அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவாக நம்
குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண
உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும்
பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு
உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக
கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம்
உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும். குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.
நேற்றைய நாளில் குருவின் அருள் கண்டு நாம் மெய் மறந்தோம். ஆம். ஒரு அருள் பெற்ற வாக்கு பற்றிய நிகழ்வு அது. இதனை பின்னர் அறிய தருகின்றோம்.
இப்பதிவை
குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும்
பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும்.
அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை
பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை
கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம்
காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று
வருகின்றோம்
ஓம் குரு வழியே ஆதி ஆதி
ஓம் குரு மொழியே வேதம் வேதம்
ஓம் குரு விழியே தீபம் தீபம்
ஓம் குரு பதமே காப்பு காப்பு
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
இன்பங்களே கொடுத்து கொண்டு இருந்தால்….. சிந்திக்கவே மாட்டான் அப்பா. எப்படியப்பா யான் நல்லது செய்வது?
குருநாதர்:- அப்பனே, வாழ்க்கை என்பது என்ன?
அடியவர்:- பிறருக்கு உபகாரமாக இருப்பது.
குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கே அதாவது உபகாரமாக நீ இல்லையப்பா எப்படியப்பா பேசுகின்றாய்?
அடியவர்:- (அடியவர்கள் அமைதி. சில நொடிகளுக்கு பின்னர் ஒர் அடியவர்) ஐயா ஜெயிக்க முடியாது ஐயா. அகத்தியப்பெருமானிடம் பேசி.
குருநாதர்:- அப்பனே எழுந்து நில் அப்பனே.
(இங்குதான்
அந்த மகத்துவம் மிக்க மகிமை புகழ் நிகழ்வு பூலோகத்தில் பல ஆயிரக்கணக்காண
ஆண்டுகளுக்குப்பின் நடந்தது. குருநாதர் நேரடியாக சீடர்களுக்கு பாடம்
எடுப்பது போல ஆரம்பித்தார் சில நல் ஆத்மாக்களுக்கு. நாடி வாக்கே பலருக்கு
கிடைக்கவில்லை என்ற நிலையில், ஆனால் இந்த அடியவர்கள் குருநாதரின் நேரடி
வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டியது. எப்பேர்ப்பட்ட
பாக்கியம் அந்த அடியவர்களுக்கு)
அடியவர்:- (அடியவர் எழுந்து நின்றார்)
குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில்.
அடியவர்:- (ஒரு காலில் நிற்க ஆரம்பித்தார்)
குருநாதர்:- அப்பனே கைகளை மேலே தூக்கி ,
அடியவர்:- ( இரு கைகளை மேலே தூக்கி ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்)
குருநாதர்:- ஏதாவது அனைவருக்கும் ஓர் உரை, உரை.
அடியவர்:- (அடியவர் மெதுவாக பேசினார்)
குருநாதர்:- அப்பனே, உன் மனதிலேயே தான் நீ சொன்னாய் எனபேன் அப்பனே. அனைவருக்கும் பலமாக எடுத்துரை என்பேன் அப்பனே.
அடியவர்:-
எல்லோரும் அன்பாக இருங்கள். எல்லோரையும் அகத்தியப்பெருமான்
பார்த்துக்குவார்.
( இப்போது ஒற்றைக்காலில் நிற்கும் அடியவர் , நிற்க
இயலாமல் ஆடிக்கொண்டே இதை அனைவருக்கும் உரைத்தார். )
குருநாதர்:-
அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க முடியவில்லையே அப்பனே
வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்
அப்பனே. இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல்
வாழந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அப்பனே இப்பொழுது சொன்னானே , ஆடினானே
இதுபோலத்தான் அப்பா. ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். கர்மாவில் மிதந்து
கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. ஆடாமல் நிற்கவேண்டும் என்றால் அப்பனே
எங்களை நிச்சயம் சரண்டதல் அதாவது எங்களை சரணடையத் தேவை இல்லை. நீங்கள்
புண்ணியம் செய்து கொண்டிருந்தாலே யான் உங்களை நோக்கி வருவோம். அப்பனே (ஒரு)
பாடலைப்பாடு முருகனை நோக்கி.
அடியவர்:- (முருகன்
பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு -
திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த
(பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.)
குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன?
அடியவர்:-
(மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை
தூக்கி பாட ஆரம்பித்தார். அந்த திருப்புகழ் பாடல் படித்து முருகனை உளம்
உருகி தொழுது உய்யுங்கள்.
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.
குருநாதர்:-
(இந்த பாடலை முழுவதும் பாடி முடிக்கும் முன்னரே , இடையிலேயே குருநாதர்
குறுக்கிட்டு ) அப்பனே, நிறுத்து. அப்பனே கர்மா வைத்துக்கொண்டிருக்கின்றாய்
அப்பனே. இதிலிருந்தே தெரிகின்றது என்பேன் அப்பனே. ஆடி ஆடி பாடுகின்றாய்
என்பேன் அப்பனே. உன் பக்கத்தில் இருப்பவனை எழச்சொல்.
அடியவர்:- ( அடியவர் எழுந்து நின்றார்)
குருநாதர்:- அப்பனே இது போலே நில். ( ஒற்றைக்காலில், இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி)
அடியவர்:- (அடியவர் குருநாதர் சொன்னது போல் நின்றார்)
குருநாதர்:- அப்பனே, முருகனைப்பார்த்து ஒரு பாடலைப்பாடு.
அடியவர்:- (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியில் உள்ள பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார்)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
குருநாதர்:-
அப்பனே, இறைவனை நம்பினாலும் ஓர் பக்குவப்படுத்த அப்பனே ஒர் ஆள் தேவையப்பா.
உன்னால் ஒன்றுமே அதாவது பக்கத்தில் உள்ளவன் கெட்டியாக (ஒற்றைக்காலில்
நிற்கும் உன்னை) பிடித்தான். அதுபோலத் தானப்பா மனிதனுக்கு சில சில
வினைகளில் யாங்களே வந்து அப்பனே அப்படியே பிடித்துக்கொள்வோம் அப்பனே.
புரிந்து கொண்டாயா அப்பா? உன் நிலைமையும் உந்தனுக்கு அதனால்தான் அப்பனே
வாக்குகள் உந்தனுக்கு கொடுக்கவில்லை என்பேன் அப்பனே. சில கர்மாக்களை எதை
என்று அறிய அறிய சம்பாதித்து அப்பனே அனுபவித்துக்கொண்டிருந்தாய். ஆனாலும்
அப்பனே சிறுக சிறுக முருகனே அதை நீக்கிவிட்டான். அதனால் நிச்சயம் அப்பனே
பாடலை பாடு. அப்பனே காலை கீழே விடாதே.
அடியவர்:- (அதே முருகன் பாடலை பாட ஆரம்பித்தார்)
குருநாதர்:-
அப்பனே, யான் சொல்லியதை இதைக்கூட சரியாக செய்யவில்லை என்பேன் அப்பனே.
ஆனால் நீங்கள் என்னென்ன கேட்கின்றீர்கள் அப்பனே. அவை எல்லாம் யான் தரவா
முடியும் அப்பனே. எவை என்று அறிய இதை சரியாக எவை என்று கூற யான் சொல்லியதை
சரியாக பின்பற்றினால்தான் அப்பனே பின் அனைத்தும் செய்ய முடியும். ஏனென்றால்
அப்பனே ஏன் எதற்காக சொல்கின்றேன் என்றால் அவ்கர்மாவை நீக்க வேண்டும்
என்பேன் அப்பனே. அப்பனே கர்மாவை பற்றி இப்படியே எடுத்து கூறு நீ.
அடியவர்:- கர்ம வினை என்பது நாம் செய்கின்ற பாவ புண்ணியங்கள் ஏற்ப வரும். நல்லது பண்ணா நல்லது வரும். கெட்டது பண்ணா கெட்டதை வரும்.
குருநாதர்:-
(தனிப்பட்ட வாக்கு அந்த அடியவருக்கு மட்டும் உரைத்தார். அந்த பதிவுகள்
நீக்கப்பட்டது. அந்த அடியவர் இல்லத்திலே குருநாதர் இருப்பதாக உரைத்தார்.)
இறைவன் தான் செய்த வினைகளுக்கு ஏற்பவே அப்பனே சில சில துன்பங்கள்
கொடுத்துக்கொண்டு இருக்கின்றான். இது தவறா?
அடியவர்:- சரிதான்.
குருநாதர்:-
அப்பனே எதை என்று கூற நீங்கள் இன்னும் அப்பனே தவறு செய்துவிட்டு தவறு
செய்து விட்டு , தவறு செய்து விட்டு என்னிடத்தில் வந்தால் எப்படியப்பா யான்
கொடுப்பது? அப்பனே. சொல்லுங்கள் நீங்களே.
அடியவர்:- (அனைவரும் அமைதியானார்கள்.)
குருநாதர்:-
அதனால் அப்பனே, உன் பக்கத்திலேயே இருக்கின்றானே இவன்தன் ( தனி நபர் வாக்கு
நீக்கப்பட்டது) தாய்க்கு பல உதவிகள் சேவை செய்ய வேண்டும் அப்பொழுதுதான்
இறைவன் சேவைகள் செய்வான். தாயை பாரத்து ஒரு பாடல் பாடு.
அடியவர்:- (பாடல் ஒன்றை பாடினார்)
குருநாதர்:-
அப்பனே அனுதினமும் உன்தாயை வணங்கிக்கொண்டே வா அப்பனே. நிச்சயம் மாறுதல்
ஏற்படுத்துகின்றேன் அப்பனே. முதலில் அப்பனே தாய் தந்தையரை வணங்குதல்
வேண்டும். இதை வணங்காதவர்கள் (உலகில் உள்ள அனைவருக்கும் ) அப்பனே,
எப்படியப்பா கொடுப்பது? அதனால் உங்களுக்கு அருகிலேயே யான் இருக்கின்றேன்.
ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையப்பா. அதனால்தான் சில சில கஷ்டங்களை
உங்களுக்கு யானே வைத்தேன் அப்பனே.
அடியவர்:- ( அனைத்து அடியவர்களும் அமைதி)
குருநாதர்:-
இதனால் அப்பனே உணருங்கள். அப்பனே, (உங்களால்) சிறிது நேரம் கூட நிற்க
முடியவில்லை என்பேன் அப்பனே. வாழ்க்கை எப்படித்தான் வாழப்போகின்றீர்கள்
என்பேன் அப்பனே? ஆனால யான் இருக்கின்றேன் அப்பனே. பாதை காட்டுகின்றேன்.
வையுங்கள் காலை கீழே.
இன்றைய பதிவில் முருகப் பெருமான் பாடல்(திருப்புகழ், கந்தர் அநுபூதி) படித்தோம் அல்லவா? அதன் பொருட்டு முருகப் பெருமான் தரிசனம் கண்டு இன்புறுவோமாக!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி