"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, June 30, 2020

தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை அடிவாரக் கோயில் தரிசனம்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சில பதிவுகளுக்கு முன்னர் தீர்த்தகிரி யாத்திரை சென்று கொண்டு இருக்கின்றோம். இன்றைய பதிவில் மீண்டும் தீர்த்தகிரி யாத்திரை செல்வோம். வீட்டிலிருந்தபடியே நீங்கள் தரிசனம் செய்யும் வண்ணம் தீர்த்தகிரி யாத்திரை செல்ல இருக்கின்றோம்.

தீர்த்தமலை  என்றாலே ஒரே மலையில் ஐந்து தீர்த்தங்கள். ஐந்து தீர்த்தங்கள் இங்கே இருப்பதால் தான் பேரே தீர்த்தமலை என்று உருவாகி உள்ளது.இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.

 நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

தீர்த்தமலையின் சிறப்புகளே, இங்குள்ள தீர்த்தங்கள் தான். இங்குள்ள தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தல தீர்த்தங்களாக ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியவை விளங்குகின்றன. அற்புத மூலிகைகளின் சத்து கலந்து ஓடி வரும் இந்த தீர்த்தங்களால்தான், இங்கு வரும் பக்தர்களின் நோய்கள் நீங்குவதாகவும், பக்தர்கள் புத்துணர்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது. இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்கள், நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள்.
தீர்த்தங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

 ராமபிரானின் பாணத்தால் தோன்றிய தீர்த்தம் ‘ராம தீர்த்தம்’. பாறைகளில் இருந்து வெளிப்படும் அரிய தீர்த்தம் இது. இந்த தீர்த்தத்தில் ‘ராம ஜெயம்’ என்று உச்சரித்தபடி மூழ்கி எழுந்தால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்கிறது தல புராணம்.

 சூரபத்மனை வதம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட முருகப்பெருமான், தேவர்களின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமே ‘குமார தீர்த்தம்’ என்று அழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. இந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதாலும், பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.

 இத்தல இறைவியான வடிவாம்பிகை, ஈசனை மணந்து கொள்ளும் பொருட்டு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டார். இதுவே ‘கவுரி தீர்த்தம்’ ஆகும். இந்த தீர்த்த நீரைக்கொண்டு, இறைவனையும், இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும். திருமணத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்கள் விலகும். கணவன்-மனைவிக்கு இல்லறம் நல்லறமாக அமையும்.

அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்ற தீர்த்தம் ‘அகத்திய தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்டது. இதனை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன் படுத்தி வந்தால் ஜீரண சக்தி கிடைக்கும். வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

 அக்னி தேவனின், பெண்ணாசை காரணமாக அவனுக்கு சாபம் உண்டானது. அதனைப் போக்கிக் கொள்வதற்காக இத்தலம் வந்த அக்னி பகவான் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே ‘அக்னி தீர்த்தம்’. இந்த தீர்த்தத்தில் நீராடினால், உடலின் தட்பவெப்ப நிலை சீராகும். ஆஸ்துமா, அடிக்கடி சளி பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும் என் பது நம்பிக்கை.

தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூருக்கு அருகில் அமைந்துள்ளது.

சரி. தீர்த்தகிரி அடிவாரக் கோயில் தரிசனம் தரிசனம் பெற வாருங்களேன்.





கோயிலின் உள்ளே செல்ல இருக்கின்றோம்.






                                                     கொடிமரம் கண்டு வணங்குகின்றோம்.







அப்படியே உள்ளே சென்று ஒவ்வொரு இறையைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினோம். இதோ. நால்வர் தரிசனம் பெற்ற தருணம் கீழே தருகின்றோம்.



கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மேலே கொடுத்துள்ளோம். இங்கு அதிகளவில் இறை தரிசனம் பெற்றோம். கீழே ஒவ்வொன்றாக கொடுத்துள்ளோம். பொறுமையாக தரிசித்து அருள் பெற்றுக் கொள்ளுங்கள்.































இந்த அடிவாரக்கோயிலில் கூட்டம் இல்லை. மேலே மலைமீதுள்ள கோயிலில் தான் மக்கள் கூட்டம் அதிகளவில் பார்க்க முடிந்தது. ஆனால் இங்கே கூட்டம் இல்லாததால் பொறுமையாக, அமைதியாக நாம் இறை தரிசனம் பெற்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் தீர்த்தமலை செல்லும் போது , அடிவாரக்கோயில் தரிசனமும் பெற்று வர வேண்டுகின்றோம்.


 இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

எப்படி இருந்தது தீர்த்தமலை யாத்திரை? உங்கள் கருத்துக்களை தெரிவியுங்களேன். நல்ல மலை யாத்திரை. மலை யாத்திரையோடு தீர்த்தக்குளியல். மலை மேலே சிவன் தரிசனம். ராமபிரான், இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று பெரும் சிறப்புக்குரிய ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. தீர்த்தகிரீஸ்வரர் தரிசனம் பெற்று மீண்டும் கீழே இறங்கி வந்து அடிவாரக்கோயில் தரிசனம் பெற்றுள்ளோம்.மீண்டும் மற்றொரு ஆலய தரிசனத்தில் சிந்திப்போம்.

அமைவிடம்:-

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் இருக்கிறது.


மீள்பதிவாக:-

 வாழ்வில் திருப்பங்கள் தரும் தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_40.html


 ஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_23.html

 யாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_18.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - 1 - https://tut-temples.blogspot.com/2020/02/1.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_5.html

சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_65.html

 மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_91.html

வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_16.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_7.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_24.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_22.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_58.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_17.html

No comments:

Post a Comment