அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அனைவரும் நவராத்திரி கொண்டாட்டம் முடித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இந்த ஆண்டு நவராத்திரி வழிபாடு குருவருளால் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நம் தளம் சார்பில் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில், கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் ஆலயம் என நாம் தொண்டு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இவற்றைப்பற்றி நாம் தனிப்பதிவுகளில் விரைவில் காணலாம். இன்றைய பதிவில் அந்த நாள் >> இந்த வருடம் தொகுப்பில் நாளை கோடகநல்லூர் வழிபாடு பற்றி காண உள்ளோம். பதிவின் இறுதியில் சிறப்பு செய்திகளும், 2017 ஆம் ஆண்டு தரிசனமும் தொடர இருக்கின்றோம்.
நாம்
ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க
தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க
செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த
வருடம் தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள்
வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை
ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.
இந்த அந்தநாள்
>> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம்,
அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம் என தொடர்ந்து
வருகின்றோம். இதில் நம்பிமலை தரிசனம் இன்னும் நாம் பெறாது இருந்தோம்.
அப்போது தான் சென்ற ஆண்டில் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் பின்வரும் செய்தி கிடைத்தது.
கோடகநல்லூர்:-
(எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி
இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர
பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று
அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை
பெருமாள் அருளுகிற நாள்)
18/10/2021 - திங்கள் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - பூரட்டாதி/உத்திரட்டாதி நட்சத்திரம்.

அடுத்து 2017 ஆம் ஆண்டு தரிசனப் பதிவுகளை இங்கே தொடர உள்ளோம்.
02/11/2017
(வியாழக்கிழமை) அன்று காலை 10.30 சுபமுகூர்த்தத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத
பச்சைவண்ணப் பெருமாள், தேசிகர் ஸ்வாமிகள் அவர்களுக்கும், கோடகநல்லூர்
கோவிலில், அகத்தியர் அருளால் திருமஞ்சன, அபிஷேக ஆராதனைகள் தொடங்கி, மிக
மிக சிறப்பாக, அகத்தியர் அடியவர்களின் ஏற்பாட்டில் நடந்தேறியது. அங்கு
எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
எல்லோரும் பெருமாள், தாயார், கருடர், தேசிகர், அகத்தியர் அருள் பெற்று
நலமாக வாழ வேண்டும். "இனி நல்லது மட்டும் நடக்கட்டும்" என பிரார்த்தித்துக்
கொள்ளப்பட்டது.
கருடாழ்வார் அலங்காரத்தில்
பெருமாளும், தாயாரும் (உற்சவ மூர்த்திகள்) அபிஷேக பூஜைக்கு முன்
கலச பூஜை
அபிஷேகம்/திருமஞ்சனம்
அபிஷேகத்துக்குப் பின் - பெருமாளும் தாயாரும் - அலங்காரத்தில்
அபிஷேகத்துக்குப் பின் - பெருமாளும் தாயாரும் - அலங்காரத்தில்
தேசிகர் - அபிஷேகத்துக்குப் பின் அலங்காரத்தில்
தீபாராதனை
முகம் மட்டும் வெளியே தெரிகிற அளவுக்கு பூவுக்குள் மறைந்திருக்கும் பெருமாளும் தாயாரும்
அகத்தியப் பெருமானின் அடியவர்கள்
அகத்தியப் பெருமானின் அடியவர்கள்
அந்தநாள்>>இந்த வருடம், கோடகநல்லூரில்
02/11/2017 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது என்பதே உண்மை. இன்னும் அன்று
நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து வந்து சேர்ந்த திகைப்பிலிருந்து அடியேன்
மீளவில்லை என்பதும் உண்மை. அன்றைய நிகழ்ச்சிகளை பற்றி கூறவேண்டுமென்றால்,
இரண்டு மாதங்கள் பின்னே சென்று அவ்வப்போது நடந்த சம்பவங்களை விவரித்தாலே
நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்துவது எளிதாக இருக்கும்.
ஓதியப்பரின் பிறந்தநாள் விசேஷத்துக்குப்பின்
வருகிற அடுத்த, அதுவும் இந்த வருட கடைசி புண்ணிய நாள் என்கிற எண்ணம்
என்னுள் வலுத்தது. பெருமாளின், அகத்தியரின் அருள்/ஆசிர்வாதம் இன்றி எதுவும்
சாத்தியமில்லை என்கிற எண்ணமும் உதித்தது.
அதற்கேற்றார் போல், புரட்டாசி மாதம் வந்தது. அடியேனும் கோடகநல்லூர் பச்சை வண்ணப் பெருமாளிடம் ஒரு பிரார்த்தனையை வைத்தேன்.
"இந்த வருட நான்கு புரட்டாசி சனிக்கிழமையும்,
தங்களை வந்து தரிசித்து, தாங்கள் கோவிலில், பிரகாரத்தில் சுற்று விளக்கு
போடவேண்டும். உங்களுடன் வீதியுலா போகும் போது கூட வரவேண்டும். அதற்கான
வசதியையும், உடலுக்கான சக்தியையும், சூழ்நிலையையும் ஏற்படுத்தி தரவேண்டும்.
அருள வேண்டும்" என்று வேண்டிக்கொண்டேன்.
முதல் சனிக்கிழமை வந்தது. அடியேனும் மிகுந்த
ஆவலுடன் கோடகநல்லூர் சென்றேன், "பெருமாள் ஏதேனும் உத்தரவு தரமாட்டாரா" என்ற
எதிர் பார்ப்பில். தாமிரபரணி நதியை பார்த்தால், நீரே இல்லாமல், ஒடுங்கி
சென்று கொண்டிருந்தது.
"ஹ்ம்ம். நேரம் வரும் போது உனதருளும்
வேண்டும். இருகரை தொட்டு விரிவாக சென்றால் தான் அந்த புனித நாளில் அனைவரும்
ஆனந்தமாக உன்னில் ஸ்நானம் பண்ண முடியும்" என்று வேண்டிக்கொண்டு பெருமாள்
தரிசனத்துக்கு சென்றேன்.
பெருமாள் முதல் புரட்டாசி சனிக்கிழமையின்
கருடசேவை அலங்காரத்தில் அமர்க்களமாக இருந்தார். உள்ளே சென்று அர்ச்சகரிடம்
பூசைக்கான சாமான்களை கொடுத்து, நான்கு மஞ்சள் பொடி பொட்டலத்தையும்
கொடுத்து,
"பெருமாள் பூசைக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
மஞ்சளை நீர் விட்டு குழைத்து பெருமாள் வலது கரத்தில், மார்பில், பாதத்தில்,
தாயார் இருவரின் கரங்களிலும் சார்த்தி பிரசாதமாக தாருங்கள்" என்று
விண்ணப்பித்து பெருமாளை நோக்கி "உமக்கு சுற்று விளக்கு போட இது
வந்திருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தேற பிரார்த்திக்கிறேன்" என்று
வேண்டிக்கொண்டு, விளக்கு போட தேவையான சாமான்களுடன் பிரகாரத்துக்கு வந்தேன்.
முதல் விளக்கு கருடாழ்வாருக்கு. இரண்டாவது
அவருக்கு பக்கத்தில் தூணில் மறைந்திருக்கும் ஆஞ்சநேயருக்கு. பின்
பிரகாரத்தில் இருக்கும் கல் விளக்குகளை ஒவ்வொன்றாக சுத்தம் பண்ணி, விளக்கு
போடத்தொடங்கினேன். இதற்கு முன்னரே, விளக்கு போட்ட அனுபவம் இருந்ததால்,
எப்படியாயினும் தனி ஒருவனாக இருந்து விளக்கு போட, அடியேனுக்கு ஒரு மணி
நேரம் ஆகும்.
அன்றைய தினம் அடியேனை, பெருமாள் தனியாக
விளக்கு போட விடுவதில்லை என்று தீர்மானித்து விட்டார் போல. எங்கிருந்தோ ஓடி
விளையாடிய சிறு குழந்தைகள் பட்டாளம் பிரகாரத்தில் ஓடி வந்து என் அருகில்
நின்று " என்ன சாமி, விளக்கு போடுகிறீர்களா? நாங்களும் உதவி பண்ணலாமா"
என்று வினவினார்.
அடியேனும் சிரித்துக் கொண்டே "அதெற்கென்ன!
உதவி பண்ணுங்கள். ஒவ்வொருவர், ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொண்டு வாருங்கள்.
நான் கேட்க கேட்க தந்துகொண்டே இருக்க வேண்டும்" என்றிட, அனைத்து
குழந்தைகளும் ஒவ்வொரு பொருளை சுமந்துவர, 30 நிமிடத்தில் விளக்கு போட்டு
முடித்தேன். நிதானமாக பெருமாள் சன்னதிக்கு வந்து, "விளக்கு போட்டாயிற்று!
ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி த்யானத்தில் அமர்ந்தேன்.
மனம் ஒன்று பட்டு, மிக மிக லேசானத்தை உணர
முடிந்தது. அனைத்து சப்தங்களும் அடங்கியது. எத்தனை நேரம் அப்படிப்பட்ட
நிலையில் இருந்தேன் என்று தெரியவில்லை.
அமைதியை கலைத்துக் கொண்டு பெருமாளின் உத்தரவு வந்தது. அடியேனுக்கு மிகத்தெளிவாக கேட்டது.
"இந்த வருடம், அந்தநாளில் தேவையான ஏற்பாடுகளை
எனக்காக செய்ய, நீ ஒருவன் தான் தனியாக ஓடப்போகிறாய்" என்று கூறி
ஆசிர்வதித்து, புன்னகைத்தபடி நின்றார்.
மிகத்தெளிவாக கேட்ட அந்த உத்தரவை மனதுள் வாங்கி மறைத்து வைத்துக் கொண்டு, ஒரு விண்ணப்பத்தை அவரிடம் சமர்ப்பித்தேன்.
"அடியேனின் மிகுந்த பாக்கியம், தாங்கள்
அருளியது. இருப்பினும், ஒரு வேண்டுதல். மனம், உடல் இரண்டுக்கும் தேவையான
சக்தியையும், சரியான சூழ்நிலையையும் தாங்கள் அருள வேண்டும். இது மட்டும்
உங்கள் அருளால் இருந்தால், அடியேன் ஓடத்தயார்" என்றேன்.
"அப்படியே ஆகட்டும்" என்ற அவரின் ஆசிர்வாதத்துடன், வெளியே வந்து கோவில் திண்ணையில் அமர்ந்து யோசிக்கலானேன்.
"அதெப்படி இத்தனை தெளிவாக "நீ மட்டும்" என்று
கூறுகிறார். கூட இருக்கிற நண்பர்களுக்கு தெரிய வந்தால், நம்மை தொலைத்து
விடுவார்களே! பெருமாள், "பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி
விடுகிறாரோ? எதற்கும் பொறுமையை கடை பிடித்து, விஷயத்தை வெளியே கசிய
விடாமல், அமைதியாக வேடிக்கை பார்ப்போம்" என்று தீர்மானித்தேன்.
நட்புவட்டாரத்தில் யாரிடமும், இதை பற்றி மூச்சு விடவில்லை. அந்த வாரம்
கருடசேவைக்கு அவருடன் நடந்து வீதியுலா போய்வந்து, அவர் அருள் பிரசாதமான
மஞ்சள் பொடியை இரவு இரண்டு மணிக்கு யாருக்கும் தெரியாமல் பெற்றுக் கொண்டு,
யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
வரும் வழியில்தான் ஞாபகம் வர "அடடா! பெருமாள்
இந்த ஊருக்கு வந்த பொழுது முதல் முறையாக கால் மடக்கி அமர்ந்த இடத்துக்கு,
விளக்கு போட மறந்து போனதே! சே! அடுத்த முறையேனும் அந்த பாக்கியத்தை அருளும்
பெருமாளே" என வேண்டிக்கொண்டு, இனி எந்த காரணம் கொண்டும் விளக்கு
போடும்பொழுது அந்த இடத்தை மறக்கக்கூடாது" என்று தீர்மானித்தேன்.
பெருமாள் "எனக்காக நீ மட்டும் தான் ஓடப்போகிறாய்" என்று சொன்ன பொழுது "இந்த
வேலையாவது கொடுத்தாரே" என்று சந்தோஷம் அடைந்தாலும், ஓடத்தொடங்கிய பின்தான்
ஏற்பாடுகளை செய்வதின் சிரமம் புரிந்தது. அவர் சொன்னது போலவே, என்
நண்பர்கள் பட்டாளம் காணாமல் போய்விட்டது, அல்லது ஏதேனும் ஒரு தகவல்
கொடுத்து விசாரிக்கச் சொன்னால், பதிலே வரவில்லை. அனைவரும் தனிப்பட்ட
வாழ்க்கையில் நிறைய கவனம், நேரம் செலுத்த வேண்டி வந்துவிட்டது.
"சரிதான்! பெருமாள் நம்மை போட்டு பார்க்காத் தீர்மானித்துவிட்டார். இனி
யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை" என்று தீர்மானித்து, ஒரு பட்டியலை
தீர்மானித்தேன். அந்தநாளுக்குத் தேவையானதை, ஆறு பகுதிகளாக பிரித்தேன்.
முதலில் கோவில் நிர்வாகம், அர்ச்சகரிடம் சில விஷயங்களை பேசி ஒப்புதல் வாங்கினேன்.
இரண்டாவதாக, அன்றைய தினம் பிரசாத விநியோகம் செய்வதற்காக ஒரு பரிஜாதகரை
(சமையல் செய்து தயார் பண்ணுபவரை) தொடர்பு கொண்டு, அன்றைய தினம் அவர்
கோவிலுக்கு வந்து செய்து தருவதற்கு ஏற்பாடு செய்தேன்.
மூன்றாவதாக அனைத்து தெய்வ மூர்த்தங்களுக்கும் வஸ்திரம்.
நான்காவதாக, அன்றைய தினம் பெருமாளுக்கும், தாயாருக்கும், கருடாழ்வாருக்கும் பூ மாலை.
ஐந்தாவதாக ஷேத்ரபாலகரான சிவபெருமானுக்கு வஸ்திரம், பூமாலை, பூஜை சாதனங்கள்.
ஆறாவதாக தாமிரபரணி தேவிக்கு பூசை செய்து சீர் கொடுப்பது.
கடைசியாக ஒன்றை அடியேன் தீர்மானித்தேன்.
"அகத்தியப் பெருமான், லோபாமுத்திரை தம்பதிகளை அன்றைய தினம் கோடகநல்லூர்
வந்திருந்து அபிஷேக பூசையை சிறப்பாக நடத்திக் கொடுத்து, அனைவரையும் அருளச்
செய்ய வேண்டும்" என அழைப்பதை தவிர, எந்த ஒருவரையும், தனிப்பட்ட முறையில்,
அங்கு வாருங்கள் என அழைக்கப்போவதில்லை" என தீர்மானித்தேன். யாருக்கு விதி
இருக்கிறதோ அவர்களை பெருமாளும், அகத்தியயரும் வரவழைப்பார்கள். பிறருக்கு
அவர்கள் இருக்கும் இடத்திலேயே அருள் சென்று சேரட்டும் என்று
வேண்டிக்கொண்டேன்.
நான்காவது புரட்டாசி சனிக்கிழமைக்கு சென்ற பொழுது, ஓடி ஓடி, உடல்
தளர்ந்துவிட்டது. அன்று, பெருமாளை பார்த்த பொழுது எதுவுமே,
கேட்கத் தோன்றவில்லை. அமைதியாக, தனிமையில், த்யானத்தில் அவர் முன்
அமர்ந்திருந்தேன். அர்ச்சகர், அபிஷேகம் நடந்த மண்டபத்தில் கருட வாகனத்தில்
பெருமாளின் உற்சவ மூர்த்தியை வைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தார்.
"எல்லா ஏற்பாட்டையும் பார்த்து பார்த்து செய்த நீ, என் அபிமான அகத்தியனை
அழைக்க மறந்துவிட்டாயே. பாதகமில்லை. வரும் வியாழன் அன்று அவன்
குடியிருக்கும் கோயில் சென்று பெருமாளே அழைக்கிறார் என்று வரச் சொல்.
வருவார்!" என்று நான் மறந்து போனதை பெருமாள் அன்று எடுத்துக் கொடுத்தார்.
இரு வியாழனன்று அகத்தியர் தரிசனத்துக்கு சென்றிருக்கிறேன். அதெப்படி,
அவரிடம் வேண்டிக்கொள்ள, அழைக்க மறந்து போனது? கவனக்குறைவோ, அல்லது ஞாபகம்
இல்லாமல் போனதோ, என்று என்னை நானே நொந்து கொண்டேன். செய்துவிட்ட தவறுக்கு
பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, அந்த வாரம் வியாழக்கிழமை, அன்று எதுவாகினும்
சரி, அகத்திய பெருமானிடம் சென்று பெருமாளின் உத்தரவை சமர்ப்பிக்க
வேண்டியது தான், என்று தீர்மானித்தேன்.
மனிதனாக நம் இறைவனுக்கு என்னதான் செய்தாலும், குருவருள் இருந்தால் தான்
நிறைவு பெரும். அதுவும் அகத்தியர் குருவாக நம்முடன் இருந்தால், நம்மை வழி
நடித்திக் கொண்டிருந்தால், நாம் எதை பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை.
அந்த வாரம் வியாழக்கிழமை அகத்தியர் கோவிலுக்கு சென்று அவரிடம்
விண்ணப்பித்தேன். செய்த தவறு உள்ளேயே இருந்து உறுத்திக் கொண்டிருந்ததால்,
மிக கவனமாக வார்த்தைகளை சேகரித்து, அவர் முன் நின்று மனதால்
சமர்ப்பித்தேன்.
"ஐயனே! அடியேன் செய்த தவறை மன்னித்து பொருத்தருளுக. பெருமாள் விரட்டிய
விரட்டில், உடலால் சோர்ந்து போய்விட்டேன். போனமுறை சனிக்கிழமை அன்று
கோடகநல்லூரில், பெருமாள் உத்தரவிட்டார். உங்கள் அருகாமை வேண்டுமாம். உங்களை
அழைக்கச் சொன்னார். நீங்கள் வந்திருந்து அன்றைய அபிஷேக பூசைகளை நடத்திக்
கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அனைவரையும் வாழ்த்தி, ஆசிர்வதித்து,
அவர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுங்கள்" என விண்ணப்பத்தை சமர்ப்பித்து
விட்டு அமைதியாக நின்றேன்.
சற்று நேர அமைதி. ஒரு வினாடிக்குள், அந்த அமைதியை விலக்கிக்கொண்டு,
அகத்தியப் பெருமானின் சன்னதிக்குள் இருந்து புறப்பட்ட காற்று ஒன்று,
படியிறங்கி அடியேனை தழுவி சென்றது. நல்ல நறுமணம். என்னவென்று கண்டுபிடிக்க
முடியாத மணம்.
கூடவே "யாம் வருவோம்" என்ற வார்த்தைகள், என் வலது காதில் சன்னமாக ஒலித்தது.
நடந்ததை என்னாலேயே நம்ப முடியவில்லை. உடல் சிலிர்த்து, உறைந்து நின்றேன்.
"யாம் வருவோம்" என அகத்தியர் கோவிலில்
உத்தரவு வந்தபின், உண்மையிலேயே, ஒரு மிகப் பெரிய பலம் வந்துவிட்டது, என்பதே
உண்மை. இத்தனை கருணையுள்ள தகப்பன் இருக்க, எல்லாம் அதனதன் இடத்தில் சென்று
அமரும் என்று தோன்றியது. இருப்பினும், எது வரவேண்டுமோ அது அங்கிருக்கும்.
அல்லாதது அவர் அருள் இல்லாதது என்றும் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.
அகத்தியருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை கூறி, அவர் உத்தரவுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
"அந்த நாளுக்கு" முன் ஒரு சனிக்கிழமை
விடுமுறை வந்ததால், விட்டுப் போன விஷயங்களை நிச்சயம் செய்வதற்காக,
மறுபடியும் திருநெல்வேலி, கோடகநல்லூர் சென்றேன். கோவில் நிர்வாகிகள் முதல்,
ஊர்காரர்கள் ஒவ்வொருவராக 2ம் தியாதிக்கான பூசைகளை பற்றி கேட்டனர்.
எல்லோருக்கும் பதில் சொல்கிற பொழுது, ஒருவர் கேட்டார்.
"காலையிலே வருகிறவர்களுக்கு, ஏதேனும் சாப்பிட
வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள்? இங்குதான் ஒரு உணவு விடுதி கூட
கிடையாதே?" என்றார்.
"ஆமாம்! அதை பற்றி அடியேன் யோசிக்கவே
இல்லையே! உங்களால், இங்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால், ஒரு சிறு
வியாபாரத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?" என்றேன்.
அவரும் "நடுக்கல்லூரில் ஒரு சைவ உணவு விடுதி உள்ளது. அவரிடம் பேசி பார்க்கிறேன். ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினார்.
"சரி! அப்படியே ஆகட்டும்" என்று கூறி சென்றவர், உணவு விடுதி உரிமையாளர் ஒத்துக்கொண்டதை பின்னர் தொலை பேசி மூலம் என்னிடம் கூறினார்.
இந்த விஷயத்தில்தான் எனக்கு பெருமாளும், அகத்தியரும் சொல்லாமல், சொல்லி சூடு போட்டனர்.
இந்த வருடம் தனி ஒருவனாக ஓடத்தான் பெருமாளின்
உத்தரவு. அடியேனோ, இன்னொருவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்ததில் அவர்களுக்கு
விருப்பம் இல்லை போலும். அன்றைய தினம், ஒத்துக்கொண்டவர் வராமல் போக,
அடியேனும் பிற விஷயங்களில் கவனத்துடன் இருந்து, காலை சிற்றுண்டியை
பிறருக்கு ஏற்பாடு செய்தது மறந்து போக, சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை
அகத்தியர் பூசைக்கு வந்து, பசியுடன் தவித்ததை கண்டு அரண்டு போய்விட்டேன்.
இறைவன், அகத்தியர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், இது அடியேனுடைய தவறு.
அந்தநாளில் வந்திருந்து தவித்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அத்தனை விஷயங்களை கூறி அகத்தியர் அடியவர்களை அழைத்த அடியேனுக்கு, அங்கு
உணவு விடுதி கிடையாது என்று சொல்ல மறந்து போனது உண்மை. இனி வரும்
வருடங்களில் இந்த மாதிரியான தவறு நடக்க கூடாது என இறைவனிடம், அகத்தியரிடம்
வேண்டிக் கொள்கிறேன்.
ஏற்பாடுகளில் மிச்சமிருந்தது பூமாலை,
பூசைக்கான சாதனங்கள். திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு நண்பரின் துணையுடன்,
அடியேனே நேரடியாக பார்த்துப் பார்த்து, ஏற்பாடு செய்தேன். அனைத்து
ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.
அந்த நாளுக்காக காத்திருந்தேன்.
நவம்பர் 1ம் தியதி இரவு 10.30க்குள்
கிளம்புவதாக தீர்மானம். கூட வருகிற நண்பர்கள் வந்து சேர்ந்த பொழுது 11.30
ஆகிவிட்டது. எங்கள் ஊரில் இருக்கும் பிரபலமான விநாயகர் ஆலயத்தில் அவரை
வணங்கி, கிளம்பினோம்.
திடீர் என ஒரு எண்ணம்.
"வண்டியை பூக்கடையில் நிறுத்து. அகத்தியப்
பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் இரு மாலை வாங்கி கோவில் வாசல்
கதவில் மாட்டிவிட்டு, வணங்கி செல்வோம்" என்றேன்.
பூக்கடையில் மிக அழகான 4 அடி உயர மாலை கிடைத்தது.
அகத்தியப் பெருமான் கோவில் வாசல் கதவில் மாட்டி விட்டு, பிரார்த்தித்து, எங்கள் பயணத்தை தொடர்ந்து, திருநெல்வேலி சென்றடைந்தோம்.
நெல்லையப்பர் கோவில் அருகில்,
மார்க்கெட்டில், பெருமாளுக்கான பூமாலையை வாங்கி கொண்டு, கோடகநல்லூர் கோவில்
வாசலை அடைந்தவுடன், ஆச்சரியப்பட்டு போனேன்.
நாங்கள் சென்ற பொழுது காலை மணி 6. எங்களுக்கு
முன்னரே வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் ஒரு குழுவாக, கோவில் திண்ணையில்
அமர்ந்திருந்தனர். அந்தநாள், வந்தது வார நடுவில் என்பதால், அதிகம்
அகத்தியர் அடியவர்கள் வர வாய்ப்பில்லை, என்கிற அடியேனின் எண்ணத்தை, "நீ
என்னடா, நினைப்பது!" என்கிற படி அகத்தியர் அமைத்துக் கொடுத்தார்.
திரும்பி தாமிரபரணி நதியை பார்த்தேன். இருகரை தொட்டு விரிவாக, வேகமாக சென்று கொண்டிருந்தாள். இது அடுத்த ஆச்சரியம்.
"இன்று என்ன? அகத்தியரும், பெருமாளும், நிறைய
ஆச்சரியங்களை தருவார்கள் போல இருக்கிறதே" என்று நினைத்தபடி, பெருமாளை,
அகத்தியரை, தாமிரபரணி தாயை மனதில் தியானித்து கோடகநல்லூர் மண்ணில் கால்
பதித்தேன், என்னென்ன நடக்கப் போகிறதென்று தெரியாமலே!

கடைசி சனிக்கிழமை, அந்த நாளுக்கான ஏற்பாடுகளை, மேற்பார்வையிட்டு வரலாம்
என்று கோடகநல்லூர் சென்று அடைந்த பொழுது, உடல் மிகவும் களைத்துப் போனது.
இனி மிச்சம் உள்ள விஷயம் என்பது "அந்த புண்ணிய நாளில் செய்ய வேண்டிய
வேலைகள் தான்" பாக்கி இருந்தது. எப்போதும் போல சுற்று விளக்கு
போட்டுவிட்டு, பெருமாள் சன்னதி முன் அமர்ந்து,
"அடியேனை மன்னித்து பொறுத்தருள வேண்டும். இதுவரை சகல ஏற்பாடுகளையும்
செய்வதற்காக ஓடியதில், ரொம்பவே களைத்துப் போய் விட்டேன். இனியும் முடியும்
என்று தோன்றவில்லை. ஏதேனும் ஒரு உபாயம் கூறக்கூடாதா?" என்ற கேள்வியை அவர்
பாதத்தில் சமர்பித்துவிட்டு த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.
"உதவியை கேட்டுப்பார், கிடைக்கும்" என்று உத்தரவு வந்தது.
சற்று நேரத்தில் தியானத்தை விட்டு வெளியே வந்து, பெருமாளுக்கு நன்றியை
சொல்லிவிட்டு, நடந்து வரும் பொழுது தான் அந்த எண்ணம் தாக்கியது.
"பெருமாளோ உதவியை கேட்டுப்பார், என்று கூறிவிட்டார். யாரிடம் உதவியை கேட்க
வேண்டும் என்று கூறவில்லையே? என்ன செய்வது?" என்ற யோசனையுடன் வீடு வந்து
சேர்ந்தேன்.
"நினைவூட்டல்" என்கிற தொகுப்பை தருகிற பொழுது ஞாபகம் வர, அந்த தொகுப்பின்
கடைசியில் "உடல் உழைப்பால் ஏதேனும் உழவாரப்பணி கிடைத்தால், செய்யுமாறும்
வேண்டிக்கொள்கிறோம்" என்று என்னையறிமல் தட்டச்சு செய்துவிட்டேன்.
உண்மையை கூறுவதென்றால், அன்று எனக்கு 1008 கைகள் முளைத்தது போல், அகத்தியர்
அடியவர்களைக் கொண்டு வந்து சேர்த்தார், பெருமாளும், அகத்தியப் பெருமானும்.
வந்திருந்த அகத்தியர் அடியவர்களும் அத்தனை உதவி செய்தார்கள். அந்த
பெருமையை, சொல்லிக்கொண்டே போகலாம்.
பயணம் செய்த வண்டியை விட்டு கீழே இறங்கியதுமே, கோவில் கதவு
சார்த்தியிருந்தாலும், ஒரு நிமிடம் அந்த வாசல் முன் நின்று வேண்டிக்கொண்டு,
பிறகு, ஸ்நானம் செய்வது பற்றி யோசிக்கலாம் என்று நடக்கையில், ஒரு
அகத்தியர் அடியவர் ஓடி வந்து,
"அய்யா, அகத்தியர் பூசைக்காக வந்திருக்கிறேன். அடியேன், என்ன உழவாரப்பணி
செய்யவேண்டும் என்று கூறுங்கள்" என்று முதல் முறையாக ஒரு விண்ணப்பத்தை
வைத்தார்.
அடியேனுக்கு ஒரே ஆச்சரியம். பயணம் செய்து வந்த களைப்பு வேறு. என்ன
சொல்வதென்று தெரியவில்லை. இருப்பினும் அவர் கேள்விக்கு பதில் தர வேண்டும்
என்று தோன்றியது.
"வணக்கம் அய்யா! நிறைய வேலை, அகத்தியர் அடியவர்களுக்காக காத்திருக்கிறது.
எது என்று இப்பொழுது குறிப்பிட்டு கூற முடியாது. எதற்கும், குளித்து,
த்யானம் செய்து தயாராக இருங்கள். நிச்சயமாக, உங்களுக்கு ஏதேனும் ஒரு
உழவாரப் பணியை சொல்கிறேன்" எனக்கூறி விடைபெற்றேன்.
மனமோ, இங்கு, இன்று என்ன நடக்கிறது? அடியேனுக்கு, பெருமாளுக்கும்,
அகத்தியருக்கும் வேலை பார்க்கிற பாக்கியம் கிடைக்குமா?" என்கிற சந்தேகம்
மெதுவாக தலை தூக்கியது.
வாசல் முன் நின்று "பெருமாளே! இது வந்துவிட்டது. எல்லாவற்றையும், இன்றைய
தினம் நீங்கள்தான் மிக சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும். அதற்கு, உங்களின்,
அகத்திய பெருமானின் அருள் வேண்டும்" என வேண்டிக்கொண்டு, திரும்பி
பார்க்கையில், பெருமாள், தாயார், பரிவார தேவதைகளுக்கான புதிய வஸ்திரங்களை
வைத்திருந்த வீட்டுக்காரர், ஸ்நானம் பண்ண நதியை நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தார். அவரை மடக்கி, "வஸ்திரங்களை தாருங்கள், முதலில் சிவன்
கோவிலுக்கும், பின்னர் பெருமாள் கோவிலுக்கும் கொடுத்து எங்கள் வேலையை
தொடங்க வேண்டும்" என வேண்டிக்கொண்டேன்.
சற்று நேரத்தில் அனைத்தும் கைக்கு வர, முதலில் காலை 7 மணி அளவில்,
தெருக்கோடியில் இருக்கும் சிவபெருமான், பார்வதி தேவிக்கு வஸ்திரம், அலங்கார
பொருட்கள், வாசனாதி திரவியத்துடன், தக்ஷிணையும் சேர்த்து, பூசாரியிடம்
கொடுத்து சார்த்த சொல்லிவிட்டு, பெருமாள் கோவில் வந்து பார்த்தால், வெளி
வாசல் நடை திறந்து, உள்ளேயும் சன்னதி திறந்திருந்தது.
உடனேயே, அர்ச்சகரை சந்தித்து, அனைத்து வஸ்திரங்களையும் கொடுத்து சார்த்த
சொல்லிவிட்டு, ஸ்நானம் பண்ணுவதற்காக தாமிரபரணியை நோக்கி நடந்தோம்.
தாமிரபரணி, இரு கரை தொட்டு, 5 படிகள் மேலேறி வேகமாக சென்று கொண்டிருந்தது.
இத்தனை நாட்களாக எங்கு போயிருந்தாய்? என பார்ப்பவரை கேட்க வைக்கிற பாணியில்
நல்ல வேகம். சில்லென்ற நீரோட்டம். நன்றாக மூழ்கி ஸ்நானம் செய்தால், எந்த
களைப்பும் போய் விடும், என்ற நினைப்பு வந்தது. அது உண்மைதான் என்று பிறகு
புரிந்தது.
முதலில் நதி நீரை கையில் ஏந்தி கைகால்களை சுத்தம் செய்தபின், நீரில் நின்று
"குளிக்கும் முன்" சொல்ல வேண்டிய ஸ்லோகங்களை கூறியபின், நீரில் மூழ்கி
எழுந்திருக்க, 48 முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்கிற (போன வருட
உத்தரவு) எண்ணம் உதித்தது. அமைதியாக 48 முறை மூழ்கி எழுந்து, கடைசியில்,
சாஷ்டாங்கமாக நீருக்கடியில் நெற்றி பூமியில் பட நமஸ்காரம் செய்த பொழுது,
அகத்தியப் பெருமான், லோபாமுத்திரை தாய், தாமிரபரணித் தாய் இவர்களின்
பாதங்களை தியானித்து, ஸ்நானத்தை முடித்து கரையேறினேன்.
நெற்றிக்கு திருநீறு பூசி, ஈர வஸ்திரத்துடன் காத்திருக்க, அகத்தியர்
அடியவர்கள் ஒரு சிலர் சேர்ந்து, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம்
கொடுப்பதற்காக, விளக்கு, வெற்றிலை, பழம், பாக்கு, சிறு பச்சை வஸ்த்திரம்,
வளையல், மஞ்சள், குங்குமம்போ, பூ போன்றவை கொண்டுவந்தனர். ஈர
வஸ்த்திரத்துடன் நின்றிருந்ததால், நதியில் இறங்கி போய் பூசை செய்து
தாமிரபரணி தாய்க்கு தாம்பூலத்தை கொடுத்துவிட்டு, உணர்வு நிலைக்கு வர,
தண்ணீர், கழுத்துக்கு சற்று மேலே வரை சென்று கொண்டிருந்தது. இத்தனை
தைரியமாக, தனியாக நதியின் ஆழமான இடம் வரை எப்படி வந்தேன் என்று ஆச்சரியமாக
இருந்தது.
சற்று தூரத்தில், அந்த தாம்பூலத்தட்டு, தாமிரபரணி நதியில் அசைந்து செல்வதை,
சில நொடிகள், நின்று ரசித்துவிட்டு, மெதுவாக கரை ஏறிய பொழுது, இனி
என்னென்ன வேலைகள், பாக்கி இருக்கிறது? என்ற சிந்தனை வந்தது.
கோவிலுக்குள், அகத்தியர் அடியவர்களின் கூட்டம். வந்தனம் கூறியவர்களுக்கு,
பணிவான வணக்கத்தை கூறிவிட்டு பெருமாள் சன்னதி முன் நின்று பார்த்தால்,
பெருமாள், பட்டு வஸ்திரம் அணிந்து நின்றிருந்தார்.
பெருமாளுக்கு வாங்கிய "சங்கு, சக்கிர, திருமண்" போட்ட வேஷ்டியை, அவருக்கு
நேர் எதிரே கைகூப்பி நிற்கும் "கருடாழ்வார்" விமர்சையாக அணிந்து கொண்டு
நின்றிருந்தார்.
"சரி! இங்கு என்னவோ பெருமாள் விளையாடியிருக்கிறார். அதை பின்னர் கேட்டு
தெரிந்து கொள்வோம்" என நினைத்து கேள்வியை விலக்கி வைத்து விட்டு,
அர்ச்சகரிடம் "பெருமாள் திருமஞ்சனத்தை எப்போதும் போல கருடாழ்வார் மண்டபத்தில் வைத்துக் கொள்வோம்" என்று கூறினேன்.
"ஆமாம். அப்படித்தான் நடக்க வேண்டும். ஆனால் பெருமாளின், தேசிகர்
பெருமானின், அபிஷேக நேர பீடத்தை, வெளியே கொண்டு போய் வைக்க வேண்டும்.
அதற்கு ஏற்பாடு பண்ணுங்கள்" என்றார் அர்ச்சகர்.
"சரிதான்! அகத்தியர் அடியவர்களிடம், உதவி கேட்க வேண்டிய நேரம்
தொடங்கிவிட்டது" என தீர்மானித்து, திரும்பி பார்க்க, அடியனுக்கு பின்னால்
நின்றிருந்த எட்டு அடியவர்கள் ஒரே குரலில், "எதை எடுத்து எங்கு போடவேண்டும்
என்று கூறுங்கள், நாங்கள் செய்கிறோம்" என முன் வந்தனர்.
கூட வந்திருந்த ஒரு நண்பரிடம் சைகை காட்டி "நீ இதை பார்த்துக்கொள்" என்று கூறாமல் கூறிவிட்டு, அர்ச்சகரிடம் என் வேண்டுதலை வைத்தேன்.
"இந்த முறை, தாமிரபரணி நதியிலிருந்து நீர் சுமந்து வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துவிடலாம்" என்றேன்.
அவரும் அதற்கு சம்மதித்து, எத்தனை குடங்கள் வேண்டும்? என்றார்.
இரண்டு பெரிய அண்டா நிறைய நீர் நிரப்ப ஐந்து குடங்கள் வேண்டுமென்றேன்.
ஒரு நொடியில், இரண்டு பெரிய அண்டாவும், ஐந்து குடங்களும் வந்து சேர்ந்தது.
அதை கருடாழ்வார் மண்டபத்தில் அதற்கான இடத்தில் வைத்துவிட்டு, குடங்களை
கொடுப்பதற்கு முன் சற்று நேரம் யோசித்தேன்.
சரி! இரண்டு அண்டாவும் அகத்தியர் அடியவர்களால், நதியிலிருந்து நீர் எடுத்து
வரப்பட்டு, நிரப்பப்பட்டுவிடும், என்று உணர்ந்து, அடுத்த விஷயத்துக்கு
அர்ச்சகரை தொடர்பு கொண்டேன்.
"சுவாமி!, இந்த மஞ்சள் பையை பெருமாள் பாதத்தில் வைத்து விடுங்கள். பிறகு,
பூசை முடிந்த பின் வாங்கி கொள்கிறேன்" என்று கொடுத்தேன்.
சந்நிதானத்துக்குள் செல்வதால், என்னவென்று பிரித்துப் பார்ப்பது பழக்கம்.
அதை பிரித்துப் பார்த்து, உடனேயே, அப்படியே கொண்டு பெருமாள் பாதத்தில்
வைத்து விட்டு வந்தார்.
"ஒரு வேண்டுதல் கூட உள்ளது" என்றேன்.
"என்ன?" என்றார் அர்ச்சகர்.
"மஞ்சள் பொடி வாங்கித்தருகிறேன். அதை பெருமாள் வலதுகரம், பாதம், மார்பு,
தாயார் கரங்களில் சார்த்திவிட்டு, தாருங்கள். அனைவருக்கும் அதை மருந்தாக
கொடுக்க வேண்டும்" என்றேன்.
"இன்று நேரமே இல்லை! பிறகு நான் உங்களுக்கு தனியாக வைத்து தருகிறேன்" என்றார்.
"அடியேனுக்கு, பெருமாளும், அகத்தியரும், நீங்களும் எப்பொழுது
வேண்டுமானாலும் தருவீர்கள். அது தெரியும். ஆனால், இங்கு வந்திருக்கும்
அகத்தியர் அடியவர்களுக்கு, இன்றைய புண்ணிய நாளன்று, பெருமாள்
ஆசிர்வாதத்துடன், மஞ்சள் பொடியை கொடுக்க விரும்புகிறேன். அனைவருக்கும் அது
கிடைக்க வேண்டும் என்பது பெருமாளின் விருப்பமும் கூட. இன்று விட்டால்,
இவர்களுக்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி வரும்" என்று
கூறியவுடன், அதை புரிந்துகொண்டு, "சரி" என்றார். அதற்கான ஏற்பாட்டை கவனிக்க
புறப்பட்டேன்.
பெருமாளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் பண்ணவேண்டும் என்ற அவாவில், பழங்களை
வாங்கி வந்திருந்தோம். அதை தயார் பண்ண 5 அடியவர்கள் அமர்ந்து வேலை செய்து
கொண்டிருந்தனர். மேலும் நிறைய பேர்களுக்கு, ஏதேனும் ஒரு விதத்தில் வேலை
செய்திட அவா. ஒருவர் வந்து, "இத்தனை நேரம் நீங்கள் பழங்களை சிறு
துண்டுகளாக்கி விட்டீர்களே, சற்று விலகி, எனக்கும் அந்த வேலையை செய்ய ஒரு
வாய்ப்பை தரக்கூடாதா?" என்று கேட்க, குழுவில் அமர்ந்து வேலை பார்த்த ஒரு
சிலர் விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும் என்று வழி விட்டனர்.
ஆனந்தமான காட்சி அது.
அப்போதுதான் கவனித்தேன், வாங்கி வந்திருந்த பழங்கள் மிக குறைவாகவும்,
பஞ்சாமிர்தம் தயார் செய்ய தந்திருந்த பாத்திரம் மிகப் பெரியதாகவும்
இருந்தது. அடடா! பழங்கள் குறைந்துவிட்டதே. எப்படி இந்த பாத்திரம் நிரம்ப
போகிறது? பக்கத்தில் எங்கும், பழங்கள் கிடைக்காதே, டவுனுக்கு சென்றால் தான்
வாங்க முடியும். இன்னும் ஒரு அரை மணி நேரத்தில், பூசை தொடங்கிவிடுவார்களே!
என்ற எண்ணம் வந்தது.
நம் கையில் இது இல்லை என்றுணர்ந்து, பெருமாளுக்கு எப்படி வேண்டுமோ, அப்படி
அவர் அமைத்துக்கொள்ளட்டும், என்ற நினைப்புடன், நடுக்கல்லூர் வரை சென்று ஒரு
சில சாமான்களை 15 நிமிடத்தில் வாங்கி வர தீர்மானித்தேன். எப்படி செல்வது?
என்ற எண்ணம் வந்த பொழுது, ஒரு அகத்தியர் அடியவர் தன்னிடம் இரு சக்கர வாகனம்
இருப்பதாகவும், தான் சென்று வருவதாகவும் கூறினார்.
"இல்லை! நான் வர வேண்டும். என்னென்ன சாமான்கள் என்று எனக்குத்தான் தெரியும். வாருங்கள் சென்று வரலாம்" என்று புறப்பட்டோம்.
20 நிமிடத்தில் சாமான்களை வாங்கி வந்து பார்க்கையில், பஞ்சாமிர்த பாத்திரம்
நிரம்பி வழிந்திருந்தது. எனக்கு ஆச்சரியம். எப்படி? என்று ஒரு நண்பரிடம்
வினவ, வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஏதேனும் ஒரு பழம்
வாங்கி வந்திருந்தனர். நாம் வாங்கியது தீர்ந்து போய் விட்டது
என்றறிந்தவுடன், அவர்கள் கொண்டு வந்ததையும் கொடுத்து உதவினார்கள், என்றார்.
மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் என தீர்மானித்து, ஐந்து பேரை தேர்வு செய்து,
கோவில் பிரகாரத்தில் இருக்கும் சுற்று விளக்கை ஏற்ற சொல்லலாம் என்றுதான்
சாமான்கள் வாங்க சென்றேன். கூடவே மஞ்சள் பொடியும்.
மஞ்சள் பொடியை பெருமாள் கரங்களில் பூசுவதற்கு ஏதுவாக, ஒரு பாத்திரத்தை
தந்தார், அர்ச்சகர். அதை பிரிக்க முயலும் போது, முடியவில்லை. உடனேயே ஒரு
அடியவர் வந்து, "அய்யா! மஞ்சள் பொடியை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்,
அடியேன் அதை கத்தரித்து தருகிறேன்" என்று வினவினார்.
"வந்து அமருங்கள், இருவரும் சேர்ந்து செய்வோம்" என்று அவர் கத்தரித்து தர, அடியேன் பாத்திரத்தில் ஒவ்வொன்றாக போட்டேன்.
அவர் பொள்ளாச்சியிலிருந்து அகத்தியர் பூசைக்கு வந்திருக்கிறார்.
"அடுத்த முறை, நான் மஞ்சள் பொடி தயார் செய்து கொண்டு வருகிறேன். எவ்வளவு வேண்டி வரும்?" என்றாரே பார்க்கலாம்.
"தற்போது 500 கிராம் வாங்கியிருக்கிறேன். இது காணுமோ எனத்தெரியவில்லை.
அனைவருக்கும், திருப்தியாக கொடுக்க வேண்டுமென்றால் ஒரு கிலோ வரை
வேண்டிவரும். அதை அடுத்த வருடம்தான் தீர்மானிக்க முடியும்" என்றேன்.
அர்ச்சகர் வந்து, மஞ்சள்பொடி வைத்திருந்த பாத்திரத்தில், பெருமாளின்
தீர்த்தத்தைவிட்டு, நன்றாக குழைத்து, பின் பெருமாள், தாயார் கைகள், மார்பு,
பாதத்தில் பூசிவைத்துவிட்டு, வெளியே வந்து பாத்திரத்தை காட்டினார்.
அதில் மிச்சம் மீதி எதுவுமே இல்லை.
"பூசை முடிந்து கேளுங்கள், எடுத்து தருகிறேன்" என்று விட்டு போனார்.
வெளியே வந்து பார்த்த பொழுது, இரண்டு அண்டாவும் நிரம்பி, நான்கு
குடங்களிலும் நீர் இருந்தது. ஐந்தாவது குடம் எங்கே? என்று பார்க்க, அதை
நிரப்ப 5 அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து நதியை நோக்கி, சென்று
கொண்டிருந்தனர்.
"நம்ம நிலைமையை பாரு! அகத்தியர் பூசையில், பெருமாளுக்கு நதி நீர் எடுக்க
விரும்பிய பொழுது, கடைசி குடம் ஒன்று தான் இருக்கிறது. நாம் ஐந்து பேர்
போட்டி போடுகிறோம். சரி ஐந்து பேரும் பிரித்துக்கொண்டு சேவை செய்வோம்"
என்றபடி கோவிலுக்கு வெளியே சென்று கொண்டிருந்தனர்.
மூன்று ஆண்களை தெரிவு செய்த பின், பெண்கள் பகுதியை நோக்கி "யாராவது இரண்டு
பேர் வருகிறீர்களா? சுற்று விளக்கு போடவேண்டும்!" என்று கேட்ட தாமதம்,
அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்கள் குழு அப்படியே எழுந்தனர்.
"அடடா! இத்தனை பேர் வேண்டாம்! ஒரு மூன்று பேர் போதும்" என்றவுடன் 4 பேர்கள் வந்தனர்.
அவர்கள் கையில் விளக்கேற்றுவதற்கான சாமான்களை கொடுத்த பின், சீக்கிரம் போட்டுவிடுங்கள்! பூசை உடனேயே தொடங்கிவிடுவார்கள், என்றேன்.
அவர்கள் ஒரு குழுவாக சென்ற பின் தான் ஒரு யோசனை வந்தது.
பெருமாள் இங்கு வந்த பொழுது, முதலில் அமர்ந்த மண்டபத்தில் விளக்கு போடச்
சொல்லவே இல்லையே, என்று நினைத்து போய் பார்த்தால், அந்த மண்டபத்தில்
இரண்டு புறப்பாடு வாகனங்களை வைத்திருந்தனர்.
ஒரு நான்கு அடியவர்களை சேர்த்துக் கொண்டு, அந்த வாகனங்களை இன்னொரு
இடத்திற்கு சுமந்து சென்று மாற்றிய பின், அந்த மண்டபத்தை சுத்தம் செய்ய
கூறினேன்.
ஒருவர், அந்த மண்டபம் சற்று உயரமாக, நீளமாக இருந்ததால், மேலேறி சுத்தம்
செய்யட்டுமா என்ற உடன், முதன் முறையாக அந்த அர்த்த மண்டபத்தின் முக்கியத்தை
கூற, புரிந்து கொண்டு, அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தினோம். பெருமாள்
அமர்ந்த இடம் என்பதால், எல்லோருக்கும் விளக்கு போட ஆசை. "அனைவரும் ஒரு
விளக்கு போடுங்கள்" என்று கூறிவிட்டு, கருட மண்டபம் வந்து பார்க்க, உற்சவ
மூர்த்தங்களை, அர்ச்சகர் கொண்டு வைத்திருந்தார்.
அண்டா நிறைய நதி நீர். என்னவோ ஒன்று குறைகிறதே என்று யோசனை வர, போகரின் 128
மூலிகைப்பொடியை அர்ச்சகரிடம் கொடுத்து இரண்டு அண்டாவிலும் போடச்சொன்னேன்.
"பூசையை தொடங்கலாமா?"என்று சைகையால் அர்சகர் கேட்க, ஒரு 10 நிமிடம்
தாருங்கள், ஒருசிலர் சுற்று விளக்கேற்ற போயிருக்கிறார்கள். இப்பொழுது
வந்துவிடுவார்கள்" என்றேன்.
அவர்களும், 10 நிமிடத்தில் வந்து சேர, அர்ச்சகர் உற்சவ மூர்த்தங்களுக்கான
அபிஷேக ஆராதனையை, மார்பில், தலையில், கையில் எண்ணை சார்த்தி, தொடங்கினார்.
"அப்பாடா! ஒருவழியாக பூசை ஆரம்பித்தாகிவிட்டது! அது போதும்! இனி
அகத்தியரும் பெருமாளும் மற்றவைகளை பார்த்துக் கொள்வார்கள். அடியேன் சிறிது
நேரம் இளைப்பாரலாம்" என்று பின்னாடி இருந்த மேடை பக்கமாக சென்றேன்.
அங்கு ஒரு பெரியவர், அகத்தியர் பூசைக்கு, அடியவர்கள் கொண்டு வந்த சாமான்களை, பிரித்து, குழுவாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
நான் எட்டி பார்க்கவே, அவர், "சரியா, விதவிதமாக அடுக்கி வைத்துவிட்டால்,
எடுத்துக் கொடுப்பது சுலபம். அபிஷேகத்தின் போது என்ன வேண்டுமோ, கேளுங்கள்.
சரியாக எடுத்துக் கொடுத்து விடுகிறேன்" என்றார்.
அப்பொழுதுதான் கவனித்தேன். அகத்தியர் அடியவர்கள் பூசைக்கு கொண்டு வந்த
சாமான்கள் பாதி மேடையை நிரப்பி இருந்தது. ஏதோ யோசனையுடன் திரும்பி பார்க்க,
எங்கும் அகத்தியர் அடியவர்கள் அபிஷேக பூஜையை ஆனந்தமாக தரிசித்துக்
கொண்டிருந்தனர்.
பரவசத்தால், "அகத்திய பெருமானே! பெருமாளே!" என்று கண்மூடி தியானிக்க, அங்கு
அர்ச்சகர் நின்றிருந்த இடத்தில், அவரில்லை, அகத்தியப் பெருமான்,
லோபாமுத்திரை தாயாருடன் நின்று பூசை செய்து கொண்டிருந்தார்.
"இங்கு வந்திருக்கும், அகத்தியர் அடியவர்கள் நிறைய பேருக்கு, தாமிரபரணி
நதியிலிருந்து, நீர் சுமந்து வந்து, பெருமாள் அபிஷேகத்துக்கு உதவி செய்த
புண்ணியம் கிடைக்க வேண்டும். அதற்கு, இது தான் ஒருவழி" என்று தீர்மானித்து,
முதலில் ஐந்து பேரை தேர்வு செய்து குடத்தை கையில் கொடுத்த பின்,
"நதியில் இறங்கி குடத்தை சுத்தம் செய்து, பெருமாள் அபிஷேகத்துக்கு நீர்
கொண்டு வந்து, அந்த அண்டாவில் ஊற்றுங்கள். அது நிறைய வேண்டும்.
இருபாலாருக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், ஒருவர் ஒரு முறைதான் கொண்டுவந்து
விடவேண்டும். மற்ற அடியவர்களுக்கும் இந்த அரிய வாய்ப்பு கொடுக்கும்
விதமாக, நீர் கொண்டு வந்து விட்டவரே இன்னொருவரிடம் குடத்தை கைமாற்றி
கொடுக்க வேண்டும். நதியில் இறங்கும் பொழுது, மிகுந்த கவனமும் தேவை." என்று
கூறி ஐந்து அடியவர்களையும் அனுப்பி வைத்தேன்.
அடியேன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த அகத்தியர் அடியவர்கள் சிலர், இரண்டாவது சுற்று குடத்தை சுமப்பதற்காக தயாராகிவிட்டனர்.

எதைக் கண்டாலும், எதை உணர்ந்தாலும், பெரியவர்கள் எதை உரைப்பது என்று
தீர்மானிக்கிறார்களோ, அதைத்தான் பிறருக்கு, ஓரளவுக்கு தெரிவிக்க முடியும்.
முழுமை பெற வேண்டுமென்றால், ஒருவர், அவராகவே உணர்ந்தால்தான் உண்டு.
அப்பொழுதும், அங்கும், அவர்கள் அருள் வேண்டும்.
அன்று அடியேன் கண்ட காட்சியை யாரிடமும் அங்கு வைத்து உரைப்பதில்லை என்று
தீர்மானித்தேன். யாருக்கெல்லாம், எவ்விதத்தில் உணர வைத்தார்களோ என்ற
எண்ணமும் வந்தது. ஒரு விஷயத்தை அடியேன் அடிக்கடி மனதுள் நினைப்பது உண்டு.
அவர்கள் பார்வை நம் மீது பட்டதா என்பதுதான் முக்கியமே தவிர, நம் பார்வை
அவர்கள் மீது பட்டதா என்பது முக்கியமில்லை. ஏனென்றால், நம் நேரம் நல்லதாக
இருந்தால், நாம் அறியாமலேயே, ஒருவேளை "நயன தீக்க்ஷை" கூட கிடைக்கலாம்.
அப்படி, அங்கு வந்திருந்த எத்தனை பேருக்கு, அவர்கள் அறியாமலேயே, அவரின்
அருள் பார்வை கிடைத்தது? என்று யோசிக்க தொடங்கினேன்.
நேரம் வரும் பொழுது அது தெரியவரும், என்று எண்ணம் மனதுள் வந்தது.
ஆம்! அது உண்மை என்பது, பின்பு வேறு ஒரு அகத்தியரின் சிறந்த அடியவர்,
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறிய பொழுது உணர்ந்தேன். ஒன்று மட்டும்
நிச்சயம். அன்று, அங்கு வந்திருந்து, பெருமாளின் ஆராதனையை கண்டு
மகிழ்ந்தவர், மிக, மிக புண்ணியசாலிகள். அதற்காக, வராதவர்கள், வர ஆசைப்பட்டு
பல காரணங்களால் வர முடியாதவர்கள், பாக்கியம் செய்யாதவர்கள் என்று
அர்த்தமல்ல. அவர்களுக்கும் சேர்த்து, கடைசியில், தீபாராதனையின் பொழுது
அடியேன் வேண்டிக்கொண்டேன் என்பதே உண்மை.
பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் தொடங்கிய பொழுது, முதலில்
துளசியால் தைலக்காப்பு போடப்பட்டது. மிச்சம் மீதி இருந்த தைலத்தை,
அர்ச்சகர் பாத்திரத்துடன் தர, அதை பெற்று அங்கு வந்திருந்த அனைவருக்கும்,
கரங்களில், பிரசாதமாக கொடுக்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.
பால், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், தேன், நெய், பலவிதமான மூலிகைகள்,
தயிர், வாசனாதி திரவியங்கள், பன்னீர், இளநீர், அடியவர்கள் சுமந்து கொண்டு
கொடுத்த தாமிரபரணி தீர்த்தம் என அபிஷேகம் நீண்டு கொண்டே சென்றது.
கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு சிலர் ஸ்லோகங்களை கூறினார். இரு பெரியவர்கள்
குழுவுடன், அர்ச்சகர் சேர்ந்து புருஷசூக்தம் கூறி, கலச தீர்த்தத்தை
பெருமாளுக்கும், தாயாருக்கும், தேசிகருக்கும் சிறப்பாக அபிஷேகம் செய்தார்.
பெருமாளுக்கும், தாயாருக்கும் சார்த்திய மஞ்சள்பொடி கலவையை பிரசாதமாக தர,
அதுவும் கொஞ்சமாக இருந்ததால் எல்லோருக்கும் கொடுக்க முடியவில்லை. சீக்கிரமே
தீர்ந்து போனது. பெருமாளின் உள் சன்னதியில், அவர் கரத்தில், மார்பில்,
பாதத்தில் சார்த்தியது பத்திரமாக இருப்பதால், அதை எடுத்து முடிந்தவரை பிறகு
கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன்.
விமர்சையான அபிஷேக ஆராதனைகள் நிறைவு பெற்றதும், திரை போடப்பட்டது. பெருமாளுக்கு அலங்காரம் தொடங்கியது.
வந்திருந்த அகத்தியர் அடியவர்களின் கூட்டத்தை பார்த்ததும் சட்டென்று ஒரு
விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அனைவரும் பசியோடு அமர்ந்திருந்தனர்.
பெரியவர்கள் சற்றே, அசந்து போய் அமர்ந்திருந்தனர். எல்லோருக்கும், பிரசாதம்
விநியோகம் செய்யவேண்டும். பிரசாத விநியோகத்துக்கான தட்டை கொண்டு வருவதாக
சொன்னவர், மறந்து போய் விட்டிருந்தார். கையில் இருந்ததோ 200 தட்டுகள்.
அனைவருக்கும் கொடுப்பதற்கு போதாது. என்ன செய்வது என்று ஆதங்கத்துடன்
யோசித்த பொழுது, திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு நண்பர், அடியேனின் முக
மாற்றத்தை கண்டு, "என்ன ஆயிற்று? என்ன வேண்டும்?" என்றார். நடந்ததை கூற,
அவசர தேவையை உணர்ந்து, இன்னொருவரை கூட்டிக்கொண்டு தட்டு வாங்க கிளம்பினார்.
"என்ன பெருமாளே! அகத்தியரே! இப்படி போட்டு தாக்குகிறீர்களே! இந்த கடைசி
நிமிடத்தில் உணர்த்தினால், அடியேன் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு மாற்று
வழியை நீங்கள் தான் காட்ட வேண்டும்" என பிரார்த்தித்தேன்.
என்னவோ தோன்ற, மேடையில் சாமான்கள் வைத்த இடத்தில் நின்று கொண்டு எங்கேனும்
ஒரு வழி கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்ததை கவனித்த ஒருவர் வந்து,
"யாரோ ஒரு அகத்தியர் அடியவர், நிறைய காகித தட்டுகளை கொண்டு
வந்திருக்கிறார். இதோ பாருங்கள்" என்று காட்ட, எனக்கு போன மூச்சு திரும்பி
வந்தது போல் உணர்ந்தேன். அதை கையில் எடுத்து பார்க்கவும், அதை வாங்கி வந்த
பெரியவர் அருகில் வந்தார்.
"இந்த தட்டுக்கள் நீங்கள் வாங்கி வந்ததா? உங்கள் தனிப்பட்ட தேவைக்கா அல்லது வீட்டுக்கு கொண்டு போக வாங்கினீர்களா?" என்றேன்.
"இதை நான் தான் வாங்கி வந்தேன். இங்கு அகத்தியர் அடியவர்களுக்கு விநியோகம்
செய்ய ஏதேனும் கொண்டு வரவேண்டும் என்று, நேற்று இரவுதான் எண்ணம் வந்தது.
இனிப்போ, சாப்பிடும் பொருளோ கிடைக்காததால், இதை வாங்கி கொண்டு வந்தேன்"
என்றார்.
அடியேனுக்கு, என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"பிரசாத விநியோகத்துக்கு தட்டுக்கள் குறைவாக இருக்கிறது. உங்கள் அனுமதி இருந்தால், இதை நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?" என்றேன்.
"அதற்காகத்தான் வாங்கி வந்திருக்கிறேன். எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன
விஷயம். என் மகனும், மருமகளும் வந்திருக்கிறார்கள். அவர்கள் கையால், ஒரு
சிலருக்கு ஏதேனும் அன்னம் பாலிக்க விரும்புகிறார்கள். பிரசாத விநியோகத்தின்
பொழுது, அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியுமா?" என்றார்.
"பிரசாத விநியோகத்தின் பொழுது, அழைத்து வாருங்கள். நிச்சயமாக அந்த வாய்ப்பை
அகத்தியர் அருளுவார்" என்று கூறி, தட்டுக்களை மனமுவந்து தந்தற்கு நன்றியை
கூறி, கருடாழ்வார் மண்டபத்தில் இருக்கும் பெருமாளுக்கும், அகத்தியருக்கும்,
புன்னகையுடன் நன்றியை கூறினேன்.
அருகில் இருந்த நண்பரிடம் "இதெல்லாம் சோதனைகளாக இருந்தாலும், கடைசியில் இன்பமாக முடிவது, அவர்களால்தான்" என்றேன்.
தட்டு வாங்க போன நண்பர், 200 தட்டுகளுடன் வந்து சேர்ந்தார். பெரியவர் கொடுத்தது 500 தட்டுகள்.
"தட்டு இல்லை என்றாயே! வந்து சேர்ந்துவிட்டதா?" என்று கேட்கும் பாணியில், திரை விலகியபொழுது பெருமாள் கேட்பது போல் இருந்தது.
அவர் எப்பொழுதும் "பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை நம்மைக் கொண்டு ஆட்ட வைப்பார்" என்று ஒரு எண்ணம் மனதுள் வந்தது.
சரி! ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்றில், நம்மை
மாட்டிவிட்டுவிடுவார் என்று தோன்றி முடியும் முன்னரே ஒருவர் சற்று உரக்க
கூறினார்.
"பத்து நாட்கள் ப்ரம்மோஸ்த்வம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. அந்த
பத்து நாட்களில் பெருமாளுக்கு வந்த பூசை சாமான்களை விட இரண்டு மடங்கு, இந்த
அரை நாள் பூசையில் கொண்டு வந்துவிட்டார்களே அடியவர்கள்!" என்றாரே
பார்க்கலாம்.
அவர் பேசியது அடியேனிடம். நிறைய பேர் திரும்பி பார்த்தனர்.
"சரிதான்! நம்மை மாட்டிவிட்டு பெருமாள் அங்கிருந்து வேடிக்கை பார்க்கிறார். பதில் சொல்லாமல் பேசாமல் இருப்போம்" என்று இருந்தேன்.
அவர் விடுவதாக இல்லை.
"என்ன சுவாமி! பதிலே காணம்!" என்றார்.
"என்ன சொன்னாலும் மாட்டிக் கொண்டு விடுவேன். பிரச்சனையாகிவிடும். இதுதான்
அகத்தியரின் சக்தி என்றால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ, தெரியாது" என்று
யோசித்து
"இந்த கேள்வியை நீங்கள் பெருமாளிடம்தான் கேட்கவேண்டும். எல்லாம் அவர்
ஏற்பாட்டில் நடக்கிறது. நாங்களெல்லாம், அவருக்கும், அகத்தியருக்கும்
அடியவர்கள். கொடுத்த வேலையை தெரிந்தவரை செவ்வென செய்ய முயற்சி செய்கிறோம்"
என்று கூறி விலகினேன்.
"அதுதான் உண்மை" என்று யாரோ சன்னமாக கூறுவது கேட்டது.
மறுபடியும், கோவில் மணியின் சப்தத்துடன், மந்திர பூசைகள் ஆரம்பமானது.
அமைதியாக இருந்த மனதை மணி மந்திரம் உசுப்பிவிட்டது. பெருமாளை திரும்பி
பார்த்த அடியேன் அசந்து போனேன். பெருமாள், தாயாரின் முகம் மட்டும்தான்
வெளியே தெரிந்தது. அவர்கள் கழுத்துவரை பூக்களாலும், மாலைகளாலும்,
துளசியாலும் மூடி மறைத்திருந்தார் அர்ச்சகர். அவ்வளவு பூக்களை, அகத்தியர்
அடியவர்கள் வாங்கி வந்திருந்தனர். பெருமாளை பார்க்கவே அதிசயமாக இருந்தது.
கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர், பெருமாள் இருப்பதே தெரியவில்லை என்று
அர்ச்சகருக்கு செய்தி சொன்னதின் பேரில், பூக்களை அழுத்தி கீழே இறக்கி,
பெருமாள் தாயாரின் மார்பு வரை பூக்களை வைத்து, அவர் கரங்கள் வெளியே
தெரியும் படி அமைத்தார், அர்ச்சகர்.
சிறிது நேரம் மந்திரோச்சாடனம் நடந்தது. பின்னர் நிவேதனத்துக்காக திரை
போடப்பட்டது. அனைத்து அகத்தியர் அடியவர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
ஊசி விழும் ஓசை கூட தெளிவாக கேட்க்கும் அப்படி ஒரு அமைதி. இத்தனை மனிதர்கள்
சேர்ந்திருக்கும் இடத்தில் இது ரொம்ப அபூர்வம். அகத்தியர், அவர்
அடியவர்களை அமைதிப்படுத்திவிட்டார் போலும் என்று தோன்றியது. உண்மையிலேயே,
அவர்களை மௌனமாக மனதுள் பாராட்டினேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு விழாவை
நடத்துவதென்றால், இப்படித்தான் நடத்த வேண்டும் என்று அகத்தியர் சொல்லாமல்
சொல்லி காட்டுவது போல் இருந்தது.

உள்ளேயும், வெளியேயும் நிவேதனத்தை முடித்து, பலி பீடங்களுக்கு அஷ்ட
திக்கிலும் உணவளித்துவிட்டு வந்த அர்ச்சகர் தீபாராதனைக்கு தயாரானார்.
முதலில், மூலஸ்தானத்தில் தீபாராதனை நடக்கும் என்று அறிவித்துவிட்டு உள்ளே
சென்றார். அத்தனை பேருக்கும் உள்ளே சென்று தரிசிக்க இடம் கிடைக்காது
என்றறிந்த நிறைய அகத்தியர் அடியவர்கள், வெளியே நின்று தீபாராதனையை
தரிசித்தனர். அடியேன் நின்ற இடத்தை விட்டு அசையவே இல்லை. எப்பொழுது
வேண்டினாலும் பெருமாள் தரிசன வாய்ப்பை கொடுக்கிறார். இம்முறை, மற்ற
அடியவர்கள் அதை வாங்கி கொள்ளட்டுமே என்று தோன்றியது. அமைதியாக மனக்கண்ணில்
அவர் பாதத்தை நினைத்து வேண்டிக் கொண்டேன்.
உள்ளே தீபாராதனையை முடித்துக் கொண்டு அர்ச்சகர் வெளியே வந்தார். அடியவர்கள்
அனைவரும் சுதாகரித்து நின்றனர். அடியேன் மனதுள் திடீரென ஒரு எண்ணம்
ஓடியது. அப்படியே அதை உருவகப்படுத்தி பெருமாளிடம் சமர்ப்பித்தேன்.
"பெருமாளே! அகத்தியப் பெருமானே! எத்தனையோ அடியவர்கள், எங்கிருந்தெல்லாமோ
இங்கு வந்து நதியில் தீர்த்தமாடி, உழவாரப்பணி செய்து, தங்கள் பூசையில்
கலந்துகொண்டு, தங்கள் விண்ணப்பங்களை தெரிவித்துள்ளனர். இங்கு வரவேண்டும் என
நினைத்து, பல சூழ்நிலைகளால் வர முடியாமல் போன ஆத்மாக்களும் உண்டு.
எங்கிருந்து, உங்களை நினைத்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தாலும், இங்கு
வந்திருந்து சமர்ப்பித்தாலும், அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி வைத்து
ஆசீர்வதியுங்கள். எல்லோரும் உங்கள் அருளுக்காக காத்திருக்கின்றனர். எந்த
குறையும் இல்லாமல், இன்று அந்த அடியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அள்ளி அள்ளி
கொடுத்து உங்களுக்கு சேவை செய்துள்ளனர். எல்லோரும் நலமாக வாழ வாழ்த்த
வேண்டும். எல்லோரும் பத்திரமாக வீடு சென்று சேரவும் அருளவேண்டும்!" என
வேண்டிக்கொண்டேன்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்து கண்ணை திறக்கவும், தீபாராதனை. என் பார்வைபெருமாளின் முகத்திலும், அவர் கரத்திலும் நின்றது.
"அடியேனின் விண்ணப்பம்! ஞாபகம் இருக்கட்டும் பெருமாளே" என்று கூறி முடித்த
அடுத்த நிமிடம், அவர் தலையில் இருந்த ஒரு பூ, வலது கரத்தில் விழுந்து
தெறித்தது.
"சரி! அவர் சம்மதித்துவிட்டார்!" என தோன்ற, ஆனந்தமாக தீபாராதனையை அதன்
மந்திரத்துடன் உச்சரித்து நிறைவு செய்தேன். அனைத்து பெருமையையும் பெருமாள்,
அகத்தியர் பாதத்தில் சமர்ப்பித்தேன்.
அனைத்து அகத்தியர் அடியவர்களும் மெய்யுருகி மனம் ஒன்றி தீபாராதனையில் பங்கு
பெற்றனர். நிச்சயமாக அவர்கள் அனைவருக்கும் அருள் கிடைத்திருக்கும்.
என்னென்ன அனுபவங்களை அவர்கள் இனி சந்திக்கப் போகிறார்களோ, அதை அவர்களாக
தெரிவித்தால் அன்றி தெரிய வராது, என்று மனதுக்கு தோன்றியது. வந்திருந்த
அனைவருக்கும் பூசை முடிந்த பின் தீர்த்தம் கொடுத்து, பெருமாளின் சடாரி
சார்த்தப்பட்டது. நிறைய பேருக்கு, பெருமாளின் துளசி, பூ, மாலை, குங்குமம்
என பலவித பிரசாதங்களை அர்ச்சகர் வழங்கினார்.
இன்னுமொரு எண்ணம் திடீரென்று உரைக்கவே உடனேயே பெருமாளிடம் விண்ணப்பித்தேன்.
"இன்றைய புண்ணிய நாளில், அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்த
இந்த அபிஷேக ஆராதனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று
நம்புகிறேன். ஏதேனும் ஒரு நிமித்தத்தை காட்டக்கூடாதா?" என்றேன்.
"உடனேயே தெரியவரும்" என்று உத்தரவு வந்தது.
உடனேயா! அப்படி என்றால், யாராவது வந்து செய்தி சொல்லப்போகிறார்களா? என்றெல்லாம் மனம் எண்ணியது.
சற்று குழம்பி நிற்கையில், திடீரென ஓதிமலை ஓதியப்பர் ஞாபகத்துக்கு வந்தார்.
"அடடா! இறைவன் குளிர்ந்தால், மழை வருமே! ஓதிமலை போல இங்கும் வறுத்தெடுத்து விடுவாரா? என்று எண்ணி நிற்கையில், மழை தொடங்கியது.
மனம் மெதுவாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றது.
நிவேதன ப்ரசாதங்களான, புளியாதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல்,
பஞ்சாமிர்தம், அகத்தியர் அடியவர்கள் கொண்டுவந்த இனிப்பு வகைகள் என
அனைத்தையும் விநியோகம் செய்ய 6 பேரை தெரிவு செய்தேன். அவர்களுக்கு ஒரே ஒரு
உத்தரவு தான். வரிசையாக நின்று கொடுக்க வேண்டும். அடியவர்கள் வரிசையில்
வந்து வாங்கி கொள்வார்கள். மேலும் ஒருவர் முதலில் நின்று அனைவருக்கும்
"தட்டை" கொடுங்கள். விநியோகம் நடக்கையில், யாரேனும் ஒரு அடியவர் வந்து
"நானும் என் கையால் விநியோகம் செய்கிறேனே!" என வேண்டிக் கொண்டால், கேட்டவர்
விலகி வழிவிட்டு, அவர் வேண்டுதலையும் நிறைவேற்ற வேண்டும்!" என்றேன்.
"இரண்டு நிமிடம் பொருத்துக் கொள்ளுங்கள்! உடன் வருகிறேன்!" என்று கூறி,
அர்ச்சகரை தேடி ஓடினேன். அடியேன் வருவதை கண்டதும் அவருக்கு புரிந்தது.
வேகமாக உள்ளே சென்று, பெருமாள் பாதத்தில் வைத்திருந்த பையுடன், ஒரு
பாத்திரத்தில் பெருமாள் மார்பு, கரங்கள், பாதம், தாயார் பாதத்தில், கையில்
சார்த்தியிருந்த மஞ்சள் பொடியை நன்றாக சுரண்டி எடுத்து, போட்டுத் தந்தார்.
நிமிர்ந்து பெருமாளை பார்த்து, "மிக்க நன்றி பெருமாளே! பிறகு வருகிறேன்!"
என்று கூறி, விநியோகம் தொடங்க இருந்த இடத்துக்கு வந்தேன்.
விநியோகம் தொடங்கியது. மிக அமைதியாக, எந்த உந்தும், தள்ளும் இன்றி, கையில்
தட்டை ஏந்தி வந்து, அடியவர்கள் பிரசாதத்தை வாங்கி கொண்டனர். எல்லோருக்கும்,
அவர்கள் விருப்பப்படி, பிரசாத அளவு கொடுக்கப்பட்டது. இல்லை என்ற
பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. அந்த வரிசையின் கடைசியில், சிறிதளவு
மஞ்சள் ப்ரசாதத்துடன் ஒரு "786" எண் கொண்ட ரூபாயை ஒவ்வொரு அகத்தியர்
அடியவருக்கும் "பெருமாளின் பரிசு! பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்"; "இது
மஞ்சள்பொடி பிரசாதம். பெருமாளிடமிருந்து உங்களுக்கு மருந்து. உள்ளுக்கு
சாப்பிடுவதற்கு" என்று கூறி கொடுக்கப்பட்டது.
"சித்தன் அருளை" வாசிக்கும் அனைவருக்கும் "786" எண் பற்றி தெரியும்
என்பதாலும், அதுவும் பெருமாளின் பாதத்தில் சமர்ப்பித்து
கொடுக்கப்பட்டதாலும், மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டனர். அதில் ஒரு
சிலர், வாங்கிய உடனேயே "எண்ணை" பார்த்து, "எவ்வளவு நாளாக
தேடிக்கொண்டிருக்கிறேன், கோடகநல்லூர் பெருமாள்தான் முதன் முறையாக ஆசி கூறி
கொடுத்திருக்கிறார்" என்று கூறி வாங்கிச்சென்றனர். ஒரு கட்டத்தில், "786"
எண் கொண்ட ரூபாய் தீர்ந்து போய்விட, தொடர்ந்து "354" என்கிற எண் கொண்ட
ரூபாய் கொடுக்கப்பட்டது.
"354" என்றால் ஓதியப்பர் (சுப்பிரமணியர்). சுப்பிரமணிய சக்கரத்தில் "354"
என்கிற எண் தமிழ் எழுத்தாக மாற்றி எழுதப்பட்டிருக்கும். ஆகவே, இந்த முறை
கோடகநல்லூரில், "354" என்கிற எண்ணையும் பெருமாள், அகத்தியர்
ஆசிர்வாதத்துடன், மீதி இருந்த அனைவருக்கும் கொடுத்து முடித்தோம்.
பெய்த மழையில் நனைந்தபடியே அனைத்து அகத்தியர் அடியவர்களும் நிவேதன
பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு, பின் அந்த தட்டை அதற்கென கோவிலுக்கு வெளியே
வைத்திருந்த ஒரு பெட்டியில் கொண்டு போட்டனர். கோவில் பிரகாரத்தை சுத்தமாக
வைத்திருக்க இயற்கையாகவே அவர்களுக்குள் அகத்தியர் உத்தரவு போட்டுவிட்டார்
போலும். அதற்காக அடியேன் மிகவும் கடமை பட்டுள்ளேன்.
அடுத்த அரை மணி நேரத்தில், கருடர் மண்டபத்திலிருந்த இரு பீடங்களை அதன்
இடத்தில் சுவாமி சன்னதிக்குள், ஒரு சில அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து
தூக்கி கொண்டு வைத்தனர். இன்னும் சில அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து
கருட மண்டபத்தை, பிரகாரத்தை, நடை பாதையை பெருக்கி சுத்தம் செய்து
"பளிச்சென" ஆக்கிவிட்டனர். வெளியே வந்து பார்த்த அர்ச்சகரும்,
நிர்வாகிகளும் அசந்து விட்டனர்.
"இங்குதான் ஒரு அபிஷேக பூசை நடந்ததா? என்று கேட்கிற அளவுக்கு மிக மிக
அருமையாக சுத்தம் பண்ணிவிட்டார்களே, இவர்கள்!" என்று அர்ச்சகர் அனைத்து
அகத்தியர் அடியவர்களையும் வாழ்த்தினார். அதை கேட்கிற பாக்கியம் அடியேனுக்கு
கிடைத்தது.
இரு அகத்தியரின் அபிமான அடியவர்கள் கோடகநல்லூர் வந்து சென்றபின்,
தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடியேனுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள்
அனுமதியுடன், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
அனுபவம் ஒன்று). திரு ஜெயராமன் பெங்களூருவில் வசிக்கிறார். போன வருடம்
2016இல் "அந்த நாள் >> இந்தவருடம்" என்கிற அந்த புண்ணிய நாள் அன்று,
கோடகநல்லூர் வந்து, அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்ட பொழுது ஏதோ தோன்றவே,
தீபாராதனையின் பொழுது, பெருமாளிடம் தனக்கு ஒரு நல்ல வேலை பெங்களூருவில்
கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாராம். கோடகநல்லூர் வந்து சென்ற பின்,
உடனேயே திருப்பதியும் சென்று ஸ்வாமியை தரிசனம் செய்கிற பாக்கியம் அவருக்கு
கிடைத்தது. 90 நாட்களில், அவர் விரும்பியபடி, பெங்களூருவில் நல்ல வேலை
கிடைக்க, இந்த வருடமும் வந்து பூசையில் கலந்து கொண்டார். அதற்கு முன்
அடியேனை தொடர்பு கொண்டு "நான் பெருமாளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்! என்ன
செய்யலாம் என்று கூறுங்களேன்!" என்றார். இந்தவருடமும் வந்து பூசையில்
கலந்து கொள்ளுங்கள்! பெருமாளே வழி காட்டுவார், என பதிலளித்தேன். இந்த முறை
வரும் பொழுது, இன்னொரு புதிய வேண்டுதல் அவருடன் சேர்ந்து கொண்டது. தனக்கான
வேண்டுதல் அல்ல. அவரது சகோதரி ஒரு வீடு கட்டி முடித்துவிட்டார். ஆனால் வீடு
கட்டி கொடுத்தவர் வீட்டு சாவியை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். வருடம்
இரண்டு ஓடி விட்டது. கோவிலுக்கு கிளம்பும் முன் தன் சகோதரியை அழைத்து "நான்
கோடகநல்லூர் சென்று உனக்காக வேண்டிக் கொள்ளப்போகிறேன்! பெருமாள் நிச்சயம்
உனக்கு உதவி புரிவார்" என்று கூறிவிட்டு வந்து தீபாராதனையின் பொழுது
விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டார்.
கோடகநல்லூர் பூஜை முடிந்து ஊருக்கு திரும்பியவருக்கு, மகிழ்ச்சியான
செய்தியை பெருமாள் கொடுத்துவிட்டார். வீட்டை கட்டியவருக்கு, அந்த பூசை
நடந்த தினம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. வீட்டு சாவியை, இவரது
சகோதரியை கண்டு கொடுத்து, "நீங்கள் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று
கூறிக் கொடுத்துவிட்டு சென்றாராம். இந்தமுறையும் ஈமெயில் வழி அடியேனை
தொடர்பு கொண்டு நடந்ததை கூறி, "பெருமாள் உடனேயே அருளியதற்கு, நன்றியாக நான்
என்ன செய்ய வேண்டும்?" என்றார். "முடிந்தால், சனிக்கிழமை அன்று
கோடகநல்லூர் வந்து பெருமாளுக்கு பிரகாரத்தில் சுற்று விளக்கு போடுங்கள்",
என்றேன்.
அந்த நாளில் சுற்று விளக்கு போட்டவர்களிடம் ஒரு விஷயத்தை கூற மறந்து போனது. அதை இங்கே தெரிவிக்கிறேன்.
அடியேன் பலமுறை சுற்று விளக்கு போட்டிருக்கிறேன். அது தனியாகவோ, அல்லது
சிறு குழந்தைகளின் உதவியுடனோதான் இருக்கும். முதல் முறை விளக்கு போடச்
சொன்ன பெருமாள் கூடவே, "நீ ஏற்றும் தீபத்தில் என் வலது பாதம் இருக்கும்.
கண் மூடி த்யானம் செய்து பார்" என்றார். அந்த முறை முதல், ஒவ்வொரு முறையும்
அவர் பாதத்தை பார்த்திருக்கிறேன். சில வேளை பெருமாளின் வலது கால்
பாதத்துடன் இன்னொரு வலது கால் பாதம் (மெட்டியுடன்) தெரியும். அதை தாயாரின்
பாதமாக பாவித்து வணங்கி வருகிறேன். அன்று சுற்று விளக்கு போட்டவர்கள்
யாரேனும் கண் மூடி பெருமாளின் பாதத்தை தரிசித்தார்களா? என்று தெரியவில்லை.
ஆனால், விளக்கு போட்டவர்கள் அனைவரும், பெருமாள் பாதத்துக்கு விளக்கு போட்ட
பாக்கியசாலிகள். மற்றவர்களுக்கு, அடுத்த முறை பெருமாள் அருளுவார் என்று
நம்புகிறேன். அடுத்த முறை என்றால், அடுத்த வருடம் அந்த நாள் என்று
அர்த்தமல்ல. விதியிருப்பின், பெருமாள் அழைத்தால், சீக்கிரமாகவே அது
நடக்கலாம். வேண்டிக்கொள்ளுங்கள்.
இரண்டு). திரு சுவாமிநாதன், பாண்டிச்சேரியில் வசிக்கிறார். சிறந்த
அகத்தியர் அடியவர். தன் வீட்டில் அகத்தியர் லோபாமுத்திரை தாயின்
விக்ரகங்களை வைத்து தினமும் பூசை செய்து வருகிறார். நிறைய அனுபவங்களை,
அகத்தியரின் வழிகாட்டுதல்களை பெற்றவர். இந்த வருடம் "அந்தநாள்" அன்று தன்
மனைவியுடன் தரிசனத்துக்கு வந்திருந்தார். அவர் மனைவியும், அகத்தியர்,
லோபாமுத்திரையின் சிறந்த பக்தை. கோடகநல்லூருக்கு கிளம்பும் முன் பூசை
அறையில் நின்று வேண்டிக்கொள்ள, அவர் மனைவிக்கு லோபா முத்திரை தாயின்
ஆசிர்வாதம் வாக்காக கிடைத்துள்ளது.
"சிறு குழந்தையாக, பச்சை சட்டை, பச்சை பாவாடை போட்டு உனக்கு நான் அங்கு வந்து காட்சியளிப்பேன்!" என்று அருள் வாக்கு கிடைத்துள்ளது!
திடமான நம்பிக்கையுடன் இருவரும் கோடகநல்லூர் வந்து சேர்ந்தனர்.
கோடகநல்லூர் வந்து சேர்ந்த சுவாமிநாதன் தம்பதியருக்கு, நிறைய பேரை
சந்திக்கிற பாக்கியம் கிடைத்துள்ளது. அதிலும் முக்கியமாக, அபிஷேக பூசையின்
போது அகத்தியப்பெருமான் பூசை செய்கிற காட்சியை "கண்டு" உணரவே, அவர் தன்
மனைவியிடம், "அகத்தியப்பெருமான் அபிஷேக ஆராதனை செய்வதை பார்த்தாயா?" என்று
கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் மனைவி "அவர் மட்டுமா! லோபாமுத்திரையும்
இருக்கிறாளே! உங்களுக்கு தெரியவில்லையா?" என்று எதிர் வினா எழுப்பினார்.
எத்தனை முறை பிரார்த்தனை செய்தும், அவருக்கு அம்மாவின் தரிசனம்
கிடைக்கவில்லையாம்.
சரி! பூசை முடிந்துவிட்டது! அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த அர்ச்சகரை
பார்த்து "சுவாமி! எனக்கு, பெருமாளுக்கு பூசை செய்த சிறிதளவு பூ பிரசாதமாக
கொடுங்களேன்!" என்றார். இவர் விண்ணப்பத்தை அர்ச்சகர் காதில் வாங்கின
மாதிரியே தெரியவில்லை. இவரும் பல முறை கேட்டுப் பார்த்தார். அர்ச்சகர்,
பெருமாள் சன்னதிக்கு சென்று நிறைய மாலை, பூவை எடுத்து, இவரை சுற்றி
நின்றவர்களுக்கு கொடுத்தாரே ஒழிய, இவருக்கு ஒரு பூ கூட கொடுக்கவில்லை.
சரி! நமக்கு இன்று கொடுப்பினை இல்லை போலும், என மனசை தேற்றிக்கொண்டு, பெருமாளை பார்த்தார்.
பிறகு என்னவோ தோன்ற, மனைவியிடம், "வா! நாம் போய் அகத்தியர் பூசையின்
பிரசாதம் வாங்கிக்கொள்ளலாம். அனைவரும் போகத் தொடங்கிவிட்டனர். பின்னர்
தீர்ந்து விடப்போகிறது. அந்த அருளேனும் நமக்கு கிடைக்கட்டும்!" என்று கூற,
பெருமாளின் சன்னதி முன் நின்று கொண்டிருந்த அவர் மனைவியோ திடமாக கூறினாள்.
"எனக்கு லோபாமுத்திரை அம்மா சின்ன குழந்தையின் வடிவில், பச்சை சட்டை போட்டு
காட்சி கொடுப்பேன் என்று வாக்கு தந்துள்ளார். அவர் வரவேண்டும்!
பார்த்தபின்தான் இந்த பெருமாள் சன்னதியை விட்டு விலகுவேன்! அதுவரை பெருமாளை
பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். அம்மாவை வரச்சொல்லுங்கள் என்று
வேண்டுதலை சமர்ப்பிப்பேன்!" என்று உறுதியாக கூறி நின்றார்.
"என்னடா இது நமக்கு வந்த சோதனை! அம்மா எப்ப வந்து நாம் எப்போது செல்வது" என்ற சிந்தனை இவருக்குள் ஓடியது.
யாரோ மூலஸ்தானத்தில் அர்ச்சனை பண்ண, அது முடிந்து தீபாராதனை நடந்தது.
கைகூப்பி, பெருமாளை வணங்கி நின்று கொண்டிருந்த அந்த அம்மாவின் பின்
பக்கத்தில் யாரோ சுரண்டுவது போல் இருந்தது. உணர்வு வந்து திரும்பி பார்க்க,
ஒரு சிறு குழந்தை பச்சை சட்டை, பச்சை பாவாடை அணிந்து அந்த அம்மாவை தட்டி
கூப்பிட்டு கொண்டிருந்தது.
சற்றே அதிர்ச்சி அடைந்து, திரும்பி பார்த்து, அந்தக் குழந்தையிடம் "என்னமா வேண்டும்!" என அவர் மனைவி கேட்க,
"நீங்களெல்லாம் ஸ்வாமியை பார்க்கிறீர்கள்! எனக்கு முகமே தெரியவில்லை. என்னை
தூக்கிக்கோயேன்! நானும் ஸ்வாமியை பார்ப்பேனே!" என்று கூறியது.
உடனேயே லோபாமுத்திரையின் நினைவு வர, அப்படியே அந்த குழந்தையை வாரி அணைத்து, கையில் தூக்கி கொண்டாள், அவர் மனைவி.
அவர் கையில் அமர்ந்து கொண்ட குழந்தை, பெருமாளை பார்க்காமல், அந்த அம்மாவையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
"ஸ்வாமியை பார்க்கணும்னு சொன்னயே! அங்க பாரு! என்ன பார்த்து சிரிச்சிண்டு இருக்காதே! என கூறியவரிடம்,
"ஸ்வாமியை பார்த்தாச்சு! என்னை கீழே இறக்கிவிட்டேன்!" என கேட்டது.
உடனேயே கீழே இறக்கிவிட்டவுடன், நேராக சன்னதிக்கும் முன் உள்ள இடத்தில்
தாம்பாளத்தில் பூசைக்கு வைத்திருந்த பூக்களிலிருந்து, இரண்டு தாமரை பூக்களை
கையில் எடுத்து வந்து அந்த அம்மாவிடம் "என்னை இனி தூக்கிக்கொள்" என்று
கூறியது.
தூக்கிக் கொண்டதும், அந்த இரு பூக்களை கையில் வைத்து உருட்டி
விளையாடிக்கொண்டே சுவாமிநாதனை பார்த்துவிட்டு புன் சிரிப்புடன் அந்த
அம்மாவின் கையில் அமர்ந்து கொண்டது..
இவரோ, ஒரே ஆச்சரியத்தில் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்!
என்ன சொல்வது, என்ன கேட்பது என்று கூட தோன்றவில்லை.
சற்று நேரம் பூக்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தையிடம், அதன்
தாய் பின்னாலிருந்து "பாரும்மா! அந்த பூக்கள் எல்லாம் சுவாமி பூசைக்காக
வைத்திருக்கிறார்கள். அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு" என்று கூறியதும்,
அதை கேட்டு அந்த அம்மாவிடம் "என்னை கீழே இறக்கிவிடு! நான் போய் பூவை
தட்டில் வைக்கணும்!" என்று கூறியது.
கீழே இறங்கி சென்று, சமர்த்தாக எடுத்த இடத்திலேயே திரும்பி வைத்துவிட்டு,
தன் தாயின் அருகில் சென்று நின்று கொண்டு இவர்கள் இருவரையும் பார்த்துக்
கொண்டிருந்தது. இதற்குள் சற்று கூட்டம் வரவே, அர்ச்சகர் மறுபடியும்
தீபாராதனையை காட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் பெருமாள்
தீபாராதனையை பார்த்து, மெய் மறந்து நின்றனர்.
அந்த தம்பதியரும் தான்.
தீபாராதனை முடிந்த பின் அந்த குழந்தையின் நினைவு மெதுவாக வர, திரும்பி
பார்த்து தேடினால், எங்கும், அந்த தாயும் இல்லை, குழந்தையும் இல்லை.
மனதுள் "லோபாமுத்திரா" என்று அழைத்து வெளியே பிரகாரத்தில், கோவிலுக்கு வெளியே எங்கு சென்று தேடியும் இருவரையும் காணவில்லை.
மறுபடியும் சன்னதிக்குள் வந்து பார்த்த பொழுது அங்கு யாருமே இல்லை. இது
என்ன திருவிளையாடல் என்று மனதுக்குள் தோன்றியது. சற்று கவனமாக இருந்து,
அந்த குழந்தையை இன்னும் சற்று நேரம் பிடித்து வைத்திருக்கலாமே, என்ற எண்ணம்
இருவருக்குள்ளும் தோன்றியது.
அவர் மனைவியோ "பார்த்தீங்களா! அம்மா வருவான்னு எனக்கு வாக்குரைத்தாள்! அதன்
படியே, சொன்ன சொல்லை காப்பாத்திட்டாள்! வந்தது அவளே தான்! இது போதும்!
பெருமாளுக்கு மிக்க நன்றி!" என கூறி காத்திருந்தனர்.
"இனி நமக்கு எங்கே பூ கிடைக்கப் போகிறது!" என்று நினைத்து விலக நினைத்த
சுவாமிநாதனை, அர்ச்சகர் கூப்பிட்டு, "எங்க போறீங்க? நீங்கதானே ஒரு பூவாவது
கொடுங்கள் என்று கேட்டீர்கள்! இப்போது பெருமாள் கொடுக்க சொல்லிட்டார்!
சற்று பொறுங்கள், நான் உள்ளே சென்று வருகிறேன்" என்று கூறி சென்றவர்.
திரும்பி வந்து "நீங்கள் உங்கள் அங்கவஸ்திரத்தை நீட்டி பிடியுங்கள், அம்மா,
நீங்க உங்கள் புடவை தலைப்பை நீட்டி பிடியுங்கள்" என்று கூறிவிட்டு, நிறைய
மாலைகளை இரு வஸ்த்திரத்திலும் போட்டுவிட்டு, "இது போறுமா! இன்னும்
வேணுமான்னு பெருமாள் கேட்க சொன்னார்!" என்றாரே பார்க்கலாம்.
அதை கேட்ட ஸ்வாமிநாதன் அவர்கள், "அய்யா! மன்னிக்கவும்! நான் ஒரு பூ தான்
கேட்டேன். நீங்களோ அத்தனை மாலையையும் பெருமாள் உத்தரவால்
கொடுத்துவிட்டீர்கள். இதுவே மிக அதிகம். இன்னும் வேண்டாம். ரொம்ப
திருப்தி!" என்று கூறிவிட்டு, பெருமாளின் அருளுக்கு நன்றி கூறி, சுமக்க
முடியாமல் சுமந்து வந்து, தங்கள் வாகனத்துக்குள் வைத்துவிட்டு வந்து
பார்த்தால், அவர்களுக்கும், அகத்தியர் அவர் பூசையின் பிரசாதத்தை
கிடைக்கும்படி செய்தார்.
பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் பொழுதும், கண்கள் அங்குமிங்கும் தேடியது, அந்த குழந்தையை ஒரு முறை கூட பார்க்க முடியுமா என்று.
அப்பனும், அம்மையும் கிளம்பி போய்விட்டிருந்தனர். தேடியதுதான் மிச்சம். ஆனால், மிகுந்த மனநிறைவுடன், அன்று அவர்கள் விடை பெற்றனர்.
"அந்தநாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர் - எப்படிப்பட்ட புண்ணிய
தினம் என்பதை, அன்று, காலமும், அடியேனும் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு,
அமைதியாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தோம், என்பது மட்டும் உண்மை.
இறைவன், அகத்தியர் அருளால், "அந்த நாள்>> இந்த வருடம் - 2017 -
கோடகநல்லூர்" தொகுப்பின் முடிவுரைக்கு வந்துவிட்டோம். இதன் தொடர்பாக,
எங்கும் உறையும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் அடியேனின் சிரம்
தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். "நன்று
என்கிற வார்த்தை மிக மிக சிறியது. அன்று வந்திருந்த அகத்தியர் அடியவர்கள்,
அன்றைய தினம் பெருமாளுக்கு,அகத்தியரின் பூசைக்கு "உழவாரப் பணி" செய்ததற்கு
கைமாறாக என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுதுதான், "பெருமாளின் மஞ்சள்
பொடி" பிரசாதம் நினைவுக்கு வந்தது. அதை அன்று பெருமாளே மனம் உவந்து அருளிய
பொழுது, அடியேனுக்கு புரிந்தது, ஒன்றுதான். பெருமாளே, இந்த கலியுகத்தில்,
"அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து, அவரை மனம் குளிரவைக்க, இத்தனை விஷயங்களை
செய்துவிட்டார்களே" என்று பூரித்து போனதால், அவர் கைமாறாக இத்தனை நாள்
யாருக்கும் செய்யாமல் இருந்து, சில காலத்துக்கு முன் அடியேனுக்கு அருளியதை
உங்களுக்கும் அருளினார் என்று தான் சொல்லவேண்டும். ஆம்! அந்த சூட்ச்சுமத்தை
இங்கு சூசகமாக சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள். மனித உடலில் இருக்கும்
எந்த வியாதியையும் (விஷம், கர்மா வினை) எடுத்து, நல் வாழ்வு அளிப்பது, அவர்
கரம், பாதம் பட்ட மஞ்சள்பொடி. அதை உங்கள் அனைவருக்கும் வாங்கி கொடுத்து,
உங்களுக்கு, தெரிந்தோ, தெரியாமலோ உடலுக்குள் இருக்கும் நோயை அடியோடு
விரட்டிவிடவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அதற்காக
பெருமாளிடமும், அர்ச்சகரிடமும் அத்தனை விண்ணப்பித்தேன். அகத்தியர் அருளால்
அதுவும் வெற்றி பெற்றது. என்றேனும், அங்கு செல்லும் பொழுது, மஞ்சள்பொடி
வாங்கி கொடுத்து, பெற்று, அங்கிருப்பவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து, இறை
அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.
முதலில் திருமஞ்சன மஞ்சள் பொடியை கொடுக்கும் பொழுது, அது மிக வேகமாக
தீர்ந்துவிட்டது. அப்பொழுது, ஒரு பெண், தன் தகப்பனாருக்கு உடல் நிலை
சரியில்லை எனவும், இன்று இந்த கோவிலுக்கு வந்தால் மருந்து கிடைக்கும்
எனவும் யாரோ சொல்லியதை கேட்டு, வந்திருந்தாள். அந்த பெண், இன்னும் சிறிது
வேண்டும் என வினவிய பொழுது, திருமஞ்சன மஞ்சள் பிரசாதம், தீர்ந்து
போய்விட்டிருந்தது. நானே, என் கரங்களை பார்த்து, "என்ன செய்வது?" என
யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நினைவுக்கு வந்தது, பெருமாள் பாதத்தில்
பூசிவைத்த மஞ்சள்.
"சற்று பொறுங்கள்! பிரசாத விநியோகத்தின் முடிவில், தருகிறேன். மறக்காமல்
வந்து வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறி, அவர் வந்த பொழுது நிறையவே கொடுக்க
முடிந்தது. எல்லாம் அகத்தியர் அருள்.
கடந்த வருடம், இதே நாளில் இங்கு வந்து ஒரு தாய் தன் மகளின் மேல்
படிப்புக்கா வேண்டிக்கொள்ள, பெருமாளும் அதை அருளி நிறைவேற்ற, அந்த மகளுக்கு
அவள் விரும்பிய மேல் படிப்பே கிடைக்க, இந்த முறை அந்த தாய், மகளையும்
அழைத்து வந்து பெருமாளுக்கு நன்றி கூறிவிட்டு, பெருமாளின், அகத்தியப்
பெருமானின் கனிவை எல்லோரிடமும் கூறி சந்தோஷப்பட்டார்.
ஒரு "அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்"லிருந்து அடுத்த வருட
அந்த புண்ணிய திதிக்குள், இறைவனும், அகத்தியரும் எத்தனையோ பேரின்
வேண்டுதல்களை, சரியான நேரம் பார்த்து நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள் என்பதை
அறிந்து அடியேன், மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்த அனைவருக்கும் கூற விரும்புவது ஒன்றுதான்!,
"பொறுமையாக இருங்கள்! அகத்தியப் பெருமான் அருளுவார்" அதையும் நீங்கள்
மட்டும்தான் உணர்வீர்கள்.
கோடகநல்லூர் மட்டுமல்ல, எந்த கோவிலிலும், மாலை/சந்தியா வேளையில் சுற்று
விளக்கேற்றுவது, மூலவருக்கு பூசைக்கு "பச்சை கற்பூரம்" வாங்கி கொடுப்பது
போன்றவை இறையை மனம் நெகிழவைக்கும், இறைவனின் அருளை உடனடியாக தருவிக்கும்
என்பதும் உண்மை!
அகத்தியர் அடியவர்கள் சேர்ந்து செய்த உழவாரப் பணி, உண்மையிலேயே அடியேனுக்கு
1008 கைகள் முளைத்துவிட்டது போன்று தோன்றியதே உண்மை. அதற்காக உங்கள்
அனைவருக்கும் மிக மிக கடமை பட்டுள்ளேன்.

அபிஷேக பூஜை தினம் இந்த வருடம், வரும் 18-10-2021, திங்கட்கிழமை அன்று வருகிறது.
அந்த
முகூர்த்த தினத்தின் முக்கியத்துவத்தை சிறிது உரைக்கிறேன். அதற்கு முன்,
நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நாடியில், திரு ஜானகிராமன் கேள்விக்கு,
கீழ் கண்டவாறு பதில் உரைத்துள்ளார்.
"குருவே!
வரும் 18/10/2021 அன்று உங்கள் உத்தரவின் பேரில், கோடகநல்லூர்
ப்ரஹன்மாதவர் கோவிலில் பெருமாளுக்கு அபிஷேக பூஜைகள் நடப்பதாக தகவல்
வந்துள்ளது. அடியேன் அங்கு சென்று பூஜையில் கலந்து கொள்வதற்கு அனுமதி
உண்டா? ஆயின் முன் பதிவு செய்ய வேண்டும்!" என வினவினார்.
"அந்த
புண்ணிய முகூர்த்தத்தில் யாமே அங்கிருக்கப் போகிறோம். அபிஷேக பூஜைகளை
செய்யப்போகிறோம்! ஆகவே கிளம்பி செல்க, அனுமதி உண்டு!" என பதில்
உரைத்துள்ளார்.
புண்ணிய முகூர்த்த முக்கியத்துவம் என்னவென்றால்,
- எல்லா
தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி
இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள்.
- தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.
- அன்றைய
தினம், அனைத்து நதிகளும், தாமிர பரணியில் நீராடி தங்களை சுத்தி செய்து
கொள்கிற நாள். ஆகையால், அன்று அங்கு நீராடி, அடியவர்களும், தங்களை சுத்தி
செய்து கொள்ளலாம்.
- அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
- சித்தன் அருளை வாசிக்கும், எத்தனையோ அடியவர்களின் வேண்டுதலை/பிரார்த்தனையை நிறைவேற்றிய முகூர்த்த நாள்.
சமீபத்தில்
கோடகநல்லூர் பெருமாள் கோவில் அர்ச்சகர், திரு.ரமணன் அவர்களை சந்திக்க
நேர்ந்தது. 18/10/2021 அன்று கோவிலின் "பவித்ர உற்சவம்" தொடங்குகிற படியால்
அதனுடன் சேர்த்து அகத்தியப்பெருமான் அருளும் அபிஷேக பூஜைகளை நடத்துவதாக
தீர்மானித்துள்ளார். எல்லா அகத்தியர் அடியவர்களும் பங்கு பெறலாம், என
உரைத்தார். அநேகமாக அபிஷேக பூஜையை காலை 10 மணிக்கு துவங்க
தீர்மானித்துள்ளார். அனைத்து அகத்தியர் அடியவர்களும் இந்த செய்தியை
அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ளவும், வேண்டியுள்ளார்.
நெல்லை
சந்திப்பை அடைந்தவர்கள், தீவுத்திடலில் உள்ள தற்காலிக பேரூந்து
நிலையத்தில், சேரன்மாதேவி செல்லும் பஸ்சில் நடுக்கல்லூரில் இறங்கி
அங்கிருந்து 1 1/2 கி.மீ நடந்தோ, ஆட்டோவிலோ பயணித்து கோடகநல்லூரை அடையலாம்.
பூக்கள்,
துளசி உதிரியாகவோ, மாலையாகவோ, சிறிது பச்சை கற்பூரம், பெருமாளுக்கு
பூஜைக்கு வாங்கி கொடுத்து, பிரார்த்தனையை கொடுத்து, அவர் அருளை பெற்றுக்
கொள்ளுங்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
நன்றி:- சித்தனருள் வலைத்தளம்
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment