"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 10, 2019

பிரார்த்தனை...பிரார்த்தனை... பிராத்தனை..!

அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

அன்றாட வாழ்வில் ஆன்மிகமும் ஆரோக்கியமும் நம்மை திக்கு முக்காட வைக்கின்றது. இரண்டும் பல வழிகளில் தன்னை வளர்த்து வருகின்றது. ஆரோக்கியம் என்று பேசினால் சித்தா,ஹோமியோபதி,அல்லோபதி, மாற்று மருத்துவம், செவி வலி தோடு சிகிச்சை, ஆயுர்வேதம்,மூலிகை மருத்துவம் என பட்டியல் நீளுகின்றது. ஆனாலும் சக்கரை நோய் பாதிப்பால் வாழ்பவர்கள் அநேகர். அதே போன்று தான் ஆன்மிகமும். கோயில்கள் என்று பேசினால் பாடல் பெற்ற  தலங்கள்,சிவத்தலங்கள், வைணவ தலங்கள், சித்தர் கோயில்கள், மலைக் கோயில்கள் என பட்டியல் நீளுகிறது.இருந்தாலும் மக்கள் பல பிரச்சினைகளோடு தான் வாழ்ந்து வருகின்றார்கள்.இந்த கலியுகத்தில் கடைத்தேற நமக்கு எது உதவும்? என்று பட்டிமன்றம் கூட வைக்கலாம். ஆம்..அது தவமா? கூட்டுப்பிரார்த்தனையா என்று?




ஏற்கனவே நாம் இது பற்றி பேசியுள்ளோம். தவத்தை விட கூட்டுப்பிரார்த்தனையே சிறந்தது. தவம் செய்ய மன அமைதி வேண்டும். மனம் அமைதி பெற உடல் நலம் காக்க வேண்டும். ஆனால் கூட்டுப் பிரார்த்தனை செய்யவும் மன அமைதி வேண்டும் தான். ஆனால் தவத்தில் உள்ள மன ஒற்றுமையை விட பிரார்த்தனைகளுக்கு கொஞ்சம் குறைவு தான். ஆனால் நேரம் வேண்டும். எனவே தான் நாம் நம் தளம் சார்பில் கடந்த ஒரு மாதமாக பிரார்த்தனை செய்து வருகின்றோம். தினசரி பிரார்த்தனையாக இது நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்து வருகின்றோம்.

குறிப்பாக நாளை திருவோணம் நட்சத்திரம் வருகின்றது.அது இன்றிலிருந்து தொடங்குகின்றது.எனவே திருவோண நட்சத்திர அன்பர்கள் தங்கள் கோரிக்கைளை நமக்கு தெரியப்படுத்தலாம். நாம் தினசரி பிரார்த்தனையில் இதனை இன்று மாலை அல்லது நாளை காலை சேர்ப்பித்து விடுவோம். இதற்கென்று தலத்தில்  பிரார்த்தனை மேடை என்று ஒரு பகுதி உள்ளது.அதில் தினமும் நட்சத்திர பிரார்த்தனை பற்றிய அறிவிப்பு வரும்.



அண்மையில் நமக்கு பிரார்த்தனை பற்றிய அருமையான செய்தி கிடைத்தது,அதனை அப்படியே இங்கு பகிர்கின்றோம்.

உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.
வழியில் பெரும் பனிப்புயல். அவரால் காரை ஓட்ட முடியவில்லை.
ஒரு கிராமத்தை தாண்டியபொழுது, சாலை  பல பிரிவுகளாக பிரிந்தது.வழிகாட்டிபலகையும் அந்த பனிப்புயலால்  தூர வீசப்பட்டிருந்தது.

டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியவில்லை.
இதுவாகத்தான் இருக்கும் என்று அவராகவே முடிவு செய்து கொண்டு, ஒரு வழியில் காரை பயணித்தார்.ஆனால் அந்த வழி ஆள் அரவமற்ற காட்டின் வழியே சென்றது. புயலும் அதிகமாக வீசியது. டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஒதுங்க எந்த இடமும் இல்லை.
தூரத்தில் ஒரு சிறு வீடு தெரிந்தது. டாக்டர் அங்கே சென்று கதவை தட்டினார்.
ஒரு இளம் பெண் கதவை திறந்தார். அவர் இருந்த நிலையை பார்த்து உள்ளே அழைத்து அமரச் சொன்னார்.

ஏழ்மையான வீடு. வீட்டில் யாரும் இல்லை. இரண்டு வயது குழந்தை ஒன்று தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது.அந்த பெண் அன்போடு சூடான தேநீர் ஒன்றை கொடுத்து அருந்த சொன்னார்.
பின் விசாரித்ததில் அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும். அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், நீங்கள் செல்ல வேண்டிய ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினார்.

பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். நான் prayer செய்து விட்டு வருகிறேன் என்று கூறி, அறையின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி கண்ணீர் மல்க முணுமுணுத்தவாறு வெகு நேரம் பிரார்த்தி விட்டு, மீண்டும் டாக்டர் அருகில் வந்து அமர்ந்தார்.



என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? என்று டாக்டர் வினவினார்.

அப்பெண் கண்ணீர் மல்க, தன் குழந்தையை காட்டி, அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை.Brain nerves சரியாக வேலை செய்யவில்லை. இதை சரி செய்வதென்றால் ஒரே ஒருவரால்தான் முடியும். பெரும் செலவாகும். என் ஏழ்மை நிலையில் கடவுளிடம் பிரார்த்திருப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி அழுதார்.யார் அந்த டாக்டர்? என்று கேட்டார்.புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் ஜான்சன் என்று அந்த பெண் சொன்னவுடன், டாக்டர் அதிர்ந்துவிட்டார்.

அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்.

அந்த எளிய பெண்ணின் பிரார்த்தனையே இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என்று உணர்ந்தார்.பின் நடந்தது காவியம். அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே அழைத்து சென்று சரியான மருத்துவம் செய்து குழந்தையை காப்பாற்றினர்.

பிரார்த்தனை வலிமை வாய்ந்தது.

நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல் செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து, அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்.
அலை இயக்க தத்துவம் புரிந்தவர்களுக்கு, எண்ணத்தின் வலிமையும், செயலாற்றும் தன்மையும் எளிதில் புரியும்.எண்ணம் எழும் இடமோ சிறு புள்ளி. விரிந்து முடியும் இடமோ அகண்டாகரம்.இதனை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உண்ணும் உணவு உடல் முழுதும் பாயும்.
எண்ணும் எண்ணம் எங்கும் பாயும் என்று சொல்லி "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த சொல்கின்றார்.

இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் அனைவரும் "வாழ்க வளமுடன்" என வாழ்த்தி மகிழ்கின்றோம்.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

No comments:

Post a Comment