"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 9, 2021

ஆடி அமாவாசை - இறை வழிபாடும், இறைப்பணியும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு மாத அமாவாசை அன்று குருவருளால் மோட்ச தீப வழிபாடு செய்து வந்தோம். கடந்த 4 மாதங்களாக இந்த வழிபாடு லோக ஷேம தீப வழிபாடாக நடைபெற்று வருகின்றது. இம்மாத அமாவாசை தீப வழிபாட்டோடு ஆயில்ய நட்சத்திரமும் சேர்ந்தது . இதனையொட்டி, கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.08.2021) அன்று மாலை நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு வழிபாடும், லோக ஷேம தீப வழிபாடும் நடைபெற்றது. மேலும் ஆடி மாத குருநாதரின் அருள்நிலைகளை பல கோயில்களில் இருந்து இந்தப் பதிவின் மூலம் பெற இருக்கின்றோம்.


முதலிலே குருநாதர் தரிசனம் அனைவரும் பெற்றுக் கொள்வோம்.





அன்றைய தினம் வழக்கமாக மாலை சுமார் 6 மணி அளவில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் லோக ஷேமத்திற்காக தீபமேற்றி , அர்ச்சனை செய்து வழிபாடு செய்தோம். நன்றாக குருநாதரின் அருள்நிலைகளை பாருங்கள். கண்களை திறந்து நம்மை பார்ப்பதை நன்கு உணர முடிகின்றது. குருநாதரின் தரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்குமா என்ன? குருநாதரின் வாக்கினை அப்படியே இங்கு தருகின்றோம்.

நான் இப்பொழுதும் பூமியில்தான் வலம் வந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடைய பக்தர்களை ஒவ்வொருவரையும் பார்த்து நல்லது செய்து கொண்டே வந்து இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் புண்ணியரே! பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே என் பெயரை உச்சரிக்க முடியும் என்னை வணங்கவும் முடியும்.

இதனை உள்வாங்கிக் கொள்ளுங்கள். ஆம். ஓம் அகத்தீசாய நம என்று குருவின் நாமம் சொல்வதற்கு நாம் புண்ணியம் செய்தால் மட்டுமே சொல்ல முடியும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோருக்கு நன்றி கூறி, வணங்கி கொள்ளுங்கள். இப்பிறப்பில் இவர்களின் பிள்ளைகளாய் பிறந்ததினால் தான் நமக்கு நம் குருநாதர் கிடைத்துள்ளார். இல்லையேல் வேறு மாதிரி நம் வாழ்க்கை இருந்திருக்கும் அல்லவா? 

அடுத்து சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் இருந்து தரிசனம் பெற இருக்கின்றோம்.







அடுத்து பனப்பாக்கத்தில் இருந்து தரிசனம் பெற உள்ளோம்.


ஆடி மாத ஆயில்ய நட்சத்திர பூஜையில் ஐந்து முக ருத்ராட்சம் மாலையோடு காட்சியளிக்கின்றார் 
ஸ்ரீ அகத்திய பெருமான்.


பிரபஞ்ச சத்குரு ஓம் ஸ்ரீ அகத்தியர் மா மகரிஷி ஆடி அமாவாசை & ஆயில்ய நட்சத்திரம் குரு பூஜை தரிசனம் பெற இருக்கின்றோம்.

TWIN TOWER TEMPLE KL ECO CITY 










அடுத்து பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லத்தில் இருந்து குருநாதர் தரிசனம் பெற இருக்கின்றோம்.




நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது அல்லவா? ஆம். இங்குள்ள ஒவ்வொரு கோயிலின் அருள்நிலை பற்றி பேச நமக்கு இந்த ஒரு பதிவு பத்தாது. குருநாதரின் வாக்கை கடைப்பிடிக்க அவரிடமே வேண்டுவோம். இன்னும் நாம் தொண்டு செய்ய குருவே..நீவீர் அருள் காட்டுங்கள்.

அடுத்து இறைபணியாக அன்னசேவை பல இடங்களில் நடைபெற்றது. இன்று 30 நபர்களுக்கு கூடுவாஞ்சேரியில் அன்னம் வழங்கப்பட்டது. ஓம் அகத்தீசாய நம...


அடுத்து நம் தளம் சார்பில் திருஅண்ணாமலை, திருவள்ளூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அன்னசேவையில் நாம் பொருளுதவி செய்து இணைந்தோம்.அடுத்து சதுரகிரியில் குடிநீர் தானம் செய்யும் பொருட்டு குருவருளால் பணிக்கப் பெற்றோம். மேலும் காந்திகிராம் சௌபாக்கியா அமைப்பில் உள்ள 150 குழந்தைகளுக்கு வடை, பாயாசத்தோடு மதிய உணவு வழங்கினோம். அன்று பசு மாட்டிற்கு வாழைப்பழங்கள் கொடுத்தோம். 


இவ்வாறு ஆடி மாத இறை வழிபாடும், இறைப்பணியும் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. கருணை உள்ளதோடு நிதி உதவி அளித்துவரும்  அனைத்து நல் உள்ளங்களுக்கும் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின்  சார்பாக நன்றி கூறி பதிவை நிறைவு செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஆடி அமாவாசை - ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்க வேண்டிய பக்திக் கதை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_90.html

விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே! - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post_22.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு அறிவிப்பு - 20.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/20072020.html

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_84.html

 முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_83.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/06/21.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

2 comments: