"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, February 29, 2020

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சில பதிவுகளுக்கு முன்னர் குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை என்ற பதிவில் குருமார்களின் தரிசனம் கண்டோம். இன்றைய பதிவிலும் மகான்களின் மகத்துவம் அறிய இருக்கின்றோம். பதிவின் தலைப்பை பார்க்கும் போது புதிதாக இருக்கின்றது அல்லவா? சித்தர்கள், மகான்கள் தேடலில் உள்ளவர்கள் சட்டென்று பிடிப்பார்கள். நமக்கும் புதிது தான். இதில் நாம் பெரிய ஐயாவின் தரிசனத்தை வட பழனியில் பெற்றோம். வட பழனி என்றதும் யார் என்று தெரிந்து இருக்கும் என்று நினைக்கின்றோம். ஆம். பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் ஸ்ரீலஸ்ரீ சத்குரு பரஞ்சோதி பாபா தான் பெரிய ஐயா ஆவார். அப்படி என்றால் சின்னையா என்ற கேள்விக்கு ஸ்ரீலஸ்ரீ சத்குரு பகவான் வெங்கட்ராம சுவாமிகள் ஆவார். இருவரையும் இங்கே தொட்டுக்காட்டி சின்னையா அவர்களின் 13 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் பகிர உள்ளோம்.

கடவுள் தரிசனம் செய்ய லட்சக்கணக்கானோர் கூடும் இடத்தில் வெகு சிலர் மட்டும் அந்த மகானைக் காண்பதற்காக வரிசையில் நின்று தரிசனம் செய்து இருக்கின்றார்கள்.தற்போது அவர் சித்தியாகி விட்டார். நாமும் அவரது பெயரை பலமுறை கேட்டிருக்கின்றோம். ஆனால் நேரில் சென்று தரிசிக்கும் நாள் எந்நாளோ? என்று காத்திருந்தோம். அவர் தான் பரஞ்சோதி பாபா. ஆம்.!‘பரஞ்சோதி பாபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் இவரை, ‘அய்யா, அப்பா, தாத்தா’ என்றும் அழைக்கிறார்கள். பதிவின் இறுதியில் முக்கிய அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. நாம் இன்றைய பதிவில் பரஞ்சோதி பாபா  பற்றி உணர்த்த வேண்டும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் இன்று  நம்மை உணர்த்த வைத்தது பரஞ்சோதி பாபா  தான் என்பதில் துளி கூட ஐயமில்லை.







கலைத்துறையினர் அதிகம் பேர் இவருடைய பக்தர்கள்..இசையமைப்பாளர் சிற்பி, ஸ்ரீகாந்த் தேவா, டிரம்மர் சிவமணி, நடிகர்கள் விவேக், மோகன், நடிகை நீலிமா ராணி, இயக்குநர் வின்சென்ட் செல்வா ஆகியோர் இம்மகானின் தீவிர பக்தர்கள் என பட்டியல் நீளுகின்றது. இவர்களின் அனுபவத்தை தான் இனி நாம் காண இருக்கின்றோம்.

பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் சீடர்கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.



பாபா வாழ்ந்த காலத்தில்யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்...

பல பேர் பல வித பிரச்சனைகளுடன் பாபாவை தரிசித்திருக்கிறார்கள் அவர்கள் பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் தீர்த்திருக்கிறார் பாபா என பல திரைப்பிரபலங்கள் கூறுகிறார்கள்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் பால்நல்லூர் கிராமத்தில்தான் ஐயாவின் சமாதி இருக்கிறது.

இசைப் பயணத்துக்கு இடையே பக்திப் பயணத்தையும் தவம் போலவே செய்துவருகிறார் டிரம்ஸ் சிவமணி. பரஞ்சோதி பாபாவின் தீவிர பக்தர். வார்த்தைக்கு வார்த்தை அவரை ஐயா என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். பரஞ்சோதி பாபாவுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் சிவமணி.

நதி மூலம், ரிஷி மூலம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். நானும் ஐயாவை அப்படியே ஏற்றுக் கொண்டேன். சென்னை வடபழனி வீதிகளில் வாழ்ந்த மகான் அவர். யாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவர். நான் ஐயாவைத் தரிசித்த அந்த நாள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இது நடந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் இருக்கும். பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுடன் பாடல் பதிவில் இருக்கிறேன். அப்போது சவுண்ட் இன்ஜினியர் முரளி என்பவர்தான் ஐயாவைப் பற்றி என்னிடம் சொன்னார். நானும் உடனே கிளம்பி சிவன் கோயில் தெருவுக்குச் சென்றேன். அங்கே ஜடைமுடியுடன் சாலையில் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். என்னை அருகில் சேர்க்கவே இல்லை. நாளைக்குப் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இப்படியே மூன்று மாதம் நான் போவதும் அவர் என்னைத் திருப்பி அனுப்புவதுமாகவே இருந்தது. நான் கொஞ்சம்கூட சளைக்கவில்லை. ஒருநாள் மாலை என்னை உற்றுப் பார்த்தவர், ‘என்ன... என்னைக் கண்டுபிடிச்சிட்டியா?’ என்று கேட்டார். என்னை அவர் அருகில் அமரவைத்துக்கொண்டார். தோசை வாங்கிவரச் சொல்லி, ஒரே இலையில் இருவரும் சாப்பிட்டோம். அதுதான் துவக்கம். அதற்குப் பிறகு தினமும் ஐயாவைத் தரிசித்தால்தான் அன்றையநாள் நிறைவுபெற்ற திருப்தி எனக்கு. சமயங்களில் இரவு அவருடனேயே தங்கியும் விடுவேன்.



இடையில் ஆறு மாதம் ஜெர்மனிக்குச் சென்றிருந்தேன். ஐயாவைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலை மனதை அரித்தது. அப்போது இந்தியாவைப் பற்றிய டாகுமெண்ட்ரி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் மனம் ஐயாவையே சுற்றிச் சுற்றி வந்தது. சென்னையைக் காட்டினால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அடுத்த நொடி சென்னைத் தெருக்கள் திரையில் தோன்றின. வடபழனியைக் காட்டுவார்களா என்று மனம் ஏங்கியது. அடுத்தக் காட்சியில் வடபழனி வந்தது. ஐயா எனக்குக் காட்சி தருவீர்களா என மனம் அரற்றியது. சட்டென்று திரையில் ஐயாவின் திருவுருவம்! அது அப்படியே வடபழனி கோயிலுக்குள் சென்று மறைந்துவிட்டது. நானும் அந்தக் காட்சியை ரீவைன்ட் செய்து பார்த்து சிலிர்த்துவிட்டேன். கண்டம் தாண்டி காட்சி தந்த ஐயாவின் உருவம் ஆயுளுக்கும் மறக்காது.

இப்படித்தான் இன்னொரு சம்பவமும் நடந்தது. நான் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டில் இருந்து இரண்டு பேர் என்னை இசை நிகழ்ச்சிக்கு அழைக்க வந்திருந்தார்கள். ஐயாவிடம் கேட்டுவிட்டு ஒப்புக்கொள்ளலாம் என்று அவரிடம் சென்றேன். என்னைப் பார்த்ததுமே, ‘என்ன, ரெண்டு பேர் வந்தாங்களா?’ என்று கேட்டார். அதிகம் பேசமாட்டார். ஆனால் எதையுமே அருகிருந்து பார்த்தது போலவே பட்டென உடைத்துச் சொல்லிவிடுவார். என்ன நடக்கும் என்பதையும் சொல்வார். ஆனால் தன்னிடம் இருக்கும் இந்த தீட்சண்யத்தை அவர் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. பரதேசிக்கோலத்துடன் தான் இருப்பார். மழையோ,வெயிலோ பொருட்படுத்த மாட்டார். மழை அடித்துப் பெய்தாலும் அவர் நிற்கிற இடம் நனையாது.
ஒருமுறை அவருக்கு மிகவும் முடியாமல் போனது. அவர் மருந்து, மாத்திரைகளை அனுமதிக்கவே மாட்டார். அருகில் இருந்தவர்கள் அழைத்தும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல சம்மதிக்கவில்லை. எனக்குத் தகவல் கிடைத்து நான் சென்று அவரை அழைத்தேன்.



அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. யாரையும் தொடக்கூட அனுமதிக்கவில்லை. தன்னைத் தேடி வருகிறவர்களின் வியாதை வாங்கி தன் காலில் வைத்துக் கொண்டதால்தான் காலில் புண் வந்து, புறையோடிப் போயிருக்கும். கால் வீக்கம், செப்டிக் ஆகிவிடக்கூடாது என்பதற்காக என் மருத்துவ நண்பரை வரவழைத்தேன். அப்போதும் சிகிச்சைக்கு உடன்படவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காபியில் மாத்திரையைக் கலந்து அவரிடம் கொடுத்தேன். ‘இதை நான் குடிச்சுதான் ஆகணுமா?’ என்று கேட்டார். பாதியைக் குடித்துவிட்டு மீதியை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். நானும் வாங்கிக் குடித்தேன். காபி, ரசமாக மாறியிருந்தது.
தங்கள் மகளின் இதய அறுவை சிகிச்சைக்குத் தேதி குறித்துவிட்டு ஐயாவைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வடநாட்டு தம்பதி வந்திருந்தனர். அந்தக் குழந்தையை அருகே அழைத்து ஆரஞ்சுப்பழத்தைக் கொடுத்து அனுப்பினார் ஐயா. மருத்துவமனையில் அந்தக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு சரியாகியிருந்ததைப் பார்த்து அதிசயித்துவிட்டார்கள். அறுவை சிகிச்சைக்காக கட்டிய பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு ஐயாவைத் தரிசிக்க வந்தார்கள். அவர்கள் ஊருக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து ஐயாவுக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.


இதோ அடுத்து ஜுனியர் விகடன் குழுவின் சந்திப்பு...

அய்யா... உங்களைப் பார்க்க பத்திரிகைல இருந்து வந்திருக்காங்க’’ என்றவாறு ஜூ.வி.யை அவர் மடியில் வைத்தார் அவரது சீடர் கிருஷ்ணமூர்த்தி. ‘‘தெரியுமே! ஜூனியர் விகடன்’’ என்றபோது நமக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் நம் வருகை குறித்து பாபாவிடம் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிப்பது சாத்தியமும் இல்லை. சிபாரிசுகளுக்கு அங்கே வேலை இல்லை. ‘‘நீ நூறு ரூபா கொடு’’ என்றார், பாபா நம்மிடம்.

நாம் பணத்தைக் கொடுத்ததும், ‘‘உங்களுடைய கடன் தீர்ந்துவிட்டது. இனி உங்களுக்கு அடுத்த பிறவி கிடையாது’’ என்றார் அருகிலிருந்த கிருஷ்ணமூர்த்தி. ஒரு நிமிடம் நம்மைப் பார்த்த பாபா, படீரென முகத்தைத் திருப்பிக்கொண்டார். நாம் அவர் அருகே உட்கார்ந்தோம். பாபாவின் வேட்டியை முழங்காலுக்கு மேல் உயர்த்திவிட்ட கிருஷ்ணமூர்த்தி, அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தார். நாம் அதிர்ச்சியில் உறைந்துபோனோம்.

பாபாவின் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கியிருந்தது. இடது காலில் புண் ஏற்பட்டு அதுவும் புறையோடிப்போய் இருந்தது. தனது கைகளால் அதற்கு மருந்து தடவி சுத்தம் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. பாபாவைக் காண வந்தவர்கள், அந்தப் பழுதடைந்த காலின் மீது தலை சாய்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ‘‘எல்லாருடைய பாவங்களையும் தானே உள்வாங்கிக்கொள்வதால், அய்யாவின் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.
பாபா தொடர்ந்து எதையாவது முனுமுனுத்தபடி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. நாமாக விடைபெற்று வெளியே வந்தோம்.

செங்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் நம்மிடம், ‘‘என் அம்மாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தேன். ‘48 மணிநேரம்தான் இருக்கு. ஆக வேண்டியதைக் கவனியுங்கள்’ என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். நாம் பாபாவிடம் வந்து அழுதேன். என் கரங்கைப் பற்றியவர், இரண்டு நாட்களும் தன்னுடனே என்னை தங்க வைத்துக்கொண்டார். மூன்றாம் நாள் ‘அம்மாவை ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண பெட்டுக்கு மாற்றிவிட்டதாகவும் உயிருக்கு ஆபத்தில்லை’ எனவும் எனக்குத் தகவல் வந்தது. அதன் பிறகுதான் என்னை வெளியேற அனுமதித்தார்’’ என்கிறார்.

அங்கு வந்திருந்த நடிகை நீலிமாராணி, ‘‘நம்பிக்கையோடு பாபாஜியை தரிசிக்கவேண்டும். என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல், வாரத்தில் பல நாட்கள் ஆஸ்பிட்டலிலேயே கிடந்தோம். கடுமையான பணப் பிரச்னை வேறு. நான், நாள் முழுக்க பாபாஜியின் காலடியில் கிடந்தேன். அடுத்த ஒரு வாரத்தில் கலைஞர் டி.வி, கன்னடத்தில் விசா டி.வி இரண்டிலும் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் எனக்கு கைகூடியது. இன்றோடு என் அப்பா இறந்து பத்து நாட்கள் ஆகிறது. இதுவும் பாபாவின் கட்டளைதான்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

நம்மிடம் பேசிய சில சினிமா தொழிலாளர்கள், ‘‘பத்தாண்டுகளுக்கு முன் தொழிலாளர் சங்கமான ஃபெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவில் சம்பளப் பிரச்னை உருவாயிற்று. பாபாவிடம் வந்த நாங்கள், ‘சாப்பாட்டுக்கே வழியில்ல சாமி. பட்டினி கிடந்து சாகிறோம்’ என்று கதறியழுதோம். அன்றிரவு நடு வீதிக்கு வந்த பாபாஜி, ‘வேலை செய்றவனெல்லாம் சோத்துக்கு வழியில்லாம கஷ்டப்படுறான். நீங்க ஏ.சி. ரூம்ல பொம்பளைங்களோட கூத்து நடத்துறீங்களா?’’ என்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு, ‘உடனே அவங்களைக் கூப்பிட்டுப் பேசுங்கடா’ என்று வெற்றிடத்தைப் பார்த்து கட்டளையிட்டார். அடுத்த நாளே எங்கள் இரு தரப்புக்கும் சமாதானமாகிவிட்டது’’ என்றனர்.

‘‘பாபா, யாருக்கும் எந்த உபதேசங்களையும் போதிப்பதில்லை. கொள்கை, கோட்பாடு என எதுவுமே இல்லை. அவர் வடபழனியில்தான் இருக்கிறார். இடத்தை மட்டும் சொல்லாதீர்கள். வேண்டியவர்கள் தேடி வருவார்கள்’’ என்கிறார்கள் பக்தர்கள்.

நாமும் கடந்த முறை வடபழனி சென்ற போது, தரிசனம் செய்தோம். நகர இரைச்சலில் அந்த இடம் பேரமைதியாய் இருந்தது. உள்ளத்தில் சற்று அமைதி கிடைத்தது. மனம் ஒடுங்கியது. அவரை பார்க்க பார்க்க, அந்த பரத்தை பார்த்தது போலவே உணர்ந்தோம்.



இதற்கு முந்தைய பதிவில் சொன்னது போல், எந்த ஒரு உபதேசமும் இங்கே இல்லை. வரலாம், தியானத்தில் அமரலாம். தாத்தாவிடம் கோரிக்கை வைக்கலாம். கோரிக்கை வைப்பதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. நாமும் நமது அகத்தை கொஞ்சமேனும் உணர்ந்து திருத்த வேண்டும். பிறகென்ன? மற்றவற்றை பரஞ்சோதி பாபா பார்த்துக் கொள்வார்.



இதோ..அன்றைய தினம் அடியார் ஒருவர் சிவ புராணம் பயாடிக் கொண்டு இருந்தார். அதுவும் தன்னிலை மறந்து, அந்த பரத்துடன் கலந்து என்பது அவரை பார்த்த போது புரிந்தது. இதோ. நம் தள உறவுகளுக்காக..பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா வின் திருப்பாதம் இங்கே தருகின்றோம். கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். நம் பாவத்தை துடைக்க இவர் போன்ற மகான்கள் நமக்குக் கிடைத்தது நமது பாக்கியமே.




அடுத்து ஸ்ரீலஸ்ரீ சத்குரு பகவான் வெங்கட்ராம சுவாமிகள்  13 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் பகிர உள்ளோம்.







ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html
அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Friday, February 28, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. 

காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர்  மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.

ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.

நம் தலத்தில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா 2018 மற்றும் 2019 அழைப்பிதழ் மற்றும் நிகழ்வின் துளிகள் பற்றி சொல்லி இருந்தோம். இன்றைய பதிவில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா இந்த ஆண்டிற்கான அழைப்பிதழ் தந்து அனைவரையும் விழாவிற்கு அழைக்க உள்ளோம்.



சுமார் இரண்டாண்டிற்கு முன்னர் நம் தளம் சார்பில் எம் சகோதரர் இந்த யாகத்தில் 2018 ல் கலந்து கொண்டார். அன்று முதல் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் திரு. பாலா ஐயா அவர்களுடன் நமக்கு வழிகாட்டப்பட்டு வருகின்றது. அதன் பின்னர் ஜீவ நாடி உத்தரவின் படி கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் அமாவாசை தோறும் மோட்ச தீபம் ஏற்றி வருகின்றோம். இது ஒரு புறமிருக்க சென்ற ஆண்டு 2019 க்கான மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பும் நமக்கு கிடைத்தது. அப்போது திரு.பாலா ஐயா அவர்கள்  இம்முறை யாகத்திற்கு வருபவர்கள் வாழ்வில் கண்டிப்பாக அடுத்த கட்டம் நகர்வதற்கு ஆசி உண்டு என்று கூறினார்.

நாமும் சென்ற ஆண்டு யாகத்திற்கு காலை 10 மணி அளவில் சென்று பார்த்தோம். யாகம் முடிவில் கோ பூசை கண்டு அன்னதானம் பிரசாதம் உண்டு வந்தோம். அந்த நாளில் தான் எம் மண வாழ்விற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. என்னே! குருவின் கருணை!! அடுத்தடுத்த ஜீவ நாடி ஆசியின் படி சென்ற ஆண்டு ஜூன் மாதம் திருச்செந்தூரில் எமக்கு திருமணம் நடைபெற்றது. இப்போது நினைத்து பார்த்தாலும் எப்படி இது நடந்தது என்பது ஒரே ஆச்சர்யமாக உள்ளது. எல்லாம் குருவருளாலே என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

இதே போன்று மற்றொரு அகத்தியர் அடியவருக்கும் அன்றைய தினம் மண வாழ்விற்கு உத்தரவு கொடுத்து இன்று அவர்கள் ஒரு ஆண் பிள்ளையோடு இருப்பதை காண முடிகின்றது. இங்கே இருவரது ஆசிகளை தந்துள்ளோம்.இது போல் எத்துணையோ அன்பர்களின் வாழ்வில்  நம் குருநாதர் வழி நடத்தி வருகின்றார். சரி.இந்த ஆண்டிற்கான மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் தர விரும்புகின்றோம்.





இந்த அழைப்பிதழ் மூலம் குரு சரணம் பற்றினோம் அல்லவா? ஆம். குருவை எப்படி பற்ற வேண்டும்? கண்களில் ஒளியாக அவரை நிறைக்க வேண்டும். கண்களில் ஒளியாகி என்றால் காணும் அனைத்தும் குருவின் அருளாக என்று கொள்க. இதே போல் நாம் எண்ணும் எண்ணம் அனைத்திலும் குருவின் செயலாக கருத வேண்டும். எப்பிறப்பில் என்ன புண்ணியம் செய்தோமோ? நாம் அனைவருக்கும் நம்மை வழிநடத்த சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய், அன்பில் நின்று ,அகத்தின் ஈசனை உணர்த்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமதே ஓம் ஸ்ரீ அகத்தியர் கிடைத்து இருக்கின்றார்.இப்பிறவி விட்டால் மீண்டும் எப்பிறப்பு என்று தெரியமா நமக்கு. ஆம். நம் கண்ணீர் கொண்டு நம் குருநாதரின் தாள் பற்றுங்கள். நம் சிரசில் தினமும் குருநாதரை வைத்து கொள்ளுங்கள்.

நம் மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் 2018,2019 நம் தலத்தில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் ஸ்ரீ வாஞ்ச கல்பித கணபதி ஹோமத்தில் ஹோமத் திருவிழா தொடங்கியது. அடுத்து ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ அகத்திய மகரிஷி ஹோமம், சர்வ இரட்சார்த்த அஸ்திர ஹோமம் என நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டிலும் சிறப்பான முறையில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா நடைபெற்றது.

இது நாமாக நடத்தும் ஹோமம் அன்று. நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஜீவ நாடியில் வழிநடத்தும் ஹோமத் திருவிழா ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீ அஷ்டம கணபதி ஹோமம், ஸ்ரீ கால பைரவர் ஹோமம், ஸ்ரீ நவக்கிரக தம்பதி சமேத ஹோமம் , ஸ்ரீ அகத்திய மகரிஷி ஹோமம், ஸ்ரீ பத்ரகாளி ஹோமம் நடை பெற உள்ளது. இந்த ஆண்டில் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா ஞாயிறு அன்று வருகின்றது.எனவே அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.


ஹோமத்திருவிழா முடிவில் சுமார் 1000 பேருக்கு குறையாமல் அன்னதானம் நடைபெறும். முடிந்தவர்கள் பொருளுதவி செய்யலாம். இல்லையேல் தங்கள் உடலுழைப்பை தந்து குரு சேவை செய்யும் படி வேண்டுகின்றோம்.



2018 மற்றும் 2019 ஆண்டில் நடைபெற்ற ஹோமத் திருவிழா காட்சிகள் கீழே தருகின்றோம். மீண்டும் கண்டு அருள் பெறுங்கள்.

2018 ஆம் ஆண்டில் 

குருவருள் பற்றிட இந்த யாகம் காட்டியது.




அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. அந்த இடம் முழுதும் யாகத்தீயின் அருளில் மிளிர்ந்து கொண்டிருந்தது. காணவே கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. பூக்களின் வாசத்தில், யாகத்தீயின் வெம்மையில் ஐந்து புலன்களும் ஒடுங்கியது. உடலுக்கு மட்டுமே தினமும் உணவை கொண்டிருக்கின்றோம். நம்மையும் அறியாமல் உயிருக்கான உணவு இந்த யாகத்தில் கிடைத்து. உயிர் உணர்வு பெற, மனோ லயம் பெற்றதை உணர்ந்தார்கள்.






மாசி மக சிறப்பு நாளில், தீர்த்தமாடி, ஹோமம் பார்ப்பது என்றால் சும்மாவா? குருவருளோடு இறையருளும் கிடைத்தால் தான் இது போன்ற நிகழ்வில் நாம் கண்டு கேட்டு உணர முடியும். அந்த வகையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழு அன்பர்களுக்காகவே இந்த சிறப்பு பதிவு என்ற யாம் எண்ணுகின்றோம். மீண்டும் மீண்டும் ஹோம நிகழ்வுகள் இங்கே.




அடுத்த யாகம் நம் அகத்தியருக்குத்  தான்.


நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

என்று உண்மை நிலை காட்டி, நம்மை வாழ்விக்க வந்த குருவின் பொற்பதம் அடையும் நிலையில் அகத்திய ஹோமம் நடைபெற்றது.







நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார். அகத்தியம் என்றால் என்ன? அது சத்தியம் தான். சத்தியம் என்றால் என்ன? அது அகத்தியம் தான் . அகத்திய அடியார்களை சோதனைக்கு உள்ளாக்கி, சத்தியம் நிலைபெற செய்வது அகத்தியமே சத்தியம், சத்தியமே அகத்தியம் என்று உணர்த்தவே.





பின்னர் சர்வ இரட்சார்த்த அஸ்திர ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத சிவா சஹஸ்ர நாம அர்ச்சனை , ஸ்ரீ மாதா லோபாமுத்ரா தேவி சமேத ஸ்ரீ அகத்திய மகரிஷி அபிஷேகம், புஷ்பாஞ்சலி என விழாக் கோலம் பூண்டது. ஹோமத்தில் காலை 8மணி முதல் காலை உணவாக இட்லி,பொங்கல்,பூரி,கேசரி என தேவாமிர்த சுவாமியை உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.




இறுதியில் அனைவருக்கும் ஹோம பிரசாதமாக திருநீறு,அகத்தியர் மகரிஷி அருள் வழங்கும் காட்சிப் படம் அடங்கிய பை வழங்கப்பட்டது. மதியம் 12 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. நமக்கு பிரசாத பை அனுப்பி வைத்தார்கள். குருவருளினால்  இந்த ஹோமம் சாத்தியப்பட்டது. திருவருளினால் இந்த ஹோமம் அருளப்பட்டது. இந்த ஹோமத்திற்காக இரவு, பகல் பாராது உழைத்த அத்துணை நல் உள்ளங்களுக்கும், பொருளுதவி செய்து நமக்கு உற்றதுணையாய் இருந்த அனைத்து அடியார் பெருமக்களுக்கும் வாழ்வில் மென்மேலும் உயர,சித்தர் பெருமக்களின் ஆசி வேண்டி பிரார்த்தித்து, இங்கே நன்றி கூறி மகிழ்கின்றோம்.





2019 ஆம் ஆண்டில் 















 அந்த இடம் முழுதும் யாகத்தீயின் அருளில் மிளிர்ந்து கொண்டிருந்தது. காணவே கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. பூக்களின் வாசத்தில், யாகத்தீயின் வெம்மையில் ஐந்து புலன்களும் ஒடுங்கியது. உடலுக்கு மட்டுமே தினமும் உணவை கொண்டிருக்கின்றோம். நம்மையும் அறியாமல் உயிருக்கான உணவு இந்த யாகத்தில் கிடைத்து. உயிர் உணர்வு பெற, மனோ லயம் பெற்றதை உணர்ந்தார்கள்.







அங்கே ஒரு ஓரமாக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் நம் தல அன்பர்களுக்காக சங்கல்பம் செய்தோம்.


ஹோம காட்சிகள் நம்மை வெகுவாக ஈர்த்தது. பொதிகையடி பாபநாசத்தில் சாஸ்தா ஆலயத்தில் இது போன்ற இயற்கை சூழல் நம்மை இன்னும் உரம் போட்டது.

































பூராணாகுதி இடப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்ட காட்சிகள் இங்கே தருகின்றோம்.





தாளமும், மேளமும் , நாதஸ்வரமும் என மங்கல இசை ஒலிக்க, அந்த ஹோம மூலிகை வாசத்தில், சாஸ்தாவின் அருளில் இன்னும் அந்த ஹோமம் நம் உடல் சிலிர்க்க வைக்கின்றது.














அடுத்து அன்னை லோபாமுத்ரா சமேத அகத்தியருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.











அகத்தியரின் அருளில் திளைத்தோம்.



  நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!




ஆம். அன்றைய தினம் நெஞ்சார அகத்தியரை மனதுள் வைத்தோம்.



அடுத்து கோ பூஜை நடைபெற்றது.



















எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.
மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷட் வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் மேலானவளும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் உயிர்களையும் படைத்து காத்து ரட்சிப்பவளானா தேவி மனோன்மணியான பராசக்தியின் அம்சமே கோமாதா என்கிறது கோமாதா மகாத்மியம்.





கோ பூஜை மிக மிக உயர்ந்த பூஜை ஆகும். நாம் முதன் முதலில் பாலா ஐயாவை சந்தித்த போதும் பௌர்ணமி யாகமும், கோ பூஜையும் சின்னாளபட்டியில் கண்டோம். அதே போல் தான் அன்றைய தினமும் கண்டோம்.








அடுத்து மீண்டும் அகத்தியர் தரிசனம் பெற்றோம்.











அடுத்து அன்னதானம் பாபநாசம் கோயிலில் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.சும்மா சொல்ல கூடாது..? என்ன ருசி. குருவின் அருளாலே அந்த ஜீவ அமிர்தம் உண்டோம். இந்த யாகம் நமக்கு குரு சீடர் பரம்பரை பற்றி சில செய்திகளை உணர்த்தியது.

யாகம் என்றால் வெறும் யாகம் மட்டுமல்ல. அதனோடு சேர்ந்து கோ பூஜை, அன்னதானம் போன்றவற்றை செய்ய வேண்டும் போன்ற செய்திகளை உளவாங்கி அங்கிருந்து நாம் முழுமை பெற்றோம்.

மீண்டும் அடுத்த மாசி மக கும்ப பௌர்ணமி யாகத்திற்கு நாம் ஓராண்டு காத்திருக்க வேண்டும். அதனால் தான் கடைசி நிமிட ஏற்பாடாக சென்று வந்தோம். அகத்தியரின் அருள் வாக்கின் படி, இந்த யாகம் எம் வாழ்வின் திருப்புமுனையாகவே அமைந்தது.வழிநடத்தும் குருவின் பொற்பாதம் சரணம் அடைகின்றோம்.

நம் தளம் சார்பில் இந்த யாகத்திற்கு நம்மால் இயன்ற தொகையை நேரில் வழங்கினோம். பொருளுதவி செய்த அனைவருக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னதானத்திற்கு அரிசி வாங்கிக்கொடுத்த திரு.பத்ம குமார் அவர்களுக்கு இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html