"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 6, 2019

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.


ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். ஜீவ நாடி அற்புதங்கள் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். இன்றைய பதிவிலும் ஜீவ நாடி அற்புதங்களை காண உள்ளோம்.

இணைய வெளியில் நாம் பொதுவாக தேடிய போது லிகித ஜெபம் என்ற ஒரு சேவை பற்றி கண்டோம். லிகித ஜெபம் என்பது இறையின் நாம ஜெபத்தை எழுதுவது ஆகும்.

 நமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கிறது. பேப்பரில், பழைய டைரியில் , நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத் தான் லிகித ஜெபம் என்று கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சில பிராமண குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுகிறார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. அப்படி எழுதும் குடும்பங்கள் அனைத்திலும், பரிபூரண குடும்ப அமைதி நிலவுகிறது. அந்த குடும்ப வாரிசுகள் அனைவரும், இன்று நல்ல வேலையில், மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். காலம் கெட்டுக் கிடக்கும் சூழலில், ஒரு மனிதன் தவறான பாதைக்கு செல்ல நிமிஷ நேரம் போதும். அவ்வாறு செல்ல விடாமல் , இறையருள் தடுத்தாட்கொள்ள - இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும். 

மேலும், மனம் ஒன்றி எழுத எழுத - இறை சிந்தனை மேலோங்கும். நம்மை அறியாமலே , நாம் அந்த இறைவனின் நேரடிப் பார்வைக்கு உட்படுகிறோம்.

இப்படிப்பட்ட லிகித ஜெபம் எப்போது நமக்கு கிடைக்கும் என்று நாம் ஏங்கிய நாட்கள் பல உண்டு. நம் ஏக்கம் நம் குருநாதர் கண்ணிற்கு தெரிந்து விட்டது போலும். சில நாட்களுக்கு முன்னர் நாம் சித்தன் அருள் வலைத்தளத்தில் பார்த்த போது லிகித ஜெபம் பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். அட..இதற்குத் தானே ஆசைப்பட்டோம் குருநாதா என்று மனம் ஆனந்தக் கூத்தாடியது. உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு 

அந்த காலத்தில் ஆலயங்களுக்கு மூலவரை ஸ்தாபிக்கும்போது, எந்திரத் தகடுகளில் சில மந்திரங்களை எழுதி, அந்த மூலவருக்கு உரிய மூல மந்திரங்களை எழுதி ஸ்தாபனம் செய்வார்கள். விண்ணில் நிறைந்து இருக்கும் சக்தியை கும்பம் மூலம் ஆகர்ஷித்து , அதை உள் வாங்கி, தீப வழிபாட்டின்போது அதை வழிபடுபவர்களுக்கு கிடைக்க செய்வதில், இந்த மந்திரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இதைப் போன்ற மிக அரிதான வாய்ப்பு, ஒன்று நம்மைத் தேடி வந்து இருக்கிறது. மதுரை பசுமலையில் விரைவில் ஸ்தாபனம் செய்யப்பட விருக்கும், தலையாய சித்தரான ஸ்ரீ அகத்தியர் பீடத்திற்கு இந்த  லிகித நாம ஜெபம் ஒரு கோடி எண்ணிக்கை அளவில் தேவைப் படுகிறது. 

நீங்கள் எழுத வேண்டிய மந்திரம் " ஓம் அகத்தீசாய நம:"






அகஸ்தியரின் அருளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் யார், நமது முந்தைய பிறவிகளின் பாவ புண்ணியங்கள் , நாம் இந்த பிறவியில் எந்த நிலையில் இருக்கிறோம் , என்ன செய்ய விருக்கிறோம், அடுத்த பிறவியில் நம் நிலை என்ன என்பதை , முற்றும் அறிந்த மகா ஞானி அகஸ்தியப் பெருமான். அகஸ்திய தரிசனம் ஒன்று போதும். ஒரு கணப் பொழுதில் நம் கர்மங்கள் அனைத்தும் தொலைந்து போகும். நம் வாழ்வில் சிகரம் தொடும் அளவுக்கு சாதனைகள் செய்ய இயலும். நம்பி இந்த காரியத்தில் ஈடுபடுங்கள்.


நோட்டுப் புத்தகத்தில், அல்லது வெள்ளைப் பேப்பர்களில், " ஓம் அகத்தீசாய  நம"  என்று நீலம் அல்லது பச்சை மையினால் , தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு எழுதி - கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் எழுதி அனுப்புங்கள்.

ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும், உங்கள் குல தெய்வத்தை ஒரு முறை வேண்டிக்கொண்டு , பின்பு மனதிற்குள் உங்கள் நிறைவேற வேண்டிய கோரிக்கை (களை) மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு, உலக ஷேமத்திற்காகவும் வேண்டி  எழுதுங்கள்.
குளித்து முடித்து, சுத்தமான உடை அணிந்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி - குல தெய்வத்தை ஒருமுறை மனதில் வேண்டி - ஓம் ------------------ போற்றி! என்று வேண்டிக்கொண்டு - அர்ச்சனைக்கு சொல்வோமே அப்படி, குலம் / கோத்திரம் , பெயர், நட்சத்திரம் சொல்லிவிட்டு - உங்கள் அவசியமான கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு - கடன் தொல்லை தீர, வீடு கட்ட, கார் வாங்க, திருமணம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நிம்மதியான வாழ்வு கிடைக்க, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு, உடல் நலம் வேண்டி இப்படி உங்களை வருத்திக்கொண்டு இருக்கும் கோரிக்கைகளை மனதிற்குள் வேண்டி, அகஸ்திய பெருமானை நல் வழி காட்டுமாறு பிரார்த்தனை செய்துகொண்டு எழுதத் தொடங்குங்கள்...!
அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை பாருங்கள்..! எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த அதிசயம் கண்டிப்பாக நிகழும்.

நீங்கள் லிகித நாம ஜெபம் எழுதி அனுப்ப வேண்டிய முகவரி :

R.Rakesh,
4,Sri Ram avenue,
Madamabakkam,
Guduvanchery - 603202
Ph no: 7904612352

அந்த அகஸ்திய மகரிஷியே திருவுளம் கொண்டு , இந்த அரும்பெரும் வாய்ப்பை நல்கியதாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கும் இதே போன்ற எண்ணம் தோன்றுமேயானால், அவசியம் நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரமோ அல்லது பொருள் விரையமோ என்று நினைக்க வேண்டாம். உங்கள் சந்ததிக்கே நீங்கள் சேர்க்கும் சொத்து இது என்று நம்பி செயல் பட்டு, அகஸ்திய மகரிஷியின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.








இதோ. நம் அன்பர் திரு.சத்யராஜ் லிகித ஜெபத்தை நம் குருநாதர் முன்னிலையில் ஆரம்பித்து விட்டார். 


இந்த தகவலை தகுதி வாய்ந்த உங்கள் உறவினர் / நட்பு வட்டத்திற்கும் தெரியப்படுத்துங்கள். Facebook / Twitter என்று உங்களால் முடிந்தவரைக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் யாருக்கெல்லாம் ப்ராப்தம் இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் இந்த தகவல் பயன் தரட்டும்.

இந்த பதிவிற்கும் ஜீவ நடிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா? நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் நாமத்தை சொல்லவே பல பிறவி நாம் எடுத்து வந்திருக்கின்றோம். அப்படியென்றால் அவற்றின் நாமத்தை எழுத வேண்டும் என்றாலும் கொஞ்சமாவது நம்மிடம் புண்ணியம் இருக்க வேண்டும். மதுரை அன்பர்களிடம் பேசிய போது, இந்த லிகித ஜெபம் ஜீவ நாடி உத்தரவில் வந்தது என்றார்கள். மேலும் விசாரித்த போது, நம்மை வழிநடத்தும் அந்தியூர் முருகப் பெருமானின் நாடி வாக்கு என்று சொன்ன போது, அகத்தீசா! அகத்தீசா!! என்னே நின் கருணை! என்று அக மகிழ்ந்தோம்.

சுமார் 5 ஆண்டுகாலமாக லிகித ஜெபம் பற்றி தேடிய நமக்கு, நம் குருநாதர் லிகித ஜெபம் செய்ய அருள் கொடுத்து உள்ளார் என்றால் இது ஜீவா நாடியின் அற்புதம் தானே !

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html



6 comments:

  1. Hope that Sathyaraj prayers get answered quickly.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your visit here and your heartfelt comment.

      Delete
  2. last date for submission the லிகித ஜெபம் sir

    ReplyDelete
  3. Sir, is the process still available or ended?

    ReplyDelete
    Replies
    1. yes ..it is closed now. Thanks for your enquiry

      R.Rakesh
      Guduvanchery

      Delete