"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, December 26, 2019

வள்ளிமலை அற்புதங்கள் - (7)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். வள்ளிமலை அடிவாரக்கோயில் தரிசனம் கண்டு, அதற்கும் முன்பாக வள்ளிமலை கிரிவலம் முடித்து, அடிவாரத்தில் இருந்து மலை ஏறி, இரண்டு முறை மலை மேல் உள்ள முருகப்பெருமானை தரிசித்து உள்ளோம். அடுத்து மீண்டும் வள்ளிமலை அடிவாரம் செல்ல வேண்டும். ஆனால் மேலே திருப்புகழ் ஆஸ்ரமம் உள்ளதாக கேள்விப்பட்டு அங்கே சென்றோம்.

அடடா..பசுமைக் காட்டிற்குள் பயணித்தது போல் இருந்தது. அங்கே மொத்தம் சொல்லப்பட்ட 7 இடங்களில் 3 இடங்கள் தரிசனம் இதற்கு முந்தைய தொடர்பதிவில்  தரிசனம் பெற்றுள்ளோம். பொங்கிப் பாறையும், பொங்கி அம்மன் தரிசனம், வள்ளிமலை சுவாமிகள் தரிசனம் தரும் நடுமண்டபம், வள்ளிமலை சுவாமிகளின் சமாதி. இதோ மீண்டும் இன்றைய பதிவில் இங்கிருந்து தொடர்வோம்.


அங்கே இரண்டு பாதை இருந்தது. ஆஸ்ரமத்தில் இருந்து நாம் தற்போது இடப்பக்கம் சென்று கொண்டு இருக்கின்றோம். அடடா. இந்த வழியே செல்லும் போது நமக்கு என்ன தரிசனம் கிடைக்கப்போகிறது என்று மனதிற்குள் 1000 கேள்விகள்.


சரவணப்பொய்கை தீர்த்தம் கண்டோம். இங்கே செல்லும் பொது கவனமாக செல்லுங்கள். ஏனெனில் இங்கு நாம் பாறையின் மேல் தான் நடக்க வேண்டும்.


அங்கிருந்து அனைவரும் மேலே ஏறிக்கொண்டு இருந்தார்கள். மேலே உச்சியில் சிவபெருமான் இருப்பதாக சொன்னார்கள். எப்படி இருப்பார்? உயரமாகவா? இல்லை வேறு எப்படி? அலங்காரம் எப்படி இருக்கும் என்று மீண்டும் 1000 கேள்விகளை மனதில் தொடுத்துக்கொண்டு மேலே ஏறினோம்.




மீண்டும் மீண்டும்  சொல்கின்றோம்.இங்கே கவனமாக ஏறி இறங்கவும்.



 இதோ..தென்னாடுடைய சிவனை நாம் காண இருக்கின்றோம் ...
அனைவரும் தயாராகுங்கள்.


எந்நாட்டவர்க்கும் இறைவனாக விளங்கும் தென்னாட்டின் சிவன் இந்த தரிசனத்தில் நாம் நினைத்துக் கூட பார்க்க வில்லை. அபிசேகம் ஆராதனை இங்கே செய்வது கடினம் தான் என்றாலும் மனதில் கொஞ்சம் வலி இருந்தது.தேற்றிக்கொண்டு மீண்டும் மீண்டும் அங்கேயே சுற்றி சுற்றி வந்தோம்.






இந்த தரிசனம் சற்று புதுமையாக  இருந்தது. இங்கே எளியோர்க்கு எளியோனாய் எம் பெருமான் காட்சி தருகின்றார். நமக்கு தெரிந்த போற்றிகளால் போற்றினோம்.

திருக்கயிலாய போற்றி பாடுவோமா?

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி யுலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி

நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


அடுத்து மீண்டும் அங்கிருந்து கீழே இறங்கினோம். இறங்குவதற்கு சற்று சிரமமாக இருந்தது.



வள்ளிமலை அடிவாரம் நோக்கி இப்போது சென்று கொண்டிருக்கின்றோம்.


அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் ஆலயத்தில் தரிசனம் பெற்றோம்.




ஆங்கில புத்தாண்டின்  முதல் நாள் அல்லவா? சாதுக்களுக்கு அன்னதான ஏற்பாடு செய்திருந்தார்கள்.


நால்வரின் தரிசனம் பெற்றோம். நம் குருநாதரின் தரிசனமும் பெற்றோம்.







அடிவாரக்கோயிலை இன்னும் சற்று தூரத்தில் காண உள்ளோம். இதோ திருக்குளத்தை நெருங்கிவிட்டோம்.



வள்ளிமலை அடிவாரக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.









கோயிலுனுள் சென்று முருகப்பெருமானை மீண்டும் தரிசித்து.வெளியே வந்து அங்கிருந்த செய்திப்படங்களை கண்டோம். நீங்களும் மேலே பாருங்கள்.

உச்சியில் உச்சி முகர்ந்து தரிசனம் தந்த சிவபெருமானை திருமால்கிரீஸ்வரர் என்று அழைக்கின்றார்கள். இன்னும் 2 இடங்களை வள்ளிமலை மேலே நாம் காண முடியவில்லை. மீண்டும் அடுத்த யாத்திரையில் மீதமுள்ள இடங்களை காண சங்கல்பம் செய்து விட்டு, முருகப்பெருமானின் ஒப்பற்ற தனிப்பெருங்கருணையை எண்ணி மகிழ்ந்தோம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

தோரணமலை அற்புதங்கள் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

  சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html


No comments:

Post a Comment