"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, November 21, 2020

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!!

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் சென்ற ஆண்டில் நாம் பெற்ற கந்த ஷஷ்டி விரத மகிமையால் மருதமலை தரிசனம் பெற்றோம். அந்த தரிசனத்தை இங்கே பகிர விரும்புகின்றோம். ஆம். சென்ற ஆண்டு ஷஷ்டி விரத சூரசம்ஹாரம் முருகனருளால் சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தில் நாமும் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து. அந்த நிகழ்வில் மனம் முழுதும் முருக சிந்தனையில் ஆழ்ந்தது. வாய் முழுதும் சரண கோஷத்தில் திளைத்தது. அன்றைய தினம் முருகன் அருள் பெற்ற பிறகு, கோயம்புத்தூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மருதமலை செல்லும் வாய்ப்பு என்றால் எப்படி இருக்கும்? தேனில் ஊறிய பலாச்சுளைகளை சுவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது. என்னப்பா? புற அனுபவம் பற்றி சொல்கின்றோம் என்று நினைக்க வேண்டாம். இந்த உதாரணம் நம் அக அனுபவம் தான். இனி மருதமலை மாமணி பற்றி மனதுள் நிறைப்போம்.

மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில் கூறியுள்ளார்.அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று மிகக்கடினமாகவும் வேகமாகவும் வாசித்துவிட்டாராம்..கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா, என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.இப்படிப்பட்ட கவிஞர் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோமோ!

அடுத்து தமிழில் தான் எத்தனை பக்தி இலக்கியங்கள். தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் உலகில் மிக மிக தலை சிறந்தவை. இதனை நாம் உணர வேண்டும். இதனை நாம் உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும். மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்,திருப்புகழ் போன்ற பாடல்களோடு நாமும் சேர்ந்து பாட வேண்டும். குழந்தைகள் இப்படிப்பட்ட பாடல்களை பாடுவதன் மூலம் அவர்களின் மனன திறன் கூடும். இன்று பட்டிமன்ற பேச்சுக்களில் தலைசிறந்து பேசும் அனைவரும் மனன திறன் மிக்கவர்கள்..மேலும் இவர்கள் அனைவரும் அடியார்,அருளாளர்களின் பாடல்களை அப்படியே பாடும் திறனும் பெற்றவர்கள்.இது போன்ற பாடல்கள் மனன திறனுக்கு மட்டுமன்று. இது போன்ற அருட்பாடலால் மன உறுதி பெறலாம், வாழும்  வகை அறியலாம்.

முருகனின் திருப்பாதங்களைப் பற்றுங்கள், கர்ம வினைகள் காணாமல் போகும், முருகனின் அகராதியில் தண்டித்தல் என்பதே கிடையாது. தண்டிப்பதற்கு பதிலாக நம்மை சோதித்துப் பார்ப்பார்.நாம் சோதனைகளை கடந்து விட்டால், பிறகென்ன..முருகனின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.அசுரர்கள் அனைவரும் வதம் செய்யப்பட்டதாக நாம் அறிவோம். ஆனால் முருகன் என்ன செய்தார்? வதம் செய்யாது சூரபத்மனுக்கு அருள் செய்தார். நம்பிக்கையோடு சரண் அடையுங்கள், அருள் செய்வார் நம் முருகப் பெருமான்.

உங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் சரி..உடனே ஏதேனும் ஒரு குன்று உள்ள குமரனை சென்று வழிபடுங்கள். வலியுடன் குன்றில் ஏறும் போது ...முருகா..முருகா..என்று அவன் சரணம் கூறி, நீங்கள் செய்த பிழைகளை உணர்ந்து , உணர்ந்து மலை ஏறுங்கள். அவன் சன்னிதியில் உங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் சமர்ப்பியுங்கள். நீங்கள் செய்த பாவத்தையும் முறையிட்டு அழுங்கள்..அவரிடம் தானே நாம் அழுது,தொழுது பெற முடியும். இனி நடக்கப் போவது நன்மையாக இருக்க அருள் செய் முருகா என்று வேண்டுங்கள். திருநீற்றுப் பிரசாதத்தை நெற்றி நிறைய பூசுங்கள். ஆலயத்தை மூன்று முறை வலம் வாருங்கள். முருக..முருகா..என உருகுங்கள்..
ஆலயத்தில் வழிபடுவதோடு நிறுத்தி விடாமல் வீட்டில் தினமும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல் போன்றவை படித்து அவனை வழிபடுங்கள்.

சரி,,அப்படியே மருதமலை முருகன் பாதம் பற்றுவோம்...

மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.





மருதமலை தரிசனமும், பாம்பாட்டி சித்தர் தரிசனமும் இனி காண இருக்கின்றோம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். அதுபோல் தான் மருதமலை திருக்கோயில் ஆகும். முதலில் மருதமலை அடிவாரத்தை அடைந்தோம். 




மருதமலை மலைக்கோயில் செல்வதற்கு சிற்றுந்துகள் அடிவாரத்தில் உண்டு. நாம் நடை பயணமாக மலை ஏற விரும்பினோம். அங்கே அருகில் இருந்த நுழைவாயில் கண்டு, முருகா..முருகா என்று உள்ளத்தில் தொழுது நடையைக் கட்டினோம்.






இயற்கை எழில் கொஞ்ச நுழைவாயில் தாண்டி நாம் நடந்து கொண்டிருந்தோம். இந்த மலையாத்திரையில் நாம் நடந்து செல்வதற்கு வசதியாக நன்கு படிகள், இளைப்பாற மண்டபங்கள் என ஒருங்கே இருந்தது. அப்படியே நடந்து சென்று கொண்டிருந்தோம்.






இதோ..தான்தோன்றி விநாயகர் தரிசனம் பெற இருக்கின்றோம். 


மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டு பாதையின் தொடக்கத்தில் தான் தோன்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த விநாயகரின் இயற்கை அமைப்பு மிக அழகு உடையது. பிற தலங்களில் காண்பதற்கு அரிதாகும். விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.

தான் தோன்றி விநாயகரை வணங்கி சென்றால் சரியாக 18 படிகளை கொண்ட பதினெட்டாம்படி உள்ளது. சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம்படிக்கு வந்து வணங்கி செல்கிறார்கள்.




அடுத்து மீண்டும் ஆங்காங்கே ஓய்வு எடுத்து நடந்து கொண்டே இருந்தோம்.




















இதோ..அடுத்து இடும்பன் சன்னிதி தரிசனம் காண இருக்கின்றோம்.








இடும்பனை அழித்த இனியவேல் முருகா என்று ஷஷ்டி கவசத்தில் கேட்டிருப்போம். இடும்பனை வேண்டி மீண்டும் மலை நோக்கி சென்றோம்.

 














மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. 



இதோ..மருதமலை கோயிலை நெருங்கி விட்டோம். 


புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.
இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.


 மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.



அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாம்பாட்டி சித்தர் தரிசனம் பெற உள்ளோம்.



 இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.












இதோ..இங்கே தான் பாம்பாட்டி சித்தர் தரிசனம் பெற்றோம். பாம்பாட்டி சித்தர் பற்றி தனிப்பதிவில் காண்போம். ஒரே தலத்தில் முருகப் பெருமான் தரிசனமும், பாம்பாட்டி சித்தர் தரிசனமும் மருதமலையில் பெற முடிகின்றது.

அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

பதிவின் தலைப்பில் உள்ள பாடலை அனைவரும் ஒரு முறை பாடுவோமா?

 மீண்டும் ஒருமுறை பாடலை எழுத்து வடிவில் தருகின்றோம்.

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ
மருத மலை 
மருத மலை
முருகா
மருதமலை மாமணியே முருகய்யா (2)

தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா
உனது மனம் பெற மகிழ்ந்திடவே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா.
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
அ.அ..அ..அ..ஆ...
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன் (2)

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்

பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே (2)

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
வருவாய்
குகனே
வேலய்யா
அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

 முருகன் அருள் முன்னிற்க மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

No comments:

Post a Comment