"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, January 24, 2021

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் 

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! என்ற பதிவிலிருந்து தைப்பூச கொண்டாட்டங்கள் பற்றி நம் தளத்தில் பேசி வருகின்றோம். தைப்பூசம் என்றாலே நம் நினைவிற்கு முருகப்பெருமானும், வள்ளலாரும் வருகின்றார்கள். இன்றைய பதிவில் அருட்பெருஞ்சோதி பற்றி சிறிது தொட்டுக்காட்ட உள்ளோம்.

பதினெண் சித்தர்கள் வரிசை பற்றி நாம் அறிவோம். இது பதினெட்டு சித்தர்கள் என்று இல்லை. சித்தர்கள் வரிசையில் ஒவ்வொருவரும் ஒருவித நிலையில் அடங்குவர். சிலர் பக்தி பற்றி பேசுவார்கள். சிலர் யோகம் பற்றி பேசுவார்கள். சிலர் ஞானம் பற்றி பேசுவார்கள். இந்த வரிசை பற்றி பேசும்போது அருட்பெருஞ்சோதி பற்றி பேசிய வள்ளலார் பற்றி தான் நாம் இன்றைய பதிவில் அறிய உள்ளோம். வள்ளலார் என்றதும் நமக்கு அன்னதானம் என்று தான் நினைவிற்கு வரும். ஏன்? இந்த உயிர் வாழ உடம்பு வேண்டும். உடல் இயங்க பசி போக்க வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பார்க்கும் போது, பசியோடு பலர் இருந்திருக்க, ஆன்மிகம் பற்றி சொல்ல முடியுமா என்ன? உண்மையான ஆன்மிகம் மற்றவர் துயர் போக்குதலே. அதனால் தான் வள்ளலார் என்றதும் அன்னசேவை நமக்கு தெரிகின்றது. அன்னசேவை மூலம் இறைவனை காணலாம். ஆன்மிகத்தில் முன்னேற விரும்புபவர்கள் அன்னதானத்தை கையில் எடுத்து பாருங்கள். அன்னதானத்தின் மூலம்  எத்துணை எத்துனை விஷயங்களை சொல்லி, செய்து காட்டி இருக்கின்றார் நம் பெருமானார்.

அன்பு, கருணை, இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது. கீழே உள்ள அருள்காட்சி காணும் போதே தைப்பூச வழிபாட்டின் உயர்வு தெளிவாக உணர்த்தப்படுகின்றது.


அருட்பெருஞ்சோதி ஆண்டவரை ஆராதனை செய்தவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என முழங்கியவர். அந்த முழக்கமே வடலூரில் சத்திய தரும சாலையாய் இன்றும் பசிப்பிணி தீர்த்து வருகின்றது. அவர் பிறப்பு முதல் எத்தனை எத்துனை சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வள்ளலார் நமக்கு எப்படி தெரிகின்றார் ? ஆன்மிகவாதி மட்டும் என்றால் அது மேலோட்டமாக உணர்வதே.

சிறந்த சொற்பொழிவாளர்,போதகாசிரியர்,உரையாசிரியர்,சித்தமருத்துவர்,பசிப் பிணி போக்கிய அருளாளர்,பதிப்பாசிரியர்,நூலாசிரியர்,இதழாசிரியர்,இறையன்பர்,ஞானாசிரியர்,அருளாசிரியர்,

சமூக சீர்திருத்தவாதி,தீர்க்கதரிசி,மொழி ஆய்வாளர் (தமிழ்) என்றெல்லாம் உணர்த்தப்பட்டு வருகின்றார்.இதெல்லாம் சாதாரண மானிடனுக்கு வாய்க்குமா? ஞானிகளுக்கு வாய்க்குமா?






சன்மார்க்கம் கூறும் செய்திகளை மேலே இணைத்துளோம். ஒரு தடவை படித்தால் புரியாது. ஓராயிரம் தடவை படித்தால் தான் உணர்ந்து நாம் கைக்கொள்ள முடியும். அடுத்து வள்ளலார் என்று சொன்னால் நம் நினைவிற்கு வருவது திருஅருட்பா. நமக்கு என்று வாய்க்கும் என்று தெரியவில்லை. உணர்ந்தபின் இங்கே அறிய தருகின்றோம்.

மனிதன் மாமனிதனாக வாழ்ந்து மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பது தான் வள்ளலார் நோக்கம்.  அதற்காகத்தான் அகம் கருத்தவர்களையும் புறத்தில் வெளுக்கச் செய்யும் நோக்குடன் கருணை நிறைந்த திருவருட்பா பாடல்களையும், உரைநடைப் பகுதிகளையும்,திருமுகங்கள் (கடிதங்கள்) மூலமும், பேருபதேசம் மூலமாகவும், ஆன்ம நேயத்துடன் இந்த மனித குலத்தை வாழ்விக்க தேனினும் இனிய திருவருட்பாக்கள் அளித்து மனிதன் நீடுழி வாழ நமக்கு அருள் புரிந்தார்கள்.

ஒளவையாருக்கும் வள்ளலாருக்கும் என்ன ஒற்றுமை ?மற்றும் வேற்றுமை?  என சிந்திக்க உள்ளோம்.

இருவரும் இயற்றிய செய்யுள்களிலிருந்து இதை காண உள்ளோம்.

ஔவையார் இயற்றிய உலக நீதி செய்யுள். 

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் 
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் 
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம். 

நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் 
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் 
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம் 
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் 

மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் 
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் 
சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம் 
சினந் திருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம். 

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் 
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் 
மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம் 
முற்கோபக்காரரோடிணங்க வேண்டாம்.

பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த  ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார் பெருமானுக்கு வேண்டாம் என்ற எதிர்மறையான வார்த்தைகளைக் கூற விரும்பாமல் 'வேண்டும்','வேண்டும்' என ஒரு நேர்மறையான கருத்துக்களைக் கூறும் பாடலைப் பாடினார்

இது நடந்தது மிகவும் பழைய காலமல்ல,150 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம்.  

பத்து வயது கூட நிறைவடையாமல் ஒரு சிறிய மாணவனாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்த வள்ளலார் பெருமானுக்கு பிறவியிலேயே  ஞானம் மிகுதியாக இருந்தது.

ஒரு முறை அவரது ஆசிரியர் மாணவர்களுக்கு  ஔவையாரின் ஆத்திச்சூடியை சொல்லிக் கொடுக்கிறார் 

"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்"

மாணவனாக இருந்த வள்ளலார் மட்டும் ஆத்திச்சூடியை சொல்லவில்லை. 

ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது 

"ஏண்டா வாயைத் திறக்க மாட்டேங்குற" 

"வேண்டாம், வேண்டாம் என்று சொல்லப் பிடிக்கவில்லை அய்யா, வேண்டும் வேண்டும் என இதை மாற்றிப் பாடலாம் அல்லவா"  என்கிறார் வள்ளலார்

ஆசிரியர் திகைத்தார், அவரின் திகைப்பு அடங்கும் முன்னரே, 
சின்னஞ்சிறு பிள்ளையான வள்ளலார் கீழ்கண்டவாறு பாடுகிறார்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர் தம் உறவு வேண்டும் 

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும் 

பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் 
உனை மறவாதிருக்க வேண்டும் 

மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் 

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் 
தலமோங்கு கந்தவேளே 

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
சண்முகத் தெய்வமணியே. 

ஔவையார் 'வேண்டாம்' என எதிர்மறையாகவும், வள்ளலார் 'வேண்டும்' என நேர்மறையாகவும் என நீதிக் கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள வேற்றுமை!

ஔவையாரும் வள்ளலாரும் நல்ல நீதி கருத்துக்களைப் பாடியது இருவருக்குமுள்ள ஒற்றுமை.

அதைவிட இருவருமே தமிழ்ஞானக் கடவுளான முருகனின் தரிசனம் பெற்றவர்கள் என்பது இருவருக்குமுள்ள பெரிய ஒற்றுமை.

ஔவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?எனக்கேட்டு முருகப்பெருமான் தரிசனம் கொடுத்தார்.

வள்ளலாருக்கு முருகப்பெருமான் கண்ணாடியில் தரிசனம் கொடுத்தார். 

ஔவையார், வள்ளலார் இருவருமே சித்தர்களுக்கு எல்லாம் சித்தனான முருகப்பெருமானிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்தியவர்கள் என்பது மறுக்க முடியாத ஒற்றுமை!

இப்போது நமக்கு தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உரிய நாள் என்பதோடு, நம் வள்ளலார் முருகப்பெருமான் தரிசனம் பெற்றதால் இன்னும் இந்த நாள் கூடுதல் சிறப்பு  வருகின்றது. இன்னும் தைப்பூசத்தின் சிறப்பாக 1872 ஆம் ஆண்டு தை மாதம் 13 ம் நாள் தைப்பூசத்தன்று, சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் முதல் ஒளி வழிபாட்டு விழா வள்ளலாரின் சொற்பொழிவோடு நடைபெற்றது.




வருகின்ற 28.01.2021 அன்றோடு 150 ஆவது ஆண்டு ஜோதி தரிசனம் காண உள்ளோம். இதனை சிறப்பாக அனைத்து வள்ளலார் சபைகளும் கொண்டாட உள்ளார்கள். நமக்கு  கிடைத்த அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.
                                                                                                                                                                                                                                                                                                                                                          








மேலும் மற்றொரு அழைப்பிதழை கீழே பகிர்ந்துள்ளோம்.
                                  







அடுத்து திருஅருட்பா இசை விழா அழைப்பிதழை காண உள்ளோம்.



மேலும் ஒரு அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம்.






திருஅண்ணாமலை வள்ளலார் அறக்கட்டளையின் அழைப்பிதழை கீழே தருகின்றோம்.
                                                                                                                                                                                       






இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக குருவருள் காட்டிடும் திருவருள் பயணம் அனைவரும் பெற உள்ளோம்.52 வண்ணப்பக்கங்கள் கொண்ட திருவருள் பயணம் மாத இதழ் வருகின்ற தைப்பூச திருநாளில் வெளியாக உள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்களை பார்க்கவும்.





“திருவருள் பயணம்” இதழ் நம் குழுவில் உள்ள அனைவருக்கும் 2021 ஆம் ஆண்டில்  புத்தாண்டு பரிசாக நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழு சார்பில் கொடுக்க உள்ளோம். விருப்பமுள்ள அன்பர்கள் தங்கள் பெயர், தற்காலிக முகவரி, நிரந்தர முகவரி, தொலைபேசி, வாட்சாப் எண்,இமெயில் விபரங்களை தர வேண்டுகிறோம். சந்தா தொகை செலுத்த விரும்பும் அன்பர்கள் நம் TUT கணக்கில் செலுத்தலாம். இது நம் தளம் சார்பில் குருவருளால் நடத்தப்பட உள்ள ஞான தான சேவையாகும். இதன் பொருட்டு சுமார் சுமார் 20 அன்பர்களுக்கு சந்தா செலுத்தி உள்ளோம்.

என்ன அன்பர்களே...வருகின்ற தைப்பூச திருநாளில் வீட்டில் விளக்கேற்றி 108 முறை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி...என்று கூறி வள்ளலாரை நம் மனதுள்வைப்போம். லட்சத்தில் ஒருவராக வாழ்வதை விட லட்சியத்தில் ஒருவராக வாழ முற்படுவோம்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி...

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html



No comments:

Post a Comment