுக்கோ. அவங்க பத்தி எல்லாம் விட்டுக்கோ. 

அடியவர் 2:- ( *** சில கேள்விகள் ***  ) 

குருநாதர் :-  (  *** தனி வாக்கு ***  ) 

=========================================
# இப்போது 3ஆம் அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார் 
=========================================

அடியவர் 3:- ( நூலை பார்த்து, பாடல் பாட ஆரம்பித்தார் )

குருநாதர் :-   தாயே, நில். நிச்சயம் பின் எவை என்று கூற பின்  இவ்வாறெல்லாம் பின் நிச்சயம் எவை என்று கூற பின் படிக்கக்கூடாது. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  புக் எல்லாம் பார்த்து எல்லாம் படிக்கக்கூடாது. 

அடியவர் 3:-  ( பின் வரும்  பாடல் பாட ஆரம்பித்தார் )

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

குருநாதர் :-   தாயே, ஏன் இப் பாடலை  பாடினாய்? 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் )

அடியவர் 3:- விநாயகப் பெருமானின்…. முதல் பாடல் …..

==============================================
# அரச மரத்தை சுற்றி வந்தால் பல நன்மைகள் நிச்சயம் நடக்கும். 
# தீபத்தை ஏற்றி சுற்றி வாருங்கள்.உங்கள் எண்ணங்கள்  பலிதமாகும்.
==============================================

குருநாதர் :-   எதை என்று புரிய, புரிகின்றதா? நிச்சயம் தன்னில் கூட. ஒன்றை சொல்கின்றேன். என்ன வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் மனதில் விழுகின்றதோ, அதற்கு தகுந்தார் போல் நிச்சயம் தன்னில் கூட பின் அரசமரம் , பின் பிள்ளையோன் இருப்போன் அல்லவா? அதை சுற்றி வந்து கொண்டே இரு. 

குருநாதர் :-  நீ பாடலை பின் பாடிக் கொண்டே இரு. நிச்சயம் தீபத்தை ஏற்றிக் கொண்டே இரு. உன் எண்ணம் நிச்சயம் தன்னில் கூட பின் பலிதமாகும் . பின் பல நிச்சயம் தன்னில் கூட நன்மைகள் நடக்கும். 

================================================
# அரச மரம் குறித்த பல ரகசியங்கள் அடங்கிய வாக்கு பின்வரும் பதிவுகளில் படிக்கவும்.
================================================
#அன்புடன் அகத்திய மாமுனிவர் - 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1,2,3,4,5,6,7,8,9,10,11
சித்தன் அருள் - 2095, 2096, 2097, 2098, 2099, 2100, 2101, 2102, 2103, 2104, 2105
================================================

குருநாதர் :-  தாயே, நல் விதமாக இன்னும் கேள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் கேட்கலாம். கேளுங்க, கேளுங்க. 

அடியவர் 3:-  போன முறை வந்து பிறவி நோக்கமும் என்னன்னு சொல்றேன்னு ஐயா சொல்லி இருந்தாங்க. 

குருநாதர் :-   தாயே, நிச்சயம் அவ் நேரம் அதாவது எவை என்று புரிய, அதனாலதான் நிச்சயம் இதை யான் சொன்னேன். இதை நீ செய்து கொண்டே வா.  தானாக யானே வந்து செப்புவேன். எதை என்று புரிய பின்  அதாவது நிச்சயம் அகத்தியன் சொல்வானா என்று நீ நினைத்தாயா என்ன? 

அடியவர் 3:-  (.......)

குருநாதர் :-   என்னை அது தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகின்றாய்? சொல்லி கொடு.

குருநாதர் :-   நிச்சயம்  தன்னில் எதை என்று அறிய. நிச்சயம் அதாவது சிவபுராணத்தை பாடிக்கொண்டே இரு இப்பொழுது . 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணத்தை பாடிக்கிட்டே இருக்கணும். 

குருநாதர் :-  தாயே, இன்னும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் சித்திரை, பின் வரட்டும் பின்பு உரைப்பேன் அதைப்பற்றி . 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப உரைக்கிறாரு? 

அடியவர் 3:-  சித்திரை மாசம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  (சித்திர மாசத்து மேல, உங்க பிறவியை பற்றி  சொல்வார்.) 

குருநாதர் :-  தாயே, இவ்வளவுதானா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவுதானா? இது தானே கேட்க வந்தேன்னு கேட்கிறார். 

=======================================
# மரம் நடுவது மிக அவசியம் …புண்ணியம் ….
=======================================

அடியவர் 3:-  இப்ப நிறைய வந்து இப்ப மரங்கள் நம்ம பொதுவா வந்து மரங்கள் எல்லாம் ரொம்ப அழிந்து கிட்டே வருது. அதற்கு அந்த மரம் நடுவதற்கு, தேரைய சித்தர் அய்யா வாக்கு ….. 

குருநாதர் :-   தாயே, நிச்சயம் இதை நீ செய்தே ஆக வேண்டும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட. 

===========================================
# உழவார பணி - நிச்சயம் அனைத்து புண்ணியங்களும் பின் சிவபுண்ணியங்கள் நிச்சயம் தேடி வரும். அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்.
===========================================

குருநாதர் :- பின் எவ்வாறு என்பதெல்லாம் இன்னும் கூட பின் உழவார பணிகெல்லாம்.,நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அப்பனே சிலர் அப்பனே பின் நிச்சயம் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியை செல். நிச்சயம் அனைத்து புண்ணியங்களும், பின் சிவ புண்ணியங்களும் நிச்சயம் தன்னில் கூட தேடி வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப… 

அடியவர் :- உழவார பணி பண்ணனும். மரம் நட வேண்டும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  உழவார பணி போகணும். மரம் நட வேண்டும். அதுக்கு  வந்து சிலர் பேரை நான் தேர்ந்தெடுத்து சொல்றேன். அவங்க கூட போயிட்டு எல்லாத்தையும் நீங்க செய்யுங்க அம்மா என்று சொல்லிவிட்டார். உங்களுக்கு புரியுதுங்களா? அம்மா.

அடியவர் :-  (யாத்திரை குழு அன்பர்கள் எல்லாம் உழவார பணி, மரம் நட வேண்டும்..அதுக்கு… )

===========================================
# எப்பொழுது வாக்குகள் செப்பினால் சக்திகள் ?
===========================================

குருநாதர் :-   தாயே, கவலைகள் வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட எப்பொழுது எவை செப்ப வேண்டும் என்பவை எல்லாம் யான் அறிவேன். 

குருநாதர் :-  ஏனென்றால் எப்பொழுது எதை செப்பினால் பின் நிச்சயம் உங்களுக்கு சக்திகள் என்றெல்லாம் யான் அறிவேன். 

குருநாதர் :-  ஏனென்றால் நிச்சயம் அச் சக்திகளுக்கு அதாவது நிச்சயம் பின் சக்திகள் இல்லை என்றாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுது எதை செப்ப வேண்டுமோ அப்பொழுது பின் செப்பினால் அச் சக்தி தானாக வந்துவிடும். 

குருநாதர் :-  அதனால்தான் அனைவருக்கும் பின் பொறுத்திரு, காத்திரு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

அடியவர் 4:- ( திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 51  உருவாய் அருவாய் பாடலை பாட ஆரம்பித்தார்கள் ) 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

=================================
# அப்பனே, வருவாய் வேண்டுமா? 
=================================

குருநாதர் :-   அப்பனே, வருவாய் வேண்டுமா? 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  வருவாய் வேண்டுமா என்று கேட்கின்றார் ஐயா. 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் இப்பொழுது என்ன கேட்டாய்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இப்ப என்ன கேட்டாய் என்று கேட்கின்றார் அய்யா ?)

அடியவர் :-   குருநாதர் கிட்ட என்ன கேக்குறீங்கன்னு?. 

அடியவர் 4:-  வாழ்க்கையில தான் என்ன நடக்க போகுதுன்னு தெரியல. 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முருகனே வருவாய் என்று கூறிவிட்டாய் அப்பனே. வருவாய். இதனைத்தான் யான் சொன்னேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- வருவாய் யாரு? 

அடியவர் :- துட்டு ( பணம் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் தான்  வருவாய். வருவாய் என்று சொல்றீங்க இல்ல? அது என்ன சொன்னார் அகத்தியர்? 

அடியவர் :-  அந்த வருவாய் தான் முருகன் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் தான்  வருவாய், வருவாய் என்று. 

மற்றொரு அடியவர் :- பணம் வருதுன்னு சொல்லல….. முருகனே வருவாய். 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் அவன் வருவாயும் இவன்தான் கொடுக்க வேண்டும் என்று. அப்பனே, அனைத்தும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  யார் கொடுக்க வேண்டும்? முருகன் தான். முருகன் தான் வருமானத்தை கொடுக்கணும். 

=======================================
# விதி ரகசியங்கள் ……. ( தனி வாக்குகள் )
=======================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் உன் விதியில் வருமானம் ( **** விதி ரகசியங்கள் **** ……………. …………… …………..  ……………  ……………….  ………………….  ………………..  ……………)  அதனால்  அப்பனே பின் கட்டிப்போட்டு எவை என்று இறைவன் உன்னை கட்டிப்போட்டு விட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( **** விதி ரகசிய விளக்கங்கள் **** ……………. …………… …………..  ……………  ……………….  ………………….  ………………..  ……………  )

குருநாதர் :-   அப்பனே, இப்பொழுது என்ன செய்வாய் அப்பனே? அதை அப்பனே எவர் அவிழ்க்க வேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  கட்டி போட்டதை யார் அழிக்கிறது? முருகப்பெருமான் தான்.

குருநாதர் :-   அப்பனே, மீண்டும் பாடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த பாடலை மீண்டும் பாடுங்க. 

அடியவர் 4:- ( மீண்டும் திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  - 51  உருவாய் அருவாய் பாடலை பாட ஆரம்பித்தார்கள் ) 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் அக்கட்டை எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் பின் அழித்திட முருகன் மட்டுமே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த கட்டு இருக்குது பார்த்தீங்களா? உங்களுக்கு போட்டு கட்டு. நீங்க எதுவுமே தாங்க முடியலைங்க ஐயா. புரியுதுங்களா? உங்களோட லைஃப் அப்படியும் போக முடியல. 

அடியவர் :- ரொம்ப கஷ்டப்படுறீங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படியும் போக முடியல , இப்படியும் போக முடியல. உங்களுக்கு ஒரு ஒரு கயிறு போட்டு, ஒரு கம்பி போட்டு, என்னங்க கயிறு போட்டு கட்டா என்ன ஆகும்? 

அடியவர் :-  எங்கிட்டயுமே போக முடியாம அப்படியே இருக்கும். 

========================================
# நம் அனைவருக்கும் கஷ்டங்கள் குறித்த புரிதல் உண்டாக்கும் அருமையான வாக்கு. இவ் வாக்கினை படித்து தெளிவு அடையுங்கள். இறைவனை முழுமையாக சரணடையுங்கள்.
========================================

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவை மட்டுமில்லாமல் கிணற்றில் தண்ணீர் இருக்கின்றது. அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் கிணற்றில். 

குருநாதர் :-   அப்பனே, பின் அதாவது எவை என்று அறிய. அப்பனே, பின் கழுத்தை மட்டும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கயிற்றால் கட்டி, அப்பனே, பின் அதாவது நிச்சயம் பின் எவை என்று புரிய, அப்பனே, பின் எது என்று அறிய பயம் காட்டிக்கொண்டே பின் இருக்கின்றான் இறைவனே என்பேன்  அப்பனே. அதனால்  நீ பொறுத்தே ஆகவேண்டும். 
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள்  :-  ( இது எப்படி தெரியுங்களா அய்யா ? அவர் கூறுவது என்னவென்றால்: வாழ்க்கை சில நேரங்களில், கழுத்தில் கயிறு கட்டி கிணற்றில் இறக்கப்படுவது போல பயமுறுத்தும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. கிணற்றின் தண்ணீரைப் பார்த்து நடுங்கும் அந்த பயம் எல்லோருக்கும் வரும்; அதுவே மனிதனின் கஷ்டம். இறைவன் அந்த கயிறை இறக்கி நம்மை அச்சத்தில் நிறுத்துகிறான் போலத் தோன்றும்; “நான் உள்ளே விழுந்துவிடுவேனோ?” என்ற அச்சத்தில் நாமே தள்ளாடுகிறோம். ஆனால் அந்த பயமூட்டும் சூழ்நிலையையே நம்மை நிறுத்தி வைக்கிறவன் இறைவன் — நம்மை சோதித்து, நம்முடைய நிலையைப் புரிய வைக்கவும், நம்மைத் தாங்கிக் கொள்ள கற்றுக்கொடுக்கவும்.)
குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது கூட, அப்பனே, பயந்தான் உனக்கு. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் இறைவா என்று நிச்சயம். 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள்  :-  (  அவர் கூறுவது: “கிணற்றின் விளிம்பில் நின்று, எப்போது தண்ணீரில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் நடுங்குவது போல வாழ்க்கையின் சில தருணங்கள் இருக்கும். அந்த ‘நின்னு, நின்னு’ என்று தள்ளாடும் பயம் நம்மை உள்ளுக்குள். அந்த நேரத்தில் மனிதன் தன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, ‘இறைவா , நீதான் எல்லாம் செய்றே?’ என்ற எண்ணத்துடன் இறைவனை நோக்கி திரும்ப வேண்டும். பயம் வந்தால் யாராலும் அதை முழுமையாகப் புரிந்து சொல்ல முடியாது; அது உள்ளுக்குள் எழும் அச்சம். அந்த அச்சத்தில் நாமே, ‘இறைவா, உனக்கே ஒப்படைக்கிறேன், நீ என்ன வேண்டுமானாலும் செய்’ என்று மனதை ஒப்படைக்கிறோம். அப்போதுதான் இறைவன் நம்மை தைரியமாக நிற்கச் செய்கிறார். மனிதன் அந்த பயத்தில் மூழ்கி, ‘விட்டுரு, விட்டுரு’ என்று துடிக்கும் நிலையில் இருந்தாலும், இறைவன் நம்மை காப்பாற்றும் வண்ணம் அந்த நிலையை நமக்காகவே உருவாக்கி வைத்திருக்கிறார்.) 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இறைவா, நீ என்ன வேணா பண்ணிக்கோப்பா என்று சொல்லிவிட்டு , உங்களை . தைரியமா, தில்லா , நில்லுன்றாருங்க ஐயா.

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் முருகனே அப்பனே, அதாவது வருமானத்தை கொடுப்பான் என்பேன் அப்பனே. கவலையை  விடு. 

சுவடி ஓதும் மைந்தன்  :- முருகன் ஏதோ ஒரு ரூபத்துல….. 

====================================
# பழமொழி - “எருமை மாடு மேலே, மழை பெஞ்சா மாதிரி”
===================================

குருநாதர் :-   அப்பனே, உண்ணால்  பல வேலைகள். எதை என்று புரிய அப்பனே, ஈசனுக்கு. அப்பனே, அதனால், அப்பனே, நிச்சயம். அப்பனே, பொறுத்திரு என்பேன் அப்பனே. யார் எதை சொன்னாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதாவது பின் எவை என்று ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே. எருமாட்டின்  தன்னில் அப்பனே, பின் மழை இருந்தால் என்ன அப்பனே? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  (யார் என்ன சொன்னாலும், எதை பண்ணனும், என்ன பண்ணனும்? பொறுமை வேண்டும். எருமை மாடு மேலே மழை பெஞ்சா மாதிரி  போயிட்டே இருக்கும். யார்  எது சொன்னாலும் சரி. அப்ப கண்டுக்க கூடாது. கண்டுக்க கூடாதுங்க. ஐயா, போயிட்டே இருக்கணும்.)

குருநாதர் :-   அப்பனே, இன்னும் கேள் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கேட்கலாம். 

=============================================
# எனக்கு யாரும் இல்லை என்று,  யாரும் எண்ணக்கூடாது. 
============================================

அடியவர் 4:- ( ………தனி கேள்விகள் ……………) யாரும் இல்ல. 

குருநாதர் :-   அப்பனே, பின் அது தான் பொய். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அது தான் பொய் என்றார். 

மற்றொரு அடியவர் :- இறைவன் ( உங்களுடன் இருக்கின்றார்) 

குருநாதர் :-   அப்பனே, எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இங்கு வந்து, அப்பனே, உணவை கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனைத்தும் கொடுத்து, அப்பனே, யாரும் இல்லை சொல்லிவிட்டார்களே  அப்பனே, இதற்கு என்ன அர்த்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இங்க வந்து டீ சாப்பிட்டு, நல்லா சாப்பிட்டு, 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

மற்றொரு அடியவர் :-  இத்தனை பேரை பார்த்து, 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இத்தனை பேர் பார்த்து எல்லாம் பண்ணியே, எப்படி நீ யார் இல்லாம சொல்லலாம்னு சொல்றாரு? 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட யார் இல்லை என்றால், அப்பனே, யான் வந்து எப்படி வாக்குகள் செப்புவேன்? அப்பனே, சொல்?  

சுவடி ஓதும் மைந்தன்  :-  யார் இல்லைன்னு சொல்லிட்ட. நான் எதுக்கு உனக்கு வாக்கு சொல்லிக்கிறேன்னு கேக்குறாரு. சொல்லுங்க, ஐயா. 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய? எவை போல்? பின் நிச்சயம், அப்பனே, பின் சொல்லக்கூடாது என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் நிச்சயம் ஒரு தேநீர், தேநீர். அப்பனே, பின் கொடு என்றால் யாரோ ஒருவர், அப்பனே, எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் உனக்கு தரமாட்டேன் என்று யாராவது சொல்லச் சொல். அப்பனே.

குருநாதர் :-   பின் நிச்சயம் நீர் கொடு. எவை என்று புரிய? நிச்சயம், பின் அதாவது அறிந்தும் புரிந்தும் கூட. பின் அதாவது உன்னிடத்தில் இல்லை என்று யாராவது சொல்லட்டும். பார்ப்போம். அப்பொழுது யான் இதற்கு பதில் அளிக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  நீர் கேளுங்க. தண்ணிர்  கொடுப்பான்னு யாராவது வந்து உனக்கெல்லாம் கிடையாதுன்னு யாராவது சொல்லட்டும். 

குருநாதர் :-   ( …………தனி வாக்குகள் …………… )

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( ………தனி விளக்கங்கள் ……………… )

குருநாதர் :-   அப்பனே, கவலை விடு. அப்ப, நிச்சயம் தன்னில் கூட உனக்கும் ஒரு வேலை வைத்திருக்கின்றேன் அப்பனே. பின் போக போக தெரியும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்  :- உனக்கும் ஒரு வேலை வச்சுக்கிறோம்பா. அது போக போக தெரியும்பான்றார். 

குருநாதர் :-   அப்பனே, கவலைகள் வேண்டாம். அப்பனே, எதை என்று புரிய? அப்பனே, இன்னும் கேள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- இன்னும் கேட்கலாம். 

===========================================
# உழவார பணி - ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றேன்
===========================================

அடியவர் 4:- (உழவார பணி )

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அவையும் நீ தொடர்வாய் என்பேன். அப்பனே, கவலை வேண்டாம். அப்பனே, அதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றேன் அப்பனே. 

குருநாதர் :-  ( ******** விதி ரகசியங்கள் *************) 

குருநாதர் :-   அப்பனே, என்ன வேண்டும்? கேள். —------ வேண்டுமா? கேள். 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

அடியவர் :- ( அவ் அடியவரால் கேட்டாக இல்லாத கேள்வியை அவர் சார்பாக கேட்டார்கள் )

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான் , அப்பனே, கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. யான் பார்த்துக் கொள்கின்றேன். சில ரகசியங்களை சொன்னாலும் புரியாதப்பா உனக்கு. 

==================================
# அனைவரின் பிறப்பின் நோக்கம் 
==================================

குருநாதர் :-   அப்பனே, பின் அனைவருக்கும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்ந்து தெரிந்து. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கை பெற்று ஒன்றும் எவை என்று கூட. பின் அதாவது ஒன்றுமில்லை. நிச்சயம் என்று பின் தெரிந்த பொழுதுதான். அப்பனே, பின் அதாவது ஈசனை கண்டடைகின்றான் மனிதன். இதுதான் பிறப்பு. 

=========================================
# தேவைக்காக இறைவனை வணங்க கூடாது.
# அப்படி வணங்கினாலும் இறைவன் கொடுக்கப் போவதில்லை.
=========================================

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தேவைக்காக இறைவனை வணங்கக்கூடாது சொல்லிவிட்டேன். அப்படி வணங்கினாலும் இறைவன் கொடுக்கப் போவதில்லை சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  தேவைக்காக எப்பவுமே இறைவனை வணங்கக்கூடாது. அப்படி வணங்கினாலும் 

அடியவர் :- எதுவும்  நடக்காது. எதுவும்  கொடுக்க மாட்டார் இறைவன். 

குருநாதர் :-   அப்பனே, அப்பொழுது எதை கொடுப்பான்? இறைவன் சொல்லுங்கள். அனைவருமே 

அடியவர் :- கஷ்டத்தை கொடுப்பாருங்க. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப எதை கொடுப்பார்? 

அடியவர் :-  கஷ்டத்தை தான் கொடுப்பாரு. 

குருநாதர் :-   அப்பனே, பின் இதை யாரே சொல்லிவிட்டேன். விடு, 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதை தான் நான் சொன்னேன்ப்பான்றாரு. எதை கொடுப்பார்? கஷ்டம், கஷ்டம். 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் இல்லை. 

மற்றொரு அடியவர் :- பக்குவத்தை கொடுப்பாரு. 

========================================
# பாவ புண்ணியங்கள் - இறைவனிடத்தில்
========================================

குருநாதர் :-   அப்பனே, எதை என்று புரிய அப்பனே, அதாவது அப்பனே சேகரித்து. அப்பனே, காசுகளை. அப்ப, நிச்சயம் தன்னில் கூட. பின், நிச்சயம் தன்னில் கூட. ஒரு பின் உருண்டையை சேகரித்து. நிச்சயம் தன்னில் காசுகளை எப்படி எடுப்பாய் என்பேன் அப்பனே. இதே போலத்தான். அப்பனே, நிச்சயம் பின் எவை என்று ஒரு பாவ புண்ணியங்கள். அப்பனே, இறைவனிடத்தில் என்பேன் அப்பனே. 

========================================
# இறைவன் கொடுக்கும் சந்தர்ப்பத்தை யாரும் சரியாக பயன்படுத்துவதில்லை
========================================

குருநாதர் :-  இதை வைத்துக்கொண்டு, பிழைத்துக்கொள் என்று ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பான். ஆனால் சரியாக யார் பயன்படுத்துவதில்லை. 
சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இறைவன் மனிதனுக்கு நேரடியாகப் பணம் கொடுக்க மாட்டார்; வங்கியில் இருப்பு இருந்தால் மட்டுமே பணம் எடுப்பது போல, மனிதன் செய்த புண்ணியம் தான் அவனுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்களாக திரும்பி வரும். பாவமும் புண்ணியமும் இரண்டும் இறைவனின் கையில்தான் இருக்கின்றன; ஆனால் அவர் மனிதனுக்கு முதலில் சிறிதளவு புண்ணியம் கொடுத்து, “இதைக் கொண்டு நல்லபடியாக வாழ்ந்து கொள்” என்று ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அந்த புண்ணியத்தை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை உயர்வு பெறும்; பயன்படுத்தாமல் விட்டால், “உனக்கு கொடுத்தது போதும்” என்று சொல்லுவது  போல, இறைவன் புண்ணியத்தை நிறுத்தி, மனிதன் செய்த செயல்களின் விளைவாக பாவத்தின் சுமையை அனுபவிக்கச் செய்கிறார் . இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவது மனிதனின் பொறுப்பு; ஆனால் பெரும்பாலோர் அதை உணராமல் விட்டுவிடுகிறார்கள். )
குருநாதர் :-   அப்பனே, அதனாலதான் எண்ணம் போல் வாழ்க்கை என்று. 

குருநாதர் :-   அப்பனே, கவலைப்படாதே. அப்பனே, நிச்சயம் ஏதோ ஒரு  ( ****** தனி வாக்குகள் ***** )  ஏற்படுத்துகின்றேன். 

குருநாதர் :-   ( ****** தனி வாக்குகள் ***** ) 

குருநாதர் :-   அப்பனே , நிச்சயம் அப்படி. நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட. பின் ஈசனுக்கு அப்பனே சேவைகள் அப்பனே, பின் செய்து கொண்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உதவி கிடைக்கும் என்பேன். அப்பனே, ஆசிகள் ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அம்மா, யாருக்கு வாக்கு வேணும்னா, அவங்க பாடல் பாடணும்.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.