"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 25, 2023

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய குருநாள் பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். நேற்றைய கூட்டு வழிபாட்டில் குருநாதர் அருளிய கோடகநல்லூர் வாக்கினை சிந்தித்தோம். பல ஆண்டுகளாக கோடகநல்லூர் தரிசனம் பெற்று வந்தாலும் இதற்கு முந்தைய பதிவில் குருவின் வாக்கை கொஞ்சம் உணர்ந்து கொண்டோம். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

ஓம் குரு மொழியே வேதம் வேதம்

ஓம் குரு விழியே தீபம் தீபம்

ஓம் குரு பதமே காப்பு காப்பு



அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 2) 

(பகுதி 2 - வாக்கு ஆரம்பம் ) 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

ஒன்றும் முடியாதப்பா.  மனிதன் அப்பனே அதாவது மன்னைத்தான் திங்க வேண்டும் கடைசியில் அப்பனே. உண்மை நிலையில் பின் செய்ய முடியாதப்பா. ஆனால் உண்மை நிலையில் எங்களுக்கு தெரியும் அப்பா. யாங்கள் சொல்லிக்கொடுக்கின்றோம் அப்பனே. எதற்க்காக தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அப்பனே  முதலில் வாழ்க்கையை்பற்றிக்கூட இதனால் தர்மம் செய்ய மறந்து விடாதீர்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் இன்றைய நிலையில் அப்பனே அனைத்தும் பொய் ஆகி விட்டதப்பா. யான் எழுதி வைத்த நூல்கள் எல்லாம் மாற்றி விட்டார்கள் அப்பா. அதாவது சித்தர்கள் எழுதி வைத்த நூல்கள் எல்லாம் மாற்றி விட்டார்கள் அப்பா.  ஏன் மாற்றிவிட்டார்கள் அப்பனே. மனிதன் பின் சரியாக வாழக்கூடாது என்பது எல்லாம். ஆனாலும் யாங்கள் பல பல வழிகளிலும் கூட சுவடிகள் எழுதி வைத்து விட்டோம் அப்பனே. ஆனாலும் அப்பனே அவை எல்லாம் எடுத்துவிட்டு மனிதன் இப்போது கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றான். நிச்சயம் முடியாதப்பா. தோல்வி அடையச்செய்து விடுவோம். 

காசுக்காக சுவடிகளையே விற்று விட்டார்கள் அப்பனே. இதற்க்காக எதை என்று கூற மனிதனும் அப்பனே காசுக்காக இறைவனையும் விற்றுவிடுவார்கள் அப்பா. அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய எல்லாம் பொய் என்று யாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். 

எங்கு காசுகள் அப்பனே நடமாடுகின்றதோ யாங்கள் சத்தியமாக அங்கு இருக்க மாட்டோம் சொல்லிவிட்டோம் அப்பனே.  

கஷ்டங்கள்தான் கொடுத்துக்கொண்டு இருப்போம் அப்பனே. ஆனால் எதற்க்கு கஷ்டம் என்பது கூட தெரியாமல் போய்விடும். அதனால் அப்பனே  புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே. அப்படி வாழ்ந்தாலே போதுமானதப்மா. எவையும் தேவை இல்லையப்பா. 

எதனையும் பின்பற்ற அப்பனே அதனால் திருத்தலம் அப்பனே முதலில் உன் மனதில் அப்பனே அதாவது பின் சரியாகவே சமநிலைப்படுத்தி அமைதியாக தியானங்கள் செய்து இறைவனை உன் மனதில் வைத்து அங்கேயே பின் திருத்தலத்தை அமைத்தால் நிச்சயம் இறைவன் அது போலவே எதை என்று  உன் எண்ணம் போலே ஆகட்டும் என்று சொல்லி விடுவான் அப்பனே. ( உங்கள் மனதிலேயே நீங்கள் விரும்பும் வண்ணம் இனைவனுக்கு திருத்தலம் அமைக்கும் மகா சூட்சும அருள் வாக்கு. இந்த பகுதியை மூன்று முறை படிக்கவும் ) 

இதனால் நீயும் இதனால்தான் அப்பனே எதை என்று அறியாமல், புரியாமல் மனிதன் இப்பொழுது கூட வாழந்து கொண்டிருக்கின்றான். என்ன லாபம்? இறைவனை வணங்கினாலும் கஷ்டங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றது. எதை என்றும் புரியாமல் கூட ஆனாலும் அப்பனே எப்படி வாழவேண்டும் என்பதை  எல்லாம் நிச்சயம் தெரிந்து கொள்ளாமல் , எவை என்றும் புரியாமல் எப்படி வணங்கி வந்தால் இறைவன் காட்சிகள் அளிப்பான் என்பதை எல்லாம் தெரியாமல் வணங்கி வந்து கொண்டிருக்கின்றீர்கள். அதனால்தான் அவ்மூட நம்பிக்கை எல்லாம் ஒழித்திட வேண்டும் என்பதற்காகத்தான் யாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். 

ஆனாலும் யான் ( ஏதும் உங்களுக்கு உரைக்காமல் ) சென்றுவிடலாம். எப்படியாவது செல்லுங்கள் என்று. என்னையே நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள். அதனால் சில பக்குவங்கள் ஏற்ப்படுத்தி ஏற்படுத்தி, ஏற்படுத்தி ஆனாலும் என் பெயரைச்சொல்லியும் எவை என்றும் புரியாமல் கூட அநியாயங்கள், அக்கிரமங்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும் சிறிது நேரம்தான் யான் பொறுத்திருப்பேன். ஆனாலும் பின்பு எவை என்றும் தெரியாமல் கூட அடிகள் விழுந்தால் தாங்கவும் மாட்டீர்கள் என்பேன். ஆனாலும் அதை அறிந்தும் கூட தவறுகள் செய்கின்றார்கள். இதுதானப்பா பெரிய இழப்பு என்பேன் அப்பனே. 

இதனால் இறைவன் மிகப்பெரியவன் அப்பனே. அதனால் (இறைவனை) நெருங்குவது சாதாரணமில்லை என்பேன் அப்பனே. அப்படி நெருங்க நெருங்க, மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். துன்பங்கள் வரும் என்பேன். பின் நெருங்க நெருங்க நிச்சயம் அத்துன்பங்கள் பொறுத்துக்கொண்டிருந்தால் அப்பனே இறைவனை நெருங்கிவிட்டாலே இறைவன் பார்த்துக்கொள்வான் உங்கள் வாழ்க்கையை. செப்பிவிட்டேன் அப்பனே. ஆனாலும் அப்பனே பாதியிலேயே திரும்பி வந்து விடுகின்றீர்கள். ஒன்றும் நடக்கவில்லை என்று. இங்குதான் அப்பா கஷ்டங்கள் மீண்டும், மீண்டும். 

எவை என்றும் அறிந்தும் கூட அனைத்திற்க்கும் காரணம் மிக சக்திகள். அப்பனே அவ்சக்தி அதாவது இறைவன் எங்கு இருக்கின்றான் என்பவை எல்லாம் யாங்கள் தெரிவிப்போம் வரும் காலங்களில். யாருக்கும் தெரியாதப்பா. யாங்கள் சொல்வோம் எக்கிரகத்தில் (இறைவன்) இருக்கின்றான்.  அங்கே எப்படி இருக்கின்றான். தேவாதி தேவர்கள் எப்படி எல்லாம் வாழுகின்றார்கள். பிரம்மா எங்கிருக்கின்றான் என்பவை எல்லாம் யானே எடுத்துரைப்பேன் உங்களுக்கு. முதலில் தெரிந்து கொண்டு வணங்கினால்தான் உத்தமம். தெரியாமல் வணங்கினால் ஒன்றுமே லாபம் இல்லை. இதனால் யான் சொல்கின்றேன் அப்பனே. 

ஆனால் தெரியாமலேயே வாழந்து வருகின்றீர்கள். அதனால் தெரிந்து தெரிந்து வாழுங்கள். தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். (வாழ்வு) மேன்மைகள் பெறும். அப்பனே நீங்கள் எதையுமே கேட்கத்தேவை இல்லை. உங்களை படைத்தவன் இறைவன். அவனுக்கு தெரியாதா அப்பா? தெரியாதாப்பா எதை என்றும் கொடுக்க இதனை பல வழிகளில் கூட யான் எடுத்து உரைத்துவிட்டேன். மீண்டும் என்னிடத்தில் கேட்ப்பது.  இதைத்தா , அதைத்தா என்றெல்லாம். ஆனாலும் அப்படி கேள்விகள் கேட்பதும், அப்பனே (பதில்) சொல்வதும் தவறுகள். 

உந்தனுக்கு எந்நேரத்தில் எதைக்கொடுக்க வேண்டும். ஏற்க்கனவே அப்பனே இறைவன் அழகாகவே குறித்து வைத்திருக்கின்றான் என்பேன். இதனால் அப்பொழுது அனைத்தும் நடக்குமப்பா. ஆகையால் அதுநாள் வரையில் பொறுத்திருக்க வேண்டும் அப்பனே. ஆனால் அதன் முன்னே முந்திச்சென்றால்தான் கஷ்டங்களப்பா. ஆனாலும் எங்கள் வழியில் வந்துவிட்டால் அது எப்பொழுது நடக்கும் என்பவை எல்லாம் யாங்கள் நிச்சயம் தெளிவு படுத்துவோம். சொல்லிவிட்டோம் அப்பனே.

அதை தெரியாமல் சுற்றிக்கொள்ளாதீர்கள் அப்பனே. வாழ்க்கையை வீனாக்கிக்கொள்ளாதீர்கள் அப்பனே. அங்கும் இங்கும் திரிந்தும் அப்பனே மனிதரிடத்தில் மறை பொருளை யார் ஒருவன் நம்புகின்றானோ நிச்சயம் அவன் வாழக்கை சிறப்படையும் சொல்லி விட்டேன். இதை பல வாக்குகளிலும் கூட யான் தெரிவித்துக்கொண்டேதான் வருகின்றேன் அப்பனே. நலன்களாக எதை என்று அறிய அறிய மறைமுகப்பொருள் யார்? இறைவனே என்பேன் அப்பனே. ஆனால் இறைவன் இருப்பதை மறந்து விட்டு மனிதன் வழியில் சென்றடைந்தால் அப்பனே  ஒருநாள் நிச்சயம் பள்ளத்தில் விழவேண்டும் சொல்லிவிட்டேன். ஆனால் இறைவன் மறைமுகமாக இருக்கின்றான். அவனை நம்பினால், பள்ளத்தில் விழுந்தாலும் அப்பனே எழுந்து விடுவீர்கள். ஆனால் மனிதனை நம்பினால் நிச்சயம் பள்ளமப்பா. யாரும் கடைசியில் காப்பாற்றக்கூட ஆள் இல்லாமல் போகும். ஆனால் மீண்டும் மனிதனிடத்தில் சென்றால் நீங்கள் இப்படி சொன்னீர்களே யான் செயதேனே என்றால் , (அவன் உடனே) யான் என்ன செய்வது உன் கர்மா என்று ஒரே அடியில் அடித்து விடுவான் அப்பனே. அதனால் மனிதன் ஏமாற்றுக்காரனப்பா.

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இதை தெரிந்து கொண்டாலே ஏன் பக்தியை செலுத்த வேண்டும்? எதற்காக? அனைத்தும் காசுகளுக்காகத்தானப்பா. ஆனாலும் அப்பனே இறைவன் யார் மனதில் தங்கி இருக்கின்றான் என்றால் காசுகளுக்காக ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே. ஆனால் காசுகளுக்காக ஆசைப்பட்டால் மனதில் முழுவதும் அழுக்குகளாக இருக்கும். அப்பனே யார் ஒழுவன் காசுகளுக்காக ஆசைப்படாமல் வாழுகின்றானோ அவன் மனதில் இறைவன் தங்கி இருப்பான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. ஏன்? எதற்காக?. 

அப்பனே அதனால் இன்னும் இன்னும் ஏழ்மையில் கூட மனிதர்கள் வாழத்தெரியாமல் கூட வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் முதலில் என் பக்தர்களைக்கூட எப்படி எதற்காக செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ( யான் சொன்னதை) அதை நீங்கள் செய்திட்டு்வந்தாலேயே உங்களுக்கு வாழ்க்கை யான் தருவேன் அப்பனே. அனைத்தும் தருவேன். 

அதனால் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் நல்லது செய்து கொண்டே இருங்கள் அப்பனே. அவ்நல்லவை நிச்சயம் உங்களை காக்கும் என்பேன் அப்பனே.  இவ்வுலகத்தில் யாரும் காக்க மாட்டார்கள் சொல்லிவிட்டேன் அப்பனே. 

அப்பனே உயிர் பிரியும் நேரத்தில் உணர்க. அப்பனே இறைவன்தான் வருவான் அப்பா. உந்தனுக்கு அதைச்செய் இதை செய் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றானே அவன்கூட வரமாட்டான் அப்பா. அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள் நீங்கள் அப்பனே ( அவன் சொல்வது அனைத்தும் ) பொய்கள் என்று அனைத்தும் கூட. அதனால் தெரிந்து கொள்ளுங்கள். இறைவனே மெய் என்று இறைவனை நாடி நாடி சென்றால் அப்பனே  இறைவன் வலங்களாக அதாவது திருத்தலம், திருத்தலமாகவே இறைவன் சென்று கொண்டே இருக்கின்றான். யான் காண்பிப்பேன் இறைவன் எங்கு இருக்கின்றான் என்று்கூற. அங்கு சென்று (இறைவனை) ஏதாவது ரூபத்தில் அப்பனே நீங்கள் பாரத்துக்கொள்ளலாம். உங்கள் கர்மங்கள் அழிந்துவிடும் என்பேன் அப்பனே. இதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. உயிர் பிரியும்போது யாரும் இருக்கமாட்டார்கள் அப்பா. யாங்கள்தான் இருப்போம். அப்பொழுது அவ்ஆன்மா எங்களிடம் ஏங்கும். ஐய்ய்யோ இப்படி எல்லாம் செய்து விட்டேனே. இப்படி எல்லாம் தெரியாமல் வாழந்து விட்டேனே என்ன லாபம் என்று எங்களிடத்தில் வரும்ப்பா. காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என்றெல்லாம். அப்பனே யாங்கள் எப்படியப்பா காப்பாற்றுவது? அப்பனே நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html


நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 26.10.2020  - https://tut-temples.blogspot.com/2020/10/26102020.html

 அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 - https://tut-temples.blogspot.com/2023/09/26102023.html

 சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment