"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, November 4, 2023

கர்ம வட்டமா? தர்ம வட்டமா?

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் குருவின் அருளில், கருணையில் திளைத்து வருகின்றோம். குருவே சரணம் என்பதை வாய் மொழியில் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் இருந்து மெய் நிலைக்கு நாம் செல்ல குருவின் அருள் இன்னும் வழிநடத்தட்டும். இன்று கர்ம வட்டமா? தர்ம வட்டமா? என்ற தலைப்பில் குருவின் உபதேசங்களை சிறிது காண உள்ளோம். முதலில் நாம் ஏன் பிறந்தோம்? தாய் தந்தையை நாம் தான் தேர்வு செய்தோமா? பிறந்த பின்னர் வாழ்வில் ஏன் இத்தனை துன்பங்கள்? என்று பலவாறு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அரிது அரிது! என்ற அரிதான மனித பிறப்பில் நாம் இருக்கின்றோம். புல்லாகி, பூடாகி, புழுவாய் , மரமாகி என்ற மாணிக்கவாசக பெருமான் கூறியதைப் போன்று மனிதராய் பிறப்பதற்கு நாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். ஏனெனில் நம்மால் தான் இறையை கண்டு, உணர முடியும். மீண்டும் இறைவனை அடைவதே மனிதப் பிறப்பின் நோக்கம். ஆகும்.





மனிதராய் பிறந்தது மகிழ்வித்து மகிழ்ந்து, இறைவனை கண்டு, உணர்ந்து, இறையிடம் சேர்வதற்கே.ஆனால் நாம் இப்படி வாழ்வதில்லை. சிறு குழந்தையாக இருந்த பொழுது ,இறை தன்மை உணர்ந்த நிலையில், வளர, வளர, இறை சிந்தனை மறைக்கப்பட்டு, கர்ம வட்டத்தில் நுழைந்து விடுகின்றோம் அல்லவா? இதனை இன்னும் சிந்தித்தால் தான், தனது என்ற பற்றில் அல்லவா வாழ்ந்து வருகின்றோம். தான் என்ற பொருள் பற்றும், தனது என்ற அதிகாரப் பற்றும் கொண்டு  வாழ்வது தான் கர்ம வட்டம். இது வேண்டவே வேண்டாம் என்று தான் சித்தர் பெருமக்களும், ஞானிகளும் கூறி வருகின்றார்கள். ஆனால் நம்மால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை. 

நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமானும் இந்த கர்ம வட்டம் வேண்டவே வேண்டாம் என்று பல வாக்குகளில் நமக்கு கூறி வருகின்றார்.  இந்த கர்ம வட்டத்திலிருந்து இருந்து கொண்டே நாம் தர்ம வட்டம் நோக்கி செல்ல வேண்டும். தர்ம வட்டம் என்பது தான், தனது என்ற இரண்டும் அற்ற நிலை. இது பொது நிலை. இது பக்குவப்பட்ட நிலை. இது உயர்ந்த நிலை. அனைத்தும் ஒன்றே என்று பரத்திடம் சரணாகதி அடையும் நிலை. உண்மையான பக்தி நிலை. இது ஒரு முக்தி நிலை. மேலும் இது ஒரு ஞான நிலை. இதனை அடைவதே நமது வாழ்வின் நோக்கமாக கொள்ள வேண்டும். இதனைப் பற்றி நம் குருவின் மொழியில் இனி காண இருக்கின்றோம்.

இறைவா அனைத்தும் நீயே! அனைத்திற்கும் நன்றி!!

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் காப்பு

ஏன் எனக்கு இத்துனை துன்பங்கள்? 

ஏன் எனக்கு எந்த பரிகாரமும் பலிக்கவில்லை? 

ஏன் என்னால் முன்னேற முடியவில்லை? 

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குன்றது?ஏன் இனைய தளத்தில் வரும் எந்த தகவலும் என்னை முன்னோக்கி செல்ல வைக்க வில்லை?

ஏன் எனக்கு தடைகள? —-இன்னும் உங்கள் உள்மனதில் பல கேள்விகளுக்கு பதில் இந்த பதிவில்.அகத்திய பிரம்ம ரிஷி அருளிய மதுரை வாக்கின் தொகுப்பு (4.9.2023) :

( அன்னதானம் செய்யும் போது இதில் உள்ள செய்திகளை மக்களுக்கு தானம் செய்பவர் கண்டிப்பாக சொன்னால் மட்டுமே முழு புண்ணியம் உண்டாகும்)

எத்தனை எப்பரிகாரங்கள் செய்தாலும் இன்னும் கஷ்டங்கள் போகவில்லையே என்பதற்கு காரணம் முதுகில் உள்ள கர்மாவினால் தான். 

தர்மம் செய்த பிறகு எதையும் எதிர் பார்க்காமல் நல் முறையாகவே செய்தால் நன்கு நன்கு அப்பனே இதனால் தர்ம தேவதை , (தர்ம) தேவனும் நல்முனைகளாக உங்கள் அனைவருமே ஆசிர்வாதங்கள் பல கோடிகளப்பா. 

தர்மத்தின் வழிகள் செல்லச்செல்ல இன்னும் புண்ணியங்கள் உண்டாகும். தர்மம் அதை செய்துவிட்டு மீண்டும் பின் நிலைகளுக்கு வேறுபாடுகள் ( தர்ம நிலையில் இருந்து கர்ம நிலைக்கு ) சென்றாலேதான் குழப்பங்கள் உண்டாகும். 

நீங்கள் அனைவருமே தர்மம் செய்வதற்க்கே பிறந்தவர்கள். அதனை விட்டு விட்டு மற்ற வழியில் சென்றால் கஷ்டங்கள்தானப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. இது அனைவருக்குமே பொருந்தும் என்பேன் அப்பனே. இதை சரியான வழியில் ( புரிந்து நீங்கள்) ஏற்றுக்கொண்டால் நன்று என்பேன் அப்பனே. 

தர்மம் செய்து கொண்டே இருந்தாலும் (நீங்கள் செய்த) இவ்தர்மத்தைப்பற்றி பிரம்மாவிடம் எடுத்துரைத்து விதியை (சித்தர்கள்) யாங்களே மாற்றுவோம் அப்பனே. இதுதான் உண்மை.

விதியைக்கூட மதியினால் வெல்லலாம். மதி என்பவனே இறைவன். 

நீங்கள் சரியான வழியில் தர்மத்தின் வழியை கடைபிடித்து வந்தாலே போதுமானதப்மா. தானாகவே விதியும் மாறவிடும் அப்பனே. அதற்க்கு (சித்தர்கள்) யாங்கள் உதவிகரமாக இருப்போம் அப்பனே. 

நீங்கள் (தர்மம்/புண்ணியம்) எதுவும் செய்ய வில்லை என்றால் எங்களாலும் விதியை மாற்ற முடியாதப்பா. நீங்கள் ஏதாவது புண்ணியம் செய்தால்தான் அதை பிரம்மாவிடம் கூறி விதியை மாற்றி அமை என்பவைஎல்லாம் எங்களால் கேட்க இயலும்.(உன் நல் வாழ்க்கை உன் கையில்)

இறைவன் எதை எதிர்பார்க்கின்றான் என்று தெரிந்துவிட்டால் கட்டங்களே வராதப்பா. நீ எதற்க்காக வந்தாய் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டாலே கஷ்டங்கள் வராதப்பா. பஅதை விட்டு விட்டு அதாவது இவ்வுலகத்திற்க்கு எதறக்காக வந்தாய் என்று தெரியாமல் அலைந்து திரிந்து வந்தால்தான் பின் கஷ்டங்களப்பா. 

விதி அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தர்மம் செய்ய வேண்டும். பின் அவ்தர்மம் செய்து கொண்டே வந்தால் அப்பனே பல பல இடையூறுகள் பல கஷ்டங்கள் வரும்ப்பா. ஆனாலும் அதை மீறியும் தர்மங்கள் செய்தால் யானே உங்களுக்கு நிச்சயம் வந்து அனைத்தும் செய்வேன். சில மாற்றங்களை கூட எளிதில் நிகழ்த்திவைப்பேன்.இது பல பல என் பக்தர்களுக்கும் ஏற்க்கனவே செய்திருக்கின்றேன். உணர்க அப்பனே. த

தர்மத்தின் பாதையில் செல்லச்செல்ல கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு தர்மங்கள் செய்கின்றீர்கள் என்றால் அவ்வளவுக்கு அவ்வளவு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். ஏன்? எதற்க்காக என்றால் தர்மம் செய்யச்செய்ய அப்பனே புண்ணியங்கள் உயர்வடைய உயர்வடைய கர்மங்கள் குறைந்து கொண்டே வரும்ப்பா. 

இவ்வளவு தர்மங்கள் செய்கின்றோமே எதற்க்காக? ஏன்? பின் கஷ்டங்கள் வருகின்றது என்று எல்லாம் நீங்கள் எண்ணக்கூடாது. தர்மங்கள் உயர்வாகினில் கர்மங்கள் குறைந்துவிடும். 

ஒவ்வொருவர் முதுகிலும் கர்மா மூட்டை இருக்கின்றது. முதலில் அதை இறக்கிவிட வேண்டும். அதற்கு புண்ணியம் என்று ஒன்று தேவைப்படுகின்றது. புண்ணியம் அதைச்செய்யாமல் முதுகில் இருந்து யாரும் இறக்கியும் வைக்க மாட்டார்கள்.

இறக்கி வைக்கின்றேன் , இறக்கி வைக்கின்றேன் என்றெல்லாம் மனிதன் சொல்லலாமே தவிர மீண்டும் மீண்டும் அது கூடிக்கொண்டேதான் செல்கின்றது அதனால்தான் தொல்லைகளப்பா. 

என் பக்தர்களே பல பேர்களை யான் பாரத்துவிட்டேன். எதை எதையோ நம்பி, எதை எதையோ செய்து மீண்டும் மீண்டும் பெருக்கிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். 

பின்பு அகத்தியனை நம்பினேனே சுவடிகளை நம்பினேனே என்றெல்லாம் பிதற்றல் ஆகாதப்பா. அதனால் என் வழியில் வந்து விட்டால் சில சோதனைகள் வரலாம். எதற்க்காக சோதனைகள்?. சோதனைகள் கொடுத்தால்தான் உங்களை பக்குவப்படுத்த முடியும். சோதனைகள் இல்லை நீங்கள் ஓடி விடுவீர்கள் இன்பப்பாதைகளுக்கு.

ஆனாலும் அவ்இன்பப்பாதைகளே கடைசியில் துன்பமாக மாறிவிடும் என்பதெல்லாம் மனிதனுக்கு தெரிவதில்லை.இதனால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ஏன்? எதற்க்காக? யான் சில துன்பங்களை உங்களுக்கு வைக்கின்றேன் என்றால் நீங்கள் இன்பம் அடைவதற்க்கே, சில கர்மாக்களை ஒழிப்பதற்க்கே. 

அகத்தியனை நம்பினேனே காசுகள் கொடுக்கவில்லையே, இன்னும் பொருள்கள் கொடுக்கவில்லையே, இன்னும் திருமணங்கள் செய்யவில்லையே, இன்னும் குழந்தைகள் பிறக்கவில்லையே , இன்னும் எதைஎதையோ ஆனால் எச்சமயம் எதைக்கொடுத்தால் நல்லது என்பதைக்கூட சித்தர்களுக்கு தெரியும். அப்படி கொடுத்தால்தான் நன்று. அப்படி இல்லை என்றால் அதனாலே கொடுத்திட்டாலும் அதனாலேயே தீங்கு அப்பா. இப்படித்தான் உலகத்தில் நடந்து  கொண்டு இருக்கின்றது அப்பனே. 

சோதனைகள் கொடுப்பதே இறைவன்தான் அப்பா. மீண்டும் அப்பனே இறைவனிடத்திறக்கே சென்றால் என்ன லாபம் என்பேன் அப்பனே? அதனால் சோதனை கொடுப்பது உங்கள் நல்லவைக்காகத்தான் தெரிந்து கொள்ளுங்கள். 

சோதனை ஒன்று இருந்தால் நிச்சயம் இன்பமும் அங்கே தங்கி இருக்கும். 

வாழ்க்கை இன்பமாகவே இருந்தால் அப்பனே நீங்கள் இறைவனையே வணங்கமாட்டீர்கள்.

இறைவன் அனைவரையுமே படைக்கின்றான். ஆனாலும் நீங்கள் இறைவன் விரும்பியது போல் இல்லை. அதனால்தான் ஒரு கஷ்டத்தை வைத்து பின் இறைவன் விரும்பியதைப்போல் உங்களைச்செய்கின்றான். இது தவறா?

என்னை நம்பியவர்கள் கூட நிச்சயம் கஷ்டங்களுக்கு உட்படுத்துவேன். யார் ஒருவன் நம்பிக்கைவைத்து என் அகத்தியன் காப்பாற்றுவான் நிச்சயம் வருகின்றானோ அவன்தனக்கு அனைத்தும் கொடுத்து மேலே உயர்த்திவைப்பேன். 

அவை விட்டு விட்டு  இப்படி நம்பினேனே ஒன்றுமே நடக்கவில்லையே. மீண்டும் அங்கு செல்வோமா இங்கு செல்வோமா என்று அலைந்து கொண்டிருந்தால் வாழ்க்கையே இப்படித்தான் அலைந்து கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு வாய்ப்பை இறைவன் தந்துகொண்டே இருக்கின்றான். அதை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ கர்மா சேராதப்பா. ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் கர்மம் சேரும்.

இவ்உலகம் கர்மத்தால் சூழந்து உள்ளது.அதனால் இவ்வுலகத்தில் அவ்கர்மா நீக்கி பின்தான் அனைவரும் நல்லோர் நல்முறையாகவே வாழ முடியும். 

ஆனாலும் அதை நீக்க முடியாது அப்பா. புண்ணியங்களை விட கர்மா அதிகமாக உள்ளதப்பா. அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள்.ஒவ்வொருவருக்கும் கூட கஷ்டங்கள்தான்.இதை தெரியாமல் மனிதன் நடந்து கொண்டுஇருக்கின்றான்.மனிதன் வாழ்வோம் வாழ்வோம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது அப்பனே இறைவன் சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றான். புரியாமலும், தெரியாமலும் இவன்தன் வாழ்வு வாழ்வோம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றானே பாவம் என்று. 

இதனால்தான் மனிதனுக்கு சில கஷ்டங்களை உணர்த்திவைத்து இறைவன் பாதை அழைத்து இறைவன் திருத்துகின்றான். கவலைகள் இல்லை. அனைவரையுமே உங்களை பலமுறையும் யான் பார்த்திட்டேன் லோபாமுத்திரையோடு. எங்கெங்கு எதை என்றும் அறிய அறிய அங்கெல்லாம் ஆசிர்வாதங்கள் கொடுத்து இருக்கின்றேன். 

இதனால் நலன்களாகும். குற்றங்கள் இல்லை அப்பனே. குறைகளும் சில சில வருத்தங்களும் கூட  இதனால் அதை எல்லாம் நீக்குகின்றேன்.

நல்முறைகளாகவே அதனால் தர்மத்தை கடைபிடியுங்கள் அப்பனே. தர்மத்தைப்பற்றி பேசுங்கள் அப்பனே. தர்மத்தைப்பற்றியும் எப்பொழுதும் சிந்தனையாக இருங்கள் அப்பனே. அப்பொழுதுதான் கர்மா ஒழியுமே தவிர பின் நீ இறைவனிடத்திற்கு சென்றாலும் அனுதினமும் இறைவனை வணங்கினாலும் நிச்சயம் கர்மா செல்லாதப்பா. 

தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே இறைவன் மிகப்பெரியவன். இறைவன் ஒருஒருவருக்கும் ஒருஒரு வேலை கொடுத்து அனுப்புகின்றான் இவ்வுலகத்திற்க்கு. அதை செய்திட்டு வா என்று. ஆனால் அதை சரியாக செய்வதில்லை. அதனால்தான் கஷ்டங்கள். 

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். 

நீங்களே ஒரு தொழிலுக்கு செல்கின்றீர்கள் அப்பனே. அங்கு நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால் அப்பனே அவ் முதலாளியும் உன்னை சென்றுவிடு அப்படியே என்று பின் இல்லத்திற்க்கு அனுப்பி விடுவான். அது போலத்தான் இறைவன் அனைவருக்குமே ஒவ்வொரு வேலை வைத்திருக்கின்றான். அதை யாருமே சரியாக செய்வதில்லை என்பேன். அதனால்தான் இறைவன் கூட கஷ்டத்தை வைத்து பல துன்பங்களை வைத்து இழுத்து இதுதான் உன் வேலை என்று தீர்மானிக்க இறைவன் பாடுபட்டுக்கொண்டே இருக்கின்றான்.

இறைவன் எதற்க்காக படைத்தான் என்பதை ஆராய்வதற்க்கு புண்ணியங்கள் தேவைப்படுகின்றதப்பா. 

அப்புண்ணியங்கள் நீங்கள் செய்து கொண்டே வந்தால், நீங்கள் எங்களை நோக்கி வரத்தேவையே இல்லை. யாங்களே உங்களை நோக்கி வருவோம். 

யாங்கள் வந்து வந்து நல்லோர்கள் இருக்கின்றார்களா? பக்குவப்பட்டவர்கள் இருக்கின்றார்களா? என்பவை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். 

அகத்தியன் அதாவது என்னையே வைத்து அப்பனே பின் யான் தான் அகத்தியன் என்று ஒருவன், இன்னொருவன் அப்பனே எந்தனுக்குத்தான் அனைத்தும் தெரியும், அப்பனே  இன்னொருவன் யான்தான் பெரியவன், அப்பனே என்னைத்தவிர  அகத்தியன் யாருக்கும் வருவதில்லை என்று, இன்னொருவன் அப்பனே எதை என்று அனைத்தும் பொய் யான் தான் அகத்தியன் என்றெல்லாம், ஆனாலும் இவை எல்லாம் எப்படியப்பா? அப்பனே எந்தனுக்கே கோபங்கள். 

ஆனாலும் அவைஎல்லாம் பொறுத்துக்கொள்கின்றேன்.இனிமேலும் பின் கஷ்டத்தை கொடுத்தால்தான் திருந்துவான் அப்பனே சொல்லிவிட்டேன்.

ஒர்வன் இங்கிருக்கின்றானப்பா. அப்பனே என் சிலையை அவன் வீட்டில் வைத்தானப்பா. தரித்திரம் நிறைந்துவிட்டதப்பா.

மனதில் முதலில் பின் திருத்தலமாக்கு. பின்பு அப்பனே என்னை எப்படி பின்பற்றுவதென்று யான் தெரிவிக்கின்றேன் அப்பனே. மனதிலே சுத்தமில்லையப்பா. பின்பு என்னை வைத்தாலும் என்ன லாபம் அப்பனே? இப்படித்தான் இங்கு மூன்று, நான்கு பேர் வைத்து விட்டார்கள். கர்மம் சூழ்ந்து விட்டது. ஓர் அடியும் அடித்து விட்டது. யான் பாரத்துக்கொண்டேதான் இருக்கின்றேன் பார்ப்போம் என்று. ஆனால் ஒன்றும் ஆகவில்லையப்பா. பின் என்ன செய்வது? அப்பனே ஏதோ ஒர் ரூபத்தில் அப்பனே வந்து திருத்திவைத்தேன். 

திருத்தலங்களை அமைப்பது முதலில் உன் மனதில் அமைத்து விட்டாலே போதுமானது அப்பா. மற்றவை மனதே தூய்மை இல்லை. பின்பு எதை வைத்தால் என்ன லாபம் அப்பா? யானே பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே. என் அதாவது ரூபத்தை கூட இல்லத்தில் வைத்துவிட்டு சண்டைகளப்பா. பெரும் சண்டைகளப்பா. இல்லத்தவளுக்கும் பின் இவன்தனக்கும் பின் அசிங்கமான வார்த்தைகள் யான் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். 

இப்படி இருந்தால் அப்பனே என்ன செய்வது? யான் எதைத்தான் செய்வது?நீங்களே கூறுங்கள். அதனால்தான் ஒர் அடி அடித்தால்தான் திருந்துவார்கள் என்பதைக்கூட யான் நன்றாக அறிந்துவிட்டேன்.

என் பக்தர்களாயினும் தவறாக நடந்தாலும் அத்தவற்றை உணர்த்திவைப்பதற்க்கு பல அடி கொடுத்துத்தான் யான் திருத்துவேன் சொல்லிவிட்டேன் அப்பனே. ஆசிரியன்கூட மாணவனை திருத்தவில்லை என்றால் அவன் சரியாகவே உயர்ந்திட மாட்டான். புரிந்து கொண்டீர்களா இங்கு யான் யார் என்று?.

தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே. எதை என்றும் புரியாமல்,தெரிந்து வாழ ஒருவர்கூட இல்லையப்பா. 

அப்பனே சோதனைகள் வருமப்பா. ஆனாலும் சோதனைகளை எதிர்த்து போராட வேண்டும். அப்பொழுதுதான் இறைவன் அங்கு நிற்ப்பான் என்பேன் அப்பனே. சோதனைகள் கொடு. எவ்வளவு சோதனைகளாயினும் (இறைவா) நீ கொடுத்துக்கொண்டே இரு என்றெல்லாம் யார் ஒருவன் சொல்லுகின்றானோ அவன்தான் பக்குவப்பட்டவன் சொல்லிவிட்டேன்.

ஏற்கனவே யான் ஒருவன் பற்றி சொல்லிவிட்டேன் அவன் விதியை ஆராயந்தும் ஆனால் அவன் சரியாகவே செய்யவில்லையப்பா. ஆனாலும் அப்பனே அவனை கஷ்டங்கள் சூழந்து கொண்டது. பல கர்மாக்களும் சூழந்து கொண்டது. ஆனால் அடியோ அடி. ஆனாலும் என்னையும் வணங்கினான் யான் காப்பாற்றவில்லை. ஏன் எதற்காக காப்பாற்ற வேண்டும்? என் சொல்லையே மீறிப்போய்விட்டான் அப்பனே. ஆனாலும் எப்படியோ தொலையட்டும் என்று பின் நல் விதமாக ஆக்கி மீண்டும் அவனை ஒரு பக்குவத்தை ஏற்ப்படுத்தி ஏற்ப்படுத்தி கொண்டிருக்கின்றேன். 

முதலில் தெரிந்து கொள்ளுங்கள் ஆசிரியர் ஒரு மாணவனை பின் அடிப்பதற்க்கு ஆசிரியன் அடித்து விட்டானே!  யான் ஏன் பள்ளிக்குச்சொல்ல வேண்டும்? ஏன் யான் ஓத வேண்டும்? என்று சென்றுவிட்டால் அவன் வாழ்க்கை அப்படியே போய்விடும். உயர்ந்துவிட மாட்டான். 

ஆனால் அகத்தியனிடம் வந்துவிட்டால் இப்படித்தான் யான் பக்குவப்படுத்துவேன் சொல்லிவிட்டேன்.இறைவனுக்கு பூசைகள் செய்யலாம், இறைவனை வணங்கலாம் , படுத்து படுத்து இறைவனை வணங்கலாம். இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கலாம். இதனால் ஒரு புரயோஜனமும் இல்லை அப்பா. 

புண்ணியங்கள் செய்யச் செய்ய செய்யச் செய்ய அப்பனே இறைவன் உன்னிடத்தில் தேடி வருவான் என்பேன் அப்பனே. உன் மனதில் தங்கி விடுவான். இறைவன் தானாக (உன்னை) அழைத்து என்ன செய்ய வேண்டும் என்று கூற உன் மனதில் குறிக்கோளாக வைத்து செய்ய வைப்பான். 

அதனால் தெரிந்து கொள்ளுங்கள். உலகம் போலியானது என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே இருக்க்கின்றேன்.

தர்மம் செய்ய மறந்து விடாதீர்கள்.எங்கு காசுகள் அப்பனே நடமாடுகின்றதோ யாங்கள் சத்தியமாக அங்கு இருக்க மாட்டோம் சொல்லிவிட்டோம்.

திருத்தலம் முதலில் உன் மனதில் பின் சரியாகவே சமநிலைப்படுத்தி அமைதியாக தியானங்கள் செய்து இறைவனை உன் மனதில் வைத்து அங்கேயே பின் திருத்தலத்தை அமைத்தால் நிச்சயம் இறைவன் அது போலவே எதை என்று  உன் எண்ணம் போலே ஆகட்டும் என்று சொல்லி விடுவான் அப்பனே. ( உங்கள் மனதிலேயே நீங்கள் விரும்பும் வண்ணம் இனைவனுக்கு திருத்தலம் அமைக்கும் மகா சூட்சும அருள் வாக்கு. இந்த பகுதியை மூன்று முறை படிக்கவும் ) 

இறைவனை வணங்கினாலும் கஷ்டங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றது.இறைவன் மிகப்பெரியவன். 

அதனால் (இறைவனை) நெருங்குவது சாதாரணமில்லை. அப்படி நெருங்க நெருங்க, மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 

துன்பங்கள் வரும் என்பேன். பின் நெருங்க நெருங்க நிச்சயம் அத்துன்பங்கள் பொறுத்துக்கொண்டிருந்தால் இறைவனை நெருங்கிவிட்டாலே இறைவன் பார்த்துக்கொள்வான் உங்கள் வாழ்க்கையை. செப்பிவிட்டேன் அப்பனே. ஆனாலும் அப்பனே பாதியிலேயே திரும்பி வந்து விடுகின்றீர்கள். ஒன்றும் நடக்கவில்லை என்று. 

இங்குதான் அப்பா கஷ்டங்கள் மீண்டும், மீண்டும். இறைவன் எங்கு இருக்கின்றான் என்பவை எல்லாம் யாங்கள் தெரிவிப்போம் வரும் காலங்களில். யாருக்கும் தெரியாதப்பா. யாங்கள் சொல்வோம் எக்கிரகத்தில் (இறைவன்) இருக்கின்றான்.  அங்கே எப்படி இருக்கின்றான். தேவாதி தேவர்கள் எப்படி எல்லாம் வாழுகின்றார்கள். பிரம்மா எங்கிருக்கின்றான் என்பவை எல்லாம் யானே எடுத்துரைப்பேன் உங்களுக்கு. 

முதலில் தெரிந்து கொண்டு வணங்கினால்தான் உத்தமம். தெரியாமல் வணங்கினால் ஒன்றுமே லாபம் இல்லை.

தெரியாமலேயே வாழந்து வருகின்றீர்கள். அதனால் தெரிந்து தெரிந்து வாழுங்கள். தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். (வாழ்வு) மேன்மைகள் பெறும். நீங்கள் எதையுமே கேட்கத்தேவை இல்லை. உங்களை படைத்தவன் இறைவன். அவனுக்கு தெரியாதா அப்பா? தெரியாதாப்பா எதை என்றும் கொடுக்க இதனை பல வழிகளில் கூட யான் எடுத்து உரைத்துவிட்டேன். 

மீண்டும் என்னிடத்தில் கேட்ப்பது.  இதைத்தா , அதைத்தா என்றெல்லாம். ஆனாலும் அப்படி கேள்விகள் கேட்பதும், அப்பனே (பதில்) சொல்வதும் தவறுகள். உந்தனுக்கு எந்நேரத்தில் எதைக்கொடுக்க வேண்டும். ஏற்க்கனவே இறைவன் அழகாகவே குறித்து வைத்திருக்கின்றான். இதனால் அப்பொழுது அனைத்தும் நடக்குமப்பா. 

ஆகையால் அதுநாள் வரையில் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அதன் முன்னே முந்திச்சென்றால்தான் கஷ்டங்களப்பா. 

ஆனாலும் எங்கள் வழியில் வந்துவிட்டால் அது எப்பொழுது நடக்கும் என்பவை எல்லாம் யாங்கள் நிச்சயம் தெளிவு படுத்துவோம். 

சொல்லிவிட்டோம் அப்பனே.அதை தெரியாமல் சுற்றிக்கொள்ளாதீர்கள் அப்பனே. 

வாழ்க்கையை வீனாக்கிக்கொள்ளாதீர்கள். அங்கும் இங்கும் திரிந்தும் மனிதரிடத்தில் மறை பொருளை யார் ஒருவன் நம்புகின்றானோ நிச்சயம் அவன் வாழக்கை சிறப்படையும் சொல்லி விட்டேன். 

இதை பல வாக்குகளிலும் கூட யான் தெரிவித்துக்கொண்டேதான் வருகின்றேன்.

நலன்களாக மறைமுகப்பொருள் யார்? இறைவனே. 

ஆனால் இறைவன் இருப்பதை மறந்து விட்டு மனிதன் வழியில் சென்றடைந்தால் ஒருநாள் நிச்சயம் பள்ளத்தில் விழவேண்டும் சொல்லிவிட்டேன். ஆனால் இறைவன் மறைமுகமாக இருக்கின்றான். அவனை நம்பினால், பள்ளத்தில் விழுந்தாலும் எழுந்து விடுவீர்கள். 

ஆனால் மனிதனை நம்பினால் நிச்சயம் பள்ளமப்பா. யாரும் கடைசியில் காப்பாற்றக்கூட ஆள் இல்லாமல் போகும். ஆனால் மீண்டும் மனிதனிடத்தில் சென்றால் நீங்கள் இப்படி சொன்னீர்களே யான் செயதேனே என்றால் , (அவன் உடனே ) யான் என்ன செய்வது உன் கர்மா என்று ஒரே அடியில் அடித்து விடுவான். 

அதனால் மனிதன் ஏமாற்றுக்காரனப்பா.புரிந்து கொள்ளுங்கள்.

இதை தெரிந்து கொண்டாலே ஏன் பக்தியை செலுத்த வேண்டும்? எதற்காக? அனைத்தும் காசுகளுக்காகத்தானப்பா. ஆனாலும் அப்பனே இறைவன் யார் மனதில் தங்கி இருக்கின்றான் என்றால் காசுகளுக்காக ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே. ஆனால் காசுகளுக்காக ஆசைப்பட்டால் மனதில் முழுவதும் அழுக்குகளாக இருக்கும். 

அப்பனே யார் ஒழுவன் காசுகளுக்காக ஆசைப்படாமல் வாழுகின்றானோ அவன் மனதில் இறைவன் தங்கி இருப்பான் அவ்வளவுதான்.

ஏழ்மையில் கூட மனிதர்கள் வாழத்தெரியாமல் கூட வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதனால்தான் முதலில் என் பக்தர்களைக்கூட எப்படி எதற்காக செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ( யான் சொன்னதை) அதை நீங்கள் செய்திட்டு்வந்தாலேயே உங்களுக்கு வாழ்க்கை யான் தருவேன் அப்பனே. 

அனைத்தும் தருவேன். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் நல்லது செய்து கொண்டே இருங்கள் அப்பனே. அவ்நல்லவை நிச்சயம் உங்களை காக்கும் என்பேன் அப்பனே. இவ்வுலகத்தில் யாரும் காக்க மாட்டார்கள் சொல்லிவிட்டேன் அப்பனே. உயிர் பிரியும் நேரத்தில் உணர்க. இறைவன்தான் வருவான் அப்பா. உந்தனுக்கு அதைச்செய் இதை செய் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றானே அவன்கூட வரமாட்டான் அப்பா. அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள் நீங்கள் ( அவன் சொல்வது அனைத்தும் ) பொய்கள் என்று அனைத்தும் கூட. 

அதனால் தெரிந்து கொள்ளுங்கள். இறைவனே மெய் என்று இறைவனை நாடி நாடி சென்றால் இறைவன் வலங்களாக அதாவது திருத்தலம், திருத்தலமாகவே இறைவன் சென்று கொண்டே இருக்கின்றான். யான் காண்பிப்பேன் இறைவன் எங்கு இருக்கின்றான் என்று்கூற. 

அங்கு சென்று (இறைவனை) ஏதாவது ரூபத்தில் அப்பனே நீங்கள் பாரத்துக்கொள்ளலாம். உங்கள் கர்மங்கள் அழிந்துவிடும் என்பேன் அப்பனே. இதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். உயிர் பிரியும்போது யாரும் இருக்கமாட்டார்கள் அப்பா. யாங்கள்தான் இருப்போம். அப்பொழுது அவ்ஆன்மா எங்களிடம் ஏங்கும். ஐய்ய்யோ இப்படி எல்லாம் செய்து விட்டேனே. இப்படி எல்லாம் தெரியாமல் வாழந்து விட்டேனே என்ன லாபம் என்று எங்களிடத்தில் வரும்ப்பா. காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என்றெல்லாம். 

அப்பனே யாங்கள் எப்படியப்பா காப்பாற்றுவது? அப்பனே நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. நீங்கள் நன்மையாக செய்திருந்தாலே கூட அவ் ஆன்மாவை எப்படி பக்குவப்படுத்து்வேண்டும் என்பதை எல்லாம் இறந்த பிறகு அவ்ஆன்மாவிற்க்கு தெரியுமப்பா. உயிர் போய் விட்டதே என்று பந்த பாசங்களோடு அப்பனே அலை பாயுமப்பா. எதை என்று கூற நோக்கி நோக்கி அலைபாயுங்களப்பா. 

எதை என்றும் தெரியாமல், எவை என்றும் புரியாமல் அப்பனே பாவம் அப்பா அவ் ஆன்மா. எதை என்று அறிய அறிய ஒரு ஆன்மா, பிறவி எடுக்க துடிக்கும் , இன்னொரு ஆன்மா இறைவனை நோக்கி (செல்ல) துடிக்கும். இவை இரண்டுமே கர்மா இருந்தால் அப்பனே செல்லுபடி ஆகாதப்பா. அலைந்து திரிந்து பாச பந்தங்களோடு அப்பனே எவ்வாறப்பா அவ்ஆன்மாக்களும் சில சில வழிகளில் கூட விடுதலை கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே. 

எங்களால் செய்ய முடியாதது அப்பனே மனிதனால் செய்ய முடியாதப்பா பொய்களப்பா பொய்கள். இக்கலியுகத்தில் இன்னும் திருடர்கள் வருவார்களப்பா. யான் அகத்தியன், யான் இறைவன் என்றெல்லாம் பொய்கூறி யான் (பரமகுரு, பரமஞானி, பரமயோகி்..…) பரமசித்தன் எதை என்று கூற யான் சொன்னால் அனைத்தும் நடக்கும் என்றெல்லாம் கர்வம் மிகுந்து பின் பொய் பேசுவானப்பா. அவ் பொய்பேசுபவனிடத்தில் அப்பனே ஒன்றுமே இருக்காதப்பா. 

சொல்லிவிட்டேன். ஏற்கனவே அவன் கர்மத்தில் இருக்கின்றான். நீங்கள் அவனிடத்தில் சென்றால் (உங்களுக்கு) கர்மாதானப்பா. ஆனால் யான் அவனிடத்தில் சென்றேனே. ஒன்றும் நடக்கவில்லை என்று பிதற்றக்கூடாது. பிதற்றக்கூடாது. சொல்லிவிட்டேன். 

என் பக்தர்கள் யாருக்காவது ஒருநாள் அனுதினமும் ஏதாவது நன்மைகள் செய்து கொண்டே இருங்கள். யான் பார்த்துக்கொள்கின்றேன். உங்களுக்கு கஷ்டம் கொடுத்ததனால்தான் நீங்கள் என்னிடத்தில் தேடி வந்திருக்கின்றீர்கள் அப்பனே. அப்படி கஷ்டமே இல்லை என்றால் அப்பனே நீங்கள் வந்திருக்க மாட்டீர்கள் என்பேன் அப்பனே. தன் வேலையை பார்த்திட்டு சென்றிருப்பீர்கள் என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே இறைவனே சில சோதனைகள் வைத்து தன்பால் அப்பனே அனைத்துக்கொள்வது சிறப்பு. 

அதனினும் சிறப்பு தான,தர்மங்களப்பா. 

அதனால் நிச்சயம் என்னை சரண்டைந்தவர்கள் அனுதினமும் யாருக்காவது உதவிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். 

சொல்லிவிட்டேன் அப்பனே. அப்படி செய்யாவிடில் துன்பம் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. 

அப்பனே அதாவது பின் நோய்கள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. 

அப்பனே (உங்கள் வாழ்க்கை) சொர்க்கமாக்க வேண்டும். எப்படி ஆக்கவேண்டும்? அதை எங்களால் மட்டுமே முடியும் சொர்கத்தை. 

எங்கள் பின்னே வந்தால் சொர்க்கத்தையும் காட்டுவோம். நரகத்தையும் காட்டுவோம். ஆனால் சொர்கத்தை காட்டிவிட்டு  நரகம் இப்படித்தான் என்று நீங்கள் பார்த்து பயந்து விடுவீர்கள்.பொய் சொன்னால் என்ன தண்டனை என்பதை எடுத்துரைக்கின்றேன். பொய் சொல்லிக்கொண்டு இருந்தால் பின் தலைவலி வந்து கொண்டே இருக்கும். கடைசியில் பார்த்தால் உண்ணக்கூட முடியாதப்பா. 

அப்பனே இது போல பல பல மனிதர்கள் பக்திக்குள்ளேவே நுழைந்து விட்டு பொய் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்பொழுது வாழ்க்கையை பாருங்கள். கடைசியில் வாய் கூட பேச முடியாமல் போகும். அப்பனே எவை என்று கூற (அவனால்) தின்பதற்க்கு கூட ஒழுங்காக முடியாதப்பா. இதனால் இறைவனை குற்றம் சொல்வதாம்? இதை, அதை என்று புரியாமல் கூட இப்படி செய்தேனே என்பவை எல்லாம். தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே. 

ஏன், எதற்காக இவ்வுலகத்தில் பலபேர்கள் இருக்கின்றார்கள். சனியவன் இருக்கின்றானே அவனை யாராலும் அடக்க முடியாதப்பா. ஏனென்றால் ஈசனிடமே (ஈஸ்வர) பட்டம் பின் “ஈசனாரே!!! நிச்சயம் யான்  தண்டனைகள் பின் கொடுத்தே தீருவேன் மனிதர்களுக்கு. ஏனென்றால் மனிதன் நிச்சயம் ஒழுங்காக வாழ பின் அனைத்தும் கொடுத்தும் கூட அதை சரியாக (மனிதர்கள்) பயன்படுத்தவில்லை. இதனால் நிச்சயம் யான் கஷ்டங்கள் கொடுப்பேன்” என்று சனிபகவான் சபதம் ஏற்று அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கூட கஷ்டங்கள் கொடுத்து திருத்த வழி பார்க்கின்றான். ஆனால் (மனிதர்களை சனிபகவான்) திருத்தி திருத்தி (நல்ல தர்ம வாழ்வு) கொடுத்துவிட்டால் அனைத்தும் லாபங்கள்தான். 

அதனால் முதலில் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. தவறை செய்யாதீர்கள். முதலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். அப்பனே இப்படி தேர்ச்சிகள் பெற்றுக்கொண்டே இருந்தால்தான் அனைத்தும் தெரியும்ப்பா. 

ஏற்க்கனவே யான் தெரிவித்து விட்டேன் அப்பனே. முதல் வகுப்பிலே இருந்து கொண்டு, யான் உயர் கல்வி தேர்ச்சி பெற வேண்டும் என்றால் எப்படியப்பா உங்களால் முடியும்?. 

அதனால்தான் கஷ்டங்கள். 

எதை என்றும் அறிய அறிய பின் (ஊர் சுற்றித்) திரிவது, இறைவனை வணங்குவது, தின்பது, உறங்குவது இப்படியே வாழ்க்கை போகும் என்றால் அப்பனே அப்பொழுது நீ மனிதனாக எப்பொழுதுதான் வாழப்போகின்றாய் அப்பனே?.

தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே தெரியாமல் அப்பனே வீணடித்து, வீணடித்து மீண்டும் மீண்டும் பிறப்புகள் நுழைந்து கஷ்டங்கள் சேர்த்துக்கொள்ளாதீர்கள். 

இப்பொழுது அனைவருமே அனுபவித்து வந்திருக்கின்றீர்கள். அனுபவம் கூட ஏராளம். 

எவ்வளவு கஷ்டங்கள் அப்பனே. எவ்வளவு துன்பங்கள் என்பேன். 

இவ்வாழ்க்கை மீண்டும் தேவையா? சொல்லுங்கள். தேவை இல்லை என்பேன் அப்பனே யான். 

இதனால் என்னிடத்தில் வந்தால் முதலில் உங்களுக்கு முதலில் என்ன கர்மா இருப்பது என்பதை யான் உணர்ந்து விடுவேன். அதை முதலில் போக்க, மறு பிறவிக்கு எடுத்துச்செல்ல (விட) மாட்டேன். ஆனால் யாராவது ஒருவன் அனைத்தும் எந்தனுக்கு  கொடு என்று சொல்லிக்கொடுங்கள் ( கேளுங்கள்) , (யான் உடனே) கொடுத்து விடுகின்றேன். ஆனாலும் அப்பனே (உங்களுக்கு) அடுத்த பிறவி, அடுத்த பிறவி என்று போய் விடுமப்பா. அதனால்தான் சிந்தித்து யான் இங்கிருக்கின்றேன் நீங்கள் அங்கிருக்கின்றீர்கள் என்பது தெளிவாக அதனால் தான் யார்யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதைத்தான் கொடுப்பேன். 

நீங்கள் கேட்டாலும் யான் கொடுக்கப்போவதில்லை. ஏன்? எதற்க்காக? அப்பனே ஒரு தந்தையிடம் எதை என்றும் அறிய அறிய பின் போதைப்பொருளை கொடு என்று தன் மகன் கேட்க்கின்றான். (அந்த மகனின்) தன் தந்தை கொடுத்து விடுவானா என்ன?. நிச்சயம் (தன் மகன்) கெட்டுவிடுவான் என்று கொடுத்து விட மாட்டான் அப்பனே. 

அதே போலத்தான் அப்பனே நீங்கள் எதை பின் கேட்டுள்ளீர்களே (கர்மாவை- பணம், தொழில், பதவி முதலிய…) கர்மத்தை கேட்டுள்ளீர்கள் அனைவருமே. அதை யான் கெடுத்து அதாவது கொடுத்து விட்டால் நீங்கள் கெடுத்து பின் குட்டிச்சுவர் ஆக்கி விடுவார்கள் என்பார்களே அதுபோல் நீங்கள் ஆக்கி விடுவீர்கள். அதனால் நீங்கள் மட்டும் கெடுவதில்லை , அப்பனே உன் இல்லத்தவளையும் கூட உன் பிள்ளைகளையும் கூட உன்னை சார்ந்தவர்களையும் கூட நீங்கள் எவை என்று (உங்களை) அறியாமல் (கெடுத்துவிட்டு) கெட்டுவிட்டு சென்று விடுவீர்கள். ஏன்? எதற்க்காக புரிந்து கொண்டீர்களா. 

இவ்அகத்தியன் ஒன்றைக்கொடுத்தால் பின் மீண்டும் வாங்கிக்கொள்ளவேமாட்டான். பின் எதை என்றும் அறிய அறிய பின் ( அகத்தியன் எனது) சிறப்பு இதுதான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே அதை உணர்ந்து உணர்ந்துதான் கொடுப்பேன். அதனால் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன், நீங்கள் என்ன கேட்டாலும் யான் கொடுக்கப்போவதில்லை, அப்பனே. என்னிடத்தில் இருந்து எதையும் எதிர்பார்காதீர்கள். எதிர்பார்க்காமல் (மனதில் ஏதும் எண்ணாமல், கோரிக்கை ஏதும் வைக்காமல் தூய அன்புடன்) வணங்கினால் தான் உத்தமம். 

எதிர்பார்த்து வணங்கினால் அதற்க்கு ஒன்றுமே அர்த்தம் இல்லை. அப்பனே நீ எதிர்பார்ப்புடன் தான் பிறந்தாயா? அப்பனே எதிர்பார்ப்புடன் வளர்ந்தாயா? எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து கொண்டாயா? எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் பெற்றுக்கொண்டாயா? பின் எதிர்பார்த்துத்தான் கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றதா? அப்பனே அதனால் உன் வழியில் சென்று கொண்டே இருங்கள். 

யான் தருகின்றேன் மாற்றத்தை. அவ்வளவுதான் அப்பனே. 

ஓர் தந்தைக்கு தெரியும் அப்பனே தன் பிள்ளையை எப்படி காப்பாற்ற , எப்படி பக்குவங்கள் படுத்தப்படுத்த என்பதெல்லாம். அதனால் அப்படித்தான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன். இதனால் அப்பனே பின் பொய் கூறலாம். அப்பனே அவ்பரிகாரங்கள் செய்தால் இது நடக்கலாம் என்று. இவ்பரிகாரங்கள் செய்தால் அவை நடக்கலாம் என்று. அவ்பரிகாரங்கள் செய்தால் உந்தனுக்கு அனைத்தும் கிட்டும் என்று. இவ் பரிகாரங்கள் செய்தால் திருமணம் நடக்கும் என்று. ஆனால் நடக்காதப்பா நடக்காது. 

எல்லாம் பொய்களப்பா. இதை தெரிந்து கொள்ளுங்கள் முதலில். ஆனால் நடக்கும். ஆனாலும் பின் மீண்டும் கஷ்டங்கள் வந்து விடுமப்பா. ஆனாலும் பின் மீண்டும் ஓடி ஒடி அங்கு ( பரிகாரம் செய்ய ) சென்றுவிடுவீர்கள். இதுதான் அப்பா உங்களுடைய தரித்திரம்.அதனால் தெரிந்து கொள்ளுங்கள். 

இதனால் நிச்சயம் அகத்தியன் இருக்கின்றான். அகத்தியன் பார்த்துக்கொள்வான். என் தந்தை இருக்கின்றான், என்னை பக்குவப்படுத்துவான் என்றெல்லாம் நீங்கள் உணர்வீர்கள். 

ஏன்? எதற்க்காக இவ்வளவு நேரம் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றேன். 

அனைவருக்குமே கஷ்டங்கள்தானப்பா. அதனால்தான் ஓடி ஒடி இங்கு (மதுரை) வந்து உட்கார்ந்துவிட்டீர்கள் அப்பனே. உண்மை நிலையை அறியுங்கள். உண்மை நிலை அறியாவிடில் துன்பம்தானப்பா. 

உங்கள் முதுகின் பின்னாலே துன்பத்தை (கர்மாவை) வைத்துக்கொண்டு சென்று கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் அத்துன்பமும் உங்கள் பின்னாலே வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் அதற்க்கு ஒருவனும் கூட அப்பனே லாயக்கு இல்லாதவன். (யாங்கள் மனிதர்களுக்கு பல முறை) சொல்லிச்சொல்லி (மனிதர்கள்) மீண்டும் மீண்டும் (கர்ம) துன்பத்தில் நுழைந்து நுழைந்து, அப்பனே அத்துன்பத்தை முதலில் இறக்கி வையுங்கள். 

எப்படி இறக்க வேண்டும் என்று யாராவது கேட்டானா? யாரும் இல்லையப்பா? ஒருவொருவனுக்கும் இன்னும் பொருள் தேவை, இன்னம் பணம் தேவை, இன்னும் புகழ் தேவை, இன்னும் என்னென்னவோ தேவை அப்பனே. அனைத்தும் கொடுத்து விட்டால் இறைவன் எதற்கப்பா? கூறுங்கள் நீங்களே அப்பனே. 

அதனால் இனிமேலும் என்பக்தர்கள் சொல்லிக்கொடுங்கள் அனைவருக்குமே அப்பனே. 

“யாருக்காவது , ஒரு உயிருக்காவது அப்பனே நன்மை  செய்ய வேண்டும் அனுதினமும்” என்று கூற யானே உங்களிடத்தில் வந்து இச்சுவடியை (மும்மூர்த்திகளால் ஆசிர்வாதம் பெற்ற உலகின் ஒரே ஜீவநாடியை ) வைத்து எதை என்று அறிய அறிய உங்களுக்கே வாக்குகள் தெரிவிக்கின்றேன் நன்முறைகளாக. ( அகத்திய பிரம்ம ரிஷிகள் பக்தர்கள் இந்த உத்தரவை அவர்கள் சிரசில் ஏற்று குறைந்த பட்சம் 1008 பேர்களுக்காவது  நேரில் எடுத்து கூறுங்கள். அதிகம் முடிந்தவரை உலகெங்கும் இந்த மகத்தான நல் வாக்கை எடுத்து சொல்லுங்கள்). 

பிழைத்துக்கொள்ளுங்கள். பிழைக்கத்தெரியாமல் வாழுகின்றீர்களே என்பதுதான் சித்தர்களுக்கும் கூட ஏக்கம். 

அதனால்தான் எப்படி இவர்களை வாழ வைப்பது, எப்படி என்பதை எல்லாம் யாங்கள் காட்டுக்குள்ளே சென்று தவங்கள் மேற்க்கொண்டு அப்பனே இறைவனை எப்படி என்பதை கூட சித்தர்கள் பலபேர் சொல்லிவிட்டார்கள் ஏற்கனவே இறைவன் எங்கிருக்கின்றான் என்பது தெரியாமல் யாங்கள் படாதபாடுகளா? 

யுகங்கள் யுகங்களாக பட்டு பட்டு இறைவன் எங்கிருக்கின்றான் என்பதை எல்லாம் தேடி அலைந்து, கடைசியில் பார்த்தால் அப்பனே இப்பொழுது யான் சொல்லமாட்டேன்.

அப்பனே பின்பற்றிக்கொள்ளுங்கள். வாழ கற்றுக்கொள்ளுங்கள்.  அப்பனே அனைத்தும் தெரிவிக்கின்றேன். இறைவன் எங்கிருக்கின்றான் என்பதைக்கூட சொல்லிவிட்டால் ஆனால் சொல்லி விடுகின்றேன் பொறுத்திருந்தால் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன். அப்பனே யான் தெரிவித்து விட்டேன். 

இதனால் நண்மையை செய்யுங்கள் எதையும் எதிர்பார்க்காமல். அனைவருமே கர்மத்தை எதை என்று கூற பெட்டியில் சேமித்துக்கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் இது என்ன செய்யும் என்பதை எல்லாம் யாருக்குமே தெரியவில்லை. 

ஏன் திருத்தலங்கள் இவ்வளவு இருக்கின்றன?. ஏன் அமைக்கவேண்டும்? ஏன் இவ்தேசத்திலே இவ்வளவு திருத்தலங்கள் இருக்கின்றது என்பதை யாராவது ஒருவன் பின் அறிந்திருக்கின்றானா? நிச்சயம் இல்லையப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன். 

நீங்கள் கஷ்டம் என்று வந்து விட்டீர்கள். ஆனாலும் உங்கள் கீழே எத்தனைபேர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை தெரியுமா அப்பனே? ஆனால் இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா நீங்கள் சுய நலவாதிகள் என்று கூட. அப்பனே இச்சுயநலவாதிதான் வேண்டாம்ப்பா. 

எந்தனுக்கு அவை வேண்டும், இவை வேண்டும்.அப்பனே உந்தனுக்கு கீழே உள்ளவர்களை யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். 

அப்பனே தானாகவே நீ முன் வந்து விடுவாய் அப்பனே. இதனால் தனக்காக வேண்டும் இன்னும் அனைத்தும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். இன்னும் படிப்புக்கள் வேண்டும். இன்னும் எதை எதையோ வேண்டும் என்று நீ கேட்டுக்கொண்டிருந்தால் கூட இறைவன் தர மாட்டான் அப்பா. 

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுபோனாலும் பரவாஇல்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில்  இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே. (வணக்கம் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களே, மேலே சொன்ன இந்த வாக்கின் படி உலகைக்காக்கும் இறைவன் பகவான் மகாவிஷ்ணுவான நாராயணரே மதுரையில் தொழுநோயால் வாடும் எழை எளியோர்களுக்கு சேவை செய்யும் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் ஒருவரிடம் மதுரை பசுமலையில் உள்ள அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் கை ஏந்தி யாசகம் கேட்டு உணவு உண்டார். அந்த மகத்தான நிகழ்வின் பதிவு கீழே உங்களுக்காக

https://siththanarul.blogspot.com/2022/02/1081.html)

இதனால் ஓடி ஓடிச்சென்று மக்களுக்கு கட்டாயம் உதவுங்கள். இறைவன் உங்களை நோக்கி கட்டாயம்  வருவார். தான் எப்படிப்போனாலும் கவலை இல்லை, பிறர் வாழ வேண்டும் என்ற உங்கள் தன் சுய நலம் அற்ற நல் மனமே இறைவனை உங்களிடம் வர வைக்கும். 

குரு வாக்கை ஏற்று பிறர் நலம் காண்பதே உங்கள் அனுதினம் பூசை ஆகட்டும் 

என் பக்த்தர்கள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் சொல்லிவிட்டேன். 

இதனால் சுவடிகளை வைத்து வைத்து அப்பனே ( அனைவரையும் ) ஏமாற்றி ஏமாற்றி அப்பனே சித்தர்களே இல்லை (என்ற) நிலமைக்கு அதாவது இன்னும் இன்னும் அப்பனே சித்தன் ஏதும் சொல்லவில்லையே. இன்னும் சித்தன் வரவில்லையே என்பதை எல்லாம் பொய்களாக்கி அப்பனே அவை செய்தால் இப்பரிகாரம் செய்தால் காசுகள் பெருக்கிக்கொண்டு அவன்தனும் கர்மத்தை சேரத்துக்கொண்டு, மற்றவர்களையும் கர்மத்தில் விழ வைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றானே மனிதன் அப்பனே மிக அறிவாளியப்பா. 

மனிதனப்பனே, பொய்கள் சொல்வதில் அறிவாளியப்மா, கெட்டிக்காரனப்பா மனிதன். இதில் யான் இப்படித்தான் யான் சொல்ல வேண்டும். மீண்டும் சொல்கின்றேன் மனிதன் எதில் கெட்டிக்காரன் என்றால் பொய் சொல்வதில். நடிப்பதில். பக்தியை செலுத்தி நடிப்பதில் மிக வல்லவனப்பா. வல்லவனுக்கு ஒன்றும் உதவாதப்பா. ஏன், எதற்காக என்றால் அதனால்தான் சொல்லிவிட்டேன்.

என் பக்த்தர்களுக்கு முதலில் பக்குவத்தை ஏற்ப்படுத்த வேண்டும்.பக்குவங்களே இல்லை அப்பா. அவ்பக்குவங்கள் வராவிடில் யான் என்ன சொன்னாலும் நடக்காதப்பா விதியில் உள்ளதுதான் நடந்திடுமப்பா. அப்படி என்றால் கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்குமப்பா. 

அதனால் யான் சொல்லியவற்றை சரியாகவே இறைவன் மனிதர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கின்றான் என்று கூற அப்படி வாழந்தால்தான் விதியும்கூட மாறுமப்பா, மாறும்ப்பா. 

அப்படி இல்லை என்றால் யான் என்ன சொல்லிக்ககொண்டிருந்தாலும் புரோஜனமில்லையப்பா. 

அப்பனே பல வழிகளிலும் கூட பல தொண்டுகள் என்னால் பல பல வழிகளிலும் கூட , அப்பனே பல பல யுகங்களில் கூட ஆற்றி ஆற்றி மனிதனை திருத்தி உள்ளேன். ஆனால் கலியுகத்தில் இருக்கின்றானே மனிதன் பொய் சொல்வதில் அப்பனே பின் அறிவுள்ளவனப்பா. மற்றவைகளில் அறிவில் பின் கஷ்டங்கள் கொடுக்காமல் என்னால் நிச்சயம் திருத்த முடியாதப்பா. 

கஷ்டங்கள் கொடுத்து கொடுத்துத்தான் யான் நிச்சயம் திருத்த்துவேன் சொல்லிவிட்டேன். 

இதை நிச்சயம் அனைவரையும் அதனால்தான் அப்பனே யானே இங்கு உங்கள் அனைவரையும் அழைத்தேன் இங்கு. ( இந்த வாக்கு 4.9.2023 அன்று மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் வீட்டில் உரைத்த போது 50க்கும் மேற்ப்பட்ட பல அடியவர்கள் வந்திருந்தனர்). ஏனென்றால் நிச்சயம் இதை (இந்த அதி முக்கிய நாடி வாக்கு அதனை யான் உங்களுக்கு) தெரிவித்து அப்பனே மற்றவர்களுக்கும் பின் நீங்கள் தெரிவிக்க வேண்டும் அப்பனே. 

மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்கின்றேன். ஓர் நாளைக்காவது, ஓர் வேளையாவது நீ என்ன நண்மைகள் இருக்கின்றாய் என்பதை கூட நீ யோசிக்க வேண்டும். 

அப்போதுதான் இறைவன் உந்தனுக்கு நண்மை செய்வான். 

பின்பு நீயே (யாருக்கும்) நண்மை செய்யவில்லை உந்தனுக்கு ஏன் இறைவன் நண்மை செய்ய வேண்டும் கூறுங்கள் அப்பனே. 

இவை எல்லாம் நிச்சயம் தெரிவித்தாலே அப்பனே மனிதனுக்கு புரியாததை அப்பனே நீங்கள் தெரிவித்தாலும் அதனுடனும் கர்மா என்பேன் அப்பனே. 

இங்கு ஒருவன் அப்படித்தான் என்பேன் அப்பனே. கர்மா சேர்த்துக்கொண்டிருக்கின்றான் அப்பா.எவை என்று கூற இதில் தர்ம காரியங்கள் யான் செய்தேனே என்று. இல்லையப்பா. பின் அனைத்தும் கர்மாக்கள் அப்பனே. 

இனிமேலும் நிச்சயம் இதை ( மதுரையில் உரைத்த இந்ந நாடி வாக்குகளை பிறரிடம்) செப்பு அப்பனே. 

யான் சொல்லியதை (கேட்டு, உணர்ந்து) அப்பனே மனிதன் மாறட்டும். திருந்தட்டும். (தர்மத்தின் கரம் ஓங்க, தர்மம் செழிக்க, இறைவன் மகிழச்சி கொள்ள, சித்தர்கள் கருணை மழை என்றென்றும் மனிதர்களிடையே பொழிய - அனைத்து அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களும் இந்த நல் வாக்கினை பலருக்கும் அவசியம் எடுத்து சொல்லுதல் அவசியம். பல தளங்களில் இந்த வாக்கினை பதிவு இடுங்கள் என சிரம் தாழத்தி அனைத்து நல்உள்ளங்களை வேண்டிக்கொள்கின்றோம்) 

மனிதன் புத்திகள் வளரட்டும். யான் ஒன்றைச்சொல்கின்றேன். வளர வளர புத்திகள் வளர வேண்டும் ஆனால் புத்திகள் வளர்வதில்லையே.

ஆனால் கர்மங்கள்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்க கஷ்டங்கள் இல்லாமல் எப்படியப்பா தடுக்க முடியும்? 

அதனால் நன்கு உணர்ந்தீர்கள். அதனால் உங்கள் அனைவரையுமே யான் பார்த்து ஆசிகளும் கொடுத்திருக்கின்றேன் அப்பனே. 

இதனால் அப்பனே சேவைகள் அகத்தியனை நம்பினால் அப்பனே அகத்தியனை மட்டும் நம்புங்கள் அப்பனே. 

பின் (பிற ஏதும் அறியாத மனிதர்கள் வாரத்தைகளை) நம்பிவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நரகம்தான் அப்பனே. 

நரகத்தில் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் வரும் வரும் காலங்களில். ஏனென்றால் என்பக்தர்கள் அப்பனே பல யுகங்கள் அனைத்தும் தெரிவித்து எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள். ஆனால் கலியுகத்தில் அவ்வாறு இல்லையப்பா. அதனால்தான் துண்பங்கள். 

அதனால் என்பக்தர்களுக்கு வரும் காலங்களில் எப்படி மனிதன் பிறக்கின்றான். எப்படி வாழுகின்றான். எப்படி எல்லாம் கர்மத்தை சேர்த்துக்கொள்கின்றான். மீண்டும் பிறவிக்கு நுழைகின்றான். என்னிடத்தில் அவ்ஆன்மா எப்படி வருகின்றது.அப்பனே இவை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே யான் தெளிவாகவே.

அதனால் நீங்கள் கேட்கலாம் இவ்வுலகத்தில் சிறிதாவது உண்மைகள் இருக்கின்றதா என்று. சத்தியமாக இல்லை அப்பா. அப்பனே நீங்கள் மீண்டும் கேட்கலாம் உண்மையான அகத்தியர் பக்தர்கள் இருக்கின்றார்களா என்று. அப்பனே நிச்சயம் யான் என்ன சொல்வது. சொன்னாலும் யான் என்று நீங்கள் சொல்லிவிடுவீர்கள் என்பேன் அப்பனே. இப்பொழுது சொல்ல மறைமுகமாக பின் சென்று இப்படி சொல்லிவிட்டானே அகத்தியன் என்று நீங்களும் ஏங்கிக்கொண்டு இருப்பீர்கள் அப்பனே.

அதனால் உண்மையை தெளிவடையுங்கள். எதற்க்கும் ஆசைப்படாதீர்கள். சென்று கொண்டே இருங்கள் அப்பனே. கிடைக்கும் அப்பனே அதனால் எதையுமே எதிர்பார்க்காமல் வருவது இரண்டுதான் அப்பனே. 

ஒன்று கர்மா. 

மற்றொன்று அப்பனே நிறுத்தி வைக்கின்றேன் யாராவது ஒருவன் சொல்லட்டும். (இதன்பின் மதுரையில் நாடி வாக்கு கேட்க வந்த அடியவர்களிடம் குருநாதர் கேள்வி பதில் முறையில் மகத்தான மகிமை புகழ் நல் வாக்கு அளிக்க ஆரம்பித்தார்கள். இங்கு அடியவர் என்பது பல அடியவர்களை குறிக்கும். அவர்கள் அருமையான கேட்ட பல கேள்விகள், அதற்க்கு குருநாதர் அளித்த அற்ப்புத வழிகாட்டும் பதில்/கேள்விகள் உங்களுக்கு தனிப்பட்ட நல்ல புரிதல்களை உண்டாக்கும். அனைவரும் வாருங்கள். இந்த மகத்தான கேள்வி பதில் உரையாடல் உள் நுழைந்து ஞான அமுத ரசத்தை நம் அனைவரும் சுவைத்து ஞானத்தெளிவு பெறுவோம்) 

அடியவர்:- புண்ணியம்

குருநாதர்:- அப்பனே, கர்மா என்பது என்ன?

அடியவர்:- நாம்செய்யக்கூடிய பாவ செயல்.

குருநாதர்:- அப்பனே, பாவத்தின் சம்பளம் என்ன? 

அடியவர்:- மரணம். 

குருநாதர்:- அப்பனே, மரணம் வந்து விட்டால் அப்பொழுது என்ன லாபம் என்பேன் அப்பனே. அப்பொழுது எவன் ஒருவன் கஷ்டத்தை அனுபவிப்பது? 

அடியவர்:- அவனுடைய வாரிசுகள். 

குருநாதர்:- அப்பனே, அப்படி இல்லையப்பா. அவனவன் கஷ்டத்தை அவனவன் தான் அனுபவிக்க வேண்டும் என்று யான் சொல்கின்றேன் தீர்மானமாக. 

அடியவர்:- மறுபிறவி எடுத்து (கழிக்க /அனுபவிக்க வேண்டும் )

குருநாதர்:- அப்பனே ஏன் மறு பிறவி எடுக்கின்றாய்?

அடியவர்:- கர்மா மிச்சம் இருக்கு. குருநாதர்:- அப்பனே, இப்பொழுதான் யான் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே அவ்கர்மாவைத்தான் கழிக்க வந்துள்ளீர்களே மீண்டும் ஏன் நீங்கள் பிறவி எடுக்கின்றீர்கள்?

 அடியவர்:- கர்மாவை கழிக்காம பாவம் சேரத்ததால்குருநாதர்:- அப்பனே, சொல்லிவிடுகின்றேன். இங்கு இருப்பவர்கள் அனைவருமே பாவத்தை சேர்த்து வைத்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. 


அகத்திய பிரம்ம ரிஷி 4.9.2023 அன்று மதுரை அடியார்  இல்லத்தில் உரைத்த  முழு நாடி தொகுப்பு. அனைத்து தளங்களிலும் பகிரவும் .


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!சர்வம் சிவார்ப்பணம்!!!!! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

 ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html

மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html


நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

No comments:

Post a Comment