"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 22, 2019

மார்கழி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 25.12.2019

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆண்டில்  (2018) ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் மார்கழி  மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஓராண்டு மோட்ச தீப குருவருளால்  முழுமை பெற்றுள்ளது. ஏனெனில் தோராயகமாக சுமார்  ரூபாய் பத்தாயிரம் வரை இந்த வழிபாட்டிற்கு தேவைப்படுகின்றது. முழுதும் நம் குழு அன்பர்களின் உபாயத்தினால் இந்த வழிபாடு நடைபெற்று வருகின்றது. மேலும் வழிபாட்டிற்கு புதிதாக வரும் அன்பர்களும் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து வருகின்றார்கள் என்பது கண்கூடு.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.

10 ம் ஆண்டில்  வெற்றி நடை போட்டு வரும் உலக பக்தர்கள் தினம் மலரில் நம் குழுவால் நடைபெறும் மோட்ச தீப வழிபாடு பற்றி செய்தி வெளியாகி உள்ளது.அதனை அப்படியே பகிர்கின்றோம்.

இந்த மலரில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிநடத்தும் மோட்ச தீப வழிபாடு பற்றி 4 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது.  துணுக்குக்கு இடம் தராமல் மிகவும் பரந்து 4 பக்க கட்டுரைக்கு இடம் தருவது இவர்களின் உண்மை உள்ளத்தை பறைசாற்றுகின்றது. இந்தப்பதிவில் நாம் உலக பக்தர்கள் தினம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் மோட்ச தீப வழிபாட்டிற்கு மாதம் தோறும் பொருளுதவி, நேரிலே வந்து நேரத்தை செலவழித்து உடலுதவி செய்து வரும் அனைவரின் பாதம் பணிகின்றோம்.






காத்திகை மாத மோட்ச தீப பூசையானது நம் குருநாதரின் அருளாசியால் சிறப்பாக நடைபெற்றது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாத பூசை நிகழ்வின் துளிகளை இங்கே இணைத்துள்ளோம்.



இந்த வழிபாடானது ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது. இதோ நம் தம்பிகள் இருவர் திரு.சிவசங்கர் மற்றும் மாதவன் இருவரும் பூசைக்கு உதவிய காட்சி.



தாம்பரத்தை சேர்ந்த திருமதி.விஜயசுந்தரி அவர்கள் தரையை மொழுகிய காட்சி. இப்படி எல்லாம் செய்வார்களா என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்பது கேள்விக்குறி தான்.


அன்றைய தினம் பிரசாதமும் தயார் நிலையில் இருந்த காட்சி.


தீபமேற்ற 21 திரிகள் தயார் செய்யப்பட்டு இருந்த காட்சி


இதோ..வாழையிலை பரப்பி பூசைக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட காட்சி




அனைவரிடமும் சங்கல்பம் செய்து வாங்கிய எள்ளை தீப அகலில் சமர்ப்பித்த காட்சி


அடுத்து தீப திரிகளை வைத்து நெய் ஊற்றும் காட்சி




கோயில் குருக்கள் இந்த பூசையைப் பற்றி கூறி, முதல் தீபம் ஏற்ற உள்ளார்.














இதோ..21 தீபங்களும் ஏற்றி, 108 முறை மந்திரங்களை மனம் திறந்து கூறி ,அன்று அன்னசேவையில் உணவு உண்டு திருப்தியாக வழிபாடு செய்தோம்.


இது என்ன என்று யோசிக்கின்றீர்களா? இது தான் இந்த பூசையின் . முக்கியம். அடுத்த நாள் காலை நாம் பூசை பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடும் நீரில் கலக்க வேண்டும். நாம் நம்மால் முடிந்த வரையில் கூடுவாஞ்சேரியில் உள்ள ஏரியில் சமர்ப்பித்து வருகின்றோம்.

 இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.



மார்கழி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 25.12.2019

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் மார்கழி   மாதம் 9 ஆம் நாள் (25.12.2019)  
மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-


கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html


ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

No comments:

Post a Comment