"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 22, 2019

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் மார்கழி  மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஓராண்டு மோட்ச தீப குருவருளால்  முழுமை பெற்றுள்ளது. ஏனெனில் தோராயகமாக சுமார்  ரூபாய் பத்தாயிரம் வரை இந்த வழிபாட்டிற்கு தேவைப்படுகின்றது. முழுதும் நம் குழு அன்பர்களின் உபாயத்தினால் இந்த வழிபாடு நடைபெற்று வருகின்றது. மேலும் வழிபாட்டிற்கு புதிதாக வரும் அன்பர்களும் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து வருகின்றார்கள் என்பது கண்கூடு.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.


சரி. இந்த ஆண்டில் மார்கழி  மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா? 





வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

மோட்ச தீபத்திற்கு நாம் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அதில் குறிப்பாக அகல், எள்,பச்சரிசி இவை அடங்கும்.இவற்றை வாங்கி, நன்கு கழுவி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக மிக பொறுமையும் ,சிரத்தையும் அவசியம்.







கோயிலில் விளக்கேற்றும் இடத்தை நன்கு கூட்டி, பெருக்கி , பின்னர் சாணம் கொண்டு மொழுகி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து தீபங்களை தயார் செய்ய வேண்டும். வழக்கம் போல் சத்யராஜ்  இந்த சேவை ஆரம்பித்தார். அவரோடு மேலும் சில அன்பர்களும் சேவையில் ஈடுபட்டனர்.






தீபத்திற்கு திரியை தயாரிக்கும் பணியை ஆடவரும், தீபமேற்ற வாழை இல்லை, அகல் வைத்தல் போன்றவற்றை மகளிரும் செய்து கொண்டிருந்தார்கள்.







இந்த முறை கூடுவாஞ்சேரியை சேர்ந்த திரு. கோதண்டராமன் அவர்கள் விளக்கேற்றி வழிபாட்டை துவக்கி வைத்தார்கள்.






மோட்ச தீபம் ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டு வருகின்றது. அன்றைய தினம் பிரகாசம் தெரிந்தது.













கண்ணைப் பறிக்கும்  ஒளி வெள்ளம். இது நமக்கு புதிதாக இருந்தது.  இந்த இடத்தில் தான் சென்ற குரு பூசையில் 108 விளக்கேற்றி வழிபட்டோம். அதன் தொடர்ச்சியாக நாம் இங்கே மோட்ச தீபம் ஏற்றுகின்றோம் என்றால் குருவின் கருணைக்கு எல்லையேது?




  தீபம் ஏற்றியாகி விட்டது.அடுத்து மந்திர உச்சாடனம் செய்ய உள்ளோம். 






இரண்டு மந்திரங்கள் 108 முறை சொல்ல வேண்டும்.  அன்பர்கள் இருவர் ஆளுக்கொரு மந்திரமாக பிரித்துக் கொண்டு அழகாய் சொன்னார்கள்.







  அடுத்து ஒவ்வொருவராக வந்து, அவர்களின் முன்னோர்களை நினைத்து வேண்டி, அங்கே பூக்கள் தூவி வழிபாடு செய்ய பணித்தார்கள். 21 தலைமுறை முன்னோர்களின் ஆசி வேண்டி நின்ற ஒவ்வொருவரையும் பார்க்கும் போது, இந்த பூமியில் நாம் பிறந்த நோக்கத்தை இவர்கள் அனைவரும் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.



அடுத்து நம் ஹேமந்த் ஐயா அவர்களுக்கும், திரு. கோதண்டராமன் ஐயா அவர்களுக்கும்  நம் தளம் சார்பில் அகத்தியர் படம் வழங்கினோம்.





 அடுத்து உணவு பரிமாறப்பட்டது. உணவு பரிமாறியவுடன் அங்கிருந்த இறை மூர்த்தங்களை வணங்கினோம்.

 இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் ஐப்பசி  மாதம் 10 ஆம் நாள் (27.10.2019)  
ஞாயிற்றுக்கிழமை  மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

No comments:

Post a Comment