"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, May 30, 2019

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019)

 அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் பல அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது கேரளா நிவாரண சேவைக்கு அகத்தியர் வனம் மலேசியா குழுவோடு இணைந்து பல தளங்களில் பங்கெடுத்தோம். அனைவருக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் வைகாசி  மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம்.

சென்ற மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா?


விகாரி வருட முதல் அமாவாசை அன்றைய தினம். நாம் அன்று முழுதும் அன்னசேவை செய்ய விரும்பினோம்.நம்முடைய விருப்பம் சரியானதாக, நியாயமானதாக இருந்தால் அது நிறைவேறும் என்பது மீண்டும் அன்று நிரூபணமானது.


அன்று காலை சுமார் 30 உணவு பொட்டலங்கள் தயார் செய்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் போன்ற பகுதியில் வழங்கினோம்.





அன்று மதியம் எங்கு நம் அன்னசேவை தொடர்வது என்று சிறந்தித்தோம்.


இதோ..நம் வள்ளலார் கோயில் நினைவிற்கு வந்தது.


உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும் அன்று மதியம் அன்னசேவை செய்தோம்.






அடுத்து அன்று மாலை மோட்ச தீப வழிபாட்டிற்கு தயாரானோம்.


இதோ..அகல் விளக்குகள் நீரில் கழுவி தூய்மை செய்யப்பட்டது.

கீழே பூஜைக்கான ஆயத்தப்பணிகள் தயார்.




தீபத்திரிகள் தயார் செய்யப்பட்ட காட்சி.


இதோ..சித்தர்களின் அருளாலும், மாமுனி அகத்தியரின் கருணையாலும் முதல் தீபம் ஏற்றப்பட்ட காட்சி



அடுத்து ஒவ்வொரு அன்பராக தீபங்களை ஏற்றினார்கள். நமக்கு தீபம் ஏற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நமக்கு இந்த பூசையை முன்னின்று நடத்த வாய்ப்பும் இல்லை.ஆனால் குருவின் அருளால் இது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.







தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு ஆரம்பமானது. இந்த மோட்ச தீப வழிபாட்டில் பற்பல நன்மைகள் நடைபெற்று வருகின்றது. சில அன்பர்கள் நம்மிடம் இது பற்றி சொல்லும் போது நமக்கு மிக மிக மகிழ்வாக உள்ளது. அனைத்தும் குருவின் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்.












பார்க்க, பார்க்க வழிபாட்டில் நமக்கு சில உன்னதம் கிடைக்கின்றது. தீபங்கள் மிக மிக நேர்த்தியாக ஒளிர்ந்தது கண்டோம். அப்படியே சென்று அகத்தியர் தரிசனம் பெற்றோம். நெஞ்சார நினைத்தோம்.




நெஞ்சார துதித்தோம்.







இங்கே நீங்கள் பார்க்கும் இந்த தம்பி நம்மை ஆச்சர்யப்படுத்தினார். பொது வெளியில் நாம் மேற்கொண்டு சொல்ல முடியவில்லை. ஆனால் இவர் மீண்டு வருவார் என்று நமக்கு நம்பிக்கை உள்ளது.



அடுத்து பூஜையில் மலர் தூவி பிரார்த்தனை செய்ய வேண்டும்.அதற்கு மலர்கள் கொடுக்கப்பட்ட காட்சிகள்


அடுத்து அன்னசேவை தான். தயிர் சாதமும், புளியோதரையும் தயார் நிலையில் இருந்தது.



எப்பொழுதும் நாம் எத்தனை பேருக்கு உணவிட்டோம் என்று கணக்கில் வைப்பது கிடையாது. அன்றும் அப்படி தான். ஆனால் நெகிழி பயன்பாடு தடைவிதித்ததால், நாம் தட்டு வாங்கினோம்.



சரியாக 100 பேருக்கு அன்று உணவு வழங்கினோம். அனைவரும் சிறு சிறு குழுவாக அமர்ந்து , சிரித்து,பேசி, மகிழ்ந்து உணவு சாப்பிட்டார்கள். வழக்கமாக உணவு கொடுக்கும் போதே, அரக்க பறக்க செல்வார்கள்.இம்முறை அப்படி இல்லை. நிதானமாக அனைவரும் சாப்பிட்டு சென்றார்கள்.



நமக்கும் மனதிற்கு திருப்தியாக இருந்தது.




அன்றைய தினம் வழிபாடு முடித்து, அனைவருக்கும் நன்றி கூறி மோட்ச தீப வழிபாட்டை முழுமை செய்தோம். மோட்ச தீப வழிபாடு பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் வைகாசி  மாதம் 19 ஆம் நாள் (02/06/2019) ஞாயிற்றுக்கிழமை மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.


தொடர்புக்கு : 7904612352
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html


 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

1 comment:

  1. அருமை நம்மாள் பங்குபெறமுடியவில்லை என்று வருத்தமாக உள்ளது

    ReplyDelete