"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, February 3, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஜீவ நாடி அற்புதங்களை தொடர்பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி அருளிய வாக்கின் படி மதுரையில் அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் அமைய உள்ளது. வருகின்ற 7.02.2020 அன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்விற்கான செய்திகளை நாம் இங்கே தர விரும்புகின்றோம்.




அதற்கு முன்பான  மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது. மதுரை மாநகரின் கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல்,மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் பிரசித்தம். இது நமக்கு தெரிந்த செய்திதான். முருகனின் ஆறு  படை வீடுகளில் இரண்டு மதுரையில் தான் உள்ளது. ஒன்று திருப்பரங்குன்றம் மற்றொன்று பழமுதிர்ச்சோலை. அட..இப்போது இதனை சொல்லும் போது எம் மனத்தில் தோன்றிய மற்றொரு செய்தி . இரண்டு படை வீட்டிலும் சித்தர்களின் அருளாசி தான்.திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி சித்தரும், பழமுதிர்ச்சோலை தாண்டி நூபுர கங்கை மேலே நாம் ராமதேவரின் அருளும் பெறலாம். இது போன்ற அறுபடை வீட்டில் சித்தர்களின் அருளில் சில இடங்களில் தான் உள்ளது. இம்மையில் நன்மை தருவார் கோயில் மதுரையிலே உள்ளது. இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார். மதுரையில் பஞ்ச பூதத் தலங்கள் உள்ளது.

1) நீர் ஸ்தலம் - மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில்
2) ஆகாய ஸ்தலம் - சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில்
3) நில ஸ்தலம் -இம்மையில் நன்மை தருவார் கோயில்
4) நெருப்பு ஸ்தலம் - தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில்
5) காற்று ஸ்தலம் - தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் ஆகியவை மதுரையிலேயே உள்ள பஞ்சபூத ஸ்தலங்கள் ஆகும்.

இது மட்டுமா? நம் சொக்கநாதர் 64 திருவிளையாடல்களை மதுரையிலே தான் நடத்தி உள்ளார்.இதில் இருந்து மதுரையின் பெருமை நமக்கு புரிகின்றது.இத்தகு மதுரையிலே நம் குருநாதரின் தரிசனம் இந்த வாரம் முதல் பெற இருக்கின்றோம். இதற்கு நம் முருகப்பெருமான் அருளாசி கொடுத்துள்ளார் என்றால் இது ஜீவ நாடி அற்புதங்கள் என்று தானே நாம் சொல்ல முடியும். இதோ முருகப்பெருமானின் அருள் வாக்கை இங்கே மீண்டும் பகிர்கின்றோம்.

மதுரை பசுமலையில் பிப்ரவரி7ஆம் தேதி 2020ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா காண உள்ள அகத்திய மஹரிஷி ஆலயம் குறித்த முருகப்பெருமான் நாடியில் அருளிய வாக்கு

வல்லான வகையான முறையான அமைப்பில் வந்ததொரு பாண்டிமாநகர நாடும் சீர்புகழும் நலமதுவும் உண்டு நண்மை கண்டனன்.அகத்தியன் ஆலயம் அரும்ப குடமுழுக்கு செய்தி அது கந்தன் மகிழ்ந்தேன்.சீருண்டு முறையாக கந்தசீடனது தனக்கும் அகத்தியனுக்கும் சிறப்புறவே ஓர் ஆலயம் அமைவது தொண்டர்கள் அனைவருக்கும் பரிபூரன ஆசிர்வாதம் உண்டு உண்டு. நலமாக கந்த சீடன் தனக்கு ஓர் ஆலயம் அமைப்பதில் கந்தனுக்கு மகிழ்ச்சியே தான்.

சிறப்புண்டு நலமாக இதை அமைக்கும் குழுமம் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்விதன்னை அது தொடுத்ததால் லாபம் ஆகும். நலமுண்டு கிருத்திகை நன்நாள் இன்றும் உறைகின்ற நேரத்தில் மகிழ்ந்து உரைக்கும் நிலை அதுவும் கண்டனன் லாபம் லாபம். சீருண்டு முறையாக லாபம் மார்கழி  ஆயில்யம் முதல்ஆகவே நண்மை முன்னர் அனுகூலம் கன்டனன் குருவின் பூசை அனுகூலம் ஆனபடி கண்டேன் ஆதலால் நட்ப்பாக கண்டதொரு வேளை முடித்தது விட்டிடலாம்.

குடமுழுக்கு கண்ட பின்னே ஒவ்வொரு ஆயில்யம் வரும் நேரம் முறையாக நண்மை நிலை அகத்தியன் ஜென்மம் நட்சத்திரம் தன்னில் முழுத்திருமஞ்சனத்தோடு அன்னதான தருமங்கள் செய்வதே இந்த குழுவிற்க்கு பணியது என்பேன்.ஓர் வருடம் அப்படியே செய்து வரலாம்.

இவ்வாலயத்தில் நடக்க உள்ள அற்புத மகிமை திருவிளையாடல்கள் எல்லாம் பின்வருமாறு கந்தன் உரைத்துள்ளார். நன்கு படித்து மகிழ்க.

பிள்ளை இல்லாதோர் பிள்ளை பெறுதல், கணவன் மனைவி சந்தோஷப்படுதல், மணம் ஆகாதோர் மணம் அமைக்கப்பெறுதல், பணி இல்லாதோர் பணி அமைக்கப்பெறுதல், பணம் இல்லாதோர் பணம் கிடைக்கப்பெறுதல், அருள் பெறுவோர் அருள் கிடைக்கப்பெறுதல், பொருள் கேட்ப்போர் பொருள் கிடைக்க பெறுதல், அவர் அவர் இச்சை எப்படியோ அப்படி அகத்தியன் படி அளப்பான். அனுகூலம் இது எல்லாம் திருவாதிரை மண்டலத்தில் பதிந்து சித்தர்கள் மண்டலத்தில் பதிந்து இருக்கும் செய்தி. முறையாக ஈசன் அருளும் பரிபூரணமாக கிட்டும்.

செய்யும் தானம் அன்னதானம் பூசை முறையாக நல்லதாம் அடியார்களை ஒன்று கூட்டி சிறப்புறவே நல்லதோர் அகத்தியன் புகழ்பாடி சீராக அவ்வாலயம் தன்னில் எல்லோரும் செல்ல முடியாவிட்டாலும் அவர் அவர் உரிய நிதி திரட்டி முறையாக அவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஆயில்ய பூசை தனை அமர்த்த வேணும் செய்ய வேணும் என்பதே இந்நேர கட்டளை என்பேன் கேட்டு நட என்று கந்தன் பகர்ந்தார்.

 கந்த நாடி முற்றே - 

அஉம் ஶ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்குக

அஉம் அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக


ஆலயம் குறித்த கந்த நாடி வாக்கு


சிறப்பாகவே நல்லதாம் திருக்கயிலாய காட்சி அதுபோலும் கல்யான கோலம் பூர்வ ஜென்மத்திலே கண்ட இடமதாகும். ( *ஏற்கனவே அகத்தியருக்கும் அந்த கோயிலுக்கும் தொடர்பு உண்டு
கோயிலில் சிவபெருமானின் அம்பிகை பார்வதி கல்யான காட்சியை முருகனோடு வைக்கவும். முருகனின் அலங்காரங்களை விதவிதமாக அங்கு வைக்கனும்னு சொல்லபட்டிருக்குது) 

முறை உண்டு செய்யலாம் ஆதலால் செய்கின்ற அனைவரும் சீர் புகழாய் சீர்த்தி ( பெரும் புகழ்) பெருவர். சிறப்பு பெருவர். உரிய காரியம் நடக்க பெருவர். இறை அருளும் சித்தர்கள் திருவிளையாடல்கள் காணப்பெருவர்.

பூர்வ ஜென்மத்தில் அகத்தியன் தொடர்புடையவர்கள் தான் வந்து அங்கு ஆலயம் அமைக்க வழி புரிவர். 

கந்த வடிவேலன் புகழ் ஓங்குக


அகத்தியம் நோக்கிய நம் பயணத்தில் லிகித ஜெபம் பற்றி நாம் கேட்டுக் கொண்டே இருந்தோம். அப்போது சித்தன் அருள் தலத்தில் மதுரையில் உள்ள சக்தி மாரியம்மன் கோயில் வளாகத்தில் அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் அமைக்க லிகித ஜெபம் வேண்டி கேட்டிருந்தார்கள். உடனே நாம் அதனை நம் தலத்தில் வெளியிட்டோம். அடுத்து கோயில் நிர்வாக குழுவில் பேசினோம். கும்பாபிஷேக பணிகளும் நடை பெற்று வருகின்ற செய்தி கேட்டு நாம் மகிழ்வுற்றோம்.

இதோ நாட்கள் நெருங்கி விட்டது. இதோ இந்த ஆலயம் சிறப்பாக அமைய லிகித ஜெபம் அனுப்பிய அன்பர்களின் பதிவுகளை இங்கே தருகின்றோம். லிகித ஜெபம் எழுதி அனுப்பிய அனைவருக்கும் இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் வாழ்வில் குருவின் அருள் பரிபூரணமாக நிறைந்திட வேண்டுகின்றோம்.










அடுத்து மதுரையில் இருந்து நமக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்து, நம்மை கும்பாபிஷேகம் வரும்படி உத்திரவு கொடுத்துள்ளார்கள்.



இதோ. நமக்கு கிடைத்த அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம். அடுத்து நாம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஷஷ்டி பூசையில் முருகப்பெருமான் பாதத்தில் அழைப்பிதழை சமர்பித்தோம்.


கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலய முருகனிடம் அழைப்பிதழ் வைத்து ஆசி பெற்றோம். அப்படியே அங்கே அருளலைகளை பரப்பி வரும் நம் குருநாதரரிடமும் சமர்பித்தோம்.

இதோ மதுரையில் இருந்து நமக்கு கிடைத்த பதிவுகள் ஒவ்வொன்றாக தருகின்றோம்.











இந்த காட்சிகளை பார்க்கும் போதே நம் மனம் ஏங்குகின்றது. எப்போது நம்மை அழைத்து தரிசனம் தர நம் குருநாதர்  வழிகாட்ட இருக்கின்றார் என்பது நம் அப்பனுக்கே தெரியும். 





மீண்டும் மேலே அழைப்பிதழ் இணைத்துள்ளோம். அன்பர்கள் கண்டு, வழிபாட்டில் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம். இனி மதுரை செல்லும் போது நம் குருவை இங்கே சென்று தரிசிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment