"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 15, 2019

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மலையேற்றத்தில் நம் தளம் மூலம் சதுரகிரி,வெள்ளியங்கிரி, அத்திரி மலை, பருவத மலை என சென்று வந்திருக்கின்றோம். இது தவிர ஏராளமான மலைகள் நம் தமிழ் நாட்டில் இருக்கின்றன.தேனி சண்முகநாத மலை, மிருகண்ட மகரிஷி மலை என தற்போது தான் நாம் அறிந்தோம். இது போல் ஒவ்வொரு ஊரிலும் மலைகள் ஏராளம். அவை தரும் நன்மைகளோ தாராளம். தற்போது நம் குழுவோடு நம்பிமலை யாத்திரை சென்று வந்தோம். தற்போது நம் தளத்தில் தோரண மலை, வள்ளிமலை, பருவத மலை என மலை யாத்திரை பதிவுகள் கண்டு வருகின்றோம். ஒவ்வொரு மலையாத்திரையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. பருவத மலை எடுத்துக் கொண்டால் மலையின் மேலே கம்பி பிடித்து ஏறி, ஆகாயத்தில் உள்ள சிவனை நம் கைகளால் அபிஷேகம் செய்து தரிசிக்கலாம். நம்பி மலை என்று எடுத்துக்கொண்டால் நம் பெருமாளின் முழு ஆற்றல் நிறைந்த மலை. இங்கே தீர்த்த குளியல் செய்வது சிறப்பு. இது போன்ற சிறப்பு வேறு மலையில் கிடைக்காது. தோரண மலை எடுத்துக்கொண்டால் மலை ஏறுவதற்கு படிகள் கொண்ட வசதி உண்டு. மலை உச்சியில் குகைக்குள் முருகப் பெருமான் தரிசனம். செல்லும் வழியில் தீர்த்தக் குளியல் கொள்ளலாம். இதே போன்று திரு அண்ணாமலை பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. முதலில் மலை தரிசனம் என்றாலே அனைத்திலும் பசுமை நம்மை சூழும். இது தான் மலை யாத்திரையின் சிறப்பு. அடுத்து மலைகளில் கிடைக்கும் மூலிகை வாசம், நம்மை வசப்படுத்தும். மூச்சு விட இயல்பாக நாம் மலை யாத்திரையில் பழகலாம். இந்த பதிவில் மீண்டும் தோரண மலை யாத்திரை செல்ல இருக்கின்றோம்.




திருநெல்வேலி மாவட்டம் கடையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் செக்போஸ்ட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தோரணமலை. ராமநதி, ஜம்புநதி ஆகிய இரு நதிகளுக்கடையே வானளாவ உயர்ந்து நிற்கிறது இந்த மலை. மலை உச்சியில் ஒரு சிறிய குகைக்குள் திருச்செந்தூர் முருகனை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறான் குகன்.மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளை உடையது இந்த ஆலயம்.

கந்த புராணம் கூறும் முருகப்பெருமானின் 16 வடிவங்களில் முதன்மையான ஞானசக்தி வடிவமாக கையில் வேலுடன் மயில் வாகனத்தில் தோரணமலையில் எழுந்தருளி உள்ளான் கந்தன்.

இத்தனை சிறப்புமிக்க தோரண மலை யாத்திரை நமக்கு அள்ள அள்ள ஆற்றல் தரும் யாத்திரை ஆகும்.இதற்கு முந்தைய பதிவில் மலை அடிவாரத்தில் முருகப்பெருமானை தரிசித்து மலை ஏற்றம் ஆரம்பித்தோம்.



அடிவாரத்தில் இருந்து சுமார் 926 படிகட்டுகள் கடந்து சென்றால் மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்கலாம். இதோ இப்போது நாம் சுனை பகுதிக்கு வந்து விட்டோம். இங்கு உள்ள சுனை தீர்த்தத்தில் உப்பு, மிளகு போன்ற எதுவும் போட வேண்டாம். இப்படி எல்லாம் செய்து இயற்கையின் இயல்பை இம்சிக்க வேண்டாம்.




இங்கு மட்டுமல்ல, எந்த மலையாத்திரை சென்றாலும் முதலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துங்கள். மலைகளில் தீர்த்தமாட வாய்ப்பு கிடைத்தால் சோப்பு,சீயக்காய் போன்ற எதனையும் பயன்படுத்த வேண்டாம். வெறும் நீரில் குளியுங்கள். அந்த இயற்கை சுனை நீரை அப்படியே உங்களுள் உள்வாங்குங்கள். 

இதோ. மீண்டும் சுனையில் இருந்து நடக்க தொடங்குகின்றோம்.




காண காண களியாட்டம் என்பது போல் பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா என்று பசுமையை ரசித்துக் கொண்டே நடந்தோம்.



மீண்டும் படிக்கட்டில் ஏறிக்கொண்டே இருந்தோம்.


இதோ. மலை உச்சியை நெருங்காவதாக நாம் உணர்ந்தோம்.




நமக்கு வழித்துணை ஆற்றலாக பைரவரை கண்டோம். இவர் எப்படி, எப்போது நம்முடன் இணைந்தார் என்று நமக்கு தெரியவில்லை. இது போன்ற மலை யாத்திரையில் பைரவர் நமக்கு கவசமாக வந்து துணை நிற்பார் என்று கேட்டதுண்டு. பருவத மலை யாத்திரையில் கண்டோம். இந்த தோரண மலை யாத்திரையில் உணர்ந்தோம்.




ஓம் பைரவாய நமஹ ..பைரவர் ஆற்றல் மனிதன் பெற வேண்டிய ஆற்றல் . ஆம். நன்றிப் பெருக்கை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த பைரவ ஆற்றல் நமக்கு உணர்த்துகின்றது.


அடடா. என்று நம்மை மேலே உள்ள சூழல் ஈர்த்தது. மலை உச்சியை நெருங்கி விட்டோம். 






இதோ, இன்னும் மேலே ஏறினோம். ஈர்த்தென்னை ஆட்கொண்ட முருப்பெருமானை ரசிக்க உள்ளோம். மலை உச்சியில் எந்த ஒரு ஆரவாரமின்றி, அமைதியின் ஊற்றாய், ஆற்றலை அள்ளிக்கொடுக்க குகைக்குள் குகன் உள்ள காட்சி. இதற்குத் தானே முருகா..மலையேறி வந்தோம்.


முருகப்பெருமானை தரிசிக்கும் முன்னர் மேலே ஒரு சுற்று சுற்றினோம்.





அங்கிருந்து மேலே மேலும் சுனை நீர் இருப்பதாக கேள்விப்பட்டோம். அனால் இங்கே நாம் செல்லவில்லை.அடுத்த முறை செல்லும்போது இங்கே தரிசிக்கலாம் என்று விண்ணப்பிக்கின்றோம்.





தோரண மலை உச்சியை, முருக பெருமான் நடத்தும் சித்தர்கள் சாம்ராஜ்ஜியத்தை இங்கே காண இரு கண்கள் போதவில்லை. ஐம்புலன் மூலம் இங்கே ஒன்றினோம். மனம் பறந்து விரித்து. ஓர் புள்ளியில் ஒடுங்கவும் செய்தது. ஆஹா..இது தான் முருகன் திருவிளையாடல் என்று கண்டோம்,கேட்டோம். கருத்தில் ஒன்றினோம்,

திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன்.

செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.

மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். வல்லவ விநாயகர், குருபகவான், நவகிரகங்கள், சிவன், கிருஷ்ணர், பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி, சப்தகன்னியர் ஆகியோரையும் அடிவாரத்தில் தரிசிக்கலாம்.

இந்த மலை உச்சியில் உள்ள தரிசனத்தோடு அடுத்த பதிவில் மீண்டும் தோரண மலை அனுபவம் காண்போம்.

மீள்பதிவாக;-

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html

குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html


No comments:

Post a Comment