"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 31, 2019

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தல அன்பர்கள் அனைவருக்கும் 2020 ம் ஆண்டின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 2019 ஆம் ஆண்டில் நாம் பலவிதமான சூழல்களை குருவருளால் கடந்து வந்திருக்கின்றோம். எத்தனையோ மகிழ்வுகள், துக்கங்கள் என ஒவ்வொரு சூழலும் நமக்கு பல படிப்பினைகளை தந்துள்ளது. இந்த அனுபவத்தோடு 2020 ஆம் ஆண்டை வரவேற்போம்.


தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT மூலம் புத்தாண்டு பரிசாக 2020 ம் ஆண்டு நாட்காட்டியை தருகின்றோம். 2020 ஆம் ஆண்டு ஒவ்வொருவருக்கும், நல்வாழ்வை தந்து, நல்விஷயங்களை செய்கிற வாய்ப்பை தந்து, அமைதியையும், ஆனந்தத்தையும், நம் குருநாதர் அருளால் வழங்க வேண்டும்  என வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.










2019 ஆண்டை பொறுத்தவரை தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT பலவிதமான பயணங்களை செய்துள்ளது. இதோ. நம் சிந்தனைக்கு செய்தியை கீழே தருகின்றோம்.

1. 2019 ஆண்டு வள்ளிமலை கிரிவலம் மற்றும் தரிசனம் 
2. மாதம் தோறும் கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய வழிபாடு 
3. மாதம்தோறும் அமாவாசை அன்னதானம் 
4. மாதம்தோறும் மோட்ச தீப வழிபாடு 
5. மகாளய பட்ச சேவை 
6. தீபாவளி சேவை 
7. மதுரை இறையருள் மன்ற சேவையுடன் ஒரு நாள் இணைப்பு 
8. ஆப்பூர் உழவாரப்பணி மற்றும் யாத்திரை 
9. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் உழவாரப்பணி 
10. நம்பிமலை யாத்திரை & கோடகநல்லூர் தரிசனம் 
11. குன்றத்தூரில் ஸ்ரீ கந்தலீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குரு பூசை 
12. திருஅண்ணாமலையில் மலேசியா அகத்தியர் அடியார்களின் மகேஸ்வர பூசை 

இந்தப் பட்டியல் இன்னும் நீளும். இவை அனைத்தும் குருநாதர்களின் அருளாலே அன்றி நம்மால் யாதொன்றும் இல்லை. இதே உத்வேகத்துடன் 2020 ம் ஆண்டில் நாம் சேவைகளை தொடர்வோம்.








2019ஆம் ஆண்டில் முதல் நாளில் நாம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பெற்ற தரிசன காட்சிகளை இங்கே பதிவு செய்கின்றோம்.









































இந்த 2020 ஆண்டில் முதல் உழவாரப் பணிக்காக நம்மை குன்றத்தூர் கோவிந்தன் அழைக்கின்றார். மிக விரைவில் தனிப்பதிவில் உழவாரப்பணி அறிவிப்பில் அனைவரையும் சந்திக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மருதேரி மன்னவன் அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா (08.01.2020 ) - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர்!

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

 ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.

என்ற வள்ளலாரின் அருள்வாக்கோடு இப்பதிவைத் தொடர்வோம். 

அனைவருக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். புதிய ஆண்டின் முதல் பதிவாக என்ன பதிவு தரலாம் என்று நாம் பலவாறாக யோசித்தோம். குருவை பற்றி பேசாது, சிந்திக்காது புதிய ஆண்டினை தொடர முடியுமா என்ன? இதோ..குருவே நம்மை இங்கே வழிநடத்துகிறார்.

சன்மார்க்கம் ஒன்றையே தம் குறிக்கோளாய்க் கொண்டு மருதேரியில் பிருகு மகரிஷி அருள் நிலையம் இயங்கி வருகின்றது. இங்கே ஜோதி வழிபாடு ஒன்றே பிரசித்தம். நாம் ஏற்கனவே மருதேரி அனுபவங்களை பகிர்ந்துள்ளோம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திர வழிபாடு இங்கே நடைபெறும். அன்றைய நாளில் நவகோடி சித்தர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.


சித்தர்கள் ஆசி  இங்கே கிடைக்கின்றது , உருவ வழிபாடு கிடையாது. ஜோதியை மனதுள் நினைத்து, மனதினை செம்மைப் படுத்த, சித்தர்களை உணரலாம். சித்தர்கள் போற்றிய வாழ்வியலை போதிக்க ஆசிரமம் முனைந்து செயல்பட்டு வருகின்றது.

தமிழ் மாத கடைசி ஞாயிறு அன்று, ரவி வழிபாடு யாகத்துடன் நடைபெறுகின்றது. இயற்கையை இன்று யார் வழிபடுகிறார்கள்? இதோ. நம் மருதேரி ஆசிரமம் இயற்கை வழிபாட்டினை - ரவி வழிபாடாக செய்து வருகின்றது.

 இத்தகு சீரும், சிறப்புமிக்க மருதேரியில் வருகின்ற 08.1.2020 அன்று அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் அகண்ட ஜோதி தரிசனத்தோடு, உலக மக்கள் அனைவரும் உடல் நலம், மன வளம் பெற்று வாழ்ந்திட சுமார் 2000 பேர் சேர்ந்து   பாசுபத யஃனம் நடத்த  உள்ளார்கள்.இந்த யஃனம் பிருகு மகரிஷியாலும் ,  மரிஷீ, காஷ்யபர் மற்றும் அத்திரி குருக்களின் கருணையாலும், ஆசியாலும் மற்றும் நவகோடி சித்தர்களின் அருளாலும்  நடைபெற உள்ளது.  உலகம் உய்வு பெறவும், சன்மார்க்கம் ஓங்கவும் நடைபெறும் இந்த யக்ஞத்தில் அனைவரும் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

 மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழைப் பார்க்கவும்.






                                                    குரு ஆன்மாவின் தலைவன் 
ஆன்மாவை வழிநடத்திச் செல்பவன் 
ஆன்மாவின் பிழைகளை மன்னிப்பவன் 
ஆன்மாவை உய்விப்பவன் குரு 

உன் ஆன்மாவை அரவணைத்து 
உன் ஆன்மாவை அனுசரித்து 
உன் ஆன்மாவிற்கு அரண் அமைத்து 
உன் ஆன்மாவைக் காப்பவன் குரு 

குருவை அடைதல் என்பது எளிதோ?
குருவின் அருள் பெறுதல் சுலபமோ?
குருவின் அருகாமை உனக்கு சாத்தியமோ?
மருதேரி மன்னவனால் எளிதாம்,சுலபமாம்,சாத்தியமாம் 







சில பொக்கிஷங்களை மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். நர்மதை ஆற்றங்கரையில் உள்ள குஜராத்தில் அருள்பாலிக்கும் பாருச் (bharuch) கோயிலில் அருள்பாலிக்கும் பிருகு மகரிஷியின் தரிசனம் தான் மேலே நீங்கள் காண்பது. அங்கே ஏற்றியுள்ள அகண்டம் கீழே பாருங்கள். 


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

  சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html



2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள்

தள வாசகர்களே.


TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் அனைவருக்கும் 2020 ஆம் ஆண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம்,உயர்புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல குருவிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.



தமிழ் புத்தாண்டா? ஆங்கில புத்தாண்டா? என்று பட்டிமன்றம் நடத்த நாம் விரும்பவில்லை. உலகமே கொண்டாடும் இன்றைய நாளை நாமும் கொண்டாடுவதில் தவறில்லை, ஆனால் எப்படி கொண்டாடுகின்றோம் என்பதில் தான் விஷயம் உள்ளது. இன்றைய நாளை,விடுமுறை தினத்தை நாமும் வழக்கமாக தொலைக்காட்சி, சினிமா என்று கொண்டாடாது, குடும்பம், உறவுகள் என சுற்றம் சூழ, மூத்தோர் ஆசி பெற்று, அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். 




இதோ திருஅண்ணாமலையில் TUT  குழுவின் அன்னதானம் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்தும்  குருவின் கருணையாலே. குருவருளின்றி திருவருள் கிடைக்குமா? தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று நாம் நம் உறவுகளோடு ஆலய தரிசனம் பெற தீர்மானித்துள்ளோம். எண்ணத்தை விதைத்தாகி விட்டது, பிறகென்ன? எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.




அனைவரும் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் கேட்டிருப்பீர்கள். கந்த குரு கவசத்தில் கீழ்க்கண்ட வரிகள் மிக மிக ஞானம் போதிப்பவை. 




உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
 அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்







நம் தளமும் அன்பையே துணையாக கொண்டு பல அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அன்பின் ஆழம் தான் அனைத்தும், அன்பே கடவுள்.எளிய சித்தாந்தம் தான். சொல்லக்கூடிய வேதாந்தம் தான். எந்த மார்க்கத்தில் சென்றாலும் அன்பைத் தான் நாம் கைவரப் பெற இருக்கின்றோம். இதற்கு மேல் எளிமையாக சொல்ல முடியாது. நம் தளம் துவக்கிய நாளில் இருந்து நமக்கு உதவிய, தற்போது உதவிக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்றைய நாளை முருக சிந்தனையில் திளைக்க செய்ய விரும்புகின்றோம்.

கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் தாண்டி ஒரு அருமையான பாடலை நாம் கேட்டோம். அனைவருக்கும் தெரிந்த பாடலாக இருக்கலாம். எம்மைப் போன்ற சிறியோனுக்கு இந்த பாடல் புதிது தான். இது போன்ற பாடல்களை எப்படியாவது சேர்த்து வையுங்கள்.




பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே

கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா

நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா
சேவல் கொடி மயில் வீரா

வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன்
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா

ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம்


புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்

1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்

3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்

4. எந்த மதமானாலும் ஒரு ஞாயிற்று கிழமை குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.

5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.

6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
          
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்
தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் குழந்தைகள் நன்றாகத்தான் படிக்கும். நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள். ஆக இதற்கெல்லாம் கவலைப்
படாதீர்கள்.

8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ அல்லது அக்கம் பக்கத்து வீட்டு குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால்   அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள் 

9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.   

10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்
பாருங்கள். ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள் 

11. சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லப் பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும். 

12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.

13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள். 
அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.

14. வாரத்திற்கு ஒரு முறையாவது தாய் தந்தையிடரிடம், மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனிமையில் கொஞ்ச நேரம் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள்.. அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்  சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.

15  நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். "ஓலா"எப்படி புக் செய்வது  "யூபர்" (Ola, Uber Taxi) டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக் கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி விடுங்கள்.

16.  உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாகவோ அல்லது கதை எழுதுவதாகவோ சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,  வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது, வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்யலாம்.
      
18  எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள்.சிரித்து வாழுங்கள்..

நீங்கள் இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும். அதனால் இவற்றில் கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள் என்று அன்போடு கேட்டு
கொள்கிறேன்.


இவற்றை முயற்சி செய்தால் 2020 மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன்  இருக்கும்..மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.







அட..மேலே உள்ள இணைப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தால் நமக்கு தெரிவியுங்கள் என்று சென்ற ஆண்டில் சொல்லி இருந்தோம். ஆம் சென்ற 2019 ஆண்டில் நாம் வள்ளிமலை சென்று இருந்தோம்.இந்த ஆண்டில் எந்த ஏற்பாடும் இல்லை. கூடுவாஞ்சேரி அறிவுத்திருக்கோயிலுக்கு சென்று வந்தோம். உலகில் உள்ள அனைவரும் சிறப்பாக வாழ வாழ்க வளமுடன் என்று வாழ்த்தினோம்.

முருகா சரணம்
குமரா சரணம்
குருவே சரணம்
திருவே சரணம்

முந்தைய பதிவுகளுக்கு :-

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html