"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, November 24, 2019

எப்போ அழைப்பீரோ? -திருமால் மருகன் ஆலய உழவாரப்பணி அனுபவம்

அனைவருக்கும் வணக்கம்.

தினமும் காலை எழுந்து அவசர, அவசரமாக அன்றாட கடமைகளை முடித்து விட்டு, பரபரக்க அலுவலகம் செல்கின்றோம். ஏன்? செல்வத்திற்காக. செல்வம் சேர்ப்பதில் எவ்வளவு அவசரம் காட்டுகின்றோம். எத்துணையோ வழிகளில் தேடுகின்றோம். இதே போன்று நாம் ஏன் ஆரோக்கியத்தை தேடுவதில்லை, நல்ல மனிதர்களை தேடுவதில்லை, நல்ல புத்தகங்களை, கடவுளை தேடுவதில்லை.

நேரமின்மை காரணமாக இருக்குமோ? என்றால் அது வெறும் சப்பைக்கட்டு. தேடிப் பாருங்கள்.இந்த உலகம் உங்களுக்கு வழிகாட்டும், இது போன்ற விசயங்கள் நம் TUT தளத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. நல்ல புத்தகங்கள் பற்றி பேசி வருகின்றோம். நல்ல மனிதர்கள் பற்றி அறிந்து, உறவாடி வருகின்றோம். 

கடவுள் தேடுதல்...நம்மிடம் உழவாரப்பணி வடிவில் நடைபெற்று வருகின்றது. அவரை இரு வழியில் தேடித்தான் ஆக  வேண்டும். புற வழி ஒன்று, அக வழி மற்றொன்று. ஆலய தரிசனம், உழவாரப் பணி,தீர்த்தமாடல், கிரிவலம் போன்றவை புற வழியில் தேடுதல். புற வழியில் தேடிப் பாருங்கள். அக வழியை அவரே நமக்குக் காட்டுவார். நான்கு வழி பாதியாக சரியை, கிரியை, யோகம் , ஞானம்  என்று சொல்வார்கள். இதில் சரியை, கிரியை மட்டுமே நாம் சரி செய்து கொள்ள முடியும் இது புற வழி. மற்ற இரண்டும் யோகம் , ஞானம் அக வழி  -இதனை அவன் அருளாலே அவன் தாள் வணங்கித் தான் பெற முடியும்.

புற வழியில் செல்ல, செல்ல அக வழி தானாக திறக்கும். இப்போது புரிந்து விட்டதா? கடவுளை அறியும் வழி. உளம் ஆற உழவாரப் பணி செய்தோம் என்றால், அகத்துள் இறைவனை காண முடியும். தற்போது நாம் நம் TUT உறவுகளோடு நம்பிமலை 

சென்று வந்தோம்.  உழவாரப் பணி என்பது மாதமொருமுறை அனைவரும் ஒன்று கூடி கோயிலுக்கு சென்று கோயிலை சுத்தம் செய்வது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எப்பொழுதெல்லாம் நமக்கு வாய்ப்பு இருக்கின்றதோ, அப்போதெல்லாம் இது போன்ற திருத்தொண்டில் ஈடுபடுங்கள். 


உழவாரப் பணி செய்யும் போது, நமக்கு என்ன நடக்கின்றது ? முதலில் நீங்கள் உழவாரப் பணி செய்ய விரும்புகின்றீர்கள் என்றால் அதுவே ஒரு நல்ல விருப்பம். அந்த விருப்பம் முதலில் நம் மனதில் தோன்ற வேண்டும். நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் மேலேறி, நம் விருப்பம் வருகின்றது என்றால், நீங்கள் உங்கள் மனதில் நன்மையை விதைக்கின்றீர்கள். இந்த நல்ல விதை அடுத்து என்ன செய்யும். செயலுக்கு வரும். அடுத்து உங்களுக்கு பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். அப்படி என்றால் நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் வெளியேறுகின்றது. மனம் செம்மை பெற உழவாரப் பணி செய்யலாம் என்று புரிகின்றதா?

ஒரு முறை உழவாரப் பணியில் ஈடுபட்டுப் பாருங்கள். நம் உடல் தகுதி என்ன என்று தெரியும். பின்பு நீங்கள் ஆரோக்கியம் சார்ந்து யோசிக்க ஆரம்பிப்பீர்கள். இது மட்டுமா? அருமையான இறை தரிசனம் உழவாரப் பணி  நிறைவில் பெற்று வருகின்றோம். இது நமக்குக் காண கிடைக்குமா? சில கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்த கோயில்களாக இருக்கும். யோசித்துப் பாருங்கள். நம் பாட்டன்,முப்பாட்டன் கட்டிய கோயில்களுக்குச் சென்று, அவர்களின் தடத்தில் நாமும் செல்வது நமக்கு இன்பம் அல்லவா தரும்? இதன் மூலம் பெருமக்கள் பாடிய திருத்தலங்களுக்கு செல்ல வாய்ப்பாகவும் அமைகின்றது.

ஒன்றா? இரண்டா? சொல்லில் அடக்க முடியவில்லை உழவாரப் பணி  சிறப்புக்களை. அனுபவித்தால் தான் புரியும். பதிவினை படிக்கும் அன்பர்கள், பணியில் ஈடுபட முயலுங்கள். உங்கள் நட்பு,சுற்றம்,உறவுகளுக்குத் தெரிவியுங்கள்.

நாம் ஏற்கனவே கூறியது போல உழவாரமும், அன்னதானமும் நம் இரு கண்கள். உழவாரப் பணி செய்யச்  செய்ய நம்முள் உள்ள மன அழுக்குகள்,கசடுகள் முழுதும் நீங்காவிட்டாலும்,சிறிது சிறிதாக நீங்கிக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்து வருகின்றோம். மனமது செம்மையானால்,சித்தமும் செம்மையாகுமே.சித்த சுத்திக்கு  உழவாரப் பணி ஒரு அருமருந்தாகும். இந்த பணியில் ஈடுபடும் முன்பு, நாம் எப்படி இருக்கின்றோம். 

இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.ஆன்மீக பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது.

அறிவு பூர்வமாக சிந்தித்தால், கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு ஸ்தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் இதற்கு ஈடு இணை உண்டா? என்றால் இல்லவே இல்லை என்பதே உண்மை.

மனம் முழுதும் ஆணவம்,கன்மம்,மாயை,பேராசை,சினம்,கடும்பற்று,உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம்,சினம்,முறையற்ற பால் கவர்ச்சி என்று ஒரே கலங்கல்கள்.இதில் கடவுளைக் காண முடியவில்லை என்ற குற்றம் வேறு? எப்படி அவர் தெரிவார்? இவை அனைத்தும் நீக்கினால் தானே,அவரைக் காண முடியும். 

சரி..இனி திருமால் மருகன் ஆலய  உழவாரப்பணி அனுபவம் தருகின்றோம்.



வழக்கம் போல் உழவாரப்பணி சேவைக்கு அன்பர்கள் வந்தார்கள். சுமார் 10 பேர் தான் இருந்தோம். 




மயிலை சேர்ந்த திருமதி. அருணா அவர்கள் விளக்கு மேடையை சுத்தம் செய்தார்கள். இதனை சுத்தம் செய்யும் போது தான் நமக்கு எப்படி,எங்கு தீபமேற்ற வேண்டும் என்று புரிந்தது.


                              தம்பி சரவணன் கோபுரத்தை சுத்தம் செய்த காட்சி மேலே







கோயிலில் உள்ள விளக்குகள்ம் மற்றும் ஏனைய பொருட்களை தூய்மை செய்வதை நீங்கள் மேலே பார்க்கலாம்.










தாம்பரத்தை சேர்ந்த அன்பர் திரு.தங்கவேல் அவர்கள் தூய்மை செய்த காட்சி 







முதலில் கோயிலில் வெளியே தூய்மை செய்தோம். பின்னர் ஒவ்வொரு பிரகாரமாக எடுத்து உள்ளே சுத்தம் செய்தோம்.






கோயில் பிரகாரம் உள்ளே சுத்தம் செய்த போது தான் நம் அகம் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்று புரிந்தது. அகம் செம்மையானால் புறம் செம்மையாகும் என்று உணர்ந்தோம்.








நாம் செய்த கடுகளவு பணிக்கு பின்னர்.













                      அப்பாடா..என்று மலைக்கும் அளவில் பாத்திரங்கள் தேய்க்கப்பட்டது










அன்றைய தினம் தான் முதன் முதலில் நாம் அதிக நேரம் எடுத்து சேவை செய்தோம். எப்போதும் சுமார் 1 மணி அளவில் பணியை நிறைவு செய்வோம். ஆனால் அன்று மதியம் 3 மணி ஆகிவிட்டது.





மதிய உணவு முடித்து, கோயில் முழுதும் நீர் ஊற்றி தூய்மை செய்தோம். இப்போது தான் நம் மனமும் சிறிது தூய்மையானது. எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணங்களே முக்கியம் என்று இந்த உழவாரப்பணியில் உணர்ந்தோம்.

இதோ..எப்போ அழைப்பீரோ? என்று மீண்டும் காத்திருக்கின்றோம். இன்னும் கூடுவாஞ்சேரி நூலக உழவாரப்பணி, கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் உழவாரப்பணி, ஆப்பூர் பெருமாள் கோயில் உழவாரப்பணி என ஒவ்வொரு பதிவாக தருகின்றோம். வருகின்ற டிசம்பர் மாத உழவாரப்பணி அறிவிப்பு விரைவில் தருகின்றோம். 

மீண்டும் சிந்திப்போம

மீள்பதிவாக:-


மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

மீண்டும் மீண்டும் அழைக்கும் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் - உழவாரப்பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html



ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html



கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

2 comments: