"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, August 23, 2020

பச்சை மயில் வாகனனே...சிவ பால சுப்ரமண்யனே வா....

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் ஆவணி மாத இறைப்பணி, ஆயில்ய ஆராதனை, மோட்ச தீப வழிபாடு அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. ஆவணி மாத திருவோண நட்சத்திர வழிபாடு உள்ளது. அன்றைய தினம் மற்றுமொரு சிறப்பு வழிபாடும் உள்ளது. விரைவில் நம் தலத்தில் தனிப்பதிவில் காண்போம். இன்று என்ன பதிவு தரலாம் என்று சிந்தித்த போது, பச்சை மயில் வாகனன் வந்தார். கடந்த சில பதிவுகளில் அண்ணன் விநாயகப் பெருமான் அருளில் திளைத்தோம். இன்று அவரது தம்பி ஸ்ரீ முருகப் பெருமான் பற்றி காண உள்ளோம்.


பதிவின் தலைப்பை படித்தீர்களா? இது ஒரு பாடல் தான். முதலில் அந்தப் பாடலை தருகின்றோம்.

பச்சை மயில் வாகனனே சிவ 

பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே

கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா

நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா
சேவல் கொடி மயில் வீரா

வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன்
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா

ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம் 

சரி..இனி பச்சை மயில் வாகனன் தரிசனம் காண உள்ளோம். அவ்வப்போது நாம் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் தரிசனம் செய்து வருகின்றோம். அப்போது நண்பர் சத்யராஜ் பச்சைமலை முருகன் தரிசனம் பெற்று உள்ளீர்களா? என்று கேட்டார். நாம் பச்சைமலை என்றதும் அது வேறெங்கோ இருப்பதாக எண்ணி இல்லை என்றோம். அப்போது தான் அவர், பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் வழியில் இருப்பதாக கூறினார். சரி..ஒரு நாள் செல்லலாம் என்று தீர்மானித்தோம். 

பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் வழியில் கீழே உள்ள படத்தை கவனத்தில் கொண்டு அங்கிருந்து செல்ல வேண்டும்.


 வழக்கம் போல் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். பச்சை மலை செல்ல இருக்கின்றோம். மலை யாத்திரை எப்படி இருக்கும்? மலைப் பாதை எப்படி இருக்கும்? கிரிவலம் செல வழி இருக்குமா? என்ற பல கேள்விகளோடு சென்றோம். நண்பரும் நீங்களே அந்த அனுபவத்தை பாருங்கள் என்று கூறி நம்மை இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். ஆனால் இந்த தரிசனம் நமக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தான் தந்தது. அது என்ன? என்று பதிவின் இறுதியில் பாருங்களேன்.


               

இதோ..பச்சைமலை பாதை ஆரம்பம். சற்று கல்லும் கற்களையும் கொண்ட பாதை தான். சிறிய மலை போல் தான் தெரிந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கேற்ப சிறிய மலை தான் தான் மலையேற்றம் நன்றாக இருந்தது.

                

                 

                 

கல்லும் கற்களும் காலுக்கு மெத்தை என்று சொல்லிக்கொண்டே மலை ஏறினோம். மலை ஏறுவதற்கேற்ப, கம்பு கட்டி வைத்து இருந்தார்கள். சற்று தூரத்தில் மூத்தோன் தரிசனம் பெற்றோம்.

                   

மூத்தோனை வணங்கி, அங்கிருந்து மீண்டும் புறப்பட்டோம்.

                    

அங்கே மேலே இருந்து, கீழே பார்த்தோம். அப்பப்பா..


                     

இதோ..மீண்டும் மலையேற்றம் ஆரம்பம்.

                  

அங்கே கார்த்திகை தீப்பற்ற தீப மேடை இருப்பதை கண்டோம். மனதுள் கோயில் பக்கத்தில் இருப்பதாக நினைத்தோம்.

                   

                    

அடுத்து சிவபெருமான் தரிசனம் பெற்றோம். சிவாய நாமா ..சிவாய நம என்று மனதுள் ஓதிக்கொண்டே இருந்தோம். ஈசனடியை போற்றினோம்..எந்தையடியைப் போற்றினோம்.


ஆஹா.வேல் கண்டு மனமகிழ்ந்தோம். முருகா..முருகா என ஓதினோம்., உள்ளம் உருகினோம். 


                      


நாம் ஏற்கனவே சொன்னது போல், அன்றைய தின தரிசனம் நமக்கு ஏமாற்றம் தந்தது. ஆம். திருக்கோயில் பூட்டி இருந்தது. கோயில் வெளியே மயில் வாகனம் கண்டு தரிசித்தோம்.




கோயில் நடைசாற்றி இருந்தமையால், மீண்டும் மீண்டும் அங்கே சுற்றிக் கொண்டே இருந்தோம். ஏன் எமக்கு நடை சாற்றி நம்மை இங்கு அழைத்தீர் என்று கேட்டோம். மீண்டும் எப்போ தரிசனம் தருவீர்? என்பது போன்ற பல கேள்விகளை பச்சைமலை முருகனிடம் சமர்பித்தோம். ஆனால் நாம் இருக்கும் கூடுவாஞ்சேரி அருகில் இப்படி ஒரு மலை ..அதுவும் நம் குருவின் குருவாம் முருகப்பெருமான் அருள் தரும் மலை..பச்சை மலை இருப்பதை நமக்கு உணர்த்தியமைக்கு நம் குருவிற்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.

மீண்டும் பச்சைமலை முருகப்பெருமான் தரிசனம் பெற இப்போதும் காத்திருக்கின்றோம்.

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஓம் கம் கணபதயே நமஹ - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_65.html

 ஓதும் கிரி அது ஓதிய கிரி - ஓம் ஓதிமலை ஆண்டவரே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_16.html


வித்தக விநாயக! விரை கழல் சரணே! - உழவாரப்பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_22.html

மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_3.html

ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html

தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

No comments:

Post a Comment