"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, April 1, 2020

உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக நாம் அனைவரும்  வழிபட்டு வருகின்றோம்.

அஷ்டமி, நவமி திதிகள் என்றாலே, எந்த ஒரு நல்லக் காரியத்திலும் இறங்காமல், இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே., நாங்கள் என்ன பாவம் செய்தோம்?'' என்று வருந்தினவாம். அதற்கு கருணை வடிவே ஆன இறைவன் "உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன். அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்'' என்று வாக்களித்தாராம்.

பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.

நாளை  ஸ்ரீ ராம நவமி. ஒரு இல்,ஒரு சொல், ஒரு வில் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ ராமர். தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களின் தல புராணங்களில் ராமர் வழிபட்ட இடம், லிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடம் என்றெல்லாம் குறிப்புகள் இருக்கின்றன. ஏகபத்தினி விரதன் என்பதற்கு பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார். அதனால் ராமரின் கால் படாத இடமே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்குத் தல புராணங்கள் பலவற்றில் அவரின் பெருமை வெளிப்படுகின்றது. துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்!

சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்! இதுதான் ராமனின் அறநெறி ஆகும்.





ஸ்ரீராம நாமத்திற்கு இணையான ஒரு வேதம் கிடையாது... மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து மானிடர்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.


‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.

இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், என்றும் கொண்டாடப்படுகிறது. 

தற்போது நிலவி வரும் சூழலில் நாம் கோயிலுக்கு சென்று வழிபட இயலாது. இல்லத்திலேயே ராம மந்திரம் கூறி வழிபடுவோம். 

சித்தர் சிவவாக்கியர் எந்த நாமத்தை இடைவிடாது சொன்னால் உயர்நிலையை அடையலாம் என்பதை தனது பாடல்களில் சொல்லுகிறார்.


சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்

எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே…


ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்

இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே…

என்றும்

கார கார கார கார காவலூழி காவலன்

போர போர போர போர போரினின்ற புண்ணியன்

மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ

ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே

என்றும்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?

கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!

ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்

ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!

என்றும் சொல்கிறார்.


போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்

தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்

ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்

ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.

என்பது இங்கே  குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சிவ வாக்கியர் கூறும் மறை ஞான இறைவன் யார் என்பதை நாம் இங்கே அறிந்து கொள்ள முடிகின்றது.


ஸ்ரீ ராமர் என்று சொன்னாலே நம் மனதில் பல வித செய்திகள் உணர்த்தப்படும் என்று நம்புகின்றோம்.  இதில் குறிப்பாக ஸ்ரீ ராமாயணம் அடங்கும். தினமும்  ராமாயணம் முழுவதும்  படித்தால்  எவ்ளோ புண்யம் ? எவ்ளோ பலன்  ?  எவ்ளோ நல்லது ?

ஆனால் நம்மால்  தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ? என்றால் …

நிச்சயம் முடியும் எப்படி? பதிவின் இறுதியில் இதனை அறிய தருகின்றோம். அதற்கு முன்பாக ஸ்ரீ ராமர் என்றாலே அஞ்சனை மைந்தர் ஸ்ரீ அனுமார் நினைவிற்கு வருவார் அல்லவா? 

 இன்றைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் நாம் ராமரை அறிவதோடு, ராம நாமம் எப்போதும் ஜெபிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தலத்திற்கு செல்ல இருக்கின்றோம்.
வழக்கம் போல் நாம் மருதேரி பிருகு மகரிஷி அருள் நிலையம் செல்லும் போதெல்லாம் இந்த ஆஞ்சநேயர் கோயில் எப்போது செல்வது என்று மனம் ஏங்கும். அந்த நாளும் வந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, மருதேரி சென்று திரும்பி வரும் போது அந்த ஆஞ்சநேயர் தளத்திற்கு சென்றோம். 



அனுமன் என்றாலே நாமக்கல், நங்கைநல்லூர் என்று பிரசித்தம் என்றாலும் நமக்கு அனுமன் என்றாலே சுந்தர காண்டம் தான். எப்பொழுதெல்லாம் சோர்வாக இருக்கின்றீர்களா அப்பொழுதெல்லாம் சுந்தர காண்டம் படியுங்கள். படித்த பின்பு, உங்களுள் ஒரு ஆற்றல் பிறக்கும், புது மூச்சு பிறக்கும். அப்படி தான் நமக்கு அன்று இருந்தது. போகின்ற இடம் நீங்கள் பார்த்தாலே தெரியும். ஒரே வெயில் வேறு.


பார்க்கும் இடமெல்லாம் பரந்து விரிந்து இருந்தது. இங்கே அனுமார் கோயிலா என்று வியப்போடு சென்றோம்.



கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோயிலைக் காண வில்லை.


ஓரளவிற்கு கோயில் இருக்கும் இடத்தை அடைந்து விட்டோம். அதோ தூரத்தில் தெரிகின்றதா? அதுதாங்க ஆஞ்சநேயர் கோயில்.
மனதுள் இப்போது குதூகலம் தோன்றியது.


சிறிய அளவில் மலை ஏறுவது போல்  இருந்தது. மனதுள் மத்தாப்பூ ஜொலித்தது. சிறிய மலை தான்.
நம்மை சிந்தனையை ஒன்றை செய்ததை நாம் உணர்ந்தோம்.
 அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் அஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும். ராம பிரான் அவதரித்த நாளில் அனுமனை வணங்குவது இன்னும் சிறப்பு.
இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அனுமன் தரிசனம்.


இவர் இங்கே சுயம்புவாக தோன்றியவர் ஆவார். கூட்ட நெரிசல் மிக்க கோயில்களுக்கு சென்று வழிபடுவதை விட, இது போன்ற மக்கள் கூட்டமில்லாத கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள். புற வழிபாட்டோடு அக வழிபாட்டின் ஆழமும் உணர்வீர்கள்.சுமார் 10 நிமிடம் தரிசனம் செய்தோம்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம்.




இன்றைய ஸ்ரீ ராம நவமி   நன்னாளில் ராமபிரானின் சேவகன் ஸ்ரீ அனுமார் தரிசனம் நாம் பெற்றிருக்கின்றோம். அனைத்தும் அவன் அருளாலே. நம் தளம் சார்பில் ஒரு நாள் இந்த கோயிலுக்கு சென்று அவசரகதி இன்றி, வழிபாடு செய்ய விழைகின்றோம்.எப்படியோ நம் விருப்பத்தை சொல்லிவிட்டோம். இனி நடத்துவது அந்த பரம்பொருளின் வேலை.

இதோ.. மீண்டும் ராமாயணம் பற்றிய செய்திக்கு வருவோம்.

தினமும்  ராமாயணம் முழுவதும்  படித்தால்  எவ்ளோ புண்யம் ? எவ்ளோ பலன்  ?  எவ்ளோ நல்லது ?

ஆனால் நம்மால்  தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ?
என்றால் …

நிச்சயம் முடியும் எப்படி ?

காஞ்சி பெரியவரால்  அருளி செய்யப்பட மிக  எளிய அற்புதமான கிடைத்தார்  கிடைத்தற்கரிய  பொக்கிஷமான  வெறும் ஒன்பது  வரிகளை  மட்டுமே கொண்ட 30 வினாடிகளில்  சொல்லி முடித்து  அனைத்து பலன்களையும்  பெற்று  தரக்கூடிய  அந்த ஒன்பது வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உங்களுக்காக , உலக  நன்மைக்காக

இதோ  …..

ஸ்ரீ ராமம்  ரகுகுல  திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்
ஸ்ரீராம் ஜெய்ராம்  ஜெய்ஸ்ரீராம்

இவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம்

முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.






நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால்  வளரும்……….இது  சத்ய வாக்கு.

 ராம் ராம் ராம் 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

 ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment