"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 30, 2021

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - 01.09.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

 குருவே சரணம். குருவின் தாள் என்றும் பணிகின்றோம். அகத்தியம் என்பது பெருங்கடல். அதில் நாம் தினமும் சிறிது நீர்துளிகளை மட்டும் பருகி வருகின்றோம். ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் வந்த பிறகு, நாம் தூசி கிராமத்தில் உள்ள நம் குருநாதர் பற்றி அறிந்தோம்.நேரில் நம்மை எப்போது அழைப்பாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்தோம். நினைப்பது நடக்கும்..கேட்டது கிடைக்கும் என்பதற்கேற்ப சென்ற ஆண்டில் நேரில் தரிசனம் பெற்றோம். விரைவில் தனிப்பதிவில் தரிசனம் பற்றி பேசுவோம். சரி. இன்றைய பதிவிற்குள் செல்வோமா?

தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் அகத்திய பெருமானுக்கு 8 ஆம் ஆண்டு  தெய்வீக விவாஹ விழா

ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள் முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும், சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள் சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம், சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில் பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது.


ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.
இவ்வுலகம் உய்யும் பொருட்டு எம் ஐயன் ஆற்றி வரும் பணி அளப்பரியது.நாடி வருபவர்களுக்கு அறம்,பொருள், இன்பம் அளித்து வீடுபேறும் அளித்திட பல ஊர்களில் கோயில் கொண்டுள்ளார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் அருகில் தூசி எனும் ஊரில் அபிராமி சமேத அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தம் இல்லாள் லோபமுத்ரா தேவியுடன் வீற்றிருந்து அருள்கிறார்.
நன்மக்கள் ஒன்று கூடி "அகத்தியர் குழுமம் "ஆகி பல திருப்பணிகள் செய்து வருகிறார்கள். அவற்றில் ஒன்று "அகத்தீஸ்வரர் திருக்கல்யாணம்".
சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தர் மகான் ஸ்ரீஅகத்தியப்பெருமான் லோபமுத்ரா தேவி திருக்கல்யாண வைபவத்தை காண கண் கோடி வேண்டும்.

சிவபெருமான், முருகப்பெருமான், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் அனைவரும் பார்த்திருப்போம். ஐயன் அகத்தியப் பெருமான் திருக்கல்யாணம் ஐயன் வீற்றிருக்கும் தலங்களில் ஒரு சில தலங்களில் மட்டுமே வெகு விமரிசையாக நடைபெறும்.

 மேலும் விபரங்களுக்கு மேலே இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும்.








இச்சரிதம் ஸ்ரீ அகஸ்திய பெருமான் அவர்கள் ஸ்ரீ லோபமாதா தேவி அவர்களை மனைவியாக ஏற்றுக்கொண்டதையும்,தீவினைகளிலிருந்து உலகை மீட்க சக்தி உபாசனையை உலகெங்கும் பரப்பும் பணியை மேற்கொண்டதையும்,ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியால் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம தோத்திரம் உபதேசிக்கப்பட்டதையும் பற்றி விளக்குகிறது,இந்த சரிதத்தை முழுமையான நம்பிக்கையோடும்,பக்தியோடும் படிப்பவர்களுக்கு ஸ்ரீ அகஸ்திய லோபமாதா தேவி அவர்களின் ஆசிர்வாதமும்,கருணையும் பரிபூரணமாக கிடைக்கும்.

"ஸ்ரீ அகஸ்தியர் லோபமாதா திருக்கல்யாணம் "

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனாம் சிவபெருமானின் சித்தத்தில் என்றும் உறையும் சித்தர்களின் தலைமை பீடாதிபதி ஸ்ரீ அகஸ்தியர் லோபமாதா தேவி திருக்கல்யாண வைபவம்.



ஸ்ரீ லோபாமுத்ரா தேவி,காசி ராஜாவின் அருமைப் புதல்வி சிவ பூஜையில் உன்னத நிலையை அடைந்தவள்,சதா சர்வ காலமும் சிவ தியானத்தில் திளைப்பவள்.அந்த தேவிக்கும் ஒரு இருந்தது.அது என்ன? தான் சிவ பூஜையிலும்,சிவ தியானத்திலும் உன்னத நிலையை அடைந்தது போலவே சக்தி பூஜையிலும் பரிபூரண நிலையை அடைய விரும்பினாள்.அதற்காக தன இஷ்டதெய்வமான சுயம்பு மூர்த்தியைப் பல்லாண்டு காலமாக காராம் பசுவின் பாலைக் கறந்து அதன் சூடு ஆறும் முன் சுவாமிக்கு அபிஷேகம் செய்து பிராத்தனை செய்து வந்தாள்.ஸ்ரீ லோபாமுத்ரா தேவியின் அயராத பூஜைகளால் மகிழ்வுற்ற ஈசன் அசரீரீ வாக்காய் "மகளே !உன்னுடைய பூஜையால் யாம் மகிழ்வுற்றோம்.உனது திருமண வைபவத்தில் உன்னுடைய விருப்பம் நிறைவேறும் !உன்னை மணக்கப் போகும் மணாளன் சக்தி உபாசனையில் உன்னத நிலையைப் பெற்றவன்.அவன் நேத்திர தீட்சையால் உன்னுடைய சக்தி பூஜை பூரணமடையும்,அதுவரை வசின்யாதி வாக் தேவதைகளை வழிபாடு  செய்து வருவாயாக !"என்று அருளினார்.

ஸ்ரீ லோபமாதா தேவி ஈசனுக்கு நன்றி தெரிவித்து விட்டு அன்றிலிருந்து எட்டு வசின்யாதி வாக் தேவதைகளையும் உபாசித்து வந்தாள்.ஸ்ரீ லோபாமுத்ரா தேவி உரிய திருமண வயதை அடைந்தவுடன் காசி ராஜா தன் ஆருயிர் மகளின் திருமணத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்டு ஸ்ரீ லோபாமுத்ரா தேவியின் விருப்பத்தை கேட்க தேவியும்,"தந்தையே சக்தி உபாசனையில் உன்னதம் பெற்ற ஒருவரையே நான் மணக்க விரும்புகிறேன்.அவர் ராஜாவாக,ரிஷியாக,முனிவராக இருந்தாலும் அவர் சக்தி உபாசனையாலேயே தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்!"என்று தன் உயர்ந்த பண்பை வெளிப்படுத்தினாள்.

காசி ராஜனும் அருமைப் புதல்வியின் தெய்வீக நிலை கண்டு மகிழ்ந்து தன்னுடைய குல குருவை நாடி லோபாமுத்ராவின் எண்ணத்தைக் கூறினார்.குலகுரு அதை ஆமோதித்து,"சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்தவர் ஸ்ரீ அகஸ்தியர் ஒருவரே.ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியிடமே மந்திர உபதேசம் பெற்றவர்.ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் பரிபூரண அருளைப் பெற்றவர்.ஸ்ரீ பராசக்தியின் அனைத்து பீடங்களிலும் எழுந்தருளி நித்ய பூஜைகளை முறையாக நிறைவேற்றுபவர்.ஸ்ரீ தேவியின் திருமணக் கோலங்களை பல்வேறு தலங்களிலும் தரிசிக்கும் பேறு பெற்றவர்.அவரே நமது லோபாமுத்ரா தேவிக்கு ஏற்ற மணவாளன் ",என்று ஸ்ரீ அகஸ்தியரின் பெருமைகளை எடுத்துரைத்தார்.இதனால் பெரிதும் மகிழ்வுற்ற காசி ராஜா குருவின் அனுமதியுடன் பரிவாரங்கள் புடை சூழ பொதிய மலை சென்றடைந்தார்.
பொதிய மலை அடிவாரத்திலேயே தங்கி ஹோமம்,வேள்விகளை நிகழ்த்தி வேதியர்களுக்கும் ஏழைகளுக்கும் தான தர்மங்களை அளித்து வந்தார்.ராஜாவாக இருந்தாலும் ஸ்ரீ அகஸ்திய பெருமானை அவரது ஆஸ்ரமத்திற்கு சென்று பார்க்கும் தகுதி தனக்கு இல்லை என்று நினைத்து ஸ்ரீ அகஸ்தியரின் கருணைக் கடாட்சம் தன் மேல் விழும் வரை இங்கேயே காத்திருப்போம் என்ற மன உறுதியுடன் தன் வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்.என்ன ஒரு பணிவு அடக்கம் பார்த்தீர்களா?

அன்னையின் அன்புக் கட்டளை

அங்கே ஆசிரமத்தில் ஸ்ரீ அகஸ்தியப் பெருமான் பிரம்ம முகூர்த்த பூஜைகளை தன் சீடர்களுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது சிவபெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளி,"அகஸ்திய முனியே! பன்நெடுங் காலமாக எமது திருமணக் கோலத்தைப் நாங்கள் காண விரும்புகிறோம்",என்று அருளினார்.தேவியும் ,"குழந்தாய் ! வரப்போகும் யுகங்களில் தர்மம் குறைந்து அதர்மம் பெருகும்.தீவினைகளிலிருந்து உலகை மீட்க சக்தி உபாசனையே பெரிதும் உதவும்.சக்தி உபாசனையை பரப்பும் திருப்பணியை உமக்கு அளிக்க இருக்கின்றோம்".
மோட்ச சாம்ராஜ்யத்தைத்.தந்து இகபர சுகத்தையளிக்கக் கூடிய லலிதா சகஸ்ரநாம தோத்திரமும் சரஸ்வதியின் குருவான ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தியால் உனக்கு தக்க தருணத்தில் உபதேசிக்கப்படும்.சிவ சக்தி ஐக்கியம் உன்னதம் பெற்ற தாம்பத்திய வாழ்வே கலியுகத்திற்குரிய தர்மமாக விளங்குவதால் சக்தி உபாசனையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்த நீயும் சம்சார தர்மத்தை ஏற்பாயாக !"என்று திருவாய் மலர்ந்தருளினார்.

ஸ்ரீ அகஸ்தியப் பெருமான் கண்களில் நீர் மல்க அம்மையாரைப் பல முறை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார்.அம்மையப்பரின் திருவிருப்பத்தை நிறைவேற்றுவதைவிட இந்த அடிமைக்கு வேறு பணி உண்டா என்று ஸ்ரீ அகஸ்தியர் வியந்து அடுத்து தான் ஆற்ற வேண்டிய செயலைப் பற்றித் தியானிக்க காசி ராஜா மலையடிவாரத்தில் தன் மகளை ஸ்ரீ அகஸ்தியருக்கு மணமுடிக்க காத்திருப்பதை அறிந்து எம்பெருமானின் கருணையை எண்ணி எண்ணி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.

ஸ்ரீ அகஸ்தியர் சீடர்கள் மூலம் தன் விருப்பத்தை சொல்லி அனுப்பிட காசி ராஜாவும் ஒரு புனிதமான நாளில் ஸ்ரீ அகஸ்தியர் லோப முத்ரா தேவியின் திருமண வைபவத்தை இனிதே நிறைவேற்றினார்.

திருமண வைபவத்தில் ஸ்ரீ அகஸ்திய பெருமானின் திவ்ய நேத்ர திருஷ்டி ஸ்ரீ லோப மாதா தேவி மேல் விழ இந்த தெய்வீக திருநேத்ர தீட்சையால் ஸ்ரீ  லோப முத்ரா தேவியின் சக்தி வழிபாடு பரிபூரணமடைந்தது.ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியே மும்மூர்த்திகள்,வசின்யாதி வாக் தேவிகளுடன் நேரில் பிரசன்னமாகி மணமக்களை ஆசிர்வதித்தாள்.

லோப முத்ராவே லோப மாதா!

வசின்யாதி வாக் தேவதைகள் ஸ்ரீ லோப முத்ரா தேவியை ஆசிர்வதித்து சக்தி உபாசனையில் அவள் அடைந்த நிலையை உன்னத நிலையைப் போற்றி லோபாமாதா என்று அழைத்து மகிழ்ந்தனர்.இதை பின்பற்றியே எமது ஆஸ்ரமும் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது.
திருமண வைபவத்தில் மணமக்களுக்குப் பரிசளிக்கும் வழக்கம் உண்டல்லவா? எனவே  தேவாதி தேவர்களும்,காசி ராஜாவும்,மற்ற தேசத்து ராஜாக்களும்,சக்ரவர்த்திகளும் பல அற்புதமான பரிசுப் பொருட்களை ஸ்ரீ அகஸ்தியருக்கு அளிக்க முன் வந்தனர் . ஸ்ரீ அகஸ்தியர் அனைத்து பரிசுப் பொருட்களையும் இறைவனுக்கே அர்ப்பணித்துவிட்டார்.

தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் அகத்திய பெருமானுக்கு  8 ஆம் ஆண்டு தெய்வீக விவாஹ விழா நாளை நடைபெற உள்ளது. அன்பர்கள் தங்களால் இயன்ற கைங்கர்யம் செய்து குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

வேண்டியதைத் தருவான் கண்ணன் - ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று கிருஷ்ண ஜெயந்தி.இந்து தர்மத்தில் தெய்வங்களுக்கு பஞ்சமில்லை. எனினும், சில தெய்வங்களை நாம் தெய்வங்களாக மட்டும் பார்க்கிறோம். சில தெய்வங்களையோ, தோழனாக, சகோதரனாக, வழிகாட்டியாக, குருவாக, காதலனாக, குழந்தையாக என பல வடிவங்களிலும் கற்பனை செய்து கொள்கிறோம். அப்படி அனைத்து வகைகளிலும் நம் மனங்களில் வியாபித்து இருக்கும் ஒரு தெய்வம்தான் கண்ணன்!!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வடும் தேய்பிறை அஷ்டமி கிருஷ்ணாஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி என்று பல பெயர்களில் கண்ணனின் பிறந்தநாள் நாடு முழுதும் கொண்டாடப்படுகின்றது.

தேவகிக்கும் வசுதேவருக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணன், கோகுலத்தில் யசோதைக்கும் நந்தகோபருக்கும் மகனாக வளர்ந்தார். கன்ணனின் வாழ்க்கையே ஒரு பாடம்தான். வாழ்வின் அனைத்து சிக்கல்களிலும் இருந்து எப்படி வெளி வருவது என்பதையும், தர்மமும், கடமை உணர்ச்சியும் என்றும் தவறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் பகவத் கீதையில் உபதேசம் செய்தார்.



இன்றைய நன்னாளில் இன்றைய பதிவில் ஆவலோடு காத்திருக்கும் உங்களுக்காக நாம் படித்து ரசித்த கதை ஒன்றை இங்கே பகிர்கிறோம். தினமலர் ஆன்மீக மலரில் வெளியான தொடர் ஒன்றில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய கதை இது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் மிகச் சிறந்த ஆன்மீக எழுத்தாளர். அடக்கமே உருவானவர். அவரை பற்றி நேரம் வரும்போது நிறைய பகிர்கிறோம்.

உள்ளம் உருகி குருவாயூர் கண்ணனை வழிபட்ட பக்தர்கள் வரிசையில் குரூரம்மைக்கும், பில்வமங்களனுக்கும் சிறப்பான இடம் உண்டு. ஒருவர் பெண். இன்னொருவர்ஆண். 

குருவாயூரில் இந்த இருவரது பக்தியும் பிரசித்தம். கண்ணனை நேரில் கண்டவர்கள் என்று,  இந்த இருவரைப் பார்த்ததும் மக்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதுண்டு. 

காலில் கொலுசு கொஞ்ச கொஞ்ச குரூரம்மை வீட்டிற்கு நடந்து செல்லும் சின்னக் கண்ணன் உரிமையோடு அவள் மடியில் ஏறி அமர்ந்து கொள்வான். அவள் ஊட்டிவிட்டால்தான் உண்பேன் என்று அடம் பிடிப்பான். அவளும் கண்ணன் வந்து தன் கையால் சாப்பிடாதவரை, தான் சாப்பிட மாட்டாள். 

மற்ற இடங்களில் நைவேத்யம் என்பது கண்ணன் முன்னால் உணவை வைத்து அவன் உண்பதாக எண்ணும் பாவனை தானே! ஆனால், குரூரம்மை வீட்டில் கண்ணன் உண்மையாகவே வெண்ணெயும், நாவல் பழமும் கேட்டுக் கேட்டு உண்பான். "போதும்! உன் வயிற்றுக்கு ஆகாது. எத்தனை சாப்பிட்டு விட்டாய்!'' என்று அவன் கையில் உள்ளதைப் பிடுங்கி எடுத்து வைத்து அவனுக்கு முத்தம் கொடுப்பாள் குரூரம்மை. 

அவள் தன்னை யசோதை போல நினைத்துக் கண்ணனிடம் பக்தி செலுத்தினாள். குரூரம்மை போல் கண்ணனை நேரில் காணும் பாக்கியத்தைப் பெறாவிட்டாலும், மூவுலகையும் ஈரடியால் அளந்த கண்ணன், தன் சின்னஞ்சிறு அடிகளை வைத்துக் கொலுசு கொஞ்சக் கொஞ்ச அவள் வீட்டில் நடக்கும் சப்தத்தைப் பலர் கேட்டதுண்டு. 

பில்வமங்களனது கிருஷ்ண பக்தி குரூரம்மையின் பக்திக்குச் சிறிதும் சளைத்ததல்ல. ஆனால், அவன் பக்தி சற்று ஆக்ரோஷமான பக்தி. கண்ணனையே உரிமையோடு அதட்டும் பக்தி. 

"என்ன ஓயாமல் புல்லாங்குழல் வாசிக்கிறாய்? வாய் வலிக்காதா? அந்தப் பிஞ்சு உதடுகளுக்குச் சற்றேனும் ஓய்வு வேண்டாமா?'' என்று புல்லாங்குழலைப் பிடுங்கி வைத்துக் கொள்வான். புல்லாங்குழலைத் தருமாறு கண்ணன் கெஞ்சியவாறு பில்வமங்களன் பின்னால் ஓட, "நீ ஓய்வில்லாமல் ஊதுவதை அனுமதிக்க மாட்டேன்,'' என்று பில்வமங்களன் புல்லாங்குழலோடு ஓட குருவாயூர்க் கோயில் முழுவதும் இந்த இருவரின் ஓட்டத்தால் ஒரே அமர்க்களம் தான். 

பக்தர்கள் பில்வமங்களனின் பரவசத்தைப் பார்ப்பார்கள். 

கண்ணன் ஓடும் சப்தத்தைக் கேட்பார்கள். கண்ணனை தரிசிக்க இயலாவிட்டாலும், கண்ணனின் கால் கொலுசின் ஒலியைக் கேட்டதே பாக்கியம் எனக் கண்ணீர் வடிப்பார்கள். 

அதே காலத்தில் குருவாயூரில் வசித்த ஒருவனுக்குத் தாளாத வயிற்று வலி. அவன் போகாத மருத்துவரில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனால், வயிற்று வலி அவனைப் படுத்தியெடுத்துக் கொண்டிருந்தது. துடிதுடித்துக் கதறியவாறு அவன் அவஸ்தைப்படுவதைப் பார்த்தார்கள் உறவினர்கள். "நாராயண பட்டத்திரியின் வாதநோயைப் போக்கிய கண்ணன் உன் வயிற்று வலியைப் போக்கமாட்டானா? போய் குரூரம்மையிடமும் பில்வ மங்களனிடமும் விண்ணப்பித்துக் கொள். இருவரில் யாரேனும் ஒருவர் உன் வயிற்று வலியைக் கண்ணன் அருளால் கட்டாயம் குணப்படுத்தி விடுவர்,'' என்று அறிவுரை சொன்னார்கள். 

அவனுக்கும் அதுதான் ஒரே வழி என்று பட்டது. முதலில் பில்வ மங்களனைப் போய்ப் பார்த்தான். வயிற்று வலி தீர ஒரு வழிசெய்ய வேண்டும் என்று அவன் காலைப் பிடித்துக் கொண்டான். 

பில்வமங்களனின் கருணைப் பார்வை அவன்மேல் விழுந்தது. ''இன்று மாலை கண்ணன் என்னோடு விளையாட வருவான். அப்போது அவனிடம் உன் பிரச்னையைச் சொல்கிறேன், அவன் மனம் வைத்தால் உன் வயிற்று வலி தீரும் என்று தான் தோன்றுகிறது,'' என்றான். 

மாலை நேரம். சின்னஞ்சிறிய பட்டுப் பீதாம்பரத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, மயில் பீலியை ஒழுங்கு செய்துகொண்டு, "ஓடிப்பிடித்து விளையாடலாமா, இல்லை கண்ணாமூச்சி விளையாடலாமா?'' என்று கேட்டவாறே பில்வமங்களன் முன் தோன்றினான் கண்ணன். 

"கிருஷ்ணா! விளையாட்டெல்லாம் இருக்கட்டும். உன்னால் இன்று ஒரு காரியம் ஆகவேண்டும்?''

"என்ன வேண்டும் உனக்கு?''

"இதோ! என் அருகே நிற்கும் இவனின் தீராத வயிற்று வலியை நீ குணப்படுத்தக் கூடாதா? என்னைச் சரணடைந்திருக்கிறான். இவனது வயிற்று வலியைப் பார்த்தால் என் மனம் சங்கடத்தில் ஆழ்கிறது''.

கண்ணன் கலகலவென நகைத்தான். 

"பில்வமங்களா! அது அவனது கர்மவினை. அவனின் முந்தைய வினை தான் இந்த ஜன்மத்தில் வயிற்று வலியாய் வந்து சேர்ந்திருக்கிறது. பூர்வ ஜன்மத்தில் செய்த பாவத்தின் பலனை அவன் அனுபவித்துத்தானே ஆகவேண்டும்? அது இருக்கட்டும். விளையாட நேரமாகிவிட்டது. வா!''

கண்ணன் பில்வமங்களனின் கையைப் பிடித்து இழுத்தான். பில்வ மங்களனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 

தன்னைச் சரணடைந்தவனைப் பார்த்து, "அன்பனே! உன் முந்தைய கர்மவினையின் பலன் உன் வயிற்று வலி. அது குணமாகாது. அதை சகித்துக் கொள். உன் வினை கழிகிறது என்று நினைத்துக் கொள். கண்ணன் சொன்னதைத்தான் உனக்கு நான் சொல்கிறேன்!'' என்று சொல்லிவிட்டுக் கண்ணனோடு விளையாடப் போய்விட்டான் பில்வ மங்களன். 

வயிற்று வலிக்காரனின் மனம் சோர்வடைந்தது. "இது ஒரு பதிலா? முதலையைச் சக்கரத்தால் அறுத்தவனுக்கு முன் வினையை அதே சக்கரத்தால் அறுப்பது சிரமமா? இந்த வயிற்று வலியுடன் இனியும் எத்தனை ஆண்டுகள் துடிதுடிப்பது? சரி. போய் குரூரம்மையிடம் விண்ணப்பிப்போம். அவன் விறுவிறுவென்று நடந்து குரூரம்மை இல்லத்திற்குச் சென்றான். அவள் பாதங்களில் விழுந்து தன் பிரச்னையைச்சொல்லி அழுதான். 

குரூரம்மை அவனைக் கனிவோடு பார்த்தாள். "மகனே! என் கண்ணனால் ஆகாதது ஒன்றுமில்லை. இன்று அவன் உணவுண்ண வருவான். அவனிடம் உன் பிரச்னையைச் சொல்வேன். உன் வயிற்றுவலி இப்போதே தீர்ந்ததாக வைத்துக் கொள். நிம்மதியாகப் போய்வா!'' என்றாள். 

இரவு... "எனக்குச் சாப்பிட என்ன வைத்திருக்கிறாய்?'' என்று கேட்டவாறே அவள் மடியில் ஏறி அமர்ந்துகொண்டான் சின்னக்கண்ணன். சர்க்கரை கலந்த பாலை அவனின் சிவந்த வாயில் புகட்டியவாறே குரூரம்மை சொல்லலானாள்:

"என் கண்ணே! அந்த வயிற்று வலிக்காரனும் உன் படைப்புத்தானே? அவனுக்கு நீ அருள் புரியத்தான் வேண்டும். அவனது வயிற்று வலியைப் பார்க்கும்போது என் வயிறு துடிக்கிறது. இந்தப் பாலை நீ குடித்து முடிப்பதற்குள் அவன் வயிற்று வலி குணமாக வேண்டும். கம்சனையே அழித்த உன் அருள் அவன் வயிற்று வலியையும் அழிக்கட்டும். பால் உன் உதட்டின் ஓரத்தில் சிந்தியிருக்கிறது பார். இரு. துடைத்துவிடுகிறேன்.''

''சரி. அவன் வயிற்றுவலியைக் குணப்படுத்தி விட்டாயல்லவா? இனி நான் தாலாட்டுப் பாடுகிறேன். என் மடியிலேயே படுத்துத் தூங்கு. ஓயாமல் குருவாயூர் சந்நிதியில் ஓடி ஓடி விளையாடினால் கால் வலிக்காதா? ஏற்கெனவே பதினாலு வருஷம் ராமாவதாரத்தில் காட்டில் நடந்த கால்களாயிற்றே? இரு. உன் கால்களைப் பிடித்து விடுகிறேன்''.

குரூரம்மை தாலாட்டுப் பாடிக்கொண்டே கண்ணனின் பிஞ்சுக் கால்களைப் பிடித்துவிட்டாள். சொக்கும் கண்களுடன், மெல்லிய ரோஜா உதடுகளைத் திறந்து கொட்டாவி விட்டவாறு ஒரு சிறு முறுவலுடன் தூங்கலானான். 

என்ன ஆச்சரியம்! வயிற்று வலிக்காரனின் வயிற்று வலி ஒரே கணத்தில் குணமாகி விட்டது! ஊரெங்கும் குரூரம்மையின் வேண்டுதலால் அவனது வயிற்று வலி குணமானது பற்றித்தான் பேச்சு!....

இதையறிந்த பில்வமங்களனுக்கு வந்த ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. மறுநாள் தன் முன் கண்ணன் வந்தபோது, உரிமையுடன் அதட்டிக் கேட்டான். 

"நான் கேட்கும்போது முன்வினை என்றாய். ஆனால், குரூரம்மை கேட்டபோது வயிற்று வலியைக் குணப்படுத்தி விட்டாயே? ஏன் இப்படி?'' கலகலவெனச் சிரித்த கண்ணன் பின் சொல்லலானான்:

"அன்பனே! ஆழ்ந்த நம்பிக்கை தான், வேண்டுதல் பலிப்பதின் பின்னணியில் உள்ள சூட்சுமம். கொஞ்சம் அவநம்பிக்கை கொண்டாலும் வேண்டுதல் பலிக்காது. நீ என்ன சொன்னாய்? இவனின் தீராத வயிற்று வலியை குணப்படுத்தக் கூடாதா என்றாய். குணப்படுத்தக் கூடாதா என்று ஏன் சொல்ல வேண்டும்? குணப்படுத்து என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? உன் நம்பிக்கைக் குறைவு எனக்கு அலுப்பைத் தந்தது. அதனால் முன்வினை என்று சால்ஜாப்புச் சொன்னேன். கடவுளின் அருளிருந்தால் முன்வினை என்ன செய்யும்? முன்வினையை உன் அருளால் போக்கு என்று நீ என்னிடம் கேட்கவும் இல்லை. ஆனால், குரூரம்மை என்ன சொன்னாள் தெரியுமா? இந்தப் பாலை நீ குடித்து முடிப்பதற்குள் அவன் வயிற்று வலி குணமாக வேண்டும். அவன் வயிற்று வலியைக் குணப்படுத்தி விட்டாயல்லவா? என் மடியிலேயே படுத்துத் தூங்கு என்றாள்! அவள் என் அருள்மேல் வைத்த அளவற்ற நம்பிக்கையால் என் அருள் உடனே செயல்பட்டு அவன் வயிற்றுவலி குணமாகிவிட்டது.'' 



பில்வமங்களா! நீ, குரூரம்மை இருவருமே எனக்கு இரு விழிகள்! உங்கள் இருவரின் பக்தி காரணமாக உங்கள் இருவரிடமுமே எனக்கு சமமான அளவு பாசமிருக்கிறது. வா., நேரமாகிறது. விளையாடலாம்''.

வேண்டுதல் எப்படி இருக்கவேண்டும் என்பதன் சூட்சுமத்தை விளக்கிய கண்ணனை இழுத்து அணைத்து முத்தமிட்ட பில்வமங்களனின் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு தன்னைப் பிடிக்கச் சொல்லி ஓடினான் கண்ணன். அவனது கால் கொலுசின் சப்தம் குருவாயூர் சந்நிதியில் கலகலவென ஒலிக்கத் தொடங்கியது. 

நன்றி - திருப்பூர் கிருஷ்ணன் - தினமலர் ஆகஸ்டு 2012

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

நெற்றிக்கண்ணுடன் ஐஸ்வர்யங்கள் அருளும் ஸ்ரீ பாடலாத்ரி ந்ருஸிம்ஹ பெருமாள் திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_13.html

கோவிந்தா...கோவிந்தா...கோவிந்தா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_82.html

பூலோக வைகுண்டம் தரிசனம் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_63.html


அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html

பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_96.html

Thursday, August 26, 2021

ஓம் ஸ்ரீ கருணானந்தேஸ்வராய நமஹ - சாது ஸ்ரீ கருணாம்பிகை - 51வது குருபூஜை விழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று முழுதும் ஆவணி மாத ரேவதி நட்சத்திரம். இன்றைய திருநாளில் ஸ்ரீ சாது கருணாம்பிகை அம்மையாரை பற்றி அறிய இருக்கின்றோம். முதன் முதலாக ஸ்ரீ சாது கருணாம்பிகை அம்மையாரைப் பற்றி பேராசிரியர் M.K தாமோதரன் ஐயா எழுதிய நூல் மூலம் அறிந்தோம். இந்த நூல் நாம் சில வருடங்களுக்கு முன்னர் படித்தது. அப்போதே மனம் ஏங்கியது. எப்போது நமக்கு தரிசனம் கிடைக்கும் என்று? அன்று எண்ணிய எண்ணம் இன்று விளைவிற்கு வந்து, இன்றைய பதிவாக மலர்கின்றது. கேட்டது கிடைக்கும், நினைப்பது நடக்கும் என்பதற்கு இன்றைய பதிவும் உதாரணம் ஆகும்.


இறைத் தத்துவத்தை உணர பக்தியில் பலவகைகள் உண்டு. சிரவணம்,கீர்த்தனம்,  ஸ்மரணம், பாத சேவனம், வந்தனம், அர்ச்சனம்,தாஸ்யம், சினேகம், ஆத்ம நிவேதனம் என்னும் சரணாகதி. பாதைகள் வேறானாலும் இலக்கு ஒன்றே. எண்ணற்ற மானுடர்களில் ஆண், பெண் பேதமின்றி இறைவனை சென்றடையும் ஆத்மா ஒன்றே.

 பெண் சித்தர்களுள் ஔவையாரும், காரைக்கால் அம்மையாரும் மனித உடலோடு கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனை நேரில் தரிசித்தவர்கள். இம்மண்ணுலகில் அவர்களைப் போல் மானிடப் பிறப்பெடுத்து, இறையை நாடிச் சென்று,இறை அனுபவத்தைப் பெற்று, சித்த நிலை கண்டு, ஜீவ முக்தி அடைந்த பெண் சித்தர்கள் பலருண்டு.அருளன்னை ஸ்ரீசாரதா தேவி, பக்த மீரா, ஸ்ரீஅன்னை, அக்கா மகாதேவி, மாயம்மா, சர்க்கரை அம்மாள், அம்மணியம்மாள்,கரூர் பாட்டி சித்தர் என இன்னும் நம்மால் அறியப்படாத மாந்தருள் தெய்வங்களானோர்  பலருண்டு

மதுரையில் முத்து

மீனாட்சி அம்மையின் அருளாட்சி  நடைபெறும் மதுரையம்பதியில் தியாகராஜர் பிள்ளை - ஞானாம்பாள் தம்பதியருக்கு 1930 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 19ஆம் தேதி ரோஹிணி நட்சத்திரத்தில் அம்மைநாயக்கனூரில் ஸ்ரீகருணாம்பிகை அம்மை அவதரித்தார்

அக்காலத்தில் பெரிதாய் பள்ளி சென்று அதிகம் படிக்காவிடினும், இளமை முதலே இறை நாட்டத்தில் ஆர்வம் கொண்டு வள்ளல் பெருமானை தன் மனத்துள் குருவென இருத்தி அருட்பெரும் ஜோதியை தியானித்து வரலானார்.

வழக்குரைத்த வனிதை:-

அக்கால வழக்கப்படி அம்மையின் 14ம் வயதிலேயே பெற்றோர் அவருக்கு மணம் முடிக்க வேண்டி அம்மையை வற்புறுத்தினர். இருப்பினும், இல்வாழ்வை வெறுத்த நிலையில் இருந்த கருணாம்பிகை அம்மையாரோ  குடும்ப நண்பர் ஒருவரின் அடைக்கலத்தைப் பெற்று, அக்கால கட்டத்திலேயே பெண்ணுரிமை கோரி வழக்காடு மன்றத்தை நாடினார். வழக்கின் தீர்ப்பும் அம்மையாருக்கு சாதகமாகவே,அடைக்கலம் அளித்தவரின் ஆதரவோடு தம் துறவு வாழ்வைத் தொடங்கினார்

நிலவறையில் நிஷ்டை:-

திண்டுக்கல்லில் 1956ல் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு ஒரு நிலவறையை ஏற்படுத்தி, அதனுள் 18 மாதங்கள் கடும் தவத்தை மேற்கொண்டு சிறந்த தவயோகி ஆனார். இளம்தவசியை நாடித் தம் குறைகளை போக்கிக் கொள்ள அடியவர்கள் வரத்தொடங்கினர். தம்மை நாடி வந்த அடியவர்களின் குறைகளையும், துன்ப துயரங்களையும் அருளாளரான ஸ்ரீ கருணாம்பிகை  அம்மையார் கருணை கொண்டு போக்கி வந்தார்

முக்தி நிலை:-

ஸ்ரீகருணாம்பிகை அம்மையார் தாம் ஜீவமுக்தி அடையும் நாளை அடியவர்களிடம் முன்னதாகவே அறிவித்துவிட்டு, அதன்படி  1970ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் ரேவதி நட்சத்திரத்தில் தன்னை இறைவனுக்கு ஆத்ம நிவேதனமாய் அர்ப்பணித்துத் தன் ஜீவனை இறைவனின் திருவடிகளில் சரணாகதி அடையச் செய்தார்.



ஜீவசமாதி அமைவிடம்:-

திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆசிரமத்தில் அம்மையாரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. ஸ்ரீ கருணானந்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

நாமும் ஒருமுறை அம்மையாரின் அதிஷ்டானத்தைத் தரிசித்து ஸ்ரீ கருணாம்பிகையின் காருண்யத்தைப் பெற்றிடுவோம்.

 இதோ.இன்று நாம் பெற்ற 51வது குருபூஜை விழா தரிசனக் காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.வழக்கம் போல் மனதுள் பல சிந்தனைகள் ஓடியது. ஆசிரமம் என்று நாம் கேட்டதும் எப்படியும் கடைகள் நிறைந்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நம் நினைப்பு அங்கே சென்றதும் தவிடு பொடியானது. மிக மிக எளிமையாக சாது கருணாம்பிகை அம்மையார் ஆசிரமம் இருந்தது. 
















சாது ஸ்ரீ கருணாம்பிகை ஆசிரமத்தில் நுழைந்தது முதல் நாம் பெற்ற தரிசன காட்சிகளை மேலே இணைத்துள்ளோம். ஒவ்வொன்றாக பார்த்து அருள் பெற்றுக் கொள்ளுங்கள். நாமும் இங்கே எதுவும் பேச விரும்பவில்லை. மௌனிக்கவே விரும்புகின்றோம்.

இந்த அருள்நிலையோடு இன்று மேலும் ஒரு தரிசனம் பெற்றுள்ளோம். அட,,அவருக்கும், சாது ஸ்ரீ கருணாம்பிகை அம்மையாருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்று சிந்தித்து பாருங்கள். அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.

                                                ஓம் ஸ்ரீ கருணானந்தேஸ்வராய நமஹ 

மீள்பதிவாக:-

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 115 ஆவது அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/08/115.html

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

குருவே சிவம் - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_22.html

ஸ்ரீ போகர் சித்தர் குரு பூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/07062021.html

சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகளின் 23-ஆம் ஆண்டு குருபூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/23-07062021.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் 121 ஆவது குருபூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/121.html

அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/05/184.html

 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை 13 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் - 28.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/13-28022021.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html

சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html

 களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_23.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html 

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_28.html

ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_90.html

இன்றைய சித்திரை திருவாதிரையில்... விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_78.html


வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

 

Tuesday, August 24, 2021

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 115 ஆவது அவதார திருநாள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

எம்பெருமான் அப்பன் முருகனின் பெருந்தொண்டர் கிருபானந்த வாரியார் சாமிகள் பிறந்த தினம் இன்று. ஐயாவின் புகழை இந்தப் பதிவில் போற்றுவோம். திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.


அருள்மொழி அரசு, என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது பிறந்தவர் இவர். செங்குந்த வீர சைவ மரபினர்.


ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19-வது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர். மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார்.




19-ம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது ஆன்மிக மொழி பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.


அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக்கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து திருப்புகழ் அமிர்தம் என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி கைத்தல நிறைகனி என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, ராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

தமிழ் இசைச் சங்கம் இசைப்பேரறிஞர் என்ற விருதை 1967-ம் ஆண்டு வழங்கியது. 1993 அக்டோபர் 19-ம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள் 1993-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.

இன்றைய நாளில்  கிருபானந்த வாரியார் அருளிய 7 நாள் துதி இங்கே பகிர உள்ளோம்.இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?

முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.

திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.




ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை :

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

திங்கட்கிழமை :
 
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

செவ்வாய்க்கிழமை :

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

புதன்கிழமை :

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

வியாழக்கிழமை :

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

வெள்ளிக்கிழமை :

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

சனிக்கிழமை :

கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!              

அடுத்து இன்று நடைபெற்று வரும் விழாவின் அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.



இன்றைய நாளில்  வாரியார் சுவாமிகளை சிந்தித்து, முருகப் பெருமானிடம் வேண்டுவோம்.

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_61.html

குரவு விரவு முருகா வருக! - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_26.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

                                 

Wednesday, August 18, 2021

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - வரலட்சுமி நோன்பு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு வழிபாடு என்பது நம்மை உணர்த்தும் வழிபாடு ஆகும். மானிடப் பிறப்பின் நோக்கமே குருவினை அடைவது ஆகும். மெய்ஞ்ஞான குரு ஒருவருக்கு கிடைத்து விட்டாலே போதும். குரு வழிபாடு என்பது தானாக நிகழ்வது அல்ல. ஏதோ இந்த பிறப்பில் நடந்தது என்றும் கூற முடியாது. பல ஜென்ம தேடல், பூர்வ புண்ணியங்களின் குவியல்கள் மூட்டை மூட்டையாக இருந்தவருக்கே அது வாய்க்கும். இந்த சிந்தனையில் பார்க்கும் போது நாமெல்லாம் கொடுத்து வைத்து இருக்கின்றோம். நம் பெற்றோருக்கும் நன்றி சொல்லுவோம். ஏனென்றால் அவர்களின் புண்ணியபலனும் நமக்கு குருவை காட்டியுள்ளது. மிக எளிதாக குருவின் நாமத்தை சொல்ல இயலாது. நாம் ஒவ்வொருவரும் குருவின் நாமம் சொல்லி வருகின்றோம் என்றால் குருவின் கருணைக்கு எல்லையேது?

குருவின் திருமேனி கண்டு, குருவின் திருநாமம் சொல்லி, குருவின் திருவார்த்தை கேட்டு, குருவின் திருவுருவை சிந்தித்து, சிந்தித்து தெளிவு பெறுவோம். இன்றைய பதிவில் குருவின் திருவார்த்தை கேட்போமா? சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடிலில் அமாவாசை ஹோமம் செய்து, குருவிடம் ஆசி கேட்ட போது, அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இம்முறை அனைவரும் வரலட்சுமி நோன்பு இருக்கும்படி குருவின் ஆணை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உடனே இதை யொட்டி சிந்தனையில் ஆழ்ந்த போது, சென்ற ஆண்டில் வரலட்சுமி நோன்பு பற்றி ஒரு பொதுவான பதிவு தந்தோம். இந்த ஆண்டில் நாளை நாம் வரலட்சுமி நோன்பு இருக்க நம்மை நம் குருநாதர் வழி நடத்துவதை அறியும் போது, குருவின் தாளை என்றும் பணிகின்றோம். இது போல் தான் நம் குழுவின் மூலம் நடைபெற்று வரும் அனைத்து சேவைகளுக்கும் நம் குருநாதர் ஆசி தருவதை நன்கு உணர முடிகின்றது.

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர்

இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு நாளை கொண்டாடப் பட உள்ளது. நாளை நாம் அனைவரும் வரலட்சுமி நோன்பு இருந்து வரங்களை நம் அன்னையிடம் பெறலாமா? இதோ..இன்றைய பதிவில் வரலட்சுமி நோன்பு பற்றியும், விரதம் இருக்கும் முறை என சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும்.  ஆவணி மாத முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்கின்றனர்.


மகாலட்சுமியே நேரில் வந்து தன் பக்தர்களுக்கு உபதேசம் செய்த மிகச்சிறந்த ஒரு விரதமுறை ‘வரலட்சுமி விரதம்’ ஆகும். இதனை காலம் காலமாக கடைப்பிடித்து வருபவர்களும், ஒவ்வொரு வருடமும் புதிதாக ஆரம்பிப்பவர்களும் உண்டு. இந்த விரதம் சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்கள் நல்ல வரன் அமையவும், மற்றவர்கள் குடும்பத்தின் நலன் கருதியும், செல்வ செழிப்பு ஓங்கவும் கடைபிடிக்கும் ஒரு எளிய நோன்பு முறையாகும். மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பது முதல், கலசம் அமைத்து வழிபட்டு, பூஜை செய்து விரதத்தை முடிவு செய்யும் வரை எளிமையாக என்ன செய்ய வேண்டும்? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.



லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.




விரத முறை:

இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.


விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

3. மங்கல வாழ்வு அமையும்.

4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.

5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ

வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்

ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது

தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே

(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மகாலட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணு பத்னீ ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

அர்ச்சனை நாமாக்கள் :

ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :

ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:

ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :

ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :

ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :

ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :

ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :

ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :

ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :

ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :

ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :

ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :

ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :

ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :



மன சுத்தியுடன் செய்யப்படும் இந்த பூஜையானது தேவியை மகிழச் செய்து, நம் இல்லத்தைத் திருமகள் குடியிருக்கும் கோவிலாக மாற்றும்.

இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் பிழையில்லை. மனதை நல்லெண்ணங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்கள் சூழ வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அது தான் இறைவன் குடியிருக்கும் இடம்.

சக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும். வரங்கள் அனைத்தையும் அருளும் ஸ்ரீ மகாலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்றுப் போற்றி வழிபடுவோம்... அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று இன்பமாகவும், வளமாகவும் வாழ்வோம்...


ஈசனின் ஆலோசனைப்படி, திருமகளைப் போற்றி அன்னை சக்தி விரதம் இருந்த நன்னாளே வரலட்சுமி விரதம்; அன்னை சக்தி இந்த விரதம் இருந்ததாலேயே கந்தன் அவதாரம் நிகழ்ந்தது என்கின்றன ஞான நூல்கள்.

விரிவான முறையில் வழிபாடுகள் செய்ய இயலாவிடினும், நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, கீழ்க்காணும் துதியைப் படித்து, வில்வத்தால் மகாலட்சுமி படத்துக்கு அர்ச்சனை செய்து, ஆராதியுங்கள் அவளருள் கிடைக்கும். வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்

காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
எங்களுக்குக் கின்னருள் ஈந்தருள் போற்றி
மங்கலத் திருநின் மலரடி போற்றி போற்றி!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வரம் பல அருளும் வரலட்சுமி நோன்பு இருக்கலாமே - 31.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/31072020.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_28.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html