"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, January 10, 2021

மனமகிழ்ச்சி தந்திடும் மகம் பூசை - சதானந்த சுவாமிகள் ஆசிரமம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் தொடர்பதிவில் இந்த பதிவைத் தர விரும்புகின்றோம்.

சென்ற ஆண்டில் நாம் அளித்த பதிவில்  சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம்  தொடர்ச்சியாக இங்கே பேச விரும்புகின்றோம். மதிய உணவு முடித்து, தமிழ் கூறும் நல்லுலகம் சிந்தனை உரை துவக்க ஆயத்தம் ஆனோம். அதற்கு முன்பாக 05/01/2018 அன்று நடைபெற்ற மகம் பூசையின் நிகழ்வின் துளிகளை இங்கே இணைக்க விரும்புகின்றோம்.என்னப்பா தீடீரன்று மகம் பூசை பற்றி இங்கே பேசுகின்றோம் என்று நினைக்கும் போது சுவாமிகளின் 99 ஆம் குருபூஜை பதிவின் தொடக்கமாகவும் கருதுகின்றோம்.



குருவின் கருணை மழையில்


                                   
                                                                 அன்னம்பாலிப்பு 


                                                                      முற்றோதல்  காட்சி











இந்த பூஜைக்கு பொருளுதவி செய்த  சதானந்தபுரத்தை சேர்ந்த திரு. K. சுந்தரமூர்த்தி & S.ராஜேஸ்வரி குடும்பத்தினரையும், திரு. M. கண்ணன் & கே.ஜெயந்தி குடும்பத்தினரையும் மனதார சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம், மேலும் உறுதுணையாய் இருக்கும்  பொழிச்சலூரைச் சேர்ந்த சிவதொண்டன் சிவனடியார் திருக்கூட்டத்தின் அடியார் பெருமக்களுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதோ தமிழ் கூறும் நல்லுலகம் தொடர்கின்றது.

சுமார் நான்கைந்து பேரைக் கொண்டு, முதலில் நிகழ்வைத் துவக்கினோம். ஆனால் குருவருள் நம்மை அவரின் அதிஷ்டானத்தின் பக்கத்திலேயே நிகழ்வைத் துவக்க அனுமதித்தார். மீண்டும் இடத்தை மாற்றிவிட்டு , திரு. செல்வகுமார் ஐயா அவர்கள் சிந்தனை உரையைத் தொடர்ந்தார். குருவருள் பற்றி ஆரம்பித்த அவர், அப்படியே திகைக்கும் செய்திகளை கூற ஆரம்பித்தார்.






                                           முதன் முதலாய் உரை ஆரம்பித்த உடன்
















நேரம் செல்ல, செல்ல மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள். நான்கைந்து பேரோடு தொடங்கிய சிந்தனை உரை, கடைசியில் சுமார் 40 பேரோடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ் கூறும் நல்லுலகம் கருத்துக்களை இங்கே தர ஆசை. ஆனால் என்ன தான் இங்கே நாம் கொடுத்தாலும், நீங்கள் ஒருமுறை நேரில், கலந்துகொண்டால் தான் நாம் சொல்ல வரும் செய்தி புரியும்.






கடந்த நிகழ்வில் கலந்து கொண்ட திரு ஆதி அவர்கள் தம் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட காட்சி மேலே.

நிகழ்வின் முடிவில், செல்வகுமார் ஐயா,திரு பாண்டே ஐயா மற்றும் முற்றோதல் நிகழ்த்திய திரு.ராஜ்குமார் ஐயா அவர்களுக்கு நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதன் முதலாக ஒரு சிறிய விழாவொன்றை , நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் நடத்தினோம் என்றால் அது அங்கே அருள் தரும் சதானந்த சுவாமிகளின் கருணையே அன்றி வேறொன்றும் இல்லை.









இந்த தருணத்தில், இந்த நிகழ்ச்சியை நடத்த ஒத்துழைப்பு தந்த  ஆசிரம நிர்வாகத்திற்கும், அருமையான நற்சிந்தனை உரையை தந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிறுவனர் திரு. K.செல்வகுமார் அவர்களுக்கும் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.

எல்லாம் அவன் அருளாலே ..அவன் தாள் வணங்கி. மீண்டும் சுவாமிகளின் 99 ஆம் குரு பூஜை அழைப்பிதழுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

 ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

 ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html


 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

No comments:

Post a Comment