"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 12, 2026

சித்தன் அருள் - 2141 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 5

                          இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 2141 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 5


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 5

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

அடியவர் 7  :-

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.

குருநாதர் :-  ( தனி வாக்குகள் ) 

==============================================
# முன்னோர்களும் , தனது சந்ததிகளுக்கு சில உதவிகள் செய்வார்கள் 
============================================

அடியவர் 8  :- (பாடல் பாட ஆரம்பித்தார்கள்)

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே
                ஸ்ரீ வேலும் மயலும் துணை. 

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய, இப்படி  எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கவலை எவை எவை என்று அறிய. எவ்வளவு கவலைகள் வந்தாலும், நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. பின் அதாவது வேலுண்டு என்று நீ பாடிவிட்டாய் அல்லவா? நிச்சயம் வேலே, பின் உன்னை காக்கும். பின் கவலைகள் இல்லை. நிச்சயம் தன்னில் கூட சில சில கர்மாக்கள், நிச்சயம் தன்னில் கூட  ( *** விதி ரகசியங்கள் ***** ) இதனால் நிச்சயம் அனைத்தும் அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பது விதி. நிச்சயம் பின் முக்கால் பங்கு அனுபவித்து விட்டாய். கால் பங்குதான். நிச்சயம் இறைவன் பலங்கள் பின் வழிகள் நடத்தும். கவலைகள் இல்லை. 

குருநாதர் :-  ( ***** முற்றுப்பெற்ற ஆன்மாக்களால் (முன்னோர்களால்) மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று  விரிவான தனி  வாக்குகள்  *****  ) 

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 9  :-

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! 

=====================================================
# இறைவனை வாழ்த்தினால் ,  நிச்சயம் உன்னை வாழ வைத்து விடுவான். 
=====================================================

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய? அப்பனே, இவ்வாறாக பாடிக்கொண்டே இரு. அப்பனே, வாழ்த்து இறைவனை. அப்பனே, நிச்சயம் உன்னை வாழ வைத்து விடுவான். 

குருநாதர் :- ( *** தனி வாக்குகள் ***  )

===============================================
# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்
===============================================

அடியவர் 10   :-  ( சுவாமி ஐயப்பன் பாடல் )

குருநாதர் :- அப்பனே, ஆசைகள், கவலைகள் வேண்டாம். அனைத்தும் அப்பனே, வழி நடத்துகின்றேன். வழியும் செய்வேன். அப்பனே, எதையும் கேட்டு விடாதே. 

அடியவர்கள் :- (சிரிப்பு)

குருநாதர் :-  ( ****** பிறவி  / விதி ரகசியங்கள், தனி வாக்குகள்  ***** )

குருநாதர் :-  அப்பனே, கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு வேலை. அப்பனே, பின் இருக்கின்றது. அவ்வேலை என்னவென்று எனக்கு இப்பொழுது வயதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒரு வேலைக்காக வந்திருக்கின்றாய். அந்த வேலை நோக்கம் இப்ப நான் சொல்ல மாட்டேன். 

குருநாதர் :-  அப்பனே, இதனால் அனைத்தும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து. 

அடியவர் 10   :-  ( தனி கேள்வி ) 

==========================================
# இறைவனை நோக்கி சென்றால் , இறைவன் அனைத்தும் பார்த்துக் கொள்வார்.
==========================================

குருநாதர் :-  அப்பனே,  நிச்சயம் நீ எவை என்று அறிய  இறைவனை நோக்கி சென்றால், இறைவன் பார்த்துக் கொள்வான் அனைத்தும்.

குருநாதர் :-  ( ****** பிறவி  / விதி ரகசியங்கள், தனி வாக்குகள்  ***** )

====================================
# உங்களை நீங்கள் வெல்லும் உபாயம் 
====================================

குருநாதர் :-  அதனால்தான் அப்பனே, முதலிலே அனைத்தும் உண்மைகளை உங்களுக்கு தெரிந்து, அப்பனே, பின் அதாவது தெளிவுபடுத்தி விட்டால், அப்பனே, சுலபமாக இருக்கும் என்பேன். அப்பனே, நிச்சயம் உங்களை நீங்கள் வெல்ல. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "அகத்தியர் ஏன் எல்லாத்தையும் முன்கூட்டியே சொல்ல மாட்டேங்கிறாருன்னா, ஆரம்பத்துலேயே எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரிஞ்சிருச்சுன்னு வைங்க, 'நமக்குத்தான் எல்லாம் தெரியுமே'ங்கிற மிதப்புல நீங்க நடந்துக்கிற விதமே மாறிடும். அப்படி நீங்க மாறுறதுனால, தானாவே உங்க விதியும் மாறிப்போயிடும். அதனாலதான் ஐயா என்ன பண்றாருன்னா, எடுத்தவுடனே உண்மையை உடைக்காம, வர்ற கஷ்டங்கள் மூலமா உங்களுக்கு ஒரு தெளிவை உண்டாக்குறாரு. அந்தத் தெளிவு கிடைச்சாதான் நீங்க பக்குவப்பட முடியும்ங்கிறதுக்காகவே அவர் சில விஷயங்களை ரகசியமா வச்சிருக்காரு." ) 

====================================
# அகத்திய மாமுனிவர் பெயரை வைத்து விளையாடும் மனிதர்கள் 
====================================

குருநாதர் :-  ஆனால் அதற்குள்ளே அகத்தியன் அதை கொடுப்பான், இதை கொடுப்பான் என்று மனிதன் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய.

குருநாதர் :-  அப்பனே இதில் கூட என்னை வைத்து. 

குருநாதர் :- அப்பனே, ஏதாவது கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே, சித்தர் வாழ்க்கை, அப்பனே, பின் மாறுபட்டது என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே சொல்வேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, ஆசிகள் , ஆசிகள். 

=======================================
# சித்தர்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்?
=======================================

குருநாதர் :-  அப்பனே, எவர் ஒன்றை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் யாங்கள் தேர்ந்தெடுப்போம் என்றால், அப்பனே , நிச்சயம் ராகு கேதுக்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பாம்பின் இடையில் பின் சிக்கிக் கொள்வதில் மட்டுமே தேர்ந்தெடுப்போம். 

அடியவர் :- ( ஏற்கனவே ராகு கேதுக்குள் சிக்கிக்கொண்ட அடியவர்கள் குறித்து வாக்கு உரைத்ததை எடுத்து உரைத்தார் )

குருநாதர் :-  ஏனென்றால் அவர்களுக்குத்தான் அனுபவம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஏன்னா ராகு கேது பிடிச்சிக்கிச்சுன்னா என்ன பண்ணிருங்க, ஐயா, ஒன்னும் பண்ண முடியாது, மீற முடியாது. கஷ்டத்துல இருந்து.  

====================================
# ராகு கேது பிடியில் சிக்கியவர்கள் 
====================================

குருநாதர் :-  யாங்கள் தான் அப் பாம்பை கையால் பின் நிச்சயம் இழுத்து 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "இந்த ராகுவும் கேது பிடிக்குள்  இருக்காங்களே, அவங்கதான் தேர்ந்தெடுத்துப் பிடிப்பாங்களாம். ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாம்பு பிடிச்சிருச்சுன்னா, அவங்க சரியான கஷ்டத்தைச் சந்திப்பாங்க. அந்த நேரத்துல இறைவன் என்ன பண்ணுவாருன்னா, அவர்தான் நேரா வந்து தேர்ந்தெடுத்துக் காப்பாத்துவாரு. அந்தப் பாம்பை அப்படியே இழு, இழுன்னு இழுத்து, அந்தப் பிடியிலிருந்து உங்களை உருவி அப்படியே வெளியே கொண்டு வந்து விட்டுடுவாரு." )

குருநாதர் :- அதற்கும் நேரங்கள் காத்திருக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   அதற்கும் என்ன பண்ணனும்? உடனே இழுத்து தந்துட மாட்டாரு. 

குருநாதர் :-  நிச்சயம் அப்பனே, பின் பாம்பை பின் அப்பனே, நிச்சயம் அப்பனே, கையை வைத்தால் என்ன ஆகும்? உங்களுக்கு தெரியும் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன்  :- பாம்பு மேல உடனே வச்சா என்ன? கையை வச்சா என்ன ஆகும்? 

===========================================
# இறை பக்தி மனிதனுக்கு புரியவில்லையப்பா
===========================================

குருநாதர் :-  அப்பனே, மனிதனுக்கு புரியவில்லையப்பா. இறை பக்தியை அதனால்தான் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. 

குருநாதர் :- அப்பனே, இறைவனை வணங்கினால் அனைத்தும் கொடுத்து விடுவான் என்றுதான் எண்ணம். அனைவருக்குமே 

குருநாதர் :- நிச்சயம் தலைகீழாக பின் நடந்தாலும் இறைவன் கொடுக்கப் போவதில்லை. 

குருநாதர் :-  அப்பனே, அவையெல்லாம் எடுத்துச் சொல்வேன் வருங்காலத்தில். 

========================================
# நிச்சயம் தர்மத்திற்காக உழை போதுமானது. அனைத்தும் நடக்கும்.
========================================

குருநாதர் :-  அப்ப, நிச்சயம் தர்மத்திற்காக உழை போதுமானது. அனைத்தும் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  தர்மத்துக்காக உழை எல்லாம் நடக்கும். 

==================================================
# பணத்தை வங்கியில் சேர்த்துக்கொண்டே போகாதே 
==================================================

குருநாதர் :-  அப்பனே, காசை பதித்துக் கொண்டிருக்காதே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  காசை பதுக்கிட்டு கொண்டிருக்காதே. பேங்க்ல சேவ் பண்ணி வைக்காதப்பான்னு சொல்லறாரு. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

குருநாதர் :- அப்பனே, எதற்காக வந்தாய் என்பதை எல்லாம் அடுத்தடுத்த வாக்கில் குறிப்பிடுகின்றேன் அப்பனே. ஆசிகள்.

======================================================
# அப்பனே அடிக்கடி வருவேன். நீயும் வரவேண்டும் நிச்சயம். ஆசிகள்.
======================================================

அடியவர் 10   :-  (அகத்தியர் ) ஐயா, (இங்க) வந்தது ( அதுக்கு ) ரொம்ப நன்றி. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வந்துவிட்டேன் என்று அப்பனே. பின் அடிக்கடி வருவேன். நீயும் வரவேண்டும் நிச்சயம் தன்னில். எனக்கு அந்த வேலை, இந்த வேலை என்று சொல்லி சொல்லிக்கொண்டு ஏமாற்றக்கூடாது. 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஆசிகள். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தர் வழி - ஒரு எச்சரிக்கை வழிகாட்டி - போகர் சித்தர் உரைத்த வாக்கு

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...    

 












அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


Friday, September 11, 2026

ஆன்மீக ஆன்டி வைரஸ் கையேடு - உங்கள் ஆன்மாவை பாதுகாக்க இப்போதே இன்ஸ்டால் செய்யவும்

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...   
















அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் - 2140 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 4

                          இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


 சித்தன் அருள் - 2140 - அன்புடன் அகத்தியர் - சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க வாக்கு - பகுதி 4


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று  நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 4

வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 
வாக்குரைத்த இடம் :-  சென்னை 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அடியவர் 5:- ( திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 38 பாடல் பாடினார்கள் )

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


குருநாதர் :-   அப்பனே, இதற்கு அர்த்தங்கள். பின் நிச்சயம் செப்புவது யார்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இதுக்கு அர்த்தங்கள் ஒருத்தர் சொல்லணும். 

அடியவர்கள் :- ( விளக்கம் அளித்தார்கள். இவ் பாடலின் முழுமையான விளக்கம் … )
 
(நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய யமனால்தான் என்ன செய்ய முடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிரு தோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.)

குருநாதர் :-   தாயே, நிச்சயம் இதுதான் (.......தனி வாக்குகள் ..........)

குருநாதர் :-  தாயே, கேள். 

( பல தனி வாக்குகள் , உரையாடல்கள் )

======================================
# கலியுகத்தின் கட்டாயம்  - நிச்சயம் முதலில் பணத்தை ஏமாற்றுவதே 
# அடியவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் 
======================================

அடியவர் 5:-  ( தனி கேள்வி ) 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் , அதாவது கலியுகத்தின் கட்டாயம் எவை என்று புரிய பின் ஏமாற்றுவதே என்பேன் அப்பனே, அதுவும் தாயே, நிச்சயம் முதலில் பணத்தை ஏமாற்றுவதே என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கலியுகத்தில் என்ன ஃபர்ஸ்ட் ஏமாத்துறது? பணம் தான் ஏமாத்துவாங்க. அதுலதான் உஷாரா இருக்கணும். அடுத்து எல்லாம்.

குருநாதர் :-  தாயே, ஒரு மனிதனுக்கு உண்மை நிலை எப்பொழுது புரிகின்றது? சொல், 
அனைத்தும் இழந்துதான் பின் உண்மை நிலை தெரிகின்றது. அதனால்தான் உண்மை நிலை முதலிலேயே பின் எடுத்து உரைத்துவிட்டால், அது மனிதனுக்கு தெரியாது. தாயே, 

குருநாதர் :-  ஆனால் சொல்வதற்கு ஆள் இல்லை. அதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்திருக்கின்றோம். 

அடியவர் 5:-  ( தனி கேள்வி ) 

குருநாதர் :- தாயே, பின் நிச்சயம் எவை என்று புரிய அனைவருமே இங்கு இருப்பவர்கள், அனைவருமே ஏமாற்றப்பட்டவர்கள் தான். ஒரு வகையில் 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இங்கு இருப்பவர்கள் எல்லாமே ஒரு வகையில ஏமாந்து தான் நிக்கிறாங்கமா? 

=====================================================
# சித்தர்களுக்கு  ஏன் பாதிக்கப்பட்டவர்களே தேவை ?
=====================================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் எமக்கு யார் தேவை என்றால், நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களே என்றால், அவருக்குத்தான் அனுபவம் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :-  ( அகத்தியர் சொல்வது என்னவென்றால்: “ஏமாந்தவர்கள், துன்பப்பட்டவர்கள், மனத்தில் காயம் பெற்றவர்கள் — இவர்கள் தான் எங்களுக்கு தேவை.” ஏமாந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்; அவர்களுடைய அந்த வேதனையை நீக்கி, அவர்களை நல்வழிப்படுத்தி, பிறருக்கும் உதவக்கூடியவர்களாக மாற்றுவதே நோக்கம். இதைச் செய்தால் மனத்தில் பக்குவமும் தெளிவும் வரும்; அப்போதுதான் இறைவனைப் பற்றிய உணர்வு ஆழமாகும். இப்படியாக நம்முள் மாற்றம் வந்த பிறகு, எங்களுக்கு தேவையான பணிகளைச் செய்ய அவ் அடியவர்களை சித்தர்கள்  தேர்ந்தெடுப்பார்கள். )

====================================
# ஆன்மா - துகள் விருப்பம்  என்ன ?
====================================

குருநாதர் :-  அதன் மூலம் பாவத்தையும் தொலைத்து இறைவனையும் காட்டுவோம். அவ்வளவுதான். ஏனென்றால் பின் நிச்சயம் எவை என்று ஒரு துகள் நிச்சயம் எங்கு சென்றடைய வேண்டுமோ, அங்கு பின் சென்றடையும். ஆனாலும் நிச்சயம் தன்னில் உள்ள துகளுக்கு எவை என்று விருப்பம் இறைவனை காணவே ஆனாலும் காண்பதில்லையே. 

குருநாதர் :-  நிச்சயம் இறைவனை காண்பித்துவிட்டால், அனைத்தும் நீங்களே செய்து கொண்டு விடுவீர்கள். 

குருநாதர் :-  அதற்கு ஏமாந்தவர்கள் தான் யான் தேர்ந்தெடுப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப அகத்தியர் என்ன பண்றாரு? ஏமாந்தவங்க, ஏமாற்றப்பட்டவர்கள், துன்பப்பட்டவர்கள் எல்லாம் வந்து என்ன பண்ணுவாரு? தேர்ந்தெடுப்பாரு. ஜாலியா இருக்கிறவங்களை வந்து தேர்ந்தெடுக்க மாட்டாரு. தேர்ந்தெடுக்க மாட்டாரு. 

========================================
# இறைவனுக்கு சொந்தம் அன்பு மட்டுமே
========================================

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட பின். அதனாலதான் இறைவனுக்கு சொந்தம் அன்பு மட்டுமே. நிச்சயம் தன்னில் கூட இவ்வன்பு மற்றவரிடம் செலுத்தினால், இறைவன் நிச்சயம் தன்னில் கூட பின் . அன்புக்குரிய பின் மதிப்பு கொடுத்து விடுவான். 

குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய? ஏதாவது அனைவருக்கும் பின் எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் உலகத்தில் பல பல வழிகளில் கூட அனைத்தும், அனைத்தும் கொடுத்துவிட்டால், இறைவனுக்கு எது மதிப்பு?. 

குருநாதர் :-  கலியுகத்தில் நிச்சயம் கட்டாயம் பின் கஷ்டத்தோடு பின்னிப் பிணைந்து வாழ வேண்டும் என்பதுதான் விதி. கவலை வேண்டாம். 

================================
# நாம் வாழும் நிலம் யாருடையது?
================================

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். முதலில் பின் , அதாவது இவ்நிலத்து பின் யாருடையது? சொல்? 

சுவடி ஓதும் மைந்தன்  :- முதல்ல யாருடையது? இந்த நிலம் கடவுளுக்கு உடையதுதான். 

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். அனைத்தும் இவ்வுலகமே இறைவனுக்கு சொந்தம். ஆனாலும் மனிதன் என்னவோ எனக்கு சொந்தம், எனக்கு சொந்தம் என்று பின் போட்டி, பின் பொறாமைகள் நிச்சயம் தன்னில் கூட அழிந்து விடுகின்றான் கடைசியில். ஆனால் நிச்சயம் அந்நிலம் தான் ஜெயிக்கின்றது. 

குருநாதர் :-  தாயே, பின் ஒன்றுமே சொந்தமில்லை. எது உந்தனுக்கு சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒன்றுமே சொந்தமில்லை. 

குருநாதர் :-  இதனால் யாருக்கு யாருக்கு பின் எதை என்று கூட சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்  :- யாருக்கு யாருக்கு சொந்தம்? அதுவும் யாரும் சொந்தமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  :- இங்க வந்து யாருக்கு யாருக்கு சொந்தம்னு கேக்குறாரு. 

குருநாதர் :-  ஆனால் மனிதனோ என் பிள்ளை எவை என்று கூற. அப்படியெல்லாம். ஆனால் இறைவனோ சிரிப்பான். நிச்சயம் பின் அடடா என்று 

குருநாதர் :-  தாயே, இதை உணரத்தான் கஷ்டம். 

சுவடி ஓதும் மைந்தன்  :- புரியுதுங்களா? இதை நீங்க உணர்ந்து கொண்டீங்கன்னா அப்ப சொந்தம் இல்லை. 

================================================
# ஏன்  சில ஆலயங்களுக்கு சென்றால் கஷ்டங்கள் வந்துவிடும் ?
# கர்மா கரையும் ரகசியங்கள் 
===============================================

அடியவர் 5:-  ( திருவண்ணாமலை குறித்த கேள்வி ) 

குருநாதர் :-  தாயே, எதனால் பயம்? இவை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் எவை என்று அறிய. அதாவது உப்பு மூட்டையை பின் சுமந்து கொண்டு சென்றால் இப்படித்தான். 
சுவடி ஓதும் மைந்தன்  :-  ( உப்பு மூட்டை சுமந்து கொண்டு சென்றால் மழை பெய்து உப்பு கரையும் போல, நாமும் வாழ்க்கையில் சுமந்து செல்லும் கர்மா மெதுவாக கரைந்து கொண்டே இருக்கும். மூட்டை முழுவதும் சுமந்துகொண்டே போகிறோம் என்று தோன்றினாலும், ஒவ்வொரு தடவையும் கொஞ்சம் கொஞ்சமாக அது குறைந்து கொண்டே வருகிறது. ஒரு மூட்டை இருந்தது என்றால், மழை பெய்து அரை மூட்டை ஆகிறது; மறுபடியும் போகும்போது அது இன்னும் குறைகிறது. இப்படியாக நம்முடைய கர்மா மெதுவாக கரைந்து, சுமை குறைந்து கொண்டே வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். )
அடியவர் 5:-  ……….

குருநாதர் :-  தாயே, நிச்சயம் அதாவது எவை என்று அறிய. எதை என்று கூட ஈசன் நிச்சயம் அனைவருக்குமே எவை என்று கூட தந்தை. 

குருநாதர் :-  இதனால் கவலைகள் வேண்டாம். நிச்சயம் இவ்வாறு பின் துன்பப்பட்டால் மட்டுமே இறைவனை பின் நிச்சயம் அதாவது இறைவன் அருகில் இருக்க முடியும். இப்பொழுது சொல், மனிதன் அருகில் இருக்க வேண்டுமா? இறைவன் அருகில் இருக்க வேண்டுமா? 

அடியவர் 5:-  கண்டிப்பா கடவுள் அருகில் இருக்க வேண்டும். 

குருநாதர் :-  இதனால் நிச்சயம் அனைத்தையும் சகித்துக் கொள்ளாத சகித்துக் கொண்டாய் அல்லவா? இறைவன் அருகிலே இருக்கின்றான். இறைவனுக்கு சேவை செய். நிச்சயம் தன்னில் கூட பல ஆலயங்களுக்கு செல். நிச்சயம் எவை என்று கூட வழிகாட்டு. நிச்சயம் பின் திருத்தங்களுக்கு சுத்தங்களை செய். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து…. 

அடியவர் 5:-  ( …… ) 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் இன்னும் உருவாக்குகின்றேன். மனிதர்களை அதற்கும் நீங்கள் பின் தயாராக இருங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   நான் இன்னும் நிறைய விஷயம் பண்றதுக்காக இருக்கிறேன். நீங்க தயாராக இருங்கள். 

குருநாதர் :-  இப்பொழுது புரிகின்றதா? இறைவன் ஏன் கஷ்டத்தை வைத்திருக்கின்றான் என்று உனக்கு கஷ்டம் பின் எவை என்று வைத்தால்தான் மற்றவர்கள் பற்றி சிந்திப்பார்கள். மனிதர்கள் 

============================================
# அகத்திய மாமுனிவரிடம் தேர்ச்சி பெற …..
============================================


குருநாதர் :-  நிச்சயம் என்னிடத்தில் நிச்சயம் பின் அதாவது தேர்ச்சி பெற வேண்டுமென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏமாந்து இருக்க வேண்டும். உணவுக்கு கஷ்டப்பட்டு இருக்க வேண்டும். தோல்வி அடைந்திருக்க வேண்டும். நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு தான். ஆனால் மனிதன் என்னவோ பின் அதாவது பின் இவ்வாறு மந்திரத்தை சொன்னால் யாங்கள் கொடுத்து விடுவோம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றான். மனிதன் முட்டாள் 

குருநாதர் :-  ( ………………..) 

குருநாதர் :-  இதனால் தாயே, புண்ணியங்கள் நிச்சயம் தன்னில் கூட பெற்று தந்து விடுகின்றேன். 

========================================
# மந்திரம் செப்பினால் சித்தர்கள் அனைத்தும் கொடுத்து விடுவார்களா?
========================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அதனால் பின் எதை என்று கூற பின் அதாவது அம்மந்திரம் செப்பினால், இம்மந்திரம் செப்பினால் சித்தர்கள் வந்து விடுவார்கள். நிச்சயம் அனைத்தும் பின் கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் நிச்சயம் இல்லை. 
……….

குருநாதர் :-  அப்பனே, சித்தனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதனால் சொல்வேன், வருங்காலத்தில் 

சுவடி ஓதும் மைந்தன்  :-   சித்தரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்றேன் என்றார். 

குருநாதர் :-  ஆசிகள், தாயே, கேள். இன்னும் 

============================================
# சித்தர்கள் யாரை தேர்ந்து எடுக்க உள்ளார்கள் ?
============================================

அடியவர் 5:-  எப்படி ஒரு நாடி வாசிக்கிறதுக்கு? ஐயா, வந்து தம்பியை வந்து நீங்க செலக்ட் பண்ணீங்களோ, அதே மாதிரி இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் நல்ல தலைவர்களை செலக்ட் பண்ணினா, இவ்வளவு கஷ்டப்பட மாட்டோம் இல்லையா? 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் எவை என்று ஒரு நாடு அழிந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான், தாயே, நிச்சயம் தன்னில் கூட பின் உங்களைப் போன்று எவை என்று அறிய பின் கஷ்டப்பட்டு இருப்பவர்கள் மட்டும் சேர்த்து, அவர் மூலம் நிச்சயம் ஒருவனை தேர்ந்தெடுத்து நல்லதே செய்வோம். கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்து….

=========================
# ஒரு பொது வேண்டுதல் 
=========================

அடியவர் 5:-  அடுத்து அம்மா, எல்லாருக்கும் உங்க ஆசிகள் கிடைச்சா போதும். இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளும்…. 

குருநாதர் :-  தாயே கவலை இல்லை. அதனாலதான் நிச்சயம் தன்னில் கூட எல்லாமே கிடைக்காது. எவை என்று கூட பின் சித்தர்கள் பின் நாங்கள் வந்து நிச்சயம் தன்னில் கூட. அதனால் பல வழியில் கூட நிச்சயம் சித்தன் எங்கு இருக்கின்றான்? இன்னும் சித்தன் பொய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் எப்படியோ பின் உண்மையை நிரூபிக்க பல வழியிலும் கூட பல கோணங்களில் கூட நாங்கள் செய்வோம். பின் கவலைகள் வேண்டாம், தாயே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அம்மா, வேற எதாவது? 

குருநாதர் :-  தாயே, இன்னும் கூட சொல்கின்றேன். இப்பொழுது போதுமா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  இன்னொன்னு நான் சொல்லணும். இப்பொழுது போதுமா?  

அடியவர் 5:-  இவ்வளவு பேர் இருக்காங்க. 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அடுத்த முறை பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அடுத்த முறை நான் சொல்றேன். ஓகே, வாழ்த்துக்கள். அம்மா.

========================
# அடுத்து அடியவர்  ……
=======================

அடியவர் 6:- ( பாடல் பாட ஆரம்பித்தார் ) 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.


குருநாதர் :-  தாயே, ஈசன் தான் நிழல். அவ்வளவுதான். நிச்சயம் உன் வாழ்க்கை சொல்லிவிட்டேன். 

குருநாதர் :-  அதனால்தான் நிச்சயம் தன்னில் ஈசன் இப்பொழுது குடை பிடித்துக்கொண்டு பின் குடை வழி நடத்துகின்றான். நிச்சயம் தன்னில் கூட முடியட்டும். பின் எப்பொழுது அக்குடையை பின் மடக்குகின்றானோ, அப்பொழுது நான் சொல்வேன். 

……

குருநாதர் :-  தாயே, நிச்சயம் சொல்வேன். நிச்சயம் கேட்டுவிட்டாய் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கண்டிப்பா சொல்லுவேன். ஆனா இப்ப ஈசன் வந்து குடையின் பாதுகாப்போட தான் உனக்கு வரணும்ன்றாருமா? அதை கேளுமா? 

அடியவர் 6:- வேற எதுவும் கேட்கல. 

குருநாதர் :-  எவை என்று புரிய? நிச்சயம் தன்னில் கவலைகள் விடு, தாயே. நிச்சயம் உன்னுடைய ஆசிகளும் அருளும் கூட கவலை வேண்டாம். (***** பிறவி ரகசியங்கள் ******  ) அதனால்தான் இறைவன் இப்பிறப்பில் உனக்கு குடை பிடித்துக் கொண்டே இருக்கின்றான். கவலை விடு. 

அடியவர் 6:-  இந்த பிறவியிலே கடைசி பிறவியா - இந்த பிறவி இருக்கா? 

குருநாதர் :-  தாயே, அதாவது குடை பின், அதாவது பின் எவை என்று கூட பின், அதாவது பின் மடிக்கட்டும் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்  :-   குடை இப்படி மடிக்கட்டும் . அப்புறம் நான் சொல்றேன். 

அடியவர் 6:- ( அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

எலுமிச்சைச் சாற்றின் ரகசிய ஆற்றல்: அகத்திய மாமுனிவர் காட்டும் எளிய வாழ்வியல் வழிமுறை

இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்....இறைவா..அனைத்தும் நீயே..

                                     சர்வம் சிவார்ப்பணம்... 

எலுமிச்சைச் சாற்றின் ரகசிய ஆற்றல்: அகத்திய மாமுனிவர் காட்டும் எளிய வாழ்வியல் வழிமுறை

ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தேடி இன்று நாம் பல இடங்களுக்கு அலைகிறோம். நவீன உலகம் தரும் சிக்கல்களுக்குப் தீர்வாக ஏதேனும் கடினமான வழிகள் இருக்குமோ என்று தேடும் நமக்கு, "அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு" ஒரு மிக எளிய ரகசியத்தைத் திறக்கின்றது. மிகச் சிறந்த தீர்வுகள் எப்போதும் எளிமையானவை என்பதற்குச் சித்தர்களின் வழிகாட்டுதலே சாட்சி. நம்மைச் சுற்றியுள்ள இயற்கையிலேயே பிரபஞ்ச சக்தியை அடக்கியுள்ள ரகசியங்களை அகத்தியர் போன்ற மாமுனிகள் நமக்கு அன்புடன் போதிக்கிறார்கள்.



வாரத்திற்கு இருமுறை: ஒரு எளிய பழக்கம்

பெரிய மாற்றங்களுக்குப் பெரிய முயற்சிகள் தேவை என்பதில்லை அப்பனே. ஒரு எளிய பழக்கம் உன் வாழ்வையே மாற்றும் வல்லமை கொண்டது.

வாரத்திற்கு இரண்டு முறை. ஆம், அவ்வளவுதான்.

அகத்திய மாமுனிவர் பரிந்துரைக்கும் இந்த முறை "குறைந்தபட்ச முயற்சி, அதிகபட்ச பலன்" எனும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. இதை ஒரு மருந்தாக எண்ணாமல், ஒரு வாழ்வியல் ஒழுக்கமாக நீ கடைபிடித்தாலே போதும்.

"வாரத்திற்கு இருமுறையாவது அப்பனே எலுமிச்சை சாற்றினை பருகி வந்தாலே போதுமானதப்பா" - அகத்திய மாமுனிவர்.

இதனைத் தினமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இதைச் செய்வது உன் உடலைத் தூய்மைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை ஏற்கத் தயார்படுத்தவும் போதுமானது.



கிரகங்களின் சக்தியும் எலுமிச்சையும்

எலுமிச்சை என்பது வெறும் புளிப்புச் சுவை கொண்ட கனி மட்டுமல்ல அப்பனே. அது ஒரு பிரபஞ்சக் கலன். விண்ணில் சுழலும் கிரகங்களின் நுட்பமான கதிர்வீச்சுகளைத் தன்னுள் ஈர்த்துச் சேமித்து வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தர்களின் பார்வையில், எலுமிச்சையில் கிரகங்களில் இருக்கும் சக்தி அதிகமாக உள்ளது. நாம் எலுமிச்சைச் சாற்றினைப் பருகும்போது, அந்தப் பிரபஞ்ச ஆற்றலை நம் உடல் நேரடியாக உள்வாங்கிக் கொள்கிறது.

ஆனால், இதில் மிக முக்கியமான ஒரு ரகசியம் உள்ளது. இது வெறும் பானம் என்று மட்டும் நினைக்காதே. இதில் கிரகங்களின் ஆற்றல் பொதிந்துள்ளது என்பதை "நிச்சயம் அறிந்து" பருக வேண்டும். அந்த ஆழ்ந்த அறிவும் நம்பிக்கையும் உன்னுள் இருக்கும்போதுதான், அந்தச் சாறு முழுமையான பிரபஞ்ச சக்தியாக உன்னுள் வேலை செய்யும். அந்த உண்மையை நீ உணர்ந்து பருகுவதே முழுமையான பலனைத் தரும்.

நல் யோகங்களை ஈர்க்கும் வழி

உடலில் கிரகங்களின் சக்தி சீராகும்போது என்ன நடக்கும்? அகத்தியர் கூறுகிறார்: "நல் யோகங்கள் அப்பனே பெரும்பப்பா!"

'யோகம்' என்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல; அது காலம், உடல் மற்றும் பிரபஞ்ச ஆற்றல் மூன்றும் சரியான புள்ளியில் இணைவதாகும். எலுமிச்சைச் சாறு உன் உடலைத் தூய்மைப்படுத்தி, கிரக சக்திகளுடன் உன்னை இணக்கமாக்கும்போது, உன் வாழ்வில் தடைபட்டுக் கிடந்த நல்வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

உடல் தூய்மையும், பிரபஞ்ச ஆற்றலின் ஆசீர்வாதமும் இணையும்போது, ஒரு மனிதன் மேன்மையான யோகங்களைப் பெறுவதற்குத் தகுதியானவன் ஆகிறான். இந்த எளிய இயற்கை முறை, உன்னை ஆன்மீக ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் ஒரு திறவுகோல்.






முடிவுரை

"இறைவா நீயே அனைத்தும்" என்ற முழுமையான சரணாகதியுடன், இயற்கையின் இந்தப் பெரும் கொடையைப் பயன்படுத்துங்கள். அகத்திய மாமுனிவர் காட்டிய இந்த வழிமுறை, நம்மைப் படைத்த இறைவனையும் நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தையும் இணைக்கும் ஒரு எளிய பாலம்.

சித்தர்களின் அருள் நிறைந்த இந்த 'வாரத்திற்கு இருமுறை' எனும் எளிய வாழ்வியல் சடங்கைத் தொடங்கி, பிரபஞ்சத்தின் ரகசிய ஆற்றலையும் நல் யோகங்களையும் பெற நீங்கள் தயாரா அப்பனே?


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே...!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அகத்தியப் பெருமான் பகிர்ந்த வாழ்வியல் ரகசியங்கள்: நம்மை வியப்பில் ஆழ்த்தும் 5 முக்கிய உண்மைகள்!

இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்....இறைவா..அனைத்தும் நீயே..

                                     சர்வம் சிவார்ப்பணம்... 

அகத்தியப் பெருமான் பகிர்ந்த வாழ்வியல் ரகசியங்கள்: நம்மை வியப்பில் ஆழ்த்தும் 5 முக்கிய உண்மைகள்!

1. முன்னுரை

பரபரப்பான நவீன உலகின் சுழற்சியில், வசதிகள் பெருகிய அளவிற்கு மனித மனங்களில் அமைதி அருகிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது. மனமெனும் மாயச் சுழலில் சிக்கித் தவிக்கும் மானுடனுக்கு, வாழ்வின் சிக்கல்களை மிக எளிமையாக அவிழ்க்கும் ஞானத்தைத் தருபவர்கள் சித்தர்கள். அத்தகு மகத்தான வழிகாட்டியான அகத்தியப் பெருமான், அண்மையில் நாடி வாசிப்பின் மூலம் நமக்காகச் சில சூட்சுமமான வாழ்வியல் உண்மைகளை அருளியுள்ளார். நம் அகத்தின் தேடலுக்கு விடை தரும் அந்த ரகசியங்களைத் தேடி இப்பயணத்தைத் தொடங்குவோம்.



2. வெற்றிலை: பிணிகளை வெல்லும் ஒரு தெய்வீகக் கவசம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிகச் சாதாரணமான வெற்றிலையில் எத்தகு மாபெரும் ரகசியம் ஒளிந்துள்ளது என்பதை அகத்தியர் சுட்டிக்காட்டுகிறார். சித்தர்கள் ஒரு பொருளுக்குப் பெயரிடும் போதே, அதன் மருத்துவ குணத்தையும் தாத்பரியத்தையும் அந்தப் பெயரிலேயே பொதிந்து வைத்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று.

"எல்லா நோயையும் வெற்றி கொண்டு உடம்பை காப்பதினால்தான் 'வெற்றிலை' என பெயர் வந்தது!"

வெற்றிலை என்பது வெறும் தாம்பூலப் பொருள் அல்ல; அது நோய்களை 'வெற்றி' கண்டு உடலைக் காக்கும் ஒரு கவசம் (வெற்றி + இலை). பழங்காலத்து மருத்துவ உண்மைகளைச் சாமானியர்களும் எளிதாக நினைவில் கொள்ளும் பொருட்டு, ஞானிகள் அதன் பெயரிலேயே மருத்துவச் சாற்றைப் பிழிந்து வைத்துள்ள சூட்சுமம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

3. அரச மரம்: உங்கள் சங்கல்பங்களைப் பிரதிபலிக்கும் ஆடி

இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தனித்துவமான ஆற்றல் உண்டு. அரச மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல, அது நம் எண்ணங்களை உள்வாங்கித் திருப்பித் தரும் ஒரு சக்திவாய்ந்த பிரதிபலிப்பான் (Reflector) என்று அகத்தியர் விளக்குகிறார். ஒரு மனிதனின் ஆழ்மன விருப்பங்களை ஈர்க்கும் காந்தமாக அரச மரம் திகழ்கிறது.

இதனைச் செயல்படுத்தும் முறையாக அவர் கூறுவது: அரச மரத்தைச் சுற்றி வந்து, அதன் இலையைச் சிறிதளவு உட்கொள்ள வேண்டும். நாம் எதை மனதார வேண்டுகிறோமோ, அதை அந்த மரம் அப்படியே பிரபஞ்சத்திடம் பிரதிபலிக்கும். ஒரு தாவரத்திற்கும் மனித எண்ணங்களுக்கும் இடையிலான இந்தத் தொடர்பு, நம் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான ஒரு தெய்வீக வினையூக்கியாக (Catalyst) அமைகிறது.

4. கவலை: மனித இயல்பும் அதற்கான தெய்வீக மருந்தும்

மானுடப் பிறவி எடுத்த எவரும் கவலையிலிருந்து தப்பியதில்லை. அகத்தியப் பெருமான் ஒரு படி மேலே சென்று, 'கவலை' என்பது மனிதனுக்கு இருக்கும் மற்றொரு பெயரே என்கிறார். ஆனால், இந்தக் கவலையை ஒரு சுமையாகப் பார்க்காமல், ஒரு பாடமாக மாற்றும் சூட்சுமத்தை அவர் இங்கே உணர்த்துகிறார்.

"மனிதனுக்கு மற்றொரு பெயர் 'கவலை'. அது விலக, வேண்டுதலுடன் வேல்மாறலை தினமும் கூறி வாருங்கள்!"

கவலைகள் பிறப்பது மனித இயல்பு என்றாலும், 'அனுபவமே பாடம்' என்பதை நாம் உணர வேண்டும். கவலைகள் நம்மை ஆட்கொள்ளும் போது, அதிலிருந்து மீள அகத்தியர் பரிந்துரைக்கும் அருமருந்து 'வேல்மாறல்' பாராயணம். அனுபவங்கள் தரும் பாடங்களைக் கற்றுக்கொண்டு, வேண்டுதலோடு வேல்மாறலைத் துதிக்கும் போது, மனக்கவலைகள் நீங்கித் தெளிவு பிறக்கும்.

5. விதியின் போராட்டமும் அகத்தியனின் தேர்வும்

பொதுவாக மக்கள் கஷ்டங்கள் வரும்போதுதான் இறைவனைத் தேடுவார்கள். ஆனால், அகத்தியர் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது ஒரு சுவாரசியமான உண்மை. விதியுடன் கடுமையாகப் போராடுபவர்களைத்தான் அகத்தியன் தானாக முன்வந்து தேர்ந்தெடுக்கிறார். ஒருவரது வாழ்வில் ஏற்படும் போராட்டங்களே அவர் அகத்தியனின் அருளைப் பெறுவதற்கான தகுதியாக மாறுகிறது.

அகத்தியனிடம் சரணடைந்துவிட்டால், அவர் நமது விதியை ஆராய்ந்து தீர்வு தருவார். ஆனால் அதற்கு 'பொறுமை' மிக அவசியம். பரிகாரங்களைச் செய்து தன் கடமையைச் செய்யும் அடியவனுக்கு, உரிய காலத்தில் பலனை வழங்குவது அகத்தியனின் பொறுப்பு. சித்தர்களின் விளையாட்டுக்கள் (Play) சில நேரங்களில் நமக்குச் சோதனையாகத் தோன்றினாலும், அவை உண்மையில் நம் வினைகளை நீக்கி ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவே செய்யப்படுகின்றன.

6. வாழ்க்கைப் பயணம்: ஒரு மிட்டாய் காட்டும் கருணை வழி

இறைவன் நம்மை வழிநடத்தும் கருணைமிக்க முறையை ஒரு அழகான உவமையின் மூலம் அகத்தியர் விளக்குகிறார். ஒரு தந்தை தன் குழந்தையை 'பவக்கடல்' எனும் வாழ்வெனும் ஆற்றைக் கடக்கச் செய்ய, அதற்குப் பிடித்தமான மிட்டாய்களைக் கொடுத்து ஆசை காட்டி அழைத்துச் செல்வார்.

அதேபோலவே, இறைவன் நமக்குச் சிறு சிறு உலகியல் இன்பங்களை (மிட்டாய்) ஆங்காங்கே வழங்கி, நம்மை அறியாமலேயே ஆன்மீகப் பாதையில் உயர்த்திச் செல்கிறார். இது இறைவனின் அளப்பற்ற கருணையைக் காட்டுகிறது. நம்மை உயர்ந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல, நம்முடைய உலக ஆசைகளையே அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது ஒரு அற்புதமான தெய்வீகத் தந்திரமாகும்.

7. முடிவுரை

வாழ்க்கை என்பது நாம் ஈட்டிய 'புண்ணியங்களின்' அடிப்படையில் இயங்கும் ஒரு சக்கரம். "தானாகத் தட்டில் சோறு வராது" என்ற அகத்தியரின் வாக்கு, முயற்சியும் புண்ணியமும் சேரும்போதுதான் வாழ்வு செம்மையாகும் என்பதை உணர்த்துகிறது. புண்ணியங்கள் அதிகமாக இருக்கும் போதே சித்தர்களின் வாக்குகள் நம் காதுகளில் விழும்.

வாழ்க்கையை அதன் ஆழமான பொருளில் சரியாகப் புரிந்துகொள்வதே 'மோட்சம்' எனும் உயரிய நிலை. நம் சந்ததிகள் வளம் பெறவும், நாம் மேன்மை அடையவும் புண்ணியங்களைச் சேர்ப்பதே தாரக மந்திரம். இந்த ஆன்மீக உண்மைகளை உணர்ந்து, விதியின் போராட்டங்களைக் கடந்து தெளிவடைவோம்.

நம் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ள நாம் இன்று எடுக்கும் முதல் முயற்சி எதுவாக இருக்கும்?



அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Thursday, September 10, 2026

தேடுவதை நிறுத்துங்கள்.! கடவுளைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம்...அகத்தியர் ஜீவநாடியில் முருகப்பெருமான் உரைத்த மாபெரும் ரகசியம்

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...   
















அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!