"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, February 17, 2020

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020

அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி விழா இந்த வாரம்  அனைவரும் கொண்டாட உள்ளோம்.  அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும். முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும்.

இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை  நாம் மேற்கொள்ள உள்ள சிவ ராத்திரி வழிபாட்டில் தயவு செய்து இணைக்கவும். நமக்கு முதன் முதலாக சிவராத்திரி அழைப்பு அருள்மிகு கந்தழீஸ்வரர் வழங்கி உள்ளார். இணைப்பைப் பார்த்து அருள் பெறவும்.

 குன்றத்தூர் என்றாலே குமரன் இருக்கும் இடம். சைவம், வைணவம் என பக்திக்கு பஞ்சம் இல்லாத ஊர். பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பிறந்த ஊர். இன்னும் என்னென்ன சிறப்புகள் இந்த குன்றத்தூருக்கு உண்டோ யாம் அறியோம் பராபரமே என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. நம் TUT தளத்திற்கும் குன்றத்தூருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

சரியாக ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களின் பிறந்த நாளில் ,சென்ற ஆண்டு அருள்மிகு நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் உழவாரப் பணி செய்தோம். இது நாம் திட்டமிட்டு செய்யவில்லை. இறையருளாலே நடைபெற்றது,

பணி நிறைவில் குன்றத்தூர் முருகன் தரிசனம், கந்தழீஸ்வரர் தரிசனம், சேக்கிழார் பெருமான் தரிசனம் என்று நமக்கு காண கிடைத்தது என்றால் அதுவும் அவன் அருளால் தானே.

இது மட்டுமா? சென்ற ஆண்டு கார்த்திகை தீப திருநாளை இங்கே சென்று கொண்டாடினோம். இன்னும் நெஞ்சுள் அந்த நினைவுகள் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. நம் தளம் சார்பாக இலுப்பை எண்ணெய் தீபமேற்ற அன்று வாங்கி கொடுத்துள்ளோம். இது போல் பல சேவைகள் நாம் வெளியே சொல்லாமல் செய்து வருகின்றோம். அனைத்தும் அவர் அறிவார் அன்றோ. மீண்டும் இந்த பதிவில் கந்தழீஸ்வரர் பற்றி கூறுகின்றோம்.

சேக்கிழார் பெருமான் வைகை நதிக்கரைத் தெய்வங்கள்,காவிரிக்கரை கடவுளர்கள் என தரிசித்து விட்டு, தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தார். இப்போதைய குன்றத்தூரில் உள்ள இறைவனை தரிசித்து விட்டு, அங்கேயே தங்கினார். தன்னை இழந்தார். சிவத்திடம் சரணாகதி அடைந்தார். சிவ பெருமான் ஒரு நாள் , அவருக்கு அற்புத தரிசனம் அளித்ததோடு, அவரிடம் இருந்த கர்வம்,செருக்கு போன்றவற்றை அழித்தார். கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம். புகழ் ,பெயர் என பற்றிக் கொண்டிருந்த தனது பற்றுக்களை நீக்கியதால், இத்தல இறைவனுக்கு கந்தழீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. இதுவே இத்தலத்தின் புராதனம் ஆகும்.

அம்பாள் பெயர் இங்கே நகைமுகைவல்லி. சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்க திருமேனியராக சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. சோழர் கால கோவில் இது. இந்தக் கோவிலுக்கு சற்று அருகில் தான் சேக்கிழாரின் அவதாரத் தலம் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் தமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கி.பி. 1241 ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.

பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, ரிஷபாரூடர்  போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது. மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

தினமும் சேக்கிழார் வந்து வழிபட்டுள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் ஆலய தரிசனம் செய்து வருகின்றோம், எத்தனையோ ஆலயங்கள் சென்று வந்தாலும், நம் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் என்றால் நாம் சும்மா இருப்போமா? தினமும் சென்று தரிசனம் பெறுவோம் அல்லவா?  நாமும் ஆலய தரிசனத்தில் கூடுவாஞ்சேரியில் உள்ள வேலி அம்மன் தரிசனமும், மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர்,முருகர்,அகத்தியர் தரிசனமும் பெற்று வருகின்றோம்,  வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயம் இங்கு வந்து அருள் பெறுகின்றோம். அது போல் தான் கந்தழீஸ்வரர் ஆலயம்  சேக்கிழார்க்கு. அனு தினமும் அவர் வழிபட்ட ஆலயம். இதுவே இத்திருத்தலத்தின் சிறப்பு.




















நாமும் தற்போது திருஊரக பெருமாள் கோயில் உழவாரப்பணி செய்த போது , இங்கே சென்று வழிபாடு செய்தோம். எப்போது குன்றத்தூர் சென்றாலும் நால்வராக திருமுறை விநாயகர், குன்றத்தூர் முருகன், அருள்மிகு கந்தழீஸ்வரர், அருள்மிகு திருஊரகப்பெருமாள் என ஒருங்கே வழிபட்டு வருவது வழக்கம்.

சரி..இனி அழைப்பிதழை பகிர்கின்றோம்.


வழக்கம் போல் வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html


முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html



No comments:

Post a Comment