"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 4, 2021

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. இந்த பெருந்தொற்று காலத்தில் நம் தளம் சார்பில் குருநாதரின் அருளால் பல இடங்களில் சேவை செய்து வருகின்றோம். வழக்கமான இம்மாத சேவைகளுடன் ஆடி அமாவாசை வழிபாடும் சேர்ந்து உள்ளது. 

1. ஆடி அமாவாசை அன்னதானம்  - திருஅண்ணாமலை 

2. ஆடி அமாவாசை அன்னதானம் - ஸ்ரீ ஆதி சிவன் டிரஸ்ட் 

3. ஆடி அமாவாசை அன்னதானம்- தயவு ஆஸ்ரமம் 

4. மாத அன்னசேவை -  எத்திராஜ் சுவாமிகள் மூலம் முதியோர்களுக்கு 

5. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் மாத சேவை

6. கும்பகோணம் சுரேஷ் ஐயா அவர்களின் மகன் கல்வி உதவி 

7.தர்ம சிறகுகள் குழு மாத சேவை 

8. ஆடி அமாவாசை அன்னதானம் - சேலம் சபரி ஐயா அவர்கள் 

9. திண்டுக்கல் செல்வம் - அரிசி மூடை - நித்ய அன்ன சேவை 

10. சுகம் தரும் சுந்தர காண்டம் - 11 - தானமாக 

இவை அனைத்தும் தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். இங்கு நாம் சில சேவைகளை மட்டுமே சொல்லி இருக்கின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு போன்று இன்னும் இந்த மாத சேவைகள் உள்ளது.சிவத் தொண்டுகள் புரிவதற்கு  நன்கொடை கொடுத்து உதவும் நல் உள்ளங்களின் கர்ம வினை முடிச்சுகளை நிச்சயம்  அவிழ்ப்பார் ஈசன். கருணை உள்ளதோடு நிதி உதவி அளித்துவரும்  அனைத்து நல் உள்ளங்களுக்கும் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின்  சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். 

இந்த கலியுகத்தில் கர்மத்தின் வலி குறைய தர்மம் செய்வது ஒன்றே வழி ஆகும். இதனை குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்காக கீழே தருகின்றோம்.


இது தான் இப்போதைய தேவை..அகத்தியமே சத்தியம். சத்தியமே அகத்தியம். இதனுடன் தர்மத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.இவை இரண்டையும் நாம் கைக்கொண்டால் நம்மைத் தேடி இறை வரும் என்பதே உண்மை. இனி இன்றைய  ஜீவ நாடி அற்புதங்கள் பகுதிக்கு செல்வோமா?

ஒருவர் என்னிடம் முதன் முறையாக வந்து நாடி படிக்க வேண்டும் என்றார். எனக்கு நன்கு தெரிந்தவர்தான். விவசாயத்தைத் தொழிலாகச் செய்து வருகிறார். சரி ஞானஸ்கந்த மூர்த்தியை பிரார்த்தனை செய்து ஜீவநாடி சுவடியைப் பிரித்து பாடல் வடிவில் வந்ததைப் படித்தேன்.

“இன்னவனும் ​இந்நேரம்

அரவிலே ஆபத்தை

எதிர்நோக்கியுள்ள நேரம்

ஆலயம்போல் உண்டு ஒன்று

கருப்பதுவும் உண்டு கேள்

கச்சிதமாய் சேவித்து

தீபமதை ஏற்றி வைத்து

பூஜித்து வா

ஆபத்துமது அருகிலுண்டு

ஆனாலும் கருப்புண்டு

காப்பாற்றும் செல்!

ஆசி”


என்ற பாடல் வந்தது. அதாவது வந்து அமர்ந்து இருக்கின்ற இவனுக்கு விரைவில் அரவு என்று சொல்லக்கூடிய பாம்பினால் ஆபத்து வரும். அதே நேரத்தில் இவர்கள் விவசாய பூமியில் ஆலயம் உண்டு. அங்கு கருப்ப  என்று சொல்லப்படும் கருப்பண்ண சுவாமி உண்டு. அதற்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர வருகின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவாய் ஆசி! ஆசி!

எனச் சொல்லப்பட்டது. வந்தவர் தனியாக வரவில்லை. அவருடன் 4 பேர் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு வயது 18 தான் ஆனது. சிறுவனான என்னிடம் வாக்கு கேட்டு விட்டு வந்தவர் காணிக்கை என்றார். எனக்கு எப்போதுமே பண ஆசையில்லை. வருகின்ற பணத்தை ஏதேனும் ஆலயப்பணிக்கு சேமித்து வைத்து பயன்படுத்துவது வழக்கம். எந்த காணிக்கையும் கேட்கவில்லை. இவர் தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு ரூ.500ஐ எடுத்து தட்டில் வைக்கப் போனார், அவரது உறவினர் ஒருவர் திடீரென எழுந்து வந்து வேண்டாம். அவர் காணிக்கை கேட்கவே இல்லை. தர வேண்டாம் செல்லலாம் என்றார். 

வந்தவருக்கு மனதிருப்தி உண்டாகவில்லை. அவரது உறவினரும் விடுவதாக இல்லை. எனக்கு சற்று மனநிலை மாறியது. சட்டென சுவடியை கட்டி வைத்து விட்டுச் சென்று விட்டேன்.காரணம் பணம் தரவில்லை என்கின்ற வருத்தமில்லை. சித்தர்களை ஒரு பிள்ளைப் பூச்சி போல் பாவித்து உற்ற மரியாதை தராவிட்டல் அந்த பாவம் எனக்குமல்லவா வந்து சேரும். என்வே கோபம் வந்துவிட்டது. எனது வாயில் எது சொன்னாலும் பலித்து விடும். என்வே கோபத்தால் ஏதேனும் சொல்லி விட்டால் என்ன செய்வது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். சிறிது நேரம் கழித்து அவர்களும் சென்று விட்டார்கள். நானும் இந்த சமபவத்தை மறந்துவிட்டேன்.



சுமார் ஒரு மாதம் கழித்து அன்று வந்தவரின் உறவினர் அதாவது காணிக்கை போட வேண்டாம் என்று தடுத்தவர் ஓடி வந்தார். ஐயா மிகவும் அவசரம் நாடி படிக்க வேண்டும் என்றார். யாருக்கு என்றேன்? அன்று நான் அழைத்து வந்தேனே அவருக்குத் தான் படிக்க வேண்டும் என்றார். ஏற்கனவே அவமதித்து இருந்ததால் இப்போது யாருக்கும் படிப்பதில்லை என்று சொல்லி விட்டேன். மிகவும் கதறிய நிலையில் ஐயா அப்படி சொல்லாதீர்கள். அன்று நாங்கள் நடந்துக் கொண்டது தவறு தான்.

அதற்கான தண்டனையினைப் பெற்று விட்டோம்,. பெரிய மனது செய்து நாடி படித்து சொல்லுங்கள் என்றார். என்ன தண்டனை? என்ன விபரம்? எனக் கேட்டேன். ஐயா அன்று தங்களிடம் நாடி கேட்டு விட்டு அவர் காணிக்கை தர வந்தார். அந்த காணிக்கையை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதால் தான் அதை நான் தடுத்தேன். ஆனாலும் தண்டனை அவருக்கு கிடைத்து விட்டது.

விவசாய பூமியில் இரவில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு கருநாக பாம்பு எங்கிருந்தோ வந்து இவரை தீண்டி விட்டது. நீங்கள் அன்று படித்தது அப்படியே 100% நடந்து விட்டது. இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.மருத்துவர்கள் கைவிடும் நிலையில் இருக்கிறார். உடல் முழுவதும் நீல நிறமாக மாறிவிட்டது. மிகவும் துயரத்திலும் ஆபத்திலும் இருக்கிறார்.

இராகு திசையில் இராகு புத்தி நடக்கிறது. இராகு 6ல் உள்ளார். எனவே விஷ கிரகம் என்று ஜோதிடத்திலும் சொன்னீர்கள், நாடியிலும் சொன்னீர்கள்தோட்டத்தில் கருப்பசாமி உண்டு என்பதும் உண்மை. ஆனால் அவர்கள் தீபமேற்றி வழிபடவேயில்லை. எனவே அந்த கருப்பசாமி
இவர் உயிரை மீட்டுத் தருவாரா? என்பதும் சந்தேகமே. தங்களை சிறுவன் என நினைத்து பிழை செய்து விட்டோம். மன்னித்து ஒரு வழிகாட்டுங்கள்என கண்ணீர் விட்டு கதறியதைப் பார்த்து மனமிறங்கி வருவதற்குள் எனது குடும்பத்தினர் இதை கேட்டு விட்டு படித்துச் சொல்லவும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். சரி தவறை உணர்ந்து விட்டார்கள் தண்டனையும் பெற்று விட்டார்கள். இதன் பின்பு நமது நாடி மூலம் நலம் கிட்டும் என்ற பிராப்தம் இருந்தால் கிட்டும் என்று சொல்லி குறித்து, மந்திரம் ஜெபித்து, தியானித்து பூஜித்து தவறுக்கு சிறு காணிக்கை வைத்து சித்தர்களை சிந்தையில் வைத்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவநாடியைப் பிரித்தேன். பின்வரும் பாடல் வந்தது.

 “ஆபத்து வந்ததுவும்

அன்றே உரைத்தோம்

ஆனாலும் அபசாரம்

அது நேர்ந்ததால்

ஆபத்தும் நேர்ந்தது

அய்ந்தின் மடங்கு

அவசர செலவு செய்

அவசியம் தவறாமல்

அர்ச்சித்து வா கருப்பை

கரை சேர்வாய்

ஆசி! ஆசி! ஆசி!

என்று மிகச் சுறுக்கமாக மிக அற்புதமாக அருள்வாக்கை ஜீவநாடியில் அள்ளி வீசினார் ஆறுமுகப் பெருமான். அன்று செய்தது அபசாரம் என்பதையும் சுட்டிக் காட்டினார். ரூ.500/- கொடுப்பதற்கு ஆயிரம் முறை யோசித்து அதையும் கொடுக்காமல் சித்தர்களை அவமதித்ததால்அந்த 5ன் மடங்கு வரை செலவு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை தீவிரமாக செய்தால் விஷம் இறங்கி அவர் வாழ்வு மீளும். அதே போல் அந்த கருப்பசாமியை அர்ச்சித்து வர வேண்டும் என்று சொல்லி விபூதி, எலுமிச்சை கொடுத்து ஆசி கூறி அன்புடன் வழி அனுப்பி வைத்தேன்.


எந்த அவசரமானாலும் தொடர்பு கொள்ளுமாறும் சொன்னேன். அவரும் பூரண திருப்தியுடன் சென்று அதேபோல் செய்கிறேன் என்று வேகமாக மீண்டும் ஒரு மாதம் கடந்து பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது குடும்பத்துடன் அவரது உறவினரான மூவரையும் கூட்டிக் கொண்டு நமது முருகன் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அருள்வாக்கு மேடையும் சுயம்பு முருகன் சிலை மட்டுமே உள்ள மிகச் கிறிய கோவில் அங்கு அமர்ந்தே ஜீவநாடி அருள்வாக்கு சொல்லுவது வழக்கம். இப்போது பெரிய ஆலயம் கட்டப்பட்டு விட்டாலும் அந்த அருள்வாக்கு மேடையில் தான் இப்போதும்  அமாவாசையில் நாடி சொல்லப்படுகிறது.


எனது குடும்பத்தினரும் கூடி சுமார் 30 பேர் ஆலயத்தில் கூடி விட்டார்கள். என்ன விஷயம் என்றேன். பெரிய மாலை போட்டு வஸ்திரம் சாற்றி, சால்வையெல்லாம் போட்டு சில ஆயிரங்கள் தட்சணை வைத்து பழங்களுடன் கொடுத்து குடும்பமே சாஷ்டாங்கமாக விழுந்து ஐயா வயதில் சிறியவராக இருந்தாலும் தாங்கள் ஒரு சித்தர் பிறவி என்பதை நாங்கள் உணர்ந்து விட்டோம். எங்களை மன்னித்து ஆசிர்வதியுங்கள்.


எனக்கு எப்போதுமே தற்பெருமையோ, தலைக்கணமோ இல்லை. நன்றாக வாழ்வீர்கள் எழுந்திருங்கள் என எழுப்பி சித்தர்களையும் முருகப் பெருமானையும் அவமதிப்பது குற்றம். எனக்கு சூட்டிய மாலை மரியாதை அத்தனையும் அந்த முருகனுக்கே அர்ப்பணம். நான் சித்தர் பிறப்பு அது இது என்று எப்போதும் சொல்லிக் கொள்வதில்லை. நான் மிக மிக மிக சாதாரண மனிதன். ஆனால் சித்தர்களும் முருகனும் அப்படியில்லை.

அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை எப்போதும் தர வேண்டும். ஏதோ வந்தோம் கேட்டோம் என்று விளையாட்டாக இருப்பது பல அபசார தோஷங்களை ஏற்படுத்தி விடும். அதனால் தான் அபூர்வமாக சிலருக்கு மட்டும் நாடி உரைக்கிறேன். கலியுகத்தில் ஏராள சிக்கல் இருப்பதால்
சோதனை செய்யாமல் நாடி உரைப்பதில்லை. சித்தர்கள் அனுமதி தராமல் நாடி படிப்பதில்லை. பணத்திற்கு ஆசை பட்டும் உரைப்பதில்லை என்பது என்னை சந்தித்து வருபவர்கள் அனைவரும் அறிந்த விஷயம்.


சரி என்ன நடந்தது சொல்லுங்கள் என்றேன். ஐயா தாங்கள் ஜீவ நாடியில் சொன்னது போல் 5ன் மடங்காக 5 லட்சம் செலவு செய்த பின்பே உயிர் பிழைத்து வந்து தங்கள் முன்பு நிற்கிறேன். இனி காலம் பூராவும் ஞானஸ்கந்த மூர்த்திக்கு சேவை செய்கிறேன். என்றார். வாசகர்களுக்கு ஒரு
சந்தேகம் வரலாம். சித்தர்கள் 500 ரூபாய்க்கு ஆசைப்படுவார்களா? என்று இந்த இடத்தில் மிகக் கவனமாக யோசிக்க வேண்டும். தட்சிணை என்பது மன நிறைவுக்காக நாம் தருகின்ற மரியாதை. அது எவ்வளவாக இருந்தாலும் மன நிறைவோடும், மரியாதையோடும் தர வேண்டும் என்பது நாடியில் வாக்கு கேட்டுவிட்டு அந்த நாடியை அவமதிக்கும் வகையில் சொல்லுவது தான் குற்றம். எனவே சித்தர்கள் பணத்திற்கு மயங்க மாட்டார்கள். அதே சமயம் மரியாதைக் குறையை அவர்கள் விரும்புவதில்லை. ரூ.5 லட்சம் செலவு செய்தேன் என்பவர்கள் டாக்டர் கேட்ட அத்துணை பணத்தையும் கொடுத்தவர்கள் சித்தர்களுக்குத் தருகின்ற தட்சிணை விஷயத்தில் ஏன் தவறு செய்ய வேண்டும். பேருந்தில் ஏறி ரூ.5/- கொடுத்தால் தான் பயணம் செய்ய முடியும் எனும் நிலையில் ரூ.4.99 பைசா கொடுத்து 1 பைசா இல்லை என்றாலும் பயணிக்க முடியுமா?

சித்தர்கள் வாக்கு என்ன அவ்வளவு கீழாகவா போய் விட்டது? அதேபோல் ஜோதிடம் மூலம் பணம் வாங்கினால் தரித்திரம் பிடிக்கும் என்று மெத்தப் படித்த மேதாவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் சொல்கிறார்கள். கள்ளச் சாராயம் திருட்டு  போன்ற கீழ்நிலைத் தொழில்களோடு இலஞ்சம் வாங்கி, ஊரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் மட்டும் பணம் சம்பாதிக்கலாமா? அது தரித்திரம் இல்லையா? அது தான்
தரித்திரம். 

ஜோதிடம் மூலம் வருகின்ற தொகை புண்ணியம். தெய்வத்தின் காணிக்கை அதை தவறான் வழியில் செலவு செய்தால் தான் குற்றம். இது என்னவோ பணம் வாங்குவதற்காகச் சொல்கிறேன் என எண்ணி விட வேண்டாம். எங்கு ஜோதிடம் கேட்டாலும் உரிய தட்சிணை கொடுத்து அந்த ஜோதிடனை வணங்கி வாருங்கள். உடனே நற்பலன்கள் நடக்கும். அவர் உண்மையான ஜோதிடராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html 

No comments:

Post a Comment