"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, October 12, 2019

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம்

 அடியார் பெருமக்களுக்கு வணக்கம்

காரணம் இன்றி காரியமில்லை என்பது சும்மா சொல்வதன்று. இப்போது நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போது அனைத்தும் குருவருளால் என்பது உறுதியாக தெரிகின்றது. சில பதிவுகளுக்கு முன்னர்  நாம் மச்சமுனி சித்தர் தரிசனம் பெற்றோம். இங்கே அவர் பற்றிய செய்திகளை இங்கே தருகின்றோம்.மீண்டும் ஒரு முறை ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம் பதிவின் இறுதியில் பெறுவோம்.

தனிமை சூழலில் நம் குருவின் வழிகாட்டலில் மலை யாத்திரை இன்னும் நம்மை அமைதி நோக்க செய்கின்றது.இங்கு ஆட்கள் அதிகம் வருவதில்லை. மௌனம் இங்கே உணரலாம்.மீண்டும் எப்போது என்று நாம் காத்திருக்கின்றோம்.

மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”காலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

மச்சமுனி சூத்திரம், மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30, மச்சமுனி பெரு நூல் காவியம் 800, மச்சமுனி வைத்தியம் 800 , மச்சமுனி கடைக் காண்டம் 800, மச்சமுனி சரக்கு வைப்பு 800 , மச்சமுனி திராவகம் 800, மச்சமுனி ஞான தீட்சை 50, மச்சமுனி தண்டகம் 100, மச்சமுனி தீட்சா விதி 100, மச்சமுனி முப்பு தீட்சை 80, மச்சமுனி குறு நூல் 800, மச்சமுனி ஞானம் 800, மச்சமுனி வேதாந்தம் 800, மச்சமுனி திருமந்திரம் 800, மச்சமுனி யோகம் 800, மச்சமுனி வகாரம் 800, மச்சமுனி நிகண்டு 400, மச்சமுனி கலை ஞானம் 800, மாயாஜால காண்டம் போன்ற பல நூட்களை நம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மச்சமுனி சித்தர் ஐயா அவர்கள் வழங்கி உள்ளார்கள்.



மீண்டும் தரிசனம் முடித்து கீழே இறங்கி வரும் போது எடுக்கப்பட்ட காட்சிகளை இங்கே தருகின்றோம்.





மாசற்ற காற்றும், மனிதர்கள் அதிகம் இல்லாத தனிமையும். நம்மை வேறொரு உலகத்திற்கு ஆட்கொள்கிறது. சொல்லில் இதனை எழுத முடியவில்லை. சித்தர் பெருமக்களை நேரில் காண இயலாத போது, இது போன்ற பேரமைதியான சூழல் நம்மை அவர்களின் உலகத்திற்கு எடுத்து செல்லும்.





படிக்கட்டு பாதை வழியே தான் செல்ல வேண்டும் என்று விரும்பினோம். இந்த வழியில் சென்றால் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே செல்ல முடியாது என்று கோயிலில் சிலர் கூறினார்கள்.எனவே மீண்டும் வந்த பாதை வழியே வாழ்க்கையைத் தொடங்கினோம். குறிப்பாக சொல்வதானால் வந்த வேலையை விட்டு விட்டு நம் சொந்த வேலையை செய்வதால் தான் நமக்குத் துன்பம் வருகின்றது.ஆழ்மனதிற்கு  புரிகின்றது. ஆனால் மேல் மனம் குரங்காட்டம் அல்லவா இருக்கின்றது.






அமைதி..அமைதி..அமைதி மட்டுமே இங்கே சாத்தியம். ஐயாவின் அருள் அலைகளை இங்கே அமைதியில் உட்கார்ந்தால் பிடிக்கலாம்.

















இதோ..படிப் படியாக இறங்கி, திருப்பரங்குன்றம் கோயிலை அடைந்து விட்டோம். இன்னும் அந்த பச்சை நிற சுனை நம் மனதில் நிறைந்து இருக்கின்றது.









மச்ச முனி சித்தர் அருள் பார்வை ஒருவர் மீது பட்டுவிட்டால் அவர் இந்த உலக துன்பங்களில் இருந்து விடுபடுவது உறுதி. அதனுடன் யோகத்தில் நிலைபெறுவதும் உறுதி.

மீண்டும் ஒரு முறை ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம் பெறுவோமா?

அங்கே மச்சமுனி சித்தர் பற்றி  விசாரித்தோம். அவர்கள் நம்மை கோயிலின் பின்புறம் அழைத்து சென்றார்கள்.







மச்ச முனி சித்தர் மீன் ரூபத்தில் அருள் புரியும் இடம் இதுவே ஆகும்.மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்சமுனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். இவர் மகிமை பொருந்திய தலங்களாக நாகை வடக்குப் பொய்கை நல்லூர், இமயமலை, ஹரித்வார், ருத்ரப்பிராயகை, சதுரகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய இடங்களும் குறிக்கப்படுகின்றன. மேலும், நேபாளத்தின் காட்மண்டுவில் 'பாக்மதி' என்ற இடத்தில் அமைந்துள்ள மச்சேந்திரநாதர் கோயிலில் இவர் ஜீவ சமாதி கொண்டுள்ளார் என்ற கருத்தும் உண்டு.

























அங்கிருந்த முருகப்பெருமானையும் தரிசித்தோம்.






இங்கு செல்லும் போது அவசியம் பொரி வாங்கி செல்லுங்கள். மேலும் இங்கே பெரிய அளவில் கடைகள் இருக்காது எனவே தேவையான பொருட்களை அடிவாரத்தில் வாங்கி கொண்டு இங்கு வருவது உசிதம். நல்ல ஒரு தரிசனம் பெற்றோம். மச்ச முனி சித்தரின் அருளில் திளைத்தோம். பின்னர் நன்றி கூறிவிட்டு அங்கிருந்தும் நகர்ந்தோம்.

மீள்பதிவாக:-


 திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html
 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment