"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 9, 2019

தீப மங்கள ஜோதி நமோ நம...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அன்பர்கள், தள வாசகர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் நம் TUT தளம் மூலம் சொல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.



எங்கெங்கு காணினும் சிவமாய் தெரிகிறதே.அன்பே சிவமாய் கொள்ளும் போது, தற்போது நடைபெற்று வரும் திருக்கார்த்திகை விழாவும் நம்மோடு சேர்ந்து துள்ளலை கொடுத்துக் கொண்டு வருகின்றது. நாமும் இங்கே திருஅண்ணாமலை, கிரிவலம் என்ற பதிவுகளில் கண்டு வருகின்றோம். பதிவின் தலைப்பை பார்த்தாலே மீண்டும் திருஅண்ணாமலை பற்றி சில செய்திகள் அறிய இருக்கின்றோம்.

அறுசுவையும் அளவிற்கு மீறினால் துன்பம் தரும். ஆனால் இறையின் சுவை இந்த அறுசுவை தாண்டியது. ஐம்புலனும் இறை சுவை அறியவே படைக்கப்பட்டது. காதால் அந்த இறையின் நாமம் கேட்க வேண்டும், கண்ணால் அந்த இறையின் சொரூபத்தை காண வேண்டும். மூக்கால் இறையின் வாசம் நுகர வேண்டும். வாயால் அந்த இறையை போற்ற வேண்டும். மொத்தத்தில் அந்த இறையை நம் மெய் கொண்டு பற்ற வேண்டும். 




எப்போதாவது சில உருவங்கள் போல திருவண்ணாமலை மலை மீது பார்க்க நேரிடும்.அவைகள் பல்வேறு வடிவங்களில் நம் கண்களுக்கு தெரியும்.இதெல்லாம் ஏதேச்சையாக அமைவதா அல்லது சூட்சம ரீதியாக சித்தர்களின் வழிபாடுகளா யாருக்கு தெரியும்.பல தடவை  பார்க்கும் போது யாரோ ஒளி வடிவில் மலையை வணங்குவது போல தெரிகிறது.இதெல்லாம் நமக்கு மட்டும் தெரிகிறதா?அல்லது பிரமையா?எதுவும் புரியாமல் கடந்து செல்வோம்.ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த மலை இந்த அண்ணாமலை.

திருவண்ணாமலை அன்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் திருஅண்ணாமலை என்று அழைப்பது நமக்கும் நன்று, நம் தமிழ் மொழிக்கும் நன்றாகும்.  அண்ணமுடியாத அதாவது நெருங்க முடியாத மலை என்று பொருள் கொள்ள வேண்டும்.திருஅண்ணாமலை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். திருஅண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்கங்கள், சித்தர்களின் அருள், மகானகள், கிரிவலம்  சொல்ல இனிக்கின்றது அல்லவா?

இன்றைய பதிவில் திருஅண்ணாமலை பற்றிய 30 முத்துகளை தருகின்றோம். படித்து பாருங்கள்.

1. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

2. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.


3. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.

4. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.

5. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் 9-வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.

6. திருவண்ணாமலை ஈசனை ''தீப மங்கள ஜோதி நமோ நம“ என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

7. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.

8. திருவண்ணாமலை தலத்தில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.

9. மகா சிவராத்திரி தொடங்கியது இந்த தலத்தில் தான் என்று புராணங் களில் குறிப்படப்பட்டுள்ளது.

10. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

11. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக வந்த சிவாலயத்தி லும் ஜோதி வழிபாடு நடப்பதில்லை.

12. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.

14. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.

15. கார்த்திகை தீப திருவிழாவில் ஒருநாள் அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள். அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பெ£ருள் ஒன்றே என்பதை ''இறைவன் ஒருவனே“ என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

17. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப் படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று மகா தீபத்தை ஏற்றுவார்கள்.

18. திருவண்ணாமலை தீபத்தை காண கடந்த ஆண்டு (2018) சுமார் 25 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

19. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

20. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், ''அண்ணாமலை யாருக்கு அரோகரா“ என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
''இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்“- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

21. பஞ்சபூத தலங்களில் இது நெருப்புக்குரிய தலம்.

22. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

23. பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும் திருக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து புதிய புடவையினால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிரார்த்தனை செலுத்துவது எந்த திருக்கோவிலிலும் இல்லாத பிரார்த்தனை சிறப்பாகும்.

24. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.

25. மூன்றாம் பிரகாரத்தில் தலவிருட்ச மான மகிழ மரம் உள்ளது. குழந்தை பாக்கியமற்றவர்கள் இறைவனை வேண்டிக் கொண்டு துணியால் செய்யப்பட்ட சிறிய தொட்டில்களை இம்மரத்தின் கிளைகளில் கட்டு வார்கள். அவர்களுடைய வேண்டு தல் நிறைவேறியவுடன் தங்கள் குழந்தைகளுடன் இத்திருக்கோவிலுக்கு வந்து தாங்கள் கட்டியிருந்த துணித் தொட்டில்களை நீக்கி விட்டு காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

26. கோவிலுக்குள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலது பக்கம் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியை காணலாம். இது ரமணர் தலம் செய்த இடம். அங்கு அவசியம் தரிசிக்க வேண்டும்.

27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

30. வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.



சரி ..இன்றைய நன்னாளில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்தப்பதிவை படிக்கும் அன்பர்கள் அனைவரும் வாழ்வில் திருவருள் பெறும்படி எல்லாம்வல்ல பரம்பொருளிடம் விண்ணப்பிக்கின்றோம். நம் தளம் சார்பில் இன்று திருஅண்ணாமலையில் நடைபெறும் அன்னதான சேவைக்கு நம்மால் முடிந்த அளவில் சிறு தொகை சேர்த்துள்ளோம்.

மேலும் நாம் செல்லும் திருத்தலங்களில் எல்லாம் நம்மால் முடிந்த வரை தூய பசு நெய் கொண்டு நம் தளம் சார்பில் தீபமேற்றி வருகின்றோம். இப்போதெல்லாம் கோயிலுக்கு என்று சொன்னாலே, தீபமும், நெய்யும் கைப்பையில் தயாராகி விடுகின்றது. நம்மால் முடிந்த அளவில் அக்னியின் மூலம் உணவு தரவும் செய்கின்றோம். இருளகற்றி ஒளியேற்ற தீபமேற்றியும் வருகின்றோம்.




                                             நம்பி மலையில்  தீபமேற்றி வழிபாடு செய்த போது

 
                 ஸ்ரீ திருவாலீஸ்வரர்  கோயிலுக்கு இலுப்பை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ,இதர பூசைப் பொருட்கள்  கொடுத்த  போது





 கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேக தரிசனத்தில் தீபமேற்றி வழிபாடு செய்தோம்.



அருள்மிகு திரிபுர சுந்தரி உடனுறை குணம் தந்த நாதர் திருக்கோயிலில் தீபமேற்றி நம் தளம் சார்பில் வழிபாடு செய்தோம். விரைவில் இந்தக்கோயில் பற்றி நம் தலத்தில் பேசுவோம்.






திருஆலங்காட்டில் உள்ள  வடாரண்யேசுவரர் கோயிலில் தீபமேற்றி வழிபாடு செய்தோம்.



சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கண்ட கார்த்திகை தீப தரிசனம் மேலே.


பாக்கம்  ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் தீபமேற்றி வழிபாடு செய்த காட்சி 

இந்த தீபமேற்றும் நிகழ்விற்கு தாங்கள் விரும்பி நமக்கு உதவி செய்யலாம். கீழே உள்ள அறிவிப்பை பாருங்களேன்.



மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html


மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

No comments:

Post a Comment