"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, January 31, 2021

ஒட்டன்சத்திரம் பகவான் ராமசாமி சித்தர் 34 ஆவது மஹா குருபூஜை விழா - 05.02.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தேடல் உள்ள தேனீக்களாய்-TUT குழுவின் சார்பில் குருவருளால் லால்குடி அருகில் நகர் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீஅப்ரதீஸ்வரர் கோயிலில் லோக ஷேமத்திற்காக அபிசேகம், அர்ச்சனை & சகஸ்ஹர லிங்க வழிபாடு, ஸ்தல விருட்ச வழிபாடு அனைத்தும் சிறப்பாக கடந்த சனிக்கிழமை (30.01.2021) அன்று மகம் நட்சத்திரத்தன்று நடைபெற்றது. அன்றைய தினம் பெருங்களத்தூர் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் 99 ஆவது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. நேற்று திருச்சி கௌரி நகரில் அருள்பாலித்து வரும் கருணாபூரணி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தரிசனமும், சண்டி யாகத்திலும் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.இவ்வாறு ஒவ்வொரு நிகழ்விலும் குருவருள் நம்மை கைப்பிடித்து அழைத்து செல்வதை நன்கு உணர முடிகின்றது.

சரி..இன்றைய பதிவில் ஒட்டன்சத்திரம் பகவான்  ராமசாமி சித்தர் 34 ஆவது மஹா குருபூஜை விழா - 05.02.2021 அழைப்பிதழ் காண இருக்கின்றோம்.


திண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம்.  அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும் ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது.  தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர்  இது.  

ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார், பெற்றோர் யார்.  எப்படி ஒட்டன் சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள்  தெரியவில்லை.  தான் ஒட்டன்சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார்.   இதற்கு அருகில் உள்ள  ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும், பிரியாணி பொட்டலமும் வந்துவிடும்.  சித்தர்கள் பிரியாணி சாப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. தன்னை  நாடி வரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு. வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி, அதை சாப்பிடுவது போல்  செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள்.  அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.

ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின், எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ, அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத்  துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர். ஆக, ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா? இனி, ராமசாமி சித்திரைப் பற்றி பார்ப்போம்.  

இவரது பெயர் ராமசாமி என்பது, ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது.  அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர்.  சாமீ,  சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார். ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம்.

ஒட்டன்சத்திரத்தில்  வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள்.  உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர்  தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது.  காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது. விடிகாலை மூன்று  மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர்.  புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை  அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 

"போங்கடா... போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீஙக...." என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி  அனுப்பினார்.

ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள், சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும் ஈர்த்தது.  

"ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன்லாம் இங்க வாங்கடா" என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல். ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் திடுக்கிட்டார்கள். 

பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் - ஒற்றைக் காலில்  நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார்.  

"வாங்கடா ஒட்டன்சத்திரத்து ஆளுங்களா..... உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்....  ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல? என்றார்" (அதுவரை சித்தர், பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பிறகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்). 

"யார் சாமீ.... நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே?" என்றனர் ஊர்க்காரர்கள். 

"அடேய்....  பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே... அவன்தான் ராமசாமி சித்தர்.  அவனுக்கு வயசு என்ன தெரியுமா?  ஐந்நூத்தி ஐம்பது.  சரி,  ஊருக்குப் போனதும்.  அவன்கிட்ட போய், ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க" என்றார்.  தொடர்ந்து தவத்தில் இறங்கி  விட்டார்.

ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள்.  தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடையாளம் கண்டுகொண்டு.  நம்மூர் சித்திரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள்.  அங்கிருந்து அகன்றார்கள். 

ஒரு வழியாக ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள்.  தாங்கள் புறப்பட்ட   இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள்.  மெள்ளக் கலையை முற்படும்போது......

"ரிஷிகேஷ் போனவன்லாம் இங்க வாங்கடா" என்று பாத்திரக்கடை  வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார்.  அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது - ரிஷிகேஷில் நடராஜ சாமீ சொன்ன விஷயம்.  

அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர்.  ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த  ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.

"ஏண்டா.... அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல..... ஏண்டா, என்கிட்ட சொல்லாம போறீங்க?" என்று ராமசாமி  சித்தர் கோபமாகக் கேட்கவும், 

சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை.  

"சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும்.  அவசரத்தல மறந்துட்டோம்  என்று சொல்ல".... சிரித்தார் சித்தர். 

"போங்கடா.  எல்லாரும் நல்லா இருப்பீங்க" என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். 

பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன்.  மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம். பூஜை, புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும். மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர்.  மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார். பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது  மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால், அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார்.  இப்படித்தான் ஒரு முறை ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.

பழநியில் இருந்து புறப்பட்டு, சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார்.  அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார். ராஜம்மாள்  அங்கு வந்ததுமே, 

"வாம்மா..... உன்னைத்தான் தேடுகிறேன், வா" என்றார் சித்தர்.  மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார்  ராஜம்மாள்.  

பிறகு, "பக்கத்துல ஒட்டல் இருக்கு.  அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா" என்றார். அந்தணர் வீட்டுப் பெண்மணி திகைத்தார்.  பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது.  

தயங்கியவாறே நின்றிருந்தார்.   

"என்னம்மா... பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்.... அப்படியே நிக்கறே..... பொறப்படு" என்றார் சித்தர்.  

பிறகு, "நான் வேணா காசு தர்றேன்,  யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா?" என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள்.

"அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா.  நீயே  கடைக்குப் போய் வாங்கிட்டு வா.  சீக்கிரம்" என்று அவசரப்படுத்தினார் சித்தர். 

ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள்.  

இவரைப்  பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர். "என்னமா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா? யோகக்காரப் பொம்பளைம்மா நீ.... உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ" என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை  பார்சல் செய்யச் சொன்னார். 

காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள்,ரொம்பவும் கூசிப் போனார்.  ஐயா வீட்டுப்  பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு  வந்தார். பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு, அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.

"பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி? நீயே பிரி" என்று சித்தர் சொன்னதும், அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு.  சித்தரின் குணத்தைப் பற்றி அறிந்ததால்.  இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி, பழநி ஆண்டவரை மனதுக்குள் பிரார்த்தித்தபடி.  பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெள்ளப் பிரித்தார்.  

பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல்  ஏற்படும் என்பதால்.  வேளையில் சுவாசிக்கவும் மறந்தார்.  பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது. 

"இந்தாங்க சாமீ...." என்று  கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார். 

"நீயே கண்ணைத் திறந்து பாரம்மா - உன்  கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு.  அதன் பிறகு என்னிடம் கொடு" என்றார் சித்தர். 

மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு  கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம்.  

காரணம்-பொட்டலத்தில் இப்போது  இருப்பது பிரியாணி அல்ல.... நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல்.  

சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள்.  முந்திரியும்  திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம், ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது.  தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை -  கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை-நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள்.  

"சாப்பிடும்மா.... எடுத்துச் சாப்பிடு.   ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா" என்ற சித்தர், தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன்சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது.  அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு  செய்யப்பட்டிருந்தது.  அப்போது ராமசாமி சித்தர், பாத்திரைக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்.  இவரது இடத்தைக் கடக்கும்போது  அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது. ஜீவகாருண்யத்தை (அசைவம் சாப்பிடாதவர்கள்) எப்போதும் கடைபி டித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார். சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் தூண்டுகளைப்  பார்த்து முகம் சுளித்தார். ஓரமாக நடந்தார். படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார். 

"டேய் இங்கே வாடா" என்று அவரை  அழைத்தார்.  

யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர், என்ன சாமீ?  என்று கேட்டார். 

"கிழே விழுந்து கிடக்கிற கருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா" என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்!  

முகம் கொதித்துப் போனார் அன்பர்.  இத்தனை  ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்து என்னைப் பார்த்தா, கருவாடு சாப்பிட்டுச் சொல்கிறீர்? நான் செத்தாலும் சாவேனே தவிர, கருவாடு  சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப் போயே விட்டார்.

சித்தர் மெதுவாகச் சொன்னார்: "ஆமாடா....இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே.... உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்.....  விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா.... போய்ச் சேரு."

ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர்  மாரடைப்பு வந்து இறந்து போனார்.  ஒருவேளை, சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால், பிரியாணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி, இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும்.  இதை உண்ட பலனால், அவரது  ஆயுள் பலம் கூடி இருக்கலாம். விதி ஜெயித்து விட்டது போலும்! 

பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர், சித்தர்கள்  தரிசனத்தில் நெகிழ்பவர்  பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து, ஆன்ம ஞானம் பெற்றவர். ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது, அப்போது அவருடன் இருந்தவர் இவர்.

இனி, கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.

ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை.  அவ்வப்போது செட்டிநாட்டில் இருந்து ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர்.  யார் என்பது தெரியாது. பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர். வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார். சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார். 1977-ஆம்  வருடம் என்று நினைக்கிறேன்.  நான், என் மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம்.  சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார்.  பிறகு, நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார்.  உடனே  பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன்.  எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார்.  பிறகு, ஒரு பீடிக்  கட்டு, மூன்று சிகரெட், ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து, பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார்.  ரொம்ப காலம் பாதுகாத்து வந்தேன்.  ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன், சித்தரின் சமாதி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

அது ஒரு சனிக்கிழமை....சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன். சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார்.  வாங்கி வந்து  கொடுத்தேன்.  குடித்தார்.  பிறகு, அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது.  பாதையை மறைக்காதடா.... குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத்  திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.  பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச்  சொன்னேன்.  வேறொன்னுமில்லை.  அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார்.  அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார்  என்றார் அவர். 

அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகி விட்டார். தகவல் கேள்விப்பட்டதும்.  சித்தரின் பக்தர்கள்  ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர்.  சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார்.   சித்தர் அடக்கம் ஆவதற்கு பிரமுகரான பழநியப்பா, நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார் (இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது) பெரிய குழி வெட்டி, அதற்குள் நான் இறங்கினேன்.  அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமை அன்று சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.  விபூதி, உப்பு, வில்வம், புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி, சித்திரை அடக்கம் செய்தோம்.  நான்  கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன். மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று  கிடைத்தது அவரது அருள்தான்.



எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன். ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும்.  அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால்,  அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும். அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக் கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது.  அப்போது யதேச்சையாக சாலையின் இடப் பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன்.   அங்கே, ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத்  துண்டு இருந்தது.  சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன். பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.  இதற்குள் பேருந்தும் வேகம் எடுத்து விட்டது.  மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர்.  எப்படி விருபாட்சிமேடு அருகே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது,  எனவே, பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு  முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன்.  சுவாமிகளே வந்து கதவைத் திறந்து  என்னப்பா... இந்த வேளைல? என்றார்.  

எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன்.  நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண  இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.

இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை. விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.  தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த  சமாதியை நோட்டமிட்டேன்.  அவரது சமாதியில் - தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது. உடனே  பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன்.  ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு, சரீரத்தை  எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா.  அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார்.  அவர் போன ஊர்  புண்ணியம் பெறும் என்றார். அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான்.  அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசிர்வதித்துக் கொண்டிருப்பார்கள். ராமசாமி சித்தரும் அப்படித்தான்.  சுமார் இரண்டு மாதங்கள் கழித்து.  கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார். கண்ணன். 

ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார்.   முஸ்லிம் பக்தர் ஒருவர்.  ஆசையுடன் கொடுத்ததாம் இது.  சித்தரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரமாண்டமான ஆலமரம் இருக்கிறது.  இதன்  அருகே ஒரு லிங்கம். சமாதி ஆன இடத்தில் சில செங்கற்களின் மேலே வேங்கடாசலபதி, ஸ்ரீசரஸ்வதிதேவி, முருகப் பெருமான் ஆகியோரது திரு வுருவப் படங்கள் இருக்கின்றன.  உள்ளே ஒரு நந்தி விக்கிரமும் உண்டு.  மற்றபடி சமாதி ஆன இடத்தில் சிறப்பாக எதுவும் இல்லை.  பள்ளிக்குச்  செல்லும் சில மாணவர்கள் அவ்வப்போது இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.





ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஓம் - பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் 54-ஆம் ஆண்டு குருபூஜை விழா - 11.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/54-11012021.html

ஸ்ரீல ஸ்ரீ சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் 120 ஆவது குரு பூஜை - 10.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/120-10012021.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Wednesday, January 27, 2021

தைப்பூச ஜோதி தரிசன 1008 சக்திகள தீப திருவிழா - 28.01.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் தைப்பூசத்திருவிழா ஒட்டி தினமும் பதிவுகள் கண்டு வருகின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். ஆம்..தை மாதம் தொட்டு பல்வேறு வழிபாடுகள் நாம் செய்து வருகின்றோம். தைப்பூசம் தை மாதம் நடைபெறுகின்ற விழாவாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன்  கோயில்களிலும் தைப்பூச விழா இனிதே நடைபெற்று வருகின்றது. பழநியாண்டவருக்கு தைப்பூசம் என்பது உயரிய வெற்றி விழாவாகும். தை மாதம்  பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கள நாளில் பழநியாண்டவனுக்குக் கொண்டாடப்படும் உயரிய வெற்றித் திருவிழாதான் தைப்பூச விழா. இந்நாளில் தான் முருகப் பெருமானின் அன்னை உமாதேவியார் கொடிய அரக்கன் தாரகன் என்ற அரக்கனைக் கொன்று அழிப்பதற்கு  வெற்றிவேல் வாங்கிய தினமாகும்.

கொடிய அரக்கன் தாரகனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினம் தை மாதப் பூச நட்சத்திர தினமாகும். இதனைப்  போற்றும் விழாவாகத் தைப்பூச விழா ஆண்டு தோறும் முருகன் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற வருகின்றது எனலாம். பழநியில் உள்ள  ஊர்க்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்கள் வெகு சிறப்பாக  இத்திருவிழா நடைபெற்று வருகின்றது. தைப்பூச முருகனைக் காணப் பல இலட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனான  காணிக்கையைச் சுமந்து, பாதயாத்திரையாய் பழநியை நோக்கி வந்த வண்ணமாய் உள்ளனர். இதில் நமக்கு வழிகாட்டி வரும் யாத்திரை தோழன் மற்றும் அருணை முனிவன் திருப்புகழ் குழுவும் பழனி பாதயாத்திரையில் உள்ளனர். நித்தம் வேல்பூஜையுடன் அன்னசேவையும் செய்து வருகின்றார்கள். இன்றைய பதிவில் மீண்டும் முருக அருளில் திளைத்து முருக நாடி உணர்த்தி வரும் 1008 சக்திகள தீப திருவிழா அழைப்பிதழ் பகிர விரும்புகின்றோம்.


சக்திகள தீப வழிபாடு பற்றி விரிவாக பின்னர் காண்போம். இந்த 1008 சக்திகள தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும்,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும், புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு  புத்திரன் கிட்டும், ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம், அனைத்து குறைகளும் நீங்கும், என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார். 

தமிழ் கடவுள் முருகனின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். முருகனுக்கு நான்கு நட்சத்திரங்கள் உகந்தது.

1. வைகாசி விசாகம் - முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் திருநாள்

2. கார்த்திகை - அறுவராக உதித்த முருகன் சக்தியின் துணையால் ஒருவனான நாள் கார்த்திகை திருநாள்.

அசுரர்களை அழித்து, அவர்களை ஆட்கொண்ட நாள் ஐப்பசியில் வரும் சஷ்டி.

3. பங்குனி உத்திரம். - வள்ளியை திருமணம் புரிந்த நாள் பங்குனி உத்திரம் திருநாள்.

4.தைப் பூசம் - அன்னையிடம் வேல் வாங்கி, திருக்கையில் வேல் ஏந்திய நாள் தான் தை பூசம் திருநாள்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். கரம் கூப்பிய பக்தர்களை தேடி கந்தன் வருவான். யாமிருக்க பயமேன் என அபயம் காட்டும் கடவுள் முருகப்பெருமான்.தைப்  பூசம் மறுநாள் பெரும்பாலும் பௌர்ணமியாக இருக்கும். 27 நட்சத்திரங்களில் 8வது நட்சத்திரம் பூச நட்சத்திரம். இதனை புஸ்ய நட்சத்திரம் என்பார்கள். இது சனியின் நட்சத்திரம், ஆனால் இதன் அதிதேவதையாக குரு பகவான் வருகின்றார்.இதன் காரணமாக அறிவு, தெளிவு, ஞானம் தரும் நாளாகவும், தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக தை பூச திருநாள் அமைகிறது.

பூசத்தின் சிறப்புகள்

எந்த காரியத்தையும் பூசத்தில் செய்தால் அல்லது தொடங்கினால் பூர்த்தி ஆகும் என்பார்கள். அதனால் திருமணத் தடை உள்ளவர்கள், பூச நட்சத்திரத்தில் திருமண பேச்சை தொடங்கினால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம்.

பள்ளியில் சேர்க்காத சிறு குழந்தைகளுக்கு, இந்த நாளில் வீட்டிலேயே கல்வியை தொடங்க அந்த குழந்தை முருகனைப் போல அறிவார்ந்த குழந்தையாக இருக்கும்.

உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் பார்க்கப்படுகிறது. அதாவது தேவர்களின் பகல் பொழுது தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சூரியனை நாராயணன் என சொன்னாலும், ஜோதிடத்தில் அவர் சிவனின் அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். பெளர்ணமி என்பது சூரியன் - சந்திரன் ஒரே நேர் கோட்டில் நிற்பது தான். மகரம் எனும் புண்ணிய ராசியில் சூரியனும், தன் சொந்த வீட்டில் சந்திரனும் நிற்க தை பூச திருநாள் அமைகிறது.

மகா விஷ்ணு தன் மார்பில் மகா லட்சுமியை வைத்திருக்கிறார். சிவ பெருமானோ தன் உடலின் ஒரு பாகத்தை உமையாளுக்குக் கொடுத்திருக்கிறார். பிரம்மா தன் மனைவியான சரஸ்வதியை நாக்கிலே வைத்திருக்கிறார்.முருகன் தான்னை வணங்கும் பக்தர்களை தன் மனதில் வைத்திருக்கிறார் என்பது புராணங்கள் கூறும் உண்மை . முருகன் சோதித்து பார்ப்பார் என சொல்லப்பட்டாலும், அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் கூடியவர்.

ஆண்டி கோலத்தில் நிற்கும் முருகனுக்கு அன்னை பார்வதி தேவி வேல் வழங்கிய நன் நாள் தைப்  பூசம்.

உலகம் தோன்றிய நாள் எனவும், ஈசன் - உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் தைப் பூச திருநாள்.

முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு தைப்பூச நாளில் ஆலயம் சென்று வழிபாட்டால் போதும்.

காவடி எடுத்தல், அலகு குத்துதல், உள்ளிட்ட வேண்டுதல் இருந்தால் நிறைவேற்றலாம். தீராத நோய் ஏற்பட்டு அவதிப்படுவோர், முருகனுக்கு பால் காவடி எடுக்க நோய் தீரும் என்பது ஐதீகம்.

பால் காவடி என்பதும் பால் குடம் என்பது ஒன்று தான்.

மறக்காமல் தடைப்பட்டு வரும் திருமண பேச்சை தொடங்க பூசம் நாள் சிறந்தது என்பதால் உடனே தொடங்கி முருகனின் அருளால் திருமண பாக்கியம் பெறுங்கள்.

இனி..பழனி பாதயாத்திரை பற்றி தொட்டு காட்ட விரும்புகின்றோம்.

பாதயாத்திரை விளக்கம்: தைப்பூச முருகனை காண பக்தர்கள் காவியுடை அணிந்து, விரதம் இருந்து பலநூறு மைல்கள் பனி, வெயில் பாராது நடந்து வருகின்றனர். குறிப்பாக காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆறுமுகக்காவடி சுமந்து வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர். பழநியைச் சுற்றியுள்ள மண்டபங்களில், கிரிவீதியில் மற்றும் சண்முகாநதியில் பக்தர்களின் காவடி ஆட்டம் அதிகளவு காணப்படும். நத்தம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஜெயங்கொண்டம் போன்ற நகரங்களில் இருந்து பக்தர்கள் சேவல் காவடிகள், மயிற்காவடி, வேல்காவடி, ஆறுமுகக்காவடிகள் சுமந்து வருகின்றனர். 











ஒட்டன்சத்திரம் வேல்பூசையில் ..அருணை முனிவன் திருப்புகழ் மையம். அடுத்து யாத்திரை தோழன் குழுவின் சில அருட்காட்சிகள் 






பாதயாத்திரையால் தங்களின் பாவ வினைகள் நீங்குகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். வழிநடையாய் பக்தர்கள் நடந்து வருகின்ற பொழுது, முருகன் தங்களுடன் நடந்து வருவதாய் பக்தர்கள் கூறுகின்றனர், நம்புகின்றனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக பாதயாத்திரையாக பக்தர்கள் இங்கு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து தைப்பூச முருகனைக் காண வருகின்றனர். 


பாதயாத்திரை பாடல்கள்:

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்களது உடல் சோர்வை போக்க முருகனை பற்றிய பாடல்களைப் பாடி வருகின்றனர். அவற்றில் ஒன்றை பார்ப்போம்.


‘சந்தனமாம் சந்தனம் பழநி மலை சந்தனம்
சந்தனத்தைப் பூசிக்கிட்டு
சந்தோஷமாய்ப் பாடுங்க
குங்குமமாம் குங்குமம் குன்றக்குடி குங்குமம்
குங்குமத்தைப் வச்சுக்கிட்டு குணமுடனே பாடுங்க....’


என்று முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாகப் பாடி, ஆடி வருவதைக் காண முடிகிறது. வழிநடையின் துன்பம் தீர பக்தர்களின் முருகனின் பெருமையை வாய்விட்டுப் பாடி வருகின்றனர். 


காணிக்கைகள் விளக்கம் : 

தைப்பூசம் காண வருகின்ற பக்தர்கள் தங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்க பல்வேறு காணிக்கைகளைச் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர். 

* முடிக்காணிக்கை செலுத்துவதால் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தைப்பேறு கிடைக்கவும் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். 

* முருக பக்தர்கள் பணம், நாணயங்கள், வேல், கடிகாரம், மோதிரம் போன்றவற்றையும், உண்டியல் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

* சேவல், மயில், பசு போன்ற உயிரின காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. 

* தைப்பூச நாளில் பக்தர்கள் பலர் நோய் தீர அன்னக்காவடி சுமந்து வருகின்றனர்.

* ஆறுமுகக்காவடி என்ற மயிற்பீலி காவடியை பக்தர்கள் மிகுதியாக கொண்டு வந்து நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர். விரதப்பலன்கள்பழநியை நோக்கிப் பாதயாத்திரையாய் வந்து  முருகப் பெருமானை மனம் உருகி வழிபட்டால் பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனம் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம் பெருகிடும் என்று நம்புகின்றனர்.

நிலத்தில் விளைச்சல் பெருக, தைப்பூச நாளில் பக்தர்கள் தானியங்களை சூறை விட்டு வழிபாடு செய்கின்றனர். நெல், கம்பு, தினை, கடலை, மிளகாய் போன்ற தானியங்கள் பழநிக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்படுகின்றது. பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வளமை அடையும் என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர். சண்முகநதி: பழநி திருத்தலத்தில் சண்முகநதி பழநி மலைக்கோயிலில் இருந்து வடமேற்கு திசையில் ஏறக்குறைய 6 கிமீ தூரத்தில் கோவை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆறு கிளை நதிகளின் முழுவடிவம் சண்முகநதி. மேற்குமலைத் தொடரில் அமைந்துள்ள பாலாறு, பொருந்தலாறு, வரட்டாறு, பச்சையாறு கானாறு, கல்லாறு ஆகிய ஆறு நதிகளின் ஒட்டுமொத்த நதிகளின் முழு வடிவமே சண்முகநதி என்பர். 

நாம் வீட்டிலிருந்தே முருகனை நினைத்து தைப்பூச விரதத்தை எப்படி கடைபிடிப்பது? எப்படி என்று காண்போமா?

பூஜை அறை மற்றும் வீட்டை முந்தைய நாளில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். சுத்தமான ஆடை உடுத்தி, பூஜை அறையில் எல்லா படங்களையும் அலங்காரம் செய்து முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வேல் என்பது முருகனுடைய அம்சமாகவே பாவிக்கப்படுவதால் வேல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வேல் வழிபாடு செய்யுங்கள். வீட்டில் பஞ்சலோக வேல் வைத்திருப்பது வீட்டிற்கு காவல் தெய்வமாக அமையும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இல்லாதவர்கள் முருகனுடைய பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்லும் பொழுது இதனை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வேல் வைத்திருப்பவர்கள் அதனை கங்கை நீர் இருந்தால் கங்கை நீரால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். அல்லது சாதாரண தண்ணீரால் அபிஷேகம் செய்து கொண்டு, பின்னர் காய்ச்சப்பட்ட சுத்தமான பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் பன்னீர் கொண்டு சுத்தம் செய்து விட்டு, செம்பு, பித்தளை அல்லது வெள்ளிக் கிண்ணத்தில் ஏதாவது ஒன்றில் பச்சரிசியை நிரப்பி அதில் மலர்களை அலங்காரம் செய்து நடுவில் இந்த வேலை சொருகி வையுங்கள். வேலிற்கும் மஞ்சள், குங்குமம் இரண்டு புறமும் இட்டு கொள்ள வேண்டும்.

பின்னர் முருகனுக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைத்து, தீப, தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட வேண்டும். அன்றைய நாள் முழுவதும் ஓம் சரவண பவ என்று உச்சரிக்கலாம். முருகனுடைய பக்தி பாடல்களை பாடி பூஜையை செய்யலாம். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உபவாசம் இருப்பவர்கள் மாலையில் பூஜையை முடித்து விட்டு முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தைப்பூச விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும். ஆரோக்கியமான திடகாத்திரமான உடல் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். தைப்பூசத் திருநாள் அன்று நல்ல காரியங்கள் எதுவானாலும் துவங்க சிறந்த பலனை கொடுக்கும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இவையனைத்தும் செய்ய முடியதாவர்கள் என்ன செய்யலாம் என்று பதிவின் இறுதியில் காண்போம்.

நாளை வேலனை துதிப்பதுடன் அருட்பெருஜோதி ஆண்டவரையும் வணங்குங்கள். 





            


வடலூர் சென்று ஜோதி தரிசனம் செய்ய இயலாதவர்கள், கோயிலுக்கு சென்று வழிபட இயலாதவர்கள் நாளை காலை வீட்டிலே நெய் தீபம் ஏற்றி வைத்து  அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... என்ற மகா மந்திரத்தையும், தங்களுக்கு தெரிந்த முருக மந்திரத்தையும் உச்சரித்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்து வழிபட வேண்டுகின்றோம்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி...

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_24.html

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_21.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (2) - https://tut-temples.blogspot.com/2019/07/2_25.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

Monday, January 25, 2021

அருள்மிகு உலோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய சற்குரு ஆலய வருஷாபிஷேக அழைப்பிதழ் - 26,27.02.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் ஜீவநாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவு கண்டு வருகின்றோம். இந்த தொகுப்பில் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி வாக்கின்படி இரண்டு திருக்கோயில்கள் கடந்த 2020 ஆண்டில் கும்பாபிஷேகம் கண்டு அடியார்களுக்கு அருள் புரிந்து வருவதை இங்கே சொல்ல விரும்புகின்றோம். ஒன்று சென்னை திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம். மற்றொன்று மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் ஆகும். குருவருளால் இரண்டு கோயில்களிலும் தரிசனம் பெற்றுள்ளோம் என்று பார்க்கும் போது குருவின் கருணைக்கு எல்லையேது என்றே தோன்றுகின்றது. சென்னை திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் அன்று கலந்து கொண்டு இறையருள் உணர்ந்தோம். மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு அடுத்த நாள் நம் குழு நண்பர்களோடு தரிசனம் பெற்றது தற்போது வரை ஆச்சர்யமாகத் தான் உள்ளது. ஏனென்றால் நாம் விரும்பினால் மட்டும் போதாது. அந்த பரம்பொருள் விரும்பினால் தான் இது போன்ற ஆலய தரிசனம் பெற முடியும். இப்போது தான் மதுரை ஸ்ரீ அகத்திய மகரிஷி தரிசனம் பெற்றது போல் இருந்தது. ஆனால் அதற்குள் ஓராண்டு கடந்து விட்டது. நாளை நடைபெற உள்ள அருள்மிகு உலோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய சற்குரு ஆலய வருஷாபிஷேக அழைப்பிதழ் மற்றும் ஆலய தரிசன அனுபவத்தை இன்றைய பதிவில் காண உள்ளோம்.







மதுரை பசுமலையில் பிப்ரவரி7ஆம் தேதி 2020ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா கண்ட அகத்திய மஹரிஷி ஆலயம் குறித்த முருகப்பெருமான் நாடியில் அருளிய வாக்கு

வல்லான வகையான முறையான அமைப்பில் வந்ததொரு பாண்டிமாநகர நாடும் சீர்புகழும் நலமதுவும் உண்டு நண்மை கண்டனன்.அகத்தியன் ஆலயம் அரும்ப குடமுழுக்கு செய்தி அது கந்தன் மகிழ்ந்தேன்.சீருண்டு முறையாக கந்தசீடனது தனக்கும் அகத்தியனுக்கும் சிறப்புறவே ஓர் ஆலயம் அமைவது தொண்டர்கள் அனைவருக்கும் பரிபூரன ஆசிர்வாதம் உண்டு உண்டு. நலமாக கந்த சீடன் தனக்கு ஓர் ஆலயம் அமைப்பதில் கந்தனுக்கு மகிழ்ச்சியே தான்.

சிறப்புண்டு நலமாக இதை அமைக்கும் குழுமம் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்விதன்னை அது தொடுத்ததால் லாபம் ஆகும். நலமுண்டு கிருத்திகை நன்நாள் இன்றும் உறைகின்ற நேரத்தில் மகிழ்ந்து உரைக்கும் நிலை அதுவும் கண்டனன் லாபம் லாபம். சீருண்டு முறையாக லாபம் மார்கழி  ஆயில்யம் முதல்ஆகவே நண்மை முன்னர் அனுகூலம் கன்டனன் குருவின் பூசை அனுகூலம் ஆனபடி கண்டேன் ஆதலால் நட்ப்பாக கண்டதொரு வேளை முடித்தது விட்டிடலாம்.

குடமுழுக்கு கண்ட பின்னே ஒவ்வொரு ஆயில்யம் வரும் நேரம் முறையாக நண்மை நிலை அகத்தியன் ஜென்மம் நட்சத்திரம் தன்னில் முழுத்திருமஞ்சனத்தோடு அன்னதான தருமங்கள் செய்வதே இந்த குழுவிற்க்கு பணியது என்பேன்.ஓர் வருடம் அப்படியே செய்து வரலாம்.

இவ்வாலயத்தில் நடக்க உள்ள அற்புத மகிமை திருவிளையாடல்கள் எல்லாம் பின்வருமாறு கந்தன் உரைத்துள்ளார். நன்கு படித்து மகிழ்க.

பிள்ளை இல்லாதோர் பிள்ளை பெறுதல், கணவன் மனைவி சந்தோஷப்படுதல், மணம் ஆகாதோர் மணம் அமைக்கப்பெறுதல், பணி இல்லாதோர் பணி அமைக்கப்பெறுதல், பணம் இல்லாதோர் பணம் கிடைக்கப்பெறுதல், அருள் பெறுவோர் அருள் கிடைக்கப்பெறுதல், பொருள் கேட்ப்போர் பொருள் கிடைக்க பெறுதல், அவர் அவர் இச்சை எப்படியோ அப்படி அகத்தியன் படி அளப்பான். அனுகூலம் இது எல்லாம் திருவாதிரை மண்டலத்தில் பதிந்து சித்தர்கள் மண்டலத்தில் பதிந்து இருக்கும் செய்தி. முறையாக ஈசன் அருளும் பரிபூரணமாக கிட்டும்.

செய்யும் தானம் அன்னதானம் பூசை முறையாக நல்லதாம் அடியார்களை ஒன்று கூட்டி சிறப்புறவே நல்லதோர் அகத்தியன் புகழ்பாடி சீராக அவ்வாலயம் தன்னில் எல்லோரும் செல்ல முடியாவிட்டாலும் அவர் அவர் உரிய நிதி திரட்டி முறையாக அவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஆயில்ய பூசை தனை அமர்த்த வேணும் செய்ய வேணும் என்பதே இந்நேர கட்டளை என்பேன் கேட்டு நட என்று கந்தன் பகர்ந்தார்.

 கந்த நாடி முற்றே - 

அஉம் ஶ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்குக


ஆலயம் குறித்த கந்த நாடி வாக்கு

சிறப்பாகவே நல்லதாம் திருக்கயிலாய காட்சி அதுபோலும் கல்யான கோலம் பூர்வ ஜென்மத்திலே கண்ட இடமதாகும். ( *ஏற்கனவே அகத்தியருக்கும் அந்த கோயிலுக்கும் தொடர்பு உண்டு
கோயிலில் சிவபெருமானின் அம்பிகை பார்வதி கல்யான காட்சியை முருகனோடு வைக்கவும். முருகனின் அலங்காரங்களை விதவிதமாக அங்கு வைக்கனும்னு சொல்லபட்டிருக்குது) 

முறை உண்டு செய்யலாம் ஆதலால் செய்கின்ற அனைவரும் சீர் புகழாய் சீர்த்தி ( பெரும் புகழ்) பெருவர். சிறப்பு பெருவர். உரிய காரியம் நடக்க பெருவர். இறை அருளும் சித்தர்கள் திருவிளையாடல்கள் காணப்பெருவர்.

பூர்வ ஜென்மத்தில் அகத்தியன் தொடர்புடையவர்கள் தான் வந்து அங்கு ஆலயம் அமைக்க வழி புரிவர். 

கந்த வடிவேலன் புகழ் ஓங்குக

சென்ற ஆண்டு தைப்பூச நாளில் நாம் சதுரகிரி யாத்திரை குருவருளால் ஏற்பாடு செய்தோம். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 7,8 ஆம் தேதி சதுரகிரி யாத்திரை ஏற்பாடானது. பிப்ரவரி 7 ஆம் தேதி காலை மதுரை சென்றோம். அங்கிருந்து சதுரகிரி யாத்திரை செல்ல பேசிக்கொண்டிருந்த போது, அருகில் உள்ள ஆலயம் சென்று வழிபட முடிவெடுத்தோம். அன்னை மீனாட்சியம்மன் தரிசனம் செய்யலாம் என ஒவ்வொருவரும் ஒரு ஆலயம் சொன்னார்கள். நமக்கு உடனே மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் கருத்தில் உருவானது. அனைவரும் சரி என்று கூற, மதுரை பரமசிவன் ஐயாவிற்கு அலைபேசியில் கூறி, நேரில் சந்திக்க விருப்பம் என்று கூறி மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் நோக்கி சென்றோம்.


                                           

சுமார் காலை 8 மணி அளவில் கோயிலை அடைந்தோம்.

                                              

                         

காலை நேரத்தில் கூட்டம் இல்லை. அமைதி ததும்பும் சூழலில் அம்மையின் தரிசனம் பெற்றோம். சற்று நேரத்தில் குருக்கள் கோயிலுக்கு வந்தார்கள். நாம் முன்கூட்டியே குருநாதர் தரிசனம் பெற வந்துள்ளோம் என்று கூறியதால் நமக்கு சிறப்பு தரிசனம்ஏற்பாடு செய்தார்கள்.முதலில் கோயிலை முழுதும் வலம் வந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான் என அனைத்து இறை சொரூப தரிசனம் பெற்றோம்.













அடுத்து நம் மனம் குருநாதர் நோக்கி சென்றது. எந்த கோலத்தில் தரிசனம் பெற உள்ளோம்? நின்ற கோலமா? அமர்ந்த கோலமா? அன்னையின் தரிசனம் கூடவே பெற உள்ளோம் என்று மனதுள் பல கேள்விகளுடன் ஸ்ரீ அகத்திய சற்குரு பீடம் நோக்கி சென்றோம்.


மிக சரியாக மதுரை பரமசிவன் ஐயா தம் துணையோடு வந்து சேர்ந்தார்கள். குருக்களும் அர்ச்சனைக்கு தயார் ஆனார்கள்.





வழக்கம் போல் லோக ஷேமத்திற்கு சங்கல்பம் செய்து அருள்மிகு உலோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய சற்குரு தரிசனம் பெற்றோம். 

பெற்றோம் ஆசிகள் அனைவரும் 
அனைவரும் பெற்ற ஆசிகள் செப்பிடவே 
என்றும் குருநாதர் தாள் பணிந்து 
மதுரையம்பதி மண்ணில் எங்கள் தாள் 
பதித்தல் விட மனம் பதிக்கவே 
என்றும் விரும்புகின்றோம் குருநாதா 









கும்பாபிஷேக விபூதி பிரசாதமும் லட்டு பிரசாதமும் அன்று நமக்கு கிடைத்தது. இதனை பெரும் பாக்கியமாவே கருதுகின்றோம்.









அடுத்து சிறு கலந்துரையாடல் நடைபெற்றது. முதலில் திரு.பரமசிவன் ஐயாவிற்கு சிறு மரியாதை செய்தோம். பின்னர் திரு.பரமசிவன் ஐயா அவர்கள் சதுரகிரி தலம் பற்றி அவருடைய அனுபவங்களை தம்மோடு பகிர்ந்து கொண்டார். நாமும் பல செய்திகளை அன்றைய தினம் குறித்து வைத்துக் கொண்டோம். அடுத்து திரு.பரமசிவன் ஐயாவின் தொண்டுகள் பற்றி சிறிது நேரம் நாம் பேசினோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவை மகத்தானது. 2019 ஆம் ஆண்டில் நாம் நேரில் அன்னசேவையில் கலந்து கொண்டோம். இவற்றையெல்லாம் அன்று நாம் சற்று பேசினோம்.






சுமார் 30 நிமிட கலந்துரையாடல் பெற்று, திரு பரமசிவன் ஐயாவிற்கு நன்றி கூறி, அங்கிருந்து சதுரகிரி நோக்கி புறப்பட்டோம். விரைவில் சதுரகிரி யாத்திரை பதிவுகள் குருவருளால் காண உள்ளோம்.




மீண்டும் ஒரு முறை பதிவின் ஆரம்பத்தில் பகிர்ந்த கந்த நாடி வாக்கினை படித்து பார்த்து , வாய்ப்புள்ள அன்பர்கள் தரிசனம் செய்து வருஷாபிஷேக வழிபாட்டில் கலந்து கொள்ள நம் தளம் சார்பில் வேண்டுகின்றோம்.

எப்படி செல்வது?

இக்கோவில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் மூலக்கரை (பசுமலை) என்னும் பேருந்து நிறுத்தத்தில் உள்ளது.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

 அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html