"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, June 5, 2020

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

உம்மாச்சி தாத்தா என்று செல்லமாக குழந்தைகளாலும் மகா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 127-வது ஜெயந்தி  தினம் அதாவது அந்த மகா பெரியவா அவதரித்த தினம் இன்று.

காஞ்சிபுரம் என்றவுடன் நமது சிந்தனைக்கு முதலில் நிற்பது ஸ்ரீ காமாட்சியும் "உம்மாச்சி" தாத்தாவும்தான். அதற்கு பிறகு தான் காஞ்சிபுரம் பட்டு, இட்லி, சிற்பங்கள் இவை அனைத்தும். அது யாருங்க "உம்மாச்சி தாத்தா"என நீங்கள் கேட்டால், நீங்கள் தமிழகத்திற்க்கு புதியவர் என அர்த்தம். காஞ்சிபுரத்திற்க்கு சென்று "உம்மாச்சி தாத்தா" யாருன்னு ஒரு குழந்தையிடம் கேட்டால் கூட மகா பெரியவாள காமிக்கும்.

இன்றைய பதிவில் மகா பெரியவா உடனான சில செய்திகளை அறிய உள்ளோம்.



நம் வாழ்வில் திக்குத் தெரியாது இருக்கும்  போது வழி காட்டிக் கொண்டிருக்கும் மகா பெரியவா தரிசனம்.



மகா பெரியவாவின் அருள் மொழிகளோடு பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஐந்தறிவு ஜீவன் உணர்த்தும் சம்பவத்தை அப்படியே தருகின்றோம்.



1927 ஆம் ஆண்டில் காஞ்சி மடத்திற்கு ஒரு நாய் வந்தது. மகாபெரியவரின் பார்வையில் அது பட்டது. அது அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.

அந்த நாய் மடத்தில் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிடும். மடத்திற்கு வருபவர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. தெருப்பக்கம் போனாலும் அங்கே கிடைப்பவற்றையும் உண்ணாது. தினமும் அதை குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிடுவார்கள். பெரியவரைக் காணவரும் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாது. மடத்தின் கால்நடைகளையும் பொருட்களையும் பாதுகாக்கும். மடத்து ஊழியர்கள் கண்ணயர்ந்துவிட்டால் அது தூங்காமல் விழித்திருக்கும். நாயின் இந்த குணத்தை அறிந்த மகா பெரியவா ஒவ்வொரு நாள் மாலையிலும் புன்னகையுடன், “நாய்க்கு உணவு கொடுத்தாகிவிட்டதா?” என்று வாஞ்சையுடன் கேட்பார்.



சில நேரங்களில் ஊழியர்கள் உணவிட மறந்துவிட்டால் பட்டினியாகவே கிடக்கும். பெரியவா உபவாசம் (விரதம்) இருக்கும் நாட்களிலும் அது சாப்பிடாது.

பெரியவா மற்ற ஊர்களுக்கு முகாமிட பல்லகில் செல்லும்போது,  பல்லக்கின் அடியிலேயே நாயும் செல்லும். யாத்திரை கிளம்பினால், அவருடன் செல்லும் யானையின் கால்களுக்கு இடையில் நடக்கும்.

ஒரு நாள், பெரியவா ஒரு ஊரில் முகாமிட்டிருந்தபோது சிறுவன் ஒருவன் அதன் மீது கல்லை வீசியதில் காயம் ஏற்பட்டது. நாய் வலி தாங்காமல் குறைத்துக்கொண்டே இருந்தது. பெரியவருக்கு தெரிந்தால் என்னாகுமோ என பயந்த மடத்து அதிகாரிகள், “நாயை ஏதாவது ஊரில் விட்டு வந்துவிடுங்கள்,” என்று உத்தரவிட்டனர்.

ஊழியர்களும் அதை பிடித்துக்கொண்டு, 40 கி.மீ. தள்ளி இருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று கட்டிப் போட்டுவிட்டனர். ஆனால், நாய் விட்டதா என்ன,,,, கட்டை அறுத்துக்கொண்டு, ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன்பே, வேறு ஏதோ வழியில் முகாமுக்கு வந்துவிட்டது.

அன்று முதல், அது உயிர் வாழ்ந்த வரை, மகா பெரியவரைத் தரிசிக்காமல் சாப்பிட்டதில்லை. பெரியவரைத் தரிசிக்க வரும் பக்தர்களெல்லாம் இந்த அதிசய நாயையும் பார்த்துவிட்டே செல்வார்கள்.



பக்தி என்பதே நன்றி மறவாமை தான்! ஆம்… நன்றி மிக்க இந்த நாயின் பக்தி நமக்கு நன்றி நமக்கும் நன்றி மறவாமல் இருக்க பாடம் கற்றுத் தருகிறது.



* மக்களுக்குத் தொண்டாற்ற விரும்புபவர்களின் மனதில் சாந்தமும், ஊக்கமும் இருக்க வேண்டும். முகத்தில் புன்னகை தவழ வேண்டும்.

* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். இது மிகச் சிறந்த தர்மம்.

* தர்மத்தை பலன் கருதிச் செய்ய வேண்டாம். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.

* பக்தி செய்வதால் கடவுளுக்கோ, மகான்களுக்கோ லாபம் இல்லை. எல்லாம் நமக்குத் தான்.

* தர்மம் செய்வதாக இருந்தால் நினைத்தவுடன் உடனே செய்து விடுங்கள். தாமதித்தால் மனம் மாறிவிட வாய்ப்புண்டு.

* அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் அதற்குரிய பலனை தருவதில்லை.

* நமக்கு இரு கைகள் இருக்கின்றன. ஒருகையால் கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.

* பணத்திற்காக அலைவது மட்டுமே வாழ்க்கையல்ல. தினமும் கொஞ்சநேரமாவது இறைசிந்தனையுடன் இருக்கவேண்டும்.

எப்பேர்ப்பட்ட சிந்தனைகளை நம் பேசும் தெய்வம் அருளி உள்ளார்கள். மீண்டும் மீண்டும் படித்து வாழ்வின் புரிதலை உணர்வோமாக


நம் அன்பர் திரு.சுதன் காளிதாஸ் அவர்களின் காய் வண்ணத்தில் மிளிரும் அருள் காட்சிகளை மேலே இணைத்துள்ளோம். அவரருக்கு நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று பாண்டிச்சேரி ஸ்ரீ லோபாமாதா அகத்தியர் ஞானம் இல்லத்தில் ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் இரண்டு மகான்கள் வைகாசி அனுஷம் மஹா குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது. சில அருள்காட்சிகளை கீழே இணைத்துள்ளோம்.
















அடுத்து  எஸ்.கோதண்ட ராம சர்மா  படைத்த ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ நூலில் இருந்து சில அற்புதங்களை தர உள்ளோம். மீண்டும் மீண்டும் படித்தால் தான் மனுஷ தெய்வத்தின் மகத்துவம் புரியும்.

வான்மழை பெய்ய திருப்பராய்த்துறை:-

மழையே பெய்யவில்லை. தண்ணீர்ப் பஞ்சம். நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை; மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது, கண்ணீர்.

சென்னை வர்த்தகப் பிரமுகர், பெரியவாளை தரிசனம் செய்யக் காஞ்சீபுரம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில், வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது. ‘என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்’ என்று கேட்கவில்லை; ‘எசமானே! மழை இல்லமால் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணனும்’ என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.

‘அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு. பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரப் பதிகங்களில், திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில் ஒரு பதிகம் இருக்கு. ஓதுவார்களுக்குத் தெரியும். அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம். மழை பெய்யும்: ஜனங்கள் சௌக்கியமா இருப்பா…’

பெரியவாளின் வாக்கு, நிரந்தரமான பலன் கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.

தேவைப்பட்டால், இன்றைக்கும், திருப்பராய்த்துறை பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக் கொண்டுவரலாமே?

பெரியவா இதற்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும்.

நூற்றெட்டுக் குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யலாமே:-

பெல்லாரி அருகில் வேணிவீராபுரம் என்று ஒரு கிராமம். விவசாயத்தை நம்பிப் பிழைக்கும் ஜனங்கள். மழை இல்லை என்றால் ஜீவனம் இல்லை.

பெரியவர்களிடம் வந்து (கன்னடத்தில்) முறையிட்டார்கள்.

”உங்க கிராமத்திலே சிவன் கோயில் இருக்கா?”

”இருக்கு…”

”நூற்றெட்டுக் குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யுங்கோ… சிவ சிவன்னு சொல்லிண்டு பண்ணினா போறும்… சன்னதியிலேயே உட்கார்ந்துகொண்டு சிவநாம ஜபம், சூரியோதயம் ஆகிற வரையிலும்…”

பெரியவர் உத்தரவிட்டபடி, மறுநாள் சிவாராதனம் நடந்தது. அதற்கு மறுநாள் வானம் பொத்துக்கொண்டு மழைக் கொட்டியது.

வான்மழை பெய்ய அருள் மழை பொழிகின்ற மகா பெரியவாவின் தரிசனம் வேண்டுகின்றோம். அட..இன்றைய நன்னாளில்  பௌர்ணமி அன்னதானம் 25 நபர்களுக்கு காலை உணவாக நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT  குழு சார்பில் வழங்கப்பட்டது. பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி.












மீண்டும் மீண்டும்  மகா பெரியவாவிடம் குருவருள்,திருவருள்  வேண்டி பிரார்த்திக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html


No comments:

Post a Comment