"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, October 5, 2019

நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (5)

நம் தள வாசகர்கள் அனைவரும் நாம் தினமும் இங்கே அளித்து வந்த நவராத்திரி பதிவுகளை கண்டு மகிழ்ச்சி கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். நாம் இது போன்ற ஒரு நிகழ்வினைக் காண,அன்னை நமக்கு கட்டளை இடுவார் என்று நம்பவில்லை. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பொதுவாக நாம் பேசிய போது, விஜயதசமி அன்று நடைபெறும் நெய்க்குளம் தரிசனம் பற்றி குருக்கள் கூறினார்கள். நாமும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். அதன் பின்னர் மறந்தும் விட்டோம்.

நவராத்திரி ஏழாம் நாள் தொடர்ந்து நாம் இங்கே நவராத்திரி பதிவு தரவில்லை.அதற்கு முன்பாக இந்த அருள் காட்சியை அனைவரும் பெற வேண்டி இந்த பதிவைத் தருகின்றோம். நாம் இங்கே ஒரு கருவி மட்டுமே. அனைத்தும் அன்னையின் அருளாலே.

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக, திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் பற்றிய பகிர்வைக் கண்டோம். இதே அருள் வெளிப்பாடு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அன்னையின் தரிசனத்தில் கண்டோம். இரண்டு கோயில்களிலும் உள்ள நெய்க்குளம் தரிசனம் காணுங்கள்.

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. காலம் தாழ்த்தி பதிவினை தருவது நமக்கு சற்று மாணவருத்தமாக உள்ளது.

அதென்ன நெய்க்குளம் தரிசனம் ?


திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.  அத்துடன்  புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். 
சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

இதுதான் நெய்க்குள தரிசனம். நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற  தரிசனம். திருமீயச்சூரில்  உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.இதோ உங்களுக்காக!


நெய்க்குள தரிசனம் 


மேலே நாம் கண்ட தரிசனத்தை அடுத்து, கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் பெறப் போகின்றோம். இப்படியொரு தரிசனத்தை அன்னை அருள்வாள் என்று நாம் கனவில் கூட நினைத்ததில்லை. நாம் நமக்கு இது வேண்டும்? அது வேண்டும்? என்று கேட்டுக் கொண்டே போகலாம்.ஆனால் அன்னைக்குத் தானே தெரியும்,தம்  பிள்ளைக்கு என்ன தர வேண்டும் என்று ? அப்படிதான் அமைந்தது இந்த ஆண்டு விஜய தசமி தரிசனம்.

நாம்  அன்றைய தினம் திரு அண்ணாமலையார் தரிசனம் பெற்று, அன்று மாலை 6 மணிக்கு கூடுவாஞ்சேரி வந்தோம். நேரம் ஆகி விட்டதோ? என்று மனம் பதைபதைத்தது. கோயில் சென்றோம்.  நல்ல கூட்டம்.கூட்டத்தில் ஒருவனாய் நாம் இருந்தோம். அன்று லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டு இருந்தார்கள். சரியாக 7 மணி அளவில் அம்மன் புகழ் பாடல்கள் பாடி, சங்கல்பம் செய்தோம். சற்று நேரத்தில் தீபாராதனை. நமக்கு நெய்க்குள தரிசனம் பற்றி தெரியவில்லை. திரையை விலக்கிய பின்னரே, குருக்கள் நெய்க்குளம் தரிசனம்  பற்றிய செய்தியைச் சொன்னார். மெய்  மறந்தோம். அன்னையின் அன்பில் பரவசம் அடைந்தோம். அன்று காலை சண்டி ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாலை குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.
இதோ..கூடுவாஞ்சேரி லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம்










அம்மன் நெய்க்குளம் தரிசனம் பெற்றீர்களா? ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பது இதுதான் போலும். ஒரே பதிவில் திருமீயச்சூர் மற்றும் கூடுவாஞ்சேரியில் உள்ள லலிதாம்பிகை அம்மனின் தரிசனம் அதுவும் நெய்க்குளம் தரிசனம் என்றால் சும்மாவா? இப்படியொரு பதிவை நாம் அளிக்க இருக்கின்றோம் என்று  நாமும் நினைக்கவில்லை. எல்லாம் அவள் அருளாலே தான்.
திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகை அம்மன் பெற அன்னையிடம் பிரார்த்திக்கின்றோம். கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் பற்றி இனிவரும் பதிவுகளில் சொல்ல, விநாயகரிடம் வேண்டுகின்றோம்.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                           


சங்கத் தமிழ் மூன்றும் தா!

இது ஏதோ சாதாரணமான பாடல் என்று நினைக்காதீர்கள். பல முறை படித்துப் பார்த்தால் பல செய்திகளை நமக்கு நம் அவ்வைப் பாட்டி சொல்வது புரியும்.


No comments:

Post a Comment