"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 12, 2019

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்...

அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

இப்போது தான் 2019 ஆண்டு பிறந்தது போல் இருந்தது. அதற்குள் ஆண்டின் பாதியை கடந்து விட்டோம். நேற்று திருவோண நட்சத்திர வழிபாடு ஆப்பூர், வேலி அம்மன் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. பூசைக்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. இன்றைய பதிவில் ஆவணி அமாவாசை பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும் காண இருக்கின்றோம். ஆவணி அமாவாசை அன்று முழுதும் ஆயில்யம் நட்சத்திரம் இருந்தது. ஆனால் நாம் மனத்தில்  இரு பூசையும் மாலை நேரம் செய்யலாம் என்று நினைத்தோம். குருக்களிடம் அலைபேசியில் விசாரித்தோம். அவர்களும் சரி என்று கூறிவிட்டார்கள். இது தான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..

சரி..பூசைக்கு செல்வோமா?


அப்பனே ...குருநாதா..அகத்தீசா...முதலில் நேரே சென்று அகத்தியர் தரிசனம் பெற்றோம்.


அடுத்து பூசைக்கான முன்னேற்பாடுகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது. மூலிகைப் பொடிகள் ஒவ்வொன்றும் கலசத்தில் சேர்க்கப்பட்டது.



அடுத்து பஞ்சாமிர்தம் செய்யும் பணியை மகளிர் ஏற்றுக்கொண்டு செய்தனர்.


ஆயில்ய பூசைக்கு மகளிர் என்றால் மோட்ச தீபத்திற்கு ஆடவர். இதோ..நீங்களே பாருங்கள்,




மோட்ச தீபத்திற்கு திரி தயாரிக்கும் பணியும், ஏனைய முன்னேற்பாடுகளும் நடந்தது.


அட..மிக அழகான அலங்காரம். கையில் கிடைத்த பொருட்களை கொண்டு மிக நேர்த்தியாக இருந்தது.


ஆயில்ய பூசை ஏற்பாடுகள் முடித்து மகளிரும் இங்கு வந்து சேர்ந்து, பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். புதிதாக எழும்பூரில் இருந்து ( எக்மோர்) கோகுல் என்பவர் வந்தார். அவரையும் சேவையில் ஈடுபட சொன்னோம். ஹேமந்த் ஐயா, அனந்தகிருஷ்னன் ஐயா என அனைவரும் ஒருங்கே பூசைக்காக தத்தம் பணியை செய்தனர்.


பஞ்சாமிர்தம் சரியாக பிசையவில்லை. நங்கநல்லூர் ராதா அவர்கள் மீண்டும் தம் கைப்பக்குவத்தை காட்டிக்கொண்டு இருந்தார்கள்.




நேரம் 7 மணியைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. ஆவணி அமாவாசை இரவு 7 மணிக்கு தான் தொடங்கியது. எனவே நாம் குருக்களிடம் ஆயில்ய பூசை செய்ய வேண்டினோம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இரவில் நடைபெறும் பூசை என்பதால் நமக்கு ஆச்சர்யமாக இருந்தது.நீங்களே அபிஷேகம் பாருங்கள்.












அடுத்து மோட்ச தீபத்திற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.



அடுத்து மீண்டும் ஆயில்ய பூசை தரிசனம் காண்போமா?









இந்த வழிபாட்டில் உள்ள அருள் நிலைகளை பார்க்கும் போது தீபத்தின் ஒளி இருளில் புதுவிதமாக தெரிகின்றது அல்லவா? மீண்டும் ஒருமுறை அகத்தியரின் தரிசனத்தில் பாருங்கள். நமக்கு சூட்சுமமாக குருநாதரின் உத்தரவு கிடைக்கின்றது. ஏனென்றால் நாம் ஒவ்வொரு பூசையின் போதும்  ஒவ்வொரு விதமாக ஏற்பாடு செய்வோம். ஒருமுறை பூசைக்கு முன்னர் அன்னதானம் செய்தோம். ஒரு முறை பெரிய அகலில் அகண்ட தீபம் போல இலுப்பெண்ணையில் விளக்கேற்றினோம். இம்முறை நமக்கு இந்த ஜோதி தரிசனம் தீப வழிபாட்டை மேலும் உரக்க உரைத்ததாக உணர்கின்றோம்.

ஏனென்றால் அகத்தியரின் வாக்கினை பலமுறை படித்து இருக்கின்றோம். ஆனால் பிடிக்க மறந்து விட்டோம். இதனை பாண்டிச்சேரி சுவாமிநாதன் ஐயா அவர்களின் மூலம் மீண்டும் அறிந்தோம்.எனவே இனி வரும் அனைத்து பூசைகளிலும் 12 முகம் கொண்ட தீபம் ஏற்றி வழிபாடு தொடரும். இதற்கு குருவருள் நம்மை வழிநடத்த வேண்டுகின்றோம். இதோ..நம் குருநாதரின் அருள்மொழி 

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தீபத்தின் முகங்கள் அதிகமாக, அதிகமாக தோஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும், ஜாதக பாவங்களுக்கும் தொடர்பு உண்டு. "12" முக தீபத்தில் சகல வதனங்களும் அடங்கி இருப்பதால், அத்தருணம், பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து, ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடுபாட்டோடு வழிபாடு செய்தால், அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதைவிட, ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்."

நம் தளத்திற்கும் தீபத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. முதன்முதலில்  கூடுவாஞ்சேரியில் ஆயில்ய பூசை செய்தோம். அடுத்த ஓராண்டு நிறைவில் அகத்தியரின் ஆராதனை 108 தீபமேற்றி கொண்டாடினோம்.பின்னர் அகத்தியர் தபோவனம் மலேசியா குழுவோடு சேர்ந்து குறித்த நாளில் 108 தீபமேற்றி வழிபட்டோம். இந்த தீப வழிபாடு நம்மை மோட்ச தீபம் நோக்கி நகர்த்தியது. இதோ..2018 ஆண்டு  ஆடி மாதம் முதல் ஓராண்டு நிறைவில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம்.இந்த நிலையில் தான் நம்மை நம் குருநாதர் 12 முக தீபமேற்றி வழிபட உத்திரவு கொடுத்துள்ளார். இனி இந்த தீப வழிபாடு நம் அனைத்து பூசையிலும் தொடரும்.


பதிவின் நீளம் கருதி, இந்த அபிஷேக தரிசனத்தோடு நிற்போம். எதிர்வரும் பதிவில் மீண்டும் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா தொடரும்.



ஓதிமலையும் வள்ளிமலையும் 

அனைவருக்கும் வணக்கம். ஓதியப்பர் பிறந்த நாளை வள்ளி மலையில் “தேடல் உள்ள தேனீக்களாய்” குழுவின் சார்பில் அன்னதானம், அபிசேகம், தீபமேற்றல் என கொண்டாடினோம். வழி நடத்தும் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு ஓதிமலையும்,வள்ளிமலையும் என்ற தொகுப்பை கீழே தருகின்றோம். 

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html


மீள்பதிவாக:-

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/38.html

 ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html

 திரும்பிப் பார்க்கின்றோம்: அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - புரட்டாசி -2017 - https://tut-temples.blogspot.com/2019/08/2017.html


 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html


ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment