"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, April 25, 2020

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் !

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் இப்படி ஒரு அசாதாரண சூழலில் இருந்து வருகின்றோம். இதற்கு காரணம் என்ன? ஏன் இப்படி ஒரு நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பல்வேறு கேள்விக்கணைகளை நாம் தொடுத்தாலும் இதுவும் கடந்து போகும், எல்லாம் நன்மைக்கே என்ற மன நிலையை கைக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.

இன்று அட்சய திருதியை. வழக்கத்திற்கு மாறாக இப்படி இருக்குமா என்பது கனவிலும் நாம் நினைக்காத ஒன்று. மக்கள் கூட்டம் தங்கம் வாங்க அலைமோதும். ஆனால் இன்று அத்தியாவசிய தேவையான அரிசி, பருப்பு,எண்ணெய் வாங்கிக் கொண்டு இருக்கின்றோம். உடனே ஆடம்பரம்..அது இது? என்று நினைக்க வேண்டாம். பொதுவாக நாம் இந்த நாளில் நம்மால் முடிந்த சேவைகள் செய்து வருகின்றோம். குறிப்பாக அன்னதானம், பசுக்களுக்கு நம்மால் இயன்ற சேவை என தொடர்வோம்.  ஆனால் தற்போதுள்ள சூழலில் இதெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அட்சய திருதியைக்கான சேவை நம் தளம் சார்பில் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. பதிவின் இறுதியில் மீண்டும் இது பற்றி பேசுவோம்.

அடுத்து சில நண்பர்கள் வள்ளலார் பற்றி அறிய விரும்புவதாக சொன்னார்கள். நாம் இப்போது தான் வள்ளலார் வழியில் சில அடிகள் எடுத்து வைத்து உள்ளோம். இன்றைய அட்சய திருதியை நன்னாளில் வள்ளலார் பற்றி சிந்திப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதி சில செய்திகளை இங்கே பகிர உள்ளோம்.

 வள்ளலார்

மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.

நம் தேடல் உள்ள தேனீக்களாய் தளமும் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் பலமுறை அன்னதானம் செய்துள்ளோம். அடுத்து வள்ளலார் சீடர்கள் பலரின் அறிமுகம் கிடைத்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சன்மார்க்க நேசன் திரு. M.A. ஹுசைன் ஐயா, வள்ளலார் மோகன் ஐயா, காந்திராஜன் ஜானகிராமன் ஐயா, கொளப்பாக்கம் சந்தானம் ஐயா, தயவு சித்தாஸ்ரமம் திரு.சரவணன் ஐயா  என அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களில் ஒவ்வொருவரின் சேவை,தொண்டு பற்றி நேரில் சென்று அளவளாவி தனிப் பதிவாகவே அளிக்கலாம். சிலரை நம் தளத்தில் பதிவிட்டு இருக்கின்றோம். குறிப்பாக சன்மார்க்க நேசன் திரு. M.A. ஹுசைன் ஐயா பற்றியும், தயவு சித்தாஸ்ரமம் திரு.சரவணன் ஐயா பற்றியும் தொட்டுக் காட்டி இருக்கின்றோம்.  மேலும் கூடுவாஞ்சேரி வள்ளலார் சன்மார்க்க சபை மாதந்தோறும் அன்னதானத்தோடு, கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பூச நட்சத்திர பூசையும் செய்து வருகின்றார்கள். நாம் சென்ற மாத பூசையில் அகவல் பாராயணம் செய்து விட்டு கிளம்பினோம். அந்த ஆசைகளே. இந்த பதிவை படைக்க நமக்கு வழிகாட்டுகின்றது. இந்த பதிவில் வள்ளலாரின் சன்மார்க்கம் குறித்தும், வள்ளலாரின் சன்மார்க்க அன்பர்கள் தொடர்பு குறித்தும் சொல்ல இருக்கின்றோம்.



அருட்பெருஞ்சோதி ஆண்டவரை ஆராதனை செய்தவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என முழங்கியவர். அந்த முழக்கமே வடலூரில் சத்திய தரும சாலையாய் இன்றும் பசிப்பிணி தீர்த்து வருகின்றது. அவர் பிறப்பு முதல் எத்தனை எத்துனை சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வள்ளலார் நமக்கு எப்படி தெரிகின்றார் ? ஆன்மிகவாதி மட்டும் என்றால் அது மேலோட்டமாக உணர்வதே.

சிறந்த சொற்பொழிவாளர்,போதகாசிரியர்,உரையாசிரியர்,சித்தமருத்துவர்,பசிப் பிணி போக்கிய அருளாளர்,பதிப்பாசிரியர்,நூலாசிரியர்,இதழாசிரியர்,இறையன்பர்,ஞானாசிரியர்,அருளாசிரியர்,

சமூக சீர்திருத்தவாதி,தீர்க்கதரிசி,மொழி ஆய்வாளர் (தமிழ்) என்றெல்லாம் உணர்த்தப்பட்டு வருகின்றார்.இதெல்லாம் சாதாரண மானிடனுக்கு வாய்க்குமா? ஞானிகளுக்கு வாய்க்குமா?






சன்மார்க்கம் கூறும் செய்திகளை மேலே இணைத்துளோம். ஒரு தடவை படித்தால் புரியாது. ஓராயிரம் தடவை படித்தால் தான் உணர்ந்து நாம் கைக்கொள்ள முடியும். அடுத்து வள்ளலார் என்று சொன்னால் நம் நினைவிற்கு வருவது திருஅருட்பா. நமக்கு என்று வாய்க்கும் என்று தெரியவில்லை. உணர்ந்தபின் இங்கே அறிய தருகின்றோம்.







திருஅருட்பா செய்திகளையும் இங்கே மேலே இணைத்துள்ளோம்.  அடுத்து வள்ளலாரின் வழியில் சைவம் பற்றிய கருத்துக்களை பகிர்கின்றோம்.













அசைவம் சாப்பிடுபவர்கள் உடனே என்ன செய்வது என்று  நினைக்க வேண்டாம்? நீங்கள் உங்கள் விருப்பத்தில் நிலை பெறுங்கள். உங்கள் உள்ளுணர்வில் உயிர்ப்பெறுங்கள். அசைவம் பிடித்தால் உண்ணுங்கள். சைவத்திற்கு மாற முயற்சிக்க வேண்டாம். உங்கள் விருப்பம் சரியாக இருந்தால் அந்த மாற்றம் தங்களுக்கு கிடைக்கும். நாமும் அசைவத்தில் ஒரு பிடி பிடித்த காலமுண்டு. கூடுவாஞ்சேரி வந்த பின் நமக்கு தானாகவே சைவத்தில் நிலைப்பாடு ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உணவில் சைவம் மட்டுமே பின்பற்றி வருகின்றோம். இது எம் குருவின் ஆளுமையே. வள்ளலார் வழி வந்த வேதாத்திரி மகரிஷியின் அருளே நம்மை இன்னும் உயிர்ப்பித்து வைத்துக் கொண்டிருக்கின்றது.

மேற்கொண்டு வள்ளலார் பேசும் தொடர்புகளை இங்கே தருகின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.
















அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!!

இதோ வள்ளலாரின் அருளாணைப்படி நேற்று கூடுவாஞ்சேரி அகத்தியர் கோயிலில் தூங்கா தீபம் ஏற்றியுள்ளோம்.












சரி,. சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கொண்டாடிய அட்சய திருதியை காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.

 அகத்திய மகரிசி காட்டிய வழியில் மகாலட்சுமி தாயை வணங்கி நாமும் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.







கிளி சேகர் ஐயா  உடனான சந்திப்பின் பதிவுகள் மேலே. அவரைத் தொடர்பு கொள்ள


முல்லை வனம் ஐயாவுடன் சந்திப்பில். யார் இந்த முல்லைவனம். இவரைப் பற்றி அறிந்து கொள்ள தனிப்பதிவொன்று விரைவில் தருகின்றோம்.

அகத்தியர் அருளிய திருமகள் துதியை  படிப்பவர்கள் அனைவரும் 16 வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அந்த பரம்பொருளிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.


சரி. இந்த ஆண்டு அட்சய திருதியை சேவை நடந்தது என்று அனைவரும் அறிய ஆவலாக இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இன்று கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் அன்னதானம் செய்ய சில நாட்களுக்கு முன்னர் சிறு தொகை கொடுத்துவிட்டோம். இன்று காலை சுமார் 11 மணி அளவில் கூடுவாஞ்சேரி சென்றோம். அன்னதானம் எப்படியும் சுமார் 12 மணி அளவில் சிறிய வழிபாடு, பிரார்த்தனை என்று ஆரம்பிக்கும் ஆதலால் மாட்டுத் தீவனம் வாங்கி தானமாக தர எண்ணி மாட்டுத்தீவனம் வாங்க சென்றோம். அப்பப்பா ...எளிதில் தீவனம் கிடைக்கவில்லை. ஆனால் குருவருளால் 1 மூடை கலப்புத்தீவனம் வாங்கி வந்தோம், பின்னர் மதியம் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் சிறப்பாக அன்னசேவை நம் TUT தளம் சார்பில் நடைபெற்றது.நாளைய தினம் தான் அட்சய திருதியை என்று நினைத்து நாளை மீண்டும் கூடுவாஞ்சேரியில் அன்னசேவை செய்ய கேட்டோம். ஏற்கனவே வழக்கமாக அட்சய திருதியை அன்னதானம் ஒரு அன்பர் செய்து வருவதாக கூறினார்கள்.



 இதோ...அன்னசேவை காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.















மனதிற்கு நிறைவாக இருந்தது. பின்னர் அட்சய திருதியை எப்போது என்று பார்த்தோம். அட்சய திருதியை இன்று மதியம் முதலே ஆரம்பம் என்று பார்த்த போது நமது மனம் மகிழ்ந்தது. அட..எப்படியோ இன்றைய அட்சய திருதியை நன்னாளில் குருவருளால் அன்னசேவையும், மாட்டு தீவனமும் வாங்கி கொடுத்துள்ளோம் என்று பார்க்கும் போது, குருவருள் நம்மை வழிநடத்தி வருவதை கண்டு, எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். மேலும் நாளை காளை திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னசேவை நம் தளம் சார்பில் அட்சய திருதியை சேவையாக செய்ய உள்ளோம்.என்றுமே குருவருள் வேண்டி நிற்கின்றோம்.

இது போன்ற சேவைகளுக்கு பொருளுதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html


 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment