"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, May 16, 2019

வாழ்வில் பூரணம் பெற முழு நிலவு வழிபாடு

 TUT தள உறவுகளே.

 முழு நிலவு வழிபாடு என்று  என்னமோ ஏதோ என்று நினைக்க வேண்டாம். பௌர்ணமி வழிபாட்டைத் தான் இங்கே அறிய இருக்கின்றோம். வானத்தில் உள்ள மதியைப் பார்த்து இன்று அம்மாவாசையா? பௌர்ணமியா? என்று சொன்னவர்கள் நம் தாத்தாக்கள். இணைய யுகத்தில் வாழும் நாம், வானம் பார்த்து இது போல் சொல்ல முடியுமா என்றால் அது கேள்விக்குறியே ? நம் இயற்கை வழிபாட்டில் சில வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் தொலைத்து விட்டோம் என்பதே உண்மை.

நிலா/ நிலவு/ சந்திரன் என்று சொன்னால் தெரியாத குழந்தைகள் மூன் (moon ) என்று சொன்னால் விளங்கும் வகையில் இன்று வளர்கின்றன. இதில் பௌர்ணமி என்றால் என்ன? என்று கேட்கும் காலமும் வரும். அந்த வகையில் ஞாயிறு வழிபாடு, பௌர்ணமி வழிபாடு என்று சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இயற்கை வழிபாட்டில் ஞாயிறு போற்றுதல் ஆதி வழிபாடாக இருந்திருக்க வேண்டும். ஆதிவாரத்தை ஓய்வு நாளாக இல்லாமல் ஆன்ம விழிப்பை தரும் பிராத்தனை நாளாக கொள்வோம். இதோ இங்கு
 பௌர்ணமி நாட்களைப் பற்றி அறிய உள்ளோம்.

பதிவிற்கு செல்லும் முன்பாக , நாள்,தேதி , வருடம் போன்றவற்றை இணைத்துள்ள படங்களில் பார்க்க வேண்டாம். இது சென்ற ஆண்டின் நாட்கள் ஆகும். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முக்கியத்துவம் உணருங்கள்.



நம்மைப் பொறுத்த வரை, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை பௌர்ணமி வழிபாடு திருஅண்ணாமலை கிரிவலம் தான். நமக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சினையும் திருஅண்ணாமலையார் அருளால் தூள் தூளானது என்பதே உண்மை.

பௌர்ணமி பூஜை என்பது  நம் கோயில்களிலும்,  நம் வீடுகளிலும் கடைபிடிக்கப்படும் விழாவாகும். இப்பூசையைச் செய்தால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), மாங்கல்யம் நிலைக்கும் (கணவன் உயிருடனுடம் நலமுடனும் இருப்பான்) எனவும் நம்பப்படுகிறது. இந்து சமயத்தில் இன்றும் நிலவுகின்ற இயற்கை வழிபாடுகளில் இந்த பௌர்ணமி பூசையும் ஒன்றாகும். இந்நாளில் சந்திரனிலிருந்து அதிகப்படியான வெளிச்சம் பூமிக்கு கிடைக்கிறது. இந்த காரணத்தினால் பௌர்ணமி நாட்களில் இரவுகளில்  மக்கள் கொண்டாடியுள்ளார்கள். அருகிலிருக்கும் நீர்நிலைகளின் கரைகளில் சென்று பொழுதினை கூடி ஒன்றாக கழிப்பதிலும், வீடுகளிலிருந்து வெளிவந்து மக்கள் கூடி கொண்டாடவும் இந்த வெளிச்சம் பயன்பட்டுள்ளது. எனவே தான் நாம் கிரிவலத்தை நம் கையில் எடுத்துள்ளோம். பௌர்ணமி இரவில், ஏகாந்தத்தில் ( நாம் நம்முள் தனிமையில் தான் இருப்போம்), பிரபஞ்ச ஆற்றலை, ஜோதியனை நம்முள் பெற கிரிவலம் நன்கு உதவுகின்றது.

பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும்.கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.நேற்று நாம் திருக்கழுக்குன்றம் சென்று கிரிவலம் செய்தோம், சற்று புதிய உணர்வு,தெம்பு கிடைத்தது, விரைவில் திருக்கழுக்குன்றம் கிரிவலம் பற்றி உணர குருவிடம் வேண்டுகின்றோம்.

நம் முன்னோர்கள் பௌர்ணமி நாளில் விரதமிருந்து , அன்று மாலை வழிபாடு முடித்த பின்பே, உணவு உட்கொள்வர். தொழில்நுட்ப யுகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நாம் இதையெல்லாம் கடைபிடிக்க சற்று கடினம் தான். ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்பதை மறக்க வேண்டாம். பௌர்ணமி நாளில் காலையில் எழுந்ததிலிருந்து உண்ணா நோன்பிருந்து, பௌர்ணமியை பூசையை முடித்த பின்பு உண்ணுதலை பௌர்ணமி விரதம் என்கிறார்கள். வருடத்திற்கு 12 நாட்கள் இவ்வாறு பௌர்ணமி விரதம் இருக்கலாம்.

தமிழ் மாதத்திற்கும் , பௌர்ணமிக்கும் உள்ள தொடர்பை பாருங்களேன்.




தமிழ்மாதங்கள் ஒவ்வொன்றில் பௌர்ணமி வருகையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக தமிழ்மாதங்களில் வருகின்ற பௌர்ணமி சில நட்சத்திர நாட்களில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு சில நேரங்களில் தவறுகிறது.
  • சித்திரை மாதம் - சித்திரை நட்சத்திரம்
  • வைகாசி மாதம் - விசாக நட்சத்திரம்
  • ஆனி மாதம் - மூல நட்சத்திரம்
  • ஆடி மாதம் - உத்திராட நட்சத்திரம்
  • ஆவனி மாதம் - அவிட்ட நட்சத்திரம்
  • புரட்டாசி மாதம் - உத்திரட்டாதி நட்சத்திரம்
  • ஐப்பசி மாதம் - அசுவினி நட்சத்திரம்
  • கார்த்திகை மாதம் - கிருத்திகை நட்சத்திரம்
  • மார்கழி மாதம் - திருவாதிரை நட்சத்திரம்
  • தை மாதம் - பூச நட்சத்திரம்
  • மாசி மாதம் - மக நட்சத்திரம்
  • பங்குனி மாதம் - உத்திரம் நட்சத்திரம்
இதே போல் தான் தமிழ் மாதத்தில் வருகின்ற திருவிழாக்களும், பௌர்ணமியோடு தொடர்பு கொண்டது. சில நேரங்களில் தவறுவதை விட்டு விட்டு, பல நேரங்களில் பொருந்தி வருவதை யோசித்துப் பாருங்கள், நம் முன்னோர்கள் இயற்கை வழிபாட்டில் இருந்ததால் தான், இயற்கை மொழி, முக்தி மொழி தேவ மொழியாம் தமிழும் இறைமையை உணர்த்துகின்றது.

  • சித்திரை மாதம் - சித்ரா பௌர்ணமி
  • வைகாசி மாதம் - வைகாசி விசாகம்
  • ஆனி மாதம் - சாவித்திரி விரதம்
  • ஆடி மாதம் - சாவித்திரி விரதம், கோபத்ம விரதம்
  • ஆவனி மாதம் - ரட்சா பந்தனம்
  • புரட்டாசி மாதம் - உமாமகேஸ்வர விரதம்
  • ஐப்பசி மாதம் - லட்சுமி விரதம்
  • கார்த்திகை மாதம் - கார்த்திகை தீபத் திருவிழா
  • மார்கழி மாதம் - திருவாதிரை விரதம்
  • தை மாதம் - தைப்பூசம்
  • மாசி மாதம் - மாசி மகம்
  • பங்குனி மாதம் - பங்குனி உத்திரம்
இது போல் வேறெந்த மொழியிலும் உண்டா? என்று நமக்குத் தெரியவில்லை. இது தான் நம் மொழி,பண்பாடு,கலாச்சாரத்தின் சிறப்பு. இதோ உங்களுக்காக கீழே காட்சிப் படங்களாக இணைத்துள்ளோம். முழு நிலவு வழிபாட்டில் ஈடுபடுங்கள், இயற்கையை உணருங்கள்.




 தமிழ் மாதத்தின் அடிப்படையில் கீழே  தொகுத்துத் தந்துள்ளோம்.
 சித்திரை பௌர்ணமி

சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

வைகாசி பௌர்ணமி

வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.

ஆனி பௌர்ணமி

ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும்.

ஆடி பௌர்ணமி

ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும்.இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.

ஆவணி பௌர்ணமி

ஆவணி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன.இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.

புரட்டாசி பௌர்ணமி

புரட்டாசியில் பௌர்ணமி பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.இன்றைய தினத்தில் அம்மைஅப்பர் வழிபாடு, கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடங்கல் விலகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நல்ல திருமணப்பேற்றினை நல்கும்.

ஐப்பசி பௌர்ணமி

ஐப்பசி பௌர்ணமி பொதுவாக அசுவனியில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது.இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

கார்த்திகை பௌர்ணமி

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில்தான் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

மார்கழி பௌர்ணமி

மார்கழியில் பௌர்ணமி பொதுவாக திருவாதிரையில் வரும். இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியருளிய நாள். அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

தை பௌர்ணமி

தை மாதத்தில் பௌர்ணமி பொதுவாக பூசத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் நீங்கி  முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.

மாசி பௌர்ணமி

மாசி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக மகத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.

பங்குனி பௌர்ணமி

பங்குனியில் பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது. அன்றைய தினத்தில்தான் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன.
எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப்பேற்றினை அருளும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.

 இதோ கிரிவலம் செல்வதற்கான கால அட்டவணை கீழே



இது போல் , அமாவாசை பற்றியும் தொகுத்து வரும் பதிவுகளில் காண்போம்.

 - மீண்டும்  அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக :-

 உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_38.html

அன்னையைப் போற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html


 பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களமே யவனே!  - https://tut-temples.blogspot.com/2019/05/1_8.html

 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_9.html

 ஸ்ரீமத் பகவத் ராமானுஜரின் 1002 ஆவது அவதாரப் பெருவிழா - 9/5/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/1002-952019.html

 விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

 மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_7.html

 எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html
    அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

No comments:

Post a Comment