"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, November 5, 2019

திருச்செந்தூரின் கடலோரத்தில்... குருநாதரின் அரசாங்கம் !

அடியார் பெருமக்களுக்கு அன்பு வணக்கங்கள்.

அகத்தியம் பற்றி இந்தப் பதிவில் பேச இருக்கின்றோம். அகத்தியரை அருட்குருவை அகத்தில் வைப்பதுவே நம் வேலை..அதாங்க..வேலை வணங்குவதே நம் வேலை.

 ஓம் அகத்தீசாய நம என்ற நாமம் சொல்வதற்கு நாம் எத்தனை பிறவி கடந்து வந்திருக்கின்றோம் என்று தெரியுமா? புல்லாகி, பூடாகி,புழுவாகி, மரமாகி என்று கடந்து இன்று மனிதப் பிறவி எடுத்து வந்திருக்கின்றோம். இதனை தான் ஒளவை பாட்டியும் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று சொல்லி இருக்கின்றார்.

இந்த மனிதப் பிறவியில் பிறந்து விட்டோம். அதிலும் அரிதாக கூன்,குருடு,செவிடு,பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது என்று கூறியுள்ளார். நாமெல்லாம் அதே போல் மனிதராக, எந்த உடற் குறையும் இன்றி பிறந்திருக்கின்றோம். இப்படி பிறந்த நாம் ஏதோ நம் பெற்றோர் செய்த புண்ணியத்தின் பலனாக சனாதன தர்மத்தை பின்பற்றும் படி உள்ளோம். அதிலும்,இன்னும் சிறப்பாக சித்தர்களின் மார்க்கத்தில் பயணம் செய்து வருகின்றோம். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம். ஏதோ. விட்ட குறை தொட்ட குறை இருப்பதால் தான் நாம் சித்தர்களின் பாதையில் செல்ல முடிகின்றது. சித்தருக்கெலாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்தியர் நாமம் சொல்வதற்கே நமக்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும்., அவருக்கு ஆயில்யம் பூசை செய்வதற்கும் நமக்கு கொஞ்சம் கொடுப்பினை வேண்டும். இது நம் தளத்திற்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது. ஒவ்வொரு கூடுவாஞ்சேரி ஆயில்ய பூசை நம்மை ஒவ்வொரு விதத்தில் ஆழ்த்தும்.

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் என்பது நாம் அறிந்த ஒன்று. குருவின் குருவாம் முருகப்பெருமானை தரிசிக்கலாம் . அதே போன்று நம் குருநாதரையும் தரிசனம் செய்யலாம். திருச்செந்தூர் அகத்தியர் பூசை பற்றி நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம்.

ஓம்
அகத்தீச ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
கும்பமுனி தேவனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
குருமுனி அப்பனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
முதல் இலக்கணம் தந்தவனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வேலவன் மைந்தனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
ஆராதார ஜோதியே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வெட்டவெளி ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
சுழுமுனை சுடரே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வாசிமுனி தெய்வமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வர்மமுனி ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
வைத்தீச ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
காயசித்தி கற்பமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
குருநாடி தெய்வமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
சகல கலை ஞானமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
ரசவாத ராஜனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
ஞானத்தின் காவியமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
தீட்சா விதி தீபமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
நயன விதி நாதனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
பரிபூரண ஞானமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
பஞ்சகாவியம் பகர்ந்தவனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
முப்பூவின் முழுமையே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மெய் ஞான ஜோதியே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
அகாரத்தின் அருளே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
உகரத்தின் உண்மையே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மகாரத்தில் இருப்பவனே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மௌன குரு மந்திரமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
சிவ வாலை சிங்கமே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மனோன்மணி ஜோதியே,
வந்தே அருள வேண்டும்.

ஓம்
மகத்தான மாமுனியே,
வந்தே அருள வேண்டும்.

உன் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்.

என்று பாடி அகத்தியரின் பாதமும் பற்றலாம்.குருநாதரின் பதமும் பற்றலாம்.







 இந்த ஆலயத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற பூசையில் அகத்தியர் அருள் கொடுத்த காட்சிகளை கீழே தொகுத்து தருகின்றோம்.
































காண காண இனிக்குதையா என்று கண்கள் எங்கும் கனிவு தரும் தரிசனம். எப்போ நம்மை அழைக்கப் போகின்றார் என்று நாம் காத்துகொண்டு இருந்தோம்.

அந்த நாளும் வந்தது. ஆம். ஜூன் மாதம் 5 ம் நாள் இந்த ஆண்டு தரிசனம் கிடைத்தது. அதுவும் நாம் மட்டும் தரிசிக்கவில்லை. எம் குடும்ப உறவுகளோடு, எம் துணைவியோடு திருச்செந்தூரில் குருநாதர் தரிசனம் பெற்றோம். இதற்குத் தான் இத்தனை ஆண்டுகள் காத்திருப்பா ? என்று மனதில் பிறந்த கேள்விக்கு பதில் கிடைத்தது.

அந்த தரிசனம் தித்திக்கும் தரிசனம். நாம் அன்று ஒரு வஸ்திரம் வாங்கி சென்றோம். அதுவும், ஐயா சூடி இருந்த மலர் மாலையும் அப்படியே இன்னும் கண்ணில் ஒளி தந்தது.






ஏற்கனவே சொன்னது போல், திருச்செந்தூர் அகத்தியர் தரிசனம் நமக்கு பல விதங்களில் சிறப்பு தந்த தரிசனம் என்றால் அது மிகையாகா. மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி! - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா மற்றும் சந்தனக்காப்பில் ஐப்பசி ஆயில்ய தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/108.html

No comments:

Post a Comment