"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 26, 2019

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை


அன்பார்ந்த மெய்யுணர்வாளர்களே.

தேடல் உள்ள தேனீக்களாய் என்ற குழுவின் மூலம் நம் தொண்டினைத் தொடர்ந்து வருகின்றோம்.
வலைத்தளம் ஆரம்பித்து இன்றைய பதிவில் 200 ஆவது பதிவைத் தாண்டி விட்டோம்.இவை அனைத்தும் குருவருளால் மட்டுமே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. நம்மைப்
பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணங்களே முக்கியம்.இந்த பதிவில்  உழவாரம் பற்றிய சில குறிப்புகளை காண உள்ளோம். இவை நம்முள் உள்ள சில ஐயப்பாடுகளை நீக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

சீரும் சிறப்பும் மிக்க உழவாரத் திருப்பணியை ஏன் செய்கிறோம்?

 இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் விரும்பி அறிய வேண்டிய ஒன்றாகும்.
 நம் போன்ற மானிட உயிர்க் கூட்டங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத வைரஸ், அமீபா போன்ற உயிர்களிலிருந்து, மிகவும் பெரிய யானை, திமிங்கலம் போன்ற விலங்குகள் வரை - ஏன்? இந்திரன், திருமால், நான்முகன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் வரை இவ்வுலகில் காலம் காலமாக உடல் எடுத்துப் பிறந்து வருகிறோம்.

 நாம் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பெடுத்து வருகிறோம். பாவங்களுக்கு ஏற்ப துன்பமயமான நரக வாழ்வையும், புண்ணியங்களுக்கு ஏற்ப  சொர்க்கலோக வாழ்வையும் பெறுகிறோம். இவ்விரண்டு வாழ்க்கையும் நிலையற்றவை. ஏனென்றால் நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்பச் சொர்க்கலோக இன்பங்களை நுகர்ந்த பின்பு மீண்டும் பூவுலகிற்கு வந்து தீர வேண்டும். அதுபோல நாம் செய்த தீவினைகளுக்கு ஏற்ப நரகம் சென்று துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும் இப்பூவுலகம் வந்தே தீரவேண்டும்.

 நாம் முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப நமக்கு நோய், வறுமை, கடன், அவமானம் போன்ற இழிநிலையும்...

புண்ணியங்களுக்கு ஏற்பப் பணம், புகழ், திடீர் யோகம், ஆரோக்கியம் போன்ற உயர் நிலையும் வந்து சேர்கின்றன.

 இந்த உயிர், “சிவபுண்ணியம்” செய்வதால் தான் நமது பாவ புண்ணியங்களே இல்லாமற் போகும். அதன் பிறகு, இந்த உயிர் மீண்டும் உடல் எடுக்காது. 

சிவபுண்ணியம் என்றால் என்ன?

சைவ சமயக் குரவர் நால்வரும், 63 நாயன்மார்களும் காட்டிய, செய்த, சொல்லிய நெறிகளே சிவபுண்ணியங்களாகும்.

1. சிவாலயம் முறையாகக் கட்டுவது.

2. நாள்தோறும் சிவாலயம் சென்று வழிபடுவது.

3. சிவனடியார்களுக்கு அமுது படைப்பது.

4. சிவாலயங்களுக்குச் சென்று “உழவாரப் பணி” - அதாவது புல்பூண்டுகளை நீக்கி,
  வெள்ளையடித்து, தூய்மை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்வது.

5. சிவாலய உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல், செய்தல், செய்வித்தல் ஆகியன.

முதலில்  சிவாலயம் கட்டுதல்

இன்று நம்போன்ற சாமான்யர்களால் இயலாது. சிவாலயம் கட்டுவதால் மாயப் பிறப்பு அறுபடும் என்பதை உணர்ந்த அக்கால அரசர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்பச் சிவாகம விதிப்படிச் சிவாலயங்களைக் கட்டுவித்தார்கள்.அரசுப் பெருமக்கள் தங்கள் அழியும் புகழை நிலைநிறுத்த எண்ணாமல் என்றும் நிலையான பிறவாத பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் சிவாலயம் கட்டி
“பிறவாத கைலாய முக்திப்” பேற்றைப் பெற்றார்கள்! இந்நாளில் சிவாலயம் கட்டுவதென்பது அரிதினும் அரிதே!..

இரண்டாவது  சிவாலய தரிசனம்.

தினசரி சிவாலய தரிசனம் என்பது பலதரப்பட்ட தொழில்புரியும் அனைவருக்கும் இயலாத ஒன்று. எனவே, முடிந்தால் தினசரி அல்லது வாரம் ஒருநாள், வழிபடுவது என்று உறுதி எடுத்து வணங்கலாம். அன்றி 15 நாட்களுக்கு ஒரே முறை பிரதோஷ காலத்தில் வணங்கலாம்! அதுவுமின்றேல் - மாதம் ஒரே முறை; அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை என வகுத்து வணங்கலாம். இன்றேல், சிவராத்திரி அன்றாவது வணங்குதல் சிவபுண்ணியம் தரும்!

அடுத்து  சிவனடியார்களுக்கு அமுது படைத்தல்...

சிவனடியார்கள் யார்? சிவனடியார்கள் நெற்றி நிறையத் திருநீறு; கழுத்தில் சிவக்கண்மணி - ருத்ராக்ஷம் அணிந்தவர்கள்; இவைகள் சிவசின்னங்கள் : இந்தச் சின்னங்களுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்திருப்பது நமக்குத் தெரிந்தாலும் அதை எண்ணாது “சிவ சிவ” என்று சொல்லி அவரைச் சிவனடியாராகவே எண்ணி நமது தகுதிக்கு ஏற்பப் பொருளுதவியோ, அமுதோ தருவது சிவ புண்ணியமாகும். ஒன்றுமே சொல்லாமல் சிவ சிந்தனையின்றி உயிர்களுக்கு செய்யும் புண்ணியம் - உயிர் புண்ணியம்.

 அதாவது பசுப்புண்ணியத்தைத் தந்து நாம் மீண்டும் பிறக்க வழி வகுக்கும். எனவே, தர்மத்தை மட்டுமல்ல, எல்லா நற்செயல்களையும், “சிவ சிவ” என்று சொல்லி பரம் பொருளாகிய சிவத்தை எண்ணிச் சிவனார்க்கு அர்ப்பணம் செய்வோமானால் அத்தனையும் சிவ புண்ணியமாகி நமது பிறப்பை ஒழிக்கும்.

 அடுத்து சிவாலயத்தில் உழவாரப் பணி செய்தல்

சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்து உயர்ந்தவர். அவர் திருக்கரத்தில் உழவாரப்படை இருப்பதை அன்பர்கள் காணலாம்! ஏற்கனவே நமது முன்னோர்கள் கட்டிய - கோயில் கோபுரம், சுவர் ஆகிவற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சிதிலமடையக் கூடிய நிலையில் உள்ளன. ஏன்?! சிவலிங்கத் திருமேனியின் மேல் எண்ணெய் படாத சிவாலயங்கள் கூட உள்ளன.

பெற்ற தாய் தந்தையரைப் பேணாமல் யார் யாரையோ பெற்றோர் என எண்ணிப் பேதலித்துக் கொண்டாடும் வழி தவறிய மகனைப் போல நாம் இருக்கின்றோம்! ஆனால், சிவ பெருமான் நினைத்தால் தன் கருணையின் காரணமாக அனைத்துச் சிவாலயங்களையும் ஒரு நொடியில் பொன்னாக ஒளிரவைக்க முடியும்! நம்மைப் போன்ற அற்ப உயிர்கள் இச்சிவாலயங்களில் “உழவாரப்பணி” புரிந்து உய்யும் பொருட்டே அவற்றை இறைவன் அவ்வாறே விட்டு வைத்துள்ளான்! தான் பெற்ற குழந்தையின் நோய் தீரத் தாய் பத்தியம், உண்ணா நோன்பு இருப்பது போலத் தாயிற் சிறந்த தயை நிரம்பிய தத்துவனான சிவ பெருமான் நாம் சிவ புண்ணியம் பெறக் காட்டிய எளிய வழியே இந்த உழவாரப்பணி.

 (உலகில் எந்த ஒரு பணியும் வழிபாடும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது இலாபம் கருதியே இருக்கும்.)

சிவபெருமானை வழிபட்டால் முன்-7, இடை-7, கடை-7 ஆகிய 21 தலைமுறைகளுக்கும் முன்னோர், பின்னோர் வம்சாவழியினர் மீண்டும் பிறவா நெறி உள்ள “கைலாய முக்தி”யைப் பெறுவர்.
அத்தகைய சிவபுண்ணியம் தரும் இந்த உழவாரப் பணியானது சிவாலயங்களுக்குச் சென்று தேவையற்ற புல்பூண்டு, முள், புதர் நீக்குவதாகவும், ஒட்டடை, தூசு நீக்குவதாகவும், வெள்ளையடிப்பதாகவும், கோயில்களைச் சுத்தமாக மெழுகிக்கோலமிட்டு அழகூட்டுவதாகவும் நிறைவாக அபிஷேக ஆராதனைகள் நடத்துவதாகவும் அமைகிறது.இத்தகைய அரும்பணியை - சிவாலய உழவாரத் திருப்பணியை - ஆடவர், பெண்டிர், பெரியவர், சிறியவர் உட்பட எல்லா தரப்பு மக்களும் பணியாற்றி வருகின்றனர்.

 இந்த திருப்பணியில் எல்லோரும் பங்குபெற்று இயன்ற அளவு பொருளாலும், உடல் உழைப்பாலும் மற்றும் பிறவகைகளாலும், சிவபுண்ணியம் செய்ய அருமையான வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இப்புண்ணியத்தில் பங்கேற்போர் 21 தலைமுறைகள் தாங்களும் தங்கள் வம்சாவழியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று உய்ய இத்தெய்வத் திருப்பணியில் பங்கு கொண்டு சிவ புண்ணியம் ஈட்டி என்றும் மாறாத சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சில பதிவுகளுக்கு முன்னர் ஒளஷதகிரி தரிசனத்தில் இருந்தோம். அங்கிருந்து அப்படியே தொடர்வோம்.





நமக்கு உள்ளம் உருகுதையா என்று பாடத் தான் தோன்றியது  சுமார் 5 ஆண்டுகள் தவப்பயனாக
நம் குருநாதர் வாக்கு தான் அன்று நம்மை ஒளஷதகிரி நோக்கி பணித்தது. ஒவ்வொரு மலை யாத்திரையும் ஒவ்வொரு விதம். அதில் ஆப்பூர் மலை சிறப்பிலும் சிறப்பு ஆகும்.

பெருமாளின் திருத்தலம் அமைந்துள்ள மலை, ‘ஒளஷதகிரி’ எனப்படுகிறது. இந்த மலைப் பிரதேசம் முழுக்க முழுக்க மூலிகைச் செடிகள் நிரம்பிக் காணப்படுகிறது. இதற்கு ஒரு காரணம் சொல்கிறார், இந்த ஆலயத்தில் பூஜைகள் செய்து வரும் முத்துராம பட்டாச்சார்யர். ‘‘இந்திரஜித்துடன் நடந்த போரில் பாதிக்கப்பட்ட ஸ்ரீராமபிரான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். ஸ்ரீராமர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதைப் பார்த்த அவரின் பக்தனான அனுமன், கண் கலங்கினார். ஸ்ரீராமரது மயக்கத்தை உடனே தெளிவிப்பது எப்படி என்று யோசித்தார். அப்போது ஜாம்பவான் சொன்ன யோசனைப்படி சஞ்சீவி மலையில் இருந்து குறிப்பிட்ட சில மூலிகைகளைக் கொண்டு வந்து ஸ்ரீராமபிரானுக்கு சிகிச்சை அளித்தால், குணம் பெறுவார் என்று அறிந்தார். அதன்படி சஞ்சீவி மலை இருக்கும் வட திசை நோக்கிப் புயல் வேகத்தில் பறந்தார் அனுமன். சஞ்சீவி மலையை அடைந்தவர் ஸ்ரீராமபிரானை குணமாக்கும் மூலிகை எது என்று சரிவரத் தெரியாமல் குழம்பினார். எனவே, அந்த மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார்.



சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் வரும்போது, அந்தப் பிரமாண்ட சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு பாகங்கள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்தன. அதில் ஒரு சிறு பகுதிதான் இந்த ஒளஷத கிரி. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்பதால், இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பல மூலிகைச் செடிகள் இங்கு இருப்பதால், இந்த மலையில் சற்று நேரம் அமர்ந்து, மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்வதே பெரிய நிவாரணமாகக் கருதப்படுகிறது. ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, எலும்பு முறிவு உட்பட பல பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மூலிகைகள் இந்த ஒளஷத கிரியில் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்கு வரும் விஷயம் தெரிந்த பக்தர்கள், தரிசனம் முடிந்து செல்லும்போது சில மூலிகைகளையும் தங்களுடன் பறித்துச் செல்வது உண்டு!’’ என்றார் முத்துராம பட்டாச்சார்யர்.








பெருமாள் மட்டுமே இங்கு பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. எனவே, பெருமாளுக்குப் புடவை சார்த்தி வழிபடும் வழக்கம் இங்கு உள்ளது. முத்துராம பட்டாச்சார்யர் நம்மிடம் சொன்னார்: ‘‘திருமணம் நிறைவேறாமல் இருப்பது, வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் குறைகள் போய் விடும். கடலூர், சிதம்பரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், தங்கள் தோஷம் நீங்க ஆப்பூரைப் பரிகாரத் தலமாக ஜோசியர்கள் சொன் னார்கள் என்று இங்கு வருகிறார்கள். இது போன்ற மலை தங்கள் கனவில் வந்ததாகவும் பெருமாள் அழைத்ததா கவும் சில பக்தர்கள் சொல்கிறார்கள். எப்படியோ, ஓரளவு பக்தர்கள் தற்போது வர ஆரம்பித்திருப்பது சந்தோஷமான விஷயம். புரட்டாசி சனிக் கிழமை, வைகுண்ட ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டு தினம், ஸ்ரீராமநவமி, மாத பௌர்ணமி போன்ற தினங்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உள்ள இந்த ஆலயத்துக்கான பெருமாள் உற்சவர் விக்கிரகம், ஆப்பூர் கிராமத்தில் ஒரு பஜனை கோயிலில் உள்ளது.



 பிராகாரம் மற்றும் முன் மண்டபத்துடன் கூடிய கோயில். மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள், அஷ்ட லட்சுமியின் வடிவங்கள் ஆகியவை சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. பெரு மாளைப் பார்த்தபடி கருடாழ்வார் காணப்படு கிறார். அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும், வசிஷ்டர் உள் ளிட்ட ஏராளமான மகரிஷி களும் இந்த மலையில் தங்கி இருந்து, தவம் செய்து, பேறு பெற்றதாகச் சொல் கிறார்கள்.














ஒளஷதகிரியின் உச்சி யில் ஸ்ரீநித்யகல்யாண பிரஸன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நின்று கொண்டிருக்கும் போது ஜிலுஜிலுப்பான மூலிகைக் காற்றின் வாசம் நம்மைப் பரவசமூட்டுகிறது. கோடை வெயிலின் வெம்மை நம்மை அதிகம் தாக்கவில்லை. ரம்மியமான சூழ்நிலை. உள்ளத்துக்கும் உடலுக்கும் அமைதி தரும் அற்புதப் பிரதேசம்!







அருமையாக தரிசனம் முடித்து லோக ஷேமத்திற்காக திருவோணம் அன்று சிறப்பு பூசையும், நித்திய பூசையும் செய்ய வேண்டி குருக்களிடம் வேண்டினோம்.




அப்படியே பேசிக்கொண்டே நடந்த போது நம் தளம் சார்பில் உழவாரப்பணி செய்ய அனுமதி கோரினோம். இதுதான் காரணமின்றி காரியமில்லை என்பது. உடனே குருக்கள் நமக்கு அனுமதி கொடுத்தார்கள்.




செம்மலை முருகன் கோயில் செல்ல இருந்த நம்மை ஆப்பூர் பெருமாள் ஆட்கொண்டு இன்று நமக்கு உழவாரப்பணி செய்ய அழைக்கின்றார் என்றால் சும்மாவா?  அனைத்தும் அந்த பரந்தாமன் வசம் என்று ஒப்படைத்து விட்டோம். இதோ. உழவாரப்பணியோடு ஒரு நாள் யாத்திரையும் செல்ல இருக்கின்றோம்.


மலை மேல் குடி கொண்ட அந்த மாதவனை தரிசிக்க ஆவல் மேலிடுகிறதா? மூலிகை வாசம் உங்களை இழுக்கிறதா? அற்புதமான அந்த கோவிந்தனை தரிசிக்க ஆப்பூர் புறப்படுங்கள்!

கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 8- 10:30; மாலை 4:30- 6 மணி. விசேஷ நாட்களில் இந்த நேரம் மாறுபடும்]


உழவாரப்பணி அறிவிப்பு:-

இறை அன்பர்களே....

நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ள ஆப்பூர் மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்   வருகின்ற 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
உழவாரப்பணி 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நேரம்: காலை 8 மணி முதல் 2 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 
7904612352

உழவாரப்பணியைத் தொடர்ந்து செங்கல்பட்டு அருகே உள்ள திருத்தலங்களை தரிசிக்க உள்ளோம். நம்முடன் யாத்திரையில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் நம்மைத் தொடர்பு கொள்ளவும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html


  ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html


No comments:

Post a Comment