"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 11, 2021

ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆடிப்பூரத் திருநாளில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்னும் நம்மை ஆளுகின்ற  ஸ்ரீ ஆண்டாள் பற்றி அறிய விழைகின்றோம். இத்துடன் மேலும் நாம் பெற்ற தரிசனத்தை இங்கே தர விரும்புகின்றோம். ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.

இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள்  உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.



அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,  குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை  உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள்  திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த  வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக  எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில்  நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு  அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில்  ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

ஆனால் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் கோயில்களில் வழிபாடு சிறிய அளவிலே தான் நடைபெற்று வருகின்றது.

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர விநாயகர் கோயிலில் இருந்து இன்றைய தரிசனம் பெற இருக்கின்றோம்.




ஆடி பூரம் மற்றும் செவ்வாய் ஆன இன்று குரு ஶ்ரீ அகத்தியர் லோபமுத்ரா அம்மா திருக்கல்யாணம் இனிதே நடை பெற்றது . அகத்திய அடியார் ஆவடி சதீஷ்குமார் ஐயா இல்லத்தில் இருந்து தரிசனப் பதிவுகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.





மேலும் இன்றைய நாளின் சிறப்பாக சித்தர் சமாதியில் சிறப்பான குருபூஜை நடைபெற்றது. 

மகான் பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 72 வது குருபூஜை சென்னை திருவொற்றியூரில் உள்ள அவரது சமாதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. சிவனடியார்கள் தேவாரம் திருவாசகம் ஓத, சிறப்பான பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவருளில் திளைத்தனர்.
குருவடி தொடர்வோம். குருவருள் இன்றி திருவருள் இல்லை. நமசிவாய.






சென்னை கிண்டி இரயில் நிலையத்தில் உள்ள பாடலீஸ்வரர் தரிசனம் உங்களுக்காக தருகின்றோம். அடுத்த முறை கிண்டி செல்லும் போது, நேரில் சென்று தரிசிக்கவும்.























முதன் முதலில் நாம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையை தினமும் ஒரு பதிவாக 2019 ஆம் ஆண்டில் மார்கழி மாதத்தில் பதிவு செய்தோம். இன்றைய ஆடிப்பூர திருநாளில் அந்த பதிவுகளை ஒரு கோப்பாக குருவருளால் இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனையில்  வெளியிட உள்ளோம். 

                                 




                             

                                                                        


                                       













ஆண்டாள் திருவடிகளே சரணம்.

மீள்பதிவாக:-

 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html


No comments:

Post a Comment