"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 27, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஜீவ நாடி அற்புதங்கள்  தொடர்பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி அருளிய வாக்கின் படிஅருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் அமைய உள்ளது. வருகின்ற 28.10.2020 அன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்விற்கான செய்திகளை நாம் இங்கே தர விரும்புகின்றோம்.




பதிவின் உள்ளே செல்லும் முன்னர் அனைவரும் இந்த செய்தியை நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டுகின்றோம். ஆதி காலம் முதல் கோவில் என்றால் சிவாலயம் மட்டுமே குறிக்கப்படும். பராகிரம பாண்டியன் என்ற மாமன்னன் சொன்னது:பழுதுபட்ட புராதன சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் எப்படி ஒருவர் ஈடுபட்டாலும், அவர்களது திருவடிகளை இப்போதே வீழ்ந்து வணங்குகின்றேன் என்று


"ஆராரயினும் இந்த தென்காசி மேவு பொன்னாலயத்து
வாராததோர்  குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புறப்பார்களை நீதியுடன்
பாரார் ஆரியப் பணிந்தேன் பிரகிரம பாண்டியனே"


சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
கூடவே நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு  தரல், இடம் அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக சிவபுண்ணிய செயல்களாம்.

நம்பழம் பாடல் பகரும் இப்படி:

"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில்  செங்கல்லால் நூறு கோடி 
அல்லியங்கோதைமின்னே ஆலயம்  மடங்கள் தம்மை 
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே" 

"சிவன் கோவிலுக்கு ஒரு செங்கல் வழங்குதல், அந்த செங்கல் எத்தனை நாட்கள் கோவிலில் இருக்குமோ அத்தனை நாட்கள் நீங்கள் கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ வாசம் செய்யும் புண்ணியம்"!

-காஞ்சி மஹா பெரியவர்



எந்த ஒரு ஜோதிடரிடமோ அல்லது மகானிடமோ சென்ற உடனேயே அதிசய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தடுமாற்றமே தன்னிலை மறந்து முன்னிலை வகிக்கும்.அவரவர் கர்மவினை நன்றாக இருந்தால் ஒழிய அதிசயம் நடப்பது அபூர்வம்.

      நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்திருப்பணிக்கு, ஆலயக்கட்டுமானத்திற்கு முதல் பணியாக அடித்தளம் அமைத்து, பணி ஆரம்பிக்கப்பட்டு 08 வருடங்கள் பூர்த்தியாகிறது.

அக்காலத்தில் மன்னர்கள் கருங்கற்களைக் கொண்டு ஆலயத்தை எழுப்பியதுபோல், ஸ்ரீஅகத்தீஸ்வரர் மற்றும் அம்பாள் ஸ்ரீசாெர்ணாம்பிகை சன்னதிக்கு, கருங்கற்களை காெண்டு சன்னதிகள் தனித்தனியாக எழுப்பப்பட்டது.

பின் படிப்படியாக ஒவ்வொரு பணியும் ஜீவநாடி வாயிலாக வாக்கு கேட்டு ஸ்ரீமுருகப்பெருமான் அருளாலும், ஸ்ரீஅகத்திய மாமுனிவர் அருளாலும் பல தடைகளையும் தாண்டி திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்திருப்பணியில் இணையக்கூடிய அனைத்து அன்பர்களும், அடியார்களும் முற்பிறவி தொடர்பாளர்கள் என்பது ஜீவநாடி வாக்கு.

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளால் பிராப்தம் உள்ள மனிதர்களை இவ்வாலயத் திருப்பணிக்கு எம்பெருமான் கூட்டுவித்து, இந்த திருப்பணியில் இணைந்து, தங்களால் இயன்ற பொருள் உதவியும், பணஉதவியும் பல வருடங்களாக செய்து வருகின்றனர். அவர்களுள் இந்த ஆலயத்திருப்பணிக் குழுவில் உள்ள அடியார்களும் அடங்கும்.

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளால் ஆலய திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில எஞ்சியுள்ள பணிகள் மட்டுமே உள்ளன.

நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்ககூடிய நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலய திருக்குடமுழுக்கு தேதி ஸ்ரீமுருகப்பெருமான் அருளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற ஐப்பசி 12 ஆம் (ஆங்கில தேதி 28/10/2020) நன்னாளில் புதன்கிழமை அன்று ஆலயத்திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.

திருக்குடமுழுக்கு தமிழ் தேதி : ஐப்பசி 12 ஆம் தேதி (புதன்கிழமை)

ஆங்கில தேதி : 28/10/2020.

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளால் நம் குழுவிலுள்ள அடியார் பெருமக்கள் அனைவரும், நம் ஆலய கலசவிழாவில் கலந்துகொண்டு எம்பெருமான் அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்!

ஓம் ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருவடிகள் போற்றி!

   
                           

சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் :



இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில், மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் திருக்கோவில். திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்கக்கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய்  இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டப்படுகின்ற ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. தற்போது திருப்பணிக்கு நிதி தேவைப்படுகிறது.

சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 17/05/2019(வெள்ளி)

ஈரோடு - அந்தியூர் முருகப்பெருமான் ஜீவநாடியில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமான் உரைத்த ஸ்தல புராணம் :

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம். 

பதினெண் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும். 

அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம். 

பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம். 

சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப்பட்ட திருத்தலம். 

உன்னத சக்திகள் நிரம்பப்பெற்ற  தலம். 

பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். 

இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும், அது தக்க காலத்தில் வெளிப்படும். 

இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும். 

குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன், ஆடலரசன், ரிஷிகள், நவகோடி சித்தர்கள், லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். 

 திருப்பணியில் பங்கு கொள்ளும் லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மீகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும். 

போகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில்.

தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில் " என்று  
ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி ஜீவநாடியில் முருகப் பெருமான் உரைத்தார்.

தற்போது வரை நடைபெற்று வரும் திருப்பணிக்காட்சிகளை கீழே தருகின்றோம்.

























                                                ஆலவாய் அண்ணலின் கொடிமரம்



திரு. பாலமுருகன் (அமெரிக்கா) மற்றும் அவரது துணைவியார் திருமதி. மகேஸ்வரி தம்பதியர் இணைந்து, நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு 4 அடி உயரமுள்ள இரண்டு குத்துவிளக்கை ஆலயத்திற்கு அளித்துள்ளார்கள்.

உபயதாரரான திரு. பாலமுருகன் (அமெரிக்கா) அய்யா அவர்கள் குடும்பத்தினர் சார்பில் இந்த இரண்டு குத்துவிளக்கு நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளும், அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகை தாய் அருளும் நிரம்பப் பெற்று குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன்!

நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர்  ஆலய வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்!

பெயர் : ஸ்ரீஅகத்தீஸ்வரர் அறக்கட்டளை (Sri Agatheeshwarar Trust),

வங்கி : கனரா வங்கி (Canara Bank),

A/C No : 6161101002984

IFSC Code : CNRB0006161

MICR: 600015165

கிளை : திருநின்றவூர் கிளை (Thirunindravur Branch),

தொடர்புக்கு  என்றும்  இறைப்பணியில் :

திரு. கஜேந்திரன் அவர்கள்,

+919789053053(Whatsapp)
+919080590956

அனைவரும் எதிர்பார்க்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் கீழே பகிர்கின்றோம்.










அழைப்பிதழை தரவிறக்க:- https://drive.google.com/file/d/16A_ovDH1ThQJXHDwM3aojdftYeKUomq1/view?usp=sharing

மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment